https://scontent.fybz1-1.fna.fbcdn.n...0e&oe=5A3EA18E
Printable View
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...63&oe=5A873D7C
Sundar Rajan
அன்புள்ள மக்கள்தலைவரின் அன்பு இதயங்களே,
நான் பல மாநிலங்களுக்குச் சென்றிருக்கிறேன்.
ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு சூப்பர் ஸ்டார், பவர் ஸ்டார், தளபதி என நடிகர்களுக்...கு பட்டம் சூட்டி மகிழ்கின்றனர்.
ஆனால் எந்த மாநிலத்தில் மட்டுமல்ல
உலகில் நடிகர்திலகம் என்ற பட்டம் யாருக்கும் கிடையாது.
அது ஹாலிவுட்டாக இருந்தாலும் சாி, பாலிவுட்டாக இருந்தாலும் சரி, டோலிவுட்டாக இருந்தாலும் சரி, கோலிவுட்டாக இருந்தாலும் சரி.
உலகிற்கு ஒரு சூரியன்
உலகிற்கு ஒரு சந்திரன்
உலகிற்கு ஒரே நடிகர்திலகம் தான்
அது நமது மக்கள்தலைவர் சிவாஜி அவர்கள் தான்.
சிவாஜிடா........
sivaji peravai chennai
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...62&oe=5A401BC6
jayasankar jai
தமிழ் திரையுலகில் மறக்க முடியாத படம்.
அன்றைய தலைமுறையினால் தாஜ்மகாலுக்கு பின் காதலின் சின்னம்
வசந்த மாளிகை என்று வர்ணிக்க பட்ட
திரைப்படம்.முதன்முதலில் ஸ்லோமோஷன்
காட்சிகள் இடம் பெற்ற திரைப்படம் ....
ஆரம்பத்தில் விமானத்தில் இடம் பெறும்
ஓ மானிட ஜாதியே என்ற முதல் பாடல்
முதல் யாருக்காக என்ற கடைசி பாடல்
வரை எத்தனை விதமான பாவம் நளினம்
சிவாஜி ரசிகர்களுக்கு மிகப் பெரிய விருந்து
வசந்தமாளிகை திரைப்படம்.நான் இதுவரை
எத்தனை முறை பார்த்தேன் என்றே எனக்கு
தெரியாது இன்றும் பார்க்க வேண்டும் என்று
தோன்றினால் உடனே யூ ட்யூபில்
பார்த்து விடுவேன் அந்த படத்தில் இருந்து
அருமையான அழகான ஸ்டில் இன்று.
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...45&oe=5A46B329
இன்று(26/9/17)மதியம் 1.30மணிக்குபுதுயுகம் டிவி யில் ஊரும்உறவும்திரைப்படம் திரையிடப் படுகிறது.கண்டு மகிழுங்கள்.
https://i.ytimg.com/vi/wiFZFYRejec/maxresdefault.jpg
https://i.ytimg.com/vi/w5_n09UP02U/hqdefault.jpg
27/9/1975 ல் வெளிவந்த படம்.அன்பே ஆருயிரே
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...fa&oe=5A452674
இன்று (28/9/17)பகல் 2மணி க்கு வசந்த்டிவியில் திருவருட்செல்வர் படத்தை கண்டு மகிழுங்கள்.
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...7d&oe=5A3E9AAF
https://upload.wikimedia.org/wikiped...var_poster.jpg
Sundar Rajan
கொதித்தெழுந்த சிவாஜி ரசிகர்கள்,
அன்பு இதயங்களே,
திருச்சியில் பல ஆண்டுகளாக மூடி கிடக்கும் சிவாஜி சிலையை திறக்கச்சொல்லி பலமுறை அரசை வற்புறுத்தியும் திறப்பதற்கான வழி இல்லை. பழைய சாக்கு போட்ட மூடி வைத்திருந்தனர்.
... இன்று அதிகாலை திருச்சி மாவட்ட சிவாஜி ரசிகர் மன்றத்தை சேர்ந்த நமது அன்பு இதயங்கள் ஒன்று கூடி, சாக்கால் மூடிய சிவாஜி சிலை திறப்பை நடத்தி, சிலைக்கு மாலையும் போட்டு விட்டனர்.
