-
காஞ்சிபுரத்தில் சிவந்த மண் திரைப்படம் 85 பைசா டிக்கெட் 25 ரூபாய்க்கு ப்ளாக்கில் விற்றதாக இவர்களாக கற்பனை செய்தியை தயாரித்துள்ளதையும் அவர்கள் போட்டிருப்பது அப்போது வந்த செய்தி இல்லை, இப்போது இவர்கள் தயாரித்த பொய் செய்தி என்பதையும் சொல்லி அதை உணர்த்த சீர்திருத்த எழுத்தையும் ஏற்கெனவே உதாரணம் காட்டினேன். அவர்களிடம் உண்மையான செய்தி இல்லை. உண்மையிலேயே அப்படி நடந்திருந்தால் அப்போது வந்த செய்தியை வெளியிட மாட்டார்களா? அவர்கள் போட்டிருப்பது பொய் செய்தி என்பதை இதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம். பேசும்படம் அட்டையில் புதிய பறவை படத்துக்காக வரையப்பட்ட ஓவியத்தை ஒரு கண்ணில் அதிர்ச்சியும் ஒரு கண்ணில் பயமும் சிவாஜி கணேசன் காட்டியிருப்பதாக இவர்களாக கற்பனையாக எழுதியிருக்கும் பொய்யையும் ஏற்கெனவே சொன்னேன். இதுபோல நிறைய பொய் சொல்கிறார்கள். இன்னொரு உதாரணம்.
1954ல் வெளியான சிவாஜி கணேசன் நடித்த மனோகரா படம் சென்னையில் ஒரே வாரத்தில் 84,00, 276 ரூபாய் (நன்றாக கவனியுங்கள். 84 ஆயிரம் இல்லை. 84 லட்சத்து 276 ரூபாய் வசூலித்ததாம்.) அடேங்கப்பா. ஒரு வாரத்துக்கே இப்படி என்றால் ஓடி முடிய எவ்வளவு கோடிகள் வசூல் ஆகியிருக்கும். சென்னையில் மட்டுமே இப்படி என்றால் தமிழ்நாடு முழுக்க எத்தனை எத்தனை ஆயிரம் கோடிகள் வசூலாகியிருக்கும்? ஊமைப் பட காலத்தில் இருந்து இதுவரை உலகத்தில் வெளியான எல்லா படங்களின் வசூலையும் சேர்த்தாலும் இனிமேல் வெளியாக உள்ள விஜய்யின் மாஸ்டர், ரஜினியின் அண்ணாத்தே படங்களின் வசூலையும் சேர்த்தாலும் மனோகராவை நெருங்க முடியாது போல. சிவாஜி கணேசனை இப்படித்தான் வசூல் சக்ரவர்த்தியாக்க அவரின் ரசிகர்கள் முயற்சிக்கிறார்கள். ஆனால், அவர்களின் பொய்யை மக்கள் நம்பவில்லை, சிரிக்கிறார்கள். அதனால், தாங்களே பொய் வசூல் வெளியிட்டு, தாங்களே திருப்தி அடைகிறார்கள். இப்படித்தான் இவர்களின் சிவந்த மண் பொய் வசூலும். இதுதான் சிவாஜி கணேசனை அவரின் ரசிகர்கள் வசூல் சக்கரவர்த்தி ஆக்கிய கதை. பாவம்.. அவர்களின் இயலாமையைப் பார்த்து பரிதாபப்படலாம். வேறு என்ன செய்ய?... Swamy...
-
1969 ல்
நம்நாடு காவியத்தை விட ஒரு படம் அதிகம் ஒரு தியேட்டர் ஒடியதாம்..
விளம்பரத்தில் தியேட்டர் இல்லையாம் என ஒரு பதிவை முன்னால் பார்த்து இருக்கிறேன்...
நம்நாடு காவியம்
8 அரங்கில் 100 நாள் தான்.
ஆனால்...
50 நாள் 52 அரங்கு...
இதில் 18 அரங்கு
75 நாள்...
12 வாரம் 15 அரங்கு...
நம்நாடு 100 நாள்....
++++++++++++++++
மதுரை
மீனாட்சி 133 நாள்...
திருச்சி
வெலிங்டன் 119 நாள்..
சேலம்
பேலஸ் 109 நாள்....
குடந்தை
விஜயலட்சுமி 100 நாள்
சென்னை
கிருஷ்ணா 105 நாள்
சித்ரா 105 நாள்
சரவணா 105 நாள்
அடுத்து...
பட்டுக்கோட்டை 96 நாள்
மயிலாடுதுறை 96 நாள்
ஈரோடு 91 நாள்
தஞ்சாவூர் 85 நாள்
கரூர் 85 நாள்
வேலூர் 83 நாள்
பாண்டிச்சேரி 82 நாள்
அடுத்து....
சென்னை
சீனிவாசா 78 நாள்
நெல்லை 76 நாள்
திண்டுக்கல் 76 நாள்
நாகர் கோவில் 76 நாள்
++++++++++++++++++++
இப்படி அந்த நடிகரின் வெளிநாடு படம் ஒடியதுண்டா...
நம் நாடு காவியமே
இப்படி என்றால்....
அடிமைப்பெண்
15 அரங்கில் 100 நாள்..
இதில் ....
மதுரை 176 நாள்
திருச்சி 133 நாள்
சென்னை 133 நாள்
சேலம் 133 நாள்
கோவை,நெல்லை
120 நாள்....
திண்டுக்கல்,
சென்னை (4 ) நா.கோவில்,வேலூர்
தஞ்சை , தூத்துக்குடி, ஈரோடு......
மேலும் 15 திரையரங்கில்
11 வாரங்கள்...
பாண்டி 92
ராம்நாட் 84
ஆத்தூர் 80
விருதுநகர், விருதுநகர்
பழனி, சிதம்பரம்,
கரூர், ப.கோட்டை
தி.மலை, காஞ்சிபுரம்
கடலூர் பெங்களுர் (3)
++++++++++++++++++++
மொத்தம் 68 திரையில் 50 நாட்கள்...
இலங்கையில்
(சென்ட்ரல்) 100 நாட்களும்...
ராணியில் 85 நாட்களும் ஒடியது.
மைசூரில் முதன் முறையாக 2 அரங்கில் வெளியீட்டு 66 நாள் ஒடி சாதனை...
திருவண்ணாமலை நகரில் 3 அரங்கில் திரையிட்ட முதல் சாதனைகாவியம்
அடிமைப்பெண்...
(76 நாள்) சென்னை நீங்கலாக தமிழ்நாட்டில் ஒரே நேரத்தில் மூன்று தியேட்டர் வெளியிட்டது அன்று மிகப்பெரிய சாதனையாகும்....
இப்படி தோண்ட தோண்ட பல சாதனைகளை உருவாக்கும் வல்லமை படைத்த காவியங்களை தந்த ஒரே தனிப்பெரும் நாயகன் என்றுமே நம்
மக்கள் திலகமே........
Ur...
-
இந்திய திரையுலகில் ஒரே ஒரு தனிப்பெரும்
கதாநாயகன் மக்கள் திலகம் மட்டுமே...
சாதாரண நடிகர்கள் தான் நடிக்கும் எல்லாபடங்களிலும் சில முன்னனி நடிகர்களை சேர்த்து தான் கதை எடுபடும்...
ஆனால் மக்கள் திலகம் தனியாக நின்று சாதித்த
சாதனைகளின் வெற்றி நம் மூன்றெழுத்து மந்திரத்திற்கு மட்டுமே
பாரதத்தில் சொந்தமாகும்......
அதுப்போல தான்
நம்நாடு வெற்றி
மகுடம் என்றால்...
அடிமைப்பெண்
வெற்றி
மலையாகும்....
நம்நாடு எழுச்சி என்றால்
அடிமைப்பெண்
புரட்சி ஆகும்...
ஒரே ஆண்டில் சென்னையில் தொடர்ந்த வெளியான இரண்டு வண்ணக் காவியங்கள் ... 8 அரங்கில் வெளிவந்து
7 அரங்கில் 100 நாளை கடந்து 1969 ல் சாதனை..
அடிமைப்பெண்
++++++++++++++
கிருஷ்ணா 133 நாள்
133 நாளில் வடசென்னையில் வெள்ளிவிழா ஒடிய பிற நடிகர்களின் படத்தை
19 வாரத்தில் முறியடித்து
புதிய சாதனை...
மிட்லண்ட் 100 நாள்
மேகலா 105 நாள்
நூர்ஜகான் 100 நாள்
நம் நாடு
+++++++++
கிருஷ்ணா 105 நாள்
சித்ரா 105 நாள்
சரவணா 105 நாள்
ஸ்ரீசினீவாசா 78 நாள்
இது போன்ற இரண்டு காவியங்கள் படைத்த சாதனையை..... பின்னால் வந்த எந்த நடிகர் படமும்
தொடர்ந்து 8 அரங்கில்
ஒடியதில்லை
சென்னையில்....
இரண்டுத்திரைப்படமும்
8 அரங்கில் வசூல்
24 லட்சத்தை கடந்தது..
சென்னையில் முதல் வெளியீட்டில் ஒடி முடிய
32 லட்சத்தை கடந்தது...
+++++++++++++++++++
சாதாரண நடிகருக்கு
எப்பொழுதாவது
வரலாறு பதிவிடும்..
ஆனால்
தனிப்பெரும் கதாநாயகரான
மக்கள் திலகம்
அவர்களே...
தன் திரைப்படங்கள் மூலம் வரலாற்றை ஆண்டு தோறும் படைப்பார்.
அதையே முறியடித்து மீண்டும் புதிய வரலாற்றையும் எழுதுவார்....படைப்பார்!
தனிப்பெரும் கதாநாயகனின் திரை வரலாறு தங்க சுரங்கம் போன்றது...
வசூலை தந்து கொண்டு வரும் அமுதசுரபி.....
அட்சயபாத்திரம்...
ஆம் நம் கொடை வள்ளல் பிறருக்கு கணக்கில்லாமல் கொடுப்பது போல்...
அத்தலைவரின் அழியாத காவியமும்
திரையரங்கில் வசூலை அள்ளி அள்ளி கணக்கில்லாது கொடுத்து வந்தது..
இனியும் கொராணா முடிந்தும் கொடுக்கும்.........ur...
-
தலைவரின் நம்நாடு காவியம் பெற்ற சாதனை வசூல் வரலாறே மகத்தானது...
நம்நாடு படத்தயாரிப்பு செலவை விட ...
5 மடங்கு விஜயா நிறுவனத்திற்கு லாபம் கொடுத்த காவியம் நம்நாடு..
அத்திரைப்படத்தின் மறு வெளியீடு இன்று வரை சாதனையில் உள்ளது..
ஊரடங்கு வருவதற்கு முன்னால் கூட நம்நாடு
சென்னையில் மட்டுமே 2020 மார்ச் வரை
5 அரங்கில் வெளிவந்தது.
அடிமைப்பெண்
வசூல் வரலாறு எட்டாத தூரத்தில் அன்றும் இன்றும் என்றுமே உள்ளது...
தயவு செய்து
தாங்கள் நம் தலைவரின் காலத்தால் அழியாத
அடிமைப்பெண்
நம் நாடு
திரைப்படங்களை
வேறு நடிகரின் படங்களுடன் தயவு செய்து ஒப்பிடவேண்டாம்.
கடந்த 50 ஆண்டு காலத்தில்....
அடிமைப்பெண்
சென்னையில் மட்டும்
26 வெளியீடுகளையும்...
நம்நாடு
23 வெளியீடுகளையும்
பெற்றுள்ளது...
இந்த வெளியீட்டில் மட்டும்....
எத்தனை அரங்கு
எத்தனை கோடி வசூல்
யார் யார் பெற்றார்கள்
என்பதே பதிவிட முடியாத சாதனையாகும்.
ஒரு குறிப்பு :
1991 ல் புரசை
சங்கம் ac யில் அரங்கில் இரண்டு முறை திரையிட்ட ஒரே படம் நம்நாடு ஆகும்.
முதல் 6 நாள்
வசூல் : 1,04,246.00 ஆகும்.
மீண்டும் 6 நாள்
வசூல் : 88,711,05
அடுத்து...
2017 ல்
அடிமைப்பெண்
சென்னையில்
தேவி ஞாயிறு காட்சி மட்டும் அரங்கு நிறைந்த
ஒரு காட்சி வசூல் : 1லட்சத்து 60 ஆயிரத்தை கடந்தது.(1100 பேர்)
(ஒரு டிக்கட் விலை :152)
அது மட்டுமல்ல
ஆல்பட் அரங்கிலும் ஞாயிறு அன்று தீடிர் என திரையிட்டு 650 பேர்கள் பார்த்த நிகழ்வு......
இது வரை ஒரு பழைய திரைப்படத்திற்கு என்றால் அது நம் மக்கள்திலகத்தின்
காவியங்களுக்கு மட்டும் தான்.
மேலும் தாங்கள் கொடுத்த விளக்கபதிவு..
புள்ளிவிபரங்கள் யாவுமே மகத்தானது சார்...தொடரட்டும் தலைவரின் அழிவில்லா பணி......ur...
-
மக்கள் திலகம் எம்ஜிஆர் ஒரு திமுக காரர், பின்பு பிரிந்து அதிமுக என்கிற கட்சியைத் துவங்கினார், முதல்வர் ஆனார். இவ்வளவுதானே நமக்கு தெரியும். ஆனால் பலருக்கு தெரியாத விஷயம் இருக்கிறது. எம்ஜிஆர் ஆரம்பத்தில் தீவிர காங்கிரஸ் ஆதரவாளர். காந்தியையும், கர்ம வீரர் காமராஜரையும் அதிகம் நேசித்தவர் என்பது தான்.
ஆரம்பம் தொட்டே கதர் ஆடை தான் அணிந்தார் எம்ஜிஆர். அதன் பின் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா,கலைஞர் ஆகியோர் நட்பு கிடைத்து திமுகவில் இணைந்தார். ஆனாலும், கடைசி வரை கர்மவீரர் காமராசர் மீது தீராத பாசம் வைத்திருந்தார் எம்ஜிஆர். நேரம் கிடைக்கும் போதெல்லாம் காமராஜரை சந்தித்து மகிழ்ந்தார்.
தனது இல்லத்திற்கு எத்தனையோ தலைவர்களை அழைத்து விருந்து கொடுத்து மகிழ்ந்த எம்ஜிஆருக்கு ஒரு தீராத ஏக்கம் இருந்தது.
ஒரே ஒரு முறை காமராஜரை தனது இல்லத்திற்கு அழைத்து வந்து விட வேண்டும் அருகே அமர்ந்து உணவு சாப்பிட வேண்டும். ஆனால் எப்போது அழைத்தாலும் காமராஜர் சிரித்தபடி "சொல்றேன்" என்கிற ஒற்றை*
வார்த்தையால் தவிர்த்து விடுவார். சிவாஜி, எம்ஜிஆர் பங்கு பெற்ற ஒரு விழாவிற்கு முதல்வர்* காமராஜர் வந்திருந்தார். கடைசியாக ஒருமுறை அழைத்து விடுவது என்கிற நம்பிக்கையில் வழியனுப்பும் *போது மீண்டும் அழைப்பு விடுத்தார் எம்ஜிஆர்.
அப்போதும் அதே புன்னகை மாறாமல்.., "ராமச்சந்திரா நான் உன் இல்லம் வரக் கூடாது* என்றில்லை. உன் வீட்டு விருந்து பற்றி நிறைய கேள்விப் பட்டுள்ளேன். அறுசுவை உணவும் மீன் இறைச்சியும் அசைவ உணவுகளும் நிறைந்திருக்கும் என்று கூறுவார்கள். நான் மக்கள் ஊழியக்காரன். ரெண்டு இட்லி, தயிர் சோறு தான் எனக்கு சரிப்படும் உன் வீட்டில் அறுசுவை உணவு சாப்பிட்டு விட்டால் திருப்பியும் அந்த ருசி நாக்கு தேடும்.. அதுக்கு நான் எங்கே போறது" என்று கூற *ஆடிப்போனார் எம்ஜிஆர்.
தன்னையும் அறியாமல் காமராஜரை வணங்கி விட்டாராம் மக்கள் திலகம் எம்ஜிஆர். அதுமுதல் காமராஜரை அழைப்பதில்லை..! இப்படி ஒரு முதல்வர் நமது தமிழ் நாட்டில் இருந்திருக்கிறார். மீண்டும் இப்படி ஒரு மக்கள் முதல்வர் நமக்கு கிடைப்பாரா?.........vr...
-
மக்கள் திலகத்தை திகைக்க வைத்தேன் - நடிகை சச்சு!
ஆம் முன்பெல்லாம் நான் எம்.ஜி.ஆர். அவர்களை "சார்" என்று தான் அழைத்துக் கொண்டிருந்தேன். ஒரு நாள் "சச்சு! என்ன ஸார் வேண்டியி குக்கு .... அண்ணா என்று கூப்பிடு" என்று அவரே தான் சொன்னார். அதன் பிறகு "அண்ணா" என்று அழகா ஆரம்பித்தேன்.
கோவை , ஜூபிடர் ஸ்டூடியோவில், "ராணி" படம் தயாராகி வந்த தேரம் . அதில் சிறுமி பாத்திரத்தில் நான் நடித்து வந்தேன் . அப்பொழுது அங்கு "நாம்" படமும் தயாராகி வந்தது. முதன் முதலில் நான் எம். ஜி ஆரைச் சந்தித்தது அங்குதான். அன்று தொடங்கி "எப்போது பார்த்தாலும் என்ன ஓயாமல் எம். ஜி.ஆர் . பேச்சு" , என்று பாட்டியும் சகோதரர் சகோதரியரும் கடிந்து கொள்ளும் அளவுக்கு நான் அவர் ரசிகையாகி விட்டேன், எம்.ஜி.ஆர் . அண்ணாவை நான் ஒரு சமயம் திணற வைத்திருக்கிறேன்!.........
-
சில ஆண்டுகளுக்கு முன் ஆதவன் என்ற தமிழ் படத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு சரோஜாதேவி அவர்கள் நடித்தார்கள்.
ஒரு நாள் படப்பிடிப்பின் நடுவில் பிரேக்கில் உணவு இடைவேளை போது அவர் கொண்டு வந்து இருந்த இரு பொருட்கள் உடன் இருந்த மற்ற அனைவரையும் கவர்ந்தன..
அவர்கள் என்ன இது வெள்ளி தட்டு அத்துடன் ஒரு டம்ளர் போல அமைப்பில் மூடியுடன் ஒரு straa இணைக்க பட்டது போல ஒரு பாத்திரம்...என்று கேட்க.
அவர் சொல்ல அனைத்து பட குழுவினரும் ஆர்வமுடன் கேட்க..
எங்க வீட்டு பிள்ளை படப்பிடிப்பு நடந்து கொண்டு இருந்த நேரம்...ஜமீன்தார் வீட்டு மணமகன் தலைவர் எம்ஜிஆர் அவர்கள் உடன் நானும் என் அப்பா வேடத்தில் நடித்த ரங்காராவ் அவர்களும் நடித்த ஒரு காட்சி.
ஒரு சூட்டிங் பார்க்க நாங்க போய் இருக்கும் போது குமரி பெண்ணின் உள்ளத்திலே என்ற பாடலில் அவர்கள் நடிக்க அதை பார்க்க போன நாங்கள் அந்த பாடலை தொடர்வதாக காட்சி அமைப்பு.
இதே போல இடைவேளையில் விலை உயர்ந்த புடவை அணிந்து கொண்டு தலைவர் பக்கத்தில் நான் அமர்ந்து இருக்கும் போது குடிக்க காபி கொடுக்க பட்டது.
நான் குடிக்க தலைவர் மறுக்க அப்போது ஒரு சொட்டு காபி என் புடவையில் சிந்தி விட பதறி நான் துடைக்க தலைவர் பார்த்து சிரிக்க.
அடுத்த சில நாட்களில் படப்பிடிப்பில் இது எனது பரிசு உங்களுக்கு இனி எந்த பானமும் உங்கள் உடையில் சிந்தாது என்று இந்த கிளாஸ் போன்ற இதையும் தட்டையும் இரண்டும் வெள்ளியால் செய்ய பட்டவை...எனக்கு பரிசாக கொடுத்தார்.
என்ன ஒரு மனது அவருக்கு....அன்று முதல் வெளிப்புற படப்பிடிப்பு எங்கு இருந்தாலும் இந்த இரண்டு பொருட்களும் என்னுடன் பயணிக்கின்றன இன்று வரை என்று சொல்லி முடிக்கிறார் அபிநய சரஸ்வதி சரோ அவர்கள்.
சுற்றி அதை கேட்டு கொண்டு இருந்தவர்கள் சாப்பிட்டு முடித்த பின் என்ன ஒரு அற்புத மனிதர் எம்ஜிஆர் அவர்கள் என்று மனதில் பேசி கொண்டது அரங்கம் முழுவதும் எதிர் ஒலித்தது சத்தியம்.
தலைவருக்கு பக்கத்தில் படத்தில் இரு பக்கமும் கை பிடி உடன் கூடிய அந்த வெள்ளி கிளாஸ்.
வாழ்க தலைவர் புகழ்.
தொடரும்...உங்களில் ஒருவன்.....நன்றி......Mn...
-
""நான் எம்.ஜி.ஆரோடு 22 ஆண்டுகள் தொண்டனாக- தோழனாக- தம்பியாக எல்லாவகையிலும் இணைந்து வாழ்ந்திருக்கிறேன். அந்த 22 ஆண்டு காலம் என் நெஞ்சை விட்டு நீங்காத காலம். அதனை பொற்காலம் என்றே சொல்லலாம்.
நான் உண்மையாக வாழ்ந்த காலம் அந்த 22 ஆண்டுகாலம்தான். அவருடைய உதவியால்தான் தமிழின ஆயுதப்போர் தொடங்கினேன். அவரது உதவியுடன், ஈழப்போராட்ட உதவிக்குக் காரணமாக இருந்தவன் நான். என்னால் ஒரு காசு தமிழீழப் போருக்குத் தர முடியாது. எம்.ஜி.ஆர். பலகோடிகளை வாரிவாரிக் கொடுத்தார். அவர் வழங்கிய கைக்கு உதவியாக என்னுடைய கை பிடித்துக் கொடுக்க வைத்தது.
எம்.ஜி.ஆர். ஆயிரத்தில் ஒருவர் அல்ல; பத்துகோடிகளில் ஒரு மனிதர். அவரது கலை உலகம், நடிப்புலகம் ஒரே நாளில் உயர்ந்ததல்ல. படிப்படியாக, மெல்ல மெல்ல உயர்ந்து யாரும் எட்ட முடியாத எல்லையைத் தொட்டவர்.
அரசியலில் நெருக்கடி காரணமாக "உலகம் சுற்றும் வாலிபன்' படத்தை ரகசியமாக- உலக சினிமா அரங்கில் சுவரொட்டி ஒட்டாமல் வெளியிட்டார். அது மாபெரும் வெற்றிப் படமாக அமைந்தது என்றால் அதற்குக் காரணம்- அவர் மக்கள் திலகம் என வலம் வந்ததால்தான்.
அரசியலைப் பொறுத்தவரையில் ஒருகால கட்டத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து, அண்ணாமீது கொண்ட அளப்பரிய அன்பு காரணமாக தன்னை தி.மு.க.வில் இணைத்துக் கொண்டவர். தி.மு.க. வளர்ச்சியில் சரிபாதிக்கு மேல் அவருக்கு பங்கு உண்டு.
