வனஜா மேடம் அவர்களே,
தங்களது பாராட்டுக்கு நன்றி.
அன்புடன்,
இரா. பார்த்தசாரதி
வனஜா மேடம் அவர்களே,
தங்களது பாராட்டுக்கு நன்றி.
அன்புடன்,
இரா. பார்த்தசாரதி
நடிகர் திலகம் அவர்களின் சாதாரண ரசிகன் நான் .எனக்கு மக்கள் திலகத்தின் படங்களும் பிடிக்கும் . காதல் மன்னன் ஜெமினியின் படங்களும் பிடிக்கும் .
நடிப்பு என்று வந்து விட்டால் அதில் ஒப்பீடு செய்வதில் பயனில்லை .
நடிகர் திலகம் எந்த கதையின் பாத்திரம் ஏற்றாலும் அதில் அவரது தனி தன்மை பிரகாசிக்கும் .
சிவகாமியின் செல்வன் கதை வேறு . வசந்த மாளிகை கதை வேறு .
பிடிக்கும் - பிடிக்காது என்பது அவரவர் ரசனையை பொறுத்தது . யார் மீதும் திணிக்க கூடாது .
ஒரு ரசிகனாக பின்பு குற்றம் - குறை தவிர்ப்பது நலம் .
நான் ஆறு வருடங்களாக நடிகர் திலகம் திரியினை தொடர்ந்து படித்து வருகின்றேன் .
குறிப்பாக திரு முரளி - திரு கோபால் -திரு நெய்வேலி வாசுதேவன் - திரு ராகவேந்திரன் .திரு சுவாமிநாதன் .- திரு பார்த்தசாரதி - மற்றும் பலருடைய பங்களிப்பு விலை மதிப்பற்றது .
மேடம் சாரதா - திரு கார்த்திக் -திரு கல்நாயக் - திரு ஆதிராம் மறக்க முடியாத நால்வர் அணி .சூப்பர் ஆய்வுகள் - பதிவுகள் . இருந்தாலும் இந்த நால்வரின் முகமும் ஒரு முகம் தானோ ?
மனிகட்டியாகிவிட்டது . தெரிய வேண்டியது சம்பந்த பட்டவர்கள் .
ரசனை தொடரும்
"பொது வாழ்க்கையில் அவர் எத்தனையோ நல்ல காரியங்களையும் உதவிகளையும் சத்தம் போடாமல் செய்திருக்கிறார். தான் பெரிதாகப் புகழடையத்தொடங்க முன்பே அவர் அளித்த கொடைகள் பற்றி யாரும் பெரிதாக அறிந்திருக்கவில்லை. அதை வைத்து அவர் புகழ் பெற முயன்றதுமில்லை."
நிதர்சனமான உண்மையை, அதிகம் பேசப்படாததை எழுதி உள்ளீர்கள்.
Hats off to You.
Anand
நன்றி சகோதரர் anm! பள்ளிக்கூடக் கட்டுரைப்போட்டியில் வென்று விட்டதைப்போன்ற உற்சாகம் எனக்கு! என் தமிழ் எழுத்துப்புலமை மீது நம்பிக்கை வந்துவிட்டது. சிவாஜியை நினைத்தவுடன் தமிழ் தானாக வருகிறது போலும்!
இங்கிருக்கும் experienced hubbers போல என்னிடம் statistics எல்லாம் இல்லை. திருவாளர்கள் ராகவேந்தர், முரளி, பம்மலார் மற்றும் சாரதா மற்றும் இன்னும் பல NT experts முந்தைய திரிகளில் எழுதிய தகவல்களை அடிப்படையாகக் கொண்டு, எனது எழுத்து நடையில் எழுதியது தான்.
இன்னொன்று திரு முத்ராமன் க்கு : இது நடிகர் திலகத்துக்கான திரி. இதில் நாங்கள் அவர் புகழ் பாடும்போது பிற நடிகர்களை ஒப்பிடுவது தவிர்க்க முடியாதது. அதுமட்டுமல்லாமல் அவருடைய படங்களையும் ஒன்றுடன் ஒன்றும் இரு வேறு படங்களில் அவருடைய நடிப்பு வித்தியாசத்தையுமே கூட நாம் ஒப்பிடுகிறோமே! சிவாஜி என்றல்ல, எந்தவொரு இலக்கிய ஆக்கத்தையும் நாம் விமர்சனம் செய்யும்போது comparisons வரும். அப்போது எதிர்க்கருத்தாளர்கள் தமது மாற்றுக்கருத்துக்களையோ கண்டனங்களையோ சொல்லலாம். இதில் தப்பில்லை என்பது என் கருத்து. யாரும் தமது கருத்துக்களை இங்கே தாராளமாகச் சொல்லலாம் என்றே நான் நினைக்கிறேன். வ.மா ஆனந்த் ஐ விட, எனக்கு சி.செ: அசோக்கைப் பிடித்தது: காரணம் ஏற்கனவே சொல்லியாகிவிட்டது.
இதுவும் நன்றாயிருக்கிறதே. (வெடி) 'திரி' யைப் போட்டு வாதத்தை ஆரம்பித்தாகி விட்டது, நடக்கட்டும்!
