-
1972 - அக்டோபர் புரட்சி - மக்கள் திலகத்தின் புகழின் இமாலய வெற்றி
புரட்சி நடிகர் எம்ஜிஆர் அவர்கள் திமுகவிலிருந்து நீக்கிய செய்தி அறிந்ததும் அரசியல் - திரை உலக பிரமுகர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள் . ரசிகர்கள் மிகவும் கொதித்து எழுந்தார்கள் . சாதாரண பொது மக்களும் அடிமட்ட ஏழைகளும் அதிர்ந்து போனார்கள் .
மக்கள் திலகம் அவர்கள் எந்தவித ஆத்திரம் இல்லாமல் மக்களையும் தன்னுடைய ரசிகர்களையும் நம்பி அடுத்த கட்ட நடவடிக்கைகக்கு தயாரானார் . மக்கள் திலகத்திற்கு ஆதரவு தெரிவித்து அன்றைய வலிமையான ஆளும் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் - சட்ட மன்ற - பாராளுமன்ற
உறுப்பினர்கள் ஒருவர் கூட மக்கள் திலகத்திற்கு ஆதரவாக கட்சியை விட்டு வெளியே வரவில்லை
மக்கள் திலகத்திற்கு ஆதரவாக தமிழ் நாடே பொங்கி எழுந்தது . சாலையில் சென்ற அனைத்து வாகனங்கள் மீதும் மக்கள் திலகத்தின் போஸ்டர்ஸ் ஒட்டப்பட்டு சென்றதை நாடு முழுவதும் ஆதரவு அலை வீசியதை அன்றைய நாளேடுகள் - வார ஏடுகள் இந்திய - மற்றும் வெளிநாடுகளில் செய்தியாகவும் எம்ஜிஆரின் மாஸ் பற்றிய கட்டுரையாகவும் வந்தது .
ஒரு நடிகருக்கு ஒரு மாநிலத்தில் இந்த அளவிற்கு மக்கள் செல்வாக்கு - ரசிகர்கள் செல்வாக்கு உள்ளதை வைத்து எம்ஜிஆர் - விரைவில் ஒரு மாபெரும் சக்தியாக உருவெடுக்க போகிறார் என்று
நாடே உணர்ந்து கொண்டது .
மக்கள் திலகத்திற்கு நாளுக்கு நாள் மக்களின் ஆதரவு பெருகுவதை ஒரு சிலரால் ஜீரணிக்க முடியவில்லை . சில பத்திரிகைகள் எம்ஜிஆரின் செய்திகளை இருட்டடிப்பு செய்தார்கள் .
எம்ஜிஆரை வைத்து படம் எடுத்த தயாரிப்பாளர்கள் பலரும் மிரட்டப்பட்டார்கள் . விநியோகஸ்தர்கள் - திரை அரங்கு உரிமையாளர்கள் எச்சரிக்கப்பட்டார்கள் . ரசிக மன்ற நிர்வாகிகள் தாக்கப்பட்டார்கள் - பொய் வழக்குகள் போடப்பட்டது .
மக்கள் திலகம் எதற்கும் அஞ்சவில்லை . நம்பிக்கையுடன் போராடி வெற்றி கண்டார் .
மக்கள் திலகத்தின் இதய வீணை படம் வெளிவருவதில் [6.10.1972 வரவேண்டிய படம் ] தள்ளி போடப்பட்டது .
அன்றைய சூழ் நிலையில் இதயவீணை படத்திற்கு மேலும் ஒரு பாடல் படமாக்கப்பட்டது .
ஒரு வாலுமில்லே .. நாலு காலுமில்லே என்ற பாடல் படமாக்கப்பட்டு 20.10.1972 அன்று வருவதாக
விளம்பரம் வந்தது .
9.10 -1972 முதல் 16-10 1972 அரசியல் உலகிலும் திரை உலகிலும் ஒரு வித பரப்பரப்பான சூழ் நிலை
நிலவியது . ஒரே கேள்வி ..... எம்ஜிஆர் என்ன செய்ய போகிறார்?!.........vnd..
-
வரும் வாரம் தனியார் தொலைக் காட்சியில் மக்கள் திலகத்தின் திரைக் காவியங்கள்:
12-10-2020 பாலிமர் டிவியில் இரவு 11 மணிக்கு " அரச கட்டளை" (91 வது படம் - 19-05-1967ல் வெளிவந்தது)
12-10-2020 சன்லைப்பில் மாலை 4 மணிக்கு உழைக்கும் கரங்கள் (129வது படம் - 23-05-1976ல் வெளிவந்தது)
12-10-2020 ஜெயா டிவியில் காலை 10 மணிக்கு - இதய வீனை (118வது படம் - 20-10-1972ல் வெளி வந்தது)
15-10-2020 பாலிமர் டிவியில் இரவு 11 மணிக்கு பட்டிக்காட்டு பொன்னையா (120 வது படம் - 10-08-1973ல் வெளிவந்தது)
17-10-2020 ராஜ் டிஜிட்டல் பிளஸில் இரவு 7 மணிக்கு நல்ல நேரம் (1142 வது படம் - 10-03-1972ல் வெளிவந்தது)
17-10-2020 ராஜ் டிவியில் பகல் 1.30 மணிக்கு ரகசிய போலீஸ் 115 (94வது படம் - 11-01-1968 ல் வெளிவந்தது)
17-10-2020 ராஜ் டிவியில் இரவு 11.30 மணிக்கு "நாம்" (மக்கள் திலகத்தின் 29வது படம் (05-03-1953ல் வெளிவந்தது)
முதல் தகவல் மதுரை ராமகிருஷ்ணன்...
-
எம்ஜிஆர் உண்பது, உறங்குவது போல கொடுப்பதும் அவரது இயல்பு!
M.g.r. பிறருக்கு கொடுப்பது என்று முடிவு செய்துவிட்டால் கையில் பணம் இல்லாவிட்டாலும் மற்றவர்களிடம் கடன் வாங்கியாவது கொடுத்து விடுவார். அப்போதுதான் அவருக்கு நிம்மதி. உண்பது, உறங்குவது போல, கொடுப்பதும் அவருக்கு இயல்பானது.
‘இதயவீணை’ படப்பிடிப்புக்காக காஷ்மீருக்கு எம்.ஜி.ஆர். சென் றிருந்தார். அங்கிருந்த பிரபல ஓட்டல் ஒன்றில் தங்கியிருந்தார். இதை அறிந்து ராணுவத்தினர் அவருக்கு வர வேற்பு அளித்தனர். பின்னர், தங்களின் ராணுவ நலச் சங்கம் ஒன்றுக்கு வருகை தர வேண்டுமென்று அழைப்பு விடுத்தனர். அவர்களின் வேண்டு கோளை எம்.ஜி.ஆர். ஏற்றுக் கொண்டார். அவர்தான் எங்கு சென்றாலும் வெறும் கையோடு சென்று பழக்கமில்லையே. ராணுவ நலச் சங்கத்துக்கு நிதி கொடுக்க முடிவு செய்தார். அவரிடம் அப்போது பணம் இல்லை. படத்தின் தயாரிப்பாளரான மணியனிடமும் படப் பிடிப்பு செலவுக்கு வைத்திருந்ததைத் தவிர பெரிதாக தொகை இல்லை.
அங்கிருந்த தமிழகத்தைச் சேர்ந்த தொழிலதிபரிடம் ஒரு பெரும் தொகையை குறிப்பிட்டு ‘‘கடனாக கிடைக்குமா?’’ என்று எம்.ஜி.ஆர். கேட்டார். அதற்கு தொழிலதிபர், ‘‘தாராளமாக. ஆமாம், அப்படி என்ன தேவை உங்களுக்கு?’’ என்று வினவினார். எம்.ஜி.ஆர். அவரிடம் விஷயத்தைச் சொன்னதும் தொழிலதிபர் அசந்துபோய்விட்டார். ‘கடன் வாங்கி இவ்வளவு பெரிய தொகையை நன்கொடையாக கொடுக்கிறாரே?’ என்று நினைத்தார். தனது எண்ணத்தை எம்.ஜி.ஆரிடமும் சொன்னார்.
‘‘தவறாக நினைக்காதீர்கள். ராணு வத்தினர் விரும்பி உங்களை அழைக் கிறார்கள். ஏதாவது தொகை கொடுக்க வேண்டுமென்றால் கொடுங்கள். ஆனால், இவ்வளவு பெரிய தொகை வழங்குவது தேவையா?’’ என்றார். எம்.ஜி.ஆருக்கு கோபம் வந்துவிட்டது.
‘‘நீங்களும் நானும் சென்னையில் இருந்து லட்சம் லட்சமாக சம்பாதித் துக்கொண்டு பாதுகாப்பாக இருப் பதற்கு நாட்டை பாதுகாக்கும் இந்த ராணுவத்தினர்தான் காரணம். அவர்களது உழைப்புக்கும் தியாகத்துக்கும் இந்தத் தொகை மிகவும் குறைவு. முதலில் பணத்துக்கு ஏற்பாடு செய்யுங்கள். சென்னை திரும்பியதும் தருகிறேன்’’ என்று தொழிலதிபரிடம் சொல்லிவிட்டு எம்.ஜி.ஆர். வேகமாகச் சென்றுவிட்டார். பிறகு தொழிலதிபரிடம் மறுப்பேது? அவர் ஏற்பாடு செய்து கொடுத்த தொகையை ராணுவ நலச் சங்கத்துக்கு நன்கொடையாக எம்.ஜி.ஆர். வழங்கினார். இதை எதிர்பார்க்காத ராணுவத்தினர் அளவற்ற மகிழ்ச்சி அடைந்து எம்.ஜி.ஆருக்கு நன்றி தெரிவித்தனர்.
காஷ்மீரில் இன்னொரு சுவையான, ஜில்லென்ற சம்பவம். எம்.ஜி.ஆர். தங்கியிருந்த அதே ஓட்டலில் இன்னொரு பகுதியில் அவரது உதவியாளர்களும் தங்கியிருந்தனர். அந்த ஓட்டலில் உணவு வகைகள் மட்டுமின்றி ஐஸ்கிரீமும் தனிச்சுவையுடன் இருக்கும். ஒரு நாள் சாப்பாடு சாப்பிட்டு முடிந்ததும் ஓட்டல் பணியாளரிடம் ஐஸ்கிரீம் பற்றி எம்.ஜி.ஆரின் உதவியாளர்கள் விசாரித் தனர். விதவிதமான ஐஸ்கிரீம்கள் பட்டி யலை சொல்லிய பணியாளர் அதன் விலைகளையும் சொன்னவுடன் எம்.ஜி.ஆரின் உதவியாளர்களுக்கு ஐஸ் கிரீம் மீதான ஆசையே போய்விட்டது.
மறுநாள் படப்பிடிப்பு முடிந்து இரவு உணவுக்குப் பின் தங்கள் அறையில் எம்.ஜி.ஆரின் உதவியாளர்கள் படுத்திருந்தபோது, அழைப்பு மணி ஒலியை கேட்டு கதவைத் திறந்தனர். பெரிய தட்டில் வகை வகையான ஐஸ்கிரீம் களோடு வந்த பணியாளர் ஒருவர், உள்ளே வைத்துவிட்டுச் சென்றார். நாம் ஆர்டர் கொடுக்காத நிலையில் யாருடைய அறைக்கோ செல்ல வேண்டிய ஐஸ்கிரீம்கள் தங்களுக்கு வந்ததாக நினைத்த எம்.ஜி.ஆரின் உதவியாளர்கள், ‘வந்தவரையில் லாபம்’ என்று சிரித்துக்கொண்டே ஐஸ்கிரீம்களை காலி செய்தனர்.
மறுநாள் காலை படப்பிடிப்பில் உதவியாளர்களை பார்த்து எம்.ஜி.ஆர். கேட்ட முதல் கேள்வி, ‘‘என்ன, நேற்றிரவு ஐஸ்கிரீம் அனுப்பினேனே, சாப்பிட்டீர்களா?’’
உதவியாளர்களுக்கு அதிர்ச்சி...குழப்பம். “வந்தது... நன்றாக இருந்தது” என்று ஒருவர் தட்டுத் தடுமாறி ஒருவழியாகக் கூறிவிட்டார்.
‘‘வேறு யாருடைய அறைக்கோ செல்ல வேண்டியது, உங்களுக்கு வந்துவிட்டது என்று நினைத்தீர்களா?’’ என்று அடுத்த ஏவுகணையை கேள்வியாக எம்.ஜி.ஆர். வீசினார்.
உதவியாளர்களின் உடல் இரவில் சாப்பிட்ட ஐஸ்கிரீமை விட ஜில்லிட்டது. ‘‘இல்லை...’’ என்று மென்று விழுங்கினர். தனக்கே உரிய புன்னகையுடன் எம்.ஜி.ஆர். போய்விட்டார்.
விஷயம் என்னவென்றால், ஓட்டல் பணியாளர்களை எம்.ஜி.ஆர். அழைத்து தன்னுடன் வந்திருக்கும் எல்லோரும் என்ன வேண்டுமென்று கேட்டனர் என்று விசாரித்து, அவரவர்கள் கேட்ட உணவு வகைகளை தன் செலவில் அனுப்பச் சொல்லியிருக்கிறார்.
இதை அறியாத எம்.ஜி.ஆரின் உதவியாளர் சபாபதியும் மற்றவர்களும், ‘‘இந்த அதிசய மனிதருக்கு எப்படித்தான் பிறர் மனதில் உள்ளது தெரிகிறதோ?’’ என்று சொல்லிச் சொல்லி வியந்தனர்.
ஜேம்ஸ்பாண்ட் வேடத்தில் எம்.ஜி.ஆர். நடித்து 100 நாட்கள் ஓடிய வெற்றிப் படம் ‘ரகசிய போலீஸ் 115’. எம்.ஜி.ஆரின் ஸ்டைலான நடிப்பில் பாடல், சண்டைக் காட்சிகள் ரசிகர் களுக்கு பெரும் விருந்தாக அமைந்தன. இந்தப் படத்தில் ஒரு காட்சியில் நடிகை ‘வெண்ணிற ஆடை’ நிர்மலாவுக்கு தங்க வளையலை எம்.ஜி.ஆர். பரிசளிப்பார். அது அவரது கைக்கு சரியாக பொருந்தும். ‘அளவு சரியாக இருக்கிறதே?’ என்று ‘வெண்ணிற ஆடை’ நிர்மலா ஆச்சரியப்படுவார்.
அதற்கு எம்.ஜி.ஆர். அளிக்கும் பதிலை கவனித்துக் கேட்டால்தான் புரியும். ஏனென்றால், ரசிகர்களின் கைதட்டலாலும் ஆரவாரத்தாலும் தியேட்டரே இடிந்து விழுவது போலிருக்கும். எம்.ஜி.ஆர். கூறுவார்...
‘‘நான் எப்பவுமே, யாரையுமே சரியா அளவெடுத்து வெச்சிருப்பேன்!’’.........da...
-
மோகனப்புன்னகை இயக்கம்தான் ஸ்ரீதர். தயாரிப்பு போட்டோகிராபர் சாரதி. இருந்தாலும் அந்தப் படத்தால் தொழிலில் ஸ்ரீதர் சரிந்தது நிஜம். சிவாஜி கணேசனும் அவர் தம்பி சண்முகமும் படத்தயாரிப்பு விஷயத்தில் பணத்தில் கெட்டி. சிவாஜி கணேசனுக்கு பெரியார் வேடத்திலும் திப்பு சுல்தான் வேடத்திலும் நடிக்க ஆசை. இதை அவரே சொல்லி இருக்கிறார். யாராவது தயாரித்தால் நடிக்கத் தயாராக இருந்தார். ஆனால் தனது சிவாஜி புரொடக்ஷன்ஸ் சார்பில் இந்தப் படங்களை தயாரிக்கவில்லை. திப்பு சுல்தானாவது சரித்திரக் கதை என்பதால் செலவாகும். ஏன் ..பெரியார் வேடத்தில் சொந்தப் படத்தில் நடித்திருக்கலாமே. படம் அவுட்டாகும் என்று அவருக்கு தெரியும். அவரைவிட அவர் தம்பி சண்முகத்துக்கும் நன்றாகவே தெரியும். நஷ்டம் வந்தால் அவங்க பணமாச்சே. அதனால் எவனாவது ஏமாந்த தயாரிப்பாளர் மாட்டுவானா என்று பார்த்தார்கள். யாரும் மாட்டவில்லை. சிவாஜி கணேசனின் ஆசையும் நிறைவேறவில்லை. கடைசியில் எம்ஜிஆர் ரசிகரான சத்யராஜ் பெரியார் படத்தில் நடித்தார். இயற்கையாக நன்றாகவே நடித்தார். படமும் வெற்றிபெற்றது. நல்லவேளை சிவாஜி கணேசன் நடிக்கவில்லை. அவர் நடித்திருந்தால் பெரியார் எப்படியும் கைத்தடியால் தன் மண்டையில் தானே அடித்துக் கொண்டு கதறி அழுது ஓவர் ஆக்டிங்கோடு ஒரு சோகப்பாட்டாவது பாடியிருப்பார். அதை எல்லாம் ரசிப்பவர்கள் மக்கள் திலகத்தின் உடையை கிண்டல் செய்வார்கள். நல்லவேளை.. சிவாஜி கணேசன் நடிக்காததால் பெரியார் தப்பித்தார். அதோடு ஐயன் என்றாலே பெரியாருக்கு ஆகாது. அவர் இருந்தால் இந்த போலி ஐயனைப் பார்த்து,.."நான் கொடுத்த சிவாஜி பட்டத்தை திருப்பி கொடுடா கணேசா.." என்று கேட்டிருப்பார்.... Swamy...
-
காஞ்சிபுரத்தில் சிவந்த மண் திரைப்படம் 85 பைசா டிக்கெட் 25 ரூபாய்க்கு விற்றதாக சிவாஜி கணேசன் ரசிகர்கள் பொய் செய்தி தயாரித்து வெளியிட்டிருக்கிறார்கள் என்பதை ஏற்கெனவே கூறினேன். அது பொய் செய்திதான் என்பதை அவர்களது ஆதாரம் மூலமாகவே உறுதி செய்திருக்கிறார்கள். இந்தச் செய்தியைப் பாருங்கள். காஞ்சிபுரம் ராஜாவில் சிவந்த மண் டிக்கெட் 25 ரூபாய்க்கு பிளாக்கில் விற்றது என்றுதானே கூறியிருக்கிறார்கள். ஆனால், சிவந்த மண் காஞ்சிபுரம் ராஜாவில் ரிலீஸ் ஆகவேயில்லை. காஞ்சிபுரம் கிருஷ்ணா தியேட்டரில்தான் ரிலீஸ் ஆகியிருக்கிறது. இதற்கான ஆதாரத்தையும் அவர்களே கொடுத்துள்ளனர்.
வெளியிடப்படாத தியேட்டரில் தங்கள் படம் வெளியானது என்றும் அந்தப் படத்துக்கு டிக்கெட் பிளாக்கில் விற்றதாகவும் பொய்களை பரப்பி வருகின்றனர் என்பதை தியேட்டரை மாற்றிச் சொல்வதில் இருந்தே புரிந்து கொள்ளலாம். காஞ்சிபுரம் கிருஷ்ணாவில் சிவந்தமண் வெளியிடப்பட்டது என்பதற்கான அவர்களே அளித்துள்ள ஆதாரத்தை இங்கேயே இன்னொரு பதிவில் தருகிறேன். இங்கே ராஜா தியேட்டரில் சிவந்த மண் வெளியிடப்பதாக அவர்கள் பரப்பி வரும் பொய்யான பதிவு.... Swamy...
-
காஞ்சிபுரம் ராஜாவில் சிவந்த மண் வெளியாகவில்லை, கிருஷ்ணாவில் வெளியாகி உள்ளது என்பதற்கான அவர்களே கொடுத்த ஆதாரம். இந்த பட்டியலில் 3 என்று நம்பர் போட்டிருக்கும் தியேட்டரைப் பாருங்கள். இந்த ஆதாரத்தை கொடுத்தவர்களுக்கு நன்றி............காஞ்சிபுரம்- ராஜா தியேட்டரில் சிவந்த மண் ரிலீஸ் ஆகவில்லை, கிருஷ்ணா தியேட்டரில்தான் ரிலீஸ் ஆகியது என்பதை உறுதிப்படுத்திவிட்டோம். சரி .. அப்படியானால், காஞ்சிபுரம் -ராஜாவில் சிவந்த மண் வெளியாகவில்லை என்றால் 1969 தீபாவளியை முன்னிட்டு அந்த தியேட்டரில் வெளியாகி ஓடி வெற்றிநடை போட்ட படம் என்ன? மக்கள் திலகத்தின் "நம்நாடு"...தான். வேண்டுமானால் இப்படி நடந்திருக்கலாம். காஞ்சிபுரம்- ராஜாவில் நம்நாடு படத்தின் 85 பைசா டிக்கெட் 25 ரூபாய்க்கு பிளாக்கில் விற்பனை ஆகியிருக்கும். அந்தப் பெருமையை தாங்கள் எடுத்துக் கொள்ளலாம் என்று நினைத்து பொய் செய்தி தயாரித்தவர்கள், சிவந்த மண் வெளியான கிருஷ்ணா தியேட்டருக்கு பதிலாக பொய் சொல்லும் பதட்டத்தில் நம்நாடு வெளியான ராஜா தியேட்டர் பெயரை போட்டு உண்மையை சொல்லிவிட்டனர். நம்நாடு படம் காஞ்சிபுரம் ராஜாவில் வெளியாகி இரண்டாவது வாரத்தில் வெளியிடப்பட்ட விளம்பர ஆதாரம் இதோ. உண்மைதான் எப்போதும் வெல்லும். மக்கள் திலகத்துக்கும் அவர் ரசிகர்களுக்கும் எப்போதும் வெற்றிதான்...... Swamy...
-
சார் நீங்கள் சொன்னபடி நம் நாடு ப்ளாக்கில் விற்றதை சிவந்தமண் என்று சொல்லிவிட்டார்கள் "பிள்ளைகள்".. போகுதே "மானம் கப்பல் ஏறி போகுதே"!!! Sb...நம்நாடு படத்தின் 85 பைசா டிக்கெட் 25 ரூபாய்க்கு பிளாக்கில் விற்பனை. தானாக முன்வந்து வாக்குமூலம் அளித்த கணேசமூர்த்தி "பிள்ளைகளுக்கு" நன்றி....sb........ (அன்று பம்பாய்) மும்பையில்[அரோரா திரையரங்கு என்று நினைவு] "உலகம் சுற்றும் வாலிபன்" வெளிவந்தபோது ஒரு டிக்கெட் ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்டது. அதற்கு பின்பு வந்த ஹிந்தி படம் ஷோலே வேறு அரங்குகளில் எழுநூறு / ஆயிரம் என்று விற்கப்பட்டது.....sb...
