இந்த வார ஜூனியர் விகடன் இதழில் வெளியான கேள்வி பதில்
http://i59.tinypic.com/dvmr6f.jpg
http://i60.tinypic.com/317bqf6.jpg
Printable View
இந்த வார ஜூனியர் விகடன் இதழில் வெளியான கேள்வி பதில்
http://i59.tinypic.com/dvmr6f.jpg
http://i60.tinypic.com/317bqf6.jpg
மக்கள் திலகத்தின் ''கலங்கரை விளக்கம் '' 28.8.1965
49 ஆண்டுகள் நிறைவு .
மெல்லிசை மன்னர்களின் பிரிவிற்கு பின்னர் எம். எஸ் .விஸ்வநாதன் தனியாக இசை அமைத்த
முதல் படம் .
எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட் .
டைட்டில் இசை - மிகவும் நன்றாக அமைத்திருந்தார் எம்.எஸ்.வி .
மக்கள் திலகத்தின் நடிப்பு - இனிய பாடல்கள் - சரோஜாதேவியின் இரட்டை வேட நடிப்பு .நாகேஷ் -வீரப்பன் கலக்கல் காமெடி .
ரசிகர்களுக்கு விருந்தான படம் .
கலங்கரை விளக்கம் படத்தில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் .
பொன்னெழில் பூத்தது புது வானில் ...........
மக்கள் திலகமும் சரோஜாதேவியும் பேசிக்கொண்டிருக்கும் போது உளி சத்தம் கேட்டு மக்கள் திலகம் வேறுபக்கம் திரும்பிய நேரத்தில் சரோஜாதேவி மலைக்குன்றின் உச்சிக்கு ஓடியபோது
அதை கண்டு அதிர்ச்சி அடைந்து அவர் சிவகாமி என்று உன்னத குரலில் அழைக்கும் நேரத்தில் சுசீலாவின் ஹம்மிங்க்ஸ் பிரமாதமாக இருக்கும் . பாடல் வரி துவங்கும் நேரத்தில் இருவர் உடையும் பல்லவ அரசராகவும் -சிவகாமியாகவும் மாறும் காட்சியில் உடை அலங்காரம் சூப்பர்.
பஞ்சு அருணாசலத்தின் பாடலின் வரிகளுக்கு மெல்லிசை மன்னரின் இசையும் , பாடகர் திலகம் - இசை அரசியின் குரலும் , பாடல் காட்சியில் நம் மக்கள் திலகம் - சரோஜாதேவி இருவரின் நடிப்பும் முக்கனி கலந்த அமுதமாகும் .
காலத்தால் அழியாத காவிய பாடல்களில் இந்த பாடலும் ஒன்று .
courtesy - malar malai
http://i59.tinypic.com/qs1i0g.jpg
[QUOTE=mr_karthik;1158846]என் விருப்பம் (5)
'பொன் அந்தி மாலைப்பொழுது' (இதய வீணை)
1972-ல் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் இரண்டு படங்களுக்கு சங்கர் கணேஷ் இசையமைத்திருந்தார் (மொத்தமும் இரண்டுதான்) அதில் நான் ஏன் பிறந்தேன் படத்தை அடுத்து இரண்டாவதாக வந்த படம் இதய வீணை. அதுவரை பத்திரிகையாளராக மட்டுமே இருந்த மணியனை திரைப்பட தயாரிப்பாளராக எம்.ஜி.ஆர். உருவாக்கிய படம் இதயவீணை. அதற்கு காரணம் உண்டு. 1970-ல் ஜப்பான் எக்ஸ்போ மற்றும் கிழக்காசிய நாடுகளில் எம்.ஜி.ஆர். உலகம் சுற்றும் வாலிபன் படம் உருவாக பெரிதும் துணையாயிருந்தவர் மணியன். படப்பிடிப்பு நடத்த அனுமதி கிடைக்காது என்று கருதப்பட்ட இடங்களில் கூட தனது சாமர்த்தியத்தையும் செல்வாக்கையும் உபயோகித்து படப்பிடிப்பு நடக்க காரணமாக இருந்த மணியனுக்கு ஏதாவது கைம்மாறு செய்யவேண்டும் என்று நினைத்தார் எம்.ஜி.ஆர். பணமாக அல்லது பொருளாக கொடுத்தால் அது நட்புக்கு கூலியாக மாறி விடக்கூடும். அன்பளிப்பாக எதையும் கொடுத்தால் அது அதிகபட்சம் மணியன் வீட்டு வரவேற்பறையை அலங்கரிக்கும். யாருக்கும் தெரிய வாய்ப்பில்லையென்பதை யோசித்த எம்.ஜி.ஆர். காலாகாலத்துக்கும் மக்கள் மத்தியில் நிலைத்திருக்கிறாற்போல ஏன் மணியனை ஒரு 'எம்.ஜி.ஆர்.படத்தயாரிப்பாளர்' ஆக்கக்கூடாது என்று எண்ணி அவரே மணியனிடம் விவரத்தை சொல்லி, மணியனோடு வித்வான் லட்சுமணனையும் கூட்டு தயாரிப்பாளராக்கி உதயம் ப்ரொடக்ஷன்ஸ் என்ற நிறுவனத்தை துவக்கி வைத்தார். அந்த நிறுவனம் தயாரித்த முதல் படம்தான் 'இதயவீணை' (மணியன் தயாரிப்பாளரான தகவல் உதவி நண்பர் முரளி சீனிவாஸ் அவர்கள்). .................................................. ....................
.................................................. .................................................. ...
.................................................. .................................................. ...
அருமையான அலசல். நன்றி திரு. கார்த்திக் அவர்களே ! இது போன்ற அற்புதமான பதிவுகள் தங்களிடமிருந்து மேலும் எதிர்பார்க்கிறோம்.
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
மக்கள் திலகம் அவர்கள், தி.மு க. பிரமுகர்ளிடையே உரையாற்றும் காட்சி
http://i62.tinypic.com/2llkgib.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்