அண்ணா மறைந்த பின்னர் கருணாநிதியை முதலமைச்சராக்கியது எம்.ஜி.ஆர்.தான். முதலமைச்சரான கருணாநிதி தி.மு.க.விலிருந்து விலக்கியபின் முறைப்படி தனிக்கட்சி ஆரம்பித்தார். இதற்கு தனி மனித முனைப்பு காரணமாக இருந்தது. ஆனால் கருணாநிதி நினைத்தபடி எம்.ஜி.ஆர். காணாமல் போய்விடவில்லை. கட்சியை விட்டு விலகி தனிக்கட்சி ஆரம்பித்து ஐந்தே ஆண்டுகளில் ஆட்சி அமைத்தவர் எம்.ஜி.ஆர். அவர் உயிருடன் இருக்கும்வரை கருணாநிதி முதலமைச்சராக வர கனவுகூட காணமுடியவில்லை. இதுதான் எம்.ஜி.ஆரின் வெற்றி.
எம்.ஜி.ஆர். அரசியலுக்கு வந்ததாலேயே பல நன்மைகள் தமிழகத்துக்கு- தமிழக மக்களுக்கு கிடைத்தது. "தமிழ் தமிழ்' என்று பேசினார்கள் பலர். ஆனால் எம்.ஜி.ஆர். ஐந்தாவது உலகத்தமிழ் மாநாட்டை மதுரையில் சிறப்பாக நடத்தினார். அதுவும் தமிழாய்ந்த தமிழறிஞர்களுடன் இணைந்து அரசியல் கலப்பில்லாமல் நடத்தினார்.
தஞ்சையில் 1200 ஏக்கரில் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் உருவாகக் காரணமாய் இருந்தவர். அதனுடைய வளர்ச்சிக்கு என்னென்ன செய்யமுடியுமோ அத்தனையும் செய்தார்.
தந்தை பெரியாருக்கு நூற்றாண்டு விழாவை ஓராண்டு முழுவதும் எல்லா மாவட்டத் தலைநகரங்களிலும் நடத்தினார். பெரியார் நினைவுத்தூண் உருவாக்கினார். ஒலி, ஒளி காட்சியை உருவாக்கினார். அதேபோல மகாகவி பாரதி நூற்றாண்டு விழாவையும் செம்மையாக நடத்தினார். பெரியார், பாரதி நூற்றாண்டு விழா கவியரங்கங்கள் எங்கெங்கு நடந்தனவோ அங்கெல்லாம் தலைமை வகித்தேன்.
அண்ணா அவர்கள் லட்சோப லட்சம் தி.மு.க தொண்டர்களை, தோழர்களை தன் தம்பிமார்களாக ஏற்றுக்கொண்டார். 1967-ல் விருகம்பாக்கம் மாநாட்டில், "அன்புத் தம்பிமார்களே நாம் அத்தனை பேரும் ஒரே வயிற்றில் பிறப்பது சாத்தியம் இல்லை என்பதால் வெவ்வேறு தாய்மார்கள் வயிற்றில் பிறந்தாலும் நாம் அத்தனைபேரும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள்தான் என்பதை மறக்கக்கூடாது' என்றார். தி.மு.கழக தோழர்கள் ஒரு குடும்பம் என்றார். அதனால் அண்ணாவின் புகழ் வளர்ந்தது.
தன்னலம் சார்ந்த மனிதர்கள் தங்களைத் தாங்களே அழித்துக் கொள்கிறார்கள். பொதுநலம் பேணுகிற மனிதர்கள் தாங்கள் சார்ந்த சமுதாயத்தையும் வாழவைத்து, தாங்கள் மறைந்த பின்னாலும் மறையாமல் வாழ்கிறார்கள்.''
- புலவர் புலமைப்பித்தன் ..........vr...
-
தலைவரின் "நம்நாடு" காவியம் பெற்ற சாதனை வசூல் வரலாறே மகத்தானது...
நம்நாடு படத்தயாரிப்பு செலவை விட ...
5 மடங்கு விஜயா நிறுவனத்திற்கு லாபம் கொடுத்த காவியம் நம்நாடு..
அத்திரைப்படத்தின் மறு வெளியீடு இன்று வரை சாதனையில் உள்ளது..
ஊரடங்கு வருவதற்கு முன்னால் கூட நம்நாடு
சென்னையில் மட்டுமே 2020 மார்ச் வரை
5 அரங்கில் வெளிவந்தது.
அடிமைப்பெண்
வசூல் வரலாறு எட்டாத தூரத்தில் அன்றும் இன்றும் என்றுமே உள்ளது...
தயவு செய்து
தாங்கள் நம் தலைவரின் காலத்தால் அழியாத
அடிமைப்பெண்
நம் நாடு
திரைப்படங்களை
வேறு நடிகரின் படங்களுடன் தயவு செய்து ஒப்பிடவேண்டாம்.
கடந்த 50 ஆண்டு காலத்தில்....
அடிமைப்பெண்
சென்னையில் மட்டும்
26 வெளியீடுகளையும்...
நம்நாடு
23 வெளியீடுகளையும்
பெற்றுள்ளது...
இந்த வெளியீட்டில் மட்டும்....
எத்தனை அரங்கு
எத்தனை கோடி வசூல்
யார் யார் பெற்றார்கள்
என்பதே பதிவிட முடியாத சாதனையாகும்.
ஒரு குறிப்பு :
1991 ல் புரசை
சங்கம் ac யில் அரங்கில் இரண்டு முறை திரையிட்ட ஒரே படம் நம்நாடு ஆகும்.
முதல் 6 நாள்
வசூல் : 1,04,246.00 ஆகும்.
மீண்டும் 6 நாள்
வசூல் : 88,711,05
அடுத்து...
2017 ல்
அடிமைப்பெண்
சென்னையில்
தேவி ஞாயிறு காட்சி மட்டும் அரங்கு நிறைந்த
ஒரு காட்சி வசூல் : 1லட்சத்து 60 ஆயிரத்தை கடந்தது.(1100 பேர்)
(ஒரு டிக்கட் விலை :152)
அது மட்டுமல்ல
ஆல்பட் அரங்கிலும் ஞாயிறு அன்று தீடிர் என திரையிட்டு 650 பேர்கள் பார்த்த நிகழ்வு......
இது வரை ஒரு பழைய திரைப்படத்திற்கு என்றால் அது நம் மக்கள்திலகத்தின்
காவியங்களுக்கு மட்டும் தான்.
மேலும் தாங்கள் கொடுத்த விளக்கபதிவு..
புள்ளிவிபரங்கள் யாவுமே மகத்தானது சார்...தொடரட்டும் தலைவரின் அழிவில்லா பணி...ur...
-
தாயை காத்த தனயன் தேவர் பிலிம்ஸில் எம்ஜிஆர் நடித்த மூன்றாவது படம். 1962 ஏப் 13 ல் வெளிவந்து 100 நாட்கள் பல திரையரங்குகளில் ஓடி வெற்றியை குவித்த படம். தமிழகத்தில் 7 திரையரங்குகளில் 100 நாட்களை தாண்டி ஓடியது குறிப்பிடத்தக்கது.
1962 ன் பிளாக் பஸ்டர் திரைப்படம் தாயைக் காத்த தனயன்தான். திரையிட்ட திரையரங்குகளிலெல்லாம் திருவிழாக் கோலம்தான்.
படப்பிடிப்பு வாகினியில் போட்ட செட் என்றாலும் காட்டுக்குள் சென்று படம் பார்த்த வித்தியாசமான உணர்வை கொடுத்தது. பாடல்கள் மகாதேவனின் இசையில் மயக்கும் மல்லிகையாய் மணம் வீசியது. ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்தான் காதல் பாடல்களில் நம்பர் 1 பாடல் என்றால் அன்பே வா க்கு முன்னால் காதல் பாடல்களில் தலைசிறந்த பாடலாக காவேரி கரையிருக்கு பாடல்தான் விளங்கியது எனலாம்.
எம்ஜிஆர் நல்ல சுறுசுறுப்பாக வந்து கம்புச்சண்டை போடும் அழகை எத்தனை முறை வேண்டுமானாலும் ரசித்துப் பார்க்கலாம். காட்டில் புலி படுத்தும் பாடு ஆங்கிலப் படங்களை பார்த்த த்ரில் அனுபவத்தை உண்டாக்கி வியர்க்க வைத்தது.
படம் பார்த்தவர்கள் இந்தக் காட்சியை சிலாகித்து பேசும் போது படம் பார்க்காதவர்களையும். பார்க்கத் தூண்டின.
கட்டித்தங்கம் வெட்டி எடுத்து அற்புதமான பாடல். T m s ன் குரலின் இனிமை இந்த பாடலில் பளிச்சென்று தெரியும். நடக்கும் என்பார் நடக்காது சோகப் பாட்டிலும் சுவையான பாடல். காட்டுராணி கோட்டையிலே சரோஜாதேவி அறிமுகப் பாடல் வழக்கம் போல் அவருடைய. அழகின் வெனிப்பாடு அருமையாக இருக்கும்.
மூடித்திறந்த இமையிரண்டும் இவை அத்தனையும் ஒருங்கே இணைந்து அறுசுவை விருந்து படைத்தது போல் இருந்தது.
M.r ராதா இரட்டை வேட நடிப்பை அபாரமாக வெளிப்படுத்தியிருப்பார். டீக்கடைக்காரனாக காமெடியிலும் வில்லத்தனத்திலும் முத்திரை பதித்தார். மொத்தத்தில் விறுவிறுப்பாக அனைவரையும் காட்டிற்கு அழைத்து சென்ற உணர்வோடு சிறந்த பொழுது போக்கும் உணர்வையும் ஏற்படுத்திய படம்.
சென்னையில் பிளாசா பாரத் மகாலட்சுமியில் வெளியாகி அனைத்து அரங்குகளிலும் 112 நாட்கள் ஓடி வெற்றி பெற்றது. திருநெல்வேலி ராயலில் 70 நாட்கள் ஓடி வெற்றி பெற்றது. தூத்துக்குடி ஜோஸப்பில் 63 நாட்கள் ஓடியது குறிப்பிடத்தக்கது. சுமார் 30 திரையரங்குகளில் 50.நாட்கள் ஓடி வெற்றி கொடியை உயர்த்தி பிடித்த படம். மதுரை கல்பனா, திருச்சி பேலஸ், சேலம் பேலஸ், மற்றும் கோவை கர்னாட்டிக் கிலும் 100 நாட்களை தாண்டி அதிகபட்சமாக 137 நாட்கள் வரை ஓடியது. இலங்கை கிங்ஸ்லி யிலும் 100 நாட்கள் ஓடி மகத்தான வெற்றி பெற்றது.
ஒரு சில நடிகர்கள் ஏதாவது ஒன்று அல்லது இரண்டு தியேட்டர்களில் வடக்கயிறு போட்டு இழுத்து 100 நாட்கள் ஓட்டி விட்டு 100 நாட்கள் விழாவுக்கு அந்த நடிகர் கம்பீரமாக வருவதை பார்க்கும் போது வியப்பாக இருக்கும். இதற்குதான் ஆசைப்பட்டாயா கணேசா? என்று கேட்கவேண்டும் போல தோன்றும். ஆனால் நம் புரட்சி நடிகரோ 7 தியேட்டரில் 100
நாட்கள் ஓடிய "தாயை காத்த தனயன்", "ஆயிரத்தில் ஒருவன்", 20 திரையரங்கில் ஓடிய "உலகம் சுற்றும் வாலிபன்" உட்பட பட படங்களுக்கு விழாவுக்கு வர மறுத்து விட்டார்.
எந்த பேரும் புகழையும் தேடிப் போகாதவர். நாடி வந்த விழாக்களையும் தவிர்க்கும் ஒரு மாமனிதர் மக்கள் திலகம் மட்டுமே..........ksr.........
-
இன்று பிற*ந்த*நாள் காணும் இடியோசை சிரிப்புக்குர*லோன் பி.எஸ்.வீர*ப்பா, மக்கள் திலகத்துட*ன் "ஜெனோவா" என்ற காவிய*த்தில் இட*ம் பெறும் காட்சி..
இவ*ர் த*லைவ*ருட*ன் ந*டித்துள்ள ப*ட*ங்க*ள்..
ஸ்ரீமுருக*ன்,
ராஜ*முக்தி,
நாம்,
ம*ருத*நாட்டு இள*வ*ர*சி, க*லைஅர*சி,
ச*க்க*ர*வ*ர்த்தி திரும*க*ள், ராஜ*ராஜ*ன்,
ம*காதேவி, ம*ன்னாதிம*ன்ன*ன், விக்கிர*மாதித்த*ன், ஆன*ந்த*ஜோதி, அர*ச*க*ட்ட*ளை,
நாடோடி மன்ன*ன், அலிபாபாவும் 40 திருட*ர்க*ளும்,
இத*ய*க்க*னி,
ப*ல்லாண்டு வாழ்க , ந*வ*ர*த்தின*ம்,
ஊருக்கு உழைப்ப*வ*ன், மீன*வ* ந*ண்ப*ன்,
ம*துரையை மீட்ட சுந்த*ர*பாண்டிய*ன் ஆகிய
பட*ங்க*ளில் ந*டித்துள்ளார்.
ஜெனோவா ப*ட*த்தில் த*லைவ*ரும், வீர*ப்பாவும் மோதும் வாள் ச*ண்டை 1953ல் என்ன வேக*த்துட*னும் ஆக்ரோஷ*த்துட*னும் இருக்குமோ அதே சுறுசுறுப்பிற்கு ச*ற்றும் குறையாம*ல் 1978ல் வெளிவ*ந்த* மதுரையை மீட்ட சுந்த*ர*பாண்டிய*ன் ப*ட*த்தில் #இருவ*ரும் மோதுவ*ர்.
1911ல் கோவை அருகே உள்ள காங்கேயம் என்ற* ஊரில் பிற*ந்தார். இன்று 109வ*து பிற*ந்த* தின*ம்..........Shm...
-
50.ஆண்டுகள் நிறைவு பெற்ற மக்கள் திலகத்தின் ''எங்கள் தங்கம் '' 9.10.1970.........
மக்கள் திலகம் எம்ஜிஆர் ''உலகம் சுற்றும் வாலிபன்'' படப்பிடிப்பிற்காக வெளிநாடு செல்லும் முன் [செப் 1970 ] படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்றார் .மக்கள் திலகம் வெளி நாட்டில் இருந்த நேரத்தில் எங்கள் தங்கம் வெளியானது .மேகலா பிக்சர்ஸ் தயாரித்த முதல் வண்ணப்படம் .மக்கள் திலகம் எம்ஜிஆர் திமுகவிற்காக , இலவசமாக நடித்த படம் .
படமும் 100 நாட்கள் ஓடி மாபெரும் வெற்றியை பெற்றது .100 வது நாள் வெற்றி விழாவில் பேசிய முரசொலி மாறன் எங்கள் தங்கம் வெற்றி மூலம் தங்கள் நிறுவனம் கடனிலிருந்து மீண்டது என்றும் அதற்காக புரட்சி நடிகர் எம்ஜிஆர் அவர்களுக்கு நன்றி என்று தெரிவித்தார் ..........sb...vr...
-
இணைந்த கைகள்
ஏப்ரல் மாதம் [1970] ஈரானில் தமிழ் பிடிப்புக்காக புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். விரைவில் வெளிநாடு போகவிருக்கிறார். இத்தகவலை அவரே அண்மையில் நிருபர்களிடம் வெளியிட்டார்.
ஊட்டியில் வெளிப்புறக் காட்சிகள் படப்பிடிப்புக்கள் எம்.ஜி.ஆர். போயி ருந்த பொழுது [ செப்டம்பர் 1969 ] நிருபர்கள் அவரைப் பேட்டிகண்டார்கள்.
"இணைந்த கைகள்" படப்பிடிப்புக்காகத்தாம் வெளிநாடு செல்லவிருப்பதாக எம்.ஜி.ஆர். கூறினார் . வருகிற ஏப்ரல் மாதம் ஈரானி லும் அதன் சுற்றுவட்டாரத்திலுள்ள பகுதிகளிலும் படப் பிடிப்புகள் நாடாகும் என்றும் அதற்காக தான் வெளிநாடு போகவிருப்பதாகவும் அவர் கூறினார் ........sb...
-
#பொன்மனச்செம்மலும் #ஆன்மீகச்செம்மலும்
தமிழக முதல்வர் பொன்மனச்செம்மலும், கிருபானந்த வாரியார் சுவாமிகளும் ஒரு விழாவில் கலந்துகொண்டிருந்தனர்... விழா முடிந்தது...வாரியார் சுவாமிகள் மேடையிலிருந்து கீழிறங்கி காருக்காக வெளியில் காத்துக்கொண்டிருந்தார்...
புரட்சித்தலைவரை அனைவரும் சூழ்ந்து கொண்டதால் அவரால் மேடையை விட்டுக் கீழே இறங்கமுடியவில்லை...
அங்கிருந்தபடியே, வாரியார் சுவாமிகள் வெளியில் நிற்பதைப் பார்த்த எம்ஜிஆர் அதிர்ச்சியுற்று தமது உதவியாளரை அழைத்து சுவாமிகள் நிற்பதன் காரணத்தைக் கேட்கச்சொல்கிறார்...
உதவியாளரும், சுவாமிகள் வீட்டிற்குச் செல்ல கார் வராததால் அங்கு நின்று கொண்டிருக்கிறார் என எம்ஜிஆரிடம் சொல்ல... துணுக்குற்ற எம்ஜிஆர், விறுவிறுவென்று மேடையை விட்டுக் கீழிறங்கி வாரியார் சுவாமிகள் அருகில் செல்கிறார்...
தமது காரை வரச்சொல்கிறார்... வாரியாரிடம், 'சாமி, என் காரில் ஏறுங்க, நானே உங்களை விட்ல விட்டுடறேன்' என்று பணிவாக வாரியார் சுவாமிகளை தமது காரில் அமரச்செய்கிறார்...தானும் அவரருகில் அமர்கிறார்...
டிரைவரிடம், 'விடு காரை சிந்தாதரிப்பேட்டைக்கு' என்கிறார்... (வாரியார் வீடு சிந்தாதரிப்பேட்டையிலுள்ளது)
அதற்குள் சிந்தாதரிப்பேட்டையிலுள்ள காவல்நிலையத்திற்கு தகவல் பறந்துவிட்டது...மக்கள் கூட்டம் வேறு... வாரியார் சுவாமிகள் குடியிருந்த சிறிய தெருவான 'சிங்காணிச்செட்டித்தெரு' விற்குள் முதல்வர் கார் நுழைகிறது...இருபுறமும் மக்கள் புடை சூழ...
இதுவே வேறு யாராவது இருந்தால் என்ன பண்ணுவாங்க!! ...ஒரு வாடகை வண்டியை ஏற்பாடு செய்து அனுப்பிவைப்பாங்க!!!
தமிழக முதல்வர் நம்ம வாத்தியார் நினைத்திருந்தால் ஆயிரம்
கார்கள் அணிவகுத்து நின்றிருக்கும்...
ஆனால் அதைச் செய்யவில்லை!!
சாதாரண மானிடப்பிறவியா நம்ம வாத்தியார்... சராசரி எண்ணங்கள் தோன்றுவதற்கு ???
அவர் தான் பொன்மனச்செம்மல் ஆயிற்றே ...!!! ...vr...
-
பொதுச்சேவைக்கான #புரட்சித்தலைவர் #எம்ஜிஆர் அவர்களுக்குபட்டங்களும் வழங்கியவர்களும்
கொடுத்துச் சிவந்த கரம் - #குடந்தை ரசிகர்கள்
கலியுகக் கடவுள் - #பெங்களூர் விழா
நிருத்திய சக்கரவர்த்தி - #இலங்கை
ரசிகர்கள்
பொன்மனச் செம்மல் - #கிருபானந்த_வாரியார்
மக்கள் திலகம் - #தமிழ்வாணன்
வாத்தியார் - #திருநெல்வேலி ரசிகர்கள்
புரட்சித்தலைவர் - கே.ஏ.#கிருஷ்ணசாமி
இதய தெய்வம் - #தமிழ்நாடு பொதுமக்கள்
மக்கள் மதிவாணர் - இரா. #நெடுஞ்செழியன்
ஆளவந்தார் - ம. பொ. #சிவஞானம்
#பொன்மனச்செம்மல்_புகழ்_ஓங்குக
செஞ்சி #முனியப்பன்.........
-
இன்று 10/10/2020 நகைச்சுவை நடிகை
ஆச்சி மனோரமா வின்...நினைவு நாள்
ஒரு பிலாஷ் பேக்...நம் தலைவர் படத்தின்
நம் நாடு 1969
நம் நாடு திரைப்படம் வெளியானபோது விகடனில் வந்த விமர்சனம். நன்றி, விகடன்!
ஓர் உரையாடல்
வி.எஸ்.சுப்பையா: இந்தப் படம் முதலிலிருந்து கடைசி வரை நல்ல ‘என்டர்டெய்ன்மென்ட்’டா இருக்கு. சில இடங்களில் நம்மையும் அறியாமல் கண்ணீர் விடுமளவு இருக்கு. கதாநாயகன் துரை, புடவை வாங்கித் தரும் இடம், குழந்தைகள் கதாநாயகனுக்குச் சர்க்கரைப் பொங்கல் கொண்டு வந்து தரும் இடம்… இதெல்லாம் உதாரணம்.
ஜெயராஜ்: சாதாரணமா கலர் படம் என்றால், வர்ணங்கள் கொஞ்சம் ‘டார்க்’கா இருக்கும். இந்தப் படத்தில் ரொம்ப லைட்டா, மனதுக்குக் குளிர்ச்சி அளிப்பதுபோல இருந்தது.
சீனிவாசன்: ஜெயராஜ் ஓவியர் அல்லவா? வர்ணத்தைப் பத்தி அவர் சொன்னால் சரியா தான் இருக்கும்.
மனோரமா: கதாநாயகன் கதாநாயகி முதன்முதலில் சந்திக்கும் இடம் – ஏதாவது விபத்திலேயோ, அல்லது எங்காவதோதான் சந்திப்பாங்க. இந்தப் படத்திலே அவர்கள் சந்திப்பு புது மாதிரியா இருந்தது. ஒருவருக்கு உதவி செய்யப் போக, தன் பணமே பிக்பாக்கெட் போக, ஹீரோயின் ஹீரோ சொக்காயைக் கேட்கறது, சண்டை போடறது, கடைசியிலே வாட்சை வாங்கிக்கிறது இதெல்லாம் எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. அந்த ஹீரோயின் ஹீரோவை அதுவரைக்கும் விரும்பறாளா இல்லையான்னு காட்டாமல்,
‘உங்களுக்குப் பெண்ணை நான்தான் ‘செலக்ட்’ பண்ணுவேன்; என்னைக் கேட்காமல் செய்துட்டீங்களே’ன்னு சொல்றது, அதாவது அந்தப் பாத்திரம் எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. அதை ஜெயலலிதாவும் ரொம்ப நல்லா பண்ணியிருக்காங்க. காதலா இல்லாமல் வேற ஒரு விதமா அவங்க காதல் ஆரம்பித்திருக்கிறது நல்லா இருக்கு!
ஜெயராஜ்: இப்பல்லாம் தமிழ்ப் படங்களில், கட்டிப் பிடிச்சுக் காதல் பண்ணும் காட்சி அதிகமா இருக்கும். இந்தப் படத்திலே அப்படி இல்லை.
மனோரமா: ஆமாம்! நான் கூட, ஹீரோ ‘உன்னைத்தான் கல்யாணம் பண்ணிக்கறேன்’னு சொல்லிட்டு, வெளியே ஓடினதும் ரெண்டு பேரும் சேர்ந்து மழையிலே பாடப் போறாங்கன்னு நெனைச்சேன். இதிலே அது இல்லை. அதுவே நல்லா இருந்தது.
ராஜம் கிருஷ்ணன்: இந்தப் படத்திலே பொதுவா எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் இவர்களைத் தாக்குவதுபோல மனசில் படுது!
