Originally Posted by
mr_karthik
டியர் கிருஷ்ணாஜி,
70-களில் தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் இயங்கிய சில முக்கிய மேடை மெல்லிசைக்குழுக்கள் பற்றிய விவரங்களை தந்து கடந்த கால நினைவுகளை உசுப்பிவிட்டீர்கள். நீங்கள் சொன்னதுபோல அப்போது சேனல்கள், குறுந்தகடுகள் போன்றவை இல்லாததால் இம்மாதிரி மெல்லிசைக் குழுக்களுக்கு நல்ல வரவேற்பு. இவைகளோடு ஜேசுதாஸ்-சுஜாதா மெல்லிசைக் கச்சேரிகளும் அப்போது களைகட்டின.
ஏ.வி.ரமணன் குழுவுக்கு அப்போது நல்ல வரவேற்பு. அதை வைத்துத்தான் மன்மத லீலையில் 'நேற்றொரு மேனகை இன்றொரு ஊர்வசி' பாட மெல்லிசை மன்னர் வாய்ப்பளித்தார்.
ரமணன் பிற்காலத்தில் 'தமிழ்த்தாத்தா' என்ற டாக்குமென்ட்ரி சீரியலில் தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதைய்யராக நடித்தார். வேடப்போருத்தம் கனகச்சிதம். இந்த ரோலுக்கு முதலில் பரிசீலிக்கப்பட்டவர், மறைந்த ரகுவரன் அவர்கள்...