this is again a very rare collection-neenga oru exhibition nadathalame
Printable View
this is again a very rare collection-neenga oru exhibition nadathalame
'சிவாஜி ஆண்டு 84' முதல் நாள்.
எங்களின் வாழ்நாளின் பெரும்பகுதியை ஆக்கிரமித்துக்கொண்ட எங்கள் ஆருயிர் அண்ணனே......
இன்று ஒரு நாள் மட்டும் நினைப்பவர்களுக்கு இன்று உன் பிறந்த நாள். ஆனால் எங்கள் உயிரோடு கலந்திட்ட உனக்கு எங்கள் இதயங்களில் எந்நாளும் பிறந்த நாள். எண்ணற்ற ரசிகர்களின் இதயங்களின் இதய சிம்மாசனத்தில் அமர்ந்து நிரந்தர ஆட்சி செலுத்தும் உனக்கு வருடம் முழுவதும் திருநாள். இத்திரியைக்கண்ணுறும் அன்பர்களுக்குத் தெரியும், உன் புகழ்பாட எத்தனை எத்தனை ரசிக நெஞ்சங்கள் புதிது புதிதாக வந்து கொண்டிருக்கிறார்கள் என்று. இன்னும் எத்தனை ரசிகப்பெருமக்கள் உன்மீது கொண்ட தங்கள் உள்ளன்பைக்கொட்ட பதிவு கிடைக்காமல் வரிசையில் நிற்கிறார்கள் என்று.
வாழும் வரை ஒரு அன்னை இல்லத்தில் வாழ்ந்தாய், மறைந்தபின்னோ கோடான கோடி இதய இல்லங்களில் வாழ்கின்றாய். இன்றைக்கும் உன் மீது கொண்ட தூய அன்பினால் உன் பிள்ளைகள் உன் திரைப்படங்களை திருவிழாக்களாக கொண்டாடி மகிழ்கின்றனர். கொண்டாட்டங்களின் ஒரு ஓரத்தில் நிச்சயம் கண்ணீர்த்துளிகள் உண்டு. அது எங்களோடு நீ இல்லையே என்ற பதைக்க வைக்கும் உண்மை ய்தார்த்தம். இது தலைமுறை தலைமுறைக்கும் தொடரும்.
உன் புகழ் பாடுவது எங்கள் பொழுதுபோக்கு அல்ல, அது எங்கள் வாழ்வின் முதல் நோக்கு.
என்றும் இன்பம் பெருகும் இயல்பினால்
ஒன்று காதலித்து உள்ளமும் ஓங்கிட
மன்றுளார் அடியாரவர் வான்புகழ்
நின்றது எங்கும் நிலவி உலகலாம்
பெரியபுராணத்தில் சேக்கிழார் பெருமான் சிவபெருமானை என்றும் காதலித்து பூஜை செய்யும் அவரது அடியார்களை வாழ்த்துவர் அது போல் இன்றைய இந்த நன்னாளில் நம் சிவா(ஜி) பெருமானை என்றும் காதலித்து ஆராதனை செய்யும் நம் தலைவரின் கண்மணிகள் எல்லா நலமும்
பெற்று வாழ நம் பெருமான் நம்மை விண்ணில் இருந்து ஆசிர்வதிப்பாராக
நடிகர் திலகத்தின் பிறந்த நாள் மட்டும் அல்ல அவருடைய ரசிகர்களின் பிறந்த நாள் . அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
டியர் பம்மலார் மற்றும் வாசுதேவன்,
'வசந்த மாளிகை' கொண்டாட்டங்கள் முழுவதுமாக முடியட்டும் என்று காத்திருந்தேன். நீங்கள் இருவரும் அள்ளித்தந்த பொக்கிஷப்புதையல்களுக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை. வாசுதேவன், வசந்த மாளிகை காட்சிகளனைத்தையும் கண்முன்னே கொண்டுவந்தார் என்றால்....
