Wish you Happy Pongal to all NT fans.
Printable View
Wish you Happy Pongal to all NT fans.
From Mr. Sudhangan face book,
செல்லுலாய்ட் சோழன் –108
ஒரு பாண்டிய மன்னன் ‘ செண்பக மலர்’களால் ஆன மாலையை இறைவனுக்கு சூட்டி வந்தான். அதனால் அந்த மன்னனை ‘செண்பக பாண்டியன்’ என்றே மக்கள் அழைத்தார்கள்.
ஒரு இளவேனிற்கால சமயம்!
வேனிற்கால வெப்பம் தாங்க முடியாமல் இருந்தது!
மாமரங்களில் செந்தளிர்கள் துளிர்த்து சிவந்து இருந்தன.
முள்செருக்கு,செருந்தி, கடம்பு முதலான மரங்கள் பூத்துக்குலுங்கின.
குங்கும மலர்கள் மகர்ந்தத்தை சிந்தி நின்றன.
அவ்வப்போது தவழ்ந்து வரும் தென்றல் வெப்பத்தைத் தணித்ததாம்!
அப்போது அந்த செண்பக பாண்டியன் தன் தேவியோடு செண்பக வனத்திற்கு போய் தங்கி இருந்தான்.
இந்த காட்சியை திருவிளையாடல் படத்தில் வைத்து போது, திருவிளையாடற் புராணம் நன்கறிந்தவர் கவியரசு கண்ணதாசன்,
அவ்வப்போது அங்கே வரும் தென்றல் விஷயம் அவருக்குத் தெரியும்!
அதனால் செண்பக பாண்டியனும், அவன் தேவியும் ஒன்றாக இருக்கும் போது பாடப்படும் பாடலை
‘பொதிகை மலை உச்சியிலே
புறப்படும் தென்றல்!
ஆடை பூட்டி வைத்த மேனியிலும்
தவழ்ந்திடும் தென்றல்! என்கிற பல்லவியோடு பாடலை எழுதினார்.
அப்படியே வீசிய தென்றலிலிருந்து செண்பக பாண்டியனுக்கு ஒரு புது வித மணம் வீசியது!
இந்த புதுவிதமான நறுமணம் இந்த வனத்திலுள்ள மணம் அல்ல!
காற்றிற்கு இயற்கையாக எந்த வித மணமும் கிடையாது! பின் எங்கிருந்து இந்த நறுமணம் வீசுகிறது என்று வியந்தான்!
அந்த சமயத்தில் தன்னருகே இருந்த தன் தேவியைப் பார்த்தான்!
அந்த நறுமணம் தன் தேவியின் கூந்தலிலிருந்து வருவதாக அவன் உணர்ந்தான்!
பெண்களின் கூந்தலுக்கு நறுமணம் இருப்பது இயற்கையாகவா அல்லது செயற்கையாகவா ?’ என்கிற சந்தேகம் அவனுக்குள் எழுந்தது! அடுத்த நாள் அரசவை கூடியது! ‘சபையோரே! எனக்கு ஒரு சந்தேகம் வந்திருக்கிறது!
பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் உண்டா இல்லையா என்பதுதான் அந்த சந்தேகம்!
இதை யாராவது அறிந்து அதைக் களைய ஒரு பாடல் எழுதுவார்களேயின் அவருக்கு ஆயிரம் பொற்கிழி பரிசாக கிடைக்கும்’ என்று அறிவித்தான்! அந்த ஊரில் ஆதி சைவன் மரபி பிறந்தவனும், பெற்றோரை இழந்தவனும், பிரம்மசாரியான தருமி என்கிற ஏழைப் புலவன் அந்த ஊரில் இருந்தான். அவன் மன்னனின் அறிவிப்பை கேள்வியுற்றான்!
நேராக சோமசுந்தரர் ஆலயத்திற்கு போனான்!
கடவுளிடம் வேண்டினான்! இதுதான் உண்மையான திருவிளையாடற் புராண சம்பவம்!
அந்த இடத்தில்தான் தன் கற்பனையை புகுத்தினார் இயக்குனரும், எழுத்தாளருமான ஏ.பி. நாகராஜன்!
அவருடைய முதல் வெற்றி அந்த தருமி கதாபாத்திரத்திற்கு நாகேஷைத் தேர்ந்தெடுத்தது!
அதன் விளைவு இந்த ‘தருமி’ கதாபாத்திரம் தமிழ் சினிமா ரசிகர்கள் நடுவே பெரும் பாதிப்பை இன்று வரையில் ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது!
