http://i1065.photobucket.com/albums/...ps4kyegmj8.jpg
Printable View
நினைப்போம்.மகிழ்வோம்-58
"திருவிளையாடல்."
நாரதர் கொண்டு வந்த ஞானப்
பழத்தைப் பிள்ளைகளுக்குத்
தரும் பெரும் பொறுப்பை
மனைவி பார்வதியிடம்
ஒப்புவித்து விட்ட விடுதலை
உணர்வுடன், "இந்தா" என்று
பழத்தைக் கொடுத்த பின்
காட்டும் முகபாவம்.
நினைப்போம்.மகிழ்வோம்-59
"மனோகரா."
தனது நாட்டின் மீது படையெடுத்து வென்று, தன்
தந்தையின் மரணத்திற்கும்
காரணமான மனோகரனைப்
பழிவாங்கும் பொருட்டு, மன்னன் மகள் விஜயா ஆண்
வேடமிட்டு, உறங்குகிற
மனோகரனை வாள் பாய்ச்சிக்
கொல்ல முனைய...
விழித்துக் கொண்ட மனோகரன்
"யாரடா நீ" என்று வாளால்
அவள் தலைப்பாகையைத்
தள்ளி விட...
அவிழும் நீளக் கூந்தல், அவள்
பெண்ணென்பதை அடையாளம்
காட்ட...
வியப்பில் மலரும் விழிகளோடு அவர் சொல்லும்...
"ஓ...பெண்!".