krishnaaji.. moonaavathu yaaru.. thanks for only two!!(sripriyaa vEnndaam!)
Printable View
krishnaaji.. moonaavathu yaaru.. thanks for only two!!(sripriyaa vEnndaam!)
http://filmcircle.com/wp-content/upl...-Pardasany.jpg
அது தான் சலீம் படத்தின் கதாநாயகி அக்ஷா பர்டசனி
படபடவென எண்ணெய் சட்டியில் பொரியல் வெந்ததை போல இவர் வெடிக்கின்ற அழகே அழகு.. தக்காளியாக இருக்கும் இவரது முகம் கோபத்தில் மேலும் சிவந்து போகிறது.. பாடல் காட்சிகளில் கொள்ளை அழகாக இருக்கிறார்.. போலீஸாரிடம் படபடவென பேசும் காட்சியில் நச் என்று இருக்கிறது அவரது கேரக்டர் ஸ்கெட்ச்.. பாராட்டுக்கள்.. டப்பிங் குரல் என்றாலும் அது தெரியாத அளவுக்கு நடித்திருக்கிறார். நடிக்க வைத்திருக்கிறார் இயக்குநர்.. வெல்டன் டைரக்டர்..
http://3.bp.blogspot.com/-mSKcgdqj20...e%2Bposter.jpg
ஸ்ரீப்ரியாவை தான் துவைச்சு தொங்க விட்டாச்சே
surf எச்செல்,ரின்,ஏரியல்,நிர்மா ,டெட் ,501 பார் சோப்பு,sunlight சோப்பு,ஊர்வசி சோப்பு,பொன்வண்டு சோப்பு,பவர் தேடேர்கேன்ட் போட்டு (இவ்வளுவுதானா இல்லை மார்க்கெட்டில் இன்னும் இருக்கா )
அதாவது அவங்களை பற்றி நிறைய எழுதியாச்சே
அதான் வேண்டாம் இல்ல வாசு சார் காதுல விழுந்தது அவ்வளுவுதான் தொலைச்சு புடுவார் தொலைச்சு :)
வாணி ராணி படத்தில் சுசீலா அம்மா பாடுவாங்க
'கதை ஒன்று விடுகதை ஒன்று '
வாசு சாருக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு
கதை உண்டு.. ஒரு கதை உண்டு
இதன் பின்னே ஒரு கதை உண்டு
சொல்லத்தான் நினைத்தது அன்று..
மனம் என்னவோ மயங்குது நின்று
http://youtu.be/ExjVcDAy9Fk
வாணிஸ்ரீயைப் பார்த்ததும் இந்தப் பாட்டு நினைவுக்கு வந்து விட்டது.
ரொம்ப மனசுக்குள் மார்கழிப் பனிச்சாரல் மாதிரி ஜில்லுனு ஆக்கும் பாட்டு..
அதுவும் ஒவ்வொரு interlude-ம் ரொம்பப் பிடிக்கும்
http://youtu.be/s-g2SiOaT18
https://encrypted-tbn1.gstatic.com/i...aFTkp9IBJekxgAhttps://encrypted-tbn0.gstatic.com/i...pOh3i8mHiITpj1https://encrypted-tbn0.gstatic.com/i...neCSZfH3p-UWdD
பதினாறு வயதினிலே,கிழக்கே போகும் ரயில்,கன்னி பருவத்திலே போன்ற வெற்றி படங்களை தொடர்ந்து எஸ் எ ராஜ் கண்ணு (இவர் விநியோகஸ்தர் ஆக இருந்து தயாரிப்பாளர் ஆக ஆனவர் ) தனது அம்மன் creation சார்பாக எடுத்த படம் சின்ன சின்ன வீடு கட்டி 1980 களில் வந்த படம்
இன்னிசை வேந்தர்கள் சங்கர் கணேஷ் இசை அமைத்த படம் .
