Even Songs are more memorable in SS than VM. Why the movie did not get
the response like VM is still a mystery.
Even Songs are more memorable in SS than VM. Why the movie did not get
the response like VM is still a mystery.
திரு ராகவேந்திரன் அவர்களுக்கு எனது வணக்கம் .
உங்களின் அன்பான வரவேற்பிற்கு நன்றி .
நான் நடிகர்திலகம் அவர்களின் நடிப்புக்கு ரசிகன் .
மக்கள் திலகத்தின் பாடல்கள் - சண்டைகாட்சிகள் - இளமை துள்ளல்கள் - காட்சிகளுக்கு ரசிகன்
ஜெமினி அவர்களின் மென்மையான நடிப்புக்கு ரசிகன் .
எனது இயற் பெயர் முத்துராமன் .
தாய் - முத்தம்மா - தந்தை -ராஜாராம்
இருவரின் பெயரை சுருக்கி முத்ராம் என்று பதிவிட்டேன் .
அசோக் பற்றிய உங்களின் நீண்ட பதிவு உங்கள் ரசிப்பு திறனுக்கு எடுத்துகாட்டு .
எனக்கு உங்கள் அளவு பதிவிட அனுபவமில்லை .
நீங்கள் எல்லாம் ஜாம்பாவான்கள் .
என்னை பற்றி கூறிவிட்டேன் , பன்முகம் காட்டும் நண்பர் ஒருவர் மட்டும்
என்னுடைய புதிரை விடுவிக்கவில்லை .
பாடும் நானே பாவமும் நானே பாடல் நினைவுக்கு வருகிறது
நன்றி
Thanks to sister VANAJA,
You started the comparison between Vasandha Maligai and Sivagamiyin Selvan.
Now everyone realise and started to accept SS is better than VM. You tempted every one to watch Sivagamiyin Selvan, including me.
Tonight my schedule is watching SS dvd.
thuvandu kidandha thiriyai thookki niruththiyatharku another thanks.
A small correction in my personal opinion. There is no question of realisation. Every fan of NT has his own favourites and he will never change his stance. So the question of realisation or acceptance does not arise. However, one's views may enlighten another to view in that angle. Accordingly there are considerable hardcore fans who weigh SS better than VM incl me. Until SS was released we were happy that VM was a romantic and classic. Even during VM release I rated Sumathi En Sundari (even today) among my friends a better up than VM. And it still holds good. SES is among my top ten of NT's films.Quote:
Now everyone realise and started to accept SS is better than VM.
A memorable still from Sivakamiyin Selvan
http://i.ytimg.com/vi/a7eEJ7Kl7BY/0.jpg
டியர் பார்த்த சாரதி சார்,
ஒவ்வொரு நண்பரையும் குறிப்பிட்டு பாராட்டியுள்ள தங்களுடைய பதிவுக்கு என் உளமார்ந்த நன்றி.
Thanks to Madam Vanaja for the brisk pace of this thread.
My favourite nt flims
1. Thangaikkaga
2. Piraptham
3. Neelavanam
4. Santhi
5. Galatta kalyanam
6. Sumathi en sundri
7. Aandavan kattalai
8. Thangai
9. Niraikudam
10.pavamannippu
திரு ராகவேந்திர சார்,
அருமயாக அலசி விட்டீர்கள், சிவகாமியின் செல்வனுக்கும் வசந்த மாளிகையின் ஆனந்திற்கும் உள்ள வித்தியாசத்தை;
இதன் உச்சம் என்னவென்றால் நமது நடிகர்திலகம் ஒவ்வொரு பாத்திரத்திற்கும் ஒரு புதிய கோணத்தைக் கொடுத்து நம்மையெல்லாம் கருத்தாய்வும் செய்ய வைத்து விட்டாரே.என்னே அவரது திறன்.
ஆனந்த்
நண்பர்களே,
தினமலர் இந்த வாரம் "வாரமலரில்" திண்ணை என்ற பகுதியில் கீழ்க்கண்ட தவறான செய்தி வந்துள்ளது, நாம் நமது கணடனத்தை தெரிவிக்க வேண்டும் என்று நினைக்கிறேன்:
"எம்.ஜி.ஆரை கதாநாயகனாகப் போட்டு, "மாடி வீட்டு ஏழை' என்ற திரைப்படத்தை, தாமே டைரக்ட் செய்து, தயாரிக்கத் தொடங்கினார் நடிகர் சந்திரபாபு. முதல் நாள் படப்பிடிப்பிலேயே, இருவருக்கும் மோதல் ஏற்பட்டது. எம்.ஜி.ஆர்., மேற்கொண்டு நடிக்க வரவேயில்லை.