-
வேட்டைக்காரன் - காவல்காரன் - ரிக்ஷாக்காரன்
மக்கள் திலகத்தின் மூன்று படங்களும் தமிழ் சினிமாவில் உண்டாக்கிய தாக்கம் ஒரு சரித்திர
புரட்சியாகும் .
1964 ல் வந்த வேட்டைக்காரன் படத்தின் மூலம் மக்கள் திலகத்தின் புதிய தோற்றம் - மாறுபட்ட
வேடம் - படம் முழுவதும் சுறுசுறுப்பாக தோன்றி ரசிகர்களின் பாராட்டை பெற்ற படம் .
அநேகமாக தமிழில் வந்த முதல் கௌபாய் படம் .மக்கள் திலகம் தன்னுடைய ஸ்டைல் - படம் முழுவதும் காட்டி நடித்திருப்பார் . ரசிகர்களின் ஆவலை பூர்த்தி செய்வதில் மக்கள் திலகத்திற்கு
நிகர் மக்கள் திலகமே .
காவல்காரன் - 1967
துப்பறியும் அதிகாரியாக நடித்த படம் . இந்த படத்திலும் அவருடைய ஆளுமை படம் முழுவதும்
நிறைந்திருக்கும் .குத்து சண்டையில் புதுமை புகுத்தியவர் .மென்மையான நடிப்பின் மூலம்
ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளை அடித்தவர் .தமிழக அரசின் 1967 ல் சிறந்த படமாக தேர்ந்தெடுக்கப்பட்ட படம் உலகில் .50 வயதில் இளமையுடன் தோன்றிய ஒரே நடிகர் எம்ஜிஆர் .
ரிக்ஷாக்காரன் -1971
மக்கள் திலகம் கதாநாயகனாக நடிக்க ஆரம்பித்து 24 ஆண்டுகள் பின்னர் அவர் ஒரு சிறந்த நடிகர்
என்று இந்திய அரசாங்கம் ஏற்று கொண்டு விருது வழங்க காரணமான படம் . உண்மையிலே
புரட்சி நடிகர் இந்த படத்தில் பல சாதனைகள் புரிந்துள்ளார் .
ஒரு ரசிகனின் கனவை , ஆவலை பூர்த்தி செய்து தன்னுடைய பக்கம் ஈர்த்து கொண்டதில் மக்கள் திலகம் மாபெரும் வெற்றி கண்டார் .
வேட்டைக்காரன் - காவல்காரன் - ரிக்ஷாக்காரன் மூன்று படங்களும் மக்கள் திலகத்தின் ரசிகர்களின் உன்னத காவியங்கள் .........vnd...
-
திண்டுக்கல் இடைத்தேர்தல் அ.இ.அ.தி.மு.க. பிரம்மாண்ட வெற்றி...
திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில், அ.தி.மு.க. வேட்பாளர் மாயத்தேவர் வெற்றி பெற்றார். அ.தி.மு.க.வை அமைத்ததும், சென்னை கடற்கரையில் நடந்த பிரமாண்டமான கூட்டத்தில் எம்.ஜி.ஆர். பேசினார். தொடக்கத்திலிருந்தே எம்.ஜி.ஆருக்கு உறுதுணையாக இருந்து வந்த ஜேப்பியாரும், முசிறிபுத்தனும் இக்கூட்டத்துக்கான ஏற்பாடுகளை செய்தனர்.
(ஜேப்பியார் இப்போது சத்தியபாமா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் வேந்தராக உள்ளார்) இந்தக் கூட்டத்தில் காளிமுத்து, முனுஆதி, எஸ்.எம். துரைராஜ், எட்மண்ட் ஆகியோர் எம்.ஜி.ஆர். முன்னிலையில் அ.தி.மு.க.வில் சேர்ந்தனர்.
அ.தி.மு.க.வின் வளர்ச்சியை எடுத்துக்காட்டும் வகையில், திண்டுக்கல் இடைத்தேர்தல் வந்தது. திண்டுக்கல் தொகுதி "எம்.பி."யாக இருந்த ராஜாங்கம் (தி.மு.க.) மரணம் அடைந்ததால், 1973 மே மாதம் 20_ந்தேதி அங்கு இடைத்தேர்தல் நடந்தது.
இந்தத் தேர்தலில், வக்கீல் மாயத்தேவரை அண்ணா தி.மு.க. வேட்பாளராக எம்.ஜி.ஆர். நிறுத்தினார்.
புதுக்க*ட்சிக்கு சின்ன*ம் தேர்ந்தெடுக்க ஏ.சி.ச*ண்முக*ம், மாய*த்தேவ*ர்,மற்றும் சிலரும் சென்ற*ன*ர். இர*ட்டை இலை உட்ப*ட* மூன்று சின்ன*ங்க*ளில் எதை தேர்வு செய்ய*லாம் என எம்ஜிஆரிட*ம் தொலைபேசியில் கேட்ட*ன*ர். மக்க*ளுக்கு எளிதில் புரியும் வ*கையிலும், தொண்ட*ர்க*ள் எளிதில் வ*ரையும் வ*கையிலும் இருக்கட்டும் என்று எம்ஜிஆர் இர*ட்டை இலையையே தேர்வு செய்தார். அவ*ர் சொல்லும் முன் இவ*ர்க*ளும் இர*ட்டை இலை சின்னமே ந*ன்றாக* உள்ளது என எண்ணினார்க*ளாம். தொண்ட*ர்க*ளின் எண்ண*மும், த*லைவ*ரின் எண்ண*மும் ஒத்துப்போவ*தில் என்னே ஒற்றுமை!
திண்டுக்கல் தேர்தலுக்கு 9 நாட்களுக்கு முன்னால், "உலகம் சுற்றும் வாலிபன்" காவியம், படத்தை எம்.ஜி.ஆர். ரிலீஸ் செய்தார். அந்தப்படம் வெளியாவதற்கு முன், சினிமா சுவரொட்டி மீதான வரியை சென்னை மாநகராட்சி திடீரென்று உயர்த்தியது. அதனால், சென்னை நகரில் ஒரு சுவரொட்டி கூட ஒட்டாமல் படத்தை எம்.ஜி.ஆர். வெளியிட்டார். ஆட்டோ, டாக்ஸிக*ளில் சிறிய* அள*வில் ஸ்டிக்க*ர் த*யார் செய்து ஒட்ட*ப்ப*ட்ட*து. ஸ்டிக்க*ருக்கான யோச*னையையும் வ*டிவ*மைப்பையும் செய்து த*ந்த*வ*ர் ஓவியரும், ந*டிக*ருமான பாண்டு ஆவார்.
`தேவி' தியேட்டருக்கு எம்.ஜி.ஆர். சென்று ரசிகர்களுடன் படத்தைப் பார்த்தார். பின்னர் நடந்த கூட்டத்தில், திண்டுக்கல் தேர்தல் நிதியாக தென்சென்னை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ரூ.20 ஆயிரத்தை ஜேப்பியார் எம்.ஜி.ஆரிடம் வழங்கினார்.
திண்டுக்கல் தேர்தல் பிரசாரத்தில் அனல் பறந்தது. எப்படியும் அந்தத் தேர்தலில் தி.மு.க. வெற்றி பெறவேண்டும் என்று அமைச்சர்கள் திண்டுக்கல்லில் முகாமிட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். முதல்_அமைச்சர் கருணாநிதி கிராமம் கிராமமாகச் சென்று ஓட்டு கேட்டார். எம்.ஜி.ஆர். இரவு பகலாக தொகுதி முழுவதும் பிரசாரம் செய்தார்.
"திண்டுக்கல் தேர்தலில் தி.மு.க. வெற்றி பெறவேண்டும்" என்று பெரியார் அறிக்கை விடுத்தார். திண்டுக்கல்லில் நாகல்நகர் என்ற இடத்தில் மே 13_ந்தேதி தி.மு.க.வினருக்கும், அ.தி.மு.க.வினருக்கும் இடையே பெரும் மோதல் நடந்தது. இருதரப்பினரும், பயங்கர ஆயுதங்களுடன் மோதிக் கொண்டனர். அப்போது சிலர் கத்தியால் குத்தப்பட்டார்கள்.
கலவரத்தை அடக்க, போலீசார் தடியடி நடத்தி கண்ணீர் புகை வீசினார்கள். இதையொட்டி, மறுநாள் 101 பேர் கைது செய்யப்பட்டனர். திண்டுக்கல்லில் பதற்ற நிலை நிலவியதால், பாதுகாப்பு ஏற்பாடுகளை நேரில் கவனிக்க, தமிழ்நாடு தலைமை போலீஸ் அதிகாரி (ஐ.ஜி.) அருள் திண்டுக்கல் சென்றார்.
20-05-1973 அன்று ஓட்டுப்பதிவு நடந்தது. மறுநாள் ஓட்டுகள் எண்ணப்பட்டு, முடிவு அறிவிக்கப்பட்டது. இந்தத் தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் மாயத்தேவர் வெற்றி பெற்றார்.
ஓட்டு விவரம்:-
மொத்த ஓட்டுக்கள் 6,43,704
பதிவான ஓட்டுக்கள் 5,05,253
மாயத்தேவர் (அ.தி.மு.க.) 2,60,930
சித்தன் (ப.காங்.) 1,19,032
பொன்.முத்துராமலிங்கம் (தி.மு.க.) 93,496
சீமைச்சாமி (இ.காங்.) 11,423
சூரியமுத்து (சுயே) 9,342
சேதுராமதேவர் (சுயே) 695
கோவிந்தசாமி (சுயே) 687
வரததேசிகன் (சுயே) 502 (இவ*ர் என*து தாய் மாமா ஆவார்).
அங்கண்ண செட்டியார் (சுயே) 448
செல்லாதவை 8,698
அ.தி.மு.க.வுக்கு அடுத்த இடத்தை காமராஜரின் பழைய காங்கிரஸ் பெற்றது. இ.காங்கிரஸ் வேட்பாளரும், சுயேச்சை வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர். திண்டுக்கல் தேர்தல் முடிவு பற்றி எம்.ஜி.ஆர். ஒரு அறிக்கை வெளியிட்டார்.
அதில் அவர் கூறியிருந்ததாவது:_
"திண்டுக்கல் தேர்தலின்போது, `உங்கள் ஓட்டு தமிழனுக்கா, அல்லது அன்னியனுக்கா" என்ற கேள்வியை கருணாநிதி எழுப்பினார். அந்தக் கேள்விக்கு தமிழ்ப்பண்பு, தமிழ் கலாச்சாரம், தமிழ் மரபு, அண்ணாவின் அறவழி, வள்ளுவன் நெறிமுறை இவைகளை இதய சுத்தியோடு பின்பற்றுபவன்தான் தமிழன் என்று, ஒளிவு _ மறைவு இல்லாமல், அ.தி.மு.க.வுக்கு லட்சோப லட்சம் வாக்குகளை வழங்கியதன் மூலம் தீர்ப்பளித்து இருக்கிறார்கள்."
மேற்கண்டவாறு எம்.ஜி.ஆர். கூறினார்.
முதல்_அமைச்சர் கருணாநிதி விடுத்த புலம்ப*ல் அறிக்கையில் கூறியிருந்ததாவது:_
"கழக தோழர்களே! தோல்வி கண்டு துவண்டுவிடாதீர்கள். நமது அண்ணனுக்கு 1962_ல் காஞ்சியில் ஏற்பட்ட சோதனையை நினைவில் வைத்து ஆறுதல் அடையுங்கள். ஊக்கம் பெறுங்கள். நான் ஏற்கனவே, பலமுறை குறிப்பிட்டு இருப்பதுபோல், தமிழ்நாடு முழுமைக்கும் திண்டுக்கல் முடிவு உதாரணமாகாது. ஒரு தொகுதியின் வெற்றி _ தோல்வி தமிழ்நாட்டின் எதிர்கால அரசியலை நிர்ணயிப்பதல்ல.
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்ற பழமொழி இதற்குப் பொருந்தாது. இவ்வாறு கூறி தேற்றினார். ஆனால், வ*ர*லாறு கூறிய*து என்ன? அடுத்த*டுத்த தேர்த*ல்க*ளிலும் திமுக*விற்கு ப*டுதோல்வியே ப*ரிசாக* கிடைத்த*து...காலை வ*ணக்கத்துட*ன்.......Shatm...
-
பாட்டாலே புத்தி சொன்ன*வாத்தியார் எம்.ஜி.ஆர்.- வின்*டிவியில் சகாப்தம்*நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி*07/10/20 அன்று அளித்த*தகவல்கள்*
--------------------------------------------------------------------------------------------------------------------------
வெற்றி என்பது வானத்தில் இருந்து விழுகின்ற நட்சத்திரம் அல்ல. உண்மை,உழைப்பு, உறுதி, உயர்வு இதைத்தான் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். ஒரு பாடமாக இந்த சமூகத்திற்கு தந்து இருக்கிறார்கள் .எம்.ஜி.ஆர். அவர்களுக்கு மனித மனங்களை படிக்க தெரியும் .அப்படி படித்த ஒரு மேதை என்றே சொல்லலாம் .குறிப்பாக யாரேனும் குழந்தையை அவர் கையில் கொடுத்து பெயர் வைக்க சொல்லும்போது ,அவரது கைகள் நடுங்கி கொண்டே வாங்குமாம் .குழந்தை இல்லாத ஒரு தந்தை என்ற நிலையில் அந்த குழந்தைகளுக்கு பெயர் வைக்க சொல்லி நிர்பந்தம் படுத்தும்போது கைகளில் நடுக்கத்தோடு வாங்கும் ஒரு நுட்பமான மனத்துக்காரர் எம்.ஜி.ஆர்.*
எத்தனையோ அரசியல்வாதிகள் இருந்தார்கள் . ஆனால் ஒரு நடிகராக இருந்து*அந்த நடிப்பின் மூலமே மக்களின் மனதில் இவ்வளவு பெரிய இடத்தை பிடித்து ,அந்த மக்களிடமே இவ்வளவு பெரிய செல்வாக்கை பெற்றவர் என்பது மற்றஎந்த நாடுகளிலும் இல்லாத ஒரு சரித்திர சாதனை தமிழகத்தில் இருந்தது .ஆங்கில நடிகர் ஒமர் ஷெரிப் ஒருஆங்கில படத்தில்கருணை மிக்க* டாக்டராக வருவார். அதே ஒமர் ஷெரிப்* மெக்கனாஸ் கோல்ட் படத்தில் ஒரு கொடூரமான வில்லனாக வருவார் .* அதெல்லாம் காரெக்டர் இமேஜ் . மக்கள் பார்த்தார்கள்,ரசித்தார்கள் .ஆனால் எம்.ஜி.ஆர். அப்படியல்ல. அவர் ஒரு ஆர்ட்டிஸ்ட் இமேஜ் கொண்டவர் .அவர் எந்த படத்தில் நடித்தாலும், எந்த பாத்திரம் கொண்டு இருந்தாலும் எம்.ஜி.ஆருக்காக தான் பார்க்கிறார்கள் .அதனால்தான் பல படங்களில்,கதைகளிலும் கூட* அவர் தலையீடு இருந்து இருக்கிறது .பாக்தாத் திருடன் படத்தில் மாய கம்பளம் காட்சி வருவது போல இருந்தது* இந்த மாதிரி* அந்த காலத்திலேயே**மூட நம்பிக்கையை வளர்க்கும் காட்சிகள் விதைக்கும் காட்சிகள்* அதுவும் நான் நடிக்கும் படங்களில் இருக்க கூடாது என்று தவிர்த்து, வாதிட்டு ,அன்றைக்கே பகுத்தறிவை விதைத்தவர் எம்.ஜி.ஆர்.*
ஆணவ சொற்கள், அகம்பாவ சொற்கள் நிறைந்த காட்சிகள் , பாடல்கள் தான் நடிக்கும் படங்களில் கண்டிப்பாக இருக்க கூடாது என்று பார்த்து கொண்டவர் .அன்னமிட்டகை படத்தில் நான் விரல் அசைத்தால்* வெற்றி தன்னாலே ஓடிவரும் என்று கவிஞர் வாலி பாடல் எழுதினார் . அப்படி வேண்டாம் .அவன் விரல் அசைத்தால் வெற்றி தன்னாலே ஓடி வரும் என்று எழுத சொன்னவர் எம்.ஜி.ஆர்.அப்படி தன்னடக்கத்தோடு இருந்தவர் .* அவருக்கு தெரியும் அந்த காலத்தின் சூப்பர் ஸ்டாராக இருந்த எம்.கே. தியாகராஜ பாகவதர் எந்த மாதிரி ஒரு சரிவை கண்டார் என்று .தன் கண் முன்னாலே பார்த்தவர் .* அன்றைக்கு திரைப்படத்திற்கு வசனம் எழுதினாலேயே* *ஒரு லட்சம் சம்பளம் தருவார்கள் என்று பேசப்பட்டவர் திரு.இளங்கோவன் .தமிழ் சினிமாவில்* தமிழ்**உரை நடையை**அப்படி மாற்றி காட்டிய இளங்கோவன் அவர்கள் ஒரு கட்டத்தில் மிக மிக நொடிந்து போய் கடிதம் எழுதி, எம்.ஜி.ஆரிடம் உதவி கேட்கும்போதெல்லாம் உங்கள் தமிழால் எத்தனை லட்சம் பேரை நினைத்தீர்கள் .உங்கள் தமிழ் இப்படி உதவி கேட்டு வரவேண்டுமா என்று வருத்தப்பட்டவர்** எம்.ஜி.ஆர்.*
ஒரு கட்சி தலைமையை , கட்சி தலைவரை மதிக்கும் பண்பாடு எம்.ஜி.ஆரிடம் எப்படி இருந்தது என்று கருத்து சொல்லுங்கள் .
திரு.கா. லியாகத் அலிகான் : புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரை பொறுத்தவரையில்*எனக்கு* எதிரியாக இருப்பதற்கு கூட*ஒரு தகுதி வேண்டும் என்று சொல்லுவார் .எல்லோரிடமும் சொல்வார் .தன்னுடைய*எதிரியாக*கருணாநிதியையும், எதிர்க்கட்சியாக தி.மு.க.வையும்*தான் கருதுவார் .ஒருமுறை ஒரு அமைச்சர் (அவர் பெயர் வேண்டாம் )நல்லெண்ணத்தில்* எம்.ஜி.ஆருக்கு*பயந்து கொண்டு சொன்ன*மறுப்பை*எம்.ஜி.ஆர். அவர்களால் சகித்து கொள்ள*முடியவில்லை .ஒருமுறை ரயிலில்*ஒரு அமைச்சர்* முதல் வகுப்பில்*கூப்பே* அறையில்*( இருவர்*மட்டும்* பயணம் செய்வது*)பயணம் செய்கிறார் . அதே*பெட்டியில்*நான்கு நபர்கள் பயணம் செய்யும் கூப்பேயில்*கருணாநிதி அவர்களுக்கு இடம் கிடைத்தது .கருணாநிதியுடன் அவரது உதவியாளர் பயணிக்கிறார் .மேலும் இருவர்* வெளியாட்கள் பயணிக்க உள்ளார்கள் .இந்த நிலையில் உதவியாளர் கருணாநிதியிடம் ஐயா, பக்கத்தில் உள்ள* இருவர்*பயணிக்க கூடிய கூப்பேயில்*அமைச்சர் தன் உதவியாளருடன் பயணிக்கிறார் .உங்களுக்கு இதில் பயணிக்க*சங்கடமாக இருக்கும் என்பதால் நான் அமைச்சரிடம் இருக்கைகளை மாற்றி கொள்வது பற்றி பேசட்டுமா*என்று கேட்டதற்கு ,கருணாநிதி பரவாயில்லை .இரவு நேரம் படுத்திருந்து 8 மணி நேரத்தில் ஊருக்கு சென்றிடுவோம் .அவர்கள் பதவியில் இருப்பவர்கள்.தொந்தரவு செய்ய வேண்டாம் என்றார் .பரவாயில்லை. நான் முயற்சி செய்கிறேன் என்று அமைச்சரிடம் ,அண்ணே*எதிர்க்கட்சி தலைவர் கருணாநிதி அவர்கள் நால்வர் பயணிக்கும் கூப்பேயில்வெளியாட்களுடன்* பயணிக்க சங்கோஜப்படுகிறார் . இந்த கூப்பேவை*அளித்தால் எந்த சங்கடமும் இல்லாமல் சற்று*ஒய்வு எடுத்தபடி*பயணிக்க ஏதுவாக*இருக்கும் என்று சொன்னதற்கு அமைச்சர் யோசித்தார் .அமைச்சருக்கு இரண்டு மனம் . ஒன்று இருக்கைகளை மாற்றி கொடுத்தால்*ஒருவேளை எம்.ஜி.ஆர் நம்மை*தவறாக நினைக்கலாம் . இன்னொன்று , நமக்கு*எதிரிதான் இந்த கருணாநிதி , இவருக்கு நாம் ஏன் உதவ வேண்டும் என்று நினைத்திருக்கலாம்.அமைச்சர் உடனே முடியாது .எனக்கும் உதவியாளர் உள்ளார்*எங்களுக்கும் தனிமை தேவைப்படுகிறது என்றார் .கருணாநிதியின் உதவியாளர் அவரிடம் ஐயா ,நாம் இந்த கூப்பேவிலேயே பயணிக்கலாம் என்று தயக்கத்துடன் சொன்னவுடன் கருணாநிதி நிலைமையை*புரிந்து கொண்டார் .அதாவது இவர் அந்த அமைச்சரை கேட்டிருப்பார் .அவர் மறுத்திருப்பார் என்று .அமைச்சரும் , கருணாநிதியும் ஊர் போய் சேர்ந்துவிட்டார்கள் .
