http://i62.tinypic.com/2sbnbcl.jpg
Printable View
From Paasam
jal jal jal enum salangai oli .........
http://www.youtube.com/watch?v=yyASKLWGrvg
I posted this song because it brings back memories of my childhood summers. We used to travel by a bullock cart (maattu vaNdi) from Papanasam railway station to our native village along Vettar river. It was fun. More fun was climbing mango trees and tamarind trees for fruits. Nothing like raw mango with salt ! :) Then there was tender coconut (iLaneer) and tender palms(nongu). There was also padhaneer (palm sap). Playing chadu gudu in the river bed or digging for water (ootru) was also fun.
Those were the days. Will never come back! :)
பாடல் ஆரம்பவரியே சாரம்சத்தை சொல்லிவிடும். ராங் நம்பர் என்றாலே நாம் பொதுவாக இணைப்பை துண்டித்துவிடச் செய்வோம். ஆனால் அப்படி துண்டிக்காமல் தொடர வைக்கும் ஒரு கள்ள நட்பைத்தான் இப்பாடல் சொல்கிறது. கதை நாயகன் அப்படிப் பட்டவன். படம் 76-ல் வந்திருக்கிறது என்றால் அப்போதைய காலக் கட்டத்தில் இந்த விஷயம் எந்த அளவுக்கு ஒரு புதுமையானதாக பார்க்கப் பட்டிருக்கும் என்பதை 2014-களில் புரிந்து கொள்ள முடிகிறது. நகரங்களில் டெலிபோன் பழக்கம் அந்த அளவுக்கு பெரும்பாலான மக்களால் பயன்படுத்தப் பட்டிருக்காது. 76-களில் உயர்தட்டு மற்றும் நடுத்தரத்திற்கும் மேற்பட்ட அடுக்கு மக்களால் மட்டுமே டெலிபோன் பயன்படுத்தப் பட்டிருக்கும். திருமணமான பெண் திருமணமாகாத இளைஞரிடம் / திருமணமான ஆண் திருமணமாகாத இளைஞியிடம் அந்தரங்கமாக உரையாடுவது.. எனக்குத் தெரிந்து 90-களில் நான் இந்த இருவகை ஆண்களையும் கடந்து வந்திருக்கிறேன். விசித்திரமான உலகம் அது.. அதில் ஒருவன்.. எனக்கும் அவனுக்கும் ஓரிரு அடிகள்தான் தூரம் இருக்கும். ஆனாலும் அவன் டெலிபோனில் என்ன பேசுகிறான் என்பதை ஒட்டுக் கேட்கவே முடியாது. அப்படி ஒரு மிகக் குறைந்த டெசிபலில் (பாம்புக்கு கூட கேட்காத டெசிபல் எனவும் சொல்லலாம்) உரையாடிக் கொண்டிருப்பான் எதிர்முனையில் உள்ள பெண்குரலோடு மணிக்கணக்காக. கட்டணம் அதிகமாக கட்டவேண்டியிருக்குமே என நீங்கள் நினைக்கலாம். ஆனால் அவன் வேலைபார்த்து வந்த முதலாளியின் தொலைபேசி. பாவம் ஒருவகையில் லாபம் இவனுக்கு. நஷ்டம் முதலாளிக்கு.
