-
படத்தின் பாடல்கள் - ஒரு சிறப்பு பார்வை
1.இதழ் மொட்டு விரிந்திட – மாயவநாதன் – பி.பி.ஸ்ரீநிவாஸ், சுசீலா
ஜெமினி கணேசன், சாவித்திரி- அருமையான பாடல் - பல முறை ஸ்ரீலங்கா வானொலியில் கேட்கப்படும் பாடல்
2. பந்தல் இருந்தால் கொடி படரும் – கவி. ராஜகோபால் – டி.எம்.சௌந்தர்ராஜன், எஸ்.ஜானகி
NT & தேவிகா
பந்தல் இருந்தால் கொடி படரும்...
பாலம் அமைந்தால் வழி தொடரும்...
பந்தல் இருந்தால் கொடி படரும்...
பாலம் அமைந்தால் வழி தொடரும்...
கைகள் சேர்ந்தால் ஒலி பிறக்கும்...
இதழ்கள் சேர்ந்தால் மொழி பிறக்கும்...
பந்தல் இருந்தால் கொடி படரும்...
பாலம் அமைந்தால் வழி தொடரும்...
நெஞ்சினில் ஆசை நிறைந்திருக்கும்..
நிலைமையும் அதனை மறைத்திருக்கும்...
நெஞ்சினில் ஆசை நிறைந்திருக்கும்..
நிலைமையும் அதனை மறைத்திருக்கும்...
காலம் வந்தால் காய் பழுக்கும்...
காத்திருந்தால் கனி கிடைக்கும்...
பந்தல் இருந்தால் கொடி படரும்...
பாலம் அமைந்தால் வழி தொடரும்...
கடல் நடுவே நீர் மீன் பிடிக்கும்..
இரு கண்களும் இமையிடம் எதை கேட்கும்...
கன்னியின் உள்ளம் ஏன் மயங்கும்...
அவள் கண்ணம் இரண்டும் ஏன் சிவக்கும்...
காதல் நெருப்பில் குளித்திருக்கும்...
அன்பு கண்ணிரெண்டும் அதில் படிந்திருக்கும்...
கோமள மாம்பழ கண்ணத்திலே இதழ்
குங்குமத்தை அள்ளி இறைத்திருக்கும்...
குங்குமத்தை அள்ளி இறைத்திருக்கும்...
பந்தல் இருந்தால் கொடி படரும்...
பாலம் அமைந்தால் வழி தொடரும்...
இடைத் தழுவும் கைகள் மாலைகளோ...
உங்கள் இதய தளம் வண்ண மலரணையோ...
மடைத் திறக்கும் அன்பு வார்த்தைகளோ...
சிந்தும் வார்த்தையெல்லாம் அங்கு காவல்களோ...
கண்ணிரண்டும் ஒளி விளக்குகளோ...
இரு கனியிதழ் ரத்தின கதவுகளோ...
கண்ணங்களும் தங்க பாலங்களோ...
என் காதலுக்கே தந்த பரிசுகளோ...
காதலுக்கே தந்த பரிசுகளோ...
பந்தல் இருந்தால் கொடி படரும்...
பாலம் அமைந்தால் வழி தொடரும்...
கைகள் சேர்ந்தால் ஒலி பிறக்கும்...
இதழ்கள் சேர்ந்தால் மொழி பிறக்கும்...
ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஆ ஆ ஆ ஆ...
அருமையான பாடல் - ஆழ்ந்த கருத்துக்கள் - பல முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்க்க தோன்றும் .
3. நித்தம் நித்தம் மாறுகின்றதெத்தனையோ – மாயவநாதன் – சீர்காழி கோவிந்தராஜன்
என்னை இளம்வயதுமுதல் கவர்ந்த பாடல்களுள் இதுவும் ஒன்று. திரைக்கதைக்கு ஏற்ப அமையப்பெற்ற அருமையான பாடல் வரிகள். கவியரசின் கைவண்ணமென்றே எண்ணியிருந்தேன்.மாயவநாதனின் பாடல் என்பது பிறகே தெரிய வந்தது.
4. கவலைகள் கிடக்கட்டும் மறந்து விடு – மாயவநாதன் – டி.எம்.சௌந்தர்ராஜன், பி.பி.ஸ்ரீநிவாஸ்
இந்த பாடலை" கேட்டவைகளில் பிடித்து " என்ற பதிவில் அலசி விட்டேன் .
The part where Gemini sings " anannil ayiram per undu" with vengenance but also meant like praising to sivaji , is simply superb.
5. என் கதை தான் உன் கதையும் – கவி.ராஜகோபால் – பி.சுசீலா, எஸ்.ஜானகி
இந்தப்பாடலைப் பலர் கேட்டதேயில்லை. ஆனால் மிகவும் அர்த்தமுள்ள பாடல்.
6. எப்போ வச்சுக்கலாம் – மாயவநாதன் – ஜே.பி.சந்திரபாபு
ஜனரஞ்சகமான பாடல்
-
-
-
-
-
-
-
-
-