-
*
என்னமோ போங்க 9
**
இந்த விக்கெல்லாம் நான் வைத்துக் கொண்டதே கிடையாது.. அது போட்டுக்கொண்டால் தலைக்குள் வேர்க்குமா என்ன..இதுவரை நாடகம் சினிமா என நடிச்சதேயில்லை.. வாழ்க்கைல ம்ம் நிறைய நடிச்சுருக்கேன்..
ஒரு சில பேர்கள் திரையில் போட்டுக்கொள்ளும் விக்- கள் நமக்கு விக்கலை ஏற்படுத்தி சோகத்தில் தள்ளிவிடும்..
சிக்கல் வரும்போது சீர்மிகுந்த நாயகர்கள்
விக்கில் மறைவாராம் ஆம்..
ம்ம் அவ்ளோ கஷ்டப்பட்டு விக் போட்டு நடிச்சு எடுபடாமப் போச்சுன்னா பாவம் அந்த ஹீரோக்கு ரொம்ப கஷ்டமா இருக்குமில்லை.. .
இங்க பாருங்க நம்ம முத் ராமர் பாட துள்ளலா ஃபடாபட் செயலச்சுமி அயகா இளமையா ஆடறாக..இருந்தாலும் அவரைப் பாக்காம இழுத்துப் போத்திக்கிட்டு வரும் ஸ்ரீவித்யாவப்பாத்துப் பாடறார்.. ஸ்ரீவித்யாவும் அவரைப்பார்க்கறார்..ஒண்ணு சொல்லணும் செயலச்சுமிக்கும் ஸ்ரீவித்யாவிற்கும் பயங்கர தில்லுள்ள மனசாங்காட்டியும்.. முத்துராமனோட ராபர்ட் கிளைவ் டைப் விக்கைப் பார்த்தும் ஒருத்தர் தைரியமா ஆட ஒருத்தர் கலங்காம பாக்கறார்னா நான் என்னா சொல்றது… என்னமோ போங்க..
*
வாழ்க்கை என்றொரு பாடல்
அதில் ஆளுக்கு ஆள் ஒரு ராகம்..
செல்வம் என்றொரு தாளம்
ஆசை தான் அதன் மேளம்..அதுசரி லைன்ஸ் நல்லா இருக்கே..
பார்வையில் மோகனம், ஆனந்த பைரவி நான் விரும்பும் ஒரு மென்மை..
அது பக்தியில் கல்யாணி
பரவச வசந்தா பந்து வராளி மென்மை – ம்ம் ஒரேபாட்டில ராகத்தெல்லாம் இட்டாந்துட்டாரே..
*
https://youtu.be/mayZ1E1nNBs
உறவுகள் என்றும் வாழ்கங்கறது படத்தோட பேராம்
**
-
**
என்னமோ போங்க 10
**
இங்க பாருங்க இந்தம்மா என்னவோ கேள்வில்லாம் கேக்கறாங்க
உனக்கும் தெரியும் எனக்கும் தெரியும் எது அது
அடக்க நினைத்தால் .. சரி விடுங்க.. இதுல
மிருதங்க பாணி பாங்கோஸ்ஆம்.. கேக்க நன்னாவே இருக்கு யாரு ஷீலுவா..அடையாளமே தெரியலை..என்னமோ போங்க..
(கூட இருக்கறது ஜெய்ஷங்கர் நம்பியாராம் அது யாருக்கு வேணும்..)