https://www.youtube.com/watch?v=wFOccIXS3C0
படத்தின் பெயர் மன்மத லீலை. பாடலோ ஹலோ மைடியர் ராங் நம்பர். படவெளியீடு நாட்களில் மிகவும் கலகமான ஒன்றாக அனைவராலும் பேசப்பட்டிருக்கும் என நினைக்கிறென். எம்.எஸ்.வியின் பாடகர் தேர்வுக்கு பாராட்டுக்கள். இளைஞனாக கமல். பொருத்தமாக யேசுதாஸ். பாடல் நாயகிக்கு அதுவும் கணவருக்குத் தெரியாமல் கள்ளத் தனமான உரையாடல் நடத்தும் பெண் குரலாக எல்.ஆர்.ஈஸ்வரி. ஆரம்ப காலத்திலேயே இப்படி ஒரு பெண்பித்தர் கதாபாத்திரத்தில் நடிக்க இப்போதுள்ள நடிகர்களுக்கு துணிச்சல் வருமா? பாடல் வரிகளுக்கு இடையிடையே no, no no, not yet, really, not mind என பாத்திரங்கள் இயல்பாக பேசிக் கொள்ளுவது போல மெட்டினை உருவாக்கியிருப்பது சிறப்பு. பையன் காஞ்சுபோன மாடுபோல ரொம்பவும் எதிர்பார்ப்போடு இருக்கானே என உணர்ந்து "பொறுமையுடன் இறுங்கள்" என வல்லினம்போட்டு அதட்டுவது, அதற்கு பையன் "முதுமை வரும் வரையோ?" என்பதாக உரையாடல் செல்லும் கண்ணதாசன் ரகளை.
சில நேரம் இமிடேஷன் நகைகள் ஒரிஜினல் அளவுக்கு நெருங்கி வருவதுண்டு. அதுபோலவே இந்த மேடைக்கச்சேரி பாடகர்-பாடகியும். ரொம்ப யதார்த்தமாக ரசித்துப் பாடி அசலின் தரத்தை நெருங்கியிருக்கிறார்கள்.
https://www.youtube.com/watch?v=TBlbYCt-yCA
பேராசிரியர் சார் (ராஜ்ராஜ் சார் )
மன்னிக்கவும் :) professor என்பதற்கு பேராசிரியர் என்று லிப்கோ ஆங்கில தமிழ் அகராதியில் போடப்பட்டு இருந்தது . அதனால் உங்களை இப்படி அழைக்கிறேன் . பாசம் பற்றிய உங்கள் மலரும் நினைவுகள் அருமை.
பாபநாசம் என்பது தஞ்சை மாவட்டம் பாபநாசம் அல்லது நெல்லை மாவட்ட பாபநாசம் . ஏன் என்றால் நெல்லையிலும் பாபநாசம் என்ற ஒரு ஊர் உண்டு. அங்கு இருக்கும் மலைக்கு மேல் தான் தாமிரபரணி உற்பத்தி . ராமாயணத்தில் வால்மீகி எழுதி உள்ள சில இடங்களில் இந்த தாமிரபரணி நதி பற்றி சொல்ல பட்டு உள்ளது.சமீபத்தில் நடிகர் கமல் கூட இந்த பெயரில் ஒரு படத்தில் நடித்து கொண்டு இருக்கிறார். தென்காசி ,அம்பசமுதரம் போன்ற ஊர்களில் படபிடிப்பு நடந்து உள்ளது. தீடீர் என்று உடல்நலம் குன்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பிறகு வீடு திரும்பி உள்ளார். நடுவில் 'இதை வைத்து நாடகம் நடத்த' நினைத்த நண்பர்களுக்கு நன்றி கலந்த எச்சரிக்கை விடுத்தார் .
நீங்க நிறைய பழைய சம்பவங்களை நினைவு கூர்ந்து உள்ளீர்கள். நான் இரண்டு தினங்களுக்கு முன் நடந்த சம்பவத்தை சொல்கிறேன் .
மீண்டும் மன்னிக்கவும் .அந்த நாட்கள் மீண்டும் வாராது . ஆனால் நீங்கள் மீண்டும் வந்து இது போல் பல பதிவுகள் போட வேண்டும் என்பது எங்களின் அவா
இந்த கொடுக்காபுளி என்று ஒரு மரம் உண்டு அதில் நாங்கள் பள்ளி காலங்களில் மரம் ஏறி பறித்த நினைவு உண்டு . இதன் பழம் மிகவும் இனிமையாக இருக்கும்
அன்பு எஸ்வி சார்
ராஜகுமாரி (tr ) ராஜகுமாரி நிழல்படங்கள் அருமை . இன்னொரு படத்தில் இருக்கும் அந்த நடிகை யார் ? எனக்கு மட்டும் ரகசியமாய் சொல்லுங்களேன் .. பாருங்க ரகசியமாய் என்று சொன்னவுடன் ஒரு பாடல் நினைவுக்கு வருகிறது . 'ராத்திரிக்கு ராத்திரி என் நினைப்பு வர வேண்டும் .ராஜன் மட்டும் ராணியை தான் ரகசியமாய் தொட வேண்டும் ' சுசீலா பாடல் பிரமீளா பாடுவது போலவே பாடி இருப்பார் மனிதரில் மாணிக்கம் திரை படத்தில் .
