வாசு சாரின் வருகை மிக்க மகிழ்ச்சி அளித்தது.திரியில் எழுதும் வேகம் போலவே
வந்தார்
பேசினார்
சென்றார்.
அதிகம் பேச நேரமில்லை என்ற ஒரு வருத்தம் தான்.
Printable View
வாசு சாரின் வருகை மிக்க மகிழ்ச்சி அளித்தது.திரியில் எழுதும் வேகம் போலவே
வந்தார்
பேசினார்
சென்றார்.
அதிகம் பேச நேரமில்லை என்ற ஒரு வருத்தம் தான்.
SPB யின் ஆரம்பகால குரல் இனிமையில் ஒரு பாட்டு.
திரைப்படம்: மேயர் மீனாட்சி
பாடல்: கண்டேன் கல்யாணப் பெண் போன்ற மேகம்
பாடகர்கள்: P.சுசீலா, S.P.பாலசுப்பிரமணியம்
இசை: பழையது
கண்டேன் கல்யாணப் பெண் போன்ற மேகம்
அங்க்கே உல்லாச ஊர்வல ஓடம்
மணமகன் மணம்கள் மணவறைக் கோலமே
(கண்டேன்)
செம்பொன் மீனாட்சி நடத்தும் ராஜாங்க்கம்
சிரிக்கும் பூந்தோட்டமோ - இது
சேலை முந்தானை விரிக்கும் பூமாது
ஆடும் கொண்டாட்டமோ
அலைகள் நீரோட்டம் அம்மன் தேரோட்டம்
பருவப் பெண்ணாட்டமோ - பனி
மலைகள் தாலாட்டும் மலர்கள் பாராட்டும்
கலைகள் வெள்ளோட்டமோ
இது அத்தாணின் முத்தாரமோ - இந்த
அத்தானின் அச்சாரமோ
ராஜாவின் வட்டாரமோ - இந்த
ராஜாத்தி வித்தாரமோ
(கண்டேன்)
வரிசைப் பல்முத்து அழகுப் பூங்க்கொத்து
நகையில் நான் ஆடவா
வதனச் செவ்வல்லி சரியும் வண்ணத்தில்
மெதுவாய் நான் பாடவா
அடிமைப் பெண்ணேனும் உடமை உன்னோடு
அதிகம் நான் சொல்லவா
அணைக்கும் கையுண்டு ரசிக்கும் பெண்ணுண்டு
பருவம் தேனல்லவா
நான் கண்ணாடி பார்த்தாலென்ன - அதைக்
கன்னத்தில் பார்த்தாலென்ன
நெஞ்சத்தைப் பார்த்தாலென்ன - அதை
மஞ்சத்தில் பார்த்தாலென்ன
(கண்டேன்)
kanden kalyana pen pondra megam: http://youtu.be/JwmNjFuFsvM
ராகவ் ஜி..
உங்களுக்காக வெகுளிப்பெண் படத்தில் இருந்து ஜமுனா ராணி பாடியிருக்கும் இந்தப் பாடல்..
( படத்தில் இந்தக் காட்சி வந்ததா என்றும் தெரியவில்லை. முன்பு வானொலியில் இது எல்.ஆர்.ஈஸ்வரி பாடியது என்று கூறி ஒலிபரப்பிய நினைவும் இருக்கிறது )
இந்தப் பாடல் பற்றிய மேலதிக விவரங்கள் கிடைத்தால் மகிழ்வோம்
https://www.youtube.com/watch?v=Hvh2AhyVX-s
OMG (Oh My God) Melodies and Melancholies!!
கடவுளுக்கே கேள்விக் கணைகளான மானுட கீதங்கள்!!
Quote:
மனித மனம் ஒரு விசித்திரமான உணர்வுகளின் கலவைக் களமே !
அதில் கடவுள் நம்பிக்கையும் அவநம்பிக்கையும் சம விகிதத்தில் கலந்தே தெளிக்கப் பட்டிருக்கிறது !
