இருப்பு இருப்பதால் இறுமாப்பு சுரக்கின்
இருப்பே நெருப்பாகி சுடும்.
Printable View
இருப்பு இருப்பதால் இறுமாப்பு சுரக்கின்
இருப்பே நெருப்பாகி சுடும்.
’சுடும் இப்படித்தான்..
கொஞ்ச நேரமும் சும்மா இருக்காமல்
மழைல்ல அலைஞ்சா...
இப்ப்ப் பாரு யாரு கஷ்டப் படறா
வாயத் தெற’
அம்மா விட்ட கஷாயம்
தொண்டையில் கசப்பாய் இறங்க
‘பகவானே சீக்கிரமா குணமாகணும்..”
கண்மூடி பிரார்த்தனை செய்தவளின்
விழியோரம் ஈரத்தைக் கண்ட தும்..
மழையில் நனைந்த தன் உற்சாகம் வடிந்து போனது....
போனது போகட்டும்
அது முடிந்த கதை
வருவது வரட்டும்
அது வெறும் கனவு
இப்போது வாழ்ந்திடு
இது மட்டும் நிரந்தரம்
நிரந்தரப் புகழ் என்பது
அடுத்தடுத்த தொடர் வெற்றிகளினால் மட்டுமல்ல..
மனப்பூர்வமாய்
தவறுகளை தைரியமாக
ஒப்புக்கொண்டு
பின் தங்குவதாலும் கிடைக்கும்..
கிடைக்கும் நிம்மதி
மகேசன் தரிசனத்தில்
இமயத்தின் மடியில்
கங்கையின் கரையில்
பாவத்தைக் கரைக்க
யாத்திரை செல்கிறேன்
என்றாள் இளையவள்
இன்னும் கொஞ்சம்
பாவம் செய்துவிட்டு
வருகிறேன் என்றாள்
முன்னால் பிறந்தவள்
எத்தனை கோணங்கள்
எண்ணத்தில் கோணல்கள்?
குழந்தை குணங்கள்!
குணங்கள்...எழுது
குணங்கல்..
இந்த பார்..பள்ளம் வர்ற் ள் போடணும்..
சரி டீச்சர்..
என்னடா..
மறுபடி தப்பா..
வா..ஒருபக்கம் முழுக்க
எழுதச் சொல்லியிருக்காளோல்லியோ..எழுது..
போம்மா..
நா மாடிக்குப் போய்
வெளயாடப் போறேன்..
*
ஏண்டி..
ப்ன் மரம் மாதிரி வளர்ந்துருக்க..
இது என்ன டிரஸ்..தக்கணூண்டு..
கத்தரிக்காய்க்கு குட்டப் பாவாடை போட்ட மாதிரி..
போம்மா..டீசண்ட்டா தானே இருக்கு..
ஏங்க் ஒங்க் அம்மாகிட்ட சொல்லுங்களேன்..
புடவைல்ல என்க்கு செளகர்யமா இல்ல..
சுடிதார் தானே போட்டிருக்கேன்...
போடி.. உன் பாடு எங்க அம்மா பாடு..
*
இந்த தடவை நமக்கு சீட் கிடைக்கும்கற..
தலைவர் வரவர மாறிட்டார்..
நம்மள் க்வனிக்கவே மாட்டேங்கறார்..
ம்ம் இவரல்லாம் வளர்த்து விட்ட்தே நாம தானே..
அதோ வர்றாரே..
எங்கள் தானைத் தலைவன்
சொன்னபடி செய்யும் சிங்கம்...
வாழ்க வாழ்க..
*
என்னய்யா இந்த முழி முழிச்சிக்கிட்டுருக்க..
என்ன கவிதை வரமாட்டேங்குதா..
குணம்னு எழுதணுமா..
செல்லம்..
தைரியத்த வுடாதே..
நல்லா சிந்தி..
இன்னிக்குவெள்ளீக்கிழமை..
லீவு தானே..
இந்தா வெண்டைக்காய்..
கட்பண்ணீக்கிட்டே யோசி..
*
குணங்கள்ல மூணு வகை
ரஜோ குணம்
சாத்வம்
தாமச குணம்..
கீதைல்ல பகவான் என்ன சொல்றார்னா..
சார் என்ன இந்தப் பக்கம்..
என்ன ஓய் பண்றது
இந்த நாட்டுப் பொண்
ரொம்ப்ப் படுத்தறா.,,
நல்லவ தான்..