இதை அறிந்த காவல்துறை அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று கண்டித்து அனுப்பி விட்டனர். சிலையை திறக்கும் போது பலர் இருந்த போதிலும் காவல் நிலையத்திற்கு 7 பேர் மட்டும் சென்றுள்ளனர்.
சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பது பழமொழி.
சிவாஜி ரசிர்கள் கொதித்தெழுந்தால் நாடு தாங்காது.
அன்னை இல்லத்தின் தளபதிகள் காட்டும் அன்பு வழியில் சென்று கொண்டிருக்கிறோம். எங்களை வம்புக்கு இழுக்காதீர்கள்.
வீரமிகு அன்பு இதயங்கள்
T.சீனிவாசன் பழக்கடை ராஜா R.C.பிரபு
கறிக்கடை ஜெயராமன் நாராயணசாமி நாகராஜ் ஆகியோரை உலகெங்கும் வாழும் கோடிக்கணக்கான சிவாஜி ்ரசிகர்கள் சார்பிலும், நமது சிவாஜிகணேசன்.இன் சார்பிலும் வாழ்த்துகிறோம்.
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...13&oe=5A464DC7
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...42&oe=5A512339
murali srinivas
வசந்த மாளிகை ரிலீஸ் நினைவலைகள் - பார்ட் I
காலத்தால் அழியாத காதல் காவியம். தமிழ் சினிமாவில் எத்தனையோ படங்கள் வந்திருக்கின்றன, வருகின்றன இனியும் வரும். ஆனால் வசந்த மாளிகை போன்ற ஒரு படம் வருமா என்று கேட்டால் நிச்சயம் இல்லை என்றே சொல்ல வேண்டும். 29.09.1972 அன்று திரையில் முதன் முதலாக தோன்றி இப்போது 45 வருடங்களை கடந்து செல்லும் அழகாபுரி சின்ன ஜமீன் விஜய் ஆனந்த் அவர்களை முதல் முறை பார்த்த அந்த நாளை பற்றிய எனது நினைவலைகள்.
வசந்த மாளிகை ரிலீசிற்கு தயாராகி கொண்டிருந்தத நேரம், வசந்த மாளிகை பற்றி சொல்ல வேண்டுமென்றால் ஒரே வார்த்தை வெற்றி. அன்றைய காலகட்டத்தில் ஒரே நேரத்தில் பல படங்கள் தயாரிப்பில் இருக்கும்போது அந்தப் படத்தைப் பற்றிய செய்திகள், படமாக்கப்படும் காட்சி அமைப்புகள், படத்தின் கதையை பற்றி வெளிவரும் தகவல்கள் மற்றும் பத்திரிக்கையில் வெளிவரும் ஸ்டில்ஸ் ஆகியவற்றை வைத்து படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு படத்தின் வெற்றி வாய்ப்பு ஆகியவை அலசப்படும். அது என்னவோ தெரியவில்லை தெலுங்கில் வந்து வெற்றியடைந்த பிரேம் நகர் படத்தின் தமிழாக்கமாக வரப் போகிறது என்ற செய்தியுடன் 1972 ஜனவரியில் பூஜை போடப்பட்டு வசந்த மாளிகை என்று பெயர் அறிவிக்கப்பட்டபோதே படத்தின் வெற்றி உறுதியாகி விட்டது என்பது போலவே அனைத்து ரசிகர்களும் உணர்ந்தனர். படம் வளர வளர அந்த உணர்வு வலுபெற்றுக் கொண்டே இருந்தது.
