-
நாங்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த மக்கள் திலகத்தின் வெற்றிக்காவியம் “படகோட்டி” பற்றிய 75 மற்றும் 1௦௦ நாட்கள் விளம்பரத்தை வெளியிட்டு, இந்த படம் ஓடியதற்கான சான்றுகள் எங்கே என கேட்டவர்களை வாயடைக்க செய்த, அருமை சகோதரர் திரு. வேலூர் ராமமூர்த்தி அவர்களுக்கு மிகவும் நன்றி !
http://i57.tinypic.com/2j4cakj.jpg
சகோதரர் திரு. வேலூர் ராமமூர்த்தி அவர்களே !
இந்த அரிய ஆதாரங்களை அளித்து மக்கள் திலகம் அன்பர்களை மகிழ்ச்சிக்கடலில் மூழ்கடித்த வேலூர் அன்பர்கள் திருவளர்கள் பாஸ்கரன், சீனிவாசன் அவர்களுக்கும் எங்கள் நன்றியை தெரிவிக்கவும்.
சகோதரர் திரு. வினோத் அவர்கள், இத்திரியின் வேகம் இன்னும் கூட வேண்டும் என்று அன்பர்கள் அனைவரையும் உற்சாகப்படுத்தி, அனுதினமும் அருமையான பதிவுகளை மேற்கொண்டு, எங்களுக்கு வழிகாட்டியாக செயல்படுவது பெருமைக்குரியது.
சகோதரர் கலைவேந்தன் அவர்களின் எழுத்தில் ஒரு தனி நடை ! படிக்க படிக்க பரவசமூட்டும் செய்திகளை தனக்கே உரிய பாணியில், நையாண்டியுடன் அதேசமயத்தில் நகைச்சுவை உணர்வுடன் பதிவிட்டு வருவது தொடரட்டும் !
திரு. லோகநாதன் அவர்கள், நமது பொன்மான்செம்மலை பற்றிய செய்திகள் எந்த புத்தகத்தில் பிரசுரமாயிருந்தாலும், அதை சுடச்சுட முதன்முதலில் பரிமாறக்கூடியவர். பாராட்டுக்கள்.
கொங்குமண்டலத்தில் நமது சாதனைகள் சிகரம் மக்கள் திலகம் எம். ஜி. ஆர். அவர்களது காவியங்கள் தொடர்ந்து திரையிடப்பட்டு வருவதையும், அது பற்றிய தகவல்களை, திருப்பூரிலிருந்து சிரமம் பார்க்காமல் கோவை சென்று ஆதாரத்துடன் பதிவிட்டு வரும் சகோதரர் ரவிச்சந்திரன் அவர்களின் பணி மிகவும் போற்றத்தக்கது.
300 பதிவுகளை மிக மிக குறுகிய காலத்தில் கடந்த திரு. முத்தையன் அம்மு அவர்களுக்கு பாராட்டுக்கள்.
திரு. யூகேஷ் பாபு அவர்கள் ஆரம்பித்து வைத்த இத்திரியின் வேகம், சகோதரர்கள் திரு. கலியபெருமாள், திரு. சைலேஷ் பாசு, திரு. ரூப் குமார் உட்பட மக்கள் திலகத்தின் அன்பர்கள் சிலரின் பதிவுகளுடன், அதிகரித்துக்கொண்டே போகிறது.
திருவாளர்கள் ஜெயசங்கர், சந்திரசேகரன், வெங்கட்ரமணி, சுஹாராம் உள்ளிட்ட சிலரின் பங்களிப்புகள் அதிக அளவில் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
-
மக்கள்திலகம் - அவர்களின் ரசிக பெருமக்களை மகிழ்விக்கும் அரிய ஆவணங்களை அரும்பாடு பட்டு வெளியிட்டதிருவாளர்கள் வேலூர் ராமமூர்த்தி, பாஸ்கரன், ஸ்ரீனிவாசன் -நல்ல உள்ளங்களுக்கு பதிவாளர்கள் சார்பாக நன்றி...அது சரி... இந்த " படகோட்டி "- காவியம் நூறு நாட்கள் கண்டால்தான் வெற்றியா?- இல்லையேல்???...மக்கள்திலகம் காவியங்கள் ஒவ்வொரு frame - பிலிம் ஏற்படுத்திய மாற்றங்கள் -சாதனைகள்- சரித்திரங்கள்- பொது மக்கள் மத்தியில் ஏற்படுத்திய தாக்கங்கள் -எண்ணிலடங்கா!!!!! அவற்றை சிந்திக்கவோ, உணரவோ இயலாத நண்பர்களுக்கு எதை சொல்லி விளங்க வைப்பது? என்பதை அவர்கள்தான் கூற வேண்டும்...
-
படகோட்டி திரைக்காவியத்தின் நூறு நாள் விளம்பரத்தை வெளியிட்ட வேலூர் திரு. ராமமூர்த்தி அவர்களுக்கு நன்றி. தங்கள் தங்கப்புதையலின் ஒரு அங்கம் இதுவென்று கருதுகிறேன். இன்னும் எதிர்பார்க்கும் தங்களின் நண்பன்.
http://i62.tinypic.com/33bhk53.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
-
"படகோட்டி"- கலர் காவியம் " எங்க வீட்டு பிள்ளை "-காவியம் தந்த மற்றுமொரு அதிரடி பிரம்மாண்ட வெற்றி ஓட்டத்தால் சற்று பாதிக்கப்பட்டது ...இல்லையாயின் 25- வாரங்கள் வெள்ளி விழா கண்டிருக்க வேண்டிய அற்புத கருத்தோவியம்... ஆனாலும் அதனால் பாதகம் ஏதும் சேரவில்லை எனவும் கூற வேண்டும்...ஏனெனில் a,b,c என அனைத்து பகுதிகளிலும், -பட்டி தொட்டிகளிலும் வசூலில் தூள் கிளப்பிய -புரட்சி உண்டாக்கிய இன்னொரு காவியம் ...
-
http://i59.tinypic.com/wgrekh.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
-
http://i57.tinypic.com/14uuxzm.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
-
http://i60.tinypic.com/2udv0jo.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
-
http://i60.tinypic.com/ici6op.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
-
"படகோட்டி"- வண்ண காவியம் மறு வெளியீடுகளிலும் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா - மாநிலங்களில் சக்கை போடு போட்ட மக்கள்திலகம் காவியங்களில் ஒன்று...திருச்சி- தஞ்சை- நாகை-புதுகை மாவட்டங்களில் இடைவிடாமல் புதிய பிரிண்டுகள் எடுக்கப்பட்ட வண்ணம் இருந்து கொண்டிருந்ததை நினைவு படுத்த எண்ணுகிறேன்... அதுவும் ஒரே நேரத்தில் 3, 5, 7 பிரிண்டுகள் திரையிட பட்டது...
-
http://i62.tinypic.com/zmefsi.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்