எந்தக் கவலையுமின்றி எல்லா வளங்களும் நிறைந்து இன்புற்றிருக்கும் சமயங்களில் நாம் நாத்திகராகி நமது கண்களுக்கு இறைவன் தெரிவதில்லை !
துன்பச் சூழலில் சிக்கிச் சீரழியும் போது ஆத்திகராக மாறி கடவுள் நமது கண்களுக்குத் தெரிய வேண்டும் நமது பிரார்த்தனைகள் அவர் செவிகளுக்குச் சென்றடைய வேண்டும் என்று கடவுளின் பாதார விந்தங்களில் பணிகிறோம் !!
பூஜ்ஜியத்துக்குள்ளே ஒரு ராஜ்ஜியத்தை ஆண்டு கொண்டு கண்களுக்குப் புலப்படாமல் எங்கும் நிறைந்த பரம்பொருளை நமது இஷ்டத்துக்கு வளைத்து நாம் வாசிப்பதற்கேற்ப அவர் ஆட வேண்டும் என்று எண்ணுவது பேதமையே !!
OMG Melancholy 1 / Gemini Circus!!
பாசவலைக்குள் நாம் கட்டுண்டு கிடக்கும்போது நம்மைச் சார்ந்தவர்கள் நம்மால் நேசிக்கப் படுபவர்கள் அல்லலுறும்போது காணச் சகிக்காமல் கடவுளே உனக்குக் கண்ணில்லையா இறைவனே உனக்கு இதயமில்லையா என்றெல்லாம் பிதற்றுவது மனிதத்தின் வாடிக்கையே !
ஒரு கூட்டுப் புழுக்களாக ஜீவிதம் காணும் தொழிலாளி வர்க்கம் முதலாளி வர்க்கத்தால் சுரண்டப் பட்டு நெஞ்சொடிந்து மடியும் தருவாயில் நண்பரின் கோபம் இறைவன் மேல் திரும்புவது வேடிக்கையான வாடிக்கையே !
Quote:
மனதை நெகிழச் செய்யும் நடிப்புப் பரிமாணங்களிலே இதயங்களில் நுழைந்து ஈர விழிகளிலே வெளிவரும் குறளி வித்தைக்காரர் ஜெமினியே !!
https://www.youtube.com/watch?v=f_EQYsvrL1I
எங்கெங்கும் நீக்கமற நிறைந்தவன் இறைவனே !
ஈசனடியாரான நடிகர்திலகத்துக்கே இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடுதல் வேண்டாம் என்று எடுத்துரைக்கிறார் மானுட ரூபத்தில் வந்து பாட்டால் பாடாய்ப் படுத்தி எடுக்கும் ஜெமினி சிவன் !!
https://www.youtube.com/watch?v=MOTgW8glTHk
OMG Melodies and Melancholies Part 2
ஆனானப் பட்ட ஈசனுக்கும் சனி பகவான் பிடியிலிருந்து விடுபட முடியாமல் பிரம்மஹத்தியால் பிச்சையெடுத்து பாவம் தீர்க்க வேண்டிய சூழல் !
https://www.youtube.com/watch?v=9l1NsHpGUsE
From Vaanaratham(1955), Tamil dubbed version of Udankhatola(1955)(Hindi)
endhan kaNNaaLan karai nokki pogiraan nadhiye neeyum mella po...
http://www.youtube.com/watch?v=JFHMUuw0NRw
From the Hindi original
more saiyanji utharenge paar nadhiya dheere baho.......
http://www.youtube.com/watch?v=w8-hN7tasW8
முட்டைக் கண்ணு மோகனம்... என்று புகழப்பட்ட திரு சோ. ராமஸ்வாமி அவர்கள் மறைந்து விட்டதாக ஒரு வதந்தி..
உணமையா பொய்யா என பொழுது விடிந்ததும் தெரிந்து விடும். பொய்யாகவே இருக்கட்டும் என வேண்டுவோம்
https://www.youtube.com/watch?v=cq4BC5hRNvg
இசையரசியின் இனிய கானங்கள் புத்தம் புதிய தொடர்.. மதுண்ணாவின் விருப்பம்.