சீனிவாசன்: இல்லீங்க. பொதுவா அரசியலில் இருக்கும் எல்லோருக்குமே இது பொருத்தமா இருக்கும். அவர் நகரசபை சேர்மனா இருக்கும்போது, சிலர் தனக்கு ஒன்றும் செய்யவில்லை என்பதற்காக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வராங்க. இதிலே காங்கிரஸ், தி.மு.க., கம்யூனிஸ்டுன்னு வேறுபாடே வேண்டாம். ஜனநாயகம் என்றைக்கு ஆரம்பித்ததோ, அன்றை யிலிருந்து இது போன்ற நபர்கள் அரசியலில் இருக்கத்தான் செய்கிறார்கள். பொதுவா சொல்லப் போனா, இது ஒரு நல்ல ‘மாரல் டீச்சிங்’. நல்ல கருத்துக்களை வெளிப்படுத்தும் படம்.
பிரேமா: வசனம் கூட ரொம்ப நல்லா இருக்கு. உதாரணமா, ரங்காராவ், ‘முன் ஜென்மத்திலேயே குழந்தை லஞ்சம் வாங்கியிருக்கும், அதனாலேதான் பிறக்கும்போது கையை மூடிக்கிட்டு பிறக்குது.’
சசிகலா: அப்புறம் எம்.ஜி.ஆர். தன் பிரதர்கிட்டே சொல்றாரே… ‘நான் ஊமைகளுக்காகச் செவிடர்கள்கிட்டே பேசிக்கிட்டு இருந்தேன்’னு, அந்த வசனமும் நல்லா இருந்தது.
ராஜப்பா: படம் ஆபாசம் இல்லாமல், விரசம் இல்லாமல் இருப்பதுதான் எனக்குப் பிடிச்சுது!
சுப்பையா: ‘வாங்கய்யா, வாத்தியாரய்யா‘ன்னு ஒரு பாட்டு வருதே, அதிலே ஏதாவது குறிப்பு இருக்கா? அது யாரையாவது குறிக்குதா? (சிரிப்பு)
மனோரமா: இல்லீங்க. முதல்லே முதியோர் கல்விக்காகத்தானே குப்பத்துக்கு வர்றார் துரை? அப்போ அவர் வாத்தியார்தானே?
ராஜம் கிருஷ்ணன்: படத்திலே காமெடியே அதிகம் இல்லை! நாகேஷ் இருந்தும் கூட அதிக ஹாஸ்யம் இல்லை.
சசிகலா: ஆமாம்! எம்.ஜி.ஆர். சேர்மன் ஆயிட்டபோது நாகேஷ் ஏன் நகரசபைக் கூட்டத்திலே அவர் பின்னாடியே நின்னுக்கிட்டு இருக்கார்?
சீனிவாசன்: செக்ரெட்டரி ஆகியிருப்பார்!
சசிகலா: அது சரி, பின்னாலே ஜெயலலிதா எப்படி இங்கிலீஷ் பேசறாங்க?
மனோரமா: முதியோர் கல்விக்காக வந்த ஆசிரியர் சொல்லிக் கொடுத்திருக்கலாம், இல்லியா?
சீனிவாசன்: சரி, நான் ஒண்ணு ஒண்ணு கேட்கிறேன். ஒரு படத் திலே எலந்தப் பழம் வந்தா, உடனே இன்னொரு படத்திலே மாம்பழம், அந்தப் பழம் இந்தப் பழம்னு ஏதாவது வந்தே ஆகணுமா என்ன?
ஜெயராஜ்: அந்தம்மாவைப் போய் கேட்டீங்கன்னா, அவங்க எப்படிச் சொல்லுவாங்க? புரொடியூஸரைத்தான் கேட்கணும். அதிருக்கட்டும், ரங்காராவைப் பத்தி யாரும் சொல்லலையே?
சீனிவாசன்: அவரை நல்ல மனுஷனா பார்த்துப் பார்த்து, இந்த மாதிரி பார்க்க ஆரம்பத்தில் ஒரு மாதிரி சங்கடமா இருந்தது. போகப் போக பிக்கப் பண்ணிடறாரு. அதாவது, பாதாள பைரவி வில்லன் மாதிரி திரும்பிடறாரு!
ராஜப்பா: அசோகன் மட்டும் என்னவாம்?
பிரேமா: ஆமாம்! ரொம்ப அடக்கமா நடிச்சிருக்கார். பகவதியும் நல்லா நடிச்சிருக்கார். சாதாரணமா கலர் படங்களில் டார்க் கலர் டிரஸ் போட்டுக்கிட்டு இருப்பார் எம்.ஜி.ஆர். இதிலே ரொம்ப ப்ளீஸிங் கலரைப் போட்டுக்கிட்டு, ரொம்ப இதுவா இருக்கார்!
சுப்பையா: மொத்தத்திலே அறிவுரைகள், கருத்துக்கள் எல்லாம் இருக்கு. அதையும் ‘என்டர்டெயின்மென்ட்’ எல்லாத்தையும் ஒண்ணா சேர்த்து, நல்லா போர் அடிக்காம எடுத்திருக்காங்க!
சீனிவாசன் விருதுநகர் எம் எல் ஏ (காமராஜரைத் தோற்கடித்தவர்)
மனோரமா................
-
புரட்சித்தலைவர் தன் திரைப்பட வெற்றிகளை
விளம்பரத்தில் போட்டு தான் வெற்றி என என்றுமே சொன்னதில்லை...
நம்நாடு
திரைப்படத்தின்
விளக்கத்தை
சாதாரண நடிகர்களின் ரசிகர்களுக்கு சொல்ல வேண்டிய அவசியமில்லை...
எங்கள் தலைவரின் சாதனையை விளக்கும் பதிவில் புகுந்து கொண்டூ எங்களை
நீ கேள்வீ கேட்க முடியாது.
இரும்பு அடிக்கும் இடத்தில் ஈ...களுக்கு
என்ன வேலை...
52 அரங்கில் ஒடியதும்
வசூல் பெற்றதும்
உலகத்திற்கு தெரியும்.
கடந்த ஆண்டுகளில் நம்நாடு காவியம் பெற்ற அசைக்க முடியாத சாதனையும் தெரியும்...
சாதாரண நடிகன் படம் எத்தனை தியேட்டர் ஒட்டபட்டால் என்ன..
பொய் விளம்பரம் கொடுத்தால் என்ன...
லட்சத்திற்கு மேல் டிக்கட் வாங்கி பொய்வசூல் காண்பித்தால் எங்களுக்கு என்ன..
வசூல் சக்கரவர்த்தி
எம்.ஜி.ஆர் என்பது
உலகத்திற்கே தெரியும்............ur...
-
"தாயைக் காத்த தனயன்" காவியம் விறுவிறுப்பான பொழுதுபோக்குப்படம். புலியை வேட்டையாடப் போகும் மக்கள் திலகத்துக்கு காலில் அடிபட்டு புலியிடம் இருந்து தப்ப சிறிய குகைக்குள் மறைந்து கொள்வார். வெளியே புலி குகையை நோக்கி பாயும் காட்சி 3டி போல மிரட்டும். அப்போது மக்கள் திலகம் முகத்தில் பய உணர்ச்சியையும் சோர்வால் கண் மூடுவதையும் திடுக்கிட்டு எழுவதையும் அற்புதமாக மிகவும் இயல்பாக காட்டியிருப்பார். தேவருடன் சிலம்ப சண்டை பொறி பறக்கும். சண்டைக்கு முன் மக்கள் திலகம் வைக்கும் ஸ்டெப்ஸ் ... தியேட்டரே அமர்க்களப்படும். இந்தப் படத்தில்தான் எம்ஆர்ஆர் வாசு அறிமுகம். சண்டிக் குதிரை... பாடலுக்கும் ஆடியிருப்பார்.
கட்டித் தங்கம் வெட்டி எடுத்து பாடல் காட்சியில் மக்கள் திலகம் காலில் அடிபட்டதால் முதல் பாராவில் குச்சியை ஊன்றியபடி நொண்டி நடப்பார். நமக்கு அதெல்லாம் பிடிக்காது என்பதை சரியாக உணர்ந்து கனவு காண்பது போல காட்சியை மாற்றி, அடுத்த பாராவில் பளீரென்ற தோற்றத்துடன் ‘சின்ன யானை’ நடைபோட்டு வருவார். அதைப் பார்த்தபிறகுதான் நமக்கு பாட்டில் சந்தோஷம் வரும். தியேட்டரில் கைதட்டலும் விசிலும் பறக்கும்....... Swamy...
-
இங்கே சிவாஜி ரசிகரான முகமது தமீம் என்ற நண்பர் நம்நாடு 50 நாள் விவரங்கள் கேட்டதற்காக நண்பர் ராஜூ கோபப்பட்டிருக்கிறார். யார் வேண்டுமானாலும் தாராளமாக இங்கே வந்து கேட்கட்டும். தெரிந்ததை, உண்மையை சொல்வோம். இதில் என்ன இருக்கிறது? நம்மிடம் உள்ள உண்மையான விவரங்களை சொல்வோம். தேர்த்திருவிழா, காதல் வாகனம் எல்லாம் 100 நாள் ஓடியது என்று நாம் பொய் சொல்லப் போகிறோமா? அந்தப் படங்கள் 100 நாள் ஓடாததால் மக்கள் திலகம் நம்பர் 1 இல்லை, வசூல் சக்கரவர்த்தி இல்லை, அதிகம் சம்பளம் வாங்கிய நடிகர் இல்லை என்று ஆகிவிடுமா? இதெல்லாம் நிரூபிக்கப்பட்ட வரலாறு. ஓடிய படங்களை ஓடியது என்று சொல்லப் போகிறோம். ஓடாததை ஓடவில்லை என்று சொல்லப் போகிறோம். நடிகப் பேரரசரே மக்கள் திலகத்தின் ஓடாத படங்களை ஓடவில்லை, எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை என்று உண்மையை சொல்லி இருக்கிறார். அதற்கான காரணங்களையும் சொல்லி இருக்கிறார். நானும் சொல்லி இருக்கிறேன். மக்கள் திலகத்தின் வெற்றி மறைவான, போலியான வெற்றி இல்லை. நம்நாடு வெற்றியும் போலியானது இல்லை.
அதே நேரம் இங்கே நீக்காத அவரது பதிவை நீக்கியதாக முகமது தமீமின் தவறான குற்றச்சாட்டை நண்பர் ராஜராஜன் சுட்டிக் காட்டியிருக்கிறார். ஏன் முகமது தமீம் சார் இப்படி செய்கிறீர்கள்? இப்படி செய்வதன் மூலம் உங்கள் நோக்கம் என்ன? எங்களைப் பற்றி சிவாஜி கணேசன் ரசிகர்களிடம் மேலும் தவறான தோற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதா? தாராளமாக இங்கே வந்து கேள்வி கேளுங்கள், உங்கள் கருத்தை சொல்லுங்கள். ஆனால், எங்கள் மீது இல்லாத, தவறான குற்றச்சாட்டை வெளியே சொல்லாதீர்கள். அடிக்கடி வாருங்கள். நன்றி. ...... Swamy...
-
புரட்சித் தலைவருக்கு உள்ள தனிப்பட்ட சிறப்பு தன்னைப் போற்றுவோருக்கு மட்டுமின்றி, கடுமையாக தூற்றுவோருக்கும் உதவிகள் செய்வார். சொல்லப் போனால், தன் மீது கல் வீசுவோருக்கு கனி தரும் மரம் போல, தன்னைக் கடுமையாக தாக்கிப் பேசுவோருக்கு அதிகமாகவே உதவுவார். அவர்கள் திறமையாளர்களாக இருந்துவிட்டால் கருத்து வேறுபாடுகளை ஒதுக்கிவிட்டு, அவர்களின் திறமைக்கு உரிய கவுரவமும் அங்கீகாரமும் அளிப்பார்.
எம்.ஜி.ஆர். நடித்த சூப்பர் டூப்பர் ஹிட் படம் ‘ஆயிரத்தில் ஒருவன்’. படத்தின் க்ளைமாக்ஸுக்கு முன் ஒரு பாடல். அடிமை முறையை ஒழித்து சுதந்திர சமுதாயம் காணப் புறப்பட்ட ஒரு புரட்சி வீரன் பாடுவது போன்ற பாடல்.அந்தக் காட்சிக்கு பலர் பாடல் எழுதியும் எம்.ஜி.ஆருக்கு திருப்தி ஏற்படவில்லை.
அப்போது ஒரு கவிஞர் ஏற்கெனவே எம்.ஜி.ஆருக்கு நெருக்கமாக இருந்தவர்தான். அரசியல் கருத்து வேறுபாடுகள் காரணமாக எம்.ஜி.ஆரை மேடைகளில் கடுமையாக விமர்சித்து வந்தார். ஆனாலும், அந்தக் கவிஞர் என் படங்களில் பாடல் எழுதக் கூடாது என்று எம்.ஜி.ஆர். கூறிய தில்லை. எம்.ஜி.ஆர். படங்களுக்கு நான் பாடல் எழுத மாட்டேன் என்று அந்த கவிஞரும் சொன்ன தில்லை. மேடைப் பேச்சுக்கள் ஏற்படுத்திய தர்ம சங்கடத்தால் எம்.ஜி.ஆர் படங்களின் தயாரிப்பாளர் களும் இயக்குநர்களும் கவிஞரை அணுகத் தயங் கினர். அதனால், எம்.ஜி.ஆரின் சில படங்களில் அவர் பாடல்கள் இடம்பெறவில்லை.
‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தில் மேலே குறிப் பிட்ட காட்சிக்கான பாடலுக்காக பல கவிஞர்கள் எழுதியும் திருப்தி ஏற்படாத நிலையில், எம்.ஜி.ஆரை விமர்சிக்கும் அந்தக் கவிஞரை விட்டே அந்த பாடலை எழுதச் சொன்னால் என்ன? என்ற யோசனை பிறந்தது. படக்குழுவினர் கவிஞரி டம் விஷயத்தைச் சொல்ல, அவரும் எழுதிக் கொடுத்தார். எம்.ஜி.ஆருக்கு அந்தப் பாடல் மிக வும் பிடித்துப் போனதுடன் கவிஞரின் திறமையை பாராட்டி அந்தப் பாடலை ஓ.கே. செய்தார்.
அந்தப் பாடல்தான் காலத்தால் அழியாத
‘அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்…’
அந்தப் பாடலை எழுதியவர் கவியரசு கண்ண தாசன். அவர் கடுமையாக தாக்கிப் பேசுவாரே தவிர, மனதில் ஒன்றும் கிடையாது என்பதும் எம்.ஜி.ஆருக்குத் தெரியும்.
எம்.ஜி.ஆர். நடித்த வெள்ளிவிழா படமான ‘மாட்டுக்கார வேலன்’ படத்தில்,
‘பூ வைத்த பூவைக்கு பூக்கள் சொந்தமா?’
என்ற இனிமை யான பாடலை எழுதியவர் கண்ணதாசன். நாயகி யைப் பார்த்து எம்.ஜி.ஆர். பாடும் வரிகளில்
‘பள்ளிக் கணக்கு கொஞ்சம் சொல்லிப் பழக்கு, நீ இல்லையென்றால் நான் தொடுப்பேன் காதல் வழக்கு’
என்று வரும்.
பதிலுக்கு நாயகி, ‘போடுங்கள்.. கூண்டில் ஏற்றுங்கள்.. நான் போதும் என்று சொல்லும் வரை நீதி சொல்லுங்கள்’
என்று பாடுவதுபோல எழுதியிருந்தார் கண்ணதாசன். நாயகி பாடும் வரிகள் எம்.ஜி.ஆருக்கு திருப்தி இல்லை. கண்ணதாசனிடம் சொல்லி அந்த வரிகளை மாற்றச் சொன்னார்.
கண்ணதாசன் உடனே மாற்றிக் கொடுத்த வரிகள்தான்,
‘போடுங்கள் கூண்டில் ஏற்றுங்கள், உங்கள் பொன்மனத்தை சாட்சி வைத்து வெற்றி கொள்ளுங்கள்’.
நட்பு ஒருபுறம் இருந்தாலும், எம்.ஜி.ஆரின் மனதை பொன்மனம் என்று வர்ணித்தாலும், அரசியல் கருத்து வேறுபாடுகள் காரணமாக எம்.ஜி.ஆர் முதல்வரான பிறகும் அவரை தாக்கி பேசுவதை கண்ணதாசன் நிறுத்தவில்லை.
ஒருநாள், முதல்வர் வீட்டில் இருந்து கண்ணதாசன் வீட்டுக்கு தொலைபேசி அழைப்பு. தனது மகன் திருமண விஷயமாக கண்ணதாசன் வெளியூர் சென்றிருந்தார். இப்போதுபோல அப்போது செல்போன் எல்லாம் கிடையாது. தீவிர முயற்சிக்குப் பிறகு, கண்ணதாசனை தொடர்பு கொண்ட எம்.ஜி.ஆர்., அவரை உடனே புறப்பட்டு சென்னை வரச் சொன்னார்.
எதற்காக வரச் சொல்கிறார் என்பது புரியாமலே தன்னை சந்தித்த கண்ணதாசனுக்கு எம்.ஜி.ஆர். இன்ப அதிர்ச்சி அளித்தார். ‘‘தங்களை தமிழக அரசின் அரசவைக் கவிஞராக நியமிக்க முடிவு செய்திருக்கிறேன். சம்மதம் என்ற ஒரே வார்த்தையை மட்டுமே உங்களிடம் எதிர்பார்க்கிறேன்’’ என்றார். எம்.ஜி.ஆரின் அன்பிலும் மகிழ்ச்சியிலும் திக்குமுக்காடிப் போனார் கண்ணதாசன்.
‘அரசவைக் கவிஞர்’ பட்டமளிக்கும் விழாவில் உணர்ச்சிவசப்பட்ட கண்ணதாசன், ‘‘நான் இறந்துவிட்டால் எனக்கு அரசு மரியாதை கிடைக்கும். இந்த சிறப்பை எனக்கு வழங்கிய எம்.ஜி.ஆருக்கு முன்கூட்டியே நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்றார்.
அவர் கூறியது போலவே நடந்தது. அமெரிக் காவுக்கு சிகிச்சைக்காக சென்ற கண்ணதாசன் வெறும் உடலாகத்தான் திரும்பினார். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்குப் பின் இறுதி ஊர்வலத்துக்குத் தயாரானது. கண்ணதாசன் உடல் வாகனத்தில் ஏற்றப்பட்ட பின், யாரும் எதிர்பாராத வகையில் முதல்வர் எம்.ஜி.ஆர். மின்னலாய் அந்த வாகனத்தின் மீது ஏறிவிட்டார். கண்ணதாசன் உடலை சற்று உயர்த்தி சிறிய ஸ்டூல் மீது அவரது தலையை பொருத்தி கட்டி விட்டு கீழே இறங்கிய எம்.ஜி.ஆர்., ‘‘இப்போது, கவிஞரின் முகம் பொதுமக்கள் பார்க்க வசதியாக நன்றாக தெரிகிறது’’ என்றார்.
எம்.ஜி.ஆர்… அதிலும் தமிழகத்தின் முதல்வர். கண்ணசைத்தால் காரியம் செய்ய காத்திருப்போர் ஆயிரம் பேர். என்றாலும் கண்ணதாசனின் முகத்தை பொதுமக்கள் இறுதியாக பார்த்து அஞ்சலி செலுத்த வேண்டும் என்பதற்காக, தானே வேன் மீது ஏறினார் என்றால், கவிஞர் மீது அவர் கொண்டிருந்த அன்பும், எதையும் மக்களின் கோணத்தில் இருந்தே பார்க்கும் எம்.ஜி.ஆரின் நுண்ணறிவும் பிரமிக்கத்தான் வைக்கும்.
சினிமாவில் பொதுவாக பெண்களின் அழகைத்தான் கவிஞர்கள் வர்ணிப்பார்கள். ஆண்களின் அழகையும் வர்ணிக்க முடியும் என்றால் அது எம்.ஜி.ஆருக்குத்தான் பொருந்தும்.
‘குடும்பத் தலைவன்’ படத்தில் ‘கட்டான கட்டழகு கண்ணா, உன்னைக் காணாத பெண்ணும் ஒரு பெண்ணா?’
என்று எம்.ஜி.ஆரை வர்ணித்திருப்பார் கண்ணதாசன்.
எம்.ஜி.ஆரின் அழகை, ஆளுமையை ‘நீதிக்குப் பின் பாசம்’ படத்தில் இடம் பெற்ற ஒரு பாடலில், நாயகி பாடுவது போல கண்ணதாசன் விவரித்திருப்பார். அந்த வரிகள்…
‘தேக்கு மரம் உடலைத் தந்தது
சின்ன யானை நடையைத் தந்தது
பூக்கள் எல்லாம் சிரிப்பை தந்தது
பொன்னல்லவோ நிறத்தை தந்தது’
இந்த வரிகளைப் படித்தாலே நினைவுக்கு வருபவர் எம்.ஜி.ஆராகத்தான் இருக்க முடியும்.
எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்த கண்ண தாசன் பாடல் ‘மன்னாதி மன்னன்’ படத்தில் அவர் எழுதிய ‘அச்சம் என்பது மடமையடா, அஞ்சாமை திராவிடர் உடமையடா...’பாடல். காரில் எம்.ஜி.ஆர். செல்லும்போது அவர் கேட்டு ரசிக்கும் பாடல்களில் இந்த பாடல் தவறாமல் இடம் பெறும்.
Mgr பக்தன் சைதை s.மூர்த்தி.........
-
நமது தங்க தலைவரின் ரசிகர்கள் / பக்தர்கள் அனைவருக்கும் புரட்சி தலைவரின் ஆசியுடன் இனிய காலை வணக்கம்...
இன்று அக்டோபர் 10
1972ஆம் ஆண்டு அக்டோப*ர் 10 ஆம் தேதியான இன்றுதான் மக்கள் திலகத்தை திமுக*விலிருந்து நீக்கினார் க*ருணாநிதி. திமுக அமைச்ச*ர்க*ளும், செய*ற்குழு, பொதுக்குழு உறுப்பின*ர்க*ளும் த*ங்க*ள*து சொத்து க*ணக்கை மக்களிட*ம் ப*கிர*ங்க*மாக* வெளியிட* வேண்டும் என்று கேட்ட*த*ற்காக* இந்த* ந*ட*வ*டிக்கை.
ஆனால், உண்மையான கார*ணம் க*ட்சியை த*ன் முழுக்க*ட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும், த*ன*து வாரிசுக*ளின் அர*சிய*ல் எதிர்கால*த்திற்கு எம்ஜிஆர் முட்டுக்க*ட்டையாக இருந்துவிட*க் கூடாது என்ற* க*ருணாநிதியின் சுய*ந*லமே ஆகும்......
திமுகவிற்கு தலைவரின் கடைசி கும்பிடு....
என்.வேலாயுதன்
திருவனந்தபுரம்..........
-
48-ஆண்டுகளுக்கு முன்பு திரு.கருணாநிதி செய்த ஒரு வரலாற்று பிழை.. புரட்சித்தலைவரை திமுகவை விட்டு நீக்கியது..
அந்த பொன்னான நாள் இன்றுதான்...
ஆம்... அது 1972-ஆம் ஆண்டு அக்டோபர் 10-ஆம் தேதி..
திமுகவின் பொதுக்குழு கூடி நயவஞ்சகமாக நமது புரட்சித்தலைவரை கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்குவதாக அறிவித்தது..
சொடக்கு போட்டு முடிப்பதற்குள், எண்ணி 7-ஆவது நாள் #அதிமுக என்ற தனி இயக்கம் கருவாகி உருவானது...