படம் வெளிவருவதற்கு முன் பாடல்களும் வெளியாகி விட்டன. அதில் ஒ மானிட ஜாதியே இடம் பெறவில்லை. வெளிவந்த பாடல்களில் ஒரு கிண்ணத்தை ஏந்துகிறேன் மயக்கமென்ன ஆகியவை பெரும் ஹிட் ஆகும் என்று தெரிந்து விட்டது. படத்தின் கிளைமாக்ஸ் பற்றி விவாதங்கள் நடைப்பெற்றுக் கொண்டிருந்தன. சோகமான முடிவு என்றும் இறுதியில் நடிகர் திலகம் ஏற்றிருந்த ஆனந்த் கதாபாத்திரம் காதல் தோல்வியால் தான் கட்டிய வசந்த மாளிகையை இடித்து தரைமட்டமாக்கி விட்டு விஷம் குடித்து உயிர் துறப்பதாக கிளைமாக்ஸ் அமைக்கப்பட்டிருக்கிறது என்று ஒரு சாரார் சொல்லிக் கொண்டிருந்தனர். வசந்த மாளிகை செப்டம்பர் 29 ரிலீஸ் மதுரையில் நியூசினிமாவில் வெளியாகிறது என்று பத்திரிக்கை விளம்பரம் வந்துவிட்டது
நமக்கு எப்போதும் மகிழ்ச்சி தொடர்ந்து வந்தால் அதன் பின்னாலேயே வருத்தம் வருவது வழக்கம்தானே! இதில் பெரும்பாலான நேரங்களில் இந்த வருத்தமும் கோவமும் நமது ஆட்களாலேயே வரவழைக்கபப்டுவது நாம் வாடிக்கையாக கண்ட ஒன்று. அது வசந்த மாளிகைக்கும் நடந்தது. வசந்த மாளிகை ரிலீஸ் ஆகப் போகிறது என்ற சந்தோஷத்திற்கு நடுவே அது சென்னை சேலம் போன்ற பல ஊர்களில் எந்தெந்த திரையரங்குகளிலெல்லாம் பட்டிக்காடா பட்டணமா படம் மிகப் பிரமாதமாக ஓடிக் கொண்டிருந்ததோ அதே அரங்குகளில் வசந்த மாளிகை வெளியாகிறது என்பதுதான் அந்த வருத்தத்துக்குரிய கோவத்தை கிளறிய செய்தி.
நமது படங்களைப் பொறுத்தவரை குறிப்பாக சென்னை சாந்தி போன்ற அரங்கில் நடிகர் திலகத்தின் படம் எவ்வளவு நன்றாக ஓடிக் கொண்டிருந்தாலும் நடிகர் திலகத்தின் அடுத்த படம் வரும்போது ஓடிக் கொண்டிருக்கும் படத்தை எடுத்துவிட்டு புதிய படத்தை வெளியிடுவது என்பது காலம் காலமாக நடந்து வருவதுதான். சென்னையை பொறுத்தவரை சாந்தி கிரௌன் புவனேஸ்வரியில் பட்டிக்காடா பட்டணமா திரைப்படம் தர்மம் எங்கே, தவப்புதல்வன் என்ற இரண்டு படங்களிடமிருந்து தப்பித்ததே பெரிய விஷயம் எனும்போது வசந்த மாளிகைக்கும் எதிராக தாக்கு பிடிக்க முடியும் என நினைப்பதில் அர்த்தமில்லை என்ற போதிலும் பட்டிக்காடா பட்டணமா நான்கு ஊர்களில் [சென்னை, மதுரை, திருச்சி மற்றும் சேலம் நகரங்களில்] வெள்ளி விழா காணும் என நினைத்திருக்க வசந்த மாளிகையின் புண்ணியத்தினால் மற்ற மூன்று ஊர்களில் ஷிப்டிங் செய்யப்பட்டு வெள்ளி விழா கொண்டாட மதுரையில் மட்டும் நேரிடையாகவே வெள்ளி விழா கொண்டாடியது.
செப்டம்பர் 29 படம் என்றவுடன் ஓபனிங் ஷோ போவதற்கான எங்களின் முயற்சிகள் ஆரம்பித்தன. காலாண்டு தேர்வு முடிந்து [Quarterly Exams] விடுமுறை காலம் என்பதனால் ஒரு பெரிய நிம்மதி. ஆனால் அந்த 1972-ஐ பொறுத்தவரை ஓபனிங் ஷோ டிக்கெட்டுக்கும் எனக்கும் ஏழாம் பொருத்தம் என்பது இந்தப் படத்திற்கும் தொடர்ந்தது.
