http://youtu.be/XEdKocD47k8
Printable View
இந்திய அளவில் பிற மொழி நடிகர்களுடன் மிக நட்பாக இருந்தவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். குறிப்பாக ஹிந்தி நடிகர் சசி கபூருடன் அவருக்கு நெருங்கிய நட்பு இருந்ததாகவும் கூறப்படுகிறது. சென்னை வரும் நேரங்களில் எம்.ஜி.ஆரின் வீட்டுக்கு தவறாமல் செல்லும்
வழக்கமும் சசி கபூருக்கு இருந்ததாகவும் தெரிகிறது. எம்.ஜி.ஆர் மற்றும் சஷி கபூர் இடையிலான அந்த நட்பின் அடையாளமாக இருக்கிரது இந்த புகைப்படம்.
சிங்கப்பூரில் நடந்த கலை நிகழ்ச்சி ஒன்றில் மக்கள் திலகத்தின் கைகளை உரிமையுடன் பிடித்து அழைத்து செல்லும் சஷி கபூரும், சிறிது வெட்கம், மகிழ்ச்சி என்று உற்சாகத்துடன் செல்லும் எம்.ஜி.ஆர் அவர்களும் இருக்கும் இந்த அரிதான புகைப்படம்
http://i43.tinypic.com/3169gm8.jpg
AN ARTICLE FROM SIVATHAMBI- NET
எம்.ஜி.ஆரின் படங்களில் சமூகத்தளைகளை மீறி தனிமனிதன் மேல்நிலைப்பாட்டை எய்தமுடியும் என்ற கருத்து மிகச் செப்பமாகப் பதிய வைக்கப்பெற்றது. அவர் சித்தரித்த பாத்திரங்களின் குணாம்சங்களைக் கொண்ட ஒருவராகவே அவர் போற்றப்பட்டார்.
இதனால், தமிழ்நாட்டின் நடுமட்டத்திற்குக் கீழ்வந்த சமூகப்படிநிலையினரிடையே அவர் ஒரு உதாரணபுருஷராகவே போற்றப்பட்டார். தம் நிலையிலுள்ள ஒருவர் மேல்நிலை அடைந்ததாகவே அவர் உயர்ச்சியையும் புகழையும் அச்சமூகமட்டங்களைச் சேர்ந்தோர் நம்பினார்கள்.
இதனால் தன்னம்பிக்கையும் சுயவளர்ச்சி பற்றிய பிரக்ஞையுமுள்ள ஓர் இளைஞர் குழாம் தமிழ்நாட்டில் வளரத்தொடங்கியது. எம்.ஜி.ஆர். தனது கவர்ச்சியின் தளமாக, தமிழ் பற்றிய நிiலாட்டினைக் கொள்ளவில்லை. இன்றும்கூட கலைஞர் கருணாநிதியோடு தொடர்புபுபுறுத்தப்படும் தமிழ்த்தன்மை எம்.ஜி.ஆரோடு பொறுத்திப் பார்க்கப்படுவதில்லை. அவருடைய அறைகூவல் நல்ல நேர்மையான மனிதன் பற்றியதாவே இருந்தது. இன்று அவர் இல்லாத நிலையிற் பார்க்கும்பொழுது அவரின் தொடர்பாற்றல் திறனால் அவர் தன்னைப் பற்றிய மதிப்பீட்டினை உயர்த்துவதற்கு ஏற்றவகையில் நடந்துகொண்ட ஒருவர் என்ற எண்ணமே மேலோங்கி நிற்கிறது.