'இந்த நடிகனின் கூட்டம் நாடாளுமா?' என்று எகத்தாள பார்வை பார்த்த திரு.கருணாநிதிக்கு, அன்று தமிழகம் முழுவதும் எழுந்த எம்ஜியாருக்கான எழுச்சி பார்த்து பதட்டம் ஏற்பட்டது..
இயக்கம் தொடங்கப்பட்ட 1972 அக்டோபர் 17-ஆம் தேதியிலிருந்து 215-ஆவது நாளில், அதாவது 1973 மே 20-ஆம் தேதி நடைபெற்ற திண்டுக்கல் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் 'இரட்டை இலை' என்ற சுயோச்சை சின்னத்தில் நின்று, திமுகவை மூன்றாம் இடத்திற்கு தள்ளி முதல் வெற்றியை சுவைத்தது நமது இயக்கம்...
அந்த வெற்றி திமுகவுக்குள் மிக பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.. 'தப்பு செய்துவிட்டோமோ?' கலங்கிப்போனார் கருணாநிதி...
அன்று தொடங்கிய திமுகவின் வீழ்ச்சி.. இன்று வரையிலும் தொடர்கிறது..*
நம் இயக்கதை குறைத்து மதிபிட்டவிட்டதின் பலனை இன்றளவும் அவர்கள் அறுவடை செய்து கொண்டே இருக்கிறார்கள்..
அரசியலில் பழம் தின்று கொட்டை போட்ட #திமுக, இன்று #அஇஅதிமுக வின் அடிமட்ட தொண்டனின் ஒவ்வொறு அரசியல் அசைவையும் கண்டு அஞ்சி நடுங்கிக் கொண்டிருக்கிறது..
2021-சட்டமன்ற தேர்தலிலும் அவர்களுக்கு தேல்வியை பரிசளித்து, வெற்றிக்கனியை பறித்து #புரட்சித்தலைவர் மற்றும் #அம்மா அவர்களின் காலடியில் சமர்ப்பிக்க களமாடுவோமாக..
ஆயுத்தமாவோம்.... அணி திரள்வோம்... வெற்றி ஒன்றே நமது குறிக்கோள்........ Albert Paul...
-
8.10.1972 அன்று எம்.ஜி.ஆர் பேசிய அந்தப்பேச்சின் அடுத்தடுத்த நடவடிக்கைகளைத் தொடர்ந்துதான் திராவிட இயக்கத்தில் அ.தி.மு.க என்ற புதிய கட்சி உதயமானது. அரசியலில் அடுத்தடுத்த காய்நகர்த்தல்கள் அரங்கேறின. தமிழக அரசியல் வரலாற்றில் திருப்புமுனையை ஏற்படுத்திய அந்தப்பேச்சு இதுதான்....
“திருக்கழுக்குன்றத்தில் பேசுகின்ற நேரத்தில் எனக்கு என்ன உணர்ச்சி ஏற்பட்டதோ என்ன என்ன பேச வைத்தார்களோ அதே சூழ்நிலையைத்தான் நான் இங்கு காண்கின்றேன். அண்ணா அவர்களுடைய உருவச் சிலையை அங்கே திறந்துவைத்து பேசிவிட்டு வந்திருக்கிறேன். ஆகவே, அண்ணா அவர்களைச் சந்தித்துவிட்டு வந்திருக்கிறேன். அண்ணாவின் அனுமதியோடு நான் பேசுகிறேன்.
‘எம்.ஜி.ஆர். என்றால் தி.மு.க.; தி.மு.க. என்றால் எம்.ஜி.ஆர்.’ என்று சொன்னேன். உடனே ஒருவர், “நாங்கள் எல்லாம் தி.மு.க. இல்லையா?” என்று கேட்டார். நான் சொல்கிறேன் நீயும் சொல்லேன். உனக்கும் உரிமை இருக்கிறது. எனக்கும் உரிமை இருக்கிறது. உனக்குத் துணிவில்லாததால் என்னைக் கோழை ஆக்காதே!
உனக்கு துணிவிருந்தால் நான்தான் தி.மு.க. என்று சொல்! நான் மறுக்கவில்லை. நான் மட்டும் தி.மு.க. என்றால்தான் கேள்வி! இதைக்கூட புரிந்துகொள்ளாத தமிழர்கள் கட்சியில் வந்து மாட்டிக் கொண்டார்களே என்பதை நினைத்து அனுதாபப்படுகிறேன். இந்தப் பிரச்னைகள் எல்லாம் தேவையற்றவை. மதி பேசுகையில் நான் கலைத்துறையில் பணியாற்றுவதோடு இன்னும் கொஞ்சம் அதிகமாக அரசியலில் பங்கு கொள்ள வேண்டும் என்று சொன்னார். இவ்வளவு கொஞ்சமாக அரசியலில் பங்கு கொள்வதையே சிலரால் தாங்கிக்கொள்ள முடியவில்லையே! இன்னும் அதிகமாக ஈடுபட்டால் எல்லோருக்கும் என்ன ஆகுமோ? பரிதாபத்துக்கு உரியவர்கள்!
முன்பொருமுறை சொன்னேன், காமராசர் அவர்களை தலைவர் என்றும் அண்ணாவை வழிகாட்டி என்றும். தலைவர்கள் பலர் இருப்பார்கள். இந்தக் கூட்டத்துக்கு அரங்கநாதன் தலைமை வகிக்கிறார். இன்னொரு கூட்டத்துக்கு இன்னொருவர் தலைமை வகிக்கலாம். இப்படித் தலைவர்கள் பலர் இருக்கலாம். ஆனால், கட்சிகளுக்குக் கொள்கைகளைத் தருகிற வழிகாட்டி ஒருவர்தான் இருக்க முடியும். இப்போது ஒப்புக் கொள்கிறார்கள். அண்ணா அவர்கள்தான் தி.மு.க-வுக்கு வழிகாட்டி, காங்கிரசுக்கு மகாத்மா காந்திதான் வழிகாட்டி. இதிலே ஒரு வேறுபாடு அப்போது ஏற்பட்டது.
அப்போதும் இதே மதுரை முத்து, தூக்கி எறிவோம் என்று சொன்னார். தூக்கி எறிந்தது பழக்கம்! ஆனால், யாரை என்றே தெரியவில்லை.
கழக நண்பர்களுக்குச் சொல்கிறேன். நான் மக்களைச் சந்திக்கிறவனே தவிர, தலைவர்களைத் தேடிப்போய் வாழ்க்கையை உயர்த்திக் கொள்ளவேண்டிய நிலையில் என் தாயும், தமிழகமும், அண்ணாவும் வைக்கவில்லை. நான் தொண்டர்களைச் சந்திக்கிறவன். மக்களை நம்புகிறவன். அண்ணா ‘மக்கள் குரலே மகேசன் குரல்’ என்று சொன்னது மாதிரி மக்களை நம்புகிறவன். எனக்கு ஒரு கொள்கை இருந்தது. முன்பு காங்கிரசில் இருந்தேன். அதற்குப் பிறகு நான்கு ஆண்டு காலம் எந்தக்கட்சியிலும் இல்லாமல் அஞ்ஞாதவாசம் இருந்தேன். எந்த அரசியல் கட்சியிலும் என் கொள்கை இருக்கும்.
கடைசியாக பணத்தோட்டம் என்ற அண்ணாவின் புத்தகத்தைப் படித்தபிறகு, அதிலுள்ள பொருளாதாரத் தத்துவங்களை உணர்ந்த பிறகு அதுதான் சரியான பாதை; அண்ணாவின் வழியில் செல்ல வேண்டுமென்று முடிவெடுத்துக் கொண்டு கழகத்துக்கு வந்தவன்.
கவிஞர் கண்ணதாசன் சொல்கிறார்; கருணாநிதி அவர்கள் என்னை கட்சிக்கு அழைத்து வந்தாராம். பாவம்! அண்ணாவை எனக்கு அறிமுகம் செய்தது டி.வி.நாராயணசாமி. எனக்கும் கருணாநிதிக்கும் அடிக்கடி விவாதம் ஏற்படும். நான் காங்கிரசைப் பற்றிப் பேசியிருப்பேன். அனுபேத வாதங்களைப் பற்றிப் பேசியிருப்பேன்.
ஒரு சமயம், கம்யூனிஸக் கொள்கைகளை ஏற்று தீவிரவாதியாக இருந்தவன். ரயில்கள் கவிழ்க்கப்பட்டபோது, அது எனக்குத் தெரிந்திருக்குமோ? என்னவோ? ஆனால், நேதாஜியைப் பற்றி கம்யூனிஸ்டுகள் ரஷ்யாவின் உத்தரவின் பேரில் குறை கூறியதும் என் தொடர்புகளை அறுத்துக் கொண்டேன். இந்தியத்துணைக் கண்டத்தின் அரசியலை இந்தியத் துணைக் கண்டம்தான் தீர்மானிக்கவேண்டுமென்ற கொள்கையை உணர்ந்தேன்.
இப்படி ஒவ்வொரு விதமாக உணர்ந்தபிறகு அண்ணாவின் கொள்கைதான் நாட்டுக்கு மறுமலர்ச்சியைத் தரும் என உணர்ந்து நான் கழகத்துக்கு வந்தவன். அண்ணாவைத் தெரிந்துகொண்டபோது நெற்றியில் விபூதியைப் பூசிக்கொண்டு செயின்ட் மேரிஸ் மண்டபத்தில் அவர்கள் தலைமையில் நடந்த சீர்திருத்த மாநாட்டில் மேடையில் இரண்டு நாள்களும் உட்கார்ந்து கவனித்துக் கொண்டிருந்தேன்.
நான் யாருக்கும் பயந்து கொள்கையை மாற்றிக்கொண்டவன் அல்ல. அப்படிப்பட்ட தேவையும் இல்லை. தேர்தல் நேரத்தில் தி.மு.கழகத்துக்கு வாக்குத் தாருங்கள்; இன்னென்ன கொள்கையை நிறைவேற்றுவோம் என்று சொன்னவன் நான். அப்படிச்சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டுமென்று இப்போது சொல்ல உரிமை இல்லையா?
கழகத்துக்கு வாக்குத் தாருங்கள், இன்னென்ன காரியங்களை நிறைவேற்றுவோம், ஊழல் இருக்காது; நேர்மை இருக்கும் என்று சொன்னேனே; அப்படிப்பட்டவைகள் கழகத்தில் இருக்க வேண்டுமென்று விரும்புவதற்கு சொல்வதற்கு எனக்கு உரிமை இல்லையா?
திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து எம்.ஜி.ஆர். போய்விடுவார் என்று சொல்ல அவர்களுக்கு அச்சம், யாருக்கோ என்னுடைய கேள்வி உறுத்துகிறது. அமைச்சர்கல், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கணக்குகாட்ட வேண்டுமென்று சொல்கிறோம். கணக்கு அங்கே காட்டிக்கொண்டிருக்கிறோம். ஆனால், இவர்களின் சொந்தக்காரர்களுக்கு எவ்வளவு சொத்து இருக்கிறது என்ற கணக்கை தி.மு.கழகப் பொதுக்குழு ஏன் கேட்கக் கூடாது?
ராமச்சந்திரனுக்கு ஒரு பங்களா இருந்தால் அது ஆட்சிக்கு வந்தபிறகு வந்ததா, அதற்கு முன்னால் வந்ததா, என் மனைவி மீது, உறவினர்கள் மீது பங்களா, சொத்து வந்திருக்குமானால் அது எப்படி வந்தது, மாவட்ட, வட்ட, கிளைக் கழகச் செயலாளர்களுக்கு எப்படி வந்தது? ராமச்சந்திரன் சினிமாவில் நடிக்கிறான்; சம்பாதிக்கிறான்; நீ சம்பாதித்தால் அதற்கு கணக்குக் காட்டு!
இதை எதிர்க்கட்சிகள் கேட்க வேண்டியதில்லை. நாமே கேட்டுக் கொள்வோம். இந்தத் தீர்மானங்களை பொதுக்குழுவில் கொண்டுவர இருக்கிறேன். மக்கள் என் பக்கம் இருக்கிறார்கள் பொதுக்குழுவில் இந்தத் தீர்மானத்துக்கு ஆதரவு கிடைக்கவில்லை என்றால் தமிழகம் முழுவதும் இந்தக் கேள்வியைத் தீர்மானமாக உருவாக்குவேன். மக்களைச் சந்திப்பேன்.
மாவட்டச் செயலாளர்கள், கிளைக் கழகச் செயலாளர்கள், வட்டச் செயலாளர்கள், பதவிகளில் இருப்பவர்கள் குடும்பத்துக்கு வாங்கியிருக்கிற சொத்துகள் இருந்தால் கணக்கு காட்ட வேண்டும். அவைகள் எப்படி வந்தது என்று விளக்கம் சொல்லவேண்டும். பொதுக்குழுவில் நிறைவேற்றி, அதற்காக குழு அமைத்து, அதனிடம் ஒவ்வொருவரும் தங்கள் கை சுத்தமானது என்பதை மக்கள் முன்னால் நிரூபிக்கலாம்.
நிரூபிக்க முடியாதவர்களை மக்கள் முன்னால் நிறுத்தி அவர்கள் தவறு செய்திருந்தால் அவர்களைத் தூக்கி எறிவோம். அண்ணாவின் கொள்கைக்கு ஊறு தேடியவர்களை எல்லாம் மக்கள் முன்னால் நிறுத்தி தூக்கி எறிவோம். 15-ம் தேதிக்குப் பிறகு சந்திக்கிறேன்......... Samuel...
-
பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர். திமுகவை விட்டு முழுமையாக நீக்கப்பட்ட நாள் அக்டோபர் 14 தான். தமிழக அரசியலில் புதிய சகாப்தம் தொடங்கிய நாள் அக்டோபர் 14. ஆம், 1972ம் ஆண்டு அக்டோபர் 14ம் தேதிதான் திமுகவிலிருந்து எம்.ஜி.ஆர். முழுமையாக டிஸ்மிஸ் செய்யப்பட்டார். திமுக பொதுக்குழு அக்டோபர் 14 அன்று கூடி திமுகவிலிருந்து எம்.ஜி.ஆரை நீக்கி தீர்மானம் போட்டது.
எம்.ஜி.ஆரை கட்சியை விட்டு நீக்கும் தீர்மானத்தை நாவலர் நெடுஞ்செழியன் கொண்டு வர, அதை முதலில் திமுக செயற்குழு நிறைவேற்றியது. அதைத் தொடர்ந்து திமுக பொதுக்குழு கூடி நிறைவேற்றியதைத் தொடர்ந்து எம்.ஜி.ஆர். திமுகவிலிருந்து முழுமையாக நீக்கப்பட்ட நாள் இன்று.
திமுகவிலிருந்து எம்.ஜி.ஆர். நீக்கப்பட்டதும் தமிழகமே கொந்தளித்தது. எம்.ஜி.ஆரின் ரசிகர்களும், அவருடைய ஆதரவாளர்களாக இருந்த திமுகவினரும் பெருவாரியாக திரண்டு வந்து எம்.ஜி.ஆர். பின் நின்றனர். திமுக உடைந்தது.. அதிமுக பிறந்தது.
எம்.ஜி.ஆர். விவகாரம் குறித்து மறைந்த கவியரசு கண்ணதாசன் தான் எழுதிய "நான் பார்த்த அரசியல்" என்ற நூலில் விரிவாக எழுதியுள்ளார். அதிலிருந்து...
என்னய்யா செய்யலாம்?
என்னய்யா செய்யலாம்?
கருணாநிதியும் நானும் இந்தக் கட்டத்தில் நன்றாகப் பழகிக் கொண்டிருந்தோம். உள்ளுக்குள்ளே அவர்கள் இருவருக்கும் (கருணாநிதி - எம்.ஜி.ஆர்) தகராறு நடந்து கொண்டிருந்தது. திடீரென்று ஒருநாள் கருணாநிதி எனக்கு டெலிபோன் செய்து , 'என்னய்யா செய்யலாம்' என்று கேட்டார்.
கணக்குத்தானே கேட்கிறார்..
கணக்குத்தானே கேட்கிறார்..
'சரி, அவர் கணக்குத்தானே கேட்கிறார். எல்லா ஊர்களிலேயிருந்தும் கணக்கு அனுப்ப வேண்டும் என்று செயற்குழுவிலே தீர்மானம் போட்டு, செயற்குழுவை ஒத்தி வைத்து விடுங்கள். கணக்கு வருவதற்கு ஒரு தலைமுறையாகும். அதுவரை என்னசெய்வார் என்று பார்க்கலாம்,'என்று நான் சொன்னேன்
ஒரேயடியாக ஒழித்து விட வேண்டியதுதான்
ஒரேயடியாக ஒழித்து விட வேண்டியதுதான்
செயற்குழுவுக்கு முதல் நாள் நண்பர் கருணாநிதி அவர்கள், எனக்கு டெலிபோன் செய்து, 'இல்லை இல்லை. அது ஒன்றும் நடக்காது. இன்று ஒரேடியாக ஒழித்துவிட வேண்டியது தான்' என்று சொன்னார். நான் சொன்னேன், 'சில மக்கள் பின்னணி இருக்குமே' என்று.
பத்துப் பேர் கத்துவான்.. பார்த்துக்கலாம்
பத்துப் பேர் கத்துவான்.. பார்த்துக்கலாம்
'என்ன, பத்துப்பேர் கத்துவான். பார்த்துக் கொள்ளலாம்' என்றார். மறுநாள் நன்றாகத் தூங்கிக் கொண்டிருக்கும் போது, நண்பர் ‘சோ' அவர்கள் எனக்கு டெலிபோன் செய்தார். 'தெரியுமா விஷயம்?' என்று கேட்டார். 'என்ன?' என்றார். 'தெரியாது' என்றேன். 'எம்.ஜி.ஆரை டிஸ்மிஸ் செய்து விட்டார்கள்' என்றார். 'இருக்காதே' என்றேன். 'இப்பொழுது தான் எனக்குச் செய்தி வந்தது' என்றார். இது இரண்டு மணிக்கு நடந்திருக்கும் என்றால், எனக்கு இரண்டு ஐந்துக்கெல்லாம் இந்தச் செய்தி வந்தது.
கேள்விப்பட்டாயா?
கேள்விப்பட்டாயா?
அவர் டெலிபோனை வைத்த உடனேயே, டெலிபோன் மணி அடித்தது. கருணாநிதி பேசினார்: 'முதல் முதலாக உனக்குத் தானய்யா சொல்லுகிறேன். கேள்விப்ப ட்டாயா?' என்றார். 'உங்களுக்கு முன்னாலே சோ போன் பண்ணினார் அய்யா' என்றேன். 'என்ன நினைக்கிறாய்?' என்றார். 'கொஞ்சம் கலகம் இருக்குமே' என்றேன். 'பார்த்துக் கொள்ளலாம்'என்றார் அவர். 'என்ன, பத்து ஊரிலே கலகம் செய்வார்கள். பார்ப்போம்' என்றார்.
போட்ட கணக்கு தப்பாயிற்று
போட்ட கணக்கு தப்பாயிற்று
ஆனால் அவர் போட்ட கணக்கு தவறு. மக்கள் பின்னணி என்பது எழுச்சியாக எழுமானால் காரண காரியங்கள் இன்றியே அது பெருங்கூட்டமாகத் திரளும் என்பதை நான் பல கட்டங்களில் பார்த்திருக்கிறேன். 1971 பொதுத் தேர்தலே சான்று. அதைத் தொடர்ந்து எம்.ஜி.ஆருக்கு மிகப் பெரிய பின்னணி இருக்கிறது என்பதை கருணாநிதி கண்டு கொள்ள முடிந்தது.
தலைவரானார் எம்.ஜி.ஆர்.
தலைவரானார் எம்.ஜி.ஆர்.
1970 - 1974 க்கு இடைப்பட்ட காலத்தில் எம்.ஜி.ஆர். அரசியல் தலைவரானதை நான் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். அரசியலில் ஒரு கட்சியைத் துவக்க வேண்டும், தலைவராக வேண்டும் என்கின்ற விருப்பம் எப்போது மே எம்.ஜி.ஆருக்கு இருந்ததில்லை என்பது எனக்குத் தெரியும். சினிமா உலகத்தில் தன்னுடைய ஆதிக்கத்தை விட்டுவிடக் கூடாது, அரசியலில் தன்னுடைய பிடியை விட்டுவிடக்கூடாது என்றுதான் அவர் நினைப்பாரே தவிர, முழு அரசியல்வாதியாக முழு நேரத்தையும் ஒதுக்கிக் கொள்ள அவர் எப்போதும் விரும்புவதில்லை.
வலுக்கட்டாயமாக தலைவராக்கியவர் கருணாநிதி
வலுக்கட்டாயமாக தலைவராக்கியவர் கருணாநிதி
ஆனால் அவரை வலுக்கட்டாயமாக அரசியலில் ஒரு தலைவராக்கிய பெருமை நண்பர் கருணாநிதிக்கு உண்டு. கட்சியிலிருந்து அவரை விலக்கியதன் மூலமாக ஏராளமான கூட்டத்தை அவர் பக்கத்தில் ஓடவிட்ட பெருமையும் கருணாநிதிக்கு உண்டு. எம்.ஜி.ஆரைப் பின் தொடர்ந்து தொண்டர்கள் அனைவரும் போய் விட்டார்கள்.
அற்புதமான திமுக தொண்டர்கள்
அற்புதமான திமுக தொண்டர்கள்
எம்.ஜி.ஆர். விலக்கப்பட்ட பிற்பாடு, அவருக்குப் பின்னணியாக நின்றவர்கள் அனைவரும் மிக அற்புதமான தி.மு.கழகத் தொண்டர்களாக இருந்தார்கள். கட்டுப்பாடற்ற, முறையாக செயல்திட்டமற்ற தொண்டர்கள்தான் என்றாலும், ஒரே தலைவரின் கீழே திரண்டவர்கள். எம் .ஜி.ஆரிடம் அவர்கள் உயிரையே வைத்திருந்தார்கள்.
2வது முறையாக ஏற்பட்ட கொந்தளிப்பு
2வது முறையாக ஏற்பட்ட கொந்தளிப்பு
அந்த முறையில் எம்.ஜி.ஆரைப் பின்பற்றியே அனைவரும் போனார்கள் என்பது மட்டுமல்லாமல், அரசியல் கட்சியில் ஒரு தலைவர் நீக்கப்பட்டார் என்பதற்காக நாடு முழுவதிலும் கொந்தளிப்பு ஏற்பட்ட சம்பவம் இது இரண்டாவது முறையாகும் .இந்திராகாந்தி நீக்கப்பட்ட போது முதன் முதலில் எப்படி நாடு முழுவதிலும் ஒரு எதிரொலி ஏற் பட்டதோ, அப்படியேதான் எம்.ஜி. ஆர். நீக்கப்பட்டவுடனே தமிழ்நாடு முழுவதிலும் எதிரொலி ஏற்பட்டது.
பெரும் கிளர்ச்சி
பெரும் கிளர்ச்சி
இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியைப் போலவே ஒரு மாபெரும் கிளர்ச்சி ஏற்பட்டது. ஆங்காங்கே கார்களையும், பஸ்களையும், லாரிகளையும், நிறுத்தி அதில் எழுதத் தொடங்கினார்கள். சின்னச் சின்னப் பள்ளி மாணவர்களிலேயிருந்து கல்லூரி மாணவர்கள்வரை, அதில் ஈடுபட்டார்கள். தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தார்கள். கைவண்டி இழுப்பவர்களில் இருந்து, கடலை விற்போர்கள் வரையில் ஆத்திரப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.
