துள்ளி துள்ளி நீ பாடம்மா சீதையம்மா ( ஆஹா )
நீ கண்ணீர் விட்டல் சின்ன மனம் தாங்காதம்மா
https://youtu.be/9tLYhiSVLv0
Printable View
துள்ளி துள்ளி நீ பாடம்மா சீதையம்மா ( ஆஹா )
நீ கண்ணீர் விட்டல் சின்ன மனம் தாங்காதம்மா
https://youtu.be/9tLYhiSVLv0
'உள்ளத்தில் குழந்தைகளடி'
'குமரி வடிவம் குழந்தை உள்ளம் ரெண்டும் ஒன்றான மாயம் நீயோ
தலைவன் மடியில் மகளின் வடிவில் தூங்கும் சேயோ'
மார்கண்டேயன் மடியில் மலங்க மலங்க கண்களை உருட்டி விழித்து, குழந்தையாய் சிவாவின் கட்டைவிரலை பிடித்து கடித்து சரிதா செய்த நடிப்பு அக்னி சாகசம்.
சிவா கொடுத்து வைத்தவர். அந்தக் காலக்கட்டத்தில் எல்லாப் படங்களிலும் பெண்களிடம் மாட்டித் திண்டாடுவார். அதுவும் ரெண்டு ரெண்டு.:)
https://youtu.be/AF-ZL8snxws
'உள்ளத்தில் குழந்தைகளடி'
'கேனையிலும் கேனையின்னு கேலியும் செஞ்சாங்க' என்று இந்த அப்பாவி மூர்த்தி (இந்த ஒரு படத்தோட ஆள் காலின்னு நினைக்கிறேன்) ஊரார் கேலியை உதறித் தள்ளி தேவயானியை சந்தோஷப்படுத்துகிறார் ராஜா குரலில்
'உன் பக்கத்துல ஒரு பூவ வச்சா அந்த பூவும் மயங்கிப் போகும்'
தேவயானிக்கு பிரில் வைத்த ஜாக்கெட் என்றால் ரொம்பப் பிடிக்குமோ? நிறையப் படங்களில் இப்படி வருவார்.
https://youtu.be/h3SPQ1IrMzM
'உள்ளத்தில் குழந்தைகளடி'
இந்தப் பாடல் கொஞ்சம் என்னைப் புரட்டிப் போட்ட பாடல் என்று சொல்லலாம். எப்போது கேட்டாலும் மனம் வலிக்கும். அப்பாவி லூஸ் சர்க்கரையின் (வினீத்) மேல் அருணாவின் தங்கை (நந்தினி) தாமரைக்கு காதல். அதனால் வேதனை. ஜானகியின் பின்னணியில் ஒலிக்கும் சாகாவரம் பெற்ற பாடல். ஒவ்வொருமுறையும் கேட்கையில் உடலில் ஒரு சிலிர்ப்பு உண்டாவது நிஜம்.
ஜானகி மிக அம்சமாகப் பாடிய ஒருசிலப் பாடல்களில் முதலிடத்திற்கு இப்பாடல் போட்டி போடும். ராஜாவின் மனம் உருக்கும் இசை...
அதுவும்,
'கனவே எனத் தெரிந்தே அதை நினைக்கும் மனமே' வரிகளில்:clap: பாடல் ஆசிரியரும், இசைஞானியும், ஜானகியும் நீயா நானா என்று போட்டி போடுவார்கள். அவ்வளவு அம்சம் அந்த வரி.
பரதன் என்ற கலைஞனின் அற்புதமான பாடல் படமாக்கல், இயற்கை சூழல், நந்தினியின் (முன்னால் வைதேகி என்று பெயர் வைத்திருந்தார்) அளவான பரிதாபப்படவைக்கும் எக்ஸ்பிரஷன்ஸ் என்று ஏகத்துக்கு என் நெஞ்சை அள்ளிய பாடல்.
http://i1.ytimg.com/vi/r0YLuo_zVGg/mqdefault.jpghttps://i.ytimg.com/vi/5Wa135tLQCQ/hqdefault.jpg
பிரதாப் போத்தன், சுரேகா நடித்த 'தகரா' மல்லு தமிழில் 'ஆவாரம்பூ' ஆனது. இரண்டுமே கவர்ச்சியை அள்ளித் தெளித்தவை. தமிழைவிட மலையாளத்தில் சுரேகா கூடுதல்.
ஆனால் பாடல்களில், இசையில் ராஜா பிளந்து கட்டினார். ஒவ்வொரு பாடலும் பெரும் வரவேற்பை பெற்றன.
https://youtu.be/YtTGh8WfgSc
'உள்ளத்தில் குழந்தைகளடி'
'பெண்ணின் பெருமை'யை நிலை நாட்ட நடிகையர் திலகம் தோற்றத்தில் வாலிபனாயும், குணத்தில் குழந்தையாகவும் இருக்கும் அரைக்கிறுக்கு கணவன் ஜெமினியை மணந்து, அவன் குணம் தெரிந்து, வெளியே சொல்ல முடியாமல் மனம் புழுங்கி தனக்குத்தானே முதலிரவில் பாடும் பாடல். நடிகையர் திலகம் அந்தப் பட்டத்திற்கு பெருமை சேர்ப்பதை கண் கூடாக இப்பாடலில் காணலாம். முகம் சோக ஜாலங்கள் நிகழ்த்துகிறது. ஜெமினியின் அப்பாவி நடிப்பும் ஜோர்.
'மாசில்லாத எனது வாழ்வும் மலரக் கூடாதோ' அருமையோ அருமை.
'இதய வானில் ஒளியை வீசும் இன்ப நிலாவே'
https://youtu.be/MVnWTFyJAoE
'உள்ளத்தில் குழந்தைகளடி'
குணாவைப் பற்றி முழுதும் தெரிந்த புரிந்த வரல்ஷ்மியின் ஆறுதல். 'குணா'வைப் பற்றிதான் நம் எல்லோருக்கும் தெரியுமே! அதனால் அதிக விளக்கம் தேவையில்லை.
உன்னை நானறிவேன்
என்னையன்றி யாரறிவார்
கண்ணில் நீர் வழிந்தால்
என்னையன்றி யார் துடைப்பார்?
https://youtu.be/AbfqLijGqeI
இதே பாடல் ரேகாவிற்கும் உண்டு.
https://youtu.be/DHyAMW9Lr-Q
ராகவேந்தர்,
எனக்கு தெரிந்த ஒரே வக்கிரம் ,இந்த பாடல் மட்டுமே.
வக்ர துண்ட மகாகாய
https://www.youtube.com/watch?v=EiLkqPOTWP8
நான் சந்திரசேகர் ஆள் என்று நினைக்கிறீர்கள்.
எனக்கு சந்திரசேகரை பிடிக்கும்.உங்களையும் பிடிக்கும். அவர் பெயரை சொல்லி வயிறு வளர்க்கும் வீணர்களை மட்டுமே பிடிக்காது.
உங்களின் ஊமை பெண் என்னை அசைத்து விட்டாள் .தொடருங்கள்.