நான்கு நாட்கள் கழித்து புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரிடம் இருந்து இந்த அமைச்சருக்கு அழைப்பு வந்தது . என்னை வந்து பார் என்றார் .எம்.ஜி.ஆர். அவர்கள் வழக்கமான*அழைப்பு கொடுத்திருப்பார் என்று நினைத்து அமைச்சர் சென்று பார்த்திருக்கிறார் . வந்தவுடன் எம்.ஜி.ஆர் .ரயில் சம்பவம்*பற்றி கேட்டிருக்கிறார் . அவர் எவ்வளவு பெரிய ஆள் .எனக்கு தலைவராக இருந்தவர் .எதிர்க்கட்சி தலைவர்* உன்னிடம் போய் அந்த ஆள் கூப்பேவை*மாற்றிக்கொள்ளலாமா* என்று தன் உதவியாளர் மூலம் கேட்டிருக்கிறார் பார் . அதை ஏற்று கொண்டு*உடனே நீ மாற்றி கொண்டிருந்தால்*நான் உன்னை பாராட்டி இருப்பேன்* ரயில் பயணம் 8 மணி நேரம் தானே .உன்னைவிட வயதில் மூத்தவர் . உடல்நிலையில் பாதிப்பு கூட இருந்திருக்கலாம் .தனிமை தேவைப்பட்டிருக்கலாம் .அந்த உதவியை* நீ செய்வதனால் என்ன குறைந்தா* போய்விடுவாய் .அமைச்சர் உடனே ,இல்லை அண்ணே நீங்கள் தவறாக நினைப்பீர்களோ என்ற எண்ணத்தில்தான் இப்படி நடந்து கொண்டேன்*என்றதற்கு ,நான் ஏன் தவறாக நினைக்க போகிறேன் .பிறருக்கு*அதுவும் எதிர் கட்சி தலைவருக்கு இந்த மாதிரி உதவியை*நீ செய்திருந்தால் நான் மனதார உன்னை பாராட்டி இருப்பேன்*,வரவேற்றிருப்பேன் .இந்த உதவியை நீ செய்வதனால் நான் உன்னை பற்றி தவறாக எண்ணியிருப்பேன் என்று நீ நினைத்ததே*பெரிய தவறு .ஒரு அமைச்சராக இருந்து கொண்டு நீ இப்படி அநாகரிகமாக* நடந்திருக்க கூடாது .,என்று கடினமான வார்த்தைகளால் திட்டி அனுப்பிவிட்டார் .* ஒரு சில நாட்களில் அந்த அமைச்சரின் முக்கிய துறைகளை நீக்கிவிட்டு மிகவும் சாதாரண துறைகளை*மட்டும் அளித்து ,அவரை டம்மி*அமைச்சர் ஆக்கி* தண்டித்தார் .மீண்டும் சில மாதங்கள்*கழித்து சில முக்கிய*துறைகளை ஒதுக்கி*கௌரவம் செய்தார் .* அதாவது மந்திரியாக இருந்தால் கூட ஒருவர் தவறு செய்தால் அவரது முக்கியத்துவத்தை குறைத்து*தண்டிப்பது ,பின்னர் சில காலத்திற்கு பிறகு அவருக்கு*திருந்தியதாக நினைத்து* மீண்டும் முக்கிய பதவிகளை அளித்து* கௌரவிப்பது என்பது புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களிடம் அவர் பாடி நடித்த பாடலின்படியே கற்று கொண்ட பாடமாகும்**,இவ்வாறு* திரு.**லியாகத் அலிகான்*பேசினார்*.*.
சோழன், சேரன், பாண்டிய மன்னர்களிடம் பல்வேறு வேறுபாடுகள் இருந்தால்கூட .அதையெல்லாம் வரலாற்று பூர்வமாக விவரம் அறிந்தவர்தான் எம்.ஜி.ஆர். அதை தெரியாமல் இருந்தவர்கள்தான்பலர்* ஆட்சி புரிந்தவர்கள் /ஆட்சியில் இருந்தவர்கள் .என்பது ஒரு கதை ..மதுரையில் உலக தமிழ் மாநாடு நடைபெறுகிறது .அந்த மாநாட்டில் வெளிநாட்டவர் பலர் தங்குவதற்காக பிரம்மாண்ட விடுதி ஒன்று கட்டப்படுகிறது .*அந்த விடுதியை திறப்பதற்காக எம்.ஜி.ஆர். மதுரைக்கு வருகை புரிகிறார் .இந்த விடுதிக்கு என்ன பெயர் சூட்டப்போகிறீர்கள் என்று எம்.ஜி.ஆர். கேட்கிறார் . தமிழ்நாடு விளம்பரம் மற்றும் மக்கள் செய்தித்துறை தொடர்பாளர் திரு.கற்பூர சுந்தரபாண்டியன் அதற்கு ராஜராஜன் விடுதி என்று முடிவு செய்துள்ளோம் என்றார் .பாண்டிய மன்னன் ஆண்ட மதுரை விடுதிக்கு ராஜராஜன் பெயரா என்று எம்.ஜி.ஆர். கேள்வி எழுப்பினார் .உடனே அனைவரும் பயந்துபோய்விடவே , ஏற்கனவே மதுரையில் பாண்டியன்* ஓட்டல் இருப்பதால் ,அதை தமிழ்நாடு ஓட்டல் என்று பெயர்* மாற்ற சொன்னாராம் .உடனே இரவோடு இரவாக பெயரை மாற்றி தமிழ்நாடு அரசு விடுதி என்று சூட்டினார்களாம் .இதுபற்றி எம்.ஜி.ஆர். அவர்களிடம் கருத்து கேட்டதற்கு எப்படி பாண்டிய மன்னன் சோழ மன்னனை விரட்டி அடித்துவிட்டாரா என்று கிண்டலடித்தாராம் .மற்ற தகவல்கள் அடுத்த அத்தியாயத்தில் தொடரும் .
நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள் /காட்சிகள் விவரம்*
-----------------------------------------------------------------------------------
1.எங்கே அவள், என்றே மனம்* - குமரிக்கோட்டம்*
2.நீதிமன்ற காட்சியில் எம்.ஜி.ஆர். - பெற்றால்தான் பிள்ளையா*
3.என்னை தெரியுமா* -குடியிருந்த கோயில்*
4.சின்னவளை முகம் சிவந்தவளை - புதிய பூமி*
5.திரு.கா. லியாகத் அலிகான் பேட்டி*
6.ஓ* வெண்ணிலா ,ஓ வெண்ணிலா - ராணி சம்யுக்தா*
*
-
தனியார் தொலைக்காட்சிகளில் கலை மன்னன் எம்.ஜி.ஆர். திரைக்காவியங்கள்*ஒளிபரப்பான*பட்டியல்* (06/10/20 முதல் 12/10/20* வரை )
-------------------------------------------------------------------------------------------------------------------------------
06/10/20* - சன் லைப் - காலை 11 மணி - வேட்டைக்காரன்*
* * * * * * * * மூன் டிவி* -பிற்பகல் 12.30 மணி - குடும்ப தலைவன்*
* * * * * * * வசந்த் டிவி - பிற்பகல் 1.30 மணி - வேட்டைக்காரன்*
* * * * * * * கிங் டிவி* *- இரவு 10 மணி* - அன்பே வா*
07/10/20 -சன்* லைப் - காலை 11 மணி - ராமன் தேடிய சீதை*
* * * * * * * * பாலிமர் டிவி -காலை 11 மணி - புதிய* பூமி*
* * * * * * * *மீனாட்சி டிவி -பிற்பகல் 12.30 மணி - நல்ல நேரம்*
* * * * * * * *தமிழ் மீடியா டிவி -பிற்பகல்* 2மணி - எங்க வீட்டு பிள்ளை*
08/10/20 -வசந்த் டிவி* - பிற்பகல் 1.30மணி -தாயை காத்த தனயன்*
* * * * * * * மீனாட்சி டிவி -பிற்பகல் 12.30 மணி -விவசாயி*
* * * * * * * சன்* லைப் - மாலை 4 மணி -நினைத்ததை முடிப்பவன்*
* * * * * * *புதுயுகம் டிவி* - இரவு* 7 மணி - முகராசி*
09/10/20 -மெகா டிவி -அதிகாலை 1 மணி -விவசாயி*
* * * * * * * சன் லைப் - காலை 11 மணி* - எங்கள் தங்கம்*
* * * * * * *மெகா 24 - இரவு 9 மணி -குடியிருந்த கோயில்*
10/10/20 -சன் லைப் - காலை 11 மணி - கணவன்*
* * * * * * * முரசு டிவி* -மதியம் 12 மணி /இரவு 7 மணி -வேட்டைக்காரன்*
* * * * * * ராஜ் டிவி* -பிற்பகல்* 1.30 மணி - உலகம் சுற்றும் வாலிபன்*
* * * * * * வேந்தர் டிவி -பிற்பகல் 1.30 மணி - அவசர போலீஸ் 100
11/10/20 - புதுயுகம் டிவி - இரவு 10 மணி* - மாட்டுக்கார வேலன்*
12/10/20* ஜெயா டிவி - காலை 10 மணி - இதய வீணை*
* * * * * * * வெளிச்சம் டிவி -பிற்பகல் 2 மணி -குடும்ப தலைவன்*
* * * * * * * சன்* லைப்* - மாலை 4 மணி - உழைக்கும் கரங்கள்*
* * * * * * *பாலிமர் டிவி -இரவு 11 மணி - அரச கட்டளை*
* * * * * * *
-
கல்லூரியில் காதலா?
எம்.ஜி.ஆர். கண்டனம்
கேள்வி : இந்த ஆண்டோடு எனக்குக் கல்லூரிபப் படிப்பு முடிகிறது. கலோரியில் என்னோடு படித்த ஒரு மாணவியை நான் உரியும் உயிராய் காதலிக்கிறேன். அவளும் என்னை காதலிக்கிறாள். பெற்றோரின் சம்மதத்தோடு இருவரும் அடுத்த ஆண்டு இருவரும் திருமணம் புரிந்து கொள்ளப்போகிறோம். காதலிலே வெற்றி பெற்ற எங்களுக்கும் மற்ற இளைஞர்களுக்கும் தாங்கள் கூறும் அறிவுரை என்ன அண்ணா?
எம்.ஜி.ஆர். பதில் : பெற்றோர்களின் சம்மதத்தோடு திருமணம் செய்து கொள்ளப் போகிறோம், என்ற செய்தி மகிழ்ச்சிக்குரியது தான், ஆனால் உங்களைப் போன்ற மாணவ இளைஞர்களுக்கு நான் விடுக்கும் அறிவுரையல்ல வேண்டுகோள் தான்:
மாணவர்கள் அரசியலில் ஏன் பங்குகொள்ளக் கூடாது என்று பெரியார்கள் சொல்கிறார்கள்? மாணவர்கள் அறிவில்லாதவர்கள் என்றோ, அரசியலைத் தெரிந்து கொள்ளத் தகுதியில்லாதவர்கள் என்றோ பொருளல்ல. கல்வி பயிலும் நேரத்தில் தங்களை வேறு பிரச்சனைக்கு உட்படுத்திக் கொண்டு, கல்வியைப் பாழ்படுத்திக் கொள் ளக் கூடாது என்பதே காரணம். அரசியலைப் போலத் தான் காதலும், ஓர் ஆணோ , பெண்ணோ வயது வந்த பிற கு ( அல்லது தகுதியான நிலை வந்தபிறகு ) உடற் பசியைத் தீர்த்துக் கொள்ளவும் உள்ள எழுச்சியைத் தணித்துக் கொள்ளவும் வாழ்க்கையில் ஒரு நிறைவைப் பெறவும் மணஞ் செய்து கொள்ள வி கும்புவது கூடாத ஒன்றல்ல; தேவையற்றதுமல்ல, அனால் கல்வி பயிலும் நேரத்தில் இந்த உணர்ச்சிகளுக்கு ஆட்பட்டு விட்டால், பெரும்பால்னவர்களுக்கு அது வாழ்க்கையைச் சோக முடிவில் கொண்டு வந்து விட்டு விடலாம், அந்தக் கல்வித்துறையில்.
எனக்குத் தெரிந்தவரை, வாய்ப்பும் வசதியுமுள்ள இட ங்களிலிருந்து கல்லூரிக்கு வரும் மாணவர்கள் மிகச் சிறு பான்மையினரே. கடன் பட் போ , இருக்கும் கொஞ்சம் சொத்துக்களை விற்று. தங்கள் குழந்தைகள் கல்வி பயின்று தங்களை வாழவைக்கு மென்ற ஆசையில் பெற்றேரால் கல்லூரிக்கு, அனுப்பி வைக்கப்படுவோரே பெரும்பான்மையினர். தந்தையற்ற மகன், தான் பயிலும் ஊன்றிப் படித்துத் தேர்த்தால்தான் தாய்க்கு ஆதரவாக இருக்கமுடியும்; தாயின் தம்பிக்கை மட்டுமல்ல ; அவளுடைய எல்லா எண்ணங்களுமே அந்த மகளின் கல்வி முன்னேற்றத்தின் அடிப்ப டையில் தான் உருவாகக்கின்றன.
ஆதலால் இத்தகைய நிலையில் மாணவ இளைஞர்கள் கல்வி நேரத்தில் காதலுக்கு இடம் கொடுத்தால் கல்வியும் கெட்டுக் காதலும் தடைப்பட்டு , தாயையும், சார்த்த குடும்பத்தையும் காக்க முடியாத விளைவையே தருவதாகிவிடும்.
நன்றி : நடிகன் குரல்.............
-
கமலஹாசன் என்ற ஒரு நடிகர் ... பிக் பாஸ் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியின் தொகுப்பாளராக செயல்பட்டு வருகிறார். நேற்று முன் தினம் சனிக்கிழமை இரவு நிகழ்ச்சியில், கல்விக் கண் திறந்தவர் காமராசர் என்றும், அவரால் தான் மாணவர்கள் பள்ளியில் சேர ஆர்வமாக இருந்தனர் என்றும் கூறி இருக்கிறார்.
தான் பேசுவது தனக்கு மட்டுமே புரியும் ரீதியில் பேசுவதை வழக்கமாக கொண்டிருப்பவர் இந்த கமலஹாசன். இவர் வி.சி. கணேசனின் ரசிகராக இருந்து விட்டு போகட்டும். ஆனால், உண்மையை மறைத்து பேசுவதுதான் நமக்கு கோபத்தை வரவழைக்கிறது.
முகநூலில், சில நாட்களுக்கு முன்பு, காமராசரை விட பொற்கால ஆட்சி தந்த பொன்மனச் செம்மல் ஆட்சி எவ்வளவு சிறப்பு வாய்ந்தது... என்பதை நிரூபிக்கும் வகையில், ஆதராங்களுடன் நான் குறிப்பிட்டிருந்தேன்.
இந்த கமலஹாசனுக்கு பதிலாக எனது முந்தைய பதிவை மீண்டும் மறு பதிவாக இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.
பெருந்தலைவர் காமராசர் மதிய உணவு திட்டத்தை, மாநிலத்தின் சில பகுதிகளில் மட்டுமே அமல் படுத்தினார். அதிலும், எல்லா மாணவர்களும் பயன் பெற வில்லை. மதிய உணவு என்பது ஒரு கலவை சாதமாகவே இருந்தது. அதுவும் நல்ல அரிசியில் சமைக்கப் பட வில்லை. ஆனால், பொற்கால ஆட்சி தந்த பொன்மனச் செம்மலோ மாநிலம் முழவதும், மதிய உணவுத் திட்டத்திலிருந்து பெருமளவில் மாறுபட்டு, புதுமையான சத்துணவு திட்டத்தை அமல் படுத்தி, உலக நாடுகள் சபையால் பாராட்டப் பட்டார். காமராசர் ஆட்சி காலத்தில் இயற்கை வளம் மிகுந்து, மக்கள் தொகை சிறிய அளவில் இருந்தது. நல்லாட்சி தந்த நாயகன் எம்.ஜி.ஆர். ஆட்சி செய்த போது இயற்கை வளம் குன்றி, மக்கள் தொகை பெருகி இருந்தது. இருப்பினும், பொற்கால ஆட்சியை வழங்கினார் பொன்மனச் செம்மல். காமராசர் ஆட்சி செய்த பொழுது அவர் சார்ந்த காங்கிரஸ் கட்சியே மத்தியில் ஆட்சி புரிந்து வந்தது. இதனால், திட்டங்களை தமிழகத்துக்கு பெறுவதில் சிக்கல் ஏதுமில்லை. ஆனால், புரட்சித் தலைவர் ஆண்ட போது மத்தியில் ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சிகள் ஆட்சி செய்தது. தமிழக மக்களின் நல் வாழ்விற்கான திட்டங்களை போராடி போராடித் தான் பெற்றார், சமதர்ம சமுதாய காவலன் எம்.ஜி.ஆர்.
இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு காங்கிரஸ் கட்சிதான் ஆட்சி பொறுப்பேற்றது. அப்போது, எந்த கட்சி ஆட்சி செய்திருந்தாலும், திட்டங்கள் பல தீட்டப்பட்டுதான் இருக்கும். இதில் ஒரு விந்தையும் கிடையாது. மனைவிக்கும், பிள்ளைகளுக்கும் உண்ண உணவு, இருக்க இடம், உடுக்க உடை போன்றவைகளை ஏற்பாடு செய்து கொடுப்பது தான் ஒரு குடும்பத தலைவனின் கடமை. அது போன்றது தான் இதுவும். ஆனால், காமராசர் அதை செய்தார், இதை செய்தார் என்று சிலர் கூக்குரலிடும் பொழுதும், அதை மிகைப்படுத்தி கூறும் பொழுதும், இந்த குடும்பத்தலைவன் பொறுப்புக்கள் தான் நினைவுக்கு வருகிறது. தன் மனைவி மக்களுக்கு உணவளித்து, இடமளித்து, உடைகள் வாங்கி கொடுத்தது பற்றி பெருமை பீற்றிக் கொள்வது ஒரு குடும்பத் தலைவனுக்கு அழகா ?
காமராசர் ஆட்சி செய்த காலத்தில், குறைந்த அளவில் மக்கள் தொகை இருந்த காரணத்தால், மக்களின் தேவைகள் பூர்த்தி செய்யும் அளவுக்கு அரசு ஓரளவு செயல்பட்டது.
ஆனால், நம் எழில் வேந்தன் எம்.ஜி.ஆர். அவர்கள் ஆட்சிக் காலத்தில், குடிநீர் தட்டுப்பாடு மிகுந்து காணப்பட்டதன் காரணத்தால், கிருஷ்ணா நதி நீர் திட்டம் தீட்டப்பட்டு, அதன் மூலம் தலைநகர் வாழ் மக்களுக்கு குடிநீர் எளிதாக கிடைக்க வழி காணப் பட்டது. அரசு கஜானாவை தீயசக்தியும் காலி செய்தது வரலாற்று உண்மை. அண்டை மாநில அரசுகளுடன் கொண்டிருந்த நல்லுறவு காரணமாக காவிரி நீர் தமிழகத்துக்கு தங்கு தடையின்றி கிடைத்தது. இதன் மூலம் டெல்டா மாவட்ட விவசாயிகள் பெரும் பயனடைந்தனர். (அப்போது, மத்தியில் ஆண்ட காங்கிரஸ் கட்சியே கர்நாடகாவிலும், தமிழகத்திலும் ஆட்சிப் பொறுப்பில் இருந்தது. காவிரி நீர் பிரச்சினைக்கு அப்போதே தீர்வு கண்டிருக்கலாம் என்பது வேறு விஷயம்.
அது போன்றே முல்லைப் பெரியாறு ஒரு பூதாகரமான பிரச்சினையாகி உள்ளது. - இப்போது காவிரி நீர் பிரச்சினையும், முல்லைப் பெரியாறு பிரச்சினையும் ஒரு தொடர்கதையாகி வருகிறது).
நமது மக்கள் திலகம் ஆட்சியில்தான், மேட்டூரிலிருந்து ஈரோடு வரை 4 தடுப்பணைகள் கட்டப்பட்டு, விவசாய பாசன வசதிகள் பெருகின.
அது மட்டுமல்லாமல், வால்பாறை அருகே காடம்பாறை நீரேற்று மின் நிலைம் உருவாகி மின்சக்தி உற்பத்தி செய்யப்பட்டது.
இந்த திட்டங்கள் எல்லாம் காங்கிரஸ் கட்சியின் காமராஜர் ஆட்சி புரிந்த பொழுது ஏன் செயல்படுத்தப்பட வில்லை. அது பற்றி ஏன் யோசிக்க வில்லை என்பதே நம் கேள்வி ?
தேவிகுளம், பீர்மேடு பகுதிகளில் பெரும்பான்மையாக வசிக்கும் தமிழர்கள் ஏன் உரி மை கொண்டாட வில்லை. அந்த பகுதிகளை கேரளாவுக்கு தாரை வார்த்து கொடுத்ததே இந்த காமராஜரின் காங்கிரஸ் ஆட்சியில் தான்.
பள்ளிக் கல்வியை மட்டுமே பிரதானமாக கொண்டு கல்விச் சாலைகள் பல காமராசர் காலத்தில் திறக்கப் பட்டாலும், உயர் கல்வி (பொறியியல், மருத்துவம் மற்றும் தொழில் சார்ந்த கல்வி) நிறுவனங்கள். மன்னாதி மன்னன் மக்கள் திலகம் ஆட்சியில் பல தொடங்கப்பட்டு, ஆண்டுதோறும் இன்று தமிழ் நாட்டில் இலட்சக் கணக்கான பட்டதாரிகள் உருவாக காரணகர்த்தாவாக விளங்கியவர் சத்துணவு தந்த சரித்திர நாயகன் எம்.ஜி.ஆர்.
நம் இதய தெய்வத்தின் இதயக்கனி எம்.ஜி.ஆர். அவர்கள் 1963ல் காமராசர் அவர்களை என் தலைவர் என்றும், பேரறிஞர் அண்ணா அவர்களை என் வழிகாட்டி என்றும் , தி.மு.க.வில் இருந்த போதே தைரியமாக அன்புடன் கூறினார். ஆனால், பெருந்தலைவரோ, 1964ல் நடந்த சென்னை மாநகராட்சி தேர்தலில், "வேட்டைக்காரன்" வருகிறான், அவனிடம் ஏமாந்து விடாதீர்கள் என்று வெறுப்புடன், தனி மனித தாக்குதலை தொடர்ந்தார்.
மக்கள் நல திட்டங்கள் பல அமல் படுத்தியிருந்தால், சொந்த விருதுநகர் தொகுதியிலேயே மக்களால் காமராசர் ஏன் நிராகரிக்கப் பட்டார் ? இந்த 1967 சட்டமன்ற தேர்தலுக்கு முன்புதான் தமிழ் நாட்டில், காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்த போது, கடுமையான உணவுப் பஞ்சம் ஏற்பட்டது. அப்போது, எலிக்கறி சாப்பிடச் சொனனதுதான் இந்த காங்கிரஸ் அரசாங்கம். இதனாலே காமராசர் தோற்ற சம்பவமும் அரங்கேறியது. படுத்துக் கொண்டே ஜெயிப்பேன் என்று அகந்தையுடன் கூறிய காமராசர் தோற்றார்.
