மிக்க நன்றி ஸ்டெல்லா மேடம். தங்கள் மனம் நிறைந்த பாராட்டுகள் இன்னும் உற்சாகமாய் எங்களை ஊக்குவிக்கின்றன. தங்கள் ரசிப்புத்தன்மை பாராட்டுக்குரியது . அடிக்கடி பங்கு கொள்ளுங்கள்.
Printable View
VASU SIR
http://i57.tinypic.com/k9tn49.jpg
OUR GREATEST OLDEN DAYS LOVER '' RADIO'' IN 1960'S
http://i61.tinypic.com/1zb88si.jpg
இசையமைப்பாளர் சம்பத் செல்வன் பற்றி சில பக்கங்களுக்கு முன் பதிவுகள் பரிமாறிக் கொள்ளப் பட்டன. அதன் தொடர்ச்சியாக.
சம்பத் செல்வன் என்பது இரண்டு பேர். இருவருமே குலதெய்வம் ராஜகோபால் அவர்களின் புதல்வர்கள். சம்பத் செல்வன் இருவருமே இணைந்து ஓடங்கள் படத்தில் அறிமுகமானார்கள். இதனைத் தொடர்ந்து துளசி படத்திற்கும் அவர்களையே தயாரிப்பாளர் இசையமைக்கப் பணித்தார்.
இன்னொரு படம் அவர்கள் பணிபுரிந்து கொண்டிருந்த போது சம்பத் அ செல்வன் இருவரில் ஒருவர் விபத்தில் காலமாகி விட்டார். இன்னொரு புதல்வர் அந்தப் படங்களை முடித்துக் கொடுத்தார்.
சில ஆண்டுகளுக்கு முன் அவரிடம் உரையாடிக்கொண்டிருந்த போது அவர் சொன்ன தகவல்
இன்றைய ஸ்பெஷல் (42)
'துளி விஷம்' (30-07-1954) ஒரு நினைவுப் பாடல்.
http://i1094.photobucket.com/albums/.../GEDC4199a.jpg
'துளி விஷம்' படத்தில் நடிகர் திலகத்தின் அட்டகாச முத்திரைகளோடு நம்மை மயக்கும் பாடல்.
சங்கீதம்- கே.என்.தண்டாயுதபாணி பிள்ளை
திரைக்கதை, வசனம், இயக்கம்: ஏ.எஸ்.ஏ.சாமி.
தயாரிப்பு-வி.எல்.நரசு
அரண்மனை நர்த்தகி அங்கயற்கண்ணி என்கிற அங்கா (பி.கே.சரஸ்வதி) தான் காதலித்து அதை மறுத்த சந்திரனைப் (கே.ஆர். ராமசாமி) பழி வாங்க நடிகர் திலகத்தை (கற்பக நாட்டு மன்னன் சூரியகாந்தன்) பயன்படுத்தி அவரைக் காதலிப்பதாக நடிக்கும் போது வரும் அந்த மறக்க முடியாத பாடல்
'என்னை அறியாமல் பெருகுது இன்பம்தான்'.
அங்கா நாட்டியமாட, ஒவ்வொரு வரிக்கும் நடிகர் திலகம் சேரில் அமர்ந்து கனிகளை உண்டபடி தரும் முகபாவங்களுக்கு கோடி கோடியாய்க் கொட்டிக் கொடுத்தாலும் ஈடாகாது. இரு தோள்பட்டைகளையும் முன் பக்கம் வெட்டி, வெட்டி அசைத்து, 'பருவம் நல்ல உருவம்' வரிகளின் போது தலையை ஒருமாதிரி ஆட்டி ரசிக்கும் அழகை எப்படி வர்ணிக்க முடியும்? பாட்டில் வரும் வரிகள் இவர் புகழ் பாடும் போது முகத்தில் காட்டும் அந்த பெருமை கலந்த சிரிப்பு, கிட்டாத கனி கிட்டி விட்டதே என்ற பூரிப்பு, வந்த காரியம் நிறைவேறாமல் போனால் கூட இந்த காரியம் நிறைவேறி விட்டதே என்ற பூரண திருப்தி என்று அமுத விருந்தை அழகாய்ப் படைக்கும் நேர்த்தி.
