விண்ணுலகில் வாழ்ந்துகொண்டிருக்கும் எங்கள் நடிகர்திலகத்திற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
நடிகர்த்திலகமே,
உன்னை மறந்தால்தானே நினைப்பதற்கு ?
என்றென்றும் உன்னை நினைத்திருப்பேன்
என்றாவது ஒரு நாள் மறந்திருப்பேன்
அன்று நான் இறந்திருப்பேன்
Printable View
விண்ணுலகில் வாழ்ந்துகொண்டிருக்கும் எங்கள் நடிகர்திலகத்திற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
நடிகர்த்திலகமே,
உன்னை மறந்தால்தானே நினைப்பதற்கு ?
என்றென்றும் உன்னை நினைத்திருப்பேன்
என்றாவது ஒரு நாள் மறந்திருப்பேன்
அன்று நான் இறந்திருப்பேன்
நடிகர்திலகம் சிவாஜி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, 01-10-2011 அன்று
சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில், நடிகர்திலகம் சிவாஜி
சமூகநலப்பேரவை சார்பில் நடைபெற்ற சிறப்பு அன்னதான விழா புகைப்படங்கள்.
http://i1234.photobucket.com/albums/...ShawltoYGM.jpg
http://i1234.photobucket.com/albums/...laSelvaraj.jpg
http://i1234.photobucket.com/albums/...nnadhanam3.jpg
http://i1234.photobucket.com/albums/...nnadhanam1.jpg
http://i1234.photobucket.com/albums/...hanamView2.jpg
http://i1234.photobucket.com/albums/...laSelvaraj.jpg
டியர் சந்திரசேகர்,
நடிகர்திலகத்தின் பிறந்தநாளை முன்னிட்டு 'நடிகர்திலகம் சிவாஜி சமூநலப்பேரவை' சார்பில் நீங்கள் ஏற்பாடு செய்திருந்த சிறப்பு அன்னதானம் நிகழ்ச்சியின் நிழற்படங்களை சூட்டோடு சூடாக இங்கு பதித்து அனைவரையும் பரவசமடையச்செய்து விட்டீர்கள்.
நிச்சயம் உங்கள தன்னலமற்ற சேவைகளை நினைத்து உள்ளம் பூரிப்படைகிறது. அந்த விருந்தில் கலந்து கொண்டவர்களெல்லாம் நம் நடிகர்திலகத்தை எப்படியெல்லாம் மனதுக்குள் வாழ்த்தியிருப்பார்கள் என்று எண்ணும்போது கண்களில் நீர் கசிகின்றது. அனைத்துப்பெருமைகளும் உங்களுக்கே.
இரண்டு நாட்களுக்கு முன் வந்திருந்த ஜூனியர் விகடன் செய்திப்பதிவைப் பார்த்தபோதே எழுத வேண்டும் என்று நினைத்தேன். இப்போது இந்த அன்னதானம் நிகழ்ச்சியையும் பார்த்தபோது உங்கள் சேவைகளை நினைத்து என் கண்கள் குளமாகிவிட்டன.
நடிகர்திலகத்தின் மூலமாக பெரிய பெரிய பெருமைகளையும், பதவிகளையும் அடைந்தவர்களெல்லாம் அவரை மறந்து எங்கோ சென்று விட்ட வேளையில், தூய தொண்டனான தங்களின் சேவைகள் பாராட்டுக்குரியவை, போற்றுதலுக்குரியவை.
தங்களின் எண்ணம், சொல், செயல் என அனைத்திலும் நிறைந்திருப்பவர் நடிகர்திலகம், நடிகர்திலகம் மட்டுமே. தொடரட்டும் தங்களின் சீரிய பணி.
சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு சிறப்பித்த திரு ஒய்.ஜி.மகேந்திரா அவர்களுக்கும், டாக்டர் கமலா செல்வராஜ் அவர்களுக்கும் நடிகர்திலகத்தின் அனைத்து ரசிகர்கள் சார்பிலும் நன்றிகள்.
Dear Our Living Legend!!
On your birthday, We celebrate you!