பம்மலார் அவர்கள் ஆவணக்காப்பகத்தை திறந்து வைத்து அள்ளி அள்ளி வழங்கிவிட்டார். அன்றைக்கு தமிழகத்தின் தலைசிறந்த சினிமா பத்திரிகைகளாக விளங்கிய பேசும் படம், பொம்மை, பிலிமாலயா ஆகிய மூன்றும் வசந்தமாளிகை வெளியீட்டை சிறப்பாகக் கொண்டாடியிருக்கின்றன என்பது மிகவும் மகிழ்ச்சிக்குரிய விஷயம். அவற்றை அட்சரம் பிசகாமல் இங்கே பதிப்பித்து, மீண்டும் அவ்விதழ்களை ரசிகர்களின் கைகளில் தவழவிட்ட உங்கள் சேவையை எப்படிப் பாராட்டுவதென்றே தெரியவில்லை.
அனைத்துக்கும் சிகரம் வைத்தாற்போன்று, இத்திரியின் 4162-வது பதிவு, நடிகர்திலகத்தின் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்திருந்த ஆவணப்பதிவு. தமிழகத்தில் மட்டும் 12 அரங்குகளில் 100 நாட்களுக்கு மேல் (அதில் எங்கள் தஞ்சை மாவட்டத்தில் மட்டும் 3 நகரங்களில்), தமிழகத்தில் இரண்டு நகரங்களில் வெள்ளி விழா, கடல் கடந்து இலங்கை மண்ணில் 250 நாட்களுக்கு மேல் என வெற்றிக்கொடி நாட்டிய திரைக்காவியத்தின் மிக முக்கிய ஆவணச்செப்பேடுகள்.
சமீபகாலமாக நமது திரியைக்கண்ணுறும் பல அன்பர்கள் உண்மையறிந்து, முன்னர் திட்டமிட்டு செய்யப்பட்டு வந்த பொய்ப்பிரச்சார மாயைகள் விலகி, மறுக்க முடியாத ஆதாரங்களை நேருக்கு நேர் கண்டு, தெளிந்து வருகிறார்கள் என்பது உண்மை.
பம்மலார் அவர்களே, இந்த சீரிய சேவைக்கு உங்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது. இருந்தாலும் சொல்ல வேண்டியது எங்கள் கடமை.
அக்டோபர் களேபரங்கள்
ஆண்டுதோறும் அக்டோபர் இறுதி பத்திலிருந்து நவம்பர் துவக்க பத்துக்குள் தீபாவளிப்பண்டிகை வருவதால், இவ்விரு மாதங்கள் திரைப்பட படையெடுப்புகள் அதிகமாகவே இருக்கும். இதுபோல ஜனவரியிலும் (பொங்கல் மற்றும் ஜனவரி 26 பாலாஜி படங்கள்). அந்த வகையில் அக்டோபரில் வெளியான படங்களின் பட்டியல்.....
01 துணை (1982)
03 சபாஷ் மீனா (1958)
07 நாம் பிறந்த மண் (1977)
10 திருடன் (1969)
17 பராசக்தி (1952)
18 பாபு (1971)
18 கீழ்வானம் சிவக்கும் (1981)
19 பாவை விளக்கு (1960)
19 பெற்றமனம் (1960)
19 பட்டாக்கத்தி பைரவன் (1979)
21 எங்க ஊர் ராஜா (1968)
22 அம்பிகாபதி (1957)
22 சித்ரா பௌர்ணமி (1976)
23 வம்ச விளக்கு (1984)
25 கௌரவம் (1973)
25 தேவர் மகன் (1992)
27 பந்தபாசம் (1962)
27 தச்சோளிஅம்பு (1978)
28 பைலட் பிரேம்நாத் (1978)
29 சொர்க்கம் (1970)
29 எங்கிருந்தோ வந்தாள் (1970)
30 அவள் யார் (1959)
31 பாகப்பிரிவினை (1959)
உலகத் தமிழர்களின் உள்ளத்தில் நிரந்தர இடம் பிடித்த யுகக் கலைஞனுக்கு இன்று 84-வது பிறந்த நாளாம்.
