-
http://i67.tinypic.com/dffu4o.jpg
எம்.ஜி.ஆர் நலம்பெற ஏரி காத்த ராமரை விரதமிருந்து வழிபட்ட ஜெயலலிதா
Read more at: http://tamil.oneindia.com/news/tamil...le-264033.html
சென்னை: முதல்வர் ஜெயலலிதா சுகவீனம் காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். முதல்வர் குணமடைய வேண்டி ஏராளமான மக்கள் தமிழகம் முழுவதும் பல்வேறு கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் செய்து வருகின்றனர். முதல்வர் ஜெயலலிதா, முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் உடல்நலம் குன்றியிருந்த போது விரதமிருந்து வழிபாடு நடத்தியுள்ளார். மதுராந்தகம் ஏரிகாத்த ராமர் கோவிலில் வழிபட்டதாக தனது வாழ்க்கை குறிப்பில் எழுதியுள்ளார்.
1984 ம் ஆண்டு முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை அப்போலோ மருத்துவமனையில் நள்ளிரவில் சேர்க்கப்பட்டார். மறுதினம் எம்.ஜி.ஆருக்கு பக்கவாதம் தாக்கியது. ஒரு பக்க கை கால் செயல்பட முடியாத நிலை ஏற்பட்டது. சிறுநீரகப்பிரச்னை வரவே, அமெரிக்காவின் டவுன்ஸ்டேட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்துச் செல்ல முடிவு செய்யப்பட்டது. அப்போது ராஜ்ய சபா உறுப்பினராக இருந்த ஜெயலலிதா, சத்துணவு உயர்மட்டக்குழு உறுப்பினராகவும் பதவி வகித்தார். ஜெயலலிதாவிற்கு கட்சிக்குள் நெருக்கடிகள் அதிகரித்தன.
எம்.ஜி.ஆரை பார்க்கவிடாமல் அப்போலோவிலிருந்தே தங்கள் அரசியலை துவங்கியிருந்தது ஜெயலலிதாவின் எதிர் அணி. அவர் அமெரிக்கா புறப்பட்டு செல்லும் வரை ஜெயலலிதாவினார் எம்.ஜி.ஆரை பார்க்க முடியவில்லை. இன்றைக்கும் மருத்துவமனையில் உள்ள ஜெயலலிதாவை யாராலும் பார்க்க முடியாத சூழ்நிலையே ஏற்பட்டுள்ளது.
அமெரிக்வில் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆர் சிகிச்சைக்காக அமெரிக்கா அழைத்துச் செல்லப்பட்ட உடன் அவருக்காக தமிழக கோவில்களில் பிரார்த்தனைகளும் வழிபாடுகளும் நடந்தன. எம்.ஜி.ஆருக்காக ஜெயலலிதா மதுராந்தகம் ஏரிகாத்த ராமர் கோவிலில் வழிபாடு நடத்தினார். இதனை ஜெயலலிதாவே குறிப்பிட்டள்ளார். எம்.ஜி.ஆருக்காக வழிபாடு 5.11.1984 ஆம் ஆண்டு தலைவர் அமெரிக்காவிற்கு சிகிச்சைக்கு அழைத்துச்செல்லப்பட்டார். தலைவர் நலம்பெற வழிபாட்டு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டேன். மதுராந்தகம் ஏரிகாத்த இராமர் திருக்கோவிலில் சிறப்பு வழிபாட்டில் தலைவரை நினைத்து என் கண்கள் குளமாகின. அரசியலில் எனக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்தவர்களில் ஒருவர் (இந்திரா காந்தி) மறைந்தார். இன்னொருவரான என் தலைவர் அமெரிக்க மருத்துவமனையில் இருக்கிறார் என்று ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.
எம்.ஜி.ஆர் - ஜெயலலிதா
அன்று எம்.ஜி.ராமச்சந்திரனுக்காக ஏரி காத்த ராமர் கோவிலில் விரதமிருந்து வழிபட்டார் ஜெயலலிதா. இன்று அவருக்காக தமிழ்நாடு முழுவதும் பக்தர்கள் வழிபடுகின்றனர். நோயில் இருந்து எம்.ஜி.ஆர் மீண்டு வந்தது போல முதல்வர் ஜெயலலிதாவும் நலமுடன் திரும்பி தமிழகத்தை ஆள வேண்டும் என்பதே அனைவரின் வேண்டுகோளாகும்
-
-
-
-
குமுதம் -சினேகிதி இதழ் -13/10/2016
http://i67.tinypic.com/eb35ll.jpg
-
http://i66.tinypic.com/2z7372e.jpg
புரட்சித் தலைவரின் புகழ்க் கொடி பறக்கும் கோட்டையாம் எங்கள் மதுரையில் மீனாட்சி மற்றும் அலங்கார் திரையரங்குகளில் செல்வத்துக்கு மதுரை மக்கள் அமோக வரவேற்பு. இரண்டு திரையரங்குகளிலும் ரசிகர்கள் திரண்டனர். முதல் காட்சியில் இருந்து கடைசியில் மஞ்சுளாவை ரி்க்க்ஷாவில் தலைவர் அழைத்து வரும் வரையில் புரட்சித் தலைவர் தோன்றும் காட்சிகளில் ஆரவாரத்தால் மதுரை குலுங்கியது. கொண்டாட்ட அலப்பரைகள் விரைவில்..
-
-
-
-