http://i68.tinypic.com/19v715.jpg
http://i63.tinypic.com/wgyyu.jpg
Printable View
திருச்சி கெயிட்டியில் தினசரி 4 காட்சிகளாக வெற்றிநடை போடுகிறது .
மக்கள் திலகம் எம்.ஜி..ஆர். தென்னக ஜேம்ஸ் பாண்டாக நடித்த "ரகசிய போலீஸ் 115"
http://i67.tinypic.com/30rmi3m.jpg
நண்பா ரவிச்சந்திரன் ஏற்கனவே என்னூட பதிவுகளை நீக்காமல் இருந்ததுக்கு நன்றி.
அதே போல் இனிமேல் நான் போடும் பதிவையும் நீக்காதீர்கள். எப்பவோ ஒரு வாட்டி வெற்றி பாத்தவங்களுக்கே இவ்வளவு என்றல் வெற்றி தெய்வம் பக்தர்கள் நமக்கு எவ்வளவு இருக்கும் .
அவன்களுக்கும் ஆசை. நாம்ப பதிவு மூலமா அவர்கள் நடிகரை பற்றி அவங்களுக்கே தெரியாததை தெரிந்து கொள்ளலாம் அதை ரசிக்கலாம் என்று ஆசை. நல்லா தீத்து வெப்போம்.
நன்றி எம்ஜியார் பக்தர்கள் இணையதளம்
"சோம்பேறி பிச்சைக்காரனுக்கு பாயசம் கிடைத்தால் என்ன செய்வார்களோ அதைத்தான் கடந்த 2012ம் ஆண்டு முதல் செய்து வரும் தற்குறிகளே" !
ஏதோ உங்கள் "கர்ணன்" படம் எல்லா காலத்திற்கும் பொருந்தும் ஆனால், எங்கள் மக்கள் திலகத்தின் "ஆயிரத்தில் ஒருவன்" இன்றைய கால கட்டத்துக்கு பொருந்தாது என்று உளறும் கோமாளிகளே !
இதே "கர்ணன்" எத்தனை முறை வெளியிட்டார்கள் ? அதில் வெற்றி பெற்ற
சந்தர்ப்பங்கள் ஏதேனும் உண்டா ? உங்கள் அபிமான நடிகர் இறந்த சமயத்தில்
கூட இதே "கர்ணன்" படம் உங்கள் தியேட்டரில் போட்டும் அது சரியாக ஓட
வில்லை என்பதை நீங்கள் மறந்தாலும் நாங்கள் அதை மறக்க மாட்டோம்.
பொதுவாக தமிழகத்தில் தெலுங்கர்கள் அதிகம். அதன் அடிப்பைடயில், கர்ணன் படம் 2012ம் ஆண்டு வெளியிடப்பட்ட போது, திரையில் தெலுங்கு முன்னணி நடிகர், அங்கே இன்று வரை எவராலும் தொட முடியாத உச்சத்தில் இருக்கும் அமரர் என். டி.ராமராவ் அவர்களின் அறிமுக காட்சியில் மிகுந்த கை தட்டல் கிடைத்தது. (உதாரணம் : சத்யம் வளாகத்தில் உள்ள அரங்கு). என். டி. ஆர். அவர்களுக்கு இங்கு நல்ல செல்வாக்கு உண்டு என்பதற்கு எடுத்துக்காட்டு - அவருடைய மகன் ஹரிகிருஷ்ணா, பாலகிருஷ்ணன் மற்றும் அவரது பேரன் ஜூனியர் என். டி. ஆர். படங்கள் வரும்போது அதன் அறிகுறியை காணலாம்.
"கர்ணன்" படத்தை பார்க்க மக்களை வரவழைக்க சபாக்களை அணுகி மக்கள்
தலையில் டிக்கெட்களை திணித்தது, தியேட்டரை நிரப்புவதற்கு பள்ளிக்கூடம் பள்ளிக்கூட மாய் பிச்சை எடுத்தது, ஊடக ங்களுக்கு செலவு செய்தது; படம் முதல் வெளியீட்டிற்கு பிறகு,பல ஊர்களில் பெட்டிக்குள் தூங்கி கிடந்த இந்த படத்தை("கர்ணன்") தூசு தட்டி படத்தை எடுத்து வெளியிட்ட திவ்யா சொக்கலிங்கத்தின் வியாபார யுக்தி தான் இந்த கர்ணன் படத்தின் விடை .
