-
ரமலான் ஸ்பெஷல் (3)
கலைஞர் கருணாநிதி எழுதிய 'வெள்ளிக்கிழமை' நாவல் அதே பெயரில் நடிகை ஜி.சகுந்தலா தயாரிக்க மக்கள்திலகம் எம்.ஜி.ஆர். கதாநாயகனாக நடிப்பதாக ஏற்பாடாகி, கைவிடப்பட்டு, அதன்பின் சுந்தர்லால் நகாதா தயாரிப்பில் மு.க.முத்து நடிக்க 'நெய்னா முகம்மது' என்ற பெயரில் உருவாவதாக தினத்தந்தியில் முழுப்பக்கம் விளம்பரம் வந்து அதுவும் நின்று போய், இறுதியாக கலைஞரின் குடும்ப நிறுவனமான அஞ்சுகம் பிக்சர்ஸ் தயாரிப்பில் 'அணையாவிளக்கு' என்ற பெயரில் ஒருவழியாக வெளியானது.
அதில் ஒரு பாடல் மு.க.முத்து சொந்தக்குரலில்...
நல்ல மனத்தில் குடியிருக்கும்
நாகூர் ஆண்டவா
மக்கள் நலத்தை நினைத்து உ(ன்)னை
நானும் வேண்டாவா?
யாரும் வருவார் யாரும் தொழுவார்
நாகூர் ஆண்டவர் சந்நிதியில்
நானும் ஒன்றே நீயும் ஒன்றே
நபிகள் நாயகம் முன்னிலையில்
நல்ல மனத்தில் குடியிருக்கும்
நாகூர் ஆண்டவா
மக்கள் நலத்தை நினைத்து உ(ன்)னை
நானும் வேண்டாவா?...
-
டியர் கார்த்திக் சார்,
(சார்! நான் ... கட்டளைக்கெல்லாம் அடிபணிய மாட்டேன்)
பாவ மன்னிப்பு- எல்லோரும் கொண்டாடுவோம்
சிரித்து வாழ வேண்டும்- ஒன்றே சொல்வான் நன்றே செய்வான்
ரமலான் பாடல்கள் இரண்டும் மிகச் சிறப்பு.
இரு திலகங்களின் பாடல்களையும் பதித்து அழகாக பேலன்ஸ் செய்து விட்டீர்கள். (ஏன் நமக்கு வம்பு என்று.)
கூன் பிறையைத் தொழுதிடுவோம் (பின்னால் 'தொழுதிடுவோம்' 'போற்றிடுவோம்' என்று சென்ஸாரால் மாற்றப்பட்டது. ஏன் என்று தெரியவில்லை)
குர்-ஆனை ஓதிடுவோம்
மேன்மை மிகு மெக்காவின்
திசை நோக்கிப் பாடிடுவோம்
மேன்மை மிகு மெக்காவின்
திசை நோக்கிப் பாடிடுவோம்
'அணையா விளக்கு' படப் பாடல் அற்புதமான ஒன்று. அப்போதெல்லாம் திராவிட முன்னேற்ற கழக கச்சேரி மேடைகளில் இப்படத்தில் டேப் அடித்துப் பாடுவது போல மு.க.முத்து பிரச்சாரப் பாடல்களை அழகாகப் பாடுவாராம். அந்தப் ப்ராக்டிஸ் முத்துவுக்கு நன்றாகக் கை கொடுத்து இருக்கிறது. நன்றாகப் பாடியிருப்பார். அப்போதைய சூப்பர் ஹிட் பாடல் இது
ஆனால் அருமையான பாடலை இடையில் அரசியல் சாயம் பூசிக் கெடுத்து விட்டார்கள். முழுதும் நபி புகழ் பாடியிருந்தால் நாம் 'எல்லோரும் இன்னும் கொண்டாடி' இருப்போம்.
நீங்களும் அதற்கு மேல் அந்தப் பாடல் வரிகளில் வெறும் அரசியல்தான் கலந்திருக்கிறது என்பதால் பாடலின் முழு வரிகளைத் தராதது நன்றகப் புரிகிறது. அதுதான் கரெக்ட்டும் கூட.
அதை வேறு தந்து அப்புறம் நீயா நானா போட்டி வந்து 'இங்கே'யும் பதிவிட முடியாமல் செய்து விடப் போகிறார்கள்.
-
பொங்கும் பூம்புனல்
http://www.inbaminge.com/t/a/Avare%2...vam/folder.jpg
பி.பி.எஸ்-எல்.ஆர்.ஈஸ்வரி சேர்ந்து பாடிய சூப்பர் ஹிட் பாடல்களில் ஒன்றை இப்போது நீங்கள் கேட்க இருக்கிறீர்கள்.
