Your second song ("oru raagam paadalOdu...") is in மோஹனம்.
Printable View
Your second song ("oru raagam paadalOdu...") is in மோஹனம்.
சின்ன கண்ணன் சார்
என்னை நினைவு படுத்தியதற்கு நன்றி .மனதிற்கு புத்துணர்ச்சி தரும் சில பாடல்களை தருகிறேன் .
உங்களுக்கும் பிடிக்கும் என்று எண்ணுகிறேன் .
http://youtu.be/rhCF3trLAQE
http://youtu.be/S2RLsp1D58Q
http://youtu.be/Xpg-g5wxrS8
பி.சுசீலா முதன்முதலாகத் தமிழில் பாடிய படம் "பெற்ற தாய்'. அதில் அவர் பாடிய பாடல் "ஏன் அழைத்தாய் என்னை ஏன் அழைத்தாய்' என்பதாகும். அப்படத்திற்கு இசையமைத்தவர் பெண்டியாலா.
டி.எம்.சௌந்தரராஜன் எம்.ஜி.ஆருக்காகக் குரல் கொடுத்த முதல்படம் : "மலைக்கள்ளன்'. பாடிய பாடல்: எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே'. படத்திற்கு இசையமைத்தவர் எஸ்.எம்.சுப்பையா நாயுடு.
பி.பி. சீனிவாஸ் முதன்முதலாகப் பாடிய தமிழ்ப் பாடல் "சிந்தனை என் செல்வமே' என்பதாகும். இடம் பெற்ற படம்:
"ஜாதகம்'
பி.லீலா பாடிய முதல்பாடல் "ஜெகம் புகழும் புண்ணிய கதை'. படம் :
"லவகுசா'.
"பொண்ணு ஊருக்குப் புதுசு' படத்தின் மூலம் முதன் முதலாகத் தமிழில் பாடினார் எஸ்.பி. சைலஜா. அவர் பாடிய பாடல்: "சோலைக் குயிலே' படத்தின் இசை யமைப்பாளர்: இளையராஜா.
TO DAY - SEERGAZHI GOVINDARAJAN'S BIRTH DAY .
http://youtu.be/5CBeiwSD-jI
சி.க. சார்
என்னை நினைவூட்டிக் கொண்டதற்கு மிக்க நன்றி. பல்வேறு அலுவல்கள் காரணமாக இத்திரியில் சில நாட்களாக பங்கு கொள்ள முடியவில்லை. நடிகர் திலகம் திரியில் மட்டும் சில பதிவுகளைப் போட்டு விட்டு வேறு வேலைகளைப் பார்க்கப் போய் விட்டேன். விரைவில் தொடர்ந்து பங்கு கொள்வேன் என நம்புகிறேன்.
வினோத் சார்
பி.லீலா 1948ம் ஆண்டிலேயே பின்னணி பாட வந்து விட்டார். கங்கணம் படம் தான் அவர் பாடி வெளிவந்த முதல் படமாகும்.
மற்றபடி முதல் பாடல் பட்டியலுக்குப் பாராட்டுக்கள். இதையும் நாம் இங்கே ஒரு தொகுப்பாக கொண்டு வரலாம்.
சி.க.,
இப்படியெல்லாம் கவிதையெழுதி கூப்பிட்டால் எவரும் அடிக்கடி காணாமல் போகலாம் - நிறைய கவிதைகள் வருமென்று.
நான் முன்பே சொன்னேன் 'என்னை எழுத சொல்லாதீர்கள்' என்று. இப்போது பாருங்கள் என்ன நடந்ததென்று. கல்நாயக் சொன்னால் கேட்டால்தானே!!!
நான் எழுதியதால் நான் கூட காணாமல் போய்விட்டேன் - அதை நினைத்தால்...வேறு வழியேயில்லை....
கவிதையெழுதும் கண்ணனார்
காரியத்தில் கண்ணாயினாரோ? நாம்
அழைத்த எவரும் தொடரவில்லை; நம்மை
அழைப்பவரெவரென அறிய மறைந்து பார்க்கிறாரோ?
கல்நாயக் கவிதை வரைய
அல்லல் அதிகரித்து
நில்லென்று சொல்லவேணும்
வில்லெடுத்த ராமனாய் நல்ல
சொல்லெடுத்து வருவாரோ சின்னக் கண்ணனார்!!!
நடக்கும் கூத்துகளை கண்டிருந்தும்
அடக்கும் வழியறியாமல் அசந்தாரோ - பட
படக்கும் இதயத்துடன் நெய்வேலி உறைவோர்; ஏனையோர்
கிடக்கும் வேலைதனை முடக்காமல் முடித்திடுவீர் - பின்னர்
இடக்கும் மடக்குமின்றி மதுர கானம் படைப்போம்