தமிழகத்தின் எந்த தொகுதியில் நின்றாலும், வெற்றியே கண்டு, தமிழகத்தின் தொடர் முதல்வராக விளங்கி பெருமையை பெற்றார். நிருத்திய சக்கரவர்த்தி எம்.ஜி.ஆர். அது மட்டுமல்ல, படுத்துக் கொண்டே ஜெயிப்பேன் என்று சொல்லாத நம் மக்கள் திலகம் 1967 மற்றும் 1984 சட்டமன்ற பொது தேர்தல்களில் படுத்துக் கொண்டே இரு முறை வெற்றி பெற்று, உலக சாதனையை ஏற்படுத்தினார், எங்கள் தங்கம் எம்.ஜி.ஆர்.
நம் எழில் வேந்தன் எம்.ஜி.ஆர். அவர்கள் கட்சி ஆரம்பித்த புதிதில், காமராஜரிடம் நிருபர்கள் கருத்து கேட்ட போது, ஒரே குட்டையில் ஊறிய மட்டை என்று காழ்ப்புணர்ச்சி கொண்டு கூறியது நாகரீகமானதா ?
தேசிய அளவில் எலியும் பூனையுமாக இருந்த இந்திரா காந்தியும், காமராஜரும், தங்கள் கொள்கைகளை கைவிட்டு, பொன்மனச் செம்மலின் வளர்ந்து வரும் செல்வாக்கை தாங்க முடியாமல், 1974 ஆம் ஆண்டு பாண்டிச்சேரி சட்டமன்ற தேர்தலில் கூட்டணி வைத்தார்கள். இதை விட வெட்கக்கேடான செயல் இருக்குமா ?
காமராசர் காலத்தில் ஒரு குறிப்பிட்ட இனத்தவர் ஆதிக்கம் செலுத்தினர். அதற்கு உறுதுணையாக இருந்தவர் தான் காமராசர்.
ஆனால், என் தங்கத் தலைவர் எம்.ஜி.ஆர். ஜாதி, இனம், மத உணர்வுகளுக்கு அப்பாற்பட்டு, அனைத்து தரப்ப்பினராலும் எங்கள் வீட்டு பிள்ளை என ஏற்றுக் கொள்ளப் பட்டவர்.
இவ்வாறு பல ஒப்பீடுகள் செய்யப் படும் போது, என் கண்களுக்கு தமிழகத்தில் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கி, பொற்காலத்தை வழங்கியவர் புரட்சித் தலைவர் ஒருவரே என்றுதான் புலப்படுகிறது.
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம்.ஜி.ஆர். புகழ் !
என்றென்றும் என் தங்கத் தலைவன் எம்.ஜி.ஆர். புகழ் மட்டுமே பாடும், சௌ. செல்வகுமார்.
பின்குறிப்பு : இந்த தலைக் கணம் பிடித்த கமலஹாசன், நம் எழில் வேந்தன் எம்.ஜி.ஆர். அவர்கள் நடித்த "நாளை நமதே" காவியத்துக்கு நடிகர் சந்திரமோகன் நடித்த வேடத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால், இதோ அதோ என்று கால்ஷீட் தராமல் ஒரு மாத காலமாக அலைக்கழித்தார். நம் தலைவரும் பொறுமையின் சிகரம் அல்லவா ! அவரும் அமைதி காத்தார். அடிப்படையில் இந்த நடிகன் திமிர் பிடித்தவர். அப்போது, வி.சி. கணேசனுக்கு துதி பாட, போலி யாளர்கள் கொண்ட ஒரு கூட்டம் இருந்தது. அந்த கூட்டத்தில் இந்த நடிகனும் ஒருவர். நம் பொன்மனச் செம்மலுடன் நடிக்க தயக்கம் காட்டியவர். இவர் அரசியல் கட்சி நடத்துகிறார். இது போன்ற மாறுபட்ட விமர்சனங்களால்தான் இவர் விமர்சிக்கப் படுகிறார்.( தான் நடத்தும் கட்சிக்கு "நாளை நமதே" திரையுலக/ அரசியல் சக்கரவர்த்தி மக்கள் திலகம் அவர்களின் தலைப்பை பயன் படுத்துகிறார். வேறு எந்த தலைப்பையும் சூட்ட யோசனைகள் வரவில்லையோ?!)...sk...
-
மக்கள் திலகத்துக்கு பொருந்தாத கதையமைப்பு. திரைக்கதை விறுவிறுப்பு இல்லாததால் இழுவையான காட்சிகள். மக்கள் திலகம் படங்களில் சண்டைக் காட்சிகள் சிறப்பாக இருக்கும். இதில் அதுவும் இல்லை. க்ளைமாக்ஸில் வழக்கமாக இவர் எல்லாரையும் காப்பாற்றுவார். இந்தப் படத்தில் போலீஸ் வந்து ( எம்.கே.முஸ்தபா) இடிபாடுகளில் சிக்கிய இவரைக் காப்பாற்றும். பாம்புக் கடி வேறு. படம் முடிவதற்கு 10 நிமிடம் முன்னால் மக்கள் திலகம் படுக்கையில் சீரியஸாக இருப்பார். ஒரு கட்டத்தில் அவர் இறப்பது போல் கண்பித்து பிறகு பிழைத்துக் கொள்வார். அவர் படுக்கையில் இருந்தபடியே படம் சப்பென்று முடியும். மக்கள் திலகம் படுக்கையில் இருந்தபடி முடியும் படம் இது ஒன்றுதான். படம் எதிர்பார்த்த அளவு இல்லாமல் ஏமாற்றினாலும் கிராமப்புறங்களில் சி செண்டர்களில் மக்கள் திலகத்தின் முகத்துக்காகவே படம் சுற்றிக்கொண்டே இருந்தது. எனக்குத் தெரிந்து திருக்கோவிலூரில் மளிகைக் கடை வைத்திருந்த ஒரு செட்டியார் இந்தப் படத்தை வாங்கி படப்பெட்டியை கடையிலேயே வைத்திருந்தார். அந்தப் பிரிண்ட் தேயும் அள்வுக்கு சுற்றுவட்டார ஊர்களில் அடிக்கடி மாடப்புறா திரையிடப்பட்டது. செட்டியாருக்கு வாங்கிய விலையைவிட அதிகமாகவே சம்பாதித்து கொடுத்தது. மக்கள் திலகத்தின் படங்கள் நஷ்டம் ஏற்படுத்தாது. மக்கள் திலகத்துடன் நடிகை வசந்தி இந்தப் படத்தில் நடித்திருந்தார். அந்தக் காலத்தில் ஆண்களே அதிகம் படிக்காத நிலையில் இவர் பி.ஏ. படித்தவர். டைட்டிலில் வசந்தி பி.ஏ. என்று போடுவார்கள். 1967 தேர்தலில் விருதுநகரில் காமராஜரை தோற்கடித்த மாணவர் தலைவர் விருதுநகர் சீனிவாசன் இவரை 2 ம் தாரமாக திருமணம் செய்து கொண்டார்.......... Swamy...
-
Malarum Ninaivugal
1972
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
17-10-1972 ஆம் ஆண்டு உதயமானது.
அது வரை மக்களின் மனங்களை தனது திரைப்படங்கள் வாயிலாக மகிழ்வித்துக் கொண்டிருந்த மக்கள் திலகம் மக்கள் பணிக்காக முழுநேர அரசியலில் ஈடுபட தனிக்கட்சி தொடங்கிய நாள். அவர் தொடங்கினார் என்பதை விட தொடங்கிட தூண்டப்பட்டார் அல்லது கட்டாயப்படுத்தப்பட்டார் என்பதே பொருந்தும்.
திராவிட முன்னேற்றக்கழகத்தில் பல்லாண்டு காலம் பாடு பட்டு அக்கட்சியை வளர்க்க அவர் எவ்வளவு உழைத்திருப்பார் என்பது அனைவரும் அறிந்ததே.
தனது தயாரிப்பில் வெளிவந்த படத்தின் ஆரம்பத்தில் கட்சிக் கொடி, தனது கதாபாத்திரத்தின் பெயரில் உதய சூரியன், நெற்றியில் உதயசூரியன் வடிவில் திலகம், உடையில் கருப்பு சிவப்பு, படிக்கும் பத்திரிக்கையில் முரசொலி இப்படி ஒவ்வொரு வினாடியும் கட்சியின் வளர்ச்சியை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்பட்டவர் மக்கள் திலகம்.
(நேற்று தற்செயலாக நம்நாடு படம் பார்க்க நேர்ந்தது. அதில் ஈ மொய்க்கும் பலகாரங்களை விற்பதை தடுத்து தூக்கி எறிந்து விட்டு அதற்கான பணத்தைக் கொடுக்கும் காட்சியைப் பார்த்தேன். அந்தப் பணத்தை எடுக்கும் பர்சின் நிறம் கூட கருப்பு சிவப்பு). இப்படி பாடுபட்ட வளர்த்த கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட பின் ரசிகர்கள் மற்றும் தொண்டர்களின் கட்டாயத்தினால் உருவாக்கப்பட்ட கட்சி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம். மக்கள் மனங்களை மகிழ்வித்த மக்கள் திலகம் 1977 ஆம் ஆண்டு முதல் மக்கள் வாழ்வையும் வளப்படுத்த நல் ஆட்சி தந்தார். (அதற்கு முன்னும் தாம் பாடுபட்டுச் சம்பாதித்த பணத்தில் பலருக்கும் அள்ளி அள்ளி கொடுத்து உதவினார் அவர்கள் வாழ்வை மலரச் செய்தார் எனினும் அரசு இயந்திரத்தைப் பயன்படுத்தி பெரிய அளவில் செய்ய உதவியது கட்சியே.
இந் நாள் எம்.ஜி,ஆர். ரசிகர்கள் தொண்டர்கள் வாழ்வில் மறக்க இயலாத மறக்கக் கூடாத ஒரு நாள்
Thanks Jaisankar sir..........VND...
-
1960களில் விஸ்வநாதன் – ராமமூர்த்தி மற்றும் கே.வி.மகாதேவன் கோலோச்சிக்கொண்டிருந்த நேரம், இந்தவாத்தியம் தமிழ் திரையிசையில் புகுந்தது. அந்த நாளைய பல படங்களின் பாடல்களுக்கு இந்த இசைபயன்படுத்தப்பட்டிருந்தாலும் குறிப்பாக எம்.ஜி.ஆரின் பாடல்களில் அதிகளவில் இது புகுந்து விளையாடியது.எம்ஜிஆரின் படங்களில் மகிழ்ச்சியானதும், கலகல்ப்பானதும், வேகமானதுமான பாடல்கள் அதிகமாகஇருந்ததனால் மகிழ்ச்சியைக் கொண்டுவரும் இந்த வாத்தியத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கலாம் என்பது எனது எண்ணம்.
இதன் ஆதிக்கம் பல பாடல்களில் இருந்தாலும், தெய்வத்தாய் திரைப்படத்தில் எம்ஜிஆர் சரோஜாதேவியைசுற்றி ஓடியபடி குதூகலித்து வெளிப்படுத்தும் ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன் என்ற பாட்டுபொங்கசின் அட்டகாசத்துக்கு நல்லதொரு எடுத்துக்காட்டு.
இந்தக்காலகட்டத்தில் எம்.எஸ்.வி.யின் ஆர்கெஸ்ட்ராவில் பொங்கஸ் கலைஞராக இருந்தவரின் பெயர்கணேஷ். இவர் எப்படி பொங்கசை இசைத்துள்ளார் என்பதைக் கேட்கும் போது, பலவருடங்கள் கடந்தாலும்இன்றும் உற்சாகம் கரைபுரண்டோடும்.
எம்ஜிஆரின் காதலின் போது குறும்புத்தனதுடன் குதூகலமாக ஓடி வருவது இந்தப் பொங்கஸ் தான். இளமை ததும்பும் இசைக்கு விஸ்வநாதன் ராமமூர்த்தி பொங்கசைப் மிகத் திறம்படப்பயன்படுத்தியிருப்பார்கள்.
மெல்லிசை மன்னர் ஒரு பாட்டுக்கு பொங்கசை, என்னென்ன நேரப் பரிமாணங்களில் பாவித்துள்ளார் எனபதை விளக்குவதற்கும் அதன் மூலம் எப்படி ஒரு பாட்டில் குதூகலத்தையும், புத்துணர்ச்சியையும் கொண்டுவந்தார் என்பதைப் புலப்படுத்தவும் எம்ஜிஆரின் இந்தப்பாடல் நல்லுதாரணம். இந்தப் பாடலில் அவர் பொங்கசை அட்டகாசமாகப் பாவித்துள்ள விதத்தை விபரமாகப் பார்ப்போம்.
இந்தப் பாட்டின் மொத்த நீளம் 4.30 நிமிடங்களாகும். இதில் பாடலின் ஆரம்ப இசையை அட்டகாசமாகத்தொடக்கி வைப்பதே பொங்கஸ் கணேஷ் தான். அழகான எம்ஜிஆர், மிடுக்காகத்தொடங்கும் பொங்கசின்தாளத்துக்கேற்ப, தனது கால்களால் ஆடுவது கண்கொள்ளாக்
பாடல் தொடங்கிய 0.04 செக்கனில் தனது விளையாட்டை ஆரம்பிக்கும் பொங்கஸ் 0.19 செக்கன் வரைஅட்டகாசமாகச் சென்று பல்லவிக்கு வழிவிட்டொதுங்கிகிறது..
பின் முதலாவது இடையிசையில் 1.08 நிமிடத்தில் தொடங்கி, ஆடாத ஆட்டமெல்லாம் ஆடிவிட்டு 1.26நிமிடத்தில் மெதுவாக ஓய்கிறது. முதலாம் சரணம் முடிந்ததும், 2.19 நிமிடத்தில் பாட்டின் இரண்டாவதுஇடையிசையில் மீண்டும் குதித்தோடி வரும் பொங்கஸ் எம்ஜிஆருடன் சேர்ந்து சில்மிஷம் பண்ணியபடி2.57 நிமிஷம் வரை எமையெல்லாம் உற்சாகத்தில் கட்டிப்போடுகிறது. அது முடிவுற்று இரண்டாவது சரணம்தொடங்கும் போது காணாமல் போய் இறுதியாக சரணம் முடிந்தும் முடியாததுமாக பாய்ந்தோடி வந்து 3.46நிமிடத்தில் காதுகளை அணைத்துக் கொள்கிறது. அப்படியே எம்ஜிஆருடன் மீண்டும் பரிணமித்து 4.09நிமிடத்தில் மெதுவாக வேகமெடுக்கும் பொங்கஸ், தொடர்ந்து மிக வேகமாக ஓடிப்போய் 4.30 நிமிடத்தில்பாடலின் முடிவுடனும் எம்ஜிஆருடன் மலர்ந்த முகத்துடனும் முடிந்து போகிறது.. ஆஹா அற்புதமான இசைகேட்டுப்பாருங்கள் நண்பர்களே தொலைந்து போவீர்கள்.
courtesy - net...VND...
-
#மீட்டா_ருங்ராட்
உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் "மக்கள் திலகத்துடன்" கொஞ்சு மொழியில்..
"#பச்சைக்கிளி_முத்துச்சரம் #முல்லைக்கொடி_யாரோ.." என்ற அட்டகாசமாக டூயட்பாடிய அந்த தாயலாந்து பெண்ணை மறக்க முடியுமா?
சும்சாய்..என்று நாகேஷ் கத்திய உடனே படகிலிருந்து அவ்வளவு அழகாக திரும்பிப் பார்த்தவர்...!!!
உலகம் சுற்றும் வாலிபனில் மூன்று கதாநாயகிகள் ((லதா, மஞ்சுளா, சந்திரகலா)) இருந்தாலும், ரசிகர்களின் மனதை தன் கொஞ்சு தமிழினாலும், குழந்தைதனமான வெள்ளந்தியான நடிப்பில் கவர்ந்தவர்...
உ.சு.வா படப்பிடிப்பு முடிந்தும் கூட மக்கள் திலகத்தின் மேல் ஆசைப்பட்டு அவருக்காக மீண்டும் தமிழகம் நோக்கி வந்தவர் ((என்று அந்நாளில் உறுதி செய்யாத கிசுகிசுவில் சிக்கியவர்))
என் போன்ற மக்கள் திலகத்தின் ரசிகர்கள் மனதில் இன்றும் தனி இடத்தை பிடித்தவர்...
#மீட்டா_ருங்ராட்
புகைப்பட உதவி:https://mydramalist.com/people/21915-metta-roongrat........ Sridhar Babu...
-
வெட்கத்தால் துள்ளுது சிட்டு 03 [ 13 - 10 - 2020 ]
*** இப்பாடலைக் கேட்க விரும்பினால் கீழிருக்கும் இணைப்பு முகவரியை சொடுக்குங்கள்!! ***
https://www.youtube.com/watch?v=EuL0Izs_iuA
*** !! என்னென்ன நினைத்து வந்தேன் எத்தனை எடுக்க வந்தேன்
எல்லாமே மறந்து போனதே!!
கூறுங்கள் கேட்டுக் கொள்வேன் கொஞ்சுங்கள் வாங்கிக் கொள்வேன் நான் உங்கள் சொந்தமல்லவா...( 2 )
என்ன என்ன இது கன்னி மனசுக்குள் இத்தனை எண்ணங்களா
மெல்ல மெல்ல வந்து கன்னிப் பெண்ணினிடம் இத்தனை கேள்விகளா?? ( 2 ) ... [ பார்த்துக் கொண்டது...]
எனக்குப் போதித்தவர் :- பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர் அவர்கள்...
நிருத்தியச்சக்கரவர்த்தி எம்.ஜி .ஆர் அவர்களை நேசிக்கும் அன்பர்கள் அனைவர்க்கும் இனிய 13 - 10 - 2020 செவ்வாய்க்கிழமை காலை வணக்கங்கள் உரித்தாகுக...சட்டசபையில் புரட்சித்தலைவர் பேசியது :
மக்கள் கொடுக்கும் வரி பணம் மக்களின் நல்வாழ்வுக்காக பயன்பட வேண்டும். மக்களுடன் கூடியிரு ! மக்களுடன் பழகு ! அவர்களுடன் வாழ் ! அவர்களுக்காகத் திட்டம் தீட்டி செயல்பட்டு ! மக்களிடம் நீ போ செய் என்றெல்லாம் அமரர் அண்ணா அவர்கள் சொன்னார்கள் . அதைத்தான் நான் செய்கிறேன். இந்த அரசு செய்கிறது. அண்ணா அவர்களின் கொள்கையை நிறைவேற்றி வரிப் பணம் எவ்வளவு கிடைக்கிறதோ அதை மக்களுக்கு செலவு செய்வதுதான் எங்கள் பணி.
தமிழரசு ( 16- 06- 1984 )
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் புகழ் வாழ்க....VR...
-
"எங்க வீட்டு பிள்ளை" வரலாறு காணாத சாதனை வசூலிலும் நாட்களிலும் ஏற்படுத்தியதும் சிவாஜி ரசிகர்கள் அடுத்து வரும் கணேசன் படங்களை எப்படியும் "எ.வீ.பிள்ளை" சாதனையை முறியடிக்க வேண்டும் என்று நினைத்தனர். அதற்காக அப்போதே வடக்கயிறையும் ஸ்டெச்சரையும் தயார் நிலையில் வைத்திருந்தனர்.
அப்போது வந்த "திருவிளையாடல்" கொஞ்சம் சுமாராக போனதும் உடனே விளம்பரங்களை நாளிதழ்களில் அள்ளித்தெளித்த வண்ணமிருந்தனர். அப்போதே டிக்கெட் கிழித்தும் சொந்த தியேட்டரில் சிந்து பாடியும் சென்னையில் மூன்று திரையரங்கில் மட்டுமே வெள்ளி விழா ஓட்ட முடிந்தது.
"எ.வீ.பிள்ளையை" பார்த்தவர்கள் எண்ணிக்கை சென்னையில் மட்டும் 6 மாதத்தில் மொத்தம் 12 லட்சம் பேர்.அதுமட்டுமல்ல தமிழகத்தில் கேளிக்கை வரியாக அரசுக்கு செலுத்திய தொகை மட்டும் 50 லட்சம் ரூபாய். இந்த கேளிக்கை வரியை கூட வசூலாக திருவிளையாடல் பெறவில்லை என்பதே உண்மை நிலை. சென்னையில் மட்டும் கேளிக்கை வரியாக ரூ 5.25 லட்சம் செலுத்தப்பட்டது. இதை நாம் சொல்லவில்லை. அன்றைய இந்து பேப்பரில் வெளிவந்த ஒரு கட்டுரை சொன்னது. சென்னையில் மொத்த ஜனத்தொகையே 20 லட்சத்துக்குள்தான்.
மறுவெளியீடுகளையும் சேர்த்தால் 20 லட்சத்துக்கு மேலே பல லட்சங்கள் அதிகம் பேர் பார்த்திருப்பார்கள். ஆனால் "திருவிளையாடல் இவர்கள் டிக்கெட் கிழித்ததை சேர்த்தும் பார்த்தவர்கள் எண்ணிக்கை 9 லட்சம் கூட வரவில்லை. இவர்கள் ஒரு 2 லட்சம் டிக்கெட்கள் வரை கிழித்திருப்பார்கள் என்று வைத்துக் கொண்டால் மொத்த பார்வையாளர்கள் சுமார் 7 லட்சம்தான்.
1973ல் வெளியான "உலகம் சுற்றும் வாலிபன்" மதுரையில் சுமார் 7.25 லட்சம் பார்வையாளர்களை கொண்டிருந்தது. அன்றைய மதுரையின் ஜனத்தொகை மொத்தமே அவ்வளவுதான் இருக்கும். மதுரை மொத்தமே உலகம் சுற்றும் வாலிபனை கண்டு களித்தது ஒரு மறுக்க முடியாத சாதனை என்றே சொல்ல வேண்டும். ஆனால் மாற்றுக்கட்சியினரின் படத்துக்கு ஆட்கள் பார்க்காமல் வெறும் டிக்கெட் மட்டுமே கிழிக்கப்பட்டது. அதுவும் கின்னஸில் இடம் பெற வேண்டிய கேவலம்தான்.