இந்த தொடரில் பலமுறை நான் மன்ற டோக்கன் டிக்கெட்டுகள் பற்றி குறிப்பிட்டு எழுதியிருக்கிறேன். பிற்காலத்தில் ஒரு காட்சியை மட்டும் ஒதுக்கி அந்த ஷோவிற்குண்டான அனைத்து டிக்கெட்டுகளும் மன்றத்திடம் கொடுக்கப்பட்டு அவை விற்பனை செய்யப்படுவது அனைவரும் அறிந்திருக்க கூடும். அன்றைய நாட்களில் ஒவ்வொரு காட்சிக்கும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே டிக்கெட்டுகள் மன்றத்தினரிடம் கொடுக்கப்பட்டு அவை ரசிகர்களுக்கு அல்லது கேட்பவர்களுக்கு விற்பனை செய்யப்படுவது வழக்கம். நான் முன்பே குறிப்பிட்டிருப்பது போல் எங்களைப் போன்றவர்களுக்கு இதில் உள்ள மிகப் பெரிய advantage என்னவென்றால் வரிசையில் நின்று கஷ்டப்பட வேண்டாம். அதுவும் தவிர மன்றத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும் என்ற அவசியமுமில்லை. என் கஸினுக்கு மன்ற ஆட்களை தெரியும் என்பதனால் வாங்கி விடுவோம். இந்த டிக்கெட்டுகள் ரீலிசிற்கு ஒரு வாரம் முன்னதாக கொடுக்க ஆரம்பிப்பார்கள்.
செப்டம்பர் 29 வெள்ளிக்கிழமை படம் ரிலீஸ் 1972-ல் முதன்முறையாக வெள்ளிக்கிழமை படம் ரிலீஸ். 72-ல் முதல் படமான ராஜா ஜனவரி 26 ரிலீஸ். அது புதன்கிழமை. அதன் பிறகு வெளியான நான்கு படங்களும் [ஞான ஒளி, பட்டிக்காடா பட்டணமா, தர்மம் எங்கே மற்றும் தவப்புதல்வன்] சனிக்கிழமை வெளியானதால் தானாகவே முதல் நாள் 4 காட்சிகள் என்று ஆகிவிட்டது. ஆனால் இது வெள்ளிக்கிழமை என்பதனால் 3 காட்சிகள்தான் இருக்குமா அல்லது காலைக்காட்சி போடுவார்களா என்ற சந்தேகம் இருந்தது. அன்று 4 காட்சிகள் என்று விநியோகஸ்தர் தரப்பிலிருந்து உறுதிப்படுத்தப்பட மார்னிங் ஷோதான் ஓபனிங் ஷோ என்பது confirm ஆனது.
ஸ்கூல் வேறு லீவ் ஆகவே ஓபனிங் ஷோ டோக்கன் வாங்கி விட வேண்டும் என்று முடிவு செய்தோம் நமக்குதான் அனைவரையும் தெரியுமே அது மட்டுமல்ல இரண்டு டிக்கெட்டுகள்தானே என்ற நினைப்பில் என் கஸின் சற்று தாமதமாக போய் விட ஓபனிங் ஷோ டிக்கெட்டுகள் எல்லாம் விற்று விட்டன. அன்றைய நாட்களில் ரசிகர்களின் முதல் சாய்ஸ் ஓபனிங் ஷோவாக இருக்கும். அதற்கு அடுத்த சாய்ஸ் நைட் ஷோ. பிறகு ஈவினிங் ஷோ. கடைசி சாய்ஸ்தான் மாட்னி ஷோ. எவ்வளவு முயற்சித்தும் ஓபனிங் ஷோ டிக்கெட் கிடைக்கவில்லை. மாட்னி ஷோ டிக்கெட் மட்டும்தான் இருந்தது என்பதனால் அதை வாங்கிக் கொண்டு வந்துவிட்டான். எப்படியாவது ஓபனிங் ஷோ டிக்கெட்டுகள் தேற்றி விடலாம் என்று ஒரு நம்பிக்கை. ஆனால் எவ்வளவு முயற்சித்தும் மார்னிங் ஷோ டிக்கெட் கிடைக்கவேயில்லை. வீட்டருகே நியூசினிமா தியேட்டர் என்பதனால் காலையில் தியேட்டர் பக்கம் போய் பார்த்தோம். பயங்கரமான கூட்டம். தெரிந்தவர்கள் யாரைக் கேட்டாலும் இல்லை இல்லை என்றே கை விரித்து விட்டார்கள். ராஜா, பட்டிக்காடா பட்டணமா தர்மம் எங்கே போன்ற படங்களுக்கு எங்களுக்கு உதவி செய்த அதிர்ஷ்டம் இந்த முறை கை கொடுக்கவில்லை.