என் கண்களை நம்ப முடியவில்லை . உங்களின் எழுத்து , நடை . எல்லாமே முன்னர் பதிவிட்ட மேடம் சாரதா , கார்த்திக் போன்றோரின் சாயல் உள்ளது வியப்பாக உள்ளது . உங்களின் நகைச்சுவை கல்நாயக்கை நினைவு படுத்துகின்றது . வெடி -திரி - நண்பர் ஆதி ராமை நினைவு படுத்துகிறது .
எது எப்படியோ அவரவர் பெயரில் வரும் பதிவுகள் உணமையாக இருப்பின் வரவேற்க தக்கதே .
அசோக் -ஆனந்த் இருவருமே நடிகர் திலகம்தான் . வித்தியாச மான நடிப்பில் அசத்தியிருப்பார் .
சகோதரி
உங்களின் அருமையான பதிவுகளை எதிர் பார்க்கின்றேன் .
நீங்களாக எழுதுங்கள் , நிச்சயம் வெற்றி பெறுவீர்கள் .
அன்புடன்
முத்ராம்
டியர் முத்ராம்,
தங்களை நான் முத்துராம் என்று நினைத்தேன். ஆனால் தங்களுடைய முத்திரையில் முத்ராம் என்று உள்ளதால் நானும் முத்ராம் என எழுதுகிறேன். முதலில் தங்களுக்கு என் உளமார்ந்த வரவேற்பினை கூற விரும்புகிறேன். தங்களுடைய பங்களிப்பின் மூலம் மற்றொரு புதிய பரிணாமத்தில் நடிகர் திலகத்தின் ரசிகரைக் காண முடியும். இதற்கு வாய்ப்பளித்த இந்த மய்யத்திற்கும் அதே போல் நடிகர் திலகத்திற்கும் நம் நன்றிகள்.
பல்வேறு விதங்களில் அணுகுமுறைகளில் கருத்துக்களில் வேறுபாடு இருந்தாலும் ஒரு விஷயத்தில் சிவாஜி ரசிகர்கள் ஒரே மாதிரி இருப்பார்கள். இறுதி வரை சிவாஜி ரசிகர்களாக இருப்போம் என்கிறை வைராக்கியமே அது. அதை யாராலும் அசைத்துப் பார்க்க முடியாத உறுதியான மனப் பான்மை. யாராலும் விலை கொடுத்து வாங்க முடியாதவர்கள் சிவாஜி ரசிகர்கள். அதைப் போன்று எழுத்து நடைகளிலும் ஒரே மாதிரி எழுதக் கூடிய சிவாஜி ரசிகர்கள் பலருண்டு. அதில் சாரதா, கார்த்திக், கல்நாயக், போன்று மேலும் வரலாம் அல்லவா. அப்படி சிந்தித்துப் பாருங்களேன்.
வாழ்த்துக்கள் முத்ராம், தொடர்ந்து தங்களுடைய பதிவுகளைப் படிக்க காத்திருப்பவர்களில் நானும் ஒருவன்.
அன்புடன்
வனஜா மேடம் அவர்களே,
தங்களின் சிங்கத்தமிழன் சிவாஜி கணேசன்!
அருமையான கட்டுரை. நன்றி.
Mr. MUTHURAMAN,
The other three hubbers has to reply for the doubt created by you.
But,
first person did not come for more than one year.
second one did not come for some months. (everytime he will come with some gap, give some beautiful malarum ninaivugal, then disappear)
the third one wil come then and there, but cant see nowadays.
the fourth person me (Anantha Raman) only here.
before, many times karthik accepted that he is following the writing style of saradha. but what made you to include me and mr.kalnayak in that roll, I cant able to know.
Some years before somebody was saying, Murali and Saradha are same person, because they are always talking about past history with statistical datas.
My GOD, ippo sister Vanajavaiyum indha doubtla serththaachaa?. Kashtamthaan.
அகர வரிசையில் பார்த்தால் முதலில் அ, பிறகு தான் ஆ ...
அதாவது அசோக், பிறகே ஆனந்த் ...
இது யெதேச்சையாக அமைந்ததா ...
என்னுடைய தனிப்பட்ட அபிப்ராயம் எனச் சொல்ல வேண்டுமென்றால்.