https://youtu.be/t8dhgkAuFw0
அன்பளிப்பு படத்துல வாசுவிற்குப் பிடித்த ராட்சஸி குரல் ராகவேந்தருக்குப் பிடித்த பாங்கோஸ் ( ஒரு இடுகைல எழுதியிருக்கார்னு நினைக்கேன்) (போட்டாச் இல்லை தானே)
-
சி.க,
http://hamaraforums.com/uploads/post...1207983897.jpghttp://www.telugutvstars.co.in/profi...geetanjali.jpg
அது கீதாஞ்சலி. நெஞ்சிருக்கும் வரை படத்தில் 'கண்ணன் வரும் நேரமிது' பாடலுக்கு ஆடுவார். அவ்வளவு ஏன்? ஒரு சில தினங்களுக்கு முன் போட்ட பீச் சாங் அசோகனுடன் அதே கண்கள் படத்தில் வருமே 'என்னென்னவோ நான் நினைத்தேன்' பாடலுக்கு பிகினியில் கவர்ச்சியாக வருபவரும் இவரே. தெலுங்கு நடிகர் ராமகிருஷ்ணாவை (புண்ணியபூமி படத்தில் நடிகர் திலகத்தின் அண்ணன். மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த வல்லவன் வருகிறான் நேரடி தமிழ்ப் படத்தின் ஹீரோ. 'அன்னப் பறவை' படத்தில் உங்கள் லத்துவின் இணை. 'பொன் என்பதோ பூவென் ன்பதோ பாடலுக்கு")மணந்து கொண்டார். என் அண்ணன் படத்தில் சோவின் காமெடி ஜோடி. பணம் படைத்தவன் படத்தில் 'கண் போன போக்கிலே கால் போகலாமா' பாடலின் இடையிசையில் நாகேஷுடன் ஆடுபவரும் இவரே.
ராமகிருஷ்ணாவும், கீதாஞ்சலியும் சில படங்களில் தெலுங்கில் இணைந்து நடித்தார்கள். அது லவ் ஆகி திருமணத்தில் முடிந்தது. இவர்கள் நடித்த படம் ஒன்று தமிழ் டப்பிங் செய்யப்பட்டு 70 களில் பல தியேட்டர்களில் காலை பத்து மணிக் காட்சியில் ஓடோ ஓடென்று ஓடியது.
பகவான் குமார் என்று தெலுங்கில் வந்து தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டு பைட்டர் பகவானாக மாறி ஓடி அன்றைய ரிக்ஷாகாரர்களிடம் வசூல் செய்தது. :)
-
-
வாசுங்க்ணா :)
ஏதோ கொஞ்சம் வயசாய்டுச்சோன்னோ வெள்ளெழுத்து..தூரக்க இருந்து பார்த்தேனா கொயந்தைய அடையாளம் தெரியலை..அதுக்காக் இப்படியா வார்றது..
கீ இ பு போ யா அ (கீதாஞ்சலியின் இன்றைய புகைப்படத்தைப் போடலைன்னு யார் அழுதா..:) ) ஸ்ரீ ராமக்ருஷ்னா.. ராமா க்ருஷ்ணா..:)
-
சரிங்க எனக்குப் பிடித்த கீ. பாடல்.. (கீ தானா)
https://youtu.be/qD-xjwNmLLY
நினைத்தால் போதும் பாடுவேன்
அணைத்தால் கையில் ஆடுவேன்
சலங்கை துள்ளும் ஓசையில்
கலங்கும் கண்ணை மாற்றுவேன்..
-
chinnakkaNNan: You fogot 'Mithila Vilas' by Lakshmi aka Thiripurasundari. I think it was a serial in Anandaviktan in the 1940s. :) I remember my aunts discussing the story after reading Anandavikatan every week !
-
பாராட்டுக்கள்..
சினிமாப் பாட்டு என்றாலே மிகவும் ஏளனமாகவும் தீண்டத் தகாததாகவும் ஒதுக்கப் பட்ட காலங்கள் இருந்ததுண்டு. பல இசை மேடைகளில், என்னதான் கர்நாடக இசை அடிப்படையில் அமைக்கப்பட்டிருந்தாலும் சினிமாவில் இடம் பெற்றிருந்தால் அது தவிர்க்கப் பட்டதுண்டு.