எப்படா 1 மணி ஆகும் என்று காத்திருந்து வீட்டை விட்டு கிளம்பி தியேட்டருக்கு போய் விட்டோம். 1.15 மணி வாக்கில் தியேட்டரின் மெயின் கேட் திறந்து வைக்கப்பட்டது. கொஞ்சம் கொஞ்சமாக ஆட்கள் வெளியே வர ஆரம்பிக்க திடீரென்று ஒரு பெரிய கூட்டம் வெளியே வந்து சந்தோஷக் கூச்சலிட பட்டாஸ் வாலாக்கள் வெடித்து சிதற ஆரம்பித்தன. வெளியே வருபவர்கள் அப்படியே உற்சாகமும் சந்தோஷமும் துள்ள படம் டாப் என்று ரிசல்ட் சொல்ல (நான் ஏற்கனவே எழுதியிருந்தது போல சூப்பர் என்ற வார்த்தை அன்றைய காலகட்டத்தில் தமிழ் அகராதியில் சேர்க்கப்பட்டிருக்கவில்லை) அந்த ஏரியாவே ஜெகஜோதியானது.
தெரிந்தவர்கள் முகம் தென்பட அவர்களிடம் படம் பற்றி கேட்கிறோம். அந்நேரம் கஸினின் நண்பர்கள் குழாம் ஒன்று படம் பார்த்துவிட்டு வெளியே வருகிறது. அதில் ஒருவர் என் கஸினிடம் " காலையிலே எங்கடா போனே? டிக்கெட் எக்ஸ்ட்ரா இருந்தது. சரி உனக்கு கொடுக்கலாம்னு உங்க வீட்டுக்கு வந்தேன். நீ வெளியே போயிட்டேன்னு சொன்னாங்க. தியேட்டருக்கு வந்து பார்த்தேன். உன்னை காணோம். நம்ம பசங்க அவன் (என் கஸின் பெயர் சொல்லி) எப்படியாவது டிக்கெட் வாங்கியிருப்பான்னு சொன்னதனாலே அதை வேற ஆட்களுக்கு கொடுத்துட்டேன்" என்று சொல்ல எத்தனை டிக்கெட்-னு என் கஸின் கேட்க இரண்டு எக்ஸ்ட்ரா டிக்கெட் இருந்ததுனு நண்பர் சொல்ல எங்களுக்கு எப்படி இருந்திருக்கும் என்பது நான் விளக்காமலே அனைவருக்கும் புரியும் என நினைக்கிறேன். நாங்கள் காலையில் தியேட்டர் போய் டிக்கெட்டுகளுக்காக அலைந்த நேரத்தில் அந்த நண்பர் எங்கள் வீட்டிற்கு வந்திருக்கிறார்.
அவர்களுடன் பேசிக் கொண்டிருந்துவிட்டு நேரமாகி விட்ட காரணத்தினால் நாங்கள் உள்ளே செல்வதற்கு மெயின் கேட் பக்கத்தில் இருக்கும் சைடு கேட் அருகே சென்றோம். மன்ற டோக்கன் டிக்கெட்டுகள் வாங்கியவர்கள் அனைவரும் அந்த கேட் வழியாகதான் போக வேண்டும் என்று சொல்லி விட்டதால் அங்கே போய் நின்றோம். கையில் டிக்கெட் இருந்தும் உள்ளே போவதற்கு நாங்கள் பட்ட பாடு?