இந்த தொடரில் அடிக்கடி நாம் கேட்காத இசையரசியின் பாடல்களையும், ஊடே ஊடே சில அடிக்கடி கேட்டு மகிழ்ந்த முத்துக்களையும் பார்ப்போம்
தொடரின் முதல் பாடலாக மனைவி திரைப்படத்தில் இசையரசி இசைத்த “பெண்ணின் பெருமையே பெருமை”
பெண்ணின் பெருமையை பெண்மையின் குரலான இசையரசி பாடாமல் யார் பாட முடியும்.
மனைவி படம் சுமார் தான். பாடல்கள் கூட கொஞ்சம் சுமார் ரகம் தான். வாசு ஜி இதில் ராட்சசி பாடிய பாடல் ஒன்று மிகவும் இனிமையான பாடல் “அன்னைபோல என்னை காத்த அன்பு தெய்வமே “
சரி பாடலுக்கு வருவோம். பெண்ணின் பெருமையை அழகாக பாடல் .. அண்ணி ஸ்தானத்தில் உள்ள விஜயகுமாரி தன் கணவன் ஜெமினியின் தங்கை ரமாபிரபாவிற்கு பெண்ணின் பெருமையை விளக்கும் விதமாக அமைந்த பாடல்
பாடல் தான் எவ்வளவு இனிமை. இசையரசி பாடிய விதமோ இன்னும் அழகு..
பெண்ணின் பெருமையே பெருமை
பெண்ணின் பெருமையே பெருமை
அன்புடன் பண்பும் ஆசையும் பாசமும்
அழகும் குணமும் இயற்கையில் அமைந்த
பெண்ணின் பெருமையே பெருமை
ஆண்டவன் உலகத்தைப் படைத்து விட்டான்
அவன் அன்றுடன் பணியை முடித்துக் கொண்டான்
அவன் படைத்த உலகத்தைக் காத்திடவே
பண்புள்ள பெண்மையை அனுப்பி வைத்தான்
மஙல நினைவுகள் மனதினில் மலர்க
மஞ்சள் குங்குமம் மனையினில் வாழ்க
நெஞ்சில் கனிவு கண்களில் விளக்கு
நெற்றியில் திலகம் அழகுடன் விளங்க
பெண்ணின் பெருமையே பெருமை
பிறந்த வீட்டின் பேர் விளங்க
நீ புகுந்த வீட்டில் வாழ்ந்திடுக
பிறந்த வீட்டின் பேர் விளங்க
நீ புகுந்த வீட்டில் வாழ்ந்திடுக
இந்த அறிவுரை தான் என் சீர் வரிசை
இந்த அறிவுரை தான் என் சீர் வரிசை
இதைப் பெறுவது தான் உன் குலப் பெருமை
பெண்ணின் பெருமையே பெருமை
அன்புடன் பண்பும் ஆசயும் பாசமும்
அழகும் குணமும் இயற்கையில் அமைந்த
பெண்ணின் பெருமையே பெருமை
தமிழ் பெண்ணின் பெருமையே பெருமை
திரையிசைத்திலகம் கே.வீ.மகாதேவனின் இசையில் மிகவும் அழகான பாடல். அடிக்கடி கேட்காத பாடல்
விஜயகுமாரிக்கு பொங்குவதற்கு மிகவும் குறைந்த வாய்ப்பு இந்த படத்தில்.
https://www.youtube.com/watch?v=NYaQ7HcoCv8
அடுத்த பாடல் விரைவில்.
நீலகிரி எக்ஸ்பிரஸ் திரைப்படத்தில் சோ ராமசாமி அவர்களின் நகைச்சுவைப் பங்களிப்பு நினைவில் நிற்பதாகும்
https://www.youtube.com/watch?v=vZ8zu_IPGjE
எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய பழைய பாடல்கள்
(நெடுந்தொடர்)
38
'இன்றுமுதல் நாளை வரை என் மடியில் நீ இருந்தால்'
'சூதாட்டம்'
இன்றைய பாலாவின் தொடரில் 'இன்றுமுதல்' தேன் பாடல்.
http://i.ytimg.com/vi/SfwqFVJnlm8/hqdefault.jpg
'சூதாட்டம்' 1971-ல் வந்த படம்.
