ரவி,
கருவின் கருவில் உங்கள் உருக்கும் எழுத்துக்கள் எங்களை நினைவில் நெருக்கும் தொடராய் இருக்கிறது. பாராட்டுக்கள். மக்கள் திலகம், நடிகர் திலகம் மற்றும் உலக நாயகனின் பாடல்களுக்கு நன்றிகள்.
Printable View
ரவி,
கருவின் கருவில் உங்கள் உருக்கும் எழுத்துக்கள் எங்களை நினைவில் நெருக்கும் தொடராய் இருக்கிறது. பாராட்டுக்கள். மக்கள் திலகம், நடிகர் திலகம் மற்றும் உலக நாயகனின் பாடல்களுக்கு நன்றிகள்.
சந்தைக்குப் போனீன்னா சலிக்காம மீனுவாங்கி
…சாயங்காலம் கொழம்புவச்சு கொடுத்திடுன்னு சொன்னீங்க
மந்தைபோன ஆடுகள்ளாம் மறக்காமப் பட்டியிலே
..மாஞ்சுமாஞ்சு வந்துடுச்சே மச்சானொன்னைக் காங்கலியே
சந்தனமா மஞ்சபோட்டு பக்குவமா மசாலரைச்சு
..சட்டியிலே வச்சுபுட்டேன் கொதிக்குமணம் தெரியலையா
நொந்தகண்ணு வலிக்குதய்யா நேரத்துல தான்வாய்யா
..நெஞ்சுக்குள்ள ஒமச்சுமந்து நிக்குறது நெனைப்பிலையா
https://youtu.be/pqzzI855yns
பூவின் பாடல் 11: "செவ்வந்தி பூ மாலை கட்டு! தேடி வந்தாள் ஜோடி சிட்டு ! சிங்காரமாய் மேடை இட்டு ! சேர போறேன் மேளம் கொட்டு !"
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நம்ம ராமராஜனின் அற்புதமான பூமாலைப் பாடல். பாடல்... ம் ம் ம். உடன் ஆடுபவர் நடிகை ராகசுதா. எஸ். ஏ. ராஜ்குமார் இசை அமைத்து பாடும் நிலா பாலுவும் சித்ராவும் பாடியிருக்கும் பாடல்.இது ஒரு காதல் டூயட் பாட்டு. மத்தபடி பாடலோட அழகை நீங்கதான் பார்த்து புரிஞ்சி இங்கே சொல்லணும்.
https://www.youtube.com/watch?v=eYAgFaJCtCk
தங்கத்தின் தங்கமாமே இவர்? தெரிஞ்சவங்க இதையும் சொல்லுங்க.
ரவி/சின்ன கண்ணன்,
சில சமயம் craftiness ,intelligence &information நிறைந்த journalistic flair பதிவுகளை விட, ஆத்ம சுத்தியோடு இதயத்தில் இருந்து வரும் பதிவுகள் அனைவர் மனதையும் தொடும். அந்த ரக பதிவுகள் நிறைய வருகின்றன உங்கள் இருவரிடம் இருந்து. ரவி, உங்களின் பதிவுகள் ரொம்பவே மனதை அலை பாய வைக்கிறது.
சி.க - NRI ஆக இருப்பதற்கு கொடுக்க படும் மிக பெரிய விலையே உறவுகளின் இறுதி நாட்களின் அருகிருப்பு பாக்கியம் இழப்பதே. இந்த அனுபவம். சித்ரா ரமேஷ் என்ற பெண் எழுத்தாளர் தன்னுடைய பறவை பூங்கா என்ற சிறுகதை தொகுப்பில் தன பிதாமகன் என்ற சிறுகதையில் இதை மிக வேறு பரிமாணத்தில் காட்டியிருப்பார். சமீபத்தில் நான் படித்த மிக சிறந்த சிறுகதை தொகுப்பு.
இந்த நேரத்தில் இன்னொன்றை குறிக்க விழைகிறேன். சில அருமை நாம் உணர்வதில்லை. உலகிலேயே கொடுத்து வைத்தவர்கள் என் குழந்தைகள். ஆம். அவர்களே சொன்னது. அவர்கள் இருவருக்கும் நினைவு தெரிந்த நாளில் இருந்து இன்று வரை ,வகுப்பு தோழர்கள்,பழகும் தோழர்கள்,சொந்தங்கள் அனைவருக்கும் இல்லாத கொடுப்பினை. தாய்,தந்தை வழி பாட்டி,தாத்தாக்கள் நால்வரும் ஆரோக்யத்தோடு இருப்பது. (நால்வரும் 80 வயதுக்கு மேல்) நால்வருமே படு ஆரோக்யமாக தன வாழ்வை தானே நடத்தி செல்பவர்கள்.(அம்மம்மா,அம்மப்பா,அப்பம்மா,அப்பப ்பா நால்வரும்)
என்ன ஒரு கொடுப்பினை என் மக்களுக்கு.