எம்.ஜி.ஆரை உண்மையில் திராவிட இயக்கச் சினிமாத்துறைச் செயற்பாட்டுச் சாதனைகளிலிருந்து நோக்காது, அதனைத் தளமாகக் கொண்டு வளர்ந்து தனக்கென ஓரிடத்தினை வகுத்துக்கொண்டார் என்றே கூறல் வேண்டும். மேலும்,அண்ணா கலைஞர் ஏற்படுத்திய தாக்கத்திலிருந்து வேறுபட்ட ஒரு சமூகத்தாக்கத்தையே இவர் ஏற்படுத்தினார் என்று கொள்ளல் வேண்டும் (தமிழ்ப் பண்பாட்டில் சினிமா : க.சிவத்தம்பி : பக்கம் 13) என 2004 ஆம் ஆண்டு வெளியான தமது நூலின் முதல் பதிப்பில், தமது எம்.ஜி.ஆர. குறித்த ஆதாரமான கட்டுரை எழுதப்பட்டு 24 ஆண்டுகளின் பின் அவரது பார்வையை மீளுறுதி செய்கிறார் சிவத்தம்பி.
எம்.ஜி.ஆரின் வறிய மற்றும் விளிம்பு நிலை மக்கள் மீதான பாசம் மற்றும் பரிவு என்பது வறுமையும் பட்டிணியும் குறித்துப் பட்டறிந்து பெற்ற அவர் அனுபவத்தில் இருந்துதான் உருவாகியது. அது அவரது வெள்ளந்தியான அரசியலிலும் திரைப்படங்களிலும் அவரது ஆட்சியின் கீழான சடூகத் திட்டங்களிலும் பிரதிபலித்தது. அவர் தயாரித்து இயக்கிய நாடோடி மன்னன் திரைப்படம் முன்வைத்த சமூகத் திட்டங்கள் கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கையையொத்ததாக இருப்பதை எவுரும் இன்று அவதானிக்க முடியும். இதனை அவர் தேர்ந்த கருத்தியல் அடிப்படையிலிருந்தல்ல, தனது இயல்பான தேர்வுகளில் இருந்துதான் செய்கிறார். திரும்பத் திரும்ப பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரமும் அவரும் இணைந்தது தற்செயலானது இல்லை. அது திட்டமிட்ட நடவடிக்கை.
தனிமனித வாழ்வில் தன்னலமறுப்பையும் தியாகத்தையும் போற்றிய தமிழக கம்யூனிஸ்ட், காங்கிரஸ், திராவிடத் தலைவர்கள் மீது பேரன்புகொண்டவர் அவர். அண்ணாதுரை, காமராஜ், ஜீவா மற்றும் கல்யாணசுந்தரம் போன்ற தலைவர்கள் மீதான அவரது பேரன்பு அவரது நடத்தைகளில் வெளிப்பட்டது.
அவரது ஈகைக் குணம் என்பது வெறுமனே ஐதீகம் இல்லை. இன்று அனைத்தும் வெளிப்படையாகவும் ஸ்தூலமாகவும் இருக்கிறது.
வறிய மக்களிடம் அவர் அன்பு காட்டினார். தாம் நம்பியவற்றுக்கென அவர் அள்ளிக் கொடுத்தார். மரபான பழமையான பெண்மையைப் போற்றினார். அவரது திரைப்படம் - வாழ்வு - நடத்தை என்பதற்கு இடையிலான இடைவெளி, அவர் காலத்திய பிற அரசியல் தலைவர்களோடும் நடிகர்களோடும், ஏன் இன்றைய அரசியல் தலைவர்களோடும் நடிகர்களோடும் ஒப்பிட முன்னுதாரணம் இல்லாதது. அவரது திரைப்படங்கள் வெற்றிபெற்றதிலும், அவர் மக்கள் மனங்களில் கோலோட்சியதிலும் இவையணைத்தும் மிகப்பேரும் பங்காற்றின.