ஜெய்சங்கர், முத்துராமன், சிவக்குமார், மேஜர், தேங்காய், சோ, வி.எஸ்.ராகவன், சஹஸ்ரநாமம், கே.ஆர்.விஜயா, நிர்மலா, மனோரமா, 'சி.ஐ.டி' சகுந்தலா, ஜெயகுமாரி ('நடனம்' ஜெயகுமாரி என்று ஸ்பெஷல் கார்ட் போடுவார்கள்), ஜெயகௌசல்யா ஆகியோர் நடித்திருந்தனர். சுருளி கூட உண்டு.
மதுரை திருமாறன் கதை, வசனம் எழுதி இயக்கிய படம். எம்.எஸ்.காசி தயாரித்த படம் இது. அருமையான பாடல் வரிகளுக்கு சொந்தக்காரர் கவிஞர். இந்தப் படத்திற்கு கலைமணி உதவி இயக்குனராகப் பணி புரிந்திருப்பார். இசை....சொல்லவே வேண்டாம். 'சூதாட்டம்' மூலம் நம் இதயத்தில் இசை ஆட்டம் போட்ட எம்.எஸ்.வி தான். 'மெல்லிசை மன்னர்'தான்.
நண்பன் முத்துராமனிடம் சதா சூதாட்டமே கதியெனக் கிடக்கும் நாயகன் ஜெய், அவரைத் திருத்த முயற்சி செய்யும் குடும்ப 'விளக்கேற்றி வைக்கும்' மனைவி நாயகி கே.ஆர்.விஜயா, படித்த சிவக்குமாரை விரும்பும் தங்கை நிர்மலாவையே சூதாட்டத்தில் முத்துராமனிடம் பந்தயம் வைக்கும் நாயகன் என்று கிராம பாணியில் படம் பயணிக்கும். எல்லா அம்சங்களுமே அமைந்த திருப்தியான படம் இது. 100 நாட்கள் வெற்றிகரகமாக ஓடி வசூலையும் குவித்தது. (கொஞ்சம் நடிகர் திலகத்தின் 'பொன்னூஞ்சல்' படத்தையும் காட்சியமைப்புகளில் ஞாபகப்படுத்தும்.)
'புன்னகை அரசி'தான் படத்தின் பிரதான ஆணிவேர். பாந்தமும் இயற்கையுமாக மிக இயல்பாக நடித்து அனைவர் இதயங்களையும் கவர்வார். ஜெய்யின் அட்டூழியங்களை அழுது புலம்பமால் சர்வ அலட்சியமாக எதிர்கொண்டு அவருக்கு புத்தி கூறி திருத்துவது அழகு. டயலாக் டெலிவிரி டக்கர்.
'தேவர் மகனி'ல் கமல் 'சாந்து பொட்டு... ஒரு சந்தனப்பொட்டு' பாடி எதிரிகள் நெற்றியில் சிலம்பத்தால் பொட்டு வைப்பாரே....அது போல குங்குமப் பொட்டு வைக்கும் சிலம்பாட்டம் ஒன்று 'நவரசத்'திற்கும், 'மக்கள் கலை'க்கும் சூடாகவே உண்டு.
http://i.ytimg.com/vi/SkP5y65ZEJw/hqdefault.jpg
சுசீலா சூதாட்டத்தில் பாடிய 'விளக்கேற்றி வைக்கிறேன்' பாடல் வீட்டுக்கு வீடு வானொலிப் பெட்டிகளில், திருவிழாக்களில், திருமண சுப வைபவங்களில் சரமாரியாக ஒலித்தது. சாதாரண ஹிட்டல்ல. பேய் ஹிட்.
ஈஸ்வரி, சுசீலா பாடிய 'ஆடுகின்ற கைகளுக்கு ராசி என்ன ராசியோ' பாடலை ஏற்கனவே அலசியாகி விட்டது.
இந்தப் படத்தில் அதே போல அருமையான இளமை பொங்கும் ஒரு டூயட்.