வசந்த மாளிகை நாவலாக ஒரு காதல் காவியமாகத் தான் உருவானது. பிரேம் நகர் என்கிற சிறந்த தெலுங்கு நாவல் மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. அதை எழுதிய கௌசல்யா அவர்களும் பிரபலமானார். அதை அப்படியே எடுத்திருந்தால் நிச்சயம் சிவகாமியின் செல்வனைப் போன்று முழுதும் காதலைப் பற்றி மட்டும் சொன்ன படமாயிருந்திருக்கும். ஆனால் நாவலில் கௌசல்யா அவர்கள் சற்று சமூகப் பிரச்சினைகளையும் சேர்த்திருந்தார். குறிப்பாக கிராமத்து விவசாயிகளின் சிரமங்களையும் அங்கங்கே சொல்லி யிருந்தார். ஆனால் திரைக்கதையாக அதை மாற்றும் பொழுது அதை சமூகப் பிரச்சினைக்காகவோ அல்லது முழுதும் காதலுக்காகவோ அணுகாமல் சற்றே வர்த்தக ரீதியில் அமைத்தது ஒரு அணுகுமுறை. அதனடிப்படையில் சில வியாபார அம்சங்களை சேர்த்ததனால் அது காவியம் என்கிற வார்த்தைக்கான தகுதிக்கு சற்று ஈடு தராத நிலையில் உள்ளது என்பதே என் கருத்து. நாயகன் பணக்கார வர்க்கத்தில் பிறந்து மதுவுக்கும் மாதுவுக்கும் ஆட்படுவது சாதாரணமான நிலை. அவனுக்குள் உள் மனதில் புகுந்து காதலை உருவாக்கி அவனை சிறிது சிறிதாக நல்லவனாக்குவதாக வரும் போது காதலின் மகத்துவம் நிச்சயம் உயர்த்தித் தான் காட்டப் பட்டிருக்கிறது. அதே போல் அவளைப் பற்றி தான் கேள்விப் பட்டதை அவளிடமே நேரில் கேட்கும் போது அந்த பாத்திரத்தின் நேர்மையினை கதாசிரியர் வெளிப் படுத்துகிறார். உள்ளொன்று வைத்து புறமொன்று சொல்லா குணம் காதலரிடம் இருப்பது நல்லது என்பதை அந்த இடத்தில் வலியுறுத்துகிறார். இது காதலர்களுக்கு இருக்க வேண்டிய மனப்பான்மை. அதே நேரத்தில் அந்த பணக்கார வாலிபனின் போலித்தனமற்ற நல்ல உள்ளத்தை பிரதி பலிப்பதாகவும் அமைகிறது பாத்திரப் படைப்பு. அதைக் கேட்டு நாயகி கோபப் படுவதும் நியாயமே, இயல்பான மனித உணர்வினைத் தான் காட்டுகிறார். ஆக, இந்த காட்சியில் சந்தர்ப்பமும் சூழ்நிலயும் மனிதனை எந்த அளவிற்கு ஆட்டுவிக்கின்றன என்பதையே கதாசிரியர் வலியுறுத்தி இருக்கிறார்.
வசந்த மாளிகை திரைப்படம் ... நான் சொல்வது படத்தை .. மூலக்கதையை அல்ல ... காவியம் என்கிற வார்த்தைக்கு சற்றே தகுதி குறைந்ததாக தோற்ற மளிப்பதற்கு முதற் காரணம் திரைக்கதையாக்கலே. படத்தின் விறு விறுப்பு அல்லது வணிக நோக்கம் இந்த இரண்டு காரணங்கள் திரைக்கதையை வழுவ வைத்து விட்டன. குறிப்பாக நகைச்சுவை என்கிற பெயரில் நாகேஷ்-வி.கே.ராமசாமி-ரமாப்பிரபா அடிக்கும் கூத்துக்கள் விரசத்தின் உச்சம். இவையே அந்தப் படத்தின் மாற்றைக் குறைக்கின்றன. அதே போல் ஹோட்டலில் நாயகியை நிர்வாகி கற்பழிக்க முயலுவதும் நாயகன் காப்பாற்றப் போடும் சண்டைக் காட்சியும் செயற்கையின் உச்சம். அதை நாம் அப்போது விழுந்து விழுந்து ரசித்தோம், இன்றும் ரசிக்கிறோம், நாளையும் ரசிப்போம் ... காரணம் நடிகர் திலகத்தின் ஸ்டைல் ... அது வேறு விஷயம் ...
இது போன்ற குறைகள் இல்லாமல் முழுக்க முழுக்க --- தழுவலாக இருந்த போதிலும் --- காதல் உணர்வை வெளிப்படுத்திய படம் சிவகாமியின் செல்வன்.. படத்தின் பெயரே நம்மை சுண்டி இழுக்கும் ... பெருந்தலைவரைக் குறிப்பதல்லவா ... இருந்தாலும் அதனைக் கதைக்கேற்ற வாறு பயன் படுத்திய விதம்... மிகவும் பொருத்தம்.
முதலிலிருந்து கடைசி வரை சிவாஜி ரசிகர்களுக்கு சிவகாமியின் செல்வன் பிடித்திருக்கிறதென்றால் காரணம் ...
வேறெ யாரு
http://www.nadigarthilagam.com/image10/CVRspeaks.jpg
ஒரு புதிய தலைமுறையினரையே நடிகர் திலகத்தின் பக்கம் திருப்பி விட்ட சிவிஆர் அல்லவா...
நான் என்றைக்கும் நினைத்துப் பார்க்கும் விஷயத்தையே இங்கே கூற விரும்புகிறேன்.
இதே வசந்த மாளிகை படத்தை சிவிஆர் இயக்கியிருந்தால் .
நினைத்தாலே நெஞ்சம் இனிக்கும்.
வசந்த மாளிகை ஒரு வெற்றிகரமான மசாலா காதல்
சிவகாமியின் செல்வன் ஒரு வெறித்தனமான உண்மையான காதல்