நியூசினிமா தியேட்டர் என்பது நீளவாக்கில் அமைந்த தியேட்டர் கட்டிடம். தியேட்டரின் எதிரே அதே நீளவாக்கில் அமைக்கப்பட்டிருக்கும் ஜான்சி ராணி பூங்கா. தியேட்டருக்கும் ஜான்சி ராணி பார்க்கிற்கும் இடையில் ஒரு சின்ன சந்து. அந்த குறுகிய இடத்தில்தான் மக்கள் வரிசையில் நிற்க வேண்டும். நான் குறிப்பிடும் சைடு கேட் என்பது பொதுவாக பெண்கள் உள்ளே போகும் வழி. அந்த வழியாகத்தான் மன்ற டோக்கன்களும் போக வேண்டும் என்று அரங்க நிர்வாகத்தினர் முடிவெடுத்ததால் வேறொரு பிரச்சனை வந்தது. பெண்களும் அப்படிதான் போக வேண்டும் என்பதால் பெண்கள் டிக்கெட்டுகள் கொடுத்து முடிக்கும்வரை மன்ற டோக்கன்களை உள்ளே அனுமதிப்பதில்லை என்ற முடிவுதான் அது. இதனால் என்னவாயிற்று என்றால் ஒரே நேரத்தில் பெண்களும் மன்ற டோக்கன் வைத்திருந்த ஆண்களும் மன்ற டோக்கனோ அல்லது வேறு டிக்கெட்டோ கையில் இல்லாமல் ஆனால் இருப்பது போல் நடித்து எப்படியாவது உள்ளே புகுந்து பிறகு டிக்கெட் வாங்கும் முயற்சியில் ஈடுபடலாம் என்ற நினைப்பில் இருந்த ஆட்களும் ஒரே நேரத்தில் முட்டி மோத அங்கே பெரிய தள்ளு முள்ளே நடந்தது. மன்ற டோக்கன் வைத்திருந்த ஒரு சிலரை உள்ளே அனுமதிக்க அதை பயன்படுத்திக் கொண்டு வேறு சிலர் உள்ளே நுழைய அதை கட்டுப்படுத்த முடியாமல் தியேட்டர் ஊழியர்கள் திணற இந்த களேபரத்தை கண்ட போலீஸ் லாத்தி வீச திரையரங்கம் அமைந்திருக்கும் இடமே ஒரு சின்ன சந்து என்பதால் கூட்டம் இரண்டு பக்கம் சிதற அங்கே ஒரு கலவர சூழல்.
டிக்கெட்டுகள் கையில் இருந்தும் உள்ளே போக முடியவிலையே என்ற பிரச்னை எங்களுக்கு. இருக்கும் சூழலை பார்த்தால் எங்களை உள்ளே போக விடுவார்களா என்ற பயம் வேறு. படத்தின் முதல் காட்சியே நடிகர் திலகத்தின் அறிமுக காட்சி அதுவும் பாடல் காட்சி என்ற விவரத்தையும் ஓபனிங் ஷோ பார்த்தவர்கள் சொல்லி விட்டார்களா, அதை மிஸ் பண்ணி விடப் போகிறோமோ என்ற கவலை, மேலும் ஒருவர் படத்தின் டைட்டில் போடுவதே டாப். ராஜாவை விட டைட்டில் காட்சி இதில் பிரமாதம் என்று வேறு சொல்லியிருந்தார். அத்தனையும் மிஸ் பண்ணப் போகிறோம் என்றே முடிவு கட்டி விட்டோம். அப்போது அங்கே இருந்த ஒருவரை மறக்கவே முடியாது. அந்த ரசிகர் காலில் அடிபட்டு blisters என்று சொல்வார்களே அது போன்று வெடிப்புகள் அதன் காரணமாக ஏற்பட்ட கொப்புளங்கள் என்று காலே ரணகளமாக இருக்கிறது. அந்த நிலையிலும் காலில் செருப்பு கூட இல்லாமல் அவரும் படம் பார்க்க அந்த சைடு கேட் வழியாக உள்ளே நுழைய முயற்சி செய்துக் கொண்டிருக்கிறார். அவர் காலை மிதித்து விடப் போகிறோமே என்ற பயத்தில் நாங்கள் சற்று விலகி நின்று உள்ளே போக முயற்சி செய்ய இதை அறியாத வேறு பலர் அந்த gap-ல் புகுந்து விட (அவர் கத்தினாரோ இல்லையோ) நாங்கள் கால் கால் என்று (காள் காள் என்று!) கத்தியது 45 வருடங்களுக்கு பிறகும் பசுமையாக நினைவில் இருக்கிறது.
