டிசெம்பரில் வைத்துக் கொள்வோம்.
Printable View
thanks vasu sir
http://3.bp.blogspot.com/-HtOtG6wt7G...+MP3+Songs.jpg
படம் : அகல் விளக்கு
பாடியவர்கள் : S.P.ஷைலஜா & கே.ஜே.ஜேசுதாஸ்
இசை : இளையராஜா
வரிகள் : கங்கைஅமரன்
ஏதோ நினைவுகள் கனவுகள் மனதிலே மலருதே
காவேரி ஊற்றாகவே காற்றோடு காற்றாகவே
தினம் காண்பது தான் ஏனோ....
ஏதோ நினைவுகள்...
மார்பினில் நானும் மாறாமல் சேரும்
காலம் தான் வேண்டும்..ம..ம்ம்ம்
வான்வெளி எங்கும் என் காதல் கீதம்
பாடும் நாள் வேண்டும்..ம..ம்ம்ம்
தேவைகள் எல்லாம் தீராத நேரம்
தேவன் நீ வேண்டும்..ம்ம் தேடும் நாள் வேண்டும்..ம்ம்
ஏதோ நினைவுகள்..
நாடிய சொந்தம் நாம் காணும் பந்தம்
இன்பம் பேரின்பம்..ம..ம்ம்
நாளொரு வண்ணம் நாம் காணும் எண்ணம்
ஆஹா ஆனந்தம்..ம..ம்ம்
காற்றினில் செல்லும் என் காதல் எண்ணம்
எங்கும் எந்நாளும்..ம்ம் ஏக்கம் உள்ளாடும்..ம்ம்
ஏதோ நினைவுகள்..
http://www.youtube.com/watch?v=rD2U89lCOeo
அழகான கானம். ஷைலஜாவின் கலக்கல்களில் ஒன்று, ஜென்ஸியை விடவும் 'கிறீச்' கம்மிதான். நன்றி கிருஷ்ணரே!
வினோத் சார்
அபூர்வ ஆவணங்களைத் தரவேற்றி நம் நினைவுகளை அந்நாளைக்கே அழைத்துச் செல்கிறீர்கள்.
தங்கள் பணியை மிகவும் பாராட்டுகிறேன். தொடருங்கள்.
அன்புடன்
வாசு சார்
நடிகர் திலகத்துடனான சந்திப்பை விட வாழ்க்கையில் நமக்கு சிறந்த அனுபவம் வேறேது வேண்டும். ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறோம்.
நாகூர் ஹனீஃபாவின் பாடல்கள் எல்லாமே எல்லோருக்குமே பிடிக்கும். சில பாடல்கள் 40, 50 ஆண்டுகளாக குழந்தைப் பருவமுதலே நம் நினைவில் தங்கி விடும்.
ஹனீஃபாவின் பாடல்களில் எனக்கு இதுவும் மிகவும் பிடித்த பாடல்
அல்லாவை நாம் தொழுதால்... இதை கிருஷ்ணா கூட சொல்லியிருக்கிறார். கேட்போமே..
http://www.youtube.com/watch?v=rVHxLnz03yQ
இந்த ஆல்பத்திற்கு இசை மெல்லிசை மன்னர் டி.கே.ஆர் என நினைவு. கோபால் சார் உறுதி செய்ய வேண்டும்.