அப்போது, "கலை' என்ற பெயரில், ஒரு சினிமாப் பத்திரிகை வெளிவந்தது. அதில், சந்திரபாபு அளித்த பேட்டியில், "உங்களுக்குப் பிடித்த நடிகர்?' என்ற கேள்விக்கு, "இரண்டு பேர், ஒன்று - நான். மற்றொருவர் - சிவாஜிகணேசன்' என்று பதில் அளித்தார். எம்.ஜி.ஆரை கோபமூட்டுவதற்காகச் சொன்ன பதில்! சுவற்றில் அடித்த பந்து திரும்பி வந்தது. எம்.ஜி.ஆரின் அண்ணன், எம்.ஜி.சக்கரபாணி, சந்திரபாபுவிடம் கேட்டார்...
"என்ன, ஒரு பத்திரிகையில், உனக்குப் பிடித்த நடிகர் சிவாஜி கணேசன் தான் என்று சொல்லியிருக்கிறாய்?'
சந்திரபாபு சூடாகச் சொன்னார்: "பின்னே... உங்கள் தம்பி பெயரை சொல்வேன் என்று நினைத்தீர்களா? நெவர்!'
விளைவு - "மாடி வீட்டு ஏழை' படம் நிரந்தரமாக நிறுத்தப்பட்டது. சந்திரபாபு உண்மையிலேயே ஏழையாகிப் போனார்.
ஒருபடத்தில் நடிக்க, ஒரு லட்ச ரூபாய் சம்பளம் வாங்கினார் சந்திரபாபு. (அந்தக் காலக்கட்டத்தில் அரசு ஊழியரின் ஒரு மாதச் சம்பளமே, 150 ரூபாய் தான்) அடுத்த ஏழு, எட்டு ஆண்டுகளில், வயிற்றுக்குச் சோறின்றி, வாழ வழியின்றி, வீட்டு மின்சாரக் கட்டணம் செலுத்தாமல், மின்வாரியத்தினர் வந்து, "பீஸ்' பிடிங்கிவிட்டுப் போன நிலையில், மெழுகு வர்த்தி வாங்கவும் காசில்லாமல், மூன்று இரவுகள் இருட்டிலேயே வாழ்ந்தார்.
எந்த சிவாஜி கணேசனை உயர்த்திக் பேசியதற்காக எம்.ஜி.ஆரின் பகையாளி ஆகி, ஒரு வேளை சோற்றுக்கும் வழியின்றி வதைபட்டாரோ, அதே சிவாஜி கணேசனை, ஒரு நாள் தேடிப் போனார் சந்திரபாபு.
"கணேசா... இப்போது நான் பட வாய்ப்பு இல்லாமல், பட்டினி கிடக்கிறேன். உன் படங்களில் எனக்கு சிபாரிசு செய்து, வாய்ப்பு வாங்கி கொடு. ஏதோ, பிழைத்துக் கொள்கிறேன்...' என்றார்.
சிவாஜி கணேசன் சாவதானமாகச் சொன்ன பதில், "உனக்கு என்னப்பா கஷ்டம்? ஏன் பட்டினி கிடக்கிறாய்? தினமும் என் வீட்டிற்கு வந்து சாப்பிட்டுவிட்டு போ. உனக்கென்று தனியாகவா உலை வைக்கப் போகின்றனர். என் வீட்டில் எத்தனையோ பேர், வேலைக்காரன், தோட்டக்காரன், சமையல்காரன் சாப் பிடுகின்றனர். அதுபோல, நீயும் ஒருத்தனா சாப்பிட்டுவிட்டுப் போயேன்...'
பதில் சொல்லாமல், கிளம்பிப்போன சந்திரபாபு, விரைவில் காலமானார்."
இது ஒரு தவறான் செய்தி. சிவாஜி அவர்களிடம் சந்திரா பாபு வந்ததும், சிவாஜி அவர்கள் அன்புள்ளத்தோடு நமது வீட்டிலேயே தங்கி சாப்பிட்டு கொண்டிருக்க சொன்னதும் அதற்கு சந்திரா பாபு தனக்கு ஒரு வேலை கொடுக்கக் கேட்டதும் அதன் பின்னர்தான் "நீதியிலும்" "ராஜவிலும்" சிவாஜி அவர்கள் சந்தர்ப்பம் கொடுத்ததும். எம்ஜியார் சந்திர பாபுவைப் பழி வாங்கியதும் வேறு காரணங்களுக்காக என்பது உலகமே அறிந்தது, ஆனால் தினமலர் யாரை திருப்தி படுத்துவதற்காக இந்த பொய்யான செய்தியை வெளியிட்டு உள்ளார்கள் என்பதுதான் புரியவில்லை,
நாம் நமது கண்டனத்தை வெளிப்படுத்த வேண்டும் எல்லா நண்பர்களையும் கேட்டுக் கொள்கிறேன்.
ஆனந்த்