Originally Posted by
P_R
:lol:
Jokes apart, அந்தக் கதைக்களன்/காலம் நடனக்கலைஞர்களின் அன்றைய சமுதாய நிலை இன்னைக்கு நிறைய பேருக்கு முழுசா புரியாது இல்லை?
வடிவாம்பாள் ஒரு முன்னாள் கலைஞர்னு கேள்விப்படுறோம்.
"இப்படி போகுற இடத்துல எல்லாம் பகையை சம்பாதிச்சுக்கிறியேம்மா....நமக்கு நாலு பெரிய மனுஷாலோட தயவு தேவை"ன்னு உண்மையா நினைக்குறா. மோகனா நடனத்துல பெரிய ஆளா வரணும்னும் ஆசைப்படுறா.
அந்த கதைக்காலம் ஒரு cusp of eras (இருவேறு காலகட்டங்கள் சந்திக்கும் நேரம்).
பிரபுக்களின் - அதாவது தனவான்களின் :-) - ஆதரவில் கலைஞர்கள் தழைக்கும் காலம் மறைந்து. கச்சேரிக்கு காசு, சபாக்கள் என்று கலைஞர்கள் மக்களிடம் (கிட்டத்தட்ட) நேரடியாக பணம் பெற்று சம்பாதிக்கும் காலம்.
இது மாபெறும் மாற்றம். சமூக சரி/தப்பு'கள் இங்கங்கென மாறு காலம் (an era of flux in the economic order and thus the attendant social values).
பலநூறு வருடங்களாக இயங்கும் விதம் மாறுகிறது
(will make one digressive post next to emphasize this point)