அதிமுகவைத் தொடங்க வேண்டிய நிர்ப்பந்தம்
அதிமுகவைத் தொடங்க வேண்டிய நிர்ப்பந்தம்
ஆகவே, ‘அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்' என்ற ஒரு பெரிய இயக்கத்தைத் துவக்க வேண்டிய நிர்பந்தம் எம்.ஜி. ஆருக்கு ஏற்பட்டது. அப்படித் துவங்கியவுடனே அது தமிழக அளவில் பெரிதாக வளர்ந்ததும் மிகச் சுலபமாக நடந்தது. வளர்ந்தது என்று சொல்வதைவிட வளர்ந்த நிலையிலேயே அது உருவாயிற்று என்று சொல்வது பொருந்தும். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு மாபெரும் கட்சியாகத் தமிழகத்தில் விளங்கும் என்று நான் எதிர் பார்த்ததுண்டு. அது நியாயமாக நடந்து விட்டது.
சாதாரண பிரியம் இல்லை
சாதாரண பிரியம் இல்லை
அதைச் சரிக்கட்டவும், ‘அப்படியொன்றும் இல்லை' என்று காட்டவும் நண்பர் கருணாநிதி பல்வேறு திசையில் பிரயாணம் செய்து பார்த்தார். பல ஊர்களில் அவர் பேசவே முடியாமல் போயிற்று. எம்.ஜி.ஆர். மீது ஜனங்களுக்கும் கட்சித் தொண்டர்களுக்கும் இருந்த பிரியம் என்பது சாதாரணமானதாக இல்லை. அதற்குக் காரணம் நியாயமா இல்லையா என்று ஆராய்வதைவிட, ஏதோ சில காரியங்களை அவர் செய்திருக்கிறார், செய்யக்கூடியவர், நியாயமானவர், நேர்மையானவர், ஒழுக்கமானவர் என்றெல்லாம் மக்கள் எண்ணினார்கள். அப்படி எண்ணிய மக்களின் நம்பிக்கை வீண் போகவில்லை.
நிலைமையே வேறாக மாறியிருக்கும்
நிலைமையே வேறாக மாறியிருக்கும்
கருணாநிதியின் மீது மக்களுக்கிருந்த நல்ல பெயரை அது தான் போக்கடித்தது. எம்.ஜி.ஆரை அவர் விலக்காமல் இருந்திருந்தால் நிலைமைகள் வேறுபட்டிருக்கக் கூடும். திராவிட முன்னேற்றக் கழகத்தைக் தவிர வேறு யாரும் ஆட்சிக்கு வருவதென்பது இன்னும் ஒரு 25 ஆண்டுக் காலத்துக்கு நடக்காமலேயே போயிருக்கும்.
ஓங்கி வளர்ந்த அதிமுக
ஓங்கி வளர்ந்த அதிமுக
அதனால் எம்.ஜி.ஆருடைய விலகல் காரணமாக, எம்.ஜி.ஆர் விலக்கப்பட்டதன் காரணமாக, திராவிட முன்னேற்றக் கழகம் மெலியும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்கின்ற கட்சி ஓங்கி வளரும் என்று நம்பினேன். மற்ற நடிகர்களைப் போல் அவரும் ஒரு நடிகர்தான் என்றாலும், அரசியல் ஈடுபாட்டில் அவருக்கு இருந்த பிடிப்பின் காரணமாக, சில அரசியல் தத்துவங்களையும் அவர் உணர்ந்து கொண்டிருந்தார்.
கெட்டிக்கார தலைவர்
கெட்டிக்கார தலைவர்
விஷயங்களுக்குப் பதில் சொல்வதில் கெட்டிக்காரராக விளங்கினார். பிரச்சனைகளுக்குப் பரிகாரம் தேடுவதிலும் கெட்டிக்காரராக விளங்கினார். ஒரு கட்சியை நடத்தக் கூடிய சாமர்த்தியம் தனக்கு இருக்கிறது என்பதையும் காட்டினார்.
பிரித்தலும் பேணிக் கொளலும்
பிரித்தலும் பேணிக் கொளலும்
'பிரித்தலும் பேணிக் கொளலும் பிரித்தார்ப் பொருத்தலும் வல்லது அமைச்சு'
- என்றும் அவர் காட்டினார். அவர் கட்சிக்குள் மிக முக்கியமான ஆட்களும் உள்ளே நுழை ய ஆரம்பித்தார்கள். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் அங்கம் வகித்தவர்களில் பட்டதாரிகள் அதிகமாக இருந்தார்கள். அதே அளவுக்கு பட்டமோ, படிப்போ இல்லாத கிராம வாசிகளும் அதிகமாக இருந்தார்கள். திராவிட முன்னேற்றக் கழகம் எவ்வளவு எரிச்சல் அடைந்தும் கூட இந்த வளர்ச்சியைத் தடுத்து நிறுத்த முடியவில்லை என்று கூறியுள்ளார் கண்ணதாசன்.
அந்த பரபரப்புத் தீர்மானம்
அந்த பரபரப்புத் தீர்மானம்
திமுகவிலிருந்து எம்.ஜி.ஆர் நீக்கப்படுவது தொடர்பான திமுக தீர்மானம் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது.. அது இதுதான்... 'தி.மு.க.,செயற்குழு. எவ்வளவோ வாய்ப்பளித்தும், எம்.ஜி.ஆர்.,அதை பயன்படுத்திக்கொள்ளவில்லை. கழக பொதுச்செயலாளர் நாவலர் அவர்களால் எம்.ஜி.ஆர்.,மீது கழக சட்ட திட்ட விதியின்படி எடுத்துள்ள நடவடிக்கையை இந்த செயற்குழு ஒரு மனதாக ஏற்றுக்கொண்டு இந்த தீர்மானத்தை பொதுக்குழுவிற்கு பரிந்துரை செய்கிறது என்பதே அந்த தீர்மானம்.
ஒருமித்த முடிவு
ஒருமித்த முடிவு
எம்.ஜி.ஆரை நீக்குவது தொடர்பான தீர்மானம் திமுக பொதுக்குழுவில் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. அந்தக் கூட்டத்தில் மொத்தம் உள்ள 310 பேரில் 277 பேர் கலந்து கொண்டனர். மற்றவர்கள் வராததற்குக் காரணம், அவர்கள் எம்.ஜி.ஆர் ஆதரவாளர்கள் என்பது. கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருமே நீக்கத்தை ஆதரித்துப் பேசினர், வாக்களித்தனர்.
அக்டோபர் 14ல் நீக்கப்பட்டார் எம்.ஜி.ஆர்.
அக்டோபர் 14ல் நீக்கப்பட்டார் எம்.ஜி.ஆர்.
இதையடுத்து 1972ம் ஆண்டு அக்டோபர் 14ம் தேதி கூட்டப்பட்ட அந்த பொதுக்குழுவில், இன்று முதல் எம்.ஜி.ஆர்., திமு.கவை விட்டு முற்றிலும் நீக்கப்பட்டு விட்டார். இனி சமரசத்திற்கு இடமில்லை என்று திட்டவட்டமாக அறிவித்தது தி.மு.க.,பொதுக்குழு. இதைத் தொடர்ந்து எம்.ஜி.ஆரும், நான் தி.மு.கவிலிருந்து விலகிவிட்டேன். இரண்டொரு நாளில் புதிய அமைப்பு ஒன்றை துவங்குவேன் என்று அறிவித்தார்.
தமிழக அரசியல் வரலாற்றை மாற்றிப் போட்ட மறக்க முடியாத நாள் அக்டோபர் 8,10 மற்றும் 14.......Sml ...
-
பொன்மனச்செம்மல் எம்ஜிஆரது வளர்ச்சியைத் தாங்கிக் கொள்ள முடியாத கருணாநிதி, எம்ஜிஆர் உட்கட்சி விவகாரங்களை பகிரங்கமாகப் பேசி விளக்கம் கேட்டார் என்ற காரணத்தை முன் வைத்து 1972 ஆம் ஆண்டு அக்டோபர் 10 ஆம் தேதி எம்ஜிஆரை திராவிட முன்னேற்ற கழகத்திலிருந்து தற்காலிகமாக நீக்கினார். தொடர்ந்து வந்த நாட்களில் அதே ஆண்டு, அக்டோபர் 14 ஆம் நாள் எம்ஜிஆர் திமுகவிலிருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டார். அந்த சமயத்தில் தான் எம்.ஜி.ஆர் நீக்கத்தை கண்டித்து கைது செய்யப்பட்டோரை விடுதலை செய்ய கோரி 2 பேருந்துக்களுக்கு சென்னையில் தீ வைக்கப்பட்டது. அதன் பிறகும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்காததால், தீ வைக்கப்பட்ட இடம் வழியாக சென்ற நடிகை சௌக்கார் ஜானகியின் கார் மீது கல் வீசப்பட்டது. இச்செய்திகளை கேட்ட அரசு உடனே கைதானவர்களை எல்லாம் விடுவித்தது. 20.10.1972ம் ஆண்டு அண்ணா திமுகவை ‘ஒட்டு காங்கிரஸ்’ என்று விமர்சித்தார் திமுக தலைவர் கருணாநிதி. மத்திய மந்திரி வருகை பற்றி கருத்து தெரிவிக்கும்போது, இது மத்திய அரசின் தூண்டுதலின் பெயரில் நடந்துள்ளது என்றும், அண்ணா திமுக என்பது ஒட்டு காங்கிரஸ் என்றும் தெரிவித்தார். இதற்கு பதில் அளிக்கும் விதமாக எம்.ஜி.ஆரோ, அண்ணா திமுக ஒட்டு காங்கிரஸ் இல்லை என்றும், அண்ணா திமுக என்பது தனித்து செயல்படும் கட்சி என்று விளக்கம் அளித்தார்.
புதிய கட்சி தொடங்க விரும்பிய எம்.ஜி.ஆர் அப்போது அனகாபுத்தூர் ராமலிங்கம் என்பவர், ‘அதிமுக’ என்ற பெயரில் பதிவு செய்து வைத்திருந்த கட்சியில் தம்மை இணைத்துக் கொண்டார். அப்போது, ‘ஒரு சாதாரணத் தொண்டன் தொடங்கிய கட்சியில் என்னை இணைத்துக் கொண்டேன்’ என அறிவித்ததுடன் ராமலிங்கத்துக்கு மேல்சபை உறுப்பினர் (M.L.C.) பதவியும் அளித்தார். இக்கட்சி பின்னர் ‘அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்’ எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இப்படித்தான் அக்டோபர் 17, 1972-இல் அதிமுகவுக்குத் தொடக்க விழா கொண்டாடப்பட்டது.
21.10.1972ம் ஆண்டு திமுகவை சேர்ந்த எம்.எல்.ஏக்கள் பலர் அதிமுகவில் தங்களை ஐக்கியப்படுத்திக் கொண்டனர். அதில் முக்கியத்துவம் வாய்ந்தவர் திருவள்ளூர் தொகுதி எம்.எல்.ஏ துரைராஜ். தீவிர எம்.ஜி.ஆர் ரசிகனான அவர் தொகுதி மக்களுடன் இதுபற்றி ஆலோசனை நடத்தியதற்கு பின்பு அதிமுகவில் தன்னை இணைத்துக்கொள்ள தயாரானார். இந்த சூழலில் திமுகவினர் கட்சி தாவுவதை எதிர்த்து திமுகவினரே பேருந்துக்களை கொளுத்தி, தகராறில் ஈடுபட்டனர். இதுபற்றி மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று எம்.ஜி.ஆர் கோரிக்கை வைக்க, புலன் விசாரனை நடப்பதாக மத்திய அமைச்சர் ஒருவர் தமிழக அரசிடம் கேட்ட கேள்விக்கு ஐஜி அருள் பதில் அளித்தார்.
அதன் பிறகு சென்னை கடற்கரையில் நடந்த பிரமாண்டமான கூட்டத்தில் அதிமுகவின் தொடக்கம் பற்றியும், அதிமுகவின் வருங்காலம் பற்றியும் எம்.ஜி.ஆர் பேசினார். ஆரம்பம் முதலே எம்.ஜி.ஆருக்கு உறுதுணையாக இருந்து வந்த ஜேப்பியாரும், முசிறிபுத்தனும் இக்கூட்டத்துக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர். இக்கூட்டத்தில் திமுகவில் இருந்து விலகி, காளிமுத்து, முனுஆதி, துரைராஜ், எட்மண்ட் ஆகியோர் எம்.ஜி.ஆர். முன்னிலையில் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர்.
இது எல்லாம் நடந்துக்கொண்டிருக்க, மெல்ல மெல்ல அதிமுக வளர்ச்சியை பெற்றுக்கொண்டிருந்தது. 1973ம் ஆண்டு திண்டுக்கல் தொகுதி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ராஜாங்கம் மரணமடைந்தார். அதன் பிறகு அத்தொகுதிக்கு மே 20ம் தேதி தேர்தல் என்று அறிவிக்கப்பட்டது. அந்த சமயத்தில் தான் ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படம் வெளியாக காத்திருந்தது. திமுகவுக்கு எதிராகக் களம் இறங்கியதால் ’உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தை வெளியிட திமுக அரசு தடையாக இருந்தது. ஆனால் எம்.ஜி.ஆரோ அதை பற்றியெல்லாம் கவலைப்படாமல், தேர்தல் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். அதிமுக காணும் முதல் தேர்தல் அது தான். அதிமுக சார்பில், தொகுதி வேட்பாளராக வழக்கறிஞர் மாயத்தேவர் நிறுத்தப்பட்டார். மே 11ம் தேதி, உலகம் சுற்றும் வாலிபனை வெளியிட எம்.ஜி.ஆர் முடிவு செய்து போஸ்டர்களை ஒட்ட உத்தரவிட்டார்.
ஆனால் அப்போது அப்படத்திற்கு மட்டும் போஸ்டர்கள் மீதான வரியை சென்னை மாநகராட்சி மூலம் திமுக அரசு உயர்த்த, சென்னையை தவிர்த்து இதர நகரங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. திண்டுக்கல் தேர்தலோ மே 20, படம் வெளியீடு மே 11. இரண்டுக்கும் 9 நாட்கள் தான் வித்தியாசம். பிரமாண்டமான செலவில் எடுக்கப்பட்ட அத்திரைப்படத்தை எம்.ஜி.ஆரே இயக்கியும், தயாரித்தும் வெளியிட்டார். மே 11ம் தேதி திரைப்படம் வெளியானது. திரையரங்குகளில் அதிக அளவில் கூட்டம். எம்.ஜி.ஆரோ, தேவி தியேட்டரில் தன் ரசிகர்களுடன் அமர்ந்து படத்தைக் கண்டுகளித்தார்.
இது எல்லாம் ஒரு பக்கம் நடக்க ஜேப்பியார் அவர்கள், திண்டுக்கல் தொகுதி தேர்தல் நிதியாக தென்சென்னை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆரிடம் 20 கோடி ரூபாயை அளித்தார். தேர்தலில் திமுக வெற்றி பெற அமைச்சர்கள் அனைவரும் களம் இறக்கப்பட்டனர். முதலமைச்சர் கருணாநிதி கிராமம் கிராமமாக சென்று பிரச்சாரம் செய்தார். எம்.ஜி.ஆரோ அனல் பறக்கும் பிரச்சாரத்தை மேற்கொண்டார்...........Sml...
-
வரலாற்றில் ஒரு திரைப்படம் காவியம் அரசியலுடன் பின்னி பிணைந்தது என்றால் "உலகம் சுற்றும் வாலிபன்" தான் அ.தி.மு.க. வைத் தொடங்கிய நேரத்தில், புரட்சித்தலைவர் தாமே நடித்து, இயக்கி, தயாரித்த ‘உலகம் சுற்றும் வாலிபன்’படம் வெளியிடப்பட வேண்டிய நிலையில் இருந்தது. உடனே அந்தப் படத்தை வெளியிட விடாமல் தடுப்பதற்கான முயற்சிகளில் சிலர் ஈடுபட்டனர்.அதிகார வலிமை பெற்ற சிலர், அந்தப் படத்திற்கு விநியோக உரிமை பெற்றிருந்தனர் விநியோகஸ்தர்களையெல்லாம் சந்தித்து மிரட்டினார்கள். ”படம் வேண்டாம். கொடுத்தப் பணத்தைத் திருப்பிக் கொடுங்கள்” என கேட்கும்படி விநியோகஸதர்களை வற்புறுத்தினார்கள். ஆனால் காலம் காலமாய்த் திரைப்படத் துறையில் எம்.ஜி.ஆர். படங்களை வாங்கி விநியோகித்ததன் மூலமே பெரும் பணம் சம்பாதித்தவர்கள், அந்த விநியோகஸ்தர்கள்,அந்த உருட்டல் மிரட்டலுக்குப் பயந்து புரட்சித் தலைவரை நெருக்கடிக்குள்ளாக்கமறுத்துவிட்டனர்.பட விநியோகஸ்தர்களை மிரட்டிப் பணியவைக்க முடியவில்லை என்றதும் அவர்களது கவனம், திரையரங்குகளின் மேல் திரும்பியது. திரையரங்குளின் உரிமையாளர்களை அழைத்து, சட்டம், ஒழுங்கு மற்றும் திரையரங்குப் பாதுகாப்பு ஆகியவற்றைக் காரணம் காட்டிப் புரட்சித் தலைவரின் படத்தைத் திரையிட மறுக்கும்படி வற்புறுத்தினார்கள். ஆனால், லட்சம் லட்சமாய் வசூலை வாரித்தரும் எம்.ஜி.ஆர். படத்தைத் திரையிடாதிருக்க முடியாது எனத் திரையரங்க உரிமயாளர்கள் மறுத்துவிட்டனர். சில திரையரங்க உரிமையாளர்கள் மட்டுமே அந்த வற்புறுத்தலுக்கு செவி சாய்த்தனர். அவர்களுள் பலர் அதிகாரத்திற்கு அஞ்சித் தாங்கள் செய்த காரியத்தைச்சொல்லி புரட்சித் தலைவரிடமும் மன்னிப்புக் கோரினார்கள்!
பெரும்பாலான திரையரங்க உரிமையாளர்களும் எம்.ஜி.ஆர். படத்தைப் புறக்கணிக்கச் சம்மதிக்கவில்லை என்றதும் அவர்களை வேறு வகையில் மிரட்டத் தொடங்கினார்கள்.”எம்.ஜி.ஆர் படம் திரையிடப்பட்டால் தியேட்டரைக் கொளுத்துவோம்! திரையைக் கிழிப்போம்! படச்சுருளைப் பஸ்பமாக்குவோம்!” என்றெல்லாம் மிரட்டினார்கள்; கடிதம் எழுதினார்கள்; சிலர் அறிக்கை விடும் அளவுக்குத் துணிந்தார்கள்!
திரையரங்க உரிமையாளர்களுள் பலர் இந்த இரண்டாவது வகை மிரட்டலைக்கண்டு உண்மையிலேயே அஞ்சி நடுங்கினார்கள். பல லட்சம் ரூபாயைக் கடன் வாங்கிக் கட்டப்பட்ட திரையரங்குகள் கொளுத்தப்படும் என்னும் மிரட்டல் அவர்களுக்குக் குலை நடுக்கத்தை ஏற்படுத்தியது. அதனால், முன்னணித் திரையரங்க உரிமையாளர் பலர் ஏற்கெனவே வாக்களித்தபடி ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தைத் திரையிடத் தயங்கினார்கள்., பின் வாங்கினார்கள்.ஆனால், புரட்சித் தலைவர் இந்த உருட்டல் மிரட்டல்களுக்கோ, திரையரங்க உரிமையாளர்களின் பின் வாங்கலுக்கோ சற்றும் அஞ்சவில்லை. துணிந்து தம்முடைய படத்தை வெளியிட்டார்.தமிழகம் முழுதும் போஸ்டர்கள் ஓட்ட தடைவிதித்தார் கருணாநிதி அனாலும் தலைவர் சளைக்காமல் தினமும் வெளியாகும் நாளிதழ்களில் ஒருபக்க விளம்பரமாக தினமும் விளம்பர படுத்தினார் தமிழகம் முழுவதிலும் ஒரே நாளில் வெளியிட்டார். அந்தப் படம் திரையிடப்பட்ட ஐம்பதுக்கு மேற்பட்ட திரையரங்குகளிலும் வெற்றிகரமாய் ஓடியது! எந்த விதமான பெரிய விளம்பரமும் இல்லாமலே தாய்மார்களின் கூட்டம் படத்தைக் காண அலைமோதியது; இளைஞர்கள் கூட்டமோ மீண்டும் மீண்டும் அதே படத்தைப் பல முறை கண்டுகளித்தது. எனவே பல்வேறு திரையரங்குகளில் 25 வாரம் ஓடி வெள்ளி விழா கொண்டாடியது! மேலும் சில திரையரங்குகளில் 31 வாரம் ஓடி வசூலை அள்ளிக் குவித்தது!!......இப்பொழுதும் வசூல் புரட்சி நடத்திக்கொண்டேயிருக்கிறது... Sml...
-
நமது சிவாஜி ரசிகர்கள் நிறைய பேர் அதென்ன ஸ்டெச்சர், வடக்கயிறு என்றெல்லாம் கேட்கிறார்கள்.
அதனால் அதைப்பற்றி சற்று விளக்கமாக சொல்கிறேன். சிவாஜி ரசிகர்களுக்கு நன்றாகவே தெரியும்.
ஆனால் மற்றவர்களுக்கு புரியும்படி சொல்ல வேண்டியது நம் கடமையல்லவா. உதாரணமாக சிவாஜி நடித்த "கர்ணன்" படத்தை எடுத்துக் கொள்ளலாம். ஏனென்றால் "கர்ணனு"க்குத்தான் ஓடி முடிய வார வசூலை அவர்களே கொடுத்திருக்கிறார்கள்.
அதை பார்க்கும் போது எந்த வாரத்திலிருந்து வடக்கயிறை பயன்படுத்தியிருக்கிறார்கள் என்று அந்த சார்ட்டை பார்த்தால் நமக்கே புரியும். ஒரு வெற்றிப் படமென்றால்
குறைந்த பட்சம் 4 வாரங்களுக்கு வசூலில் எந்த மாற்றமும் இருக்காது.
மதுரையை போன்ற ஊரில் நல்ல வெற்றிப் படமென்றால் 100 காட்சிகள் தொடர்ந்து hf ஆகியிருக்கும். அதனால் 5 வாரம் வரை வசூல் ஒரே மாதிரி இருக்க வாய்ப்புண்டு.
ஆனால் "கர்ணன்" முதல் வார வசூல் ரூ46000. என்று வரும் போது 2 வது வாரத்தில் குறைந்த பட்சம் ரூ 40000 மாவது வரவேண்டும். ஆனால் வந்ததோ ரூ31000. இரண்டாவது வாரத்திலேயே படம் விழுந்து விட்டது.
மூன்றாவது வாரத்தில் பாருங்கள் ரூ
19000 வசூல். முதல் வாரத்துக்கும் மூன்றாவது வாரத்துக்கும் ரூ 27000 வசூல் வித்தியாசம்.
மிகக் குறைந்த வசூல். தங்கம் தியேட்டரில் முதல் வாரம் பொங்கல் வாரம். எக்ஸ்டிரா காட்சிகள் நிறைய நடந்திருக்கும் பட்சத்தில் வசூல் ரூ 50000 தாண்டி வந்திருக்க வேண்டும்.
ஆனால் "கர்ணன்"
முதல் வாரத்திலேயே வாயை பிளந்து விட்டார். மூன்றாவது வாரத்தில் கும்பகர்ண தூக்கத்துக்குபோய்விட்டார். அதனால் 50 நாட்கள் வரை தாஜா பண்ணி நடத்தியே சென்றிருக்கிறார்கள். 50 நாட்கள் தாண்டியவுடன் இது ஒப்பேறாது என்று தெரிந்தவுடன் தேரில் வடக்கயிறு கட்டி இழுத்த மாதிரி சிவாஜி ரசிகர்கள் தங்களது ஜீ பூம்பா வேலையை ஆரம்பித்து விட்டார்கள்.