ஈழவிடுதலைப் போராட்டத்திலும் ஈழவிடுதலையிலும் எம்.ஜி.ஆர். கொண்டிருந்த ஈடுபாடு எவரும் அறியாதது. அவரது கடப்பாடும் ஈகைக் குணமும் வெளிப்பட்ட தருணம் குறித்து தனது நூலில் (விடுதலை : எம்.ஜி.ஆரும் புலிகளும்: விடுதலைக்குவித்திட்ட மாமனிதர் : அன்டன் பாலசிங்கம் : 2003) அன்டன் பாலசிங்கம் விரிவாக எழுதுகிறார். விடுதலைப் புலிகளுக்குத் தமிழக அரசின் சார்பாக நிதி கொடுப்பது தொடர்பான செய்தி வெளியானபோது ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவும் அவரது தூண்டுதலின் பேரில் ராஜீவ்காந்தியும் அதனைத் தடுக்கிறார்கள். ராஜீவ்காந்தியையும் மீறி ஆறு கோடி ரூபாய் வரையிலான உதவியை எம்.ஜி.ஆர்.தனது சொந்தப்பணத்திலிருந்து விடுதலைப் புலிகளுக்குத் தருகிறார்.
அன்றிருந்த இந்திய அரசியல் சூழலில் இந்தச் செயலின் பின் விளவுகளின் பாரதூரத்தன்மையை எவரும் அறிய முடியும்.
An article from sivathambi- net
மக்கள் திலகத்தின் இந்த வார திரைப் படங்கள் .
19.7.2013
மதுரை - அரவிந்த் - தேடி வந்த மாப்பிள்ளை
கோவை - ராயல் - இதய வீணை
கோவை - சிவகிரி - தெய்வத்தாய்.
நாகர்கோயில்- தங்கம் - நாடோடி மன்னன் .
எங்கள் தங்கம் நடித்த 'எங்கவீட்டு பிள்ளை' படம் எல்லா நடிகர்களையும் ஏங்க வைத்த படம் என்பது எல்லோரும் அறிந்த ஒன்று. எப்படி ஒரு நடிகரால் மாறி மாறி இதில் இயற்கை நடிப்பை காட்டமுடிந்தது என்ற பிரமிப்பு அனைவருக்கும் இருந்தது..இன்னுமொரு செய்தி..'நான் ஆணையிட்டால்..அது நடந்து விட்டால் பாடலில் வரும்..ஒரு காட்சியில் புரட்சித்தலைவர் எலெக்ட்ரிக் சுறுசுறுப்பில் பிரமாதமாக நடித்திருப்பார்..
http://i43.tinypic.com/2j4rb6c.png
அதில் முத்தாய்ப்பாக, ஒரு சுற்று சுற்றி இரண்டு கால்களையும், ஒரு கையையும் தரையில் ஊன்றி, ஒரு கையை உயர்த்தும் காட்சியில், திரு. திலீப்குமார் மற்றும் திரு. என்.டி.ஆர். அவர்களால் நடிக்க முடியாமல் அந்த ஸ்டெப் தவிர்க்கப்பட்டது..
http://i41.tinypic.com/2d017wy.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
திரு. ராகவேந்திரா அவர்கள் அறிவது ,
கவிஞர் வாலி அவர்களுக்கு புகழ் அஞ்சலி செலுத்த வேண்டும் என்கின்ற அதீத ஆவலால், சற்று உணர்ச்சிவசப்பட்டு, "மக்கள் திலகத்தை ஆட்சிக்கட்டிலில் அமர்த்த உதவிய வரிகளுக்கு
சொந்தக் காரர் கவிஞர் வாலி " என்ற உடன்பாடில்லாத வார்த்தைகளை உபயோகபடுத்தி
உள்ளீர்கள்.
அன்றைய கால கட்டத்தில் மக்கள் திலகம் உட்பட இதர பல நடிகர்கள் நடித்த படங்களுக்கும், இன்றைய தலைமுறை நடிகர் தனுஷ் படங்கள் வரை, வாலிபக் கவிஞர் வாலி அவர்கள் பாடல் எழுதியிருக்கிறார். அப்படிப் பார்த்தால், பொன்மனசெம்மலை விடுத்து, எவராவது ஒருவர் (தனித்து நின்று, எந்த அரசியல் கட்சியையும் சாராமல்) மக்களால் தேர்ந்தேடுக்கப்படும் குறைந்தபட்ச "மாநகர அல்லது நகர மன்ற உறுப்பினாராகவது" ஆகியிருக்க வேண்டும்.
