-
மக்கள் திலகம் திரு எம் ஜி ராமசந்திரன் அவர்கள் நடிப்பில் தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் வெளிவந்து வெற்றிபெற்ற தாயை காத்த தனயன் திரைப்படம் திருச்சி கெய்டி திரை அரங்கில் தினசரி 4 காட்சிகள் வரும் வெள்ளிகிழமை (05-06-2015) முதல் திரயிடபடுகிறது என்ற மகிழ்ச்சியான தகவலை நண்பர்கள் அனைவருக்கும் பகிர்ந்துகொள்கிறேன்.
மதுரை சென்ட்ரல் திரையரங்க மேலாளர் திரு பாலமுருகன் அவர்கள் திருச்சி உரிமம் வைத்துள்ள திரைப்படம் இது. திரு கண்ணன் என்கிற நண்பர் மூலம் திருச்சி ஈஸ்வரன் ஐயர் வழியாக இந்த திரைப்படம் கெய்டி திரை அரங்கில் திரயிடபடுகிறது.
தாயை காத்த தனயன் திரைபடத்திலிருந்து எனக்கு பிடித்த ஒரு அருமையான பாடல். கேமரா ஒரு கட்டத்தில் க்ளோசப் அவரை நோக்கி செல்லும். அவர் முகத்தில் அப்படி ஒரு சாந்த்தம் பரவி இருப்பதை காணலாம் !
https://www.youtube.com/watch?v=aNpT2QbfQzQ
தாயை காத்த தனயன் திரைபடத்திலிருந்து எனக்கு பிடித்த சிலம்பு பயிற்சி காட்சி
https://www.youtube.com/watch?v=SDdNnRM1O94
- VIDEO COURTESY : Mr. SAILESH BABU. THANKS SIR !
RKS
-
வாங்க திரு.ஆர்.கே.எஸ்., எங்கே ரொம்ப நாளா காணோம். தாயைக் காத்த தனயன் படம் திருச்சியில் வெளியாகும் செய்தியையும் வீடியோ காட்சிகளையும் பதிவு செய்ததற்கு நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
Quote:
Originally Posted by
Muthaiyan Ammu
கெட்ட போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்
ஒரு பெரியவர். அவரை ஜகத்குரு என்று அழைப்பார்கள். ஒருமுறை அவர் வடமாநிலங்களுக்கு யாத்திரை சென்றபோது, ஒருவர் அவர் தங்கியிருந்த இடத்தில் அவரை சந்தித்து, ஒரு குறிப்பிட்ட மதத்தின் குருவாக இருக்கும் உங்களை இந்த உலகத்துக்கே குரு என்று சொல்கிறார்களே? அதை எப்படி ஏற்க முடியும்? நீங்கள் எப்படி ஏற்கிறீர்கள்? என்று கேட்டார்.
அதற்கு அந்தப் பெரியவர், ‘‘அப்படியா? நான் அப்படி நினைக்கவில்லை. அவர்கள் ஜகத்குரு என்று சொல்லும்போதெல்லாம் இந்த ஜகமே எனக்கு குரு என்பதாகத்தான் நினைக்கிறேன்’ என்றார். கேள்வி கேட்டவர் வெட்கி, அந்தப் பெரியவருக்கு வணக்கம் தெரிவித்து போய்விட்டார். அந்தப் பெரியவர்...
காஞ்சி மகா பெரியவரேதான் அவர். 1966-ம் ஆண்டு ஐ.நா. சபையில் எம்.எஸ்.அம்மா அவர்கள் பாடுவதற்காக அவர் கொடுத்த பாடல்தான் உலகையே அன்பால் வென்று எல்லாரும் சுகமாக வாழ வேண்டும் என்பதை விளக்கும் ‘மைத்ரீம் பஜத அகில ஹ்ருஜேத்ரி....’
அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் நாடுகளுக்குள்ளே சண்டை ஏது? போர் ஏது? வசுதேவ குடும்பகம் என்பதுபோல உலகமே ஒரு குடும்பமாகிவிடுமே?
அப்படிப்பட்ட நிலை வந்தால்......... இதைத்தான் புரட்சிக் கவிஞர் பாரதி தாசனும் ‘புதியதோர் உலகம் செய்வோம், கெட்ட போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்...’ என்கிறார்.
உலகமே ஒன்றானால் தனியுடமை கொடுமை ஏது? அந்த நிலை அடையவேண்டும் என்ற உணர்வு நமக்கு வேண்டும். அந்த உணர்வு வந்தால் அயராமல் உழைப்போம். தனியுடமை பேசும் மனிதரையும் ஒதுக்கிவிடுவோம்.
உணர்வெனும் கனலிடை
அயர்வினை எரிப்போம்
ஒரு பொருள் தனி எனும்
மனிதரைப் பிரிப்போம்
பிரிப்பது என்றால் அவர்களை பிரித்து துரத்துவது என்று அர்த்தமல்ல. அவர்களை பிரித்து இனம் கண்டு பின்னர் திருத்த வேண்டும். சூழ்நிலையால் தவறு செய்யும் மனிதர்களையும் பண்படுத்தி நேர் வழியில் திருத்தும் கதையமைப்பைக் கொண்ட மக்கள் திலகம் நடித்த பல்லாண்டு வாழ்க திரைப்படத்தில் இடம் பெற்ற புரட்சிக் கவிஞரின் ‘புதியதோர் உலகம் செய்வோம்.’ பாடல் மிகவும் அருமையான சிந்திக்கத் தூண்டும் பாடல்.
ஆஹா... எதையோ சொல்ல வந்து எங்கோ போய்விட்டது. மகா பெரியவரை பற்றி சொன்னேனே. இன்று அவரது பிறந்த நாள். அவரது நினைவோடு புரட்சிக் கவிஞர் பாடலை மக்கள் திலகம் பாடும் காட்சியை ரசிப்போமே. (நண்பர்கள் யாராவது பாடலை தரவேற்ற வேண்டுகிறேன்.)
புதியதோர் உலகம் செய்வோம்
கெட்ட போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்
மைத்ரீம் பஜத அகில ஹ்ருஜேத்ரி...
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
-
-
-
-
-
-