தங்கத்தை பொறுத்தவரை வாரத்துக்கு ரூ7500 மினிமம் வந்தாக வேண்டும். இல்லையென்றால் படத்தை தூக்கி விடுவார்கள். "கர்ணன்", கும்பகர்ணனின் பெயரில் பாதி அல்லவா. நல்லா குறட்டை விட்டு தூங்க ஆரம்பித்தவுடன் அவசரமாக ஸ்டெச்சரை வரவழைத்து "கர்ணனை" தூக்கி மீதி 50 நாட்களுக்கு மேல் சுமந்தார்கள். வர வர வெயிட் தாங்க முடியாததால் வடக்கயிறு கொண்டு வந்து இழுத்து கரை சேர்த்தார்கள்.
சுமார் 7 வாரங்கள் மினிமம் வாடகையை தியேட்டருக்கு செலுத்தி. விட்டு வருகின்ற வசூலுடன் மேலும் டிக்கட் கிழித்து ஓட்டின்ர்கள். அதுதான் ரூ 3000 திலிருந்து 5000 வரை காண்பிக்க முடிந்தது. ஒருபடம் ஒருவாரத்தில் மினிமம் வசூலை எட்டிவிட்டால் அடுத்தவாரமே பணால் ஆகிவிடும்.
ஆனால் "கர்ணனோ" 50 நாட்கள் வரை உயிரை கையில் பிடித்துக் கொண்டே சென்றிருக்கிருக்கிறான்.. இப்போது வெகுஜன ரசிகர்களுக்கு புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். இது மதுரை தங்கத்தில்.
சென்னை சாந்தி பிரபாத் சயானியில் 100 நாட்கள் மிகவும் கஷ்டப்பட்டு பெரிய பெரிய வடக்கயிறு கொண்டு வந்து 100 நாட்கள் ஓட்டினார்கள். சாந்தியில் மிகக்குறைந்த வசூலாக 100 நாட்களில் 2,10,000 தான் வசூலாகியது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். எப்போதும் சாந்தி தியேட்டர் வசூலை முன்னிலை படுத்துபவர்கள் "கர்ணன்" விஷயத்தில் கன்ளத்தனமாக மறைத்து விட்டார்கள். மூன்று திரையரங்கும் சேர்த்து மொத்தம் 5 லட்சம்தான் வசூல். அதுவும் கடைசி 2வாரங்களில் ஒரு காட்சிக்கு 100 ரூ கூட வசூல் ஆகவில்லை என்பதிலிருந்து சாந்தி தியேட்டரின் இழுவை சக்தி மற்ற தியேட்டரை விட பல மடங்கு அதிகம் என்று புரிகிறதா.
"சந்திரமுகி"யை 800 நாட்கள் ஆளே இல்லாமல் ஓட்டி சாந்தியை பலான தியேட்டர் ஆக்கிய கதை அனைவரும் அறிந்ததே.
"கர்ணன்" மறு வெளியீடு 2012 ல் வெளியான போது ஸ்கூல் பிள்ளைகளை இம்சை படுத்தி தினசரி ஒரு ஸ்கூல் வீதம் அழைத்து சென்று டிக்கெட்டை இவர்களே எடுத்து கொடுமை படுத்தியதை அனைவரும் அறிவர். அந்த பிளைைகள் சிவாஜியின் கத்தலை பார்த்து பயந்து போய் சிறிது காலம் கழித்துதான் நார்மலுக்கு வந்ததாக தாய்மார்கள் கூறியதை நாம் புறந்தள்ள முடியாது. 50 நாட்கள் கூட ஓட தகுதியற்ற படத்தை 150 நாட்கள் சிறுவர்களிடம் பிச்சை எடுத்து ஓட்டியது சமூக வரம்பு மீறிய செயலாகும்.
இது போல அந்த காலத்தில் "கட்டபொம்மனை"யும் "க.ஓ.தமிழனை"யும் இம்சை படுத்தி குழந்தைகளை வற்புறுத்தி வாங்கிய பணத்தை வசூல் கணக்கில் சேர்த்தும் படத்திற்கு லாபம் வராதது சோகமே. என்னையும் ஏமாற்றி படம் பார்க்க வைத்து பணம் பெற்று வசூல் கணக்கில் சேர்த்தார்கள். ஆனால் "வேட்டைக்காரன்" தொட்டதோ சுமார் 8 லட்சம் .. "கர்ணன்" 50 நாட்கள் ஓட்டியது 15 திரையரங்குகள்தான். அதற்கு காரணம் 1964 பிப் 27 அன்று வெளிவந்த "காதலிக்க நேரமில்லை" என்ற மெகா ஹிட் படம்தான். இவர்கள் வடக்கயிறு போட்டு இழுத்த சுமார் 15 திரையரங்குகளை கபளீகரம் செய்து விட்டது. ஐயனின் கைபிள்ளை ஒன்று "கர்ணன்" தயாரிப்பு செலவு 18 லட்சம் என்றும் வசூல் 58.5 லட்சம் என்றும் லாபம் 12 லட்சம் என்றும் ஆதாரமில்லாமல் மோசடியாக கதறி நம்மிடம் வசமாக சிக்கிக் கொண்டது.
ஏற்கனவே ஆரம்பகால வசூலை "வேட்டைக்காரன்" வேட்டையாடி விட்டான். ஆக 40 லட்சத்துக்கும் அதிகமான செலவில் தயாரிக்கப்பட்ட பந்துலுவின் "கர்ணன்" (ஆதாரங்கள் இணைக்கப் பட்டுள்ளது) மொத்த வசூல் 20 லட்சத்துக்குள் முடங்கி சுவற்றில் அடித்த பந்து போல திரும்பி பந்துலுவின் கைகளில் தஞ்சமடைந்து விட்டான். இதுதான் "கர்ணனி"ன் உண்மைக் கதை. "கர்ணனா"ல் பந்துலுவின் கடன் சுமார் 30 லட்சம் வரை உயர்ந்தது. அது இன்றைய மதிப்புக்கு சுமார் 90 கோடி. இந்த மதிப்பும் நம் கணிப்பு அல்ல. ஐயக்குஞ்சு ஒன்று "சிவந்த மண்" காலத்தை ஒட்டி கணித்தது. அதுவும் 69 ல் வெளியான "சிவந்த மண்ணு"க்கு இப்போது செய்தி போட்டார்களாம். இதுதான் ஐயனின் கைபிள்ளை ஒன்று ஆடிய கபட நாடகக் .கதை. இது "கர்ணன்" காலம். அதே ஐயனின் கைபிள்ளையிடம் மதிப்பை கேட்டு தெரிந்து கொள்ளலாம்..
"கப்பலோட்டிய தமிழனி"ல் 7 லட்சம் கடன் ஆனதை அவரே ஒத்துக்கொண்டு பேட்டி கொடுத்தது நினைவிருக்கலாம்.
இது "கர்ணனு"க்கு மட்டும் நடந்த கதையல்ல. எங்கெல்லாம் சிவாஜி படங்கள் ஒரு தியேட்டர் 2 தியேட்டரில் 100 நாட்கள் ஓடியிருக்கிறதோ அங்கெல்லாம் சிவாஜி ரசிகர்களின் கை சிவந்து இருக்கும். "கர்ணனை" போல் கொடுத்து சிவந்த கரமல்ல. வடக்கயிறு போட்டு இழுத்து சிவந்த கரங்கள்.
"ராஜபார்ட் ரங்கதுரை" நாகர்கோவிலில் மறுவெளியீடு திரையிட்டு 60 நாட்கள் வரை 1 காட்சி ஓட்டினார்கள். அதையும் பல நாள் படம் பார்க்க ஒரு ஆள் கூட வராததால் காட்சிகள் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன.
ஆனாலும் தொடர்ந்து ஓடியமாதிரி வால்போஸ்டர் ஒட்டி ஆனந்தப்படுகின்றனர். எம்ஜிஆர் மீதுள்ள துவேஷம் அவர்களை மனநோயாளி ஆக்கிவிட்டது என்றே நினைக்கிறேன். படத்திற்கு 1 லட்சம் வாங்கும் சில்லரை நடிகர் சிவாஜி 10 லட்சத்துக்கும் அதிகம் வாங்கும் செல்வாக்கு உள்ள தலைவரை எப்படி வசூலில் மிஞ்ச முடியும். A v m செட்டியார் "உயர்ந்த மனிதனு"க்காக கொடுத்த 1 லட்சத்துக்கு மேல் கேட்ட ரூ25000 கூட தர மறுத்து அவர் மார்க்கெட் என்னவென்று எங்களுக்கு தெரியும், இதற்கு மேல் காசு தர முடியாது என்று கறாராக சொல்லி விரட்டியது கணேசன் ரசிகர்கள் அறிந்ததுதானே.
மார்க்கெட் வேல்யூ என்று இருக்கிறதல்லவா?. அது கணேசன் ரசிகர்களுக்கு புரியவில்லையா?. இதே "உலகம் சுற்றும் வாலிபன்" வசூலை கவனித்துப் பாருங்கள். கடைசி வரை ஸ்டெடியாக பயணப்பட்டிருக்கும். .31வது வாரம் கூட ரூ 12000 வசூலாகி இருக்கிறது. "கர்ணன்" மட்டுமல்ல "மோ சு பிள்ளை" "ரா எ ராமனடி"
"என் மகன்" இது போன்ற. பல சிவாஜி படங்கள் அத்தனையும் இந்த கேஸ்தான்.
100 நாட்கள் மதுரையில் ஓடினால் குறைந்த பட்சம் ரூ 2 லட்சம் வசூலாக வேண்டும். இல்லையென்றால்
அது தோல்விப்படம்தான் என்பதை சிவாஜி ரசிகர்களே உணருங்கள். மீண்டும் மக்கள் திலகத்துடன் மோத வேண்டாம். சிறு நடிகனுடன் கம்பேர் பண்ண எங்களுக்கு கேவலமாக இருக்கிறது. அதனால் தேங்காய் சீனிவாசன்,நாகேஷ்,சுருளி, இதுபோன்ற உங்களுக்கு இணையான நடிகனுடன் மோதிக் கொள்ளுங்கள்..........ksr.........
-
பாட்டாலே புத்தி சொன்ன*வாத்தியார் எம்.ஜி.ஆர். -வின்*டிவியில் சகாப்தம்*நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி*06/10/20 அன்று அளித்த*தகவல்கள்*
----------------------------------------------------------------------------------------------------------------------
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் ஒரு திரைப்படத்தில் அழுது நடித்தார் என்றால் அந்த படத்தின் தயாரிப்பாளர் தகுந்த வசூல் இன்றி அழுவார் என்று அர்த்தம் . சில படங்கள் விதிவிலக்கு .ஏனென்றால் அவர் அழுது நடிக்கும் காட்சிகளை பெரும்பாலும் அவரது ரசிகர்கள் ,பொதுமக்கள் விரும்புவதில்லை .சிரித்து நடிப்பது ,வீர சாகசங்கள் செய்வது போன்ற காட்சிகளைத்தான் ரசித்து பார்த்தனர் .ஒவ்வொரு படங்களிலும் எப்படி ஒவ்வொரு பக்தரும் தாங்கள் விருப்பப்பட்ட கடவுளுக்கு பல்வேறு அலங்காரங்கள் செய்து பார்க்க ஆசைப்படுவார்களோ , அப்படிதான் எம்.ஜி.ஆர். ரசிகர்களும் ஒரு தயாரிப்பாளர் என்பவர் தங்கள் அபிமான கடவுளாக பார்க்கப்படும் நடிகரை பல்வேறு ஆடை, அணிகலன்கள் மூலமாக அலங்கரித்து நடிக்க வைக்க வேண்டும் என்று விருப்பப்பட்டார்கள் .அதன்படியே பிறகு வந்த படங்களான ராமன் தேடிய சீதை, நேற்று இன்று நாளை , நினைத்ததை முடிப்பவன் , இதயக்கனி ,உலகம் சுற்றும் வாலிபன் போன்ற படங்களில் அவரது ஆடைகள், அணிகலன்கள் ,கழுத்தில் கட்டும் ஸ்கார்ப் ,தலையில் அணியும் விதவிதமான தொப்பிகள் , கை மணிக்கட்டுகளில் கட்டும்* துணி போன்றவை மிக பிரபலமாக அந்த காலத்தில் பேசப்பட்டது .ஏனென்றால் வட நாட்டில், அந்தக்கால கட்டத்தில் இந்தி நடிகர்கள் தேவ் ஆனந்த் ,தர்மேந்திரா போன்ற நடிகர்களின் படங்களை விட எம்.ஜி.ஆர். படங்கள்தான் ஷோ ரூம்களில் அதிகம் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது என்பது வரலாற்று சாதனை .
ரஷ்யாவில் புரட்சி காலத்தில் ,பிரபல அரசியல்* தலைவர் லெனின் மரத்தின் மீது*அமர்ந்து ஒளிந்து இருக்கிறார் . ராணுவம் அவரை தேடி கொண்டிருக்கிறது .அந்த சமயம் லெனின் என்ன திட்டமிட்டார் தெரியுமா* நாம் ஆட்சி அமைத்தால் இந்த ராணுவத்தை எப்படி நடத்துவது .மக்களுக்கு நன்மை செய்யும்படி திட்டங்கள் வகுக்க வேண்டும் .என்று யோசித்தாராம் . அப்படி ஒவ்வொரு நொடியும் எதையாவது இந்த மக்களுக்கு செய்ய வேண்டும் என்று யோசித்தவர் எம்.ஜி.ஆர்.*உதாரணமாக யானை கவுனி பகுதியில் அந்த காலத்தில் வாடகை வீட்டில் வசித்தவர் வால் டாக்ஸ் சாலையில் சில சமயம் நடந்திருக்கிறார் .வால் டாக்ஸ் சாலை என்றால்* சுவருக்கு வரி விதிப்பது .என்று புரிந்து கொண்டு இப்படியும் ஒரு வரி விதித்தார்களா என்று யோசித்து ,அதை நாடோடி மன்னன் படத்திலே வரி கொடுமைகளை பற்றி விமர்சிப்பது போல வசனங்கள் ,காட்சிகள் அமைத்தார் .எனவே தான் பார்க்கின்ற விஷயங்களை எல்லாம் மனதில் பதித்து ,ஒரு சிந்தனை சிற்பியாக திகழ்ந்தார் .அதனால்தான் இந்த தமிழ்நாட்டின் முதல்வராக மலர்ந்தார் .சாதாரணமாக வந்துவிடவில்லை . அவருடைய வறுமையிலும் அவருடைய சிந்தனை திறன் என்பது இங்குள்ள மற்ற பெரிய பட்டதாரிகள், பெரிய படிப்பாளிகள் ,பெரிய அறிவாளிகள், பெரிய மெத்த படித்தவர்களுக்கு எல்லாம் இல்லாத சிந்தனை மக்களை நேசிப்பது , மக்களுடன் வாழ்வது ,மக்களுக்கு உதவுவது , மக்களுக்காக சிந்திப்பது ,என்று தன்னுடைய வாழ்க்கையின் துணையோடு*.செயல்பட்டதால் ,அவருடைய வாழ்க்கை என்பது ஒரு வரலாறு, ஒரு பாடம், ஒரு பல்கலை கழகமாக இருக்கிறது .*
திரு.கா.லியாகத் அலிகான் பேட்டி :1954ல் கூண்டுக்கிளி என்கிற படம்* எம்.ஜி.ஆர்.அவர்களும் ,சிவாஜி கணேசனும் இணைந்து நடித்த ஒரே படம் . அந்த படத்தின் இயக்குனர் ராமண்ணா எம்.ஜி.ஆர். அவர்களிடம் ஒரு காட்சியில் நீங்கள் புகைபிடிப்பது போல் நடிக்க வேண்டியிருக்கும் என்கிறார் .அப்போதுதான் எனக்கு நல்ல வாய்ப்புகள் வந்து* கொண்டிருந்த நேரம் .என்னால் நேரடியாக முடியாது என்று மறுக்க முடியாத ஒரு சூழ்நிலை .எனக்குத்தான் புகை பிடித்து பழக்கமில்லை . பிடிக்கவும் தெரியாது .நீங்கள் இப்படி சொல்கிறீர்களே என்றார்* எம்.ஜி.ஆர். பதிலுக்கு இயக்குனர் புகை பிடிக்க தெரியவில்லை என்றால் என்ன, சிகரெட்டை பற்ற வைத்து ஒரு தடவை பிடித்து இழுத்து புகை விட்டால் போகிறது .அது ஒரு பெரிய விஷயமில்லை .என்கிறார் . விவரம் தெரியாமல் அந்த செயலை செய்யும்போது உடல் ரீதியாக ஏதாவது பாதிப்பு வந்தால் என்ன செய்வது என்றுவேண்டுமென்றே* அதை தவிர்ப்பதற்காக,மறுப்பதற்காக* எம்.ஜி.ஆர். சொல்கிறார் .*இந்த செயலை நான் செய்வதால் ,திரையில் இந்த காட்சியை பார்ப்பவர்கள் எல்லாம் எம்.ஜி.ஆரே புகைபிடிக்க ஆரம்பித்துவிட்டார். பிறகு என்ன ,நாமும் புகை பிடித்தால் என்ன என்று இளைஞர்கள்**யோசித்து ,புகை பிடிக்க ஆரம்பித்தால்* இளைய சமுதாயம் கேட்டு சீரழிவதற்கு நாமே வழிகாட்டுவது போலாகும் .இந்த தவறான உணர்வுகள் வருவதற்கு நாமே காரணமாக இருந்துவிட கூடாது .என்ன செய்வது .வேறு மாற்றுவழி ஏதாவது இருந்தால் சொல்லுங்கள் என்றார் எம்.ஜி.ஆர். அப்போது இயக்குனர் சிகரெட்டை பற்ற வைத்த* பின்னர் வாயருகே கொண்டுபோகும் போது* *அந்த காட்சி ரத்தாகும் .பின்னர் மீண்டும் கையில் வைத்திருப்பது , புகை மட்டும் சில நொடிகள் வந்துகொண்டிருக்கும் அப்போது மனசோர்வு ஏற்படும் காட்சியில் அதை தூக்கி எறிந்துவிடுவது .இந்த காட்சியில்தான் கூண்டுக்கிளியில் எம்.ஜி.ஆர். சிகரெட்டை வேண்டாவெறுப்பாக பயன்படுத்திய காட்சியை படமாக்கினார்கள் .
குடியிருந்த கோயில் படத்தில் மீண்டும் எம்.ஜி.ஆர். சிகரெட் பிடிப்பது போல* காட்சி அமைக்க இயக்குனர் திட்டமிட்டார் .* எம்.ஜி.ஆர். திட்டவட்டமாக மறுத்துவிட்டார் . அந்த காட்சியை குற்றவாளி எம்.ஜி.ஆர். சென்னையில் பல இடங்களில் போலீசாரிடம் இருந்து தப்பித்து காரில் செல்வது போல கையில் சிகரெட் வைத்திருந்து பயணிப்பது போல மாற்றி அமைத்தார்கள் . பிற்காலங்களில் அந்த மாதிரி காட்சிகள் அமைப்பதையும் தவிர்த்துவிட்டார் ஏனென்றால் நான் ஏற்கனவே சொன்னது போல இயக்குனர் ஸ்ரீதரிடம் எம்.ஜி.ஆர்.சொன்ன அந்த காட்சிதான் நினைவுக்கு வருகிறது .மற்றவர்கள் எல்லாம் பொழுது போக்கிற்க்காக சினிமாவில் நடிப்பார்கள்.* இந்த எம்.ஜி.ராமச்சந்திரன் பொழுதுபோக்கிற்காக நடிக்காமல் மற்றவர்களுக்கு* பாடமாக இருப்பதற்காக பொறுப்புணர்வோடு நடிக்கிறேன்**ஆகவே உங்கள் படத்தில் இப்படிப்பட்ட காட்சிகளில் நான் நடிக்க மாட்டேன் என்று படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு வந்தவர்தான் எம்.ஜி.ஆர். அவரிடத்தில் ,பொது மக்கள், இளைஞர்கள் கற்று கொள்ள வேண்டிய பாடம் நிறைய இருக்கிறது .**
திரு.துரை பாரதி*: தக்க சமயத்தில் அவர் ஒரு குருவாக, துணையாக*,ஒரு வழி காட்டியாக கூடவே இருந்தார் .திடீரென*நம்மை*விட்டு பிரிந்து சென்றது ,மறைந்தது*அனைவருக்குமே மிகவும் துரதிர்ஷ்டம் .அவர் மட்டும் நம்மிடையே இருந்திருந்தால் என்று பல நேரங்களில் நினைத்திருப்போம் அல்லவா ,அது பற்றிய உங்கள் கருத்து* என்ன .
திரு.லியாகத் அலிகான்*: எம்.ஜி.ஆர். அவர்கள் இல்லாமல் இருக்கிறார் .அவர் நம்மிடையே இல்லை என்ற வார்த்தைகளை*கிராமத்து*மக்கள் இன்னும் நம்ப தயாராக* இல்லை .இன்னும் அவர்கள் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். படத்தை வைத்து கொண்டு*அண்ணனாகவோ,தம்பியாகவோ, மகனாகவோ , நினைக்க கூடிய*மூத்த மக்கள், நடுத்தர வர்க்கத்தினர் , சில இளைஞர்கள் இருக்கிறார்கள்*ஒரு விஷயம் என்னவென்றால்,நானே என்னை*பற்றி பெருமையாக பேசி கொள்ள கூடாது .நான் கதாநாயகனாக* ஏரிக்கரை*பூங்காற்றே* என்ற படத்தில்*நடிக்கிறபோது .புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். படத்தையும், என் தந்தையார் படத்தையும் வைத்துதான்*பூஜை போட்டேன் .பிற்காலத்தில் கூட*எப்போதும்*எம்.ஜி.ஆர் அவர்களின்*படத்தை*வைத்துக்கொண்டு இருப்பேன்*குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் திருப்பூர்*மணிமாறன் அவர்கள் சென்னையில் வசித்தபோது கடவுள்*படங்கள் நிறைய வைத்திருப்பார் .அந்த தெய்வங்களுக்கு நடுவில் எம்.ஜி.ஆர். படத்தையும் வைத்திருந்தார் .என்னை*அழைத்து* சென்று*அதையும் காட்டினார் .அவர் மறைந்துவிட்டதாகவே நினைக்கவில்லை . இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறார் என்று நம்பக்கூடிய ,வணங்கக்கூடிய லட்சக்கணக்கான மக்கள், குடும்பத்தினர் இன்றைக்கும்* இருக்கிறார்கள் . எல்லோருக்கும் ஒரு உந்துசக்தியாக அவர் இருக்கிறார் .நீங்கள் பல நேரங்களில் எம்.ஜி.ஆர். நினைவிடம்*சென்று*பார்த்தீர்களேயானால்*ஆயிரக்கண க்கான மக்கள் தேங்காய் உடைத்து, சூடம் காட்டி ,மாலையிட்டு அவரை*வணங்கி, வழிபடுபவர்கள்* இருக்கிறார்கள் .நான் ரஷ்யாவிற்கு சென்றபோது ,லெனின்கிரேடு* என்கிற*இடத்தில*லெனின்*அவர்களின் உடலை*அப்படியே பாடம் செய்து* வைத்திருப்பார்கள் .அவர் உடலை*பார்க்கும்போது அவர் தூங்குவது போலத்தான்* நான் உணர்ந்தேன் . அவர் இறந்து பல வருடங்கள் ஆகிய காரணத்தால் அவர் கைகளின் தோற்றத்திற்கும் , உயிரோடு இருப்பவர்களின் கைகளுக்கும் வித்தியாசம் இருப்பதை* காண முடிந்தது .அந்த நினைவிடத்தில் மணமாகிய*நூற்றுக்கணக்கான ஜோடிகள்*வந்து அவரிடம்*ஆசிர்வாதம் பெற்று கொள்வது போல நடந்து கொள்வதை கண்டேன் .அதே போல புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.நினைவிடத்தில் நூற்றுக்கணக்கான ஜோடிகள்*,திருமணம் செய்து கொண்டு வந்து ஆசிர்வாதம் பெற்று கொள்ளும் காட்சியையும் நான்* பலமுறை*பார்த்திருக்கிறேன் . லெனின் படத்தை போல புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். படம் வருவது போல ஒரு காலண்டர் தயார் செய்து* முன்னாள் அமைச்சர் திரு.வி.வி.சாமிநாதன்* எம்.ஜி.ஆர். அவர்களிடமே அதை காண்பித்தபோது புரட்சி தலைவர்* மெய்சிலிர்த்து போனார் என்று சொல்வார்கள்அந்த அளவிற்கு*அவரது*கொள்கைகள் பொதுவுடைமை கொள்கைகளாக இருந்தன*.