1969ம் ஆண்டு வெளி வந்த திரைப்படம் அவரே என் தெய்வம். ஜெமினி கணேசன், முத்துராமன், விஜயகுமாரி மற்றும் பலர் நடித்தது. அழகே உனக்கு குணமிரண்டு என்ற இந்த பாடல் அவ்வப்போது சென்னை வானொலியிலும் அடிக்கடி இலங்கை வானொலியிலும் ஒலிபரப்பாகும்.
இப்படத்திற்காகப் பதியப் பட்ட கண்ணுக்குத் தெரியாத இந்த சுகம் பாடல் பின்னாளில் என் அண்ணன் படத்தில் பயன்படுத்தப் பட்டது என்று சொல்வார்கள்.
http://www.inbaminge.com/t/a/Avare%20En%20Deivam/
-
பொங்கும் பூம்புனல்
தொடர்வது... மெல்லிசை மன்னருக்கும் ரவிக்கும் காலத்தால் அழிக்க முடியாத புகழைத் தேடித் தந்த பாடல்களி்ல் ஒன்று. அவர்களுக்கு மட்டுமா பாடியவர்கள் பாடலாசிரியர் அனைவருக்கும் தான்.
நம் எல்லோர் மனதையும் கவர்ந்த உற்சாகமூட்டும் டூயட் பாடல்.. ட்ரம்பெட் கிடார் இரண்டும் இணைந்து பேங்கோஸின் பின்னணியில் பாடலைத்துவங்கும் சிறப்பே அலாதி.
நாமெல்லோரும் இந்த உலகத்தை விட்டு வேறு உலகத்தில் சஞ்சாரிக்க வைக்கும் பாடல்...
வா அந்த உலகத்தின் ஒரு பக்கம் இங்கே..
ஓடும் நதி திரைப்படத்திலிருந்து பாடகர் திலகம் இசையரசி இணையில்லா சிறப்பான குரல்களில்
http://www.inbaminge.com/t/o/Odum%20Nadhi/
-
பொங்கும் பூம்புனல்
இந்தப் பாடலைப் பற்றி நான் சொல்லித் தான் உங்களுக்குத் தெரிய வேண்டுமோ..
யாரடி வந்தார் என் எண்ணத்தைக் கொள்ள..
நீயும் நானும் படத்திலிருந்து ஈஸ்வரியின் குரலில்
http://www.raaga.com/player5/?id=204...89993101730943
பியானோவும் புல்லாங்குழலும் ட்ரம்பெட்டும் கிடாரும் ... ஆஹா.. தனி இசை ராஜாங்கமே நடக்கிறதே...
-
-
பாடல்களின் தொகுப்பு அருமை
வாசு ஜி, கார்த்திக் ஜி,ராகவி ஜி அருமை அருமை..
இதோ ரமலானை முன்னிட்டு இன்னொரு அருமையான பாடல்
http://www.youtube.com/watch?v=9sLYn9WWXFw
-
மிக அருமை வாசு அண்ணா
பல பாடல்கள் வெளியில் தெரிய வந்து உள்ளது இந்த திரியின் மூலமாக
'உலகம் சுற்றும் வாலிபனோடு பயணம் செய்தவள் நான்
ஒ மை லார்ட் ஒ மை ச்வீட் ' என்று ஒரு பாடல் கேட்ட நினைவு
கண்ணிய பாடகி பாடகர் திலகம் என்று நினைவு
இது எந்த படத்தில் நிச்சயமாக மக்கள் திலகம் படமாக இருக்க வேண்டும்
-
அதே போல் இன்னொரு கேள்வி பட்ட தகவல்
'நெருங்கி நெருங்கி பழகும் போது ' மாமா இசை அமைத்து ஆனால் மெல்லிசை மன்னர் பெயரில் நேற்று இன்று நாளை படத்தில் இடம் பெற்றது என்று இந்த தகவல் எவ்வளுவு உண்மை என்று தெரியவில்லை
-
1971ல் நடிகை ஜி . சகுந்தலா தயாரிக்க இருந்த ''வெள்ளிகிழமை '' படத்திற்காக இசைத்திலகம்
இசைத்த பாடல் ''நெருங்கி நெருங்கி '' பாடல் . சில காரணங்களால் அந்த பட தயாரிப்பு நின்று போனது . பின்னர் நடிகர் அசோகன் தயாரித்த நேற்று இன்று நாளை படத்தில் அந்த பாடல்
இடம் பெற்றது .
http://youtu.be/GL-Lkg8pt7E