அந்த கதாபாத்திரம் மட்டுமா சிறப்பு!
அந்த பரிசுத் தொகைக்கான தண்டோரவை கேட்டதும் தருமியான நாகேஷ் நேராக கோவிலுக்கு ஓடுவார்!
நேராக அவரை சிவனிடம் கொண்டு போய் நிறுத்தியிருக்கலாம்! ஆனால் அந்த சோமசுந்தேரேஸ்வரரின் மதுரை ஆலயத்து வனப்பை ரசிகர்களுக்குக் காட்ட தருமி அந்த கோவிலின் நீண்ட பிரகாரத்தில் ஓடுவதாக காட்டியிருப்பார்!
அந்த பிரகாரத்தின் பாங்கு மக்கள் மனதில் பதியவேண்டுமென்பதற்காக அந்த பிரகாரத்திலிருந்து ஒரு விநாயகனை தருமி நாகேஷ் நின்று வணங்குவது மாதிரி காட்டியிருப்பார்!
தருமி அப்படியே ஒவ்வொரு சிற்பங்களையெல்லாம் தாண்டி ஒரு கோயில் கூடத்திற்கு வந்து
‘அப்பா! சொக்கா! அரசன் கொடுக்கிற ஆயிரம் பொன் பரிசும் எனக்கே கிடைக்கிற மாதிரி செய்ய மாட்டியா? உன் காதில விழாதே! மீனாட்சி என்பான் தருமி!
அருகில் போகும் ஒரு பெண் ‘என்னய்யா கூப்பிட்டய்யா ?’ என்பாள்
‘உன்னை யாரும்மா கூப்பிட்டா! போ!’
‘பாத்தியா! பாத்தியா! மீனாட்சி நான் கூப்பிட்டா மத்தவங்க எல்லாரும் திரும்பி பாக்கறாங்க! நீ திரும்ப மாட்டேங்கிறீயே! உணவுக்கு பஞ்சணை மேல் நீ இருக்கும் வேளையிலே! நீ எங்கே தனியாக இருந்தே! நான்முத்து பஞ்சணையில் நாதனுடன் நீ இருக்கும் வேளையிலே! உன் சொல்முத்து சொற்களாலே எந்தன் குறை தீர்க்கச் சொன்னால், உன் வாய் முத்து சிந்திடு நான் வணங்கும் அம்பிகையே! ஐயோ! ஐயோ! ஒரு முத்தா! இரு முத்தா! ஆயிரம் பொன்னாச்சே! இந்த நேரம் பாத்து நமக்கு பாட்டு எழுத வரலே வரலே! என் சந்தேகத்தையே தீக்கறதுக்கு வழி தெரியலை! நான் எப்படி அடுத்தவங்க சந்தேகத்தை தீர்த்து வைப்பேன்! எனக்கில்லை! எனக்கில்லை! எவனோ அடிச்சுக்கிட்டு போகப் போறான்!
தருமி நாகேஷ் புலம்பி தவிப்பார்!
அப்போது சிவனான சிவாஜி வருவார் !
‘ஐயா ‘
‘போய்யா’
‘புலவரே’
‘யார்ய்யா அது ‘
‘அழைத்தது நான் தான்’
‘ஏன் அழைச்சீரு யாருங்க நீங்க ?’
‘சொற்சுவை பொருட்சுவை அனைத்தும் கூட்டி சுந்தர தமிழினிலே பாட்டிசைத்து செந்தமிழ் கவிபாடும் புலவன் நான்!
‘நம்ம ஜாதியோ! தண்டோரா போட்டதை நீயும் கேட்டுட்டியா ? என் வயித்தில அடிக்கிறதுக்கு வந்திருக்கீங்க அப்போ!
இப்போது சிவன் சிவாஜியை திரும்பி பார்த்து அவரது உடைகளை தொட்டு பார்த்து அப்படியே நின்றபடி சாய்வார்!
மீண்டும் எழுந்து நின்று பிரமிப்போடு விழிப்பார் தருமி! அவர் வாயிலிருந்து புகை கிளம்பும்!
‘நீங்க வசதியுள்ள புலவர் மாதிரி தெரியுது!
‘அப்போது நீர் என்ன /’
‘வுட்டேனே அனல் மூச்சு! அதிலிருந்தே தெரிஞ்சுக்க வேண்டாமா? வேகுதுங்க உள்ள ‘
‘அதனால் தான் ஆண்டவனிடம் முறையிட்டு புலம்பிக்கொண்டிருந்தீரோ!
