நானும் செலவைப் பகிர்ந்து கொள்கிறேன்..
நடிப்பென்றால் என்னவென்று தெரிய மாட்டார்
.. நன்றாக நாக்கூச உளறிச் செல்வார்
துடிப்பான நடிப்பினிலே தோன்றும் வண்ணம்
..தோயாமல் பலவகைகள் செய்த தன்மை
படித்ததுவோ நடிப்புத்தான் வேறு என்ன..
..பகிர்ந்ததுவோ அற்புதமாய் நமக்குத்தானே
நடிப்புக்கோர் உயரமென அவரை விட்டால்
.. நானிலத்தில் யாருண்டு சொல்லும் நீரே..
சிங்கையிலே பார்த்துவிட்ட சின்னப் பெண்ணில்
..சீராகக் காதலினைக் கொண்ட வேகம்
நங்கையவள் கரம்பற்றிப் பொழிந்த பாடல்
..நாட்பொழுதும் காதுகளில் ரீங்கரிக்கும்
மங்கையவள் மலர்ச்ச்சிசுவைக் கொடுத்த பின்னால்
..மரித்துத்தான் போகையிலே கொள்ளும் சோகம்
சிங்கமெனத் துன்பங்கள் தாக்கும் போது
..சீராக நடிப்பாற்றல் காட்டி நிற்பார்..
உதவிக்கு வந்தவனை உள்ளாழ்ந்து நட்பில்
..உளமார மனமார உபசரித்த பாவம்
மதனவனின் ஆசிகளைப் பெற்றிருந்த பெண்ணை
..மனசுக்குள் காதலித்து அவளிடமே மெல்ல
இதம்பதமாய் இச்சையுடன் சொல்லவரும் போது
..இனியவளோ நண்பனுடன் சென்றமனம் சொல்ல
விதம்விதமாய் வடித்திருப்பார் முகத்தினிலே பாவம்..
..வித்தகராம் இவருக்கெலாம் இதுவெல்லாம் தூசு..
நன்மை செய்து துன்பம் வாங்கும்
நல்ல உள்ளம் தன்னையே
கண்கள் எல்லாம் கூட்டிக் கூட்டிக்
காட்டி விட்ட தன்மையை
சின்னக் குழந்தை கூடக் கொஞ்சி
..சின்னப் பிள்ளை போலவே
வண்ண மாக நடித்த ஆற்றல்
..வானும் கூட அறியுமே..
அவன் தான் மனிதன் எனக்கு மிகவும் பிடித்த படங்களில் ஒன்று..திரைக்கதை வடிவமைப்பில்
குறையிருக்கலாம்..ஆனால் அதைப் பார்த்து இது நடிப்பா எனச் சொல்பவரை deaf,dumb and insane
என்று தான் சோல வேண்டும்..
பாடலில் முழுப் படத்தையும் கொண்டுவர இயலவில்லை..வழக்கம் போல - வாசக தோஷ சந்தவ்யஹ. :)