எப்போதுமே முதலில் சாதனை செய்வது தலைவர் படம்தான். அதை முறியடிக்க சிவாஜி ரசிகர்கள் வடக்கயிறும் ஸ்டெச்சருமாக கிளம்பி விடுவார்கள். அதன்பிறகு வந்த
"அடிமைப்பெண்" அடுத்த சாதனையை அரங்கேற்றியது. உடனே "சிவந்த மண்ணு"டன் வடக்கயிறும் ஸ்டெச்சருமாக கிளம்பினார்கள். வேறு எங்கும் நெருங்க முடியாமல் தூத்துக்குடியில் மட்டும் செய்து முடித்தார்கள். "சிவந்த மண்ணை" 101 நாட்கள் ஓட்டி தாங்கள் வெற்றி பெற்றதாக நினைத்துக் கொண்டார்கள்.
மற்ற ஊர்களில் ஒரு துரும்பை கூட அசைக்க முடியாமல் துவண்டு விட்டனர். அடுத்து "ரிக்ஷாக்காரன்" வந்து விட்டான். புயலைக் கிளப்பி புது சாதனையை செய்து முடித்தான். அதைத்தொடர்ந்து வந்த "ராஜா" வை
வைத்து "ரிக்ஷாக்காரனை" வெல்ல மீண்டும் பெரிய வடக்கயிறு மற்றும் ஸ்டெச்சர் உதவியுடன் டிக்கெட் கிழிக்கப்பட்டது. வழியில் வருவோர் போவோருக்கெல்லாம் இலவச டிக்கெட் வழங்கப்பட்டும் தியேட்டருக்கு மக்களின் வருகை குறைந்து ஆளேயில்லாமல் தொடர் hf. ஆனதாக ஸ்லைடு போட்டும் 143 காட்சியோட அதையும் நிறுத்தி விட்டார்கள்.
50 நாட்கள் வசூலில் தேவிபாரடைஸில் தில்லுமுல்லு பண்ணி கூட காண்பித்தார்கள். 50 நாளுக்கு மேல் ஜீரம் கூடி விட்டதால் "ராஜா"வால் நடக்க முடியாமல் ஸ்டெச்சரில் வைத்து தூக்கி சென்று கரை சேர்த்தனர். இருந்தாலும் ஒரு "ரிக்ஷாக்காரனி"டம் வாங்கிய செருப்படி "ராஜா"வுக்கு உறைக்கவில்லை. ராஜாதான் மரித்து போய் விட்டாரே.
அதன்பின்பு குருட்டு பூனை விட்டத்தில் பாய்ந்தது போல "பட்டிக்காடா பட்டணமா" கொஞ்சம் சுமாராக போனதும் கிளம்பி விட்டார்கள். 6வார வசூலை விளம்பரத்தில் கொடுத்து அவமானப்பட்டார்கள். மதுரையில் பெண்கனின் உதவியால் வசூல் கொஞ்சம் அதிகம் பெற்றவுடன் விண்ணுக்கும் மண்ணுக்கும் குதிக்க ஆரம்பித்து விட்டார்கள். "வசந்த மாளிகை"யும் "ரிக்ஷாக்காரன்" முன்னால் மண்டியிட்டது.
அடுத்த சாதனையாக புரட்சி தலைவரின் "உலகம் சுற்றும் வாலிபன்" வந்தது.
வசூலில் வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை பெற்றது. தமிழகத்தில் மொத்த வசூலாக 4.55 கோடி வசூலாக பெற்று இந்திப் படங்களுக்கு சவால் விட்டது. அது இன்றைய மதிப்புக்கு சுமார் 150 கோடி என்று விக்கிபீடியா மதிப்பிடுகிறது.
மூன்று சூலம் முந்தி விட்டது என்று பொய் பிரசாரம் செய்யும் கைபிள்ளைகளுக்கு மூன்று சூலம் மட்டுமல்ல எத்தனை சூலம் வந்தாலும் வாலிபனிடம் சரண் அடைந்தே தீரும் என்பதை மூன்று சூலத்தின் வசூலை(3.5கோடி) விக்கிபீடியா மதிப்பிட்டதை பார்த்தாலே புரிந்து கொள்ளலாம். 8 தியேட்டரில் வெள்ளிவிழா ஓட்ட வேண்டும் என்பதை முன்னமே தீர்மானம் செய்து ஓட்டினால் வெற்றி பெற்றதாகி விடுமா?. பொய்யான தகவல் மூலமாக புரட்சி தலைவரின் படங்களை வெற்றி பெற முடியாது என்பதை உணர்வார்களா கைபுள்ளைங்க.
அந்த சாதனையை கண்டு மிரண்டு விட்ட கணேசன் ரசிகர்கள் "தங்கப்பதக்கம்" என்ற நாடக சினிமாவை தேர்ந்தெடுத்தார்கள் தலைவரின் சாதனையை முறியடிக்க. அந்தோ பரிதாபம் மீண்டும் படுதோல்வி அடைந்தனர். 100 நாட்களுக்கு பிறகு படம் சண்டி மாடு மாதிரி வாய்பிளந்து படுத்து விட்டது. அதன்பின் வழக்கம் போல் ஸ்டெச்சர் மற்றும் வடக்கயிறு உபயோகித்து கரை சேர்த்தனர்.
"உலகம் சுற்றும் வாலிபனை"யே நெருங்க முடியவில்லை. அதற்குள் "உரிமைக்குரல்" வந்து விட்டது. சென்னையில் அரசியல் காரணமாக பெரிய தியேட்டர் எதுவும் கிடைக்காமல் ஓடியனில் வெளியாகி எதிர்பார்த்த வசூலை பெறாவிட்டாலும் கணிசமான இடங்களில் உலகம் சுற்றும் வாலிபன் வசூலை விஞ்சி நின்றது.
அதனால் தலைவர் சினிமாவில் இருக்கும் வரை வடக்கயிறும் ஸ்டெச்சரும் பயன்படுத்தி பிரயோஜனமில்லை என்று தெரிந்து தினமும் பொழுது போக அவர்கள் படாத பாடு பட்டனர். எப்போதுமே முதலில் சாதனை செய்வது தலைவர் படமே என்பது தெள்ளத் தெளிவாகிறது..........ksr
-
தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்தை நடைமுறைப்படுத்தினார். தமிழக முதல்வராக எம்.ஜி.ஆர். பதவியேற்ற பிறகு, பள்ளி விடுமுறை நாட்களிலும் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட சத்துணவுத் திட்டம் என்ற ஒன்றை செயல்படுத்திட கல்வி அதிகாரி வெங்கடசுப்பிரமணி அவர்களுக்கு உத்தரவிட்டார். அதன்பின்னர் வந்த காலங்களில் விடுமுறை தினங்களில் சத்துணவு வழங்கப்படாமல் போனாலும், அவரின் சிறப்பான வாழ்நாள் சாதனைத் திட்டங்களில் இதுவும் ஒன்றாகவே இருந்து வருகிறது.
ஒருங்கிணைந்த குழந்தை வளர்ப்புத் திட்டம்
குழந்தை வளர்ச்சியில் ஊட்டச்சத்து குறைபாடு பெரும் சிக்கலாக இருந்துவந்த காலத்தில் சிறப்பான திட்டம் ஒன்றை அறிமுகம் செய்தார் எம்.ஜி.ஆர். குழந்தைகள் 5 வயதை எட்டியபின்னரே பள்ளிகளுக்குச் செல்கின்றனர். அதுவரை, உணவின்றித் தவிக்கும் குழந்தைகளுக்கு உணவு வழங்கும் வகையில் கொண்டுவந்த திட்டம் இந்த ஒருங்கிணைந்த குழந்தை வளர்ப்புத் திட்டம். நடுவண் அரசு ஒதுக்கிய தொகையைவிட அதிகமாக ஒதுக்கி அத்திட்டம், தமிழகத்தில் எல்லா மாவட்டங்களிலும் செயல்படுத்த ஏற்பாடு செய்தார். அது இன்றளவும் தொடர்கிறது.
இட ஒதுக்கீடு
பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக இட ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்ற சிறப்பான திட்டம் 2௦ சதவிகிதம் மட்டுமே வழங்கப்பட்டதால் பெருமளவிலான மக்களுக்கு பயனில்லாமல் போனது. அதை, தனது ஆட்சியின்போது 5௦ சதவிகிதமாக மாற்றினார் எம்.ஜி.ஆர். அதன்பின்னர், இன்று வரை பள்ளிகள் மட்டுமின்றி பல்வேறு இடங்களிலும் இந்தத் திட்டம் செயல்பட்டு வருகிறது.
இப்படிப்பட்ட மக்கள் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு ஆட்சி செய்யும் மாபெரும் தலைவர்கள் ஆயிரம் வருடங்களுக்கு ஒரு முறை மட்டுமே தோன்றுவதால் புரட்சித் தலைவர் "ஆயிரத்தில் ஒருவன்", "லட்சத்தில் ஒருவன்", "கோடிகளில் ஒருவன்".........
-
#தாய்மனம்
அரசுத்துறை உயரதிகாரி ஒருவர் ஊழல் புரிய அவருக்கு 3 மாதங்கள் சஸ்பென்ஷன் ஆர்டர் வழங்கப்படுகிறது. அந்த ஆர்டரை வாங்கிக்கொள்ள ராமாவத்திற்கு வரச்சொல்கிறார் தமிழக முதல்வர் பொன்மனச்செம்மல். அதிகாரிக்கு நடுக்கம் முதல்வர் என்ன சொல்லப்போகிறாரோ!!! என்று...
தோட்டத்திற்குப் போய் முதல்வரைப் பார்க்கிறார்... அந்த அதிகாரியிடம் எம்ஜிஆர் கேட்ட முதல் கேள்வி..! 'உள்ள போய் சாப்பிட்டுட்டு வாங்க...' அந்த அதிகாரி, 'சாப்பிட்டாச்சு'ன்னு சொல்ல....
உங்களைப் பார்த்தா சாப்பிட்ட மாதிரி தெரியலையே, பொய் சொல்லாம முதல்ல உள்ளே போய் சாப்பிட்டு விட்டு வாங்க' ன்னு முதல்வர் சொல்கிறார்...
அந்த அதிகாரியும் சாப்பிட்டவுடன் முதல்வரை சந்திக்கிறார்...
அந்த சஸ்பென்ஷன் ஆர்டரை அந்த அதிகாரியின் முகத்திலெறிகிறார் கோபமாக...' நீரெல்லாம் என்னய்யா அதிகாரி... உங்களைப் போல அதிகாரிகளினால் தான்யா அரசுக்குக் களங்கம் விளைகிறது! மக்கள் நம் ஆட்சியைப் பற்றி என்ன நினைப்பார்கள்...' எனச்சொல்ல...
சப்தநாடியும் ஒடுங்கிப்போன அந்த அதிகாரி மிகவும் கவலையுடன் அங்கிருந்து வெளியேறி தனது வீட்டிற்குச் செல்கிறார்...
வீட்டினுள்ளே நுழைந்த அந்த அதிகாரிக்கு அதிர்ச்சி...'கண்ணனை சந்தித்துவிட்டு வந்த குசேலனின் வீடு செல்வச்செழிப்பினால் மாறியிருந்தது போல அந்த வீடே மாறியிருந்தது....',
அதிர்ச்சியில் உறைந்துபோன அந்த அதிகாரியிடம் அவர் மனைவி கூறுகிறார்...
' மூன்று மாதங்களுக்கு நம்ம வீட்டிற்குத் தேவையான மளிகை சாமான்கள், துணிமணிகள் அப்புறம் செலவிற்கு 3000/- ரூபாய் இதெல்லாம் நம்ம ஐயா தோட்டத்திலேர்ந்து கொடுத்தனுப்பினார்...'ன்னு சொல்ல உருகிக் கண்ணீர் விடுகிறார் அந்த அதிகாரி...
அதாவது தவறு செய்பவர்களை ஒருபுறம் சட்டப்படி தண்டித்தாலும், மறுபுறம் தன் கருணையினால் தாய்மனத்தோடு அவர்களை வாழ்விக்கின்ற தெய்வம் நம் இதயதெய்வம் பொன்மனச்செம்மல்...............bsm...
-
முதல்வர் எம்.ஜி.ஆர். காந்தியவாதி
எமக்கு கருத்து வேற்றுமை வாராது
சென்னையில் பிரதமர் மொரார்ஜி தேசாய் பேசினார்
சென்னை , செய் , 22, 1977
"தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எம்.ஜி. இராமச்சந்திரன் காந்தியத்தில் தம்பிக்கை கொண்டவர் . மத்திய அரசுக்கும் தமிழ்நாடு அரசுக்கும் இடையே கருத்து வேறுபாடு எழுவதக்கு இடமில்லை" இவ்வாறு பாரதப் பிரதமர் மொரார்ஜி தேசாய் கூறினார்.
தமிழ்நாட்டுக்கு வந்துள்ள பிரதமர் சென்னையில் ஜனதா கட்சி ஊழியர்கள் மத்தியில் போகையில் மேலும் கூறியதாவது:
"மாநிலங்களில் எந்தக் கட்சி ஆட்சியில் இரும்தாலும் மத்தியிலுள்ள ஜனதா அரசு எந்த பாகுபாடும் காட் டாது ஒத்துழைக்கும். உடல் ஊனமுற்றோர் மத்தியில் பிரதமர் பேசுகையில் "உடல் ஊனமுற்றோர் நல்வாழ்வில் நாம் பெரிதும் அக்கறை காட்ட வேண்டும் " என்று கேட்டுக் கொண்டார்.
எம்.ஜி. ஆர். அறிவிப்பு
இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் திரு.எம்.ஜி.ஆர். பேசுகையில் உடல் ஊனமுற்றோர் நிதிக்கு முதலமைச்சர் நிதியில் இருந்து ரூ.10,000 வழங்குவதாக அறிவித்தார்....sb...
-
#என்றென்றும்_மக்கள்_திலகம்
#எங்கள்_தங்கம்...
மக்கள் திலகத்தின் திரையுலக வாழ்வில் மைல் கல்லான எங்கள் தங்கம் படத்திற்கு பல சிறப்புகள் உண்டு.
*இந்த படம் மூன்று முதல்வர்கள் இடம் பெற்ற படம். முன்னாள் முதல்வர்கள் மக்கள் திலகம்-ஜெயலலிதா, இணையாக நடிக்க இன்னோரு முதல்வர் டாக்டர் கலைஞர் இப்படத்தை தயாரித்தார்.
* இந்த படம் வெளிவரும் போது ((அக்டோபர் 1970)) மக்கள் திலகம் சிறுசேமிப்பு துறையின் தலைவராய் இருந்தார். படத்தின் ஆரம்ப காட்சியில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆராகவே ஒரு அரசு விழா மேடையில் தோன்றி சிறுசேமிப்பின் அவசியத்தை பற்றி கூறுவதாகவும் அவரை படத்தின் இன்னொரு எம்.ஜி.ஆர் ((தங்கம்)) மேடையில் சந்தித்து வாழ்த்து பெறும் காட்சி அன்றைக்கு மட்டுமல்ல இன்றைக்கும் ரசிகர்களால் மிகவும் சிலாகித்து பேசப்பட்டது.பேசப்படுகிறது.
* இந்த படத்தில் மக்கள் திலகம் செய்யும் கதாகாலட்சேபம் காட்சி அன்றைய ரசிகர்கள் மட்டுமல்ல கிருபானந்த வாரியார் அவர்களாலும் மிகவும் பாராட்ட பெற்றது. சந்திரமண்டலத்திற்கு ராக்கெட் விட ஆரம்பித்த ஏற்பாட்டினை விஞ்ஞானிகள் அன்று அம்மாவாசையால் வேறு ஒரு நாளுக்கு தள்ளி வைப்பது போன்ற பகுத்தறிவும்-நகைச்சுவையும் கலந்து கொடுக்கப்பட்டது ரசிகர்களை கவர்ந்தது.மீண்டும் மீண்டும் திரையரங்கிற்கு வராவழைத்தது. முற்றிலும் வித்தியாசமான மொட்டை, குடுமியுடன் மக்கள் திலகம் அசத்தியிருந்தார்.
*மக்கள் திலகம் உணர்ச்சி பொங்க பேசிய "நான் தமிழ் படித்தே சாவேன்" என்ற வசனம் ரசிகர்களிடையே மிகுந்த எழுச்சியை கொணர்ந்தது.
*இந்த படத்தில் இடம் பெறும் "நா செத்துப் பொழச்சவன்டா, எமனை பாத்து சிரிச்சவண்டா" என்ற பாடல் படத்தில் நகைச்சுவைக்காக சேர்க்கப்பட்டாலும்..மக்கள் திலகம் 1967 ல் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிர் பிழைத்ததையே சுட்டிக்காட்டியது.
* "ஏமய்யா..ஏமி...நீ எந்த ஊர் சாமி" என்று கலாதேவி (ஜெ.ஜெ) கோபத்தோடு பாட, நம் மக்கள் திலகம் " கேளம்மா கேளு ..'நான் காஞ்சீபுரத்தாளு" என்று நான் அறிஞர் அண்ணாவின் தொண்டன்' என்ற பொருள்படும் வகையில் பதிலுக்கு பாடும் காட்சியில் கைதட்டலால் திரையரங்கம் அதிர்ந்தது மட்டுமல்ல, பின்னாளில் மக்கள் திலகம் ஆரம்பிக்கபோகும் இயக்கத்திற்கு முத்தாய்ப்பாகவும் அமைந்தது.
*படம் தமிழகம் முழுவதும் வசூலை குவித்தது..சென்னையில் வெள்ளிவிழாவும், தமிழக பெருநகரங்களில் நூறு நாட்களை கடந்தது...அந்த வருடத்தின் வசூல் சாதனைப்படம் என்ற பெருமையையும் பெற்றது.
இப்படத்தின் வெள்ளி விழாவில்தான் மக்கள் திலகத்திற்கு நாவலர் நெடுஞ்செழியன் வெற்றி கேடையத்தை பரிசளிக்கிறார்.......... Sridhar Babu...
-
பாட்டாலே*புத்தி சொன்ன*வாத்தியார் எம்.ஜி.ஆர்.-வின் டிவியில்*சகாப்தம்*நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி*08/10/20 அன்று அளித்த*தகவல்கள்*
---------------------------------------------------------------------------------------------------------
தமிழகத்தை மன்னாதி மன்னர்கள் ஆண்டு இருக்கிறார்கள் .மகோன்னதமான தலைவர்கள் இருந்திருக்கிறார்கள் .மிக பெரிய அறிஞர்கள் இருந்திருக்கிறார்கள் . ஆனால் வலம்புரி ஜான் அவர்கள் சொல்வார்களே ,மக்கள் தொகையை கணக்கெடுக்க வேண்டுமென்றால் மலை போன்ற இலை வேண்டும் . மனிதர்களை கணக்கெடுக்க வேண்டுமென்றால் மந்தார இலை போதும் .* அந்த மந்தார இலையில் எழுதப்படும் 10 நபர்களின் பெயர்களில் நிச்சயமாக மக்கள் திலகம் எம்.ஜி..ஆர் பெயர் இடம் பெறும்* என்பது ஒரு சரித்திர சாதனை .அந்த சாதனை மிக்க பாடங்களை நாமும் தொடர்ந்து பயில்வோம், வெல்வோம் .
சேலத்தில் ஒரு அரங்கில் ஒரு முதிய பெண்மணி எம்.ஜி.ஆரின் திரைப்படத்தை தொடர்ந்து 100 நாட்கள் பார்த்து மகிழ்ந்துள்ளார்* .100 வது* நாள் வெற்றி விழாவின்போது* அந்த அரங்கிற்கு எம்.ஜி.ஆர். வருகை புரிந்து இருந்தார் .அப்போது விழாவில் அரங்கின் மேலாளர் அந்த மூதாட்டியை எம்.ஜி.ஆருக்கு அறிமுகம் செய்து வைத்து தொடர்ந்து 100 நாட்கள் படம் பார்த்ததை பற்றி சொன்னார் .எம்.ஜி.ஆர். அந்த மூதாட்டியிடம் ஒரு படத்தை தொடர்ந்து 100 நாட்கள் பார்க்க வேண்டிய அவசியம் என்ன. நேற்று பார்த்த காட்சிதான் இன்று .அதேதான் நாளையும் . இப்படி தொடர்ந்து பார்க்க அப்படி இந்த திரைப்படத்தில் என்ன இருக்கிறது என்று ஆர்வத்தோடு விஷயத்தை அறிந்து கொள்ள கேட்டார் எம்.ஜி.ஆர். பதிலுக்கு மூதாட்டி ,ஒரு தாய்க்கு தன்* பிள்ளையை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பு ஏற்படாது .அலுப்பு இல்லை என்றாராம் .இப்படி தமிழகம் முழுவதும் எண்ணற்ற தாய்மார்கள், சகோதர, சகோதரிகளை உருவாக்கி வைத்தவர் எம்.ஜி.ஆர்.*
கோவில்பட்டியில் ஒரு வயதான பெண்மணிக்கு ஆறு வீடுகள் இருந்தன .ஆனாலும் அவர் தனிமையில் இருக்கிறார் என்பதற்காக மாதா மாதம் எம்.ஜி.ஆரிடம் இருந்து* மணி ஆர்டர் வரும் .அந்த மூதாட்டிக்கு குழந்தைகளோ, பெற்றோர்களோ,கணவரோ, சகோதர, சகோதரிகளோ யாரும் துணைக்கு இல்லை .இந்த மணி ஆர்டர் எம்.ஜி.ஆரிடம் இருந்து தொடர்ந்து வந்து கொண்டிருந்ததால் அவர் எம்.ஜி.ஆர். அம்மா என்று அந்த பகுதியில் அழைக்கப்பட்டு வந்தார் .