On your special day,
I’m thinking of all the wonderful things you are
that bring so much joy to others, including me!
We celebrate your unconquerable spirit,
that lets you meet every challenge
with confidence, enthusiasm and persistence.
We admire your sensitivity.
You see needs that cry out to be met
that no one else sees,
and you meet them,
out of your deep and caring heart,
out of your wisdom,
out of your strength.
We treasure your uniqueness;
There is no one else like you,
and we feel blessed to know
such an extraordinary person.
We respect you,
cherish you, look up to you.
God gave a gift to the world when you were born—
a person who loves, who cares,
who sees a person’s need and fills it,
who encourages and lifts people up,
who spends energy on others
rather than herself,
someone who touches each life, enters,
and makes a difference in the world,
because ripples of kindness flow outward
as each person you have touched, touches others.
because you are a special treasure
for all that you’ve done.
May the love you have shown to others
return to you, multiplied.
We wish you the happiest of birthdays,
and many, many more.
Hope that this day & days ahead
be filled with our Legend N.T. Blessings
No one's is more deserving
than this Special Actor!!
With wishes showering from our true N.T. fans, shows and proves that our Legend is still living in each one of us souls. N.T. fans i salute you all on this great occasion, really our fans are great.
JAIHIND
M. Gnanaguruswamy
சாரதா,
உங்களின் அஞ்சலி மிக அழகாய் அமைந்திருக்கிறது. குறிப்பாக பொழுதுபோக்கு அல்ல முதல் நோக்கு என்ற முத்தாய்ப்பான வரி.
கிருஷ்ணாஜி, சேக்கிழார் பெருமானை துணைக்கு அழைத்து திருவருட்செல்வரை புகழ்ந்தது சாலப் பொருத்தம்.
Dear Guruswamy,
Nicely worded Anjali and apt to the occasion.
அன்புடன்
முரளி சார் சொன்னதை அப்படியே நான் வழிமொழிகிறேன்
அன்புடன்
மிகச் சிறந்த நெடுந்தகடு
நீண்ட நாள் ஆவலைப் பூர்த்தி செய்யும் சுவடு
நம் நெஞ்செல்லாம் நீங்கா நினைவோடு
ஆட்சி செய்யும் மன்னரின்
அட்டகாசமான பேட்டியினைத்
தாங்கி வரும் செப்பேடு
http://i872.photobucket.com/albums/a...vers/snnfw.jpg
நடிகர் திலகத்தின் 83-வது பிறந்த நாள் விழா மிக சிறப்பாக இன்று நடந்தேறியது. சென்னை ஹபிபுல்லா சாலையில் உள்ள கர்நாடக சங்கதினாரல் நடத்தப்படும் பள்ளியில் அமைந்துள்ள ராமராவ் கலா மண்டபத்தில் இன்று மாலை நடைபெற்ற விழாவில் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் வேந்தரும் இந்திய ஜனநாயக கட்சி தலைவரும் புதிய தலைமுறை வார இதழ் மற்றும் தொலைகாட்சியை நடத்திவரும் பச்சமுத்து சிறப்பு விருந்தினராக பங்கேற்க நடிகர் திலகத்துடன் இணைந்து பணியாற்றிய ஒளிப்பதிவாளர் வின்சென்ட், இயக்குனர் ஏ.சி.திருலோகச்சந்தர், நடிகை சுகுமாரி, கதை வசனகர்த்தா சித்ராலயா கோபு மற்றும் பாலமுருகன் ஆகிய ஐந்து பேருக்கு சிவாஜி விருதும் ஐம்பதினாயிரம் ரூபாய் சன்மானமும் வழங்கப்பட்டன.
ஏ.வி.எம். சரவணன் அவர்களின் மேற்பார்வையில் நடந்து வரும் செவாலியர் சிவாஜி கல்வி அறக்கட்டளை வருடத்தில் 150 பேருக்கு இலவச கல்வி வழங்குகிறது. அந்த அறக்கட்டளைக்கு ஐம்பதினாயிரம் ரூபாய் நன்கொடை தரப்பட்டது.