‘ஆமாம்! ஆமாம்! மனுஷங்கிட்ட சொல்லி ஒரு புண்ணியமுமில்லே! ஆண்டவன் கிட்ட சொல்லித்தான் அழுது புலம்பறதுன்னு ஒரு முடிவுக்கு வந்துட்டேன்!
‘நீர் புலம்பியது எம் காதில் விழுந்தது!
‘சரிதான் ஒளிஞ்சிருந்து ஒட்டுக்கேட்டுக்கிட்டு இருந்திருப்பீங்க!
‘ஒட்டுக்கேட்கும் பழக்கம் எனக்கு இல்லையப்பா! நான் உன் எதிரிலேயே இருந்தேன்’
‘ஒஹோ! நான் கண்ணை மூடிக்கிட்டு நாம் சாமி கும்பிடும்போது நீங்க எதிர வந்து நின்னுரூப்பிங்க! நான் கவனிச்சிருக்கமாட்டேன்’
‘உண்மை! கண்மூடித்தனமாக இருப்பவர்களுக்கு நான் தென்படுவதில்லை’
‘என்னங்க நீங்க கடவுள் மாதிரி பேசறீங்க’
‘அதுவும் உண்மை! நான் முற்றும் கடந்தவன்’
‘கொஞ்சம்வுட்டா நான்தாண்டா கடவுள் விழுந்து கும்பிடுங்கன்னு சொல்வீங்க போலிருக்கே!
‘அதுவும் உண்மை! கடவுள் உன்னிலும் இருக்கிறார்! என்னிலும் இருக்கிறார்! பார்க்குமிடமெங்குமொரு நீக்கமற நிறைந்திருக்கும் பரிபூரணனந்தமே ‘ என்று பாடியவனும் உன்னைப் போன்ற ஒரு புலவன் தானே’
அடுத்த சுவாரஸ்யம் துவங்கும்!
பொங்கும் மங்களம் தங்குக எங்கும் !
அனைத்துத் திரி நண்பர்களுக்கும் நடிகர்திலகம் திரி சார்ந்த......
கண்கண்ட வாழ வைக்கும் தெய்வம் சூரியனாருக்கு நன்றி நவின்று தமிழர் பெருமை பறைசாற்றும் உழவின் உழவர்களின் மாண்பு நெஞ்சில் நிறைந்திட அறுவடைத் திருநாளாகவும் அடிப்படை விவசாய ஆதாரங்களான மண் மற்றும் நீர்வளம் பேணிக் காத்திடவும் உழவுத்தொழிலில் உணவு அளிப்பதில் மனித இனத்துக்கு உறுதுணை நிற்கும் மாடுகள் மற்றும் ஏனைய சுற்றுச் சூழல் சார்ந்த விலங்கினங்களுக்கும் அனைத்து ஜீவராசிகளுக்கும் நன்றி நவில்வதில் பொங்கலோ பொங்கல் என்று உரக்கக் கூவி நன்றி பகர்வோம்!!
https://www.youtube.com/watch?v=yKrbVSA7VwA
அனைத்து மய்ய ம் உறவுகளுக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்
http://i65.tinypic.com/2vkg2kx.jpg
ஆவணப்பதிவுகளை அள்ளிவீசும் செந்தில்வேல் சார்
2500 பதிவுகள் 25000 ஆக உயர வாழ்த்துக்கள்
15.01.2016 உழவர் திருநாளாம் பொங்கல் தினத்தன்று பிறந்தநாள் காணும் அன்னை இல்லத்தின் வம்சவிளக்கு, மக்கள்தலைவர் சிவாஜி அவர்களின் புகழ்காக்க வந்த இளையதிலகத்தின் குலவிளக்கு, தமிழகத் திரையுலகில் தனிப்பாதை வகுத்து தொடர்ந்து வெற்றிகளை குவித்துக் கொண்டிருக்கும் வின் ஸ்டார் விக்ரம்பிரபு நீடூழி வாழ உலகெங்கும் வாழும் கோடிக்கணக்கான சிவாஜி ரசிகர்கள் சார்பிலும், சிவாஜிகணேசன்.இன் சார்பிலும் வாழ்த்துகிறோம்.
http://www.sivajiganesan.in/Images/150116_1.jpg
சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.
http://www.sivajiganesan.in/Images/150116_3.jpg
சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.