ஒரு வழியாக மணி கதவு தாள் திறக்க உள்ளே ஓடி போய் டோக்கனை மாற்றி டிக்கெட் வாங்கி கொண்டு அரங்கத்திற்கு உள்ளே நுழைந்து இடம் பிடித்து அப்பா படம் ஆரம்பிப்பதற்கு முன் வந்து உட்கார்ந்து விட்டோம் என்று ஆசுவாச பெருமூச்சும் படம் பார்க்க போகும் ஆவலுமாய் திரையையே பார்த்துக் கொண்டிருக்கிறோம். பெல் அடித்து விள்க்குகள் அணைக்கப்பட்டு அரங்கத்தின் வாசல்களில் தொங்கவிடப்பட்டிருக்கும் திரைச்சீலைகள் மூடப்பட ஆரவார புயல் அரங்கத்தில் மையம் கொள்ள சென்சார் சர்டிபிகேட் திரையில் ஒளிர - - - -
(நாளை தொடரும்)
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...f5&oe=5A42B6DF
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...f9&oe=5A801414
சிவாஜி மணி மண்டபம்: அரசின் 'அலட்சியம்' ஏன்?
மறைந்த பிரபல நடிகர் சிவாஜி கணேசனுக்கு சென்னை அடையாறு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நினைவு மண்டபத்தைத் திறந்துவைக்க தமிழக முதல்வரோ, துணை முதல்வரோ செல்லத் திட்டமிடாமல் செய்தி மக்கள் தொடர்புத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு திறந்துவைப்பார் என்ற அரசின் அறிவிப்பு ஏமாற்றத்தை அளிப்பதாக சிவாஜி குடும்பத்தினரும், ரசிகர்களும் தெரிவித்துள்ளனர்.
https://ichef.bbci.co.uk/news/624/cp...9daac703c5.jpgபடத்தின் காப்புரிமை படத்தின் காப்புரிமைAVMPRODUCTIONS Image caption பராசக்தி படத்தில் சிவாஜி.
முதல்வர் ஏன் பங்கேற்கவில்லை என்று அமைச்சர் கடம்பூர் ராஜூவைத் தொடர்பு கொண்டு பிபிசி கேட்டபோது, அவர் "இது ஒரு வழக்கமான நிகழ்ச்சி. ரூ.2.8 கோடி செலவில், முக்கியமான பகுதியில் நினைவு மண்டபம் கட்டப்பட்டுள்ளது. அந்தத் துறையின் அமைச்சராக நான் அதைத் திறக்கிறேன். அம்மா இருந்திருந்தால் அவர் விடியோ கான்ஃபரன்ஸ் மூலம் திறந்திருப்பார். இப்போது நாங்கள் நேரில் சென்று திறக்கிறோம்," என்றார்.
சசிகலா குடும்பத்தை தொடர்பு படுத்தி...
அரசியல், திரைப்பட விமர்சகரான சுபகுணராஜனைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, அவர் "சிவாஜி தமிழகத்தின் மிக முக்கியமான திரைப்பட ஆளுமை. எத்தனை காலம் கழித்தாலும் சிவாஜியின் திரைப் பங்களிப்பு நினைவுகூரப்படும். ஆய்வுக்குள்ளாகும். தமிழ்நாட்டின் குறிப்பிட்ட தலைமுறைகளைச் சேர்ந்தவர்கள் சிவாஜியை தம் குடும்பத்தில் ஒருவராக அடையாளம் கண்டனர். அவர் நடித்த ஏதோ ஒரு படத்தின் ஏதோ ஒரு பாத்திரத்தோடு எல்லோரும் தங்களை அடையாளப்படுத்திக்கொள்வர்," என்றார்.
தம்மைப் போன்ற பலருக்கும் அவரது உருவம் தந்தைமையை உருவகப்படுத்தும் உருவம் என்று கூறிய அவர், "பல சிக்கலான காரணங்களால் ஜெயலலிதா சிவாஜிக்கு உரிய மரியாதையைத் தரத் தவறினார். இப்போதுள்ள அரசு, சிவாஜியை சசிகலா குடும்பத்தோடு அடையாளம் காண விரும்புகிறார்களோ என்று தோன்றுகிறது. மற்றபடி அடி நீரோட்டத்தில் என்ன இருக்கிறது என்று தெரியாது. இது உண்மையில் வேதனையாக இருக்கிறது. அவருக்கு மரியாதை செய்திருந்தால் உண்மையில் இவர்களுக்குத்தான் மரியாதை கிடைத்திருக்கும்," என்றார்.