ஒரு நாள் எம்.ஜி.ஆர். அவர்கள் தாய் வார இதழின் ஆசிரியர் திரு.வலம்புரி ஜான்*வீட்டிற்கு போன் செய்கிறார் .வீட்டில் வலம்புரி ஜான் அவர்கள் இல்லை .அந்த சமயம் வீட்டில் வேலை செய்யும் இளம் பெண் போனை எடுத்து பேசுகிறார் .போனை எடுத்தவுடன், நீ யார், எந்த ஊர் ,என்ன வேலை செய்கிறாய் .உன்னுடைய வயதென்ன . உன்னை நன்றாக பார்த்து கொள்கிறார்களா .உனக்கு மூன்று வேளையும் நல்ல சாப்பாடு கிடைக்கிறதா .உன்னை வேலை மட்டும் வாங்கி* கொண்டு தினமும் அலைக்கழிக்கிறார்களா என்றெல்லாம் அக்கறையாக சில*கேள்விகள் கேட்டுவிட்டு நான் எம்.ஜி.ராமச்சந்திரன் பேசுகிறேன் என்று வலம்புரி ஜானிடம் சொல்ல சொல்கிறார் .வலம்புரி ஜான் வீட்டுக்கு வந்ததும் அந்த பெண்ணை ஏதாவது போன் வந்ததா* என்று கேட்க ஆமாம் எம்.ஜி.ராமச்சந்திரன் என்று ஒருவர் போன் செய்தார் என்று சொன்னாள்*உடனே பயந்து போய்* அண்ணே, நீங்கள்தான் பேசினீர்கள் என்று அந்த சின்ன பெண்ணுக்கு தெரியாது .நான் வீட்டில் இல்லை. மன்னிக்க வேண்டும் .என்று வருத்தத்தோடு சொல்கிறார் . அப்போதுதான் அந்த பெண்ணுக்கு புரிகிறது பேசியது எம்.ஜி.ஆர். என்று .ஆகவே எம்.ஜி.ஆர். என்கிற மூன்றெழுத்து மந்திரம் இருக்கிறதே .அதுதான் பலருக்கும் தெரியும் .எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தாலும் கூட,அவருடன் வருபவர்களை* அமைச்சர்வருகிறார்* ,மாவட்ட ஆட்சியர் வருகிறார் என்றெல்லாம் சொல்வார்கள். ஆனால் எம்.ஜி.ஆரை* முதல்வர் என்று சொல்வதைவிட எம்.ஜி.ஆர். என்று உச்சரிப்பதை கேட்டுத்தான்*அவர் மனம் மகிழ்ந்து இருக்கிறார் .* வலம்புரி ஜானிடம் ,அந்த இளம்பெண்* என்னிடம் பேசியது எம்.ஜி.ஆரா என்று வியப்புடன் கேட்டதோடு முதலில் நம்ப மறுத்தார் .வலம்புரி ஜான் மீண்டும் எம்.ஜி.ஆரை சந்தித்தபோது,உங்கள் வீட்டில் வேலை பார்க்கும் போனில் நன்றாக பேசினார் .* அவருக்கு நான் ஒரு உதவி செய்ய வேண்டும் என்று வலம்புரி ஜான் கையில் கணிசமான பணம் கொடுத்து ,இந்த* பணத்தை அந்த பெண்ணிடம் கொடுங்கள் என்று சொன்னாராம் .இப்படி முகம் தெரியாத ஒரு இளம்பெண்ணுக்குதன்னுடைய கருணை உள்ளத்தால்**ஒரு தாயாக இருந்து பண உதவி செய்துள்ளார்* தாய் வார இதழின் நிறுவனரான எம்.ஜி.ஆர். என்று அந்த பத்திரிகையில் வேலை பார்த்த கல்யாண்குமார் என்பவர்*எழுதியுள்ளார் .
திரு.கா.லியாகத் அலிகான் : எம்.ஜி.ஆர். அவர்கள் ஒரு புரியாத புதிர் என்று எடுத்து கொண்டால், எனக்கு தெரிந்தது என்னவென்றால் கோவை மாவட்ட செயலாளராக திரு.மருதாச்சலம் என்பவர் இருந்தார் .ஆனால் அந்த காலத்தில் கட்சிக்காரர்கள் பெரும்பாலும் அவரை நன்றாக மதிப்பதில்லை .அதற்கு காரணம் அவர் குறைந்த அளவுதான் படித்திருந்தார் .* சில நேரங்களில், சிலரிடம் காரசாரமாக பேசுவார் . சில சமயம் தகாத வார்த்தைகளை தெரியாமல்* பயன்படுத்துவார் .இதனால் அவருக்கு விரோதிகள் ,எதிரிகள் பலர் உருவானார்கள் .ஆனால் எம்.ஜி.ஆருக்கு மருதாச்சலத்தின் மீது அளவற்று அன்பு, பற்று ,பாசம் இருந்தது காரணம்* எம்.ஜி.ஆர். கட்சியில் இருந்து நீக்கப்பட்டபோது*அவருக்கு ஆதரவாக,மிக பெரிய ஊர்வலம், ஆர்ப்பாட்டம் ,கண்டன பொது கூட்டங்கள் எல்லாம் ஏற்பாடு செய்திருந்தவர் .இதனால் மருதாச்சலத்திற்கு பெரிய* பின்னணி ,பக்கபலம் எதுவுமில்லை .* ஒரு சாதாரண எம்.ஜி.ஆர். மன்ற செயலாளராக இருந்து கொண்டு இப்படி கண்டன குரல்கள், போராட்டங்கள் நடத்தியதால் அதற்கு நன்றி காட்டும் விதத்தில் அவரை எப்போதும் தன்* இதயத்தில் வைத்திருந்தார் .இந்த செயல்களை மறக்கவே மாட்டார் என்பது எம்.ஜி.ஆரின் குணாதிசயம் .அப்படி இருந்தவரை எம்.ஜி.ஆர். கோவை மாவட்ட செயலாளராக நியமித்தார் .ஆனால் அவரை அதன்பின் யாரும் மதிக்கவில்லை .மரியாதை தரவில்லை .எம்.ஜி.ஆர். முதல்வராக கோவை சர்க்யூட் அவுஸில் தங்கி இருந்தபோது ,மருதாச்சலம் சென்று பார்த்தார் . எம்.ஜி.ஆர். அவரிடம் கட்சி நிலவரம் பற்றி கேட்டபோது ,அண்ணே , என்னை யாரும் மதிப்பதில்லை. மரியாதை தருவதும் இல்லை என்று சொன்னவுடன் சரி சரி போ .பிறகு பேசுகிறேன் என்று மற்றவர்கள் முன்னிலையில் கடிந்தவாறு* பேசினார் .இதை கேட்ட மருதாச்சலம் சோர்ந்து ,மன உளைச்சலுடன் ஒரு ஓரமாக நிற்கிறார் .எம்.ஜி.ஆர். நீலகிரி எக்ஸ்பிரஸில் அன்றிரவு புறப்பட ஆயத்தமாகிறார் .ரயில் நிலையத்தில் வாயிலில் மருதாச்சலம் காத்திருக்கிறார் . நிலையத்திற்கு எம்.ஜி.ஆர். வரும்போது ,நூற்றுக்கணக்கான* வி.ஐ.பி.க்கள், ஆயிரக்கணக்கான தொண்டர்கள் காத்திருக்கும் நேரத்தில் அனைவரையும் ஒரு பார்வை பார்த்தபடி எம்.ஜி.ஆர். வருகிறார் .எங்கே மருதாசலத்தை காணோம் என்று தேடுகிறார் .அங்கு, திருப்பூர் மணிமாறன், கோவைத்தம்பி, அரங்கநாயகம், குழந்தைவேலு*நான் அனைவரும் நிற்கிறோம். ஆனால் யாரையும் அவர் கண்டும் காணாமல் ஒருவரை எதிர்பார்த்து நோட்டம் விடுகிறார் .காரணம் என்னவென்றால்,தான்*அனைவரின் முன்னிலையில் மருதாசலத்தை திட்டியதால் அவருடைய உள்ளுணர்வு மீண்டும் அவருக்கு பலருடைய முன்னிலையில் மரியாதை செய்ய வேண்டும், கௌரவப்படுத்த வேண்டும் என்று நினைத்திருக்கிறார் .*அந்த கூட்டத்தில் எப்படியோ மருதாசலத்தை பார்த்துவிட்ட எம்.ஜி.ஆர். கையசைத்து அருகில் வரச்சொல்லி சைகை செய்தார் .ரயில் பெட்டியின் வாசலில் நின்று கொண்டு மருதாசலத்தை படிக்கட்டில் ஏறி வர சொல்லி ,அனைவரின் பார்வையில் படும்படி ,மூன்று* நிமிடங்களுக்கு மேலாக* மருதாச்சலத்தின் காதில் தொடர்ந்து ஏதோ சொல்லியபடி இருந்தார் .தலைவர் அப்படி என்ன சொல்கிறார் தெரியவில்லை என்று வேடிக்கை பார்த்தவர்கள் மனம் அலை மோதியது .மருதாசலத்திற்கும் ஒன்றும் புரியவில்லை .ஆனால் உம உம என்று தலையை மட்டும் ஆட்டுகிறார் . சரி சரி ,எல்லாவற்றையும் நான் பார்த்துக்கொள்கிறேன் .தொடர்ந்து கட்சி பணியாற்று, பத்திரமாக இரு .என்று மட்டும் அனைவரும் கேட்கும்படி இறுதியாக சத்தமாக சொல்கிறார் .எம்.ஜி.ஆர்.*ரயில் புறப்பட்டதும் அனைவருக்கும் கையசைத்து காட்டிவிட்டு எம்.ஜி.ஆர். உள்ளே சென்றுவிடுகிறார் .ஆனால் மருதாச்சலத்திற்கு* ஒரே குழப்பம் . தலைவர் எப்படி என்ன சொல்லி இருப்பார் என்று .மருதாசலத்தை மதிக்காதவர்கள், மரியாதை தராதவர்கள் அனைவருமே அவரை சூழ்ந்து கொண்டு கேள்விமேல் கேள்வி கேட்கிறார்கள் ஆனால் மருதாச்சலம் அதெல்லாம் உங்களிடம் சொல்ல முடியாது .எனக்கும் தலைவருக்கு மட்டுமே தெரிந்த ரகசிய பேச்சுக்கள் என்று சமாளித்தார் .**
மருதாச்சலம் உடனே இரவு 10.30க்கு புறப்படும் சேரன் எக்ஸ்பிரஸில் சென்னைக்கு பயணமானார் .எம்.ஜி.ஆர்.பயணித்த நீலகிரி எக்ஸ்பிரஸ்* அதிகாலை 5 மணிக்கு சென்னை வந்தடையும். இவர் புறப்பட்ட சேரன் எக்ஸ்பிரஸ் காலை 7 மணியளவில் சென்னை வந்து சேரும் .சென்னைக்கு வந்த மருதாச்சலம் காலைக்கடன் ,சிற்றுண்டி எல்லாம்* முடித்துவிட்டு* நேரடியாக ராமாவரம் தோட்டம் சென்றார் .தலைவர் மருதாசலத்தை பார்த்தவுடன் என்ன ஆயிற்று .நேற்று இரவுதானே கோவையில் சந்தித்து பேசினேன் எதற்கு அவசரமாக புறப்பட்டு வந்தாய் என்ன விஷயம் என்று கேட்க, அண்ணே நீங்கள் கோவை ரயில் நிலையத்தில் என்ன சொன்னீர்கள் என்று புரியவில்லை .விளக்கம் கேட்டு தெரிந்து கொள்ளத்தான் விரைந்து வந்தேன் என்றார் .நான் ஒன்றும் சொல்லவில்லை .அது ஒரு பக்கம் இருக்கட்டும் .நான் புறப்பட்ட பிறகு யாராவது இதை பற்றி விசாரித்தார்களா என்று கேட்டார் .அண்ணே , நீங்கள் புறப்பட்ட பிறகு, உங்களுக்காக வாங்கி வந்த மாலைகள் ,சால்வைகளை எனக்கு போட்டு ,தலைவர் என்ன சொன்னார் என்று சொல்ல சொல்லி என்னை தொந்தரவு செய்தார்கள் .அதற்காகத்தான்,அனைவரும் உன்னை மதிக்க வேண்டும், மரியாதை* தர வேண்டும் என்பதற்காக உன்னிடம் பேசுவது போல பாவனை செய்தேன் . இனிமேல் உனக்கு எந்த பிரச்னையும் இருக்காது . நீ போய்*கட்சி பணியாற்று ,தைரியமாக இரு ..மற்றதை நான் பார்த்து கொள்கிறேன் என்று சொல்லி அனுப்பினார் .இந்த சம்பவத்தின் மூலம் எம்.ஜி.ஆர். அவர்கள் ஒரு புரியாத புதிர் என்று அறிந்து கொள்ளலாம்*
சில நாட்கள் கழித்து ,எதிர்க்கட்சியில் இருந்த நாஞ்சில் மனோகரன் கோவை மாவட்டத்திற்கு மாற்றம் தேவை என்று எம்.ஜி.ஆருக்கு கடிதம் எழுதினார்*அந்த கடிதத்தின் பேரில் எம்.ஜி.ஆர். நடவடிக்கை எடுத்து கோவை மாவட்ட செயலாளர் மருதாச்சலத்தை நீக்குகிறார் .* இதை அறிந்த மருதாச்சலம் மிகவும் வருந்துகிறார் .1974ல் புரட்சி தலைவர் ரஷ்யாவிற்கு புறப்பட்டு போனார் .அங்கு கிடைத்த ஒய்வு நேரத்தில் முக்கிய நபர்களுக்கு அங்கிருந்து கடிதம் எழுதுகிறார்*அந்த நேரத்தில் மட்டுமல்ல,இன்றைக்கும் முரசொலியில் எம்.ஜி.ஆர் அவர்களை, கோமாளி, கூத்தாடி என்று கேலி செய்வது, அவருடைய படத்தை முக்காடு போட்டது போல் போடுவது .இப்படியெல்லாம்* செய்து அவர்களின் தரத்தை குறைத்து கொள்கிறார்கள். அது ஏன் என்று தெரியவில்லை .புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அமரர் ஆகிவிட்டார் .ஜெயலலிதா அமரர் . கருணாநிதியும் அமரர் மறைந்தவர்களின் கடந்த கால செயல்பாடுகள், அவர்களுடைய பெயரை கொச்சைப்படுத்துவது, கேவலப்படுத்துவது என்பது மிக பெரிய தவறு மட்டுமல்ல கண்டனம் தெரிவிக்க வேண்டிய விஷயம் .எம்.ஜி.ஆர். அவர்கள் ,அவர்களின் கூற்றுப்படி சாதாரண மனிதர் அல்ல. மா மனிதர் .மாபெரும் மேதை . திட்டமிடுதலை வெளியே காட்டி கொள்ளாமல் அந்த திட்டத்தை செய்து முடிப்பதில் எம்.ஜி.ஆருக்கு ஈடு இணையாக இன்றைக்கு வரை யாரையும் குறிப்பிட்டு சொல்ல முடியாது .1977 மே மாதம் பொது தேர்தல் நடைபெறுகிறது .அதுவரையில் தான்தான் முதல்வர் என்று எம்.ஜி.ஆர். குறிப்பிட்டு எங்குமே பேசவில்லை .1977 பிப்ரவரி மாதம் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் கூட அ .தி.மு.க. வெற்றி பெற்றால் முதல்வர் யார் என்று இந்த ராமச்சந்திரனுக்கே தெரியாது என்று அறிவித்து இருக்கிறார் .இவ்வாறு திரு.லியாகத் அலிகான் பேட்டி அளித்தார்*
சம்பந்தம் இல்லாத ஆட்கள்* சம்பந்தம் இல்லாத கேள்விகள் கேட்பதை*எம்.ஜி.ஆர்.தவிர்த்துவிடுவார் .* திருச்சியை அடுத்த புதுக்கோட்டை பக்கத்தில் ஒரு நூற்பாலை திறக்கப்படுகிறது .அந்த நூற்பாலையை*ஒரு மாவட்ட ஆட்சியர் பொறுப்பிலே*எம்.ஜி.ஆர். ஒப்படைக்கிறார் .* அந்த நூற்பாலை லாபகரமாக நடப்பதற்கு இன்னும் கூடுதலான இயந்திரங்கள் இயக்கலாம் என்று விழாவை துவக்கி வைக்க எம்.ஜி.ஆர். செல்கிறார் .விழாவுக்கு போகும்போது ,தனது கட்சியை சார்ந்த தொழிற்சங்க நிர்வாகி ,அந்த நிர்வாகத்தில் இருந்து பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்பதை கேள்விப்படுகிறார் .* ஆனாலும் கூட*அந்த மாவட்ட ஆட்சியரிடம் முகம் கொடுத்து பேசாமல் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார் .அப்போது ஏன் அ.தி.மு.க. கட்சியில் இருந்து யாரும் பங்கேற்கவில்லை என்று கேட்கிறார் .அதாவது அ.தி.மு.க. தொழிற்சங்க நிர்வாகி தகாத முறையில் இங்குள்ள அதிகாரிகளை தாக்கினார்.அதிகாரமாக நடந்து கொண்டார் . அதனால் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் .என்கிறார் ஆட்சியர் .நீங்கள் சொல்வதில் நியாயம் இருப்பதாக இருந்தால் ,நிச்சயம் தண்டனைக்கு உரியவர்தான் .அவரை எப்படியாவது மன்னித்து மீண்டும் பணியில் சேர்க்க முடியுமா என்று கேட்டார் எம்.ஜி.ஆர். ஒரு மாவட்ட ஆட்சியரை* பொருட்படுத்தாமல் ,உத்தரவு போட்டு ,தொழிற்சங்க நிர்வாகியை மீண்டும் பணியில் அமர்த்தும் பொருட்டு நடவடிக்கை எடுப்பதை கைவிட்டு ,அதே மாவட்ட ஆட்சியரிடம் வேண்டுகோள் வைத்தார் எம்.ஜி.ஆர்.அப்படி ஒரு நியாயத்தோடு நடந்து கொண்ட முதல்வர் .பொதுவாக எந்தவிதமான குழப்பமான விஷயங்கள்* இருந்தால் அதிகாரிகளுக்கு ,அந்த விஷயத்தில் நியாயம் செய்க என்றுதான் குறிப்பு* எழுதி வைப்பாராம் .எம்.ஜி.ஆர்.தன்* வாழ்நாள் முழுக்க தர்மத்தையும், நியாயத்தையும், ஒரு தாயுள்ளத்தையும் கடைபிடித்தவர் எம்.ஜி.ஆர். மற்ற தகவல்கள் அடுத்த அத்தியாயத்தில் தொடரும் .
நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள் /காட்சிகள் விவரம்*
----------------------------------------------------------------------------------
1.இந்த பச்சைக்கிளிக்கு ஒரு செவ்வந்தி பூவில் -நீதிக்கு தலைவணங்கு*
2.நான் உங்கள் வீட்டு பிள்ளை - புதிய பூமி*
3.தம்பிக்கு ஒரு பாட்டு - நான் ஏன் பிறந்தேன்*
4.திரு.லியாகத் அலிகான் பேட்டி*
5.நகரசபை தலைவராக ஒரு காட்சியில் எம்.ஜி.ஆர்.- நம் நாடு*
-
எம்ஜிஆரின் நடிப்பை பலவிதமாக பல தரப்பினர்கள் விமர்சனம் செய்து உள்ளார்கள் .
எம்ஜிஆரின் நடிப்பு என்பது - தென்றல்- மென்மையாக கையாளும் நடிகப்பேரசர்.
வீரமான காட்சிகளில் - புயலாய் ஜொலித்தவர் .
காதல் காட்சிகளில் கனிரசம் சொட்ட பல காதலர்களின் உள்ளங்களில் என்றென்றும் வாழும் அளவிற்கு பல காதல் கீதங்களை தந்த உலகபேரழகு மன்மதன் .
கொள்கை பாடல்கள் - இவரை போல் பாடியவர் எவருமில்லை
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மன மகிழ்வுடன் பார்க்கும் அளவிற்கு பொழுது போக்கு
படங்களை தந்தவர் .
எல்லா வகை சண்டை காட்சிகளிலும் தனி முத்திரை பதித்து தன்னுடைய திறமைகளை வெளி
படுத்தி சண்டை பிரியர்களை இன்று வரை தன்னுடைய நிரந்தர ரசிகராக வைத்திருப்பவர் .
எம்ஜிஆர் என்ற பெயரை கேட்டாலே குதூகலித்து அவருடைய பிம்பத்தை திரையில் பார்க்கும்
போதும் ஒரு தனி மனிதன் அடையும் இன்பத்தின் எல்லைக்கே சென்று சிரித்து ஆனந்தமடையும்
ரசிகன் இன்று கோடிக்கணக்கில் இருப்பது உலகில் எம்ஜிஆர் என்ற நடிகருக்கு மட்டுமே
என்பது வரலாற்று உண்மையாகும் .
எம்ஜிஆர் என்ற மாபெரும் மன்னாதி மன்னன் - மறையவில்லை .
ரசிகர்களின் உள்ளங்களில் தினமும் வாழ்கிறார் .-
ஊடகங்களில் தினமும் தோன்றுகிறார் .....
திரை அரங்குகளில் பவனி வருகிறார் ...
மனம் திறந்து மக்கள் திலகத்தை பாராட்டும் நல்லவர்கள் ..புகழ் மாலை சூடுகிறார்கள் ....
உலக திரைப்பட வரலாற்றில் சாதனை இங்கும் எம்ஜிஆர் வாழ்கிறார் ............vnd...
-
#தலைவர்காலடிபட்டால்...
குடும்பச் சொத்துக்களை விற்க முனைந்த தாய்மார்கள் !
விவசாய நிலத்தில் அவர் காலடி பட்டால் மண்ணெல்லாம் பொன்னாய் விளையும்!!
தலைவர் பலருக்கும் எவ்வளவோ உதவிகள் செய்திருக்கிறார். ஆனால், அவருக்கு உதவ வேண்டும் என்ற நோக்கத்தில் குடும்பச் சொத்துக்களை விற்க முனைந்த தாய்மார்கள் உண்டு. தலைவரை தங்கள் மகனாகவே கருதிய மூதாட்டிகள், தங்கள் விவசாய நிலத்தில் அவர் காலடி பட்டால் மண்ணெல்லாம் பொன்னாய் விளையும் என்று நம்பினர்!
வரி பாக்கிகளுக்காக தலைவரின் சொத்துக்கள் ஜப்தி செய்யப்படலாம் என்று வதந்திகள் பரவிய நேரம். திண்டிவனத்தில் ஆசிரியராக பணி யாற்றி வந்த இரா.ஷெரீப் என்பவர், தலைவருக்கு கடிதம் எழுதினார். ‘‘தங்கள் சொத்துக்கள் ஜப்தி செய்யப்படலாம் என்று வரும் செய்திகள் அறிந்து என்னைப் போலவே தங்களையும் தனது மகனாகக் கருதும் எனது தாய் மிகுந்த வருத்தமடைந்திருக்கிறார். குடும்பச் சொத்துக்களை விற்று தங்களுக்கு உதவச் சொன்னார்.
என் வீடு, மனை ரூ.40 ஆயிரம் விலைபோகும். அதை தங்களுக்கு அளிக்கிறேன். என் தாய் தங்களுக்காக உயிரைக்கூட தர சித்தமாக இருக்கிறார்’’ என்று கடிதத்தில் ஷெரீப் கூறியிருந்தார்.