பச்சமுத்து, ஏ.வி.எம்.சரவணன் மற்றும் சிறப்பு பேச்சாளார் ஞானசம்பந்தம் அவர்கள் உரையாற்ற ஹப்பர் நண்பர் மோகன்ராம் விழாவினை தொகுத்து வழங்கினார். ராம்குமார் வரவேற்புரையும் பிரபு நன்றியுரையும் முறையே செய்ய விழா இனிதே நடந்து முடிந்து.
விழாவைப் பற்றிய விளக்கமான தகவல்களுடன் விரைவில்
அன்புடன்
சாரதா,
உங்களின் அக்டோபர் பட்டியல் கண்டேன். உங்களுக்கும் சுவாமி, ராகவேந்தர் சார் மற்றும் வாசு சாருக்கு ஒரு அன்பு வேண்டுகோள். இந்த வேண்டுகோளின் பின்னணியில் இருப்பது நமது நண்பர்களின் உடல்நலம் பற்றிய ஒரு அக்கறையும் கவலையுமே ஆகும்.
நமது நடிகர் திலகம் 300 படங்களில் நடித்துள்ளார். 12 மாதங்களுக்கு சராசரியாக பார்த்தோம் என்றால் மாதம் 25 படங்கள் வருகிறது. அக்டோபர் நவம்பர் மாதங்களில் இது மேலும் அதிகரிக்கும்.
இவை அனைத்தையும் ஒன்று விடாமல் இங்கே விளம்பரங்களின் வழியாகவும் இதழ்கள் வழி வந்த செய்திகளின் பதிவுகள் மூலமாகவும் திரியில் பதிவுகளாக இடுவது என்பது எளிதான வேலை இல்லை. கடந்த 2 மாதங்களாக சுவாமி அவர்களும் வாசுதேவன் அவர்களும் இந்த dead line என்று சொல்வார்களே அதை meet செய்வதற்கு தங்களை வருத்திக் கொண்டு செயல்படுவதை நேரில் அறிந்தவன் என்ற முறையில் மிகவும் வருந்துகிறேன்.
ஆக என் வேண்டுகோள் என்னவென்றால் ஒரு முக்கியமான மைல்கல் நிகழ்வுகள் என்று சொல்லக்கூடிய படங்களின் தேதிகளில் மட்டும் இந்த கொண்டாட்டத்தை வைத்துக்கொள்ள வேண்டும் என்பதே ஆகும். உதாரணமாக இந்த அக்டோபர் 17 அன்று பராசக்தி தன் மணிவிழா ஆண்டான 60-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. அது போன்ற மணி விழா மற்றும் பொன் விழா ஆண்டு துவக்கம் நிறைவு என்ற நாட்களின் போது மட்டும் அதை சிறப்புற கொண்டாடினோம் என்றால் அது இவர்களையும் அதிகம் வருத்தாது, நமது திரிக்கும் அதே வேகத்தையும் அளிக்கும் என்பது திண்ணம். அப்படி செயல்படும்போது நமக்கும் ஒரே வருடத்தில் அனைத்து படங்களையும் முடித்து விடாமல் தொடர்ந்து பல வருடங்களுக்கு அதை சீராக கொண்டு செல்லவும் உதவும்.
முக்கியமான நிகழ்வுகளின் போது மட்டும் அதை சிறப்புற கொண்டாடிக் கொண்டிருந்த சுவாமி மற்றும் நண்பர்களை ஆர்வக் கோளாறு காரணமாக தர்மம் எங்கே படத்தின் விளம்பரங்களை வெளியிடுங்கள் என்று கேட்டு இந்த போக்கை ஆரம்பித்து வைத்தவன் நான் என்பதால் அந்த தவறை ஒப்புக் கொண்டு நண்பர்களுக்கு இதை வேண்டுகோளாக வைக்கிறேன்.
சாரதா, சுவாமி மற்றும் வாசு சார், என் வேண்டுகோள் உங்களில் யாரையாவது புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும்.
அன்புடன்
Chanadrasekar Sir,
The photos have come out very well. Glad that the function went off so well.
Sarathy, Bala, Kumar and Senthil,
Good that everybody particiapted today in our thread.
Regards