சுதாகர், அனு (இவங்க பின்னாட்களில் பாக்யராஜ் நடித்த சின்ன வீடு படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் வருவார் ). நிறைய தயாரிப்பளர்களின் மனைவிக்கு 'வில்லியும்' ஆனார் என்று படித்த நினைவு உண்டு . மூச்சு விடாத பாடல் என்று கேளடி கண்மணி படத்தில் 'மண்ணில் வந்த காதல் ஒன்று ' பாடலை சொல்வார்கள் . அது சரணத்தில் மூச்சு விடாமல் பாடும் பாடல் அதற்கு முன்னோடியாக இந்த இரண்டு பாடலை கேளுங்கள் . இரண்டும் பல்லவியில் மூச்சு விடாமல்
நாக்கிலே மூக்கில நாத்து பல்லாகிலே (தள தளன்னு வளந்த பொண்ணு)-சின்ன சின்ன வீடு கட்டி. விரசங்களில்லாமல் குதூகலிக்கும் கும்மாளமான நாட்டுப்புற கானம். பாடலின் துவக்கத்தில் அங்கே இங்கே என்று பூச்சாண்டி காட்டிக்கொண்டிருக்கும் ஆர்ப்பாட்டமான அந்த அதிரடித் தாளம் தள தளன்னு வளந்த பொண்ணு தண்ணி மொள்ளும் போதிலே என்ற இடத்தில் வெடித்துக்கொண்டு ஆர்ப்பரிப்பதை கேட்கும் போது அந்த தண்ணீர்க் குடம் நம் தலையில் கவிழும் சிலிர்ப்பை நீங்கள் உணர முடியும். மேலும் தமிழில் வந்த மிக நீண்ட பல்லவி கொண்ட பாடல்களின் ஒன்று என்ற சிறப்பை பெற்றது இது. (இன்னொன்றும் இவர்கள் இசையிலேயே வந்தது. அது பவுர்ணமி நேரம் என்ற பாலைவனச்சோலை படப் பாடல்.) சற்று இந்த பல்லவியைப் பாருங்கள்:
நாக்கிலே மூக்கில
நாத்து பல்லாக்கிலே,
தோப்பு பராக்கிலே,
தாழ்வாரத்திலே,
தோளோரத்திலே,
சிங்காரத்தில,
தள தளன்னு வளந்த பொண்ணு
தண்ணி மொள்ளும் போதிலே
தாவி வந்து அணச்சுகிட்டேன்,
கையிரண்டும் போதல,
(இந்தப் பாடல் வானொலியில் ஒலிக்கும் சமயங்களில் தெருக்களில் இளம் பெண்கள், குறிப்பாக குடத்துடன் பெண்கள் தண்ணீர் எடுக்க செல்ல நேரிட்டால் அவர்கள் காட்டும் முக பாவணைகளைக் கண்டு அவர்கள் கோபப்படுவதாக குமுதத்தில் படித்த நினைவு . இன்று இந்த பாடலை கேட்டால் அப்படி கோபபடுவார்களா முதல்ல யாரு இப்ப தண்ணி குடம் கொண்டு வீதியில் தண்ணி எடுக்க செல்கிறார்கள் )
பௌர்ணமி நேரம் பாவை ஒருத்தி
மின்னல் போல முன்னாள் போனாள்
பின்னல் கண்டு பின்னால் சென்றேன்
பொண்ணு ஊருக்கு புதுசா என்றேன்
காலில் உள்ளது பழசு என்றாள்
ஓ மேலே கேட்காதே
don 't ask me after that
மேல உள்ள பாடல் பாலைவன சோலை படத்தில் உள்ள பாடல்
http://www.youtube.com/watch?v=W7765HIleic
இந்த மாதிரி நீண்ட பல்லவி உள்ள பாடல் ஏதாவது ஒன்று சொல்லுங்களேன் madhu sir/vaasu sir/ck sir/
தேங்க்ஸ் மது சார் வாணியின் அருமையான இரு பாடல்களுக்கு
நந்தா நீ என் நிலா.. நிலா
நாயகன் மடியில் காண்பது சுகமே
நாணம் ஏனோ வா... விழி
மீனாடும் விழி மொழி
தேனாடும் மொழி குழல்
பூவாடும் குழல் எழில்
நீயாடும் எழில்
மின்னி வரும் சிலையே மோகன கலையே
வண்ண வண்ண ஒளியே வானவர் அமுதே
ஆசை நெஞ்சின் தெய்வம் நீயே
ஆடி நிற்கும் தீபம் நீயே
பேசுகின்ற வீணை நீயே
கனியிதழ் அமுதினை வழங்கிட அருகினில் வா...
நந்தா நீ என் நிலா...
இது ரொம்ப பெரிய பல்லவி இல்லையோ ?
http://youtu.be/q4huOP5ZgCc
பாலைவனச்சோலை - பௌர்ணமி நேரம் பாவை ஒருத்தி
http://youtu.be/9Myz5I5uiGo