எங்களது கலைவேந்தனின் "ஆயிரத்தில் ஒருவன்" படத்தை பார்க்க
வருபவர்களோ ஏழை எளிய பாட்டாளி வர்க்கத்தை சார்ந்தவர்கள். .மேலும் இந்த படம் எந்த நகரத்திலும் இரண்டு வருட இடைவெளி கூட கிடையாது. அதுவும், தொலைக்காட்சியில் திரும்ப திரும்ப ஒளி பரப்பினார்கள். மேலும், இந்த தேர்தல் நேரத்தில், போஸ்டர் ஒட்டவும், பேனர் வைக்கவும் தடைகள் பல.
இத்தனைக்கும் மத்தியில் படம் வெற்றி நடை போட்டுதான் வருகிறது. அது
மட்டுமல்ல, உங்கள் படத்தை இந்த தலைமுறை பார்ப்பதாகவும், எங்கள் படத்தை மக்கள் பார்க்க வருவதில்லை என்று கூறும் அறிவுக்கொழுந்துகளே ! உங்கள் படத்தை இந்த இளைய தலைமுறையினர் எப்படி ஒதுக்கினார்கள் என்று சொல்லட்டுமா?
அண்ணன் தங்கை பாசத்தை இன்றையை படங்களிலும் ஏன் தொலைக்காட்சி தொடர்களில் கூட எதார்த்தமாக காட்டி வரும் வேளையில், உங்கள் படத்தில் உள்ள ஓவர் ஆக்டிங் மற்றும் அளவுக்கதிகமான மிகையான செண்டிமெண்ட் காட்சிகளும், மக்களிடம் எடுபடாமல் "பாசமலர்" மோசமலர் ஆனது.
வெறுமனே குடித்து விட்டு குத்தாட்டம் போடும் ஜமீன் எவ்வளவு பெ ரிய
மாளிகையில் வண்ணத்தில் காண்பித்தாலும் மக்கள் எண்ணத்தில் ஒட்டாமல்
இடிந்து போனது. இன்றைய கால கட்டத்துக்கு இந்த படத்தால் எந்த கருத்தும்
இல்லையென்று மாளிகையின் அருகில் கூட எவரும் வர வில்லை.
பக்திபடத்தில் ஆன்மீகத்தை வளர்ப்பதற்கு பதிலாக மிக மோசமான வக்கிரத்
தன்மையோடு, (மீனவர் வேடத்தில், சாவித்திரியுடன் உங்கள் அபிமான நடிகர்
வரும் காட்சி) காண்பித்ததும், கடவுளுக்கே உரித்தான கனிவைக் காட்டாமல்
உங்கள் நடிகருக்கே உரிய தேவையில்லாத அலட்டலும் . உறுமலும் இன்றைய மக்களுக்கு தேவை இல்லை என்று இந்த புராண படத்தையும் உதறி விட்டு ஓடி விட்டனர்.
சுமார் 11 வருட இடைவெளியில் இரட்டை வேடத்தில் வந்த "என்னைப் போல் ஒருவன்" படத்தை உன்னைப் போல் ஒருவன் எங்களுக்கு தேவையில்லை என்று மக்கள் நிராகரித்து விட்டார்கள்.
யாரும் இல்லாத வேளையில் (ரஜினி, கமல் ஆரம்ப கால கட்டங்களில்) வெள்ளி விழாவை எட்டிப் பிடித்த "திரிசூலம்" இப்போது, ஓரு சென்டரில் கூட
சரியாக போக வில்லை. உங்கள் நடிகனின் குஞ்சல உடுப்புக்கள் இந்த தலைமுறை பார்த்தால், தலை சுற்றி மயக்கம் போட்டு விடுவார்கள். அதனால் தான், இந்த படத்துக்கு இந்த கால கட்டத்தில் "அதோ கதி ".
ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, கீழ்பாக்கத்தில் சந்தி சிரித்த
"சந்திப்பை" மக்கள் சந்திக்க மறுத்து தியேட்டர் பக்கமே வர மறுத்து
விட்டனர்.
இது உங்களது சமீபத்திய சாதனை துளிகள் . இதற்கு முன்பு உங்கள் வரலாற்றை எடுத்தால் அதுவும் நாறும்!.
ஆவலோடு காத்திருங்கள் . தொடர்ச்சி விரைவில்.
