http://i818.photobucket.com/albums/z...psdc1c5115.jpg
Printable View
Part 8 : *படத்தை பற்றி இந்த திரியின் சில ஜாம்பவான்களின் கருத்துக்கள்*
Mr.Rangavendra
எல்லா வகையான நடிப்புக்கும் இலக்கணம் வகுத்த நடிகர் திலகத்தின் மிகச் சிறந்த திரைப்படங்களில் பந்த பாசம் முக்கியமான இடம் பெறுவதாகும். தேவிகாவைக் காதலித்தாலும் சந்தர்ப்பத்தாலும் நெருக்கடியாலும் உடல் ஊனமுற்ற சந்திரகாந்தாவை மணப்பதாக திரைக்கதை அமைக்கப் பட்டிருக்கும். ஒவ்வொரு காட்சியிலும் நடிகர் திலகத்தின் Subtlity in acting இவ்வகை நடிப்பிற்கும் முதல் பாடமாய் விளங்குகிறது.
குறிப்பாக கவலைகள் கிடக்கட்டும் மறந்து விடு பாடல் காட்சியை எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத வகையில் நடிகர் திலகத்தின் மென்மையான உடல் மொழியுடன் கூடிய நடிப்பு நம்மைக் கட்டிப் போட்டு விடும்.
பல காட்சிகளில் உணர்ச்சி பூர்வமாக நடிக்க சந்தர்ப்பங்கள் இருந்தாலும் பாத்திரத்தின் தன்மைக்கேற்றவாறு மிகவும் மென்மையாக கையாண்டிருப்பார்.
குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய காட்சி திருமணக் காட்சி. சந்திரகாந்தாவை திருமணம் செய்ய கையெழுத்திடும் காட்சியில் சாட்சிக் கையெழுத்தை காதலியே இடுவதாக வரும் காட்சியில் தேவிகாவின் நடிப்பு மெய் சிலிர்க்க வைக்கும். பார்வையாலேயே இக்காட்சியைத் தூக்கி நிறுத்தி விடுவார் நடிகர் திலகம்.
இயல்பு நடிப்பு என்றால் என்ன என்பதற்கு இலக்கணம் பந்த பாசம் திரைப்படத்தில் நடிகர் திலகத்தின் நடிப்பு அமைந்திருக்கும்.
ஒவ்வொரு ரசிகனும் தவறாமல் பார்த்து ரசிக்க வேண்டிய திரைக்காவியம் பந்தபாசம்
Thiru. Subramaniam Ramajayam
MY ninaivugal of the movie I have devloped the liking of watching NT movies on the release days when i was 13 yrs old being diwali release i was afraid of leaving the house that day on the net day along with my close friend went to BROADWAY and all the tickets were full and the return crowds because of not getting tickets very huge.so we stated returnin home just opp to the theatre where erstwhile muugan theatre was there some ladies unknown to us called and gave tickets volountarily. we were very vert happy and allaparais great.
Mr.Gopal
ஒரு நல்ல படம்.என்னை கவர்ந்தவை-நித்தம் நித்தம் பாடல்- அப்படியே மனசை கீறி கசிய வைக்கும்.சீர்காழியின் குரல் ஜாலம்,உணர்ச்சி பிழம்பான ஏற்ற இறக்க கசிவுகள்.மாயவநாதன்,விஸ்வநாதன்-ராமமூர்த்தியின் மேஜிக்.
கவலைகள் கிடக்கட்டும்- ராகவேந்தர் குறிப்பிட்ட படி,சிவாஜியின் உடல் மொழி,பாவங்கள்,இயல்பான பாடலின் தாளகதிக்கேற்ப ,மனநிலைக்கேற்ப ...
என்ன சொல்வது?
பந்தல் இருந்தால்- ஆஹா ...வாணிக்கு அடுத்த அண்ணியின் இணைவில் ....
ஒரு அற்புதமான இடம்- காதலியை சந்திக்கும் போது,கதாநாயகன் மனநிலை சரியிருக்காது.ஒரு வார்த்தை கூட பேசாமல் வெடுவெடுவென்று இருந்து சென்று விடுவார்.இந்த மாதிரி ஒரு காட்சியமைப்பை வைத்த பீம்சிங்கிற்கு சிரம் தாழ்த்திய 2014 இன் வணக்கம்.
====
ஒரு அற்புதமான படத்தை இந்த இனிய உழவர் திரு நாளில் அலசிய திருப்தியுடன் என் பதிவை முடித்துகொள்கிறேன்
வணக்கம்
அன்புடன்
ரவி
முரளி சார்,
நீங்கள் நடிகர் திலகத்தின் படங்களை பார்த்த விதத்தை விவர்க்கும் விதம் நடிகர் திலகத்தின் படங்களை மீண்டும் ஒரு முறை அந்த காலகட்டத்தில் போய் பார்ப்பது போல் உள்ளது . தொடர்ந்து எழுதுங்கள்