தலைவர் தனது தாய் சத்யா அம்மையாரை தெய்வமாக மதிப்பவர். ராமாவரம் தோட்டத்து வீட்டில் தாய்க்கு சிறிய கோயிலே கட்டியிருந்தார். வெளியே புறப்படும் முன் தாயை வணங்கி விட்டுத்தான் புறப்படுவார். மற்ற தாய்மார்களையும் சொந்தத் தாய் போலவே கருதினார். ஷெரீப் எழுதிய கடித விவரங்களைப் பற்றியும் அந்தத் தாயைப் பற்றியும் ‘ஆனந்த விகடன்’ இதழில் வெளிவந்த தனது சுயசரிதையான ‘நான் ஏன் பிறந்தேன்’ தொடரில் அவர் குறிப்பிட்டிருந்தார்.
‘‘வயதான காலத்தில் அந்தத் தாய் தன் மக்களுடைய எதிர்காலத்துக்கு என்பதைப் பற்றி சிறிதேனும் கவலைப்படாமல் என்னுடைய கடனைத் தீர்க்க, தங்களின் சொத்துக்களை விற்க முடிவெடுத்தார்களே, அந்த மனித தெய்வத்தை நான் வணங்காதிருப்பது எப்படி? அந்தத் தாய் எனக்காக உயிரைத் தரவும் துணிந்து விட்ட நிலையில், நான் அவர்களுக்காக என் உயிரைத் தராவிடினும் உழைப்பையாவது தரவேண்டாமா?’’ என்று மக்கள்திலகம் எழுதியுள்ளார்.
தனக்காக அவர்கள் சொத்துக்களை விற்பதை ஏற்க தலைவர் மறுத்துவிட்டார். பின்னர், அந்தத் தாயார் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதை கடிதம் மூலம் அறிந்து, திண்டிவனம் சென்றார். ஷெரீப்பின் வீட்டுக்குச் செல்வதற்காக சிறிய சந்துகளின் வழியே தலைவர் நடந்து சென்றார். தங்கள் சந்தில் தலைவர் நடந்து வருவதை நம்ப முடியாத மக்கள் மகிழ்ச்சியுடன் அவரை வரவேற்று, ஓட்டமும் நடையுமாய் கூடவே சென்றனர். ஷெரீப்பின் வீட்டை அடைந்த தலைவரை, மூத்த மகனை கண்ட மகிழ்ச்சியுடன் படுக்கையில் இருந்தவாறே கண்ணீருடன் வரவேற்றார் அந்தத் தாய். அவரது கரங்களை ஆதரவாகப் பிடித்தபடி நலம் விசாரித்தார் மக்கள்திலகம்.
‘‘எங்கே உன்னைப் பார்க்காமலே செத்துப் போயிடுவேனோன்னு பயந்தேன். லெட்டர் போட்டவுடனே வந்துட்டியே. நல்லா இருப்பா…’’ என்று கண் கலங்கியபடி நெஞ்சு குளிர வாழ்த்தினார் ஷெரீப்பின் தாய்.
‘‘அழாதீங்கம்மா. உங்களுக்கு ஒன்றும் இல்லை. சீக்கிரமே உடம்பு சரியாகி விடும்’’ என்று கண்ணீரைத் துடைத்தபடியே தேற்றிய தலைவர் ஒரு கவரை அவரிடம் அளித்தார். அதில் பணம் இருப்பதைப் பார்த்துவிட்டு அதை ஷெரீப்பின் தாய் ஏற்க மறுத்தார்.
‘‘அம்மா. உங்களுக்கு கொடுக்க வேண்டியது என் கடமை. நீங்க என்னை மகனா நினைக்கிறது உண்மையா இருந்தா, மூத்த மகன் செய்யற இந்த சிறிய உதவியை ஏத்துக்கணும்’’ என்ற தலைவரின் வார்த்தையைத் தட்ட முடியாமல் மகிழ்ச்சியோடு பணத்தை வாங்கிக் கொண்டார் ஷெரீப்பின் தாயார். இது நடந்தது 1979-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம். பின்னர், ஓரளவு உடல் நலம் தேறிய அந்தத் தாயின் உடல் நிலை 1980-ம் ஆண்டு ஜனவரி மாதம் மோசமடைந்தது. தலைவருக்கு தந்தி அடித்தார் ஷெரீப். அப்போதும், திண்டிவனம் சென்று பார்த்தார் தலைவர். அந்த மகிழ்ச்சியிலேயே கண்ணை மூடினார் அந்தத் தாய்!
ஒருமுறை மதுரை அருகே எழுமலை என்ற கிராமத்தில் வேனில் தலைவர் சென்று கொண்டிருந்தபோது, ஒரு மூதாட்டி தன் இரு மகள்களுடன் குறுக்கே வந்து நின்றார். வேனில் இருந்து இறங்கிய மக்கள் திலகம், ‘‘என்னம்மா, உங்களுக்கு ஏதாவது உதவி தேவையா?’’ என்றார்.
அந்த மூதாட்டி, ‘‘மகராசா, உன்னைக் கெஞ்சிக் கேட்கிறேன். என் விவசாய நிலத்தில் உன் பாதம் பட வேண்டும். ஒருமுறை நடந்து விட்டு வா, அது போதும்’’ என்றார்.
சிரித்தபடியே அவரது கோரிக்கையை ஏற்ற தலைவர், அருகே இருந்த நிலத்துக்குச் சென்று மூதாட்டியின் கரத்தைப் பற்றிய படியே சிறிது தூரம் நடந்தார். அந்த மூதாட்டி கண்களில் நீர் வழிய, ‘‘இதுபோதும் ராசா, இனிமே இந்த நிலத்தில் பொன்னு விளையும்’’ என்றார். தலைவரின் ஜிப்பா பையிலிருந்து பணக் கத்தை அந்தத் தாயின் கரங்களுக்கு இடம் மாறியது!
மக்கள் திலகம், கே.ஆர்.விஜயா நடித்த ‘நல்ல நேரம்’ திரைப்படத்தில் ‘நீ தொட்டால் எங்கும் பொன்னாகுமே, என் மேனி என்னாகுமோ?…’ என்ற டூயட் பாடல் இடம் பெறும். மற்ற தலைவர் பட பாடல்களுக்கு இல்லாத சிறப்பு இந்தப் பாடலுக்கு மட்டுமே உண்டு.
வழக்கமாக, பாடல் காட்சிகளில் பார்ப்பவர்களுக்கு உற்சாகம் தொற்றிக் கொள்ளும் வகையில் தலைவர் ஆடுவார், ஓடுவார். ஆனால், இந்தப் பாடலில் வலைப் படுக்கையில் (நெட்) படுத்தபடியே பாடி நடித்திருப்பார். முழு பாடல் காட்சியிலும் படுத்தபடியே நடித்த நடிகர் தலைவராகத்தான் இருப்பார்...!
ஓடி ஆடி நடிப்பதை விட, படுத்துக் கொண்டே பாடல் காட்சியில் நடிப்பது கஷ்டம். ஆனாலும், படுத்துக் கொண்டே ஜெயித்தவருக்கு படுத்துக் கொண்டே நடிப்பது கஷ்டமா என்ன?
நல்ல நேரம் திரைப்படத்தில் இடம் பெற்ற இந்த பாடல் சூப்பர் ஹிட் ஆனது.
நன்றி : திரு. ஸ்ரீதர் சுவாமிநாதன்... தமிழ். தி ஹிந்து. காம்
#இதயதெய்வம்.........
-
ஆயிரத்தில் ஒருவன்
பி.ஆர்.பந்துலுவின் பத்மினி பிக்சர்ஸ் பேனரில் எம்.ஜி.ஆர். நடித்த முதல் படம். மெல்லிசை மன்னர்கள் இசை ராச்சியம் நடத்திய படம்.
நம்பியார்: ”மதம் கொண்ட யானை என்ன செய்யும் தெரியுமா?”
எம்.ஜி.ஆர்: ”சினம் கொண்ட சிங்கத்திடம் தோற்று ஓடும்!”
நம்பியார்: ”தோல்வியையே அறியாதவன் நான்!”
எம்.ஜி.ஆர்: ”தோல்வியை எதிரிகளுக்குப் பரிசளித்தே பழகியவன் நான்!”
பின்பக்கம் பட்டன் வைத்த, போச்சம்பள்ளிப் பட்டுப்புடவையில் தைத்த சட்டையுடன் எம்.ஜி.ஆரும், லுங்கி ஸ்டைலில் நம்பியார் கட்டிக்கொண்டு வரும் காஞ்சீவரமும் நகைப்பூட்டலாம். ஆனால், இந்தப் படத்தின் அசுரபலம் திரைக்கதையமைப்பும் காட்சியமைப்பும். ’பருவம் எனது பாடல்’, ‘உன்னை நான் சந்தித்தேன்,’ ‘ஆடாமல் ஆடுகிறேன்’ என்று கதாநாயகிக்கு மட்டுமே மூன்று பாடல்களை, அதுவும் ஒரு புதுமுக நாயகிக்கு (ஜெயலலிதா) கொடுத்திருக்கிறார்கள் என்றால், இயக்குனருக்கு இருந்த நம்பிக்கையைக் கவனிக்கவும்.
’ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை.”
’ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ...”
’அதோ அந்தப் பறவைபோல வாழ வேண்டும்...”
இந்தப் பாடல்களெல்லாம் எம்.ஜி.ஆருக்காகவே எழுதப்பட்ட பாடல்கள் என்பது உள்ளங்கை பூசணிக்கனி. இது தவிர, ‘நாணமோ இன்னும் நாணமோ” என்று ஒரு டூயட். ஒரு வெகுஜனப்படம் என்றால், அதன் சாமுத்ரிகா லட்சணங்கள் என்னென்ன உண்டோ, அத்தனையையும் உள்ளடக்கிய ஒரு படம் ‘ஆயிரத்தில் ஒருவன்’.
எம்.ஜி.ஆர்.படத்தில் நாலைந்து சண்டைக்காட்சிகள் இருந்தாலும், ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாகப் படமாக்கப்பட்டிருக்கும். சுறுசுறுப்பாய் முகமெல்லாம் புன்னகை பூத்தவாறு, படுகேஷுவலாய் போடுகிற ஜாலி சண்டை; (”பொறு பூங்கொடி! போய் சற்று விளையாடிவிட்டு வருகிறேன்!”) சிலம்பம், வாள், மான்கொம்பு, இடுப்பு பெல்ட், சுருள்வாள், இரும்புக்கம்பி, சவுக்கு என்று ஏதேனும் ஒரு உபகரணத்துடன் போடுகிற ஒரு சண்டை; குண்டுமணி, ஜஸ்டின், சாண்டோ சின்னப்பா தேவர் போன்ற ஸ்டண்ட் நடிகர்களுடன் ஒண்டிக்கு ஒண்டி போடுகிற ஆக்கிரோஷமான சண்டை... என்று எம்.ஜி.ஆரின் ஸ்டண்ட்கள் பலவகைப்படும். இந்தச் சண்டைக்காட்சிகளின் அமைப்பு, திரைக்கதையின் ஓட்டத்துக்கு ஏற்றவாறு அமைக்கப்பட்டிருப்பதையும் கவனிக்க முடியும். உதாரணமாக, ‘ரிக்*ஷாக்காரன்’ படத்தில் சைக்கிள் ரிக்*ஷா ஓட்டியவாறே, வாத்யார் சிலம்பம் சுற்றுகிற காட்சி. படம் ஆரம்பித்து ஏறத்தாழ அரை மணி கழித்து வருகிற முதல் சண்டைக்காட்சி என்பதாலோ என்னவோ, சற்று நீ...ளமாகவும் ஆனால் ஒரு நொடி கூட சலிப்பூட்டாமல், பார்க்கப்பார்க்க உள்ளங்கை சிவக்கக் கைதட்டியே ஆக வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தும். (இது குறித்தும் பின்னால் தனித்தனி இடுகை எழுத நப்பாசை உண்டு!)
’ஆயிரத்தில் ஒருவன்’ படத்திலும் அப்படித்தான்! நம்பியாரின் கொள்ளைக்கூட்டம் கன்னித்தீவுக்குள் நுழைந்ததும் எம்.ஜி.ஆரும் கூட்டாளிகளும் அவர்களை எதிர்த்துப் போராடுகிற காட்சி படுசாதாரணமாக, ஒரு ஓடிப்பிடித்து விளையாடுகிற ஆட்டத்தைப் பார்ப்பது போலிருக்கும். ஆனால், எம்.ஜி.ஆரும் நம்பியாரும் ஒற்றைக்கு ஒற்றை போடுகிற சண்டைக்காட்சி மிகவும் இறுக்கமாக, ஆவேசத்தை வெளிப்படுத்துவதாக இருக்கும். எம்.ஜி.ஆர் என்ற ஆளுமையை எள்ளுபவர்களுக்கு இந்தச் சின்னச் சின்ன நுணுக்கங்கள் தென்படாது. ஆனால், இன்றளவிலும் ‘சண்டைக்காட்சிகள்’ என்றால் ‘வாத்யார் படம் தான்’ என்று வியக்கப்படுவதற்குக் காரணம், இத்தகைய வித்தியாசங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டதுதான். அதனால்தான் அவர் இன்னும் வாத்யார்; என்றும் வாத்யார்!
பாய்மரக்கப்பல், அழகான கடற்கரை, தீவு என்று ஈஸ்ட்மென் கலரில் ‘ஆயிரத்தில் ஒருவன்’ கடலழகின் பல பரிமாணங்களை அப்போதே திரையில் வெளிப்படுத்தி மலைக்க வைத்த படம். ’ஓடும் மேகங்களே,’ பாடலில் எம்.ஜி.ஆர் கடற்கரையில் பாடிக்கொண்டே போக, ஜெயலலிதா பின்தொடர்வது போலவும்; ‘அதோ அந்த பறவை போல’ பாடல் ஒரு பாய்மரக்கப்பலிலேயே அனைவரும் பாடுவதாகவும் அமைத்து, கடலின் அழகைப் பாடலில் வெளிப்படுத்தியிருப்பார் பந்துலு. பாறைகள் நிறைந்த கடல்பகுதியில் எம்.ஜி.ஆர்- நம்பியார் போடுகிற சண்டையிலும் கடலின் இன்னொரு பரிமாணத்தைக் காட்டியிருப்பார்கள். ஒரு எம்.ஜி.ஆர் படத்தின் பெரும்பகுதி ஸ்டூடியோவுக்கு வெளியே எடுக்கப்படுவதற்கு ‘ஆயிரத்தில் ஒருவன்’ ஒரு முன்னோடி என்பதில் சந்தேகமில்லை..........vnd...
-
வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் எனது சக ஆசிரியர்கள் மத்தியில் காமராசர் முதலில் மதிய உணவு திட்டம் கொண்டுவரவில்லை என டேபிளை தூக்கி வீசி பேசி வருகிறேன். ஒரு முறை ஆசிரியர்களுக்கான கூட்டம் ஒன்றில் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி பேசிய அதிகாரி மதிய உணவுதிட்டத்தை பற்றி காமராசரை புகழ்ந்துபேச ஒரு ஆசிரியர் நம் தலைவர் மதிய உணவு திட்டத்தை காப்பியடித்ததாக கிண்டலடிக்க ஆவேசத்துடன் எழுந்த நான் நீதிக்கட்சி திட்டம் பற்றியும் அதன்பின் அரைவயிறு சோறு போட்டவரை பற்றியும் வயிறார உணவளித்த புரட்சித்தலைவரின் திட்டத்தைப் பற்றியும் ராமாவரம் தோட்டத்து அன்னக்களஞ்சியம் பற்றியும் சிறுவயது முதலே பொன்மனச்செம்மல் ஈகை குணம் பற்றியும் தலைவர் வீட்டில் சாப்பிட்டு வளர்ந்து பின் அவரையே இகழ்ந்த துரோகிகள் பற்றியும் மலைக்கள்ளன் காவியத்தில் தலைவர் பாடிய தீர்க்க தரிசன பாடல்படி சொந்தமாக பள்ளிக்கூடம் நடத்தியது பற்றியும் உலக சுகாதார நிறுவனம் பாராட்டியதைப் பற்றியும் உச்ச நீதிமன்றம் மற்ற மாநிலங்களிலும் எம்ஜிஆரின் திட்டத்தை கடைபிடிக்க ஆலோசனை கூறியது பற்றியும்......(இருங்க மூச்சு வாங்குது தட்டச்சு செய்து விரல்கள் உணர்ச்சி வசத்தில் மரத்துப் போய்விட்டது).... மேற்கண்ட தகவலை பற்றிப் பேச பேச அன்று முழுவதும் அனைவரின் முகமும் இறுகிப் போயிருந்தது. அன்றைய பயிற்சியில் எனது பேச்சே வழக்கமாக நடைபெற இருந்த நிகழ்ச்சியை திசை திருப்பியது.தேனீர் இடைவேளை நேரத்தில் உணவு இடைவேளை நேரத்தில் 'எம்ஜிஆரை குறைகூறிவிட்டு சாமுவேலிடம் யாரும் தப்பிக்க முடியாது' என அவ்வப்போது சில ஆசிரியர்கள் பெருமையாகவும் பேசினர். அடுத்தடுத்த நாட்களில் குறிப்பிட்ட ஒரு ஆசிரியர் ' உங்க தலைவர் அணை கட்டினாரா?' என வம்பிலுக்க ' அணை கட்ட எங்கே இடம் இருந்தது?' ' அணை கட்ட வேண்டிய அவசியம் ஏன்?' ' எத்தனை அணை இருந்தென்ன, தாகத்திற்கு தண்ணீரையே வேறு மாநிலத்திலிருந்து வாய்க்கால் வெட்டி கொண்டு வந்தவர் எம்ஜிஆர்' 'அதிகமாக தடுப்பணைகள், பள்ளி கட்டிடங்கள், தொழில்நுட்ப மற்றும் பல்கலைகழகங்கள் எம்ஜிஆரால்தான் வந்தது' என பட்டியலிட குற்றம் சாட்டியவர் மூச்சுவிட திணறிய வரலாறும் உண்டு.......Saml...
-
ரசிகர்கள் -பலவிதம்
****************************************** *
திரைப்படம் என்பது ஒரு கூட்டு கலவை . அனைவரின் திறமைகள் வெளிப்படும்போது அந்த படம வெற்றி அடைகிறது .திறமைசாலிகள் வெற்றி பெறுகிறார்கள் . அந்த அடிப்படையில் மிகப்பெரிய
வெற்றி காண்பவர்கள் நடிகர்களே .
வெற்றி பெற்ற நடிகருக்கு கிடைக்கும் மிகப்பெரிய பரிசு - ரசிகர்கள்
அந்த ரசிகர்கள் பல விதம்
1. படம் திரைக்கு வந்து வெற்றி பெறும்போது நடிகரின் ரசிகராக இருப்பது .
2. நடிகரின் எல்லா படங்களுக்கும் ரசிகனாக தொடர்ந்து நீடிப்பது
3. குறிப்பிட்ட படங்களுக்கு மட்டும் ரசிகனாக இருப்பது .
4. கண்மூடி ரசிகனாக - வெறித்தனமான ரசிகராக இருப்பது
5. நடிகரின் மறைவிற்கு பின் அவரையே மறந்து போவது
6. அனுதாபியாக இருப்பது .
7.நடிகரின் வெற்றி - தோல்விகளை தன்னுடயதாகவே கருதுவது
8. நடிகரின் தோல்வி என்றால் ஒளிந்து கொள்வது
9. அறிந்தும் அறியாமலும் - தெரிந்தும் தெரியாமலும் - புரிந்தும் புரியாமலும் மற்றவர்கள் கூறும்
தகவலை வைத்து விருப்புவெறுப்புடன் ஏட்டிக்கு போட்டியாக தப்பும் தவறுமாய் கூறிக்கொண்டு
பரிதாபமாக உலா வரும் ரசிகர்கள் .
10.தன்னுடைய அபிமான நடிகரின் செயல்களுக்கு உயிர் கொடுத்து அந்த நடிகரின் படங்களை
எந்த பேதமின்றி அவருடைய எல்லா படங்களையும் வெற்றி படங்களாக அனுபவித்து
எக்காலத்திலும் வெற்றி பெற செய்து அந்த நடிகரின் பெருமைக்கு பெருமை சேர்த்து வரும் -
ரசிகர்கள் .
இந்த பட்டியலில் 10 வது வகை ரசிகர்கள் - மக்கள் திலகத்தின் ரசிகர்கள் .
உலக வரலாற்றில் எம்ஜிஆர் ரசிகர்கள் போல் வெற்றி கண்டவர்கள் யாருமில்லை .
மக்கள் திலகம் அவர்கள் தொட்டதெல்லாம் வெற்றி .. வெற்றி .. வெற்றி
அவருடைய ரசிகர்கள் என்றென்றும் அவருடைய சாதனைகளை எண்ணி , உலகிற்கு
அடையாளம் காட்டி வருபவர்கள் .
மக்கள் திலகம் எம்ஜிஆர் ரசிகர்கள் கொடுத்து வைத்தவர்கள் ......vnd ..........
-
எம்ஜிஆர் மிகவும் எனக்கு பிடித்த காரணங்கள்......1.வள்ளல்குணம்..2.வசீகரமுகம்..3.யாரை யும் மரியாதையுடன் பேசுவது...4.யாரைக்கண்டாலும் கையெடுத்து வணக்கம் தெரிவிப்பார்.5.தாய்க்குலத்தை போற்றுவது...6.மனைவியைத்தவிர அனைத்து பெண்களையும் அக்கா அண்ணி தங்கையாக பழகுவது வாடி போடி எனக்கூறாமல் நல்ல விழயங்களைச் சொல்வது..7.ஏழைகள் மீது அன்பு இரக்கம் 8.சாதி மதம் கூடாது 9 வாழ்நாளில் கெட்ட வார்த்தை பேசாதிருத்தல்..9.பீடி சிகரெட் வெற்றிலை புகையிலை குடி கஞ்சா கொலை கொள்ளை பாலியல் வன்முறை கடத்தல் ,ஜெயிலுக்கு குற்றம் செய்துவிப்டு போவது கூடாது வாழ்வில் என தானும் நல்வழியில் நடந்து பிறரையும் தன்வழியில் கொண்டு செல்தல் ..10.தமிழ் மொழி தமிழ்நாட்டுக்காக மக்கள் நலமே தன் நலம்.என நினைத்தல்.11.உடற்பயிற்சி தினம் செய்தல் .12.குழந்தைகளைக்கண்டால் தூக்கி கொஞ்சுதல் சிறியவர்களிடம் தினமும் நன்றாக படிக்கவேண்டும் சினிமா டிவி கூடவே கூடாது மாணவ மாணவிகள் என்பார் 13.வயதானவர்கள் அனைவரையும் அரவணைத்தல்..14.தொழில் மீது பக்தி.15.உழைப்பே உயர்வு தரும் என்பார்.......... Ad...
