நன்றி வினோத் சார்,
அபூர்வ ஆவணப் பதிவுகளை அளிப்பதில் எப்போதுமே வல்லவர் நீங்கள். இப்போதும் அப்படியே.
அண்ணியின் பொங்கல் வாழ்த்துப்பதிவு சூப்பர். அண்ணியின் படங்கள் அப்போது பெருவெற்றியாகி உச்சத்தில் இருந்த நேரம் அது...
Printable View
நன்றி வினோத் சார்,
அபூர்வ ஆவணப் பதிவுகளை அளிப்பதில் எப்போதுமே வல்லவர் நீங்கள். இப்போதும் அப்படியே.
அண்ணியின் பொங்கல் வாழ்த்துப்பதிவு சூப்பர். அண்ணியின் படங்கள் அப்போது பெருவெற்றியாகி உச்சத்தில் இருந்த நேரம் அது...
1962 ரிப்போர்ட் பிரமாதம்.நன்றி எஸ்.வீ. 9.9.1961 இல் வெளியாகி 21.12.1961 அன்று நூறு நாள் கண்ட பாலும் பழமும் படமும் ,1962 வருட முடிவில் வெளியாகி ,1963 பிப்ரவரி மாதம் நூறு நாள் கண்ட ஆலயமணியும் விட பட்டது சரி.(1962 இல் நூறு நாள் கண்ட லிஸ்டில்.) பார்த்தால் பசி தீரும் எப்படி விட பட்டது? சென்னையில் மட்டும் நூறு நாள் லிஸ்டா?
எஸ்வி சார்
மிக அற்புதமான அபூர்வமான பதிவு உங்கள் ஆவண பதிவு
நெல்லையில் 5 திரை அரங்குகள் மற்றும் சென்னை திரை அரங்குகள் பற்றி குறிப்பிட்டு உள்ளது மிக்க மகிழ்ச்சி
தொடர வேண்டும் உங்கள் பங்களிப்பு
என்றும் அன்புடன்
கிருஷ்ணா
Mr. Vasudevan
I am keenly watching this thread for all of your enjoyable description of every song, most of them are very rare, but excellent in quality.
The valuable efforts of yours and fellow hubbers Mr. Krishna, Mr. Rajesh, Mr. esvee, Mr. Karthik, Mr. Raghavndiran, Mr. Madhu and Mr. Gopal are very very nice and appreciable.
Your 'today special' songs are very very nice. Now I am learning more and more about old hidden songs.
Thanks to all and continue with same spirit.
stl
கிருஷ்ணா சார்,
நடிகர் திலகத்தை நீங்கள் நெல்லையில் தனிமையில் சந்தித்த விவரங்களை எழுதி என் நினைவுகளைக் கிளறி விட்டீர்கள். அருமை.
எனக்கு அதில் நிறைய அனுபவம் உண்டு. சமயம் வாய்க்கும் போது கண்டிப்பாக புகைப்படங்களுடன் உங்கள் எல்லோருடனும் பகிர்ந்து கொள்கிறேன்.
கிருஷ்ணா சார்,
'புதிரு போட போறாளாம் பொட்டப் புள்ள' ...' அச்சமில்லை அச்சமில்லை' படத்தில் அகல்யா என்ற நடிகை பாடுவதாக வரும். திருநெல்வேலி ஆள் முழிக்கிறாராம். நான் சொல்லல. ஜானகி சொல்றாங்க
ஆனா நான் சொல்றேன்.
அடி என்ன வேண்ணா கேளு
கிருஷ்ணா திருநெல்வேலி ஆளு.
ராகவேந்திரன் சார்,
சபாஷ்! கையைக் கொடுங்கள். மிக அபூர்வமான ஒரு பாடல். நன்றாக நினைவிருக்கிறது தண்ணீர் தண்ணீர் வந்த புதிதில் 'மானத்திலே மீன் இருக்க' பாடலை அப்போதெல்லாம் என் வாய் முணுமுணுத்துக் கொண்டே இருக்கும். பின் காலப்போக்கில் கொஞ்சம் மறந்து விட்டது. இன்று நீங்கள் பதித்திருந்ததைப் பார்த்ததும் என்னையுமறியாமல் பாடலின் வரிகளை முன்கூட்டியே என் வாய்முணுமுணுக்க ஆரம்பித்து விட்டது. நெல்லைச் சீமை மொழிதான் எவ்வளவு இனிமை!
என்ன சொல்லுங்கள் ராகவேந்திரன் சார். நீங்கள் நீங்கள்தான். உங்கள் புண்ணியத்தில் மிக நீண்ட நாட்கள் சென்று இப்பாடலைக் கேட்டு மகிழ்ந்தேன். அருந்ததியும் டாப்.
வினோத் சார்,
மீண்டும் ஒரு முறை 'ஆவண அரசர்' என்று நிரூபித்து இருக்கிறீர்கள். தமிழக தியேட்டர்கள் விவரங்கள் உள்ள அரிய ஆவணம் ஜோராக இருக்கிறது. 62-இல் வெளியான படங்களைப் பற்றிய தகவல்கள் அடங்கிய ஆவணமும் நன்று. நடிகர் திலகம் அமெரிக்காவுக்கு அழைக்கப்பட்டு கௌரவப்படுத்தப்பட்ட செய்தியைப் படிக்கும் போது போது (பல தடவை பல பத்திர்க்கைகளில் படித்திருந்தாலும் கூட) ஒரே நேரத்தில் சந்தோஷமும், துக்கமும் பெருகுவதைத் தடுக்க முடியவில்லை.
தேவிகா அவர்களின் பொங்கல் வாழ்த்தும், அவருடைய புகைப்படமும் ஓஹோ!
அருமையான ஆவணங்களுக்கு நன்றி!
வினோத் சார்,
அற்புத, அரிய தகவல்கள் கொண்ட ஆவணங்கள்.. மீண்டும் ஒருமுறை 'ஆவண அரசர்' என்பதை நிரூபணம் செய்துள்ளீர்கள். தேவிகா அவர்களின் பொங்கல் வாழ்த்தும், அவர் புகைப்படமும் சூப்பர்.
நடிகர் திலகத்திற்கு கிடைத்த அமெரிக்க கௌரவம் குறித்த பதிவு பற்றி படிக்கும் போது (பல பத்திரிகைகளில் பல தடவைகள் படித்திருந்தாலும் கூட) ஒரே நேரத்தில் மகிழ்ச்சியும், துக்கமும் மனதில் ஏற்படுவதை உணரமுடிகிறது.
தமிழக தியேட்டர் விவரங்கள் பற்றிய ஆவண விவரங்கள் ஒரு அரிய பொக்கிஷம்.
நன்றி வினோத் சார்.