Originally Posted by
vasudevan31355
கிருஷ்ணாஜி,
'ரங்கா' படக்கதை பற்றிய பதிவு படித்தேன். நன்றி! ஆனால் கலைஞானம் தூயவனிடம் கொடுத்த கதைக்கும், ரங்கா படத்தில் தூயவன் கொடுத்துள்ள ஸ்க்ரீன்பிளேவிற்கும் மலையளவு வித்தியாசம்.
கதையின் அடிப்படைக் கருவை மட்டுமே எடுத்துக் கொண்டு ரஜனிக்கேற்ப 'ரங்கா' கதை மாற்றப்பட்டுள்ளது. (பில்லா மாயை வேறு அப்போது ரொம்ப ஜாஸ்தி) ரங்கா படமே ஒரு அன்புத் தம்பதியரின் குழந்தையை மையமாகக் கொண்டு அதை ரஜனி கடத்த முயற்சிப்பது, கராத்தே மணி மனம் திருந்தி அந்த குழந்தைக்கு பாடிகார்டாக இருந்து காப்பாற்ற முயற்சி செய்வது எனப் போகும்.
நீங்கள் பதிந்துள்ள பதிவு சில மறைந்துள்ள உண்மைகளை உணர்த்துவதாகத் தெரிகிறது. இரண்டாவது எந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருக்கு என்றும் தெரியவில்லை.
நடிகர் திலகம் பற்றிய 'பாசமலர்' மோகன் பற்றிய பதிவுக்கு நன்றி கிருஷ்ணா சார். . மோகன் பற்றிய பல நல்ல விஷயங்களைத் தெரிந்து கொள்ள முடிந்தது.