இதில் புரட்சித் தலைவரை தவிர வேறு எந்த நடிகரும், அரசியலில் அங்கீகரிக்கப்படவில்லை.
அவரை ஆட்சிக் கட்டிலில் அமர வைத்தது, தமிழக மக்கள் அவர் மேல் கொண்டிருந்த அதிக அன்பு மற்றும் நம்பிக்கையின் வெளிப்பாடு. அவர் மேல், மக்களால் திணிக்கப்பட்ட அந்த உயர் நிலையினை அடைய மனிதப்புனிதர் எம். ஜி. ஆர். அவர்கள் எடுத்துக் கொண்ட முயற்சியும், கடின உழைப்பும் அளப்பரியது, என்பதை நாடறியும்.
கவிஞர் வாலியின் பாடல்களில், பல தருணங்களில் , மக்கள் ஏற்றுக்கொள்ளத்தக்க வகையில், சில திருத்தங்கள் செய்து, அப்பாடல்கள் பிரபலமடைவதற்கு வழி வகுத்தவர் நமது இதய தெய்வம் கலைச்சுடர் எம். ஜி. ஆர். அவர்களே ! இது பற்றி, கவிஞர் வாலி தமது வரலாற்றினை சில ஏடுகளில் எழுதும்போது குறிப்பிட்டுள்ளார்.
காலஞ்சென்ற , பாரதிதாசன், நாமக்கல் கவிஞர், கவிஞர் கா. மு. ஷெரிப், பாபநாசம் சிவன்,
கு. மா. பாலசுப்ரமணியன், தஞ்சை ராமையா தாஸ், உடுமலை நாராயண கவி, ஆலங்குடி சோமு, அ. மருதகாசி, பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், கவியரசு கண்ணதாசன், மாயவநாதன் கவிஞர் முத்துக்கூத்தன், ஆத்மநாதன் முதற்கொண்டு கலைஞர் மு. கருணாநிதி, புலவர் புலமைபித்தன், கவிஞர் முத்துலிங்கம், பூவை செங்குட்டுவன், அவிநாசிமணி உட்பட பல கவிஞர்கள் எழுதிய பாடல்கள் மக்கள் திலகத்தின் திரைப்படங்களில் இடம் பெற்று நேயர்களால்இன்று வரை வானொலி மூலம், விரும்பி கேட்கப்படுவது மட்டுமல்லாமல், ரசிகர்களின் ஏகோபித்த வேண்டுகோளிக்கிணங்க மீண்டும் மீண்டும் தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பி வருவது நிதர்சனமான உண்மை. அந்த வரிசையில் கவிஞர் வாலியின் கருத்துள்ள பாடல்களும் இடம் பெற்றுள்ளது என்பதில் எந்த வித மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை.
மக்கள் திலகத்தின் கலையுலக வளர்ச்சிக்கும் அரசியல் வளர்ச்சிக்கும் பல்வேறு கால கட்டங்களில் பல கலைஞர்கள் துணை புரிந்திருந்தாலும், அவரது வெற்றிக்கு காரணமே மக்களின் அமோக ஆதரவுதான். இந்த அமோக ஆதரவினை மென்மேலும் பெருக்கிக்கொண்டு அமரராகி 25 ஆண்டுகளுக்கு பின்பும், இனியென்றும் தொடர்ந்து தக்க வைத்திருப்பதில் தனிப்பெரும் சாதனை புரிந்து வருபவர்தான் எங்கள் பாரத ரத்னா டாக்டர் எம். ஜி. ஆர். அவர்கள்.
http://i43.tinypic.com/33dbjt1.jpg
எனவே, இந்த திரியில், மக்கள் திலகத்தைப் பற்றி செய்திகளை பதிவிடும்போது எங்களைப் போன்றவர்களின் உணர்வுகளை மனதில் கொண்டு, சற்று கவனமாக பதிவிடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
ஏனெனில் நாங்கள் ரசிகர்கள் மட்டுமல்ல அவரை என்றும் வணங்கும் பக்தர்கள்.
உங்களன்பு சகோதரன் :
சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன் .