உன்னை நினைக்கும் போதெல்லாம் உருகுதய்யா உள்ளம்.
உன்னை ஈந்த நாட்டில் நானும் இருக்கிறேன் என்பதனை நினைக்கும் போதெல்லாம் பெருகுதய்யா மகிழ்ச்சி வெள்ளம்.
உனக்கு மட்டும் எப்படி இப்படி ஒரு கூட்டம்?
உன்னுடைய அந்த அற்புதத் திறனுக்கு மட்டும் ஏன் இன்றளவும் ஒவ்வொருவருக்கும் இவ்வளவு நாட்டம்?
உலகம் உள்ளளவும், அதில் கலை உள்ளளவும், உன் புகழ் நீடு வாழும்.
உலகத் தமிழர்களின் ஊனோடும் உயிரோடும் கலந்து விட்ட உன்னை நினைக்கும் ஒவ்வொரு நாளும் திருநாளே!
நெகிழ்ச்சியுடன்,
இரா. பார்த்தசாரதி
எங்கள் இதயத்திற்கு இன்று பிறந்தநாள்.
இந் நானிலம் உள்ளவரை நின் புகழ் தழைத்தோங்கும்.
உங்கள் பிறந்தநாளே கலையின் பிறந்தநாளாக, எங்கள் வாழ்வின் சிறந்த நாளாக என்றென்றும் அனுசரிக்கும்
திரு பம்மலர் அவர்கள் கூறிய ஒரு வாசகம் திருவாசகமாக எனக்கு தோன்றியது
அக்டோபர் 1 அன்று தலைவர் அவர்களின் திரைப்படம் ஒன்றே ஒன்று தான் வெளியானது அது தான் துணை நம் ரசிகர்களுக்கு என்றும் துணை என்றேன். அப்போது திரு பம்மலார் அவர்கள் கூறினார்கள் மே 1 அன்று (அண்ணனின் திருமண நாள் ) வெளியான படங்கள் "கல்தூண் மற்றும் காவல் தெய்வம்" என்ன பொருத்தம் அன்னை இல்லத்திற்கு மட்டுமல்ல நமக்கும் அவர்தான் துணை, கல்தூண் மற்றும் காவல் தெய்வம்
திரு ஸ்ரீனிவாசன் அவர்கள் தலைவர் அவர்களை பற்றி இரண்டு கவிதை கூறினார்கள் . திரு பம்மலார் அவர்கள் நம் திரியில் அதை வெளியிடுவார்கள் என நினைகிறேன்
தென்னாடுடைய சிவனே போற்றி என்நாட்டவர்க்கும் இறைவ போற்றி
அன்னை இல்லதானே போற்றி ராஜாமணி மைந்த போற்றி
கமலா மணாளனே போற்றி சூரகோட்டை சிங்கமே போற்றி
என்றும் அன்புடன்
கிருஷ்ணா
நமது திரியின் அறிவிப்பால் மயிலை கபாலீஸ்வரர் கோயிலில் திரு ஸ்ரீனிவாசன் sir,திரு kc சார் அவர்களின் தலைமையில் திரு y g மகேந்திர அவர்கள் சிறப்பு விருந்தினர் ஆக கலந்து கொண்ட அன்னதான நிகழ்ச்சிக்கு அடியேனும் கலந்து கொண்டேன் மட்டற்ற மகிழ்ச்சி . திரு pammalar அவர்களும் வந்து இருந்தார்கள் இன்று குறைந்தது 400 பேருக்காவது அன்னதானம் நடந்து இருக்கும் என்று நினைக்கிறன்.
எப்பிடிப்பட்ட அடியார்கள் ரசிகர்களாக நம்மவருக்கு கிடைத்து இருக்கிறார்கள் . உண்டி கொடுத்தல் உயிர் கொடுத்தல் என்பார்கள். உண்மையிலே மிகவும் ஒரு நல்ல, மனதிற்கு இனிமையான நிகழ்ச்சி