இரவில் 'தோட்டத்தில் சந்திப்போம்' என்று சிவக்குமார் நிர்மலாவுக்குக் கடிதம் அனுப்பி வரச் சொல்ல, பார்க்கில் படம் எடுத்திருப்பார்கள்.:) (கிராமத்தில் ஏது வெளிச்சம் உமிழும் ஸ்ட்ரீட் லைட்களோடு கூடிய அம்சமான பார்க்?)
இரண்டாவது சரணத்தில் வேறு 'மஞ்சள் வெயில் மாலை மணக்கோலம்' என்று கவிஞர் வேறு எழுதிக் கொடுத்து விட்டதால் இரவுப் பின்னணி படமாக்கல் இப்போது பகல் பின்னணிப் படமாக்கலாய் தலை கீழ் மாறி இருக்கும். (அது சரி! அடிக்கடி நிர்மலாவும் சிவாவும் இரவென்றும் பகலென்றும் பாராமல் சந்திக்கிறார்கள் என்று எடுத்த்துக் கொண்டு விட்டுப் போவியா?....பெருசா குத்தம் சொல்ல வந்துட்டே!" என்று நீங்கள் சொல்வது என் காதுகளுக்குக் கேட்கிறது.):)
'தாவணித் தேவதை'யாக 'பாம்பிடை' நிர்மலா.:) (குடை ஜிமிக்கி 'கும்'மென்று தூக்கும் இவரின் முகத்திற்கு) அவருக்கு தோதாக மார்கண்டேய சிவக்குமார். சிவக்குமாரும், நிர்மலாவும் அவ்வளவு 'கியூட்'டாக இருப்பார்கள் Made for each other போலே. செமை ஜோடிப் பொருத்தம். இருவரும் கண்பட்டுவிடும் அழகு. என்.எஸ்.வர்மாவின் கண் கவரும் ஒளிப்பதிவும் 'பளிச்'.
நிர்மலாவுக்கு சுசீலாம்மா குரலும் சரி! ஈஸ்வரி குரலும் சரி! ஜானகி குரலும் சரி! சரியாகவே பொருந்தும். சிவக்குமார் டூயட் என்பதால் உடன் சற்றே துடிப்பாய் பாட ராட்சஸி. இளம் சிவக்குமாருக்கு இளம் பாலா பின்னணி. சிவா பயமெல்லாம் தெளிந்து டூயட்டில் புரட்சி செய்யத் தொடங்கியிருப்பார்.:) 'ஒன்று முதல் நூறு வரை நல்ல கதை நான் படிப்பேன்' என்று வாயசைக்கும் போது நிர்மலா நம்மை சொக்க வைப்பார்.
http://i58.tinypic.com/2132cll.jpg
இரண்டாவது சரணத்திற்கு சிவாவுக்கு ஜிப்பா டைப் ஷர்ட், 'வெண்ணிற ஆடை' அழகிக்கு அம்சமான புடவை.
சரணங்களுக்கு முன் வரும் ஷெனாய் ஓசைகள் பிரமாதம். துவக்க இசையும் துள்ளாட்டம் போட வைக்கும்.
பாலாவும், ராட்சஸியும் பாடிய இன்னொரு உற்சாகத் துள்ளல் பாடல்.
அந்தக் கொஞ்சல்களும், கெஞ்சல்களும் காதுகளை விட்டு அகலாதவை.
பாலா பக்கா. ஊதித் தள்ளியிருப்பார். அனுபவம் பேசும். 'கொட்டிக் குவிக்க' என்றிவர் முடிக்க, அதையே திரும்ப அவர் எடுத்து பின் 'தட்டிப் பறிக்க' தொடர, இருவரும் இன்பத்தை இணையில்லாமல் நமக்குக் கொட்டிக் கொடுப்பார்கள் என்பதுதான் நிஜம்.
