நான் நடிகர் திலகத்தை தனிமையில் சந்தித்தது நெல்லையில் 9 தடவை
1.1971 தேர்தல் கூட்டத்திற்கு நடிகர் திலகம் அவர்கள் நெல்லைக்கு வந்தபோது நடிகர் திலகத்தை வரவேற்று பின் நடிகர் திலகத்திற்கு யானை மாலை போட்ட நிகழ்ச்சி (இதன் போது சில மன கசப்பான சம்பவங்கள் எல்லாம் நடந்தது இப்போது அது எல்லாம் வேண்டாம் )
2.1971-72 கால கட்டத்தில் தேர்தல் தோல்விக்கு பிறகு நெல்லை ஜங்ஷன் இல் உள்ள ஹிந்து ஹை ஸ்கூல் மைதானத்தில் காங்கிரஸ் சிவாஜி மன்ற மாநாடு நிகழ்ச்சி என்று நினவு - 2 ரூபாய் அனுமதி சீட்டு என் தாயாருடன் சந்தித்தேன்
3.மன்னவன் வந்தானடி - மணிமுத்தார் அணை/மாஞ்சோலை யில் 'காதல் ராஜ்யம் எனது ' பாடல் காட்சியின் படபிடிப்பின் போது 2 தினங்கள் அவர் உடன் தங்கி இருந்தோம்
4.தங்கபதக்கம் 100 வது நாள் விழா நெல்லை சென்ட்ரல் திரை அரங்கு மாலை காட்சிக்கு நடிகர் திலகம் அவர்கள் வந்து அவர்களை நாங்கள் எல்லாம் பூ தூவி வரவேற்றோம் . திரு நவநீதன் என்பவர் நெல்லை மாவட்ட சிவாஜி மன்ற தலைவர் ஆக இருந்தார் .
6. தூத்துக்குடியில் ஒரு திருமணத்திற்கு 1976-77 அல்லது 77-78 கால கட்டம் என்று நினைவு . நாம் பிறந்த மண் திரைப்படம் வெளியாகி சரியாக போகாத போது நாங்கள் எல்லாம் அவரை சந்திக்க சிறப்பு பேருந்து ஒன்றை அமைத்து கொண்டு சென்றோம்.அப்போது அவர் கூறியது இன்னும் நினைவில் உண்டு 'சுந்தரத்திடம் (விஎட்னாம் வீடு) சொன்னேன் இந்த படம் இந்த கால கட்டத்திற்கு சரி வராது என்று கேட்கவில்லை'
7.1977 அண்ணா திராவிட முன்னெற்ற கழகம் இந்திரா காங்கிரஸ் கூட்டணீ நெல்லை வாகையடி முக்கு தேர்தல் பிரசார கூட்டம் ' நான் ஒரு இலை அண்ணன் mgr ஒரு இலை '
1978-80 கால கட்டத்திற்கு பிறகு காங்கிரஸ் சிவாஜி மன்ற ஊடல் ஆரம்பித்த .சென்னையில் புரசை குமரன் தாக்கப்பட்ட நிகழ்வு எங்களில் சிலருக்கு அச்சத்தை தோற்றுவித்து உடனே ஒதுங்கி விட்டோம்
8 ஆண்டுகள் நடிகர் திலகம் திரைப்படம் மட்டுமே பார்ப்பது கட்சி நிகழ்வுக்கு எல்லாம் செல்லாமல்
8..பின்னர் 1987-88 தமிழக முன்னெற்ற முன்னணி உதயம் ஆன பின் நெல்லை தச்சநல்லூர் என்ற இடத்திலும் பின் நெல்லை டவுன் வாகையடி முக்கு பொது கூட்டத்திலும்
9 . திரு RSK துரை என்று ஒருவர அம்பாசமுத்திரம் தேர்தலில் MLA ஆக போட்டி இட்டார் தமிழக முன்னெற்ற முன்னணி சார்பாக .அவரது திருமணத்திற்கு நடிகர் திலகம் வருகை தந்த போது
10. 1996-97 கால கட்டத்தில் சென்னைக்கு வந்த பிறகு நிறைய தடவை அவர் கலந்து கொண்ட கூட்டம் எதுவானாலும் சென்ற நினைவு . ஆனால் ஒரு பார்வையாளனாக வெகு தொலைவில் நின்று
நடிகர் திலகம் நெல்லை வருகை எனக்குள் தோற்றுவித்த மலரும் நினைவுகள் . இது இந்த திரிக்கு சம்பந்தம் இல்லை என்றால் திரு வாசு சார் அவர்களை நீக்கி விடுமாறு கேட்டு கொள்கிறேன்