இருந்தாலும்
இந்த எலக்ட்ரிசிடி பில், டெலிபோன்
அப்புறம்
பேரனப் பார்த்துண்டு இருக்கற்து
இதெல்லாம் செஞ்சுண்டு தான் இருக்கேன்..
இன்னிக்கு காலைல்ல பேப்பர் படிக்கலை
சாயந்திரம் ப்டிக்கலாம்னு எடுத்தா
இன்னும் ஏதோ சொல்றா..
சரி தான்போன்னு இங்க வந்துட்டேன்..
புரியலைன்னாலும்
ஏதோ கொஞ்சம் நிம்ம்தியா இருக்கு..
ந்ல்லாத் தான் ப்ண்றார் பாகவதர்
காலட்சேபம்...!
*
கதாகாலட்சேபம் ஒன்று புதுமையாய்
மாதர் சங்க கலை நிகழ்ச்சிக்காக
பல்லாண்டுக்கு முன் தயாரித்தேனே
சிலப்பதிகாரக் கதையை முழுதாய்
திரைப்பட பாடல்களால் கோர்த்தேனே
நேயர் ஒருவர் தங்களுக்கு பள்ளியிலே
இவ்வண்ணம் கற்பிக்கவில்லையே என
அங்கலாய்த்ததை எப்படி மறப்பேன்
//அதை விமரிசன திரியில் படித்து மகிழவும்(!)//
எப்படி மறப்பேன் அன்பே..
கொய்ங்க்.. என்று ரீங்கரித்து
திடீரென அருகில் வந்து
பயமுறுத்தும் கருவண்டு போன்ற
சுற்றிச் சுழலும் உன் விழிகளை..
**
அன்று
கரு நீல சுடிதாரில்
நெற்றியில் இருந்த
குட்டிப் பாம்புப் பொட்டும்
மெலிதாய் நெளிய
வெளிர் நீல தோடுகள் காதுகளில் ஆட ஆட
வெளிர் சிகப்பு உதடுகள் பிரியப் பிரிய
என்னருகில்
சிரித்தபடி பேசினாயே..
எப்படி மறப்பேன்..
**
ஹோ வென்ற கும்பல்
அந்த
அஷ்டலஷ்மி கோவிலை ஒட்டிய
கடற்கரையில்
நம்மைச் சுற்றிப் போய் வந்து கொண்டிருந்தாலும்
நாம் மட்டும் ... இருவர் மட்டும் இருப்பதாய்
நினைத்தபடி
ஒருவரை ஒருவர் பார்த்தபடி
‘ஒன்றுமில்லாத இனியவை’
அதுதான் ஸ்வீட் நத்திங்க்ஸ் என்று தமிழில் சொல்வார்களே
அதைப் பேசியபடி இருந்தோமே..
எப்படி மறப்பேன் அதை..
*
அதன் பிறகு
சூரியன் கோபித்துக் கொண்டு மேற்கில் மறைய
சில்லெனக் காற்றுடன்
நிலாப் பெண் மேலே உயர,
கூட்டம் குறைந்திருந்த அந்தப் பொழுதில்
என் அருகினில் வந்து
மென்மையாக
அழகாக
கொஞ்சம் வெட்கத்துடன்
கேட்டாயே..
நானும் கொடுத்தேனே..
எப்படி மறப்பேன் அதை..
**
ம்ம்..
அடியே..
நான் எதையும் மறக்கவில்லை..
இன்று மாலை
நாம் சந்திக்கும் போது
மறக்காமல் கொண்டு வா
அன்று அந்த நிலாக்கால இரவில்
என்னிடம் கை மாற்று வாங்கிய
ஆயிரம் ரூபாயை..!
ரூபாயை பத்திரமாய் பெட்டிக்குள்
பெண்ணை பத்திரமாய் வீட்டுக்குள்
பாதுகாப்பது அழகிய நல்ல பண்பாடு
சீரும் சிறப்புமாய் நிம்மதியாய் வாழ்
வாழ்வில் எல்லாமே
நகரும் மேகங்கள் தான்..
பிறப்பு, இறப்பு
வேதனை, சாதனை
துன்பம் இன்பம்
எல்லாவற்றையும்
சமமாக எடுத்துக் கொள்ள
வேண்டும் மனப் பக்குவம்