பொன்னின் நிறம்... பிள்ளை மனம்... வள்ளல் குணம் இவரோ? மக்கள் மனதில் என்றும் மின்னும் எம்.ஜி.ஆர்!
நூற்றாண்டுகள் கடந்தாலும், நீ வாழ்ந்த ஆண்டுகள் போல் வருமா? எதிரியை நோக்கிய வாள் வீச்சும், கொஞ்சும் உன் தமிழ் பேச்சும், அந்த சிரிப்புக்கு இடையே ரசிகனின் மூச்சும் இருந்ததை, யார் தான் மறப்பார்? "நாள் ஒரு மேனி, பொழுதொரு வண்ணம், ஒருவர் மனதிலே ஒருவரடி,' அது, எம்.ஜி.ஆர்., என்ற மக்கள் தலைவனின் திருவடி.
பெயரில் கூட, அவருக்கு சுமை வேண்டாம் என்பதால் தான், எம்.ஜி.ராமச்சந்திரனை, எம்.ஜி.ஆர்., ஆக்கியது தமிழகம். "நமக்கென்று யார் வருவார்... கேட்பதை இங்கு யார் தருவார்...' என, தமிழகம் தனித்திருந்த போது, திரையில் பார்த்த நாயகன், தரையில் இறங்கி வந்தார், மக்கள் திலகமாக!
நடிகனாகவோ, அரசியல்வாதியாகவோ, முதல்வராகவோ பார்க்கவில்லை, வெகுஜனம்; எங்கள் வீட்டு பிள்ளையாக, கலங்கரை விளக்கமாக, ஒளி விளக்காக, எங்கள் தங்கமாக, ஆசை முகமாக, ஆனந்த ஜோதியாக, இவ்வளவு ஏன், "ஆயிரத்தில் ஒருவனாகவே...' பார்த்தது. தன்னை நோக்கி வந்த சங்கடங்களைக் கூட, சாதனைகளாய் மாற்றிய எம்.ஜி.ஆர்.,யின் வாழ்க்கை, ஒவ்வொரு மனிதனும் படிக்க வேண்டிய பாடம். எம்.ஜி.ஆர்., என்ற சரித்திரத்தை படிக்க, புத்தகம் தேவையில்லை; அவர் நடித்த படங்களும், பாடல் வரிகளுமே போதும்."இதயம் எனது ஊராகும், இளமை எனது தேராகும், மான்கள் எனது உறவாகும், மானம் எனது உயிராகும், தென்றல் என்னைத் தொடலாம், குளிர்த்திங்கள் என்னைத் தொடலாம், மலர்கள் முத்தம் தரலாம், அதில் மயக்கம் கூட வரலாம்,' இந்த வரிகள் போதும், அந்த மாமனிதனின் எண்ணங்களை அறிய. "சிரித்து வாழ்ந்த போதும், பிறர் சிரிக்க வாழ்ந்திடாத...' அந்த சிவப்பு மனிதனின் கரங்கள், கட்டி அணைத்த கருப்பு மனிதர்களின் தோள்கள், எத்தனை!
மக்களை மதிக்க தெரிந்த அந்த குணம் தான், "நமக்கென்று ஒருவன்; அவனே நமக்கு இறைவன்,' என, எம்.ஜி.ஆர்., நினைவுகளை நம் மனதிலே, நிலை நிறுத்துகிறது.சொல்லாமல் வரும் புயலையும், நிலநடுக்கத்தையும் சந்திக்க துணியும் மனிதன், இந்த மனிதரின் பிரிவை தாங்க முடியாமல் அழுத தினம், இன்று. காலத்தை வென்ற மனிதனை, காலன் வென்றதும், தகர்ந்தது தமிழக மக்கள் மனம். திரைக் காட்சியிலும், அரசு ஆட்சியிலும் மக்களோடு மக்களாய் வாழ்ந்த, அந்த மூன்று எழுத்து நாயகனை, இன்றும் நம் மூச்சில் சுமக்கிறோம். "வாழ்ந்தவர் கோடி... மறைந்தவர் கோடி... மக்களின் மனதில் நிற்பவர் யார்?; சரித்திரம் சொல்கிறது, அதுவே எம்.ஜி.ஆர்.,"என்னை எடுத்து, தன்னைக் கொடுத்து, போனவன் போனாண்டி... தன்னைக் கொடுத்து, என்னை அடைய... வந்தாலும் வருவாண்டி...' என காத்திருக்கும் கூட்டம் தனி!...thanks friends...