-
திரையுலகின் புலி மக்கள் திலகம்...அந்த
புலியின் நிழலில் நிற்க கூட முடியாத சாதாரண பூனை நடிகன் வந்து வாலாட்டியும்...
பல வேலைகள் செய்தும் முடியாது...
பலமுறை பதிவு மூலம் வாலை ஒட்ட நறுக்கியும்
மீண்டும் வாலாட்ட வருகிறது...
எங்க விட்டுப்பிள்ளை
100 சதவீகிதம் வெற்றி முன் 25 சதவீகித மார்க்கை வைத்து தெருவிளையாடல்
தாண்டவமாடுகிறது..
நீ எப்படி பொய் வேஷம் போட்டு சிவன் வேடத்தில் வந்தாலும்..
எ.வீ.பிள்ளை சவுக்கு
போலி சிவனை துவசம் செய்துவிடும்......bsr...
-
Suresh Kumar நீங்கள் சொல்வது கரெக்ட். என்றாலும், மக்கள் திலகம் திரையுலகில் இருந்தவரை அவர்தான் வசூல் சக்ரவர்த்தி அவர்தான் அதிகம் சம்பளம் வாங்கிய நடிகர் என்ற உண்மை தெரிந்ததுதான். ஆனால், இன்றைய டிஜிட்டல் யுகத்தில் அதை மறைத்து மார்க்கெட்டில் மக்கள் திலகத்துக்கு அடுத்த நிலையில் இருந்த சிவாஜி கணேசனை வசூல் சக்ரவர்த்தியாகவும் மக்கள் திலகத்தை சிவாஜி கணேசன் ரசிகர்கள் கேவலமாகவும் விமர்சிக்கும்போது நாங்கள் பதில் சொல்ல வேண்டியிருக்கிறது. இல்லாவிட்டால் அவர்கள் சொல்வது உண்மையாகிவிடும். அவர்களிடமும் உங்கள் கருத்தை சொல்லிப் பாருங்கள். அப்போதாவது நிறுத்துகிறார்களா என்று பார்ப்போம். நன்றி.... Swamy...
-
எங்க வீட்டுப் பிள்ளை புரட்சித்தலைவர் நடித்த மிகச் சிறந்த படமாகும் காட்சிக்கு காட்சி விறுவிறுப்பு படம் பார்ப்பவர்களை இருக்கையின் நுனியில் அமர வைத்த படம் தன்னையும் அறியாமல் கைதட்ட வைத்த படம் அதில் நானும் ஒருவன் சினிமாவிற்கு டிக்கெட் எடுக்க ஒரு மணி நேரம் முன்பே கவுண்டருக்கு சென்றுவிடவேண்டும் நேரம் செல்லச்செல்ல தாய்மார்கள் மட்டும் உடன் பிறப்புகளின் எண்ணிக்கை கூடிக்கொண்டே இருக்கும் அந்த கும்பலில் அந்த கலவரத்தில் டிக்கெட் எடுக்க பட்ட பாடு இருக்கிறதே அது எனக்கு மட்டுமே தெரியும் மூன்று புத்தம்புதிய சட்டைகள் இதனாலேயே எனக்கு கிழிந்து போனது அதனாலென்ன புரட்சித்தலைவர் படம்தானே அவரின் ஞாபகார்த்தமாக அந்த கிழிந்துபோன சட்டைகள் இன்றளவும் நினைவுச் சின்னங்களாக என்னால் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளது புரட்சித்தலைவர் வாழ்ந்த காலத்தில் திரையுலகம் என்பது ஒரு பொற்காலமாக இருந்தது அவர் ஒரு சகாப்தம் அவர் தயவுசெய்து சொல்கிறேன் மிகவும் உருக்கமாக வேண்டிக் கொள்கிறேன் அவரைப் பற்றி இன்னும் நிறைய பதிவிடுங்கள் எனக்கு அதிகம் விஷய ஞானங்கள் போதாது இல்லாவிட்டால் நானும் முகநூலில் நிறைய கருத்து தெரிவிப்பேன் புரட்சித் தலைவர் அவர்களின் நினைவலைகளை புதுப்பிப்பது ஆகவும் அவரின் வாழ்ந்த காலத்திற்கே அழைத்துச் செல்வதாகவும் தங்களின் பதிவுகள் உள்ளது பதிவிட்டமைக்கு மிகவும் நன்றி தங்களின் சேவை என்றென்றும் தொடரட்டும் புரட்சித்தலைவரின் ஆசி தமிழகத்திற்கும் தங்களுக்கும் என்றென்றும் உண்டு பதிவிட்டமைக்கு நன்றி... Srinivasan Kannan
-
அன்றைய விமர்சனத்தில் " எங்க வீட்டு பிள்ளை" படத்தை தயாரித்த விஜயா நிறுவனத்திற்கும் நடித்த எம்.ஜி.யாருக்கும்.வெளியிட்ட விநியோகஸ்தர்களை விட அரசுக்கு கிடைத்த கேளிக்கை வரி அதிகம் ஐம்பது லட்சம்.இன்றைய தேதியில் கணக்கிட்டால் 250.கோடிக்கு மேல் வரும்.அந்த படத்துக்கு முன்பும் சரி பின்பும் இதை போல கேளிக்கை வரியாக எந்த படத்துக்கு கிடைக்கவே இல்லை. இதான் வரலாறு....... Thangavelu Thangam...
-
மறுபடியும் அவர்கள் பொய் சொல்கிறார்களா? நாம் என்ன ஆதாரங்களோடு உண்மைகளை சொன்னாலும் அவர்கள் திருந்தமாட்டார்கள். திருவிளையாடலை எங்க வீட்டுப் பிள்ளை வசூலில் முறியடித்ததை எங்க வீட்டுப் பிள்ளை 100 நாள் விளம்பரம், 7 தியேட்டர்களில் வெள்ளி விழா ஆகியவற்றை ஆதாரத்தோடு வெளியிட்டோம். அதேபோல, உலகம் சுற்றும் வாலிபன் படத்தை வசூலில் தங்கப்பதக்கத்தால் நெருங்க முடியவில்லை. அதற்கான ஆதாரமும் அவர்களிடம் இல்லை. சும்மா வாய்ப்பந்தல் போடுவார்கள்.
உண்மையில் உலகம் சுற்றும் வாலிபன் 6 மாதங்களில் ஒன்றரை கோடி ரூபாய் வசூல் செய்தது. அதற்கு நம்மிடம் விநியோகஸ்தர் தரப்பு ஆதார விளம்பரம் உள்ளது. ஏற்கெனவே வெளியிட்டும் இருக்கிறோம். அரசுக்கு கேளிக்கை வரியாக மட்டும் ஒரு ஆண்டில் 1 கோடி ரூபாயை உலகம் சுற்றும் வாலிபன் செலுத்தி இருக்கிறது. அந்த வசூலையும் மக்கள் ஆதரவையும் பார்த்து மிரண்டுபோய் அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி மக்கள் திலகத்தின் படங்களின் வசூலைக் குறைக்கவும் விநியோகஸ்தர்கள், தியேட்டர்கள் லாபத்தைக் குறைக்கவும் வரியை உயர்த்தினார். இதைக் கண்டித்து 1974ல் தியேட்டர்கள் சில நாட்கள் மூடப்பட்டன. இந்த தடைகளையும் தாண்டி உரிமைக்குரல் படம் மிகப்பெரிய வசூல் சாதனை செய்தது எல்லாம் நடந்த வரலாற்று உண்மைகள். மதுரையில் உலகம் சுற்றும் வாலிபனை உரிமைக்குரல் வசூலில் மிஞ்சி 7 லட்சம் ரூபாய் வசூல் செய்தது. இது மதுரையில். கோவையிலும் உலகம் சுற்றும் வாலிபனை விட உரிமைக்குரல் வசூல் அதிகம்.
உலகம் சுற்றும் வாலிபன் தமிழகத்தில் 20 தியேட்டர்களில் 100 நாள் ஓடியது. பெங்களூர், இலங்கையை சேர்த்தால் 25 தியேட்டர்களில் 100 நாட்கள். பெங்களூர், இலங்கையை கழித்துவிட்டுப் பார்த்தால் கூட தமிழகத்தில் சிவாஜி கணேசனின் எந்தப் படமும் 20 தியேட்டர்களில் 100 நாட்கள் ஓடியதே இல்லை. திரிசூலம் கூட 20 தியேட்டரில் 100 நாள் ஓடவில்லை. திரிசூலம் வசூல் உலகம் சுற்றும் வாலிபனை வசூலில் மிஞ்சி விட்டது என்பார்கள். 1979-ல் மக்கள் திலகம் திரையுலகில் இல்லை. முதல்வராகிவிட்டார். இருந்தாலும் திரிசூலம் வசூலுக்கு காரணமும் முதல்வராக இருந்த புரட்சித் தலைவர்தான். தியேட்டர்களுக்கு தினசரி டிக்கெட் வசூலில் இத்தனை சதவீதம் வரி என்று இருந்ததை வாரம் ஒருமுறை குறிப்பிட்ட அளவு வரி செலுத்தினால் போதும் என்று காம்பவுண்டிங் டாக்ஸ் வரிமுறையை புரட்சித் தலைவர் கொண்டுவந்தார். அதனால் தியேட்டர்காரர்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய வரி குறைந்ததால் திரிசூலம் படத்தின் வசூல் உயர்ந்தது. பழைய வரிமுறை இருந்தால் அதன் வசூல் குறைந்திருந்திருக்கும். திரிசூலம் வசூலுக்கு காரணம் புரட்சித் தலைவர் போட்ட பிச்சை...... Swamy.........
-
Yuva Raj வாங்க யுவராஜ், எப்படி இருக்கீங்க.. புரட்சித் தலைவர் ஆட்சிக்கு முன் தியேட்டரில் கேளிக்கை வரி தினசரி டிக்கெட் விற்பனையில் குறிப்பிட்ட சதவீதம் இருந்தது. ஒரு உதாரணத்துக்கு சொல்கிறேன். 1000 ரூபாய் ஒருநாள் வசூல் என்றால், 400 ரூபாய் வரி.. ஒரு வாரத்துக்கு 2800 வரி. இதை மாற்றி ஒரு வாரத்துக்கு குறிப்பிட்ட சதவீதம் வரி ( அதாவது ஏற்கனவே உள்ளதைவிட குறைவாக) கட்டினால் போதும் என்ற ஒருங்கிணைந்த வரி முறையை புரட்சித் தலைவர் கொண்டுவந்தார். மேலும் தினசரி 3 காட்சிகள் வீதம் ஒரு வாரத்துக்கு 21 காட்சிகள் என்று நிர்ணயித்து இந்த காம்பவுண்டிங் டாக்ஸ் வரி விதிக்கப்பட்டது. சனி, ஞாயிறு, பண்டிகை நாட்களில் சிறப்பு காட்சிகளுக்கு வரி இல்லை.இந்த வரி முறை 1977 டிசம்பரில் முதலில் அமலுக்கு வந்து படிப்படியாக எல்லா ஊர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. அரசுக்கு செலுத்த வேண்டிய வரி குறைந்ததால் தியேட்டரில் வசூல் அதிகரித்தது. திரிசூலம் வசூலும் அதிகரித்தது. இப்போது புரிகிறதா? .. சரி... உலகம் சுற்றும் வாலிபன் வசூலில் என்ன சந்தேகம்?... Swamy...
-
Yuva Raj நீங்கள் தெரிந்து கொள்வதற்காக சொல்கிறேன். மக்கள் திலகம் நடித்த இன்று போல் என்றும் வாழ்க படம் 1977 மே மாதம் 5 ம் தேதி சட்டசபை தேர்தலுக்கு முன் ரிலீஸ். படம் 100 நாள் ஓடியது. அப்போது தேர்தல் முடிந்து மக்கள் திலகம் முதல்வராகிவிட்டார். அப்போதைய கவர்னர் பிரபுதாஸ் பட்வாரி தலைமையில் 100 வது நாள் விழா நடந்தது. அந்த விழாவில்தான் திரையுலகை காப்பாற்ற விரைவில் நல்ல செய்தி வரும்... என்று காம்பவுண்டிங் டாக்ஸ் பற்றி மக்கள் திலகம் சூசகமாக அறிவித்தார். பின்னர் காம்பவுண்டிங் டாக்ஸ் முறை அமலுக்கு வந்தது. அதுபற்றிய செய்தி ..... Swamy...
-
"மதுரை வீரன்"தான் முதன் முதலில் சென்னையில் 4 திரையரங்கிலும் 100 நாட்கள் ஓடிய முதல் தமிழ் படம்.
1956 ஏப் 13 ம் தேதியன்று சென்னை சித்ரா, காமதேனு, பிரபாத், சரஸ்வதி என்ற நான்கு திரையரங்குகளில் வெளியாகி இந்த மகத்தான சாதனை செய்த படம் மதுரை வீரன்தான். அவன்தான் உண்மையான மதுரை சூரன்.
ஏதோ கோவில் மணிதான் இந்த சாதனையை முதலில் செய்தது என்று பொய் விளம்பரங்கள் மூலம் ஊரை ஏமாற்றி திரிந்த கணேசனின்
கைபுள்ளைங்களின் பிரசாரத்துக்கு சாவுமணி அடிக்கும் ஆதாரங்களுடன்
உங்களை சந்திக்கிறேன்.
"மதுரைவீரனி"ன் 100 வது நாள் விளம்பரம் கிடைக்காவிட்டாலும் கடைசியாக நமக்கு கிடைத்தது 75 வது நாள் விளம்பரம்தான். அதைத்தொடர்ந்து 100 நாட்கள் விளம்பரத்தை தேடிய நமக்கு கிடைத்தது இரண்டு வலுவான ஆதாரங்கள். "மதுரை வீரனி"ன் 100 வது நாள் 1956 ஜீலை 21 அன்று வருகிறது அல்லவா?. சென்னையில் மட்டும் சித்ரா, காமதேனுவில் ஜீலை 22 அன்று புதிய மொழிமாற்றம் செய்யப்பட்ட தமிழ் படம் பத்மினி பிக்சர்ஸாரின் "சிவசக்தி" வெளியான விளம்பரம் கிடைத்திருக்கிறது. அதிலும் தெளிவாக சென்னையில் மட்டும் என்று குறிப்பிட்டதிலிருந்தே நாம் தெரிந்து கொள்ளலாம். மதுரை வீரனின் 100 வது நாளுக்காக ஜூலை 22 சனிக்கிழமையன்று வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதிலிருந்து சித்ரா, காமதேனுவில்
"மதுரை வீரன்" 100 நாட்கள் ஓடியது உறுதி செய்யப்படுகிறது. பிரபாத், சரஸ்வதியில் ஆக 3 முதல் "மர்மவீரன்"
என்ற தமிழ்ப்படம் வெளியான ஆதாரம் கிடைத்திருக்கிறது. இதன் மூலம் பிரபாத், சரஸ்வதியில் "மதுரை வீரன்" 112 நாட்கள் ஓடியதை நாம் உறுதி செய்து கொள்ளலாம். இதன்மூலம் "கோவில்மணி"யின் சென்னை 4 திரையரங்கில் முதன்முறையாக என்று தயாரித்த விளம்பரம் பொய் என்று நிரூபிக்கப் பட்டு விட்டது.
ஆமா இந்த பொய் விளம்பரம் எந்த பிரஸ்ஸில் பிரிண்ட் பண்ணியது. எவ்வளவு காசு கொடுத்தீர்கள். அந்த நாட்களில் டிக்கெட் கிழித்து வசூலை காண்பித்தவர்கள் தற்போது புது டெக்னிக் கையாண்டு வருகிறார்கள். ஆங்கில பத்திரிக்கைகளில் கொடுத்த விளம்பரம்தான் ஒரிஜினல் விளம்பரம. எங்கே அதுல முதன் முறையாக என்ற வாசகத்தை காணோம்? என்று அசோகன் கேட்ட மாதிரி நாமும் கேட்கலாம். நமக்கு வாய்த்த கைபுள்ளைங்க மிகவும் திறமைசாலிகள். ஆனால் பித்தலாட்டம்தான் உடம்பு முழுக்க இருக்கிறது. நாதாரித்தனத்தை செஞ்சாலும் ரொம்ப நாசூக்கா செய்யணும்யானு சொல்ற வடிவேலுவின் காமெடிதான் ஞாபகத்துக்கு வருது.
கொலைக்குற்றம் செய்பவன் தான் செய்யவில்லை என்பதற்காக போலி அலிபிகளை உருவாக்குதல் போல எதிர்தரப்பு எங்காவது சைக்கிள் கேப் கிடைத்தாலும் அதை பயன்படுத்தி தங்களது பொய்சாதனையை விளம்பரப்படுத்துவதில் மகா கில்லாடிகள். அவர்கள் 1 தியேட்டரில் ஓடினாலும் பெரிய விளம்பரம் கொடுப்பதே அவர்கள் ஓட்டிய சாதனையை வெளிப்படுத்துவதற்குதான் என்பது தெளிவாகிறது. சாதனையை தேடி ஓடாதவர் புரட்சி நடிகர். சாதனை தன்னை தேடி வருமாறு செய்பவர்.
நாம் 33 திரையரங்கில் 100 நாட்கள் ஓடிய படத்தின் விளம்பரத்தை சேமித்து வைக்காமல் இப்படி அல்லாட வேண்டி இருக்கிறது. அவர்கள் முன்கூட்டியே திட்டமிட்டு படங்களை ஓட்டி விளம்பரம் தேடுவதால் கணக்கு வைத்து கொண்டு அலைகிறார்கள். நாம் அதை பெரிதாக கண்டு கொள்வதில்லை. "சிவந்த மண்ணை" தூத்துக்குடி பாலகிருஷ்ணாவில் 100 நாட்கள் ஓட்டும் போது "நியூடெல்லி" என்ற படத்தை காலை,மாட்னி காட்சிக்கு திரையிட்டு
அவை அத்தனையும் ஹவுஸ்புல் காட்சிகள் என்றும் அந்த காட்சியில் "சிவந்த மண்தா"ன் ஓடியது என்றும் பொய் dcr தயாரித்து ஊரை ஏமாற்றிய திறமையான குற்றவாளிகள்தான் நம்ம கைபுள்ளைங்க.
"சிவந்த மண்" ஓடிய கடைசி வாரம் முழுவதும் hf காட்சிகள். நம்ப முடிகிறதா? இயல்பான சாதனை செய்ய முடியாமல் இப்படி போலி சாதனையை உருவாக்கி விளம்பரம் கொடுத்து மகிழ்வதும் ஒரு மனநோய்தான். எங்களுக்கு வேண்டிய ஆதாரத்தை தந்து உதவிய புரட்சி தலைவரின் அன்புத்தம்பி திரு சைலேஷ் பாசு அவர்களுக்கு நடிகப்பேரரசர் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
நன்றி ...நன்றி... நன்று...ksr...
-
மதுரை- தங்கம் திரையரங்கில் வரலாறு படைத்த வசூல் காவியம் மக்கள் திலகத்தின்
"நவரத்தினம்" ஆகும்.
1972 ல்" நான் ஏன் பிறந்தேன்" காவியம்
70 நாட்கள் 3 லட்சத்தை நெருங்கியது.
முதல் வார வசூலில் புரட்சி படைத்தது.
அதன் பின் 5 ஆண்டு கழித்து 50 நாட்களை கடந்த திரைப்படம்
நவரத்தினம் தான்.
இக்காவியம் 62 நாளில் பெற்ற வசூலில்
மற்ற நடிகர்களின் 100 நாள் ஒடிய
(உத்தமன்,வாணி ராணி,என்மகன்)
வசூலை தவிடுபொடியாக்கியது.
சென்னையில் 8 வாரத்தில் 9 லட்சத்தை பெற்ற முதல் காவியம்.
முதல் வெளியீட்டில் 5 வாரத்தில்
60 லட்சத்தை பெற்றகாவியம்.
மதுரை ஏரியாவில் முதல் வெளியிட்டில்
9 லட்சம் மகத்தான வசூல்....
(மதுரை, திண்டுக்கல்,பழனி,ராம்நாட்
ராஜபாளையம், சிவகாசி) அடுத்து வெளியீடு... விருதுநகர், தேனீ, கம்பம்
காரைக்குடி, 5 வாரங்கள்..
10 ஊரில் வசூல் 12 லட்சத்தை கடந்தது.
அடுத்த சி....சென்டரிலும் 30 க்கும் மேற்பட்ட ஊர்களில் 2,3வாரங்கள் ஒடி சாதனை. மதுரை மாவட்ட ஏரியாவில் மட்டும் நவரத்தினம் 6 மாதத்தில் மிகப்பெரிய வசூல் ஆகும்.
இக்காவியம் பெற்ற வசூலை மற்ற நடிகரின்
175 நாள் ஒடியவையை.... விட
மதுரையை தவிர மற்ற எ,பி,சி ...ஏரியாவில்
நவரத்தினம் மகத்தான வசூலாகும்.........ur...
-
மக்கள் திலகத்தின் மகத்தான திரைப்படம் ...."இன்று போல் என்றும் வாழ்க" காவியம்
1977 ல் வெளியாகி வெற்றி முரசு கொட்டியகாவியம்.
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் முதல்வர் ஆகி விழா கொண்டாடிய காவியம்.
அன்றைய கவர்னர் பட்வாரி அவர்கள் தலைமையில் சென்னை நியூ உட்லாண்ஸ் ஹோட்டலில் 100 வது நாள் விழா சிறப்புடன் நடைபெற்றது.
1977 ம் ஆண்டு சென்னை தேவிபாரடைஸ்
மதுரை சென்ட்ரல்
சேலம் சென்ட்ரல் விக்டோரியா
100 நாள் ஒடி வெற்றிக்கண்டது.
44 திரையில் வெளியாகி
28 திரையில் 50 நாட்களை கடந்து.
கோவை ராஜா 80 நாட்களும்,
சென்ட்ரலில் 21நாட்களும் ஒடி சாதனை.
திருச்சி பேலஸ் 100 காட்சி அரங்கு நிறைந்து 85 நாட்கள் ஒடியது.நெல்லை 77, ஈரோடு 78, குடந்தை 68,தஞ்சை 68,
பாண்டி 78 என சாதனை.
என்றும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் புகழ்
"இன்று போல் என்றும் வாழ்க"...ur