நீங்கள் நாடோடிமன்னன், சக்கரவர்த்தி திருமகள், மதுரை வீரன் ,மலைக்கள்ளன்,* அலிபாபாவும் 40 திருடர்களும் போன்ற படங்களில் அவர் சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை போதித்தார் .* liberty, equality, fraternity*என்று சொல்வார்கள் .சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்று சொல்லுகிறபோதுதான் அதை அவர் தன்னுடைய வாழ்க்கையில் கடைபிடித்தவர் .யாரையும் அவர் உதாசீனப்படுத்தியதில்லை . எந்த மதத்தை சார்ந்தவரையும்* வித்தியாசமாக பார்த்ததில்லை .* இஸ்லாமியரை போல அவர் தோற்றம் கொண்டதுண்டு . இந்துக்களை போல வாழ்ந்ததுண்டு .* கிறிஸ்துவர்களை போல ,ஏன் ஏசுபிரான்*போல வேடம் ஏற்று நடிக்கவும்* தயாராக இருந்த*தலைவர்தான் .* சமத்துவ சிந்தனை* உடைய எம்.ஜி.ஆர். அவர்கள்*அண்ணாயிசம் என்ற கொள்கையை அறிமுகம்* செய்தார் .* அண்ணாயிசம் என்றால் என்ன என்று கருணாநிதி கேட்டார் .சோஷலிசம், கேபிடலிசம் ,கம்யூனிசம் எல்லாம் சேர்ந்ததுதான் அண்ணாயிசம் என்று விளக்கம் கொடுத்தார் . உடனே தி.மு.க. வினர் கிண்டல் செய்தார்கள் .இந்த தத்துவத்தை புரிந்துகொள்ள மிகவும் சிரமபட வேண்டும் என்று சொல்கின்ற நேரத்திலே ,நான் மேடையிலே*எம்.ஜி.ஆர்.அவர்களை வைத்துக்கொண்டே சொன்னேன்*,அதாவது உடுமலைப்பேட்டை அருகே ஒரு இடத்தில*சிவசுப்பிரமணிய கவுண்டர் , கோவிந்தசாமி கவுண்டர் ஆகியோரின்* தலைமையில்,முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில் பேசும்போது*அண்ணாயிசத்தை பற்றி கிண்டல் செய்து பேசுகிறார்கள் .ஆனால் கேபிடலிசம், சோஷலிசம், கம்யூனிசம் ,மூன்றும் சேர்ந்த*முதலாளித்துவம், சமத்துவம் ,கம்யூனிசம் ,பொதுவுடைமை, சமத்துவம் சேர்ந்ததுதான் அண்ணாயிசம் என்று நீங்கள் சொல்லுகிறீர்கள் .இதை தத்துவ குழப்பம் என்று தி.மு.க.வினர் சொல்கிறார்கள் .இன்றைக்கு இந்திய நாடு செல்லுகின்ற வழியே* உங்களுக்கு இந்த தத்துவத்தை*வழிநடத்துகிறது .ரஷ்யாவில் உள்ள பொது உடைமை, அமெரிக்காவில் உள்ள முதலாளித்துவம், உலக நாடுகளில் உள்ள சமத்துவம் எடுத்து கொள்வதுதான் இந்திய நாட்டின் கொள்கையாக இருக்கிறது .இதற்கு*மத்திய அரசு தருகின்ற வார்த்தை என்னவென்றால் தங்க வழி . அந்த வழியில்தான் மத்திய அரசு நடை போடுகிறது .என்பதை அறியாமல், புரியாமல் தி.மு.க.வினர் அண்ணன் எம்.ஜி.ஆரை கிண்டல் செய்கிறார்கள் .கேலி*பேசுகிறார்கள் .புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் பிராக்ட்டிகளாக வாழக்கூடிய ஒரு மாபெரும் தலைவர் .அந்த தலைவரின் வெற்றிக்காக பொதுமக்களே நீங்கள் இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று பேசியபோது புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களே ,எழுந்து*வந்து என் தோளை* தட்டி பாராட்டிய*நிகழ்வுகள் எல்லாம் இப்போது என் நினைவுக்கு வருகிறது .இவ்வாறு, திரு.லியாகத் அலிகான்* பேட்டி அளித்தார் .
அந்த காலத்தில் மிக பெரிய அறிஞர்கள், மகோன்னதமான தலைவர்கள் இருந்திருக்கிறார்கள் .ஆனால் வலம்புரி ஜான் அவர்கள் சொல்வது போல மக்கள் தொகையை கணக்கெடுக்க வேண்டும் என்றால்* மலை போல இலை வேண்டும்*ஆனால் மனிதர்களை கணக்கெடுக்க வேண்டும் என்றால் மந்தார*இலை போதும்* என்று .அந்த மந்தார இலையில்*எழுதக்கூடிய ஒரு 10, 15 பேர்களில் நிச்சயமாக*எம்.ஜி.ஆர். என்கிற பெயர் இடம் பெறும்*. அவர் ஒரு சரித்திரம் .அந்த சரித்திர சாதனை*தொடர* அவர் வகுத்த பாடங்களை, படிப்பினைகளை பயில்வோம்*அடுத்த அத்தியாயத்தில் .
நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள்*/காட்சிகள் விவரம்*
-----------------------------------------------------------------------------------
1.சிரித்து வாழ வேண்டும் - உலகம் சுற்றும் வாலிபன்*
2.நெஞ்சம் உண்டு ,நேர்மை உண்டு , ஓடு ராஜா -என் அண்ணன்*
3.பாடும்போது*நான் தென்றல் காற்று*- நேற்று இன்று நாளை*
4.நாடோடி மன்னன் படத்தில் வசனம் பேசும் எம்.ஜி.ஆர்.*
5.திரு.கா. லியாகத் அலிகான் பேட்டி*
6.சுந்தரம் - ரஞ்சித் வேடங்களில் எம்.ஜி.ஆர். -நினைத்ததை* முடிப்பவன்*
-
மக்களின் சிந்தனையாளர் எம்.ஜி.ஆர் :
நடிகர் அசோகன் நம்முடைய புரட்சித் தலைவரை பற்றி கூறியது :
திரைப்படங்களிலே நடிப்பவர்கள் சாதாரணமாக நாட்டைப் பற்றியோ, மக்களைப் பற்றியோ சிந்திப்பவர்கள் மிகக் குறைவாகவே காணப்படுவார்கள். அவர்கள் விரும்புவதெல்லாம் அதிகப் படங்களில் நடித்து நிறைய பணமாக்க வேண்டும். தேவைக்கு மேல் பணம் சேர்ந்து இருந்த போதிலும் இன்னும் அதிகமாகவே சேர்க்க தமது கவனத்தை செலுத்துவார்கள். எனவே நாட்டைப் பற்றியோ, மக்களைப் பற்றியோ அவர்களால் சிந்திக்க முடியாது. மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள் சிறந்த நடிகர் என்ற பாராட்டைப் பெற்று இருந்தாலும் அவரது சிந்தனை எல்லாம் பாமர மக்களின் நல்வாழ்வு நம் நாட்டின் முன்னேற்றம் போன்றவையாகும். குறிப்பாக தமிழகத்தில் வாழும் பாமர மக்களின் வாழ்வில் ஏதாவது தீங்குகள் நேரிட்டாலும், பயங்கர புயல் வீசுமேயானாலும் அம்மக்களை காப்பதில் மிகத் தீவிரமாகப் பங்குகொண்டு லட்சோப லட்சம் பணத்தை வாரி வழங்கி காக்கப்பட்ட கொடை வள்ளல் எம்.ஜி.ஆர் ! எனவேதான் அவருக்கு மக்களே மக்கள் திலகம் என்ற உயர்ந்த புகழை சூட்டியுள்ளனர்.
கொடை வள்ளல் எம்.ஜி.ஆர் புகழ் வாழ்க.........vr...
-
மக்கள் திலகம் எம்ஜிஆர் ரசிகன்
பாய்ஸ் கம்பெனி நடிகராய் தொடங்கி, நாடக நடிகராய் மலர்ந்து, திரைப்படக் கதாநாயகனாய் உயர்ந்து, அரசியல் தொண்டராய் மாறி முதலமைச்சராய் முடிசூடி மக்களின் மனங்களில் இன்று வரை அகற்ற முடியாத பிம்பமாய் ஒளிரும் எம் ஜி ஆர் என்ற மாமனிதன் மக்கள் திலகமாய், புரட்சி நடிகராய், புரட்சித் தலைவராய், முதலமைச்சராய் என் மனதிலும் என்றும் நிலைத்திருப்பார்.
எம்ஜிஆர் ரசிகன் என்பதில் எனக்கு மிகவும் பெருமை.
எம்.ஜி.ஆர். எனும் மூன்றெழுத்து…
தமிழ் என்பது மூன்றெழுத்து.. சினிமா என்பது மூன்றெழுத்து.. அந்த தமிழ் சினிமா உலகில் தனக்கென தனி இடம் பிடித்த மூன்றெழுத்து..எம்.ஜி.ஆர். என்னும் சிகரம். அந்தச் சிகரத்திற்கு அறிமுகம் தேவையில்லை.
இளம் சூரியன் உந்தன் வடிவானதோ..
செவ்வானமே உந்தன் நிறமானதோ ..
பொன் மாளிகை உந்தன் மனமானதோ ..
என்ற பாடலுக்கேற்ப மாளிகை போன்ற மனதை உடையவர் எம்.ஜி.ஆர்.
திரையில் அவர் நடித்த படங்களில் இடம்பெற்ற பாடல்களில் கருத்தாழம் நிறைந்தது. ஏதாவது ஒரு நல்ல விஷயத்தை மக்களுக்கு பாடல் மூலம் பறை சாற்றிக் கொண்டிருந்தார். அது 2 வயது குழந்தை முதல் 100 வயது வரையிலான வயோதிகர் வரை சென்று சேர்ந்தது.
விழி போல எண்ணி நம் மொழி காக்க வேண்டும்..
தவறான பேர்க்கு நேர் வழி காட்ட வேண்டும்..
என்ற வரிகளுக்கேற்ப தமிழினத்திற்காக பாடுபட்ட ‘மன்னாதி மன்னன்’ .. அவர்.
அவரது பாடல்களைக் கேட்டாலே புத்துணர்வு பிறக்கும். அது காதல் பாடல்களாக இருந்தாலும் சரி.. நல் அறிவுரை கூறும் பாடல்களாக இருந்தாலும் சரி.. எதிர்மறை எண்ணங்களே இல்லாது பார்த்துக் கொண்டிருந்தார். பாடல்கள் மட்டுமல்லாமல் அவருடைய படத்தின் பெயரும் எதிர்மறை எண்ணத்தைத் தவிர்த்து .. உதாரணம் – தாய் சொல்லை தட்டாதே.. மன்னாதி மன்னன், நல்லவன் வாழ்வான், தர்மம் தலைகாக்கும், காவல்காரன், ஒளி விளக்கு, இன்னும் பல..
இந்தப் பெயர்களால் ஒரு விதமான நம்பிக்கை மனதில் தோன்றுகிறதல்லவா.. தானும் உயர்ந்து தன்னை சார்ந்தவரையும் உயர்த்துபவன் தான் தலைவன். அந்த வகையில் எம்.ஜி.ஆர். ஒரு உண்மையான தலைவன்.
எதோ நடித்தோம், பணம் சம்பாதித்தோம், மறைந்தோம் என வாழும் நடிகர்களுக்கு மத்தியில் அவரின் சிந்தனையே சொல்லானது.. சொல்லே செயலானது.. அந்த செயலும் புனிதமானது. அந்த வகையில் அவர் புத்தனாகவும் யேசுவாகவும் கண்ணில் தென்பட்டார்.
Courtesy Net....VND...
-
வாரிக் கொடுக்கும் வள்ளல்
பாரி வழி வந்த கலைஞர்
இல்லை என்று கைவிரித்துப் பார்த்ததில்லை
இவர் ஏழை துயர் துடைக்க சளைத்ததில்லை
வானத்தில் சிதறிக் கிடக்கும் கோடிக்கணக்கான நட்சத்திரங்களில் ஒன்றே ஒன்றுக்குத்தான் சிறப்புண் . இருளகற்றிப் பிரகாசிக்கும் வீடி வெள்ளிக்குத் தான் பெருமையுண்டு.
சிப்பியில் விளையும் எல்லா முத்துக்களும் சிறந்து விடுவதில்லை. ஒன்றிரண்டு மட்டுமே விலைக்கு அடங்காமல் மதிப்புக்கு நிற்காமல் முற்றி வினைந்து முழுமை பெறகிறது.
வைரத்தின் வரிசையிலும் அப்படித்தான்.
நம்மில் நடமாடும் கோடிக்கணக்கான உயிர்களில் விடி வெள்னியாக . முற்றி விளைந்த முத்தாக, வைரமாக வாழ்த்து காட்டுகிறவர்கள் எண்ணிக்கை அளவில் இல்லை . சட்டிக்காட்ட மட்டுமே அபர்வமாகச் சிலர் உண்டு.
அவர்களின் செயல்களைத் தான் வரலாறு தான் வரலாறு தன் இதயத்தில் வடித்து வைத்துக்கொண்டு காட்டிப் பெருமைபட்டுக் கொண்டிருக்கிறது.
பற்றிப் படரக் கொம்பில்லாமல் துவண்டு கொண்டிருந்த கொடிக்குக் தேர்கொடுத்த பாரி, வறுமையிலும் செம்மையாக நடந்து கொண்ட குமணன் இவர்களெல்லாம் வள்ளல் தன்மைக்கு , கொடயின் சிறப்புக்கு வழிகாட்டியாய் அமைந்தனர்.
இவர்களின் அடிச்சுவட்டில் எல்லோருடைய பாதங்களும் பதித்துவிடவில்லை. கலை உலகப் பொறுத்தவரை தனக்கென எதுவும் சேமித்துக் கொள்ளாமல் வந்ததையெல்லாம் ஏழைகளின் துயர் துடைக்க பிறர் கேட்காமலேயே வாரி வழங்கி, வழிகாட்டியவர் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன்.
கொடைத் திறனுக்கு அவர் கோபுரம் அமைத்துவிட்டுப் போனார். அந்தக் கோடாக்கின் கலசமாக இன்று விளங்குபவர் புரட்சி நடிகர் எம்.ஜி. ஆர். எங்கே துயர் இருக்கிறதோ, அங்கே இவர் துணைநிற்பார் துயர் துடைப்பார்!
மக்களைப் பற்றி ஒரு அரசுக்கு இருக்க வேண்டிய கவல தனிப்பட்ட இவர் உள்ளத்தில் எப்பொழுதும் குடைந்துகொண்டே இருக்கும் . சென்னையைச் சுற்றியுள்ள சேரிகள் எப்பொழுது அகற்று குடிசைகள் இருக்கு மிடத்தில் நல்ல குடில்கள் அமைத்து கொடுப்பது. அவர் மேடையில் பேசும்போது மட்டுமல்ல, தனிமையில் இருக்கும் பொழுதுகட இதே சிந்தனயில் அவர் எண்ணம் இழுக்கப்பட்டிருப்பதைக் காணலாம் .
மழை பெய்து கொண்டிருக்கிறது. படப்பிடிப்பிற்காக எம்.ஜி.ஆர் . காரில் சென்றுகொண்டுஇருக்கிறார். கொட்டும் மழை மேனியில் வழிய ரிக்ஷா ஓட்டிக் கொண்டு வருகிறான் ஒரு தொழிலாளி . நாம் காரில் பாதுகாப் பாகச் செல்கிறோம். அவன் மழையில் நனைந்துகொண்டு வருகிறான். காரில் செல்லும் வசதி அவனுக்கு ஏற்படாவிட்டாலும் மழையிலிருந்து தன்னைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டாமா. இந்தச் சின்ன உதவியைக்கூட அவனுக்கு நம்மால் செய்து கொடுக்க இயலாதா?
இரண்டு திங்களில் அதை செயல்படுத்தி பேரறிஞர் அண்ணா தலைமையில் ஆயிரக்கணக்கான ரிக்ஷா தொழிலாளர்களுக்கு மழைக்கோட்டு வழங்கினார். ...sb...
-
"நீரும் நெருப்பும் " காவியம் மிகப்பெரிய வெற்றியை பதித்தது ஏ சென்டர்களில்*
பி சென்டர்களிலும்*
சி சென்டர்களிலும் மிகப்பெரிய ஓட்டம் கண்டு வசூலையும் பெரிய அளவில் வெற்றி கொண்டது. பல நடிகர்களின் 100 நாள் ஓடிய வசூலை குறைந்த நாளில் வென்று காட்டிய காவியம் நீரும் நெருப்பும் ஆகும். தமிழகத்தில் 22 திரையரங்குகளில் 50 நாட்களை கடந்து இலங்கையில் பெரிய அளவில் வெற்றி பெற்றது.
சென்னையில் நீரும் நெருப்பும் தேவிபாரடைஸ்*
67 நாள் : 4,16,715.90
ஸ்ரீகிருஷ்ணா
67 நாள் : 2,65,278.45
மேகலா
53 நாள் : 1,87,112.65
ஒடிய மொத்த நாள் : 187
மொத்த வசூல் : 8,69,107.00
++++++++++++++++++++++++
சென்னையில்
100 நாள் ஒட்டபட்ட
ஞானஒளி, தவப்புதல்வன்
குலமா குணமா போன்ற படங்களின் வசூலை முறியடித்த காவியம் நீரும் நெருப்பும்...
தெய்வமகன்* ( சா/ கி/புவ)
300 நாள் வசூல் : 8,71,870.76
நீதி*
99 நாள் வசூல்: 9,91,013.41
எ.வந்தாள்*
300 நாள் : 10,21,074.00
1973 பாரத விலாஸ்
சா/கி/புவ (75 நாள்)
225 நாள் வசூல் : 9,84,577.10
நீரும் நெருப்பை விட*
117 நாட்கள் அதிகம் ஒடி...
சொர்க்கம் (304 நாள்)
4 தியேட்டரில் ஒடி முடிய
வசூல் : 10,73,183.00
இப்படி குறைந்த நாளில்*
அதிக வசூலை ஏற்படுத்திய காவியம் நீரும் நெருப்பும் ஆகும்.
50 லட்சம் செலவில் எடுக்கப்பட்ட தர்மம் எங்கே டப்பா படம் படுத்தோல்வி காண்டது
3 லட்சம் கூட வசூலாகாது போண்டியானது.
சென்னை தேவிபாரடைஸ்*
67 நாள் வசூல்...4,16,715.90
தர்மம் எங்கே
ஒடியன் 41 நாள்
மகாராணி 35 நாள்
மேகலா 42 நாள்
ராம் 34 நாள்
வசூல் :3,78,112.00
152 நாள் ஒட்டபட்டும் மேலே
நீரும் நெருப்பும் 67 நாள் ஒடிய*
4 லட்சத்தை கடக்க முடியவில்லை..
மேலும் சாதனை தொடரும்......... ராஜூ.
-
மதுரை சென்ட்ரல் திரையரங்கில்12 வாரங்கள் சாதனை படைத்தது. வசூல் கிட்டத்தட்ட மூன்று லட்சத்தை எட்டியது. அதேபோல திருச்சி சேலம் ஈரோடு கோவை மாநகரங்களில் எல்லாம் சாதனையை படைத்தது. புதுச்சேரியில் மற்ற நடிகர்களின் நூறாவது நாள் படங்களை இங்கு தவிடு பொடியாக்கியது. 54 நாட்கள் ஓடி அதிக வசூலை தந்தது நீரும் நெருப்பும் காவியம்.
50 நாள் திரையரங்குகள்...
++++++++++++++++
நெல்லை மதுரை விருதுநகர் திண்டுக்கல் சேலம் திண்டுக்கல் ஈரோடு கோவை திருச்சி தஞ்சை கும்பகோணம் மயிலாடுதுறை கரூர் பட்டுக்கோட்டை வேலூர் புதுச்சேரி ஆகிய இடங்களில் 50 நாட்களை கடந்து சரித்திரம் படைத்த காவியம் நீரும் நெருப்பும் ஆகும்.
1971 ஆம் ஆண்டு வெளியான மற்ற நடிகர்களின் திரைப்படங்கள்
ஓடியதைவிட அதிக திரையரங்குகளில்
50 நாட்களை வெற்றிகொண்ட காவியம் நீரும் நெருப்பும் ஆகும்
பாபு திரைப்படம் 13 அரங்கில் மட்டுமே
50 நாட்கள் பட்டிக்காடா பட்டணமா 13 அரங்கில் 50 நாட்கள்
ராஜா திரைப்படம்
13 அரங்கில் 50 நாட்கள் நீதி படம் 11 அரங்கில் 50 நாட்கள்
இப்படி இந்த படங்களை விட அதிகமான திரை அரங்குகளில்
50 நாட்களை வெற்றி கொண்ட காவியம்
நீரும் நெருப்பும் திரைப்படம் ஆகும்.
சென்னையில் பல திரைப்படங்களின் வசூலை வென்று காட்டியது.
தெய்வமகன் விளையாட்டுப் பிள்ளை ராமன் எத்தனை ராமனடி பாதுகாப்பு அருணோதயம் குலமா குணமா இரு துருவம் சுமதி என் சுந்தரி தேனும் பாலும்
மூன்று தெய்வங்கள் ஞான ஒளி
தர்மம் எங்கே தவப்புதல்வன்
திரைப்படங்களை விட மக்கள் திலகத்தின் நீரும் நெருப்பும் திரைக்காவியம் கிட்டத்தட்ட 160 தினங்களில் 8 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேல் வசூலை வாரிக் கொடுத்தது.
இலங்கை மாநகரில் மகத்தான வெற்றியைப் படைத்தது...
மேலும் தொடரும்...........ur...
-
இந்தியாவின் தனிப்பெரும் கதாநாயகன்
நமது மக்கள் திலகம் ...
காவியங்கள் திரையிடப்படும் அனைத்து அரங்கிலும் வெற்றியை ...
சாதனையை படைத்துள்ளது.
வேட்டைக்காரன்
சென்னையில்..
வெளியான 14.01.1964 அன்றே ஒரு சாதாரண நடிகரை மட்டும் வைத்து படம் எடுத்தால் போனி ஆகாது என நினைத்து ...
என்.டி. ராமாராவ் என்ற நடிகருக்கு கிருஷ்ணன் வேடம் தரபட்டது.
அவரையும் சேர்த்து எடுக்கப்பட்ட வண்ணபடமே
அந்த படம்.....
வேட்டைக்காரன்
சித்ரா, பீராட்வே, மேகலா
101 நாட்கள்...
ஆனால் இந்த படம் சாந்தியில் 100 நாள் ஒடிய வசூல் படுகேவலமாக இருக்கிறது...
