Originally Posted by
chinnakkannan
நெய்வேலியில் எடுக்கப் பட்ட இன்னொரு படம்..அவள் சுமங்கலி தான்..என்னுடைய தூரத்து உறவினர் எஸ்.டி.சாரி என்ற பெயர் அங்கு வேலை பார்த்திருந்தார்.. அவருடன் தொடர்பு விட்டு இருபது வருடங்களுக்கு மேலாகி விட்டது..இன்னும் அங்கேயே தான் இருக்கிறாரா தெரியாது..என்னுடைய இன்னொரு சகோதரியின் கணவரின் அண்ணன் அக்காக்கள் எல்லாம் நெய்வேலி தான் ..வெகு சின்ன வயதில் அங்கு வந்திருக்கிறேன்..கொஞ்சம் ட்ரையான ஊர்.. நோ கரெண்ட் கட்..பச்சைப் பசேல் தோட்ட வீடுகள்..பச்சை மிளகு முதன் முதலாக அங்கு தான் ருசித்தேன்..வாசு சார்..