ராஜகுமாரி என்றவுடன் ராமண்ணா நினைவுக்கு வருவார் .ஏன் என்றால் ராமண்ணாவின் சகோதரி . மனோஹர வசந்த சேனை ,வானம்பாடி 'நீ பாடும் போது உமா பாடற மாதிரி இருக்கு -கங்கை கரை தோட்டம் ' ,ராஜகுமாரி திரை அரங்கு, அங்கு குடி இருந்த சாவித்திரி இப்படி பல நினைவுகள் கிளம்புது . மிக்க நன்றி
அந்த கை வரிசை பாடல்கள் ரசித்தீர்களா
ஹாய் குட்மார்னிங்க் ஆல்..
ராஜ்ராஜ் சார்..ஆற்றங்கரை நாட்கள் நினைவுகள் சூப்பர்.. நானும் வைகையாற்றிலே ஐந்தோ ஆறாம் வகுப்பிலோ போய்க் குளித்துவிட்டு வந்திருக்கிறேன்..வீட்டிற்குத்தெரியாமல்.. ரொமப நல்லா இருக்கும்..ம்ம் சின்னக் குழந்தையாய் மாறணும்போல இருக்கு..:)
வாங்க் வெங்க்கி ராம்..
//ரொம்பவும் எதிர்பார்ப்போடு இருக்கானே என உணர்ந்து "பொறுமையுடன் இறுங்கள்" என வல்லினம்போட்டு அதட்டுவது, அதற்கு பையன் "முதுமை வரும் வரையோ?" என்பதாக உரையாடல் செல்லும் கண்ணதாசன் ரகளை. // அருமையாய் ரசிக்கிறீர்கள்.. வெரி நைஸ்..கொஞ்சம் அவ்வளவாக ஊறாத தயிர்வடை மாதிரி ஒய்.விஜயா இருப்பார்..இருந்தாலும்கொஞ்சம் வித்யாச அழகு..லைட் மியூசிக்கில் அப்புறம் கேட்டுச் சொல்கிறேன்..கமல்ஹாசனின் மூக்குக் கண்ணாடி எனக்கு ப் பிடிக்கும்..அந்த ஃப்ரேம் இப்போ தான் போட்டிருக்கிறேன்.. நன்றி..
எஸ்வி சார்..என்னது இது திடீர்னு டி.ஆர்.ராஜ குமாரி..இன்னிக்கு நினைவு தினமா.. என் தாத்தா இருந்திருந்தால் பார்த்து சந்தோஷப் பட்டிருப்பார்.....அதென்ன பாமா ஓகே..திடீர்னு ருக்குமணி நினைவு வருது..ருக்குமணியே பரப் பர பர,, ருக்குமணி ருக்குமணி அக்கம்பக்கம் என்ன சத்தம்..அப்புறம் வேற ருக்குமணிப் பாட்டு உண்டா..(ஏனோ குட்டைப் பாவாடை -கெ.வா.பேசும் ஃபராவின் தங்கை- தபுவின் நினைவு தான் வருகிறது..ருக் ருக் ருக் ஹரே பாபா ருக் ஓ மை டார்லிங்க் கிவ் மி எ லுக்)
அப்புறம் வரட்டா
ராஜ்ராஜ் சார்..வெண்ணிலா ப்ராஜக்ட் சீக்கிரம் செய்கிறேன்..கொஞ்சம் டைம் கொடுங்கள் ஓரிரு நாட்களில் ஓகேயா :)