வெகுஜன ரசனையின் அடிப்படையில் எஸ்.வி.வெங்கட்ராமன், ஜி.ராமனாதன், சி.என்.பாண்டுரங்கன் போன்ற இசை மேதைகளின் பங்களிப்பில் மக்களிடம் பலத்த வரவேற்பைத் திரையிசை பெற்று அவர்களின் வாழ்வில் தவிர்க்க இயலாத நிலையை அடைந்து விட்டது. இவர்களின் சமகாலத்தில் தெலுங்குத் திரையுலகில் ஆதிநாராயண ராவ், அட்டப்பள்ளி ராமராவ், ஜி. அஸ்வத்தாமா, பெண்டியாலா நாகேஸ்வரராவ் போன்ற உன்னத இசைக் கலைஞர்கள், அதே போல கன்னடத்தில் ராஜன் நாகேந்திரா, கேரளத்தில் எம்.எஸ். பாபுராஜ் போன்ற பல இசை மேதைகளின் பங்களிப்பில் திரையிசை நல்லதொரு பங்களிப்பை இசை உலகிற்கு அளித்தது.
இவர்களுக்கு அடுத்த தலைமுறையாக மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன்-ராம மூர்த்தி, திரை இசைத் திலகம் கே.வி.மகாதேவன், விஜய பாஸ்கர் போன்றோர் புதிய திருப்பத்தை ஏற்படுத்தி அடுத்த கட்ட பரிமாணத்தை மக்களுக்கு அளித்தனர்.
அதன் பின்னர் வேகமாக வளர்ச்சி யடைந்த தொழில் நுட்பங்களின் காரணமாக இன்று முற்றிலும் புதிய முகத்தோடு திரை இசை காட்சியளிக்கிறது.
இசையுலகில் இதனுடைய முக்கியத்துவத்தை அறிந்து இதனை ஒரு முறை சார்ந்த கல்வியாக அளிக்கும் வகையில்
முதுகலை திரையிசை
படிப்பினை அறிமுகப் படுத்தும் தமிழ்நாடு இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகத்திற்கு நமது உளமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
http://www.thehindu.com/multimedia/d...at_859763e.jpg
புகழ் பெற்ற தெலுங்கு திரைப்பட இசையமைப்பாளர் ஜி.அஸ்வத்தாமா அவர்களின் புதல்வியும் வீணையிசை மேதையும், தமிழ்நாடு இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தருமான திருமதி வீணை ஈ. காயத்ரி அவர்களுக்கு நமது பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அஸ்வத்தாமா அவ்ர்களைத் தெரியாதவர்கள் கூட அவர் இசையமைத்த மலரோடு விளையாடும் தென்றலே வாராய் பாடலைத் தெரியாமல் இருக்கமாட்டார்கள்.
-
வணக்கம்
வாசு ஜி கீதாஞ்சலி பற்றி மேலும் தகவல்கள்
அவர் நடனத்திற்காக வந்து
பாபுபாய் மிஸ்திரியால் பாரஸ்மணியில் அறிமுகமானார்
பின் ராமாராவ் அவர்களால் சீதாராமகல்யாணம் படத்தில் சீதையாக அறிமுகம் செய்யப்பட்டார்
ஹரி நாத் ( நம் அண்ணை திரை ராஜா) இதில் ராமராக அறிமுகம்
பின் எல்.வி.பிரசாத் அவர்களின் இல்லாளு(இதயக்கமலம் தமிழில் பின் மேரே சாயா ஹிந்தியில்) மெயின் ரோல் செய்தார்
பின் பத்ம நாபம் இவரை காமெடி ரோலுக்கு அழைக்க அப்படியே காமெடி நடிகையாகிப்போனார்
நல்ல நடனத்திறன், நடிப்பு அழகு எல்லாம் கொண்டவர்
ராமகிருஷ்ணாவை மணந்து கொண்டு பல காலம் படங்களில் நடிக்காமல் இருந்தார்
மீண்டும் பாட்டி வேடங்களில் இப்பொழுது நடிக்கிறார்.
https://www.youtube.com/watch?v=YYu9pF_RK1Q
https://www.youtube.com/watch?v=RBknx0r1PpY
-