ஆனால், இந்த அரசு அமைத்திருக்கிற மண்டபமும், திறப்பு விழாவும் அவருக்கு மரியாதை செய்வதற்குப் பதிலாக அவமரியாதை செய்யும் விதத்தில் உள்ளன என்றார் சுபகுணராஜன்.
கருணாநிதி தொடர்பு
எழுத்தாளரும், விமர்சகருமான தியோடர் பாஸ்கரனைத் தொடர்புகொண்டு கேட்டபோது, மண்டபத் திறப்பு விழாவுக்கு போதிய முக்கியத்துவம் தரப்படவில்லையோ என்ற வாதத்தை அவர் மறுத்தார்.
"ஒரு காலத்தில் முக்கிய நட்சத்திரமாக விளங்குகிறவர்கள் காலப்போக்கில் முக்கியத்துவத்தை இழப்பது இயல்பாக நடக்கத்தான் செய்கிறது. எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் பங்கேற்க ஆள்கள் வருவதில்லை, அரசே மாணவர்களை அழைத்துவர வேண்டிய சூழல் இருக்கிறது என்பதைக் காணலாம்" என்றார் அவர்.
https://ichef-1.bbci.co.uk/news/624/...cf7e300e68.jpgImage caption அகற்றப்பட்ட சிவாஜி சிலை. இந்நிகழ்ச்சியில் பங்கேற்க முதல்வர் ஆர்வம் காட்டாதது குறித்துக் கேட்டபோது, "சிவாஜியின் ரசிகர்களுக்கென்று அரசியல் வலிமை ஏதுமில்லை. அதுவுமில்லாமல், இவர்கள் சிவாஜியை கருணாநிதியின் ஆதரவாளராகப் பார்க்கிறார்கள்," என்றார் அவர்.
சிவாஜியையும், அவரது குடும்பத்தாரையும் எடப்பாடி தலைமையிலான அரசு சசிகலாவோடு இணைத்துப் பார்ப்பதாகவே பல தரப்பினரும் இந்தப் புறக்கணிப்பைப் புரிந்துகொள்கின்றனர்.
மேடையைப் பகிரத் தயக்கம்
சிவாஜி குடும்பத்தாரோடு ஒரு மேடையைப் பகிர்ந்துகொள்வதை முதல்வரோ, துணை முதல்வரோ விரும்பவில்லை என்று பெயர் வெளியிட விரும்பாத சிவாஜி ரசிகர் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார்.
கடந்த திமுக ஆட்சியின்போது அவருக்கு சென்னை கடற்கரை சாலையில் சிலை வைக்கப்பட்டது. ஜெயலிதா முதல்வராக இருந்தபோது சர்ச்சைக்குரிய முறையில் அந்தச் சிலை அகற்றப்பட்டது.
அவருக்கு உரிய முறையில் மணி மண்டபம் அமைக்கப்படும் என்று அப்போது தெரிவிக்கப்பட்டது.
சென்னை அடையாறு பகுதியில் 2.8 கோடி ரூபாய் செலவில் தமிழக அரசு மணி மண்டபமும் அமைத்தது. அதன் திறப்பு விழா அக்டோபர் 1ம் தேதி நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில், செய்தி மக்கள் தொடர்புத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ இந்த மண்டபத்தை திறப்பார் என்று அந்த அறிவிப்பில் உள்ளது.
B B C tamil
Jahir Hussain
ஒரு லாஜிக் புரியவில்லை,,, எம் ஜி ஆரை பாராட்டும் எல்லோரும் ஏன் சிவாஜியை மட்டம் தட்டியே எம் ஜி ஆரை பாராட்டுகிறார்கள்?, சிவாஜி அரசியல் வேறு வகையானது,,, எத்தனை அவமானங்கள் ஏற்பட்ட போதும் தனிமனிதனை முன்னிறுத்தி அரசியல் செய்யவில்லை,, காமராஜரின் சாதனைகளