http://oi67.tinypic.com/2dmh8vd.jpg
Printable View
அந்த இளம் ஜோடி எதிர்பாராத விதமாக மாலை மாற்றிக்கொண்டு கிட்டத்தட்ட கணவன்-மனைவியாகி விட்ட நிலையில் ,தனியறையில்.
பக்கத்து இலையில் பாயசம் ஏராளம் என்பது போல மற்றுமோர் இளம்ஜோடியின் கொஞ்சல் மறு அறையில்.
அந்த இளம் விமானி இவற்றில் தூண்ட பட்டு தன் காதலியை புதிதாக பார்க்கிறான்.அந்த பார்வை என்ன சொல்கிறது? அவள் அழகை ரசிக்கிறதா? தனக்கு கிடைத்த புதிய உரிமையில் அழகை விழுங்கி களிக்கிறதா? மெல்லிய அழைப்பு விடுகிறதா? தன் புணர்ச்சி வேட்கையை பறை சாற்றுகிறதா?அந்த காதலியோ ,இணங்கும் ஆசையிலா, புதிய உணர்வின் ,சூழ்நிலையின் பயம் கலந்த நாணமா,விழைவுக்கு பதில் விழைவா,அழைப்பிற்கு தூது விடும் கண்களா?
எழும் நாயகன் தன்னுடைய ஆண்மையின் எழுச்சியையும் குறிப்பால் உணர்த்தி கைகளில் முத்தமிட ,ஏற்றாலும் சிறிதே விலகும் பயம் கலந்த நாணம்.எத்தனை அழகு கொட்டி கிடக்குது,எப்படி மனதை தட்டி பறிக்குது ,அம்மம்மா உடலெங்கும் சிலிர்க்குது ஆனாலும் அச்சம்தான் தடுக்குது என்ற வரிகள் மௌனமான காதலர்களின் உடன் மொழியில் பாவத்தில் ,கண்களின் காவிய மொழியில் ,அனுசரணையான இணைவு நடிப்பில் அப்படியே நமக்கு இந்த காட்சியின் மிச்சத்தை கோடிகாட்டும்.
முதல் அனுபவம் பெற்றவர்களுக்கு புரியும். காதலர்கள் முதலில்
தொடு உணர்வு,தடவல், சிறிதே முன்னேறி முத்த பரிமாற்றம், இவற்றில் தயக்கம்,தடுமாற்றம்,சிறிதே awkwardness கலந்த அவசரம் பிறகு இணையை தூண்டும் காம இச்சை வெளியிடும் அழுத்தமான பிடிப்புகள்,ஆவேசம், பின் காம கட்டிப்பிடித்தல் ,பின்புறமாக கட்டி முத்தமிடும் முயல்வு ,காதலி காதலன் கையை விரும்பும் இடத்திற்கு நகர்த்தல்,கடைசியில் உணர்ச்சி வயப்பட்டு புணர்ச்சிக்கு இயைதல் என்றுதான் போகும். அதை அப்படியே இந்த காதலர்கள் ,பல காதல்களுக்கு முன்னோடியான பாலபாடமாக்குவார்கள்.
அவனோ ,அவளை கால் முதல் தலைவரை தொட்டு தடவி, அவளின் நாணி விலகும் முயற்சியால் சிறிதே குறி தவறுவான்.தினம் வந்து கொஞ்சும் மலர்கொண்ட மஞ்சம் இதழ் கேட்கும் நெஞ்சம் இருந்தாலும் அஞ்சும் ,என்ற மஞ்சத்தில் பின்புற அணைப்பில் இதழை கேட்பான். இருவருக்குமே தயக்கம். கைகளை பிணைக்கும் போதும் இசைவின்மை தெரியும் சிறிதே முறுக்குவது போல.
பிறகு முகத்தை கைகளில் ஏந்தி முத்த பரிமாறல் .coat stand அருகில் எதிர்பார்ப்போடு நிற்கும் காதலியை பதமாக முத்தமிடும் முயல்வு. சிறிதே துணிவுடன் அவள் இடையின் முற்புறத்தில் விழைவின் இறுக்கத்தை விரலில் தேங்கிய தேய்த்தணைப்பு,திரைக்கு ஓடும் காதலியை ,தன்னுடைய வல்லணைப்பால் இடையின் பின்புறத்தின் கீழே இறுக்கி தன்னுடன் பிணக்கும் இறுக்கம்.தயங்கி விலகும் காதலியின் மார்பை தூண்டும் முயல்வு. பிறகு இறுக்கி அணைத்து ஆவேச முத்தம்.உதட்டு கனிக்குள் இருக்கும் சிவப்பு ,விழிக்குள் நடக்கும் விருந்தை படைக்கும். செந்தாழம்பூ மலரவும் ,சிந்தாமல் தேன் பருகவும் ஒரே சுகம் தினம் தினம்.
மஞ்சத்தில் சரியும் அவளோ ,இனி என்னால் விலக முடியாது என்று சரணாகதி பார்வை பார்க்க ,அவனோ படுக்கையில் சரியும் அவளை ஆவேச பின்புற அணைப்பில் இளக்குவான்.தலையணையை மார்புக்கு காவலாகவோ ,அல்லது இதமாகவோ அணைக்கும் அவளை, நானிருக்க இது ஏன் என்று தலையணை பிரித்து, நாயகியே அவன் கைகளை மார்புக்கு அணையாக கொண்டு செல்லும் நிலைக்கு சென்று ,இறுதி உணர்ச்சி வச பட்ட ஆவேச அணைப்பில் நெருப்பு பற்றி கொழுந்து விட்டு எரிந்து ,காதலர்களின் புணர்ச்சி என்ற காம காவியம் இறுதி காணும்.அணைத்து சுவைக்கும் நினைப்பில் துடிக்கும் ......
ஆனந்தோ காமம் கரை கண்டவன். அவன் நினைத்தால் நொடியில் அரங்கேற்றி விடுவான் ஆசையை,ஆனாலும் அதற்கு அணை போட்டு விழைவை சொல்வான். இந்த அசோக் அனுபவமற்றவன். சந்தர்ப்ப சூழ்நிலையால் காதலியுடன் உணர்ச்சி வச பட்டு காம சோதனையின் துடிப்பான பயத்துடன் அணையை உடைத்து காமம் வெல்வான்.
இது இரண்டிற்கும் இடையில் உள்ள வேறுபாட்டை சிவாஜியும் ,வாணிஸ்ரீயும் நடித்து காட்டும் விந்தையை ரசியுங்கள். மெல்லிசை மன்னர் காட்சிக்குரிய தயக்கம், தூண்டல் ,அவசரம், ஆவேசம் இவற்றை தனது பாடல் மற்றும் பின்னணியில் தரும் அதிசயம், எஸ்.பீ.பீயின் இச்சை நிறைந்த இளம் குரல் என்று என் மதிப்பில் ரூப்பு தெரா வை விட இந்த சூழ்நிலைக்கு மேலான பாடல் எத்தனை அழகே.
https://www.youtube.com/watch?v=q21g7kBJLnA
அந்த அடுத்த அறை ஜோடியின் சம்பாஷணையில் ஒலிக்கும் ஆண் குரலும் எஸ்.பி.பாலாவினுடையதைப் போல் தான் தோன்றுகிறது.Quote:
அந்த இளம் ஜோடி எதிர்பாராத விதமாக மாலை மாற்றிக்கொண்டு கிட்டத்தட்ட கணவன்-மனைவியாகி விட்ட நிலையில் ,தனியறையில்.
பக்கத்து இலையில் பாயசம் ஏராளம் என்பது போல மற்றுமோர் இளம்ஜோடியின் கொஞ்சல் மறு அறையில்.
ஒரு ஒன்றரை நிமிட காட்சி மாணவர்களின்,இளைஞர்களின் காதல் வேத வழிகாட்டியாகுமா? காட்சியமைப்பு,இசை, காமெரா,இயக்கம் ,உடைகளின் தேர்வு,,நடிப்பு,காட்சிகளின் நடிகர்களின் அழகு,இளமை வெவ்வேறாக தெரியாமல் ஒன்றிணைந்து ஒரு படத்துக்கே இளமை முகவரி தரமுடியுமா?1971 தமிழ் புத்தாண்டில் இந்த அதிசயம் நிகழ்ந்தது.
அருமையான காட்சி.சிவாஜி,ஜெயலலிதா, சி.வீ.ராஜேந்திரன்,தம்பு,எம்.எஸ்.விஸ்வநாதன்,பீ.ராமக ிருஷ்ணன் இவர்களுக்கு தலைவணக்கம்.
அவனோ எஸ்டேட் உள்ளே முடங்கி கிடக்கும் கிணற்று தவளையாக அழகான இளைஞன். சினிமா சுவொரொட்டி கூட கண்டறியாதவன். பெயரிலே மட்டுமே மது. அவள் விரக்தியுற்ற சினிமா நடிகை. சந்தர்ப்பவசத்தால் உண்மை வெளியிட முடியாமல் மதுவின் வாழ்க்கையுடன் பிணைக்க படுகிறான். உண்மை,மது காதலில் வீழ்கிறான் சுந்தயுடன்(சுமதி என்ற).
ஒரு விழா . திடீரென்று ஆட வைக்க படும் மதுவும் சுமதியும் இரவில் தனியாக வீடு திரும்புகிறார்கள் எஸ்டேட் காடுகளினோடே.மது கிட்ட தட்ட வயலட் மற்றும் இலை நீல பூப்போட்ட பட்டிக் short kurthi யம் ,இளநீல முழு கால்சட்டையும்.பொருத்தமான scarf .சுமதியோ ,மதுவுக்கு இசைந்த வண்ணத்தில் பிங்க் வர்ண புடவை மட்டும் ஜாக்கெட் பெண்மை வர்ணம். மது கையில் இருளை விரட்ட டார்ச். சுமதியின் கையிலோ விழாவின் மிச்சமாக நீல,மஞ்சள் ,இளம் சிவப்பு
பலூன்கள்.இரவில் நடக்கும் போது நள்ளிரவின் காட்டின் மித ஓசை இசையில் மிதக்கும்.
மது , தன்னை கூட்டத்தில் திடீரென தள்ளி ஆட சொல்லி தனக்கு வ்ராததையும்(ஆட்ட காட்சியில் இதை நடிப்பிலும் உணர்த்துவார் மேதை),சுமதி சமாளித்ததையும் சொல்லி, தன்னை விருந்தினர் போட்டோ எடுக்கும் போது கூசியதை ,இயல்பாக சொல்லி வரும் போது ,இறுக்கமாக பதட்டத்தில் இருக்கும் சுமதி (விருந்தாளி தான் பட இயக்குனர். குட்டு வெளியாகலாம்)மௌனம் காக்க, அறியாத மதுவோ ஏன் பேசாமயே வர என, சுமதி மரத்தின் அருகில் சென்று பலூனால் முகம் மறைக்க, மது விளையாட்டாக ஒரு ஊசி எடுத்து மஞ்சள் பலூனை குத்தி உடைக்க பதறும் சுமதி காதலனிடம் அணைப்பில் இணைய,இடையை புண்ணாக்கும் மதுவின் கையை மரத்தில் தள்ளி அந்த கையை பதமாக சுமதி வருட, அந்த கையோ மரத்தை வருடும் காதல் ஆவேசம் அந்த இடையில் நிகழ்ந்திருந்தால் என்ற கற்பனையை நமக்களிக்க,பறக்கும் பலூன், signature இசையில் லலல்லாவில் ஆரம்பித்து ஹும் என்று முடியும் எம்.எஸ்.வீயின் குதூகல ரொமான்டிக் பின்னணி இசை என்று இந்த காட்சி எங்கள் தினசரி வீட்டு பாடமானதில் என்ன அதிசயம்?
வன்மையும்,காமமும் அற்றே,மனதில் இனிய காதல் போதையேற்றும் அந்த அற்புத காட்சி.1.35.20 மணித்துளியில் துவங்கி 1.36.40 மணித்துளிவரை சுவையுங்கள்.
https://www.youtube.com/watch?v=OJiFEWQ4fBo
சிவாஜி பாட்டு -34
----------------------------------
"வெள்ளிக் கிண்ணந்தான்" -
இவர்கள், பாடிக் காதலிக்கிறார்கள்.
நாம், பாடுபவர்களைக் காதலிக்கிறோம்.
பாடலைக் காதலிக்கிறோம்.
*****
நாயகரின் கம்பீர வீற்றிருப்பை ஒரு நாற்காலி
ஏந்தியிருக்கிறது.
கால் மேல் கால் அணிந்து நாற்காலியில் அமர்ந்திருக்கும் கலை நாயகர், காதல் நாயகியின்
வரவு கண்டு மலர்ந்து, மெல்லக் கால்கள் பிரித்து,
லாவகமாய் நாற்காலியின் கைப்பிடியில் கையூன்றி எழுவதாய் பாடலின் துவக்கத்திலே
ஒரு பாவனை.
அதைப் பார்த்ததும் எனக்குத் தோன்றியது..
அய்யன் தன்னை விலகி எழுந்து போனதும் அந்த
நாற்காலி இவ்வாறு புலம்பியிருக்குமோ?
"தெரியாத்தனமாக நான் சிக்கி விட்டால், ஆண்டாண்டு காலங்களாய் என் மீது ஏறிக் கொண்டு, நான் அழுக்காகி, தேய்ந்து, உடைந்து போகிற வரைக்கும் என்னை விடாதவர்கள் எண்ணற்றோர். அவர்களுக்கெல்லாம் என் மீது
இருந்த பற்று, அவர்கள் மீது எனக்குக் கொஞ்சமும் கிடையாது. நான் விரும்பும் தலைவா..