'துளி விஷம்' படத்தில் நடிகர் திலகத்தின் அட்டகாச முத்திரைகளோடு நம்மை மயக்கும் பாடல்.
http://i1087.photobucket.com/albums/..._002366736.jpg
அறியாமல்
என்னை அறியாமல் பெருகுது இன்பம்தான்
என்னை அறியாமல் பெருகுது இன்பம்தான்
வசந்தமும் தென்றலும்
வசந்தமும் தென்றலும் இசைந்தது போல
என்னை அறியாமல் பெருகுது இன்பம்தான்
அழகு முகத்தில் குளிர்ந்த நிலவைக் கண்டேனே
பழகும் விதத்தில் பாயின் சுவையைக் கண்டேனே
பருவம் நல்ல உருவம் கண்டு பரவசம் கொண்டேனே
பருவம் நல்ல உருவம் கண்டு பரவசம் கொண்டேனே
என்னை அறியாமல் பெருகுது இன்பம்தான்
என்னை அறியாமல் பெருகுது இன்பம்தான்
கற்பனையில் கண்ட அற்புதமும் நீயே
கருத்தில் என்றும் நிறைந்திருக்கும் காதல் தெய்வம் நீயே
ஆ ஆ..................அ அஹ்ஹாஹ்ஹா லல்லலல்லலல்லலா
கற்பனையில் கண்ட அற்புதமும் நீயே
கருத்தில் என்றும் நிறைந்திருக்கும் காதல் தெய்வம் நீயே
மலர்க்கணைகள் தூவும் மன்மதனைப் போலே
மலர்க்கணைகள் தூவும் மன்மதனைப் போலே
பருவம் நல்ல உருவம் கண்டு பரவசம் கொண்டேனே
பருவம் நல்ல உருவம் கண்டு பரவசம் கொண்டேனே
மேற்கண்ட நான்கு வரிகளில் நடிகர் திலகத்தின் முகவெட்டுகளைக் கவனியுங்கள். (மவனே! ஒருத்தரும் நினைத்துக் கூடப் பார்க்க முடியாது)
என்னை அறியாமல் பெருகுது இன்பம்தான்
லல்லல் லலலல்லா லாலலலல்லல்லா
வசந்தமும்
தென்றலும்
வசந்தமும் தென்றலும் இசைந்தது போல
என்னை அறியாமல் பெருகுது இன்பம்தான்
லல்லல் லலலல்லா லாலலலல்லல்லா
http://www.youtube.com/watch?feature...&v=peD-t2sD6-Q
நடிகர் திலகம் பாகம் 11 திரியில் 'துளிவிஷம்' பற்றிய என்னுடைய விரிவான ஆய்வைப் படிக்க கீழே சொடுக்கவும்.
http://www.mayyam.com/talk/showthrea...art-11/page244
ராகவ் ஜி, எஸ்.வி ஜி, வாசு ஜி அருமை அருமை .. பொங்கும் பூம்புனல் அருமை அருமை
வாசு சார் மிரஜால கலடா பாடலை கேளுங்கள் .. இசையரசி இசை ராஜாங்கமே நடத்துவார்.
--------------------
இளையராஜா ஆரம்ப காலங்களில் மிகவும் பிரமாதமான மெட்டுக்களை நமக்கு தந்தார்
அப்படி ஒரு பாடல் இதோ இசையரசியின் குரலில் சுஜாதாவின் அளவான அற்புத நடிப்பு
https://www.youtube.com/watch?v=q4oeYOBffNM
நான் ரொம்ப ரசிக்கும் பாடல் ராஜேஷ் சார்.