மேலும்... பிரபாத்...சயானி
100 நாள் உண்மையில் ஒடீயதா..
அதை முதலில் கண்டு பிடிக்க வேண்டும்...
சென்னையில் 5 லட்சம் கூட கண்டிப்பாக போலி படம் வசூல் படைத்திருக்க வாய்பில்லை...
வேட்டைக்காரன் 3 அரங்கில் 6 லட்சத்திற்கு மேல் வசூல் ஆகியிருக்கும்...
சேலத்தில்...
நியுசினிமா 107 நாளும்
சித்தேஸ்வரா 42 நாட்களும் ஒடி மொத்தம் 149 நாள் ஒடியது.
போலி படம் 50 நாள் தான் ஒடியது.
அடுத்து வேட்டைக்காரன் 20 அரங்கில் 50 நாட்கள் ஒடியது...
மதுரை 84
திருச்சி 91
கோவை 77
ஈரோடூ, ஆத்தூர், வேலூர்
தி.மலை, பாண்டி, தஞ்சை, குடந்தை, மாயூரம், கரூர், ப.கோட்டை, விருது நகர்,
திண்டுக்கல், நெல்லை
காஞ்சிபுரம், ஆகிய இடங்களில் 50 நாட்களை கடந்தது...
வேட்டைக்காரன் செலவு
10 லட்சம்....
முதல் வெளியீட்டில் ஒடி முடிய 40 லட்சம் வசூல்...
10 லட்சம் போட்டு மேலும் 10 லட்சம் லாபத்தை தேவர் பிலிம்ஸ் பெற்றது.
இது 6மாதத்தில் மட்டும்..
அடுத்தடுத்து 5 ஆண்டுகளில் விற்பனை பன்மடங்கு லாபமாகும்.
7ஏரியா....
1969...1974...1979....1984.
1989....1994....1999...2004
2009... 2014...2019...
இப்படி ஒவ்வொரு 5 ஆண்டிலும் வேட்டைக்காரன் பெற்ற வசூல்...ஒவ்வொரு மாவட்டத்திலும் கைமாறி...கைமாறி போய்
எத்தனையே விநியோகஸ்தர்கள் லாபம் பெற்றதை... போலி க...படம் பெற்றதுண்டா...
1976 ல் சென்னையில் 7அரங்கு வெளியிடப்பட்டது
1982 ல் 5 அரங்கு வெளியிடப்பட்டது.
1990 முதல் 2019 வரை சென்னை சரவணா..
பாலாஜியில் மட்டும் 22 முறை வெளியிடப்பட்ட வசூல் பேரரசின் வேட்டைக்காரன்...
ஒரே தியேட்டர் இப்படி என்றால்... தமிழகமெங்கும் வேட்டைக்காரன் கடந்த 55 ஆண்டில் எப்படி என்பதை யூகித்துக் கொள்ளுங்கள்....
கறுப்பு வெள்ளை படங்களின் தொடர் வெளீயீட்டின் ஒரே திரையுலக சக்கரவர்த்தி..
இந்திய திரைவானில்
மக்கள் திலகம் மட்டுமே..
எல்லா ஏரியாவிலும் 100 க்கு 100 மார்க்கை வசூலில் படைப்பவரிடம்
4,5 தியேட்டரை மட்டுமே வைத்து ஓதும் பெயில் மார்க்கை பெறும் சாதாரண நடிகரின் படத்தை தயவு செய்து ஒப்பிட வேண்டாம் சார்.....
எத்தனை எங்க வீட்டுப்பிள்ளை தலைவரின் சவுக்கடி கொண்ட பதிவை தாங்கள் கொடுத்தாலும்
உறைக்குமா என்பது தெரிவில்லையே சார்..
மேலும் தங்கள் பதிவை விரைவில் எதிர் பார்க்கிறேன்... Ur...
-
கர்ணன் படத்தின் மதுரை தங்கம் வசூல் விவரம் 100 நாள் தேய்த்து ஓட்டியும் மிகவும் குறைவாக இருப்பதால் இப்போது சிவாஜி கணேசன் ரசிகர்கள் வெட்கப்பட்டு ஒரு டெக்னிக் கடைபிடிக்கிறார்கள். வசூல் பகுதியை மறைத்துவிட்டு 100 நாள் என்று உள்ள மேல் பகுதியை மட்டுமே போடுகிறார்கள்.
அதெல்லாம் இருக்கட்டும். இவ்வளவு விளக்கமே வேண்டாம். சென்னை மாநகராட்சி தேர்தல் பிரச்சாரத்தில் மக்கள் திலகம் பிரச்சாரம் செய்ய வந்தால் ஓட்டுக்கள் அவர் பக்கம் விழும் என்பதை புரிந்து கொண்ட காமராஜர், ‘வேட்டைக்காரன் வருவான்.. ஜாக்கிரதையா இருங்க.." என்று பேசினார். சினிமா பார்க்காத காமராஜர் மனதிலேயே வேட்டைக்காரன் பதிந்து விட்டார் என்றால் அவரின் வெற்றி வீரியத்தை உணர்ந்து கொள்ளலாம். ‘கர்ணன் (??????) வருவார், காங்கிரசுக்கு ஓட்டு போடுங்க’ என்று காமராஜர் பேசவில்லை. சிவாஜி கணேசனின் செல்வாக்கு அவருக்குத் தெரியும். அவரது ராசியும் தெரியும். அதனால்தான் கடைசி வரை கட்சியில் பெரிய பதவி கொடுக்காமல் சிவாஜி கணேசனை ஒதுக்கியே வைத்திருந்தார். இருந்தாலும் விதி யாரை விட்டது. 1975 அக்டோபர் 1 ம் தேதி சிவாஜி கணேசன் வீட்டுக்குப் போய் பிறந்த நாள் வாழ்த்து சொன்னார். மறுநாள் மண்டையைப் போட்டார். பின்குறிப்பு: எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கடைசியாக தனது யூ டியூப்பில் சிவாஜி கணேசன் பற்றி பேசினார். அதுதான் அவர் கடைசி பதிவு. விதி வலியது......... Swamy...
-
#திமுகவை விட்டு #எம்ஜிஆர் நீக்கப்படுவதற்கு இரண்டு தினங்களுக்கு முன்.....
1972, அக்டோபர் 8ம் தேதி திருக்கழுகுன்றத்திலும், பின்னர் சென்னை ஆயிரம் விளக்கு பகுதிலும் நடந்த தி.மு.க. கூட்டங்களில் எம். ஜி. ஆர்.பேசியது... "எம். ஜி. ஆர்., என்றால் தி. மு. க.; தி. மு. க என்றால்
எம். ஜி. ஆர்." என்று சொன்னேன். உடனே ஒருவர், 'நாங்கள் எல்லாம் தி. மு. க., இல்லையா?' என்று கேட்டார். நான் சொல்கிறேன், நீயும் சொல்லேன்... உனக்கும் உரிமை இருக்கிறது !
முன்பு ஒரு முறை காமராஜர் அவர்களை `என் தலைவர்` என்றும் அண்ணா அவர்களை `வழிகாட்டி' என்றும் சொன்னேன். தலைவர்கள் பலர் இருப்பார்கள். ஆனால் கட்சிகளுக்கு கொள்கைகளைத் தருகிற வழி காட்டி ஒருவர்தான் இருக்க முடியும். அண்ணா அவர்கள் தான் தி.மு.க., வின் வழிகாட்டி. காங்கிரசுக்கு மகாத்மா காந்தி தான் வழிகாட்டி.
கழக நண்பர்களுக்குச் சொல்கிறேன், நான் மக்களை சந்திக்கிறவனே தவிர, தலைவர்களைத் தேடிப் போய், வாழ்க்கையை உயர்த்திக்கொள்ள வேண்டிய நிலையில் என் தாயும், தமிழகமும், அண்ணாவும் வைக்கவில்லை.
நான் யாருக்கும் பயந்து கொள்கையை மாற்றிக் கொண்டவன் அல்ல. அப்படிப்பட்ட தேவையும் இல்லை. தேர்தல் நேரத்தில் "தி.மு.க.,வுக்கு வாக்குத் தாருங்கள். இன்னென்ன காரியங்களை நிறைவேற்றுவோம், ஊழல் இருக்காது, நேர்மை இருக்கும்" என்று சொல்கிறோம். அதெல்லாம் கழகத்திலும் இருக்க வேண்டும் என்று விரும்புவதற்கு எனக்கு உரிமை இல்லையா?
மந்திரிகள், சட்டசபை, பார்லிமென்ட் உறுப்பினர்கள் கணக்குக்காட்ட வேண்டும் என்று சொல்கிறோம். கணக்கு அங்கே
காட்டிக்கொண்டிருக்கிறோம். ஆனால் இவர்களின் சொந்தக்காரர்களுக்கு எவ்வளவு சொத்து இருக்கிறது என்ற கணக்கை தி.மு.க., பொதுக்குழு ஏன் கேட்கக்கூடாது.?
ராமச்சந்திரன் சினிமாவிலும் நடிக்கிறான், சம்பாதிக்கிறான், நீ சம்பாதித்தால் அதற்கு கணக்கு காட்டு. மாவட்ட செயலாளர்கள், கிளை கழகச் செயலாளர்கள், வட்டச் செலாளர்கள் பதவிகளில் இருப்பவர்கள் குடும்பத்திற்கு வாங்கியிருந்த சொத்துக்கள் இருந்தால் கணக்கு காட்ட வேண்டும். அவை எப்படி வந்தன என்று விளக்கம் சொல்ல வேண்டும். பொதுக் குழுவில் நிறைவேற்றி அதற்காக குழு அமைத்து, அதனிடம் ஒவ்வொருவரும் தங்கள் கை சுத்தமானது என்பதை கூறி, மக்கள் முன் நிரூபிக்கலாம். நிரூபிக்க முடியாதவர்களை மக்கள் முன்னாள் நிறுத்தி, அவர்கள் தவறு செய்திருந்தால் தூக்கி எறிவோம். அண்ணாவின் கொள்கைக்கு ஊறு தேடியவர்களை எல்லாம் மக்கள் முன் நிறுத்தி தூக்கி எறிவோம்."
#இதயக்கனி எஸ். விஜயன்...
-
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 1980ல் மீண்டும் ஆட்சியை பிடித்தது முதலே
எம்.ஜி.ஆர் அரசு கலைக்கப்படும் என்ற செய்தி பரவிக் கொண்டிருந்தது..
முந்தைய ஜனதா ஆட்சியில் காங்கிரஸ் ஆளும் மாநில அரசுகள் கலைக்கப்பட்டன.
அதே வேளையில்,1980-ல் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில்
அஇஅதிமுக வெறும் 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றதால், இந்திரா காந்தி
அவர்கள் எம்.ஜி.ஆர் ஆட்சியை கலைத்தார்.
அந்த சமயம் ஆளுநரிடம் புகார் பட்டியல் ஒன்றை கொடுத்தார் கருணாநிதி .
புகார் கொடுத்த மூன்றாம் நாள் அதிமுக அரசு கலைக்கப்பட்டது.
"சவாலை சந்திக்க தயார்" என்று அறிவித்தார் எம்.ஜி.ஆர். 1980ல் மே மாதம் 28 முதல் 31 வரை தேர்தல் என அறிவிக்கப்பட்டது.
சட்டமன்ற
தேர்தலைச் சந்திக்க
விரிவான, வலுவான கூட்டணியை உருவாக்கினார் தலைவர் எம்ஜிஆர்.
ஜனதா கட்சி 60க்கு மேற்பட்ட தொகுதிகளை கேட்டதால் அதை நிராகரித்து,
இடதுசாரிக் கட்சிகளுக்கு தலா 16 தொகுதிகள், குமரி ஆனந்தனுக்கு 12 தொகுதிகள் (கா .கா .தே. க.) பழ. நெடுமாறனுக்கு 7 தொகுதிகள் அளித்து,
168 தொகுதிகளில் அஇஅதிமுக போட்டியிடும் என அறிவித்தார்.
மேலும் சில உதிரி கட்சிகள் இரட்டை இலைச் சின்னத்திலேயே போட்டியிட்டன.
தொகுதி பங்கீட்டில் அதிகம் சிக்கல்கள் இல்லை.
எம்.ஜி.ஆரின் சூறாவளி பிரசாரத்திற்கு பதில் கொடுக்க கலைஞர் கருணாநிதிக்கு நடிகர் சிவாஜி கணேசன் உதவியாக இருந்தார். நாடாளுவதற்கு கலைஞர், நடிப்பதற்கு எம்.ஜி.ஆர். என கூட்டங்களில்
சிவாஜி கணேசன் பேசினார்.
பதிலுக்கு தி.மு.க.- இ .காங்கிரஸ் அணியை சந்தர்ப்பவாத கூட்டணி என்று எம்.ஜி.ஆர்.விமர்சித்து பிரசாரம் செய்தார்.
கடந்த பாராளுமன்ற தேர்தலில் தோல்விக்கு காரணமாக சொல்லப்பட்ட இட ஒதுக்கீடு விஷயத்தில் சில மாற்றங்களை செய்தார்.
முக்கியமாக பிற்படுத்தப்பட்டோர் சலுகைக்கான 9000 ருபாய் வருமான வரம்பு வாபஸ் பெறப்பட்டது.
தவிர, பிற்பட்டோருக்கான இட ஒதுக்கேடு 31 சதவிகிதத்தில் இருந்து 50 ஆக உயர்த்த பட்டிருந்தது.
அதனால் திராவிடர் கழகத்தின் ஆதரவும் அஇஅதிமுகவுக்கு கிடைத்தது.
கூட்டங்களில் மக்கள் மத்தியில் நியாயம் கேட்டார் எம்.ஜி.ஆர்..
"நாங்கள் என்ன தவறு செய்தோம்" என்ற தலைப்பில் கேள்விகள் தயார் செய்யப்பட்டு மேடைக்கு மேடை அக்கேள்விகளையே எழுப்பினார்.
ஆட்சியில் லஞ்சம் இருக்க கூடாது என்று ஆசைபட்டேனே, அது தவறா ?
ஊழலை ஒழிக்க வேண்டும் என்று சொன்னேனே,
அது தவறா??
சட்டத்துக்கு முன், நீதிக்கு முன் கட்சி கண்ணோட்டம் இருக்க கூடாது என்றேனே அது தவறா???
கோட்டை வராண்டாவில் அரசியல்வாதிகள் நடமாடக்கூடாது என்றேனே, அது தவறா????
தவறு செய்பவர்கள் என் கட்சிகாரர்கள் என்றாலும் தயங்காமல் நடவடிக்கை எடுங்கள் என காவல்துறைக்கு சுதந்திரம் அளித்தேனே,
அது தவறா???
புயல், வெள்ளம், தீ விபத்து போன்றவற்றில் மக்கள் பாதிக்கபட்டபோது ஓடோடி சென்று உதவி செய்தேனே , அது தவறா?, எது தவறு என்று சொல்லுங்கள்,
என்ன காரணத்திற்காக ஆட்சியை கலைத்தார்கள்.?????
எம்.ஜி.ஆர். எழுப்பிய கேள்விகள் வாக்காளர்கள் மத்தியில் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தின..
தமிழ் மக்களே,. நாடாளுமன்ற தேர்தலில் நீங்கள் தந்த தீர்ப்பு தவறு என்று நினைத்தால் அதை இப்போது திருத்தி எழுதுங்கள்..
அஇஅதிமுகவுக்கு வாக்களியுங்கள் என்று எம்.ஜி.ஆரின் வேண்டுகோள் தேர்தல் களத்தில் திரும்ப திரும்ப
எதிரொலித்தன..
தேர்தல் முடிவுகள் வந்த போது எம்.ஜி.ஆர் அபார வெற்றி பெற்றிருந்தார்...
அஇஅதிமுக மட்டும் 129 இடங்களை கைப்பற்றியது.
சட்டமன்ற தேர்தலில் அஇஅதிமுக கூட்டணி இமாலய வெற்றியை அடைந்தது..
முதல்வர் நாற்காலியை மீண்டும் எம்.ஜி.ஆர். வசமே மக்கள் ஒப்படைத்தனர்.
அஇஅதிமுக அணியில் இடம் பெற்ற சி.பி.எம்.முக்கு 11, சி.பி.ஐ க்கு 10, கா.கா.தே கா. வுக்கு 6, நெடுமாறனின் காமராஜ் காங்கிர*ஸ் 5 தொகுதிகளில் வெற்றி பெற்றன. இவ*ற்றில் காமராஜ் காங்கிர*ஸ் மற்றும் காந்தி காமராஜ் தேசிய காங்கிர*ஸ் புதிய க*ட்சிகள். புதிய சின்னங்க*ளுட*ன் போட்டியிட்ட*ன.
அவ*ற்றையும் மக்களிட*ம் கொண்டு சேர்த்தார் த*லைவ*ர்.
1977ல் சென்னையில் ஒரு தொகுதியில் மட்டுமே (ஐச*ரி வேலன்-ராதாகிருஷ்ணன் நகர்) வென்ற அதிமுக 1980ல் 6 இட*ங்க*ளில் வென்றது..
மேலும் அண்ணா ந*க*ரில் ஹ*ண்டேவை எதிர்த்து போட்டியிட்ட க*ருணாநிதிக்கு வாயில் நுரைத*ள்ளி, தோற்றதாக அறிவிக்கப*ட்டு, பின் எம்ஜிஆரின் க*ருணையால் 510 ஓட்டுக்கள் வித்தியாச*த்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட*து.
தி.மு.க. 38 இடங்களையும், இ. காங்கிரஸ் 30 இடங்களையும் பெற்றன.
1980ல் ஜூன் மாதம் 9ம் தேதி தமிழக முதல்வராக 2-ம் முறை பதவி ஏற்றார் தலைவர்..
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் என்பது எப்போதும் தவிர்க்க முடியாத ஒரு வரலாறு... ❤❤❤❤...da...
-
செருப்பின்றி நடந்து செருக்கின்றி வளர்ந்த தலைவா...
அனைத்தும் அறிவோம்...
பாருங்க... பொறுங்கள்.* என்றும் உங்கள் புகழ் காப்போம்....
இதுவே ஆரம்பம் என்று எப்போதும் எடுத்து கொண்டு பயணம்.
உங்கள் பயணங்கள் என்றும் முடிவதில்லை.....
உண்மை நெஞ்சங்கள் இருக்கும் வரை...
ஓடவிட்டு பின் முறையாக செய்வோம்.
வாழ்க தலைவர் புகழ்
நாங்க நெருப்புல நடந்தவங்க...ஆனால் நீதிக்கு பயந்தவங்க
தருமத்தை அழிக்க வந்தா எங்களை தந்து காப்போம் என்றும்.
இன்னும் இருக்கிறோம் உங்கள் விசில் அடித்த குஞ்சுகள்...
உங்கள் பாட்டு பாடி சொல்ல போனால் நல்லவற்கு நல்லவர் கெட்டவற்கு கெட்டவர் நாங்க...உங்கள் விழுதுகள்....என்றும்
மறக்க முடியாத நாள் நேற்று 10.10.1972..
பழிக்கு பழி...*
நீங்கள்* கொலுவில்* வைத்தவரை கீழே இறக்கி தெருவுக்கு கொண்டு வர சபதம் ஏற்ற நாள் இது..
வென்றோம் தலைவரே வென்றோம் நாம்.*.......... Sudharshan...
-
மழை வரும்
நல்ல மனிதர்கள் மண்ணை ஆள வந்தால் மழை பெய்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் என்பதை உண்மையை நிஜம் ஆக்க....
முதன் முறையாக மக்கள் திலகம் முதல்வரான காலம் 1977 அந்த ஆண்டு பருவ மழை தென் மாவட்டம் முழுவதும் பெய்து ஒரு வழியாக வெள்ள காடாக மாற்றி சேதாரத்தை ஏற்படுத்தி விட்டது
வெள்ள சேதாரத்தை பக்கத்து மாவட்டம் என பாதித்த பல பகுதிகளை சுற்றி பார்த்த முதல்வர் மதுரையில் உள்ள விருந்தினர் மாளிகையில் தங்கி மாவட்ட ஆட்சியாளர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுடன் ஆலோனையில் ஈடு பட்டிருந்தார்
செளராஷ்டிரா பள்ளியை சேர்ந்த மாணவர்கள் தலைவராக இருந்த ஏ.ஜி.எஸ் ராம்பாபு தலைமையில் ஒரு சில மாணவர்கள் தாங்கள் திரட்டிய வெள்ள நிவாரண தொகையை முதல்வரிடம் கொடுக்க முற்பட்டனர் முன் அனுமதி பெறாத காரணத்தால் உள்ளே செல்ல விடாமல் காவலர்கள் தடுத்தி நிறுத்தினர்
பத்திரிக்கை புகைப்பட காரர்கள் அவர்களை சுற்றி வளைத்து என்னவென்று விசாரித்ததில் மாணவர்கள் வெள்ள நிவாரணம் கொடுக்க வந்த மாணவர்களை பாராட்டி அதை எப்படியாவது முதல்வரிடம் சேர்க்க முற்பட்டனர்
பேச்சுவார்த்தை முடித்து மாவட்ட கலெக்டர் ஒருவர் வெளியே வந்தார் அவரிடம் செய்தியாளர்கள் முறையிட்டனர்.உடனே அவர் உள்ளே சென்று முதல்வர் உதவியாளரிடம் தகவலை சொல்ல சொன்னார்.
விசயத்தை கேள்வி பட்ட முதல்வர் உடனே அவர்களை உள்ளே வர அனுமதி தந்தார் மாணவர்களுக்கு எல்லை இல்லா மகிழ்ச்சி உடனே உள்ளே சென்றார்கள்
முதல்வர் அவர்களை கண்டதும் எழுந்து வரவேற்றார் காரணம் பாதிக்கப் பட்டவர்களுக்கு கொடுத்து உதவ முன் வந்த அந்த உயர்ந்த மனங்களுக்கு மதிப்பளித்தார் என்பதே உண்மை அவர்களை ஆரதழுவி வரவேற்று என்ன படிக்குறீர்கள் பெயர் என்ன? அப்பா அம்மா என்ன? செய்கிறார்கள் என்று தாய் உள்ளத்தோடு பேசிய வார்த்தைகளை வச்ச கண் வாங்காமல் பார்த்த மாணவர்களுக்கு வார்த்தையே வராமல் அந்த ரோஜா முகத்தை அருகில் பார்த்து மலைத்து நின்றனர்.
அவர்கள் திரட்டி வந்த 901 ரூபாய் நிதியை முதல்வரிடம் கொடுத்து புகைப்படம் எடுத்து கொண்டு விடை பெற்றனர்.
மீண்டும் சந்திக்கும் வரை
#எல்லா புகழும் எம்ஜிஆர்கே...
-
துப்பாக்கி ஆப்ரகாம் லிங்கனை கொன்றது ...
துப்பாக்கி ஜான் கென்னடியை கொன்றது ...
துப்பாக்கி காந்திஜீயை கொன்றது ...துப்பாக்கி இந்திரா காந்தியை கொன்றது ...
உலகில் பலரை கொன்ற துப்பாக்கி பொன்மனசெம்மலிடம் மட்டும் தோற்றது ...
துளைக்க வந்த தோட்டாவும் தங்கியது சிலகாலம் வந்தாரை வயிறு குளிரவைப்பவர் அல்லவா மக்கள் திலகம் ...
தர்மதேவதை காக்க தர்மதேவன் தர்மம் தனின் சிறப்பை காட்ட தோட்டா துளைக்க வைத்ததோ...
ஏழுவள்ளலும் ஒரு செய்கை மூலம் அறிய பட
எட்டாம் வள்ளல் எம்ஜிஆர் வாழ்நாள் முழுவதும் பதித்தார் வள்ளல் குணத்தை...
வாழ்க எம் ஜி ஆர் புகழ் ...