இந்த இருவரும் இணைந்த இன்னொரு அதகள நிகழ்வு இந்தப் பாடல். எனக்கு மிக மிக பிடித்தமானது.
http://i62.tinypic.com/2a7wp4g.jpg
இன்றுமுதல் நாளை வரை
என் மடியில் நீ இருந்தால்
ஒன்று முதல் நூறு வரை
நல்ல கதை நான் படிப்பேன்
இன்றுமுதல் நாளை வரை
என் மடியில் நீ இருந்தால்
ஒன்று முதல் நூறு வரை
நல்ல கதை நான் படிப்பேன்
தொட்டுத் துடிக்க
நான் கட்டிப் பிடிக்க
உன் நெஞ்சில் விழுந்தேன் (நிஜமாகவே நெஞ்சில் விழுவது போலவே அனுபவித்துப் பாடுவார் ஈஸ்வரி)
கொட்டிக் குவிக்க
கொட்டிக் குவிக்க
தட்டிப் பறிக்க
இன்றுமுதல் நாளை வரை
என் மடியில் நீ இருந்தால்
ஒன்று முதல் நூறு வரை
நல்ல கதை நான் படிப்பேன்
(ஷெனாய் குதூகலம். அடடா! என் செல்போனின் ரிங்க் டோனாக முன்னம் இருந்தது.)
தேனோட்டம் இதழ்களிலே மின்ன
பூவாட்டம் கைகளிலே பின்ன
தென்னை வண்ண மேனி தாலாட்ட
தேனோட்டம் இதழ்களிலே மின்ன
பூவாட்டம் கைகளிலே பின்ன
தென்னை வண்ண மேனி தாலாட்ட
சுவை தோன்றுமா? பசி தீருமா?
அந்த சொர்க்கம் எங்கே கொண்டு செல்லம்மா...ஹாஹாஹாங் (பாலா கொஞ்சல்... கெஞ்சல்)
தேரோட்டம் கால்களிலே கண்டு
நூலாட்டம் இடையினிலே நின்று
கன்னம் கொஞ்சம் நேரம் கனியானால்
சுவை தோன்றலாம்... பசி தீரலா...ம் (ராட்சஸி 'லா' க்களில் அலட்சியப் பட்டை உரிப்பார் )
அந்த சொர்க்கம் என்னவென்று சொல்லலாம்
இன்றுமுதல் நாளை வரை
என் மடியில் நீ இருந்தால்
ஒன்று முதல் நூறுவரை
நல்ல கதை நான் படிப்பேன்
லாஹஹாஹா லாஹஹாஹா
லாஹஹாஹா ஹஹாஹாஹா
பூச்சூடும் கூந்தலினால் மஞ்சம்
போடாதோ காதலியின் நெஞ்சம்
தொட்டில் என்று எண்ணி எண்ணி நீயாட
(பாலா 'ஆ ஆ ஆ ஆ ஆ' என்று அலட்சிய இழுவை ஒன்று இழுப்பார் இன்பமாக)
பூச்சூடும் கூந்தலினால் மஞ்சம்
போடாதோ காதலியின் நெஞ்சம்
தொட்டில் என்று எண்ணி எண்ணி நீயாட
மலர் வாடையோ
சிறு போதையோ (ராட்சஸி 'போதை' சொல்லும் போது நிஜமாகவே போதை ஏறும்)
இந்த மங்கை சொல்லும்
இன்பம் ஒன்றல்ல
நீரோடும் நதியினிலே வெள்ளம்
ஏதேதோ எண்ணுதடி உள்ளம்
மஞ்சள் வெயில் மாலை மணக்கோலம்
நான் உன்னிடம் நீ என்னிடம்
நீ சொல்லச் சொல்லக் கேட்பேன் சொல்லலாம்.
தொட்டுத் துடிக்க
நான் கட்டிப் பிடிக்க
உன் நெஞ்சில் விழுந்தே....ன்
கொட்டிக் குவிக்க
கொட்டிக் குவிக்க
தட்டிப் பறிக்க
இன்றுமுதல் நாளை வரை
என் மடியில் நீ இருந்தால்
ஒன்று முதல் நூறுவரை
நல்ல கதை நான் படிப்பேன்
லாஹஹாஹா லாஹஹாஹா
லாஹஹாஹா லாஹஹாஹாஹா
https://youtu.be/SfwqFVJnlm8