எனக்குப் பெருமையான உன் சில நிமிட அமர்வு
காலகாலத்திற்கும் எனக்குக் கிடைத்து விடலாகாதா?"
*****
நல்லவர்களிடம் ஆசை இருக்கும். பேராசை இருக்காது. "எனக்கு.. எனக்கு" என்கிற அலையல்
இருக்காது.
தனக்குத் தேவையானது தவிர்த்து வேறெதையும்
விரும்பாத நல்ல காதலனாய் இதில் வரும் நடிகர்
திலகத்திடம் இவற்றை உணரலாம்.
வெள்ளிக் கிண்ணங்களில் பால் நிரப்பிக் கொண்டு காதல் மனைவி சிரித்து வருகிறாள்..
முதலிரவு அறைக்குள். அவன் முன் அவள் நீட்டிய
வெள்ளித் தம்ளர் பாலை அவன் ஏறெடுத்தும்
பார்க்கவில்லை. தனக்கு எதையோ தந்தாளே..
அதை வாங்கி ஓரமாய் வைத்தோமே.. அது என்ன?
..ம்ஹூம்.. அந்த மாதிரிக் கேள்விகளை அவன்
சிந்தனையில் சேர்க்கவில்லை.
அவனுக்குத் தேவையில்லை பால் என்கிற திரவம்.
அவன் விரும்புவது திரவம் சுமந்து வரும் அழகான
உருவம்.
*****
முகத்தில் செயற்கையாக ஒப்பனை போலில்லாமல், கண், மூக்கு, உதடு போன்று
ஒரு அவயமாகவே புன்னகையைப் பொருத்துவது
நடிகர் திலகத்தாலேயே ஆகும். இந்தப் பாடலிலும்
ஆக்கியிருக்கிறார்.
*****
கட்டில் உண்டு். கட்டிப் பிடித்தல் உண்டு. கன்ன
முத்தம் உண்டு். மறந்தும் காமமாகி விடாத மகத்தான வியப்பு மட்டுமே அத்தனையிலும் உண்டு.
*****
நீர் நிலைக்கு மேலே ஒரு பாலம். பாலத்தின் மீது
காதலர் இருவர். அவர்களும் உருவாக்குகிறார்கள்
ஒரு நேசப் பாலம். அதில் காதல் நடக்கிறது.
*****
அவசியத்திற்கென்று வந்ததும் அழகாகிறது அய்யனிடம். குளிருக்கென்று அணியும் ஸ்வெட்டர்
நம் கண்களுக்குக் கொண்டு வருகிறது குளிர்ச்சி.
*****
கைகளைக் கத்தி போல் நீட்டிக் கொண்டு ஒரு
ஒயிலான முன் பின் நகர்தலோடும், மெலிதாய்ச் சுழன்று தோள் குலுக்கலோடும் ஆடும் பாடலின் இடையிசைக்கான நடனம், காதல் பாடல்களுக்கு
இப்படித்தான், இவ்வளவுதான் ஆட வேண்டும்
என்பதான அறிவுறுத்தல்.
*****
பாத்திரம் நிறைய பாயசம் இருந்தால்தான் தம்ளர்களில் நிரப்பி அடுத்தவர்களுக்குத் தர முடியும். ஆயிரம் ரூபாய் வைத்திருப்பவனாலேயே
பணம் கேட்டவனுக்கு ஐநூறாவது தர முடியும்.
சொல்வதற்கு இன்பமான விஷயங்கள் ஏராளமாக
வைத்திருப்பவனாலேயே "இன்னும் சொல்லவோ"
என்று ஆனந்திக்க முடியும். "இன்னும் சொல்லவோ" என்று அய்யா பாடும் போது முக
நிறைவைக் கவனியுங்கள்.. புரியும்.. நிறைய வைத்திருப்பவனின் நிறைவு.
*****
"காலத்தை நில்லென்று சொன்ன மாயம் என்ன?"
ஒரே வரி.
தன்னுடையவள் காலத்தை நிறுத்திப் பார்க்கிற மாயக்காரி என்பதைச் சொல்ல வருகிற ஒரு பெருமித பாவனை.
காலத்தையே நில்லென்று சொல்லி விட்டவள்
தன்னுடையவள் என்று கண்களால் காட்டுகிற
கர்வ பாவனை.
ஒரே வரி். இரண்டு பாவனை.
உயரக் கை தூக்கிக் குவித்து வணங்குகிறேன்..
என் உள்ளக் கோயில் வாழ்கின்ற தேவனை.
http://youtu.be/4J52KO9Is7o
Sent from my P01Y using Tapatalk