நிலாப் பாடல் 77: "வெண்ணிலாவே வெள்ளைப்பூவே வா வா. வெட்கமென்ன ஆடை வேண்டாம் வா வா"
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இதுவும் வழக்கமான காதல் பாட்டுதாங்க. காதலியை வெண்ணிலாவேன்னு கூப்பிடற பாடல்தான். பின்னாட்களில் வந்த நிலாப் பாடல்களில் எனக்கு இதுவும் மிகப் பிடித்த பாடல். நல்ல கவிதை வரிகளுக்கு ஆடுவது போல அட்டகாசமாக வித்யாசாகர் இசை அமைத்திருக்கிறார் (எங்காவது ஆங்கிலத்தில் இதுமாதிரி முன்பே இசை அமைத்து விட்டார்கள் என்றால் நமது ஜுகல் பந்தி புகழ் ராஜ்ராஜ் அவர்கள்தான் சொல்ல வேண்டும்.) மனோவும் சித்ராவும் பாடியிருக்கிறார்கள். எழுதியவர் விபரம் அடியேனுக்கு கிடைக்கவில்லை. தெரிந்தவர் தெரிவிக்க தெரிந்து கொள்வோம். அர்ஜுனும் மீனாவும் நடனக் குழுவினருடன் ஆடுகிறார்கள். கண்டு களியுங்கள்.
https://www.youtube.com/watch?v=NUyF8j_frwU
செங்கோட்டைக்கும் இதுக்கும் சம்பந்தம் உண்டு என்கிறவர்களைப் பார்த்து என்ன சொல்வது?
கவிஞர் வாலி வரைந்தளித்த காதல் ஓவியம்!
வார்த்தையில் சொன்னால் ஒரு காவியம்!
நண்பர் வினோத் சந்திரோதயம் திரைப்படம் வெளிவந்து 49 ஆண்டுகள் கழிந்து விட்டன என்று நினைவு கூர்ந்து இருந்தார் . கவிஞர் வாலியின் வாலிப வரிகள் நினைவுகளை பின்நோக்கி ஓடவிட்டன.
காதலியின் அருமையை எப்படி எல்லாம் வர்ணிக்கிறார்
முத்தாரம் சிரிக்கின்ற சிரிப்பல்லவோ?
முழு நெஞ்சைத் தொடுகின்ற நெருப்பல்லவோ?
சங்கீதம் பொழிகின்ற மொழியல்லவோ?
சந்தோஷம் வருகின்ற வழியல்லவோ?
என் கோயில் குடி கொண்ட சிலையல்லவோ?
இந்த பாடலில் கீழ்க்கண்ட இரண்டு விதமான சரணம் படித்த நினைவு சார் எது சரி
இதழோடு இதழ் வைத்து இமை மூடவோ?
இருக்கின்ற சுகம் வாங்கத் தடை போடவோ?
மடி மீது தலை வைத்து இளைப்பாறவோ?
முகத்தோடு முகம் வைத்து முத்தாடவோ?
கண் ஜாடை கவி சொல்ல இசை பாடவோ?
எழிலோடு எழில் சேர்த்து இமை மூடவோ
எனக்கென்று சுகம் வாங்கத் துணை தேடவோ
மலர்மேனிதனைக் கண்டு மகிழ்ந்தாடவோ
மணக்கின்ற தமிழ் மண்னில் விளையாடவோ
கண்ஜாடை கவி சொல்ல இசை பாடவோ
ரீங்காரம் செய்யும் இசைஅரசியின் ஹம்மிங் .
இதே மாதிரி மனதை கவர்ந்த இன்னொரு ஹம்மிங் 'சிட்டு குருவி முத்தம் கொடுத்து ' பாடலில் வரும் .காமிரா வானத்தை நோக்கி இருக்கும். இசைஅரசியின் ரீங்காரம் மட்டும் கேட்கும். நம்ம NT யின் தலை கீழே குனிந்து பின்னர் நிமிர்ந்து உதடை (தன் உதடை தான் :) ) தடவி கொள்ளும். நமக் 'கோ' !
50 வருடங்கள் கழிந்தாலும் மனதை விட்டு அகலாத பாடல் காட்சிகள்
https://encrypted-tbn0.gstatic.com/i...4Gz9rAK4IY7_hOhttps://i1.ytimg.com/vi/i-F-cZ0j5Pc/hqdefault.jpg
http://3.bp.blogspot.com/-ibY5cpqt06...0/susheela.jpg
நண்பர்கள் கல்நாயக் /வாசு/ரவி/சி கே
உங்களுக்கு எப்படி அருமையான தலைப்பு ஒன்று கிடைத்து அதில் தொடர்ச்சியாக பாடல்கள் வெளியிடுகிறீர்கள் ?
ரவி - கருவின் கரு /1000 கரங்கள் நீட்டி
கல்நாயக் - நிலாப் பாடல்
சி கே - என்னமோ போங்க
வாசு - சொல்லவே வேண்டாம்
என்னமோ போ "கோபாலா-:mrgreen:" நமக்கு தான் ஒன்னும் செட் ஆகவில்லை :cry2:
நண்பர் gkrishna ji அவர்களே,
அற்புதம். 'என்னமோ போ "கோபாலா-:mrgreen:" நமக்கு தான் ஒன்னும் செட் ஆகவில்லை' என்ற தலைப்பில் நீங்கள் எழுதப் போகும் பாடல்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.
எல்லோரும் கண்டு மகிழ அஜய் டிவி அவார்ட்ஸ்:
https://www.youtube.com/watch?v=9t8XTz-jQEs
நண்பர் கல்நாயக்
சான்சே இல்லை . செம டைமிங் .:)
'போட்டு :shoot: "