வாசு சார்
நாம் கடவுளின் தீர்ப்பு 1981 திரைப்படம் பற்றி அலசி விட்டோமோ
http://www.photofast.ca/files/products/1654.jpg
கோவர்தனம் இசையில்
விஜய் பாபு,ஸ்ரீகாந்த்,sangeetha நடித்து வந்தது
வாணி பாடகர் திலகம் குரல்களில்
'அன்பு தலைவன் காலடி சுவட்டில்
ஒன்று கலந்தால் என்ன தவறு
இன்ப முகத்தை நெஞ்சில் நிறுத்தி
எண்ணி மகிழ்ந்தால் என்ன தவறு '
வாணியின் குரலில்
'இன்று வரும் காற்றினிலே என்ன விஷேசம்
அது ஏந்தி வரும் வாசனையிலே என்ன விஷேசம்
இன்று வரும் காற்றினிலே என்ன விஷேசம்
அது ஏந்தி வரும் வாசனையிலே என்ன விஷேசம்
இளமை புதுமை தனிமை இனிமை'
http://www.inbaminge.com/t/k/Kadavulin%20Theerpu/
உள்ள(த்)தை அள்ளித்தா
நாகரீகம்... இதை வரையறுப்பது எப்படி... ஒவ்வொரு தலைமுறைக்கும் அதனுடைய அளவுகோல் வேறு படுகிறது. கருத்து வேறுபாடு உருவாகவும் சில சமயம் இல்லறத்திலேயே விரிசல் ஏற்படுவதற்கும் கூட இந்த நாகரீகம் ஒரு வகையில் காரணமாயிருக்கிறது. இதைப் பற்றி நடிகர் திலகத்தின் கருப்பு வெள்ளைக் காவியம் பட்டிக்காடா பட்டணமா மிகச் சிறப்பாக எடுத்துரைத்துள்ளது.
இந்த நாகரீகத்தின் அடிப்படையே ஜூபிடர் ஆர்ட் மூவீஸின் விஜயா படமாகும். நவநாகரீகத்தில் திளைக்கும் கதாநாயகன் ஜெய், லட்சுமியை மணக்கிறார். அவர்களுக்கு பிறக்கும் பெண் குழந்தை வளர்ந்து பெரியவளாகி - இதுவும் லட்சுமியே - நாகரீகத்தில் திளைக்கிறாள். மனப் போராட்டத்தில் தவிக்கிறார் ஜெய்.
படத்தின் தொடக்கத்தில் ஜெய்யின் பிறந்த நாளன்று தாத்தா மேஜர் சுந்தரராஜனுடன் நாகரீகத்தைப் பற்றிப் பாடலில் விவாதிக்கிறார் ஜெய்.
இதே போல் படத்தின் முடிவுக்கு முன்னர் வரும் ஒரு பாடல் காட்சியில் மகளின் நாகரீகப் போக்கை எண்ணி மனம் வருந்தி தாயார் லட்சுமி இறைவனை பிரார்த்திக்கிறார். இதே சமயம் மகள் லட்சுமியோ நாகரீகத்தின் மோகத்தில் பாடுகிறார்.
முதல் சூழ்நிலையில் ஜெய்க்காகப் பாடுபவர் எஸ்.பி.பாலா, தாத்தா மேஜருக்கு குரல் தந்தவர் கோவை சௌந்தர்ராஜன்.
இரண்டாம் சூழ்நிலையில் தாயார் லட்சுமிக்கு இசையரசியும், மகள் லட்சுமிக்கு மாதுரியும் குரல் தந்திருப்பார்கள்.
மிக மிக அபூர்வமாக இணையத்தில் முதன் முதலா எனவும் சொல்லலாம் என நினைக்கிறேன்.. இந்த இரு பாடல்களும் உங்களுக்காக..
நேற்று வேறு இன்று வேறு
http://www.mediafire.com/listen/53on...VeruVijaya.mp3
மலையரசி சக்தி மீனாட்சி
http://www.mediafire.com/listen/c5wb...rasiVijaya.mp3
வாசு சார்
ஒரு சின்ன suggestion
நிறைய பாடல்கள் படங்கள் நிகழ்சிகள் பதிவிடபடுகின்றன
ஒரு index create செய்யலாமா
repeat ஆகாமல் இருப்பதற்கு
கிருஷ்ணாஜீ
அன்புத் தலைவன் காலடிச் சுவட்டில் மிகவும் அருமையான பாடல். என்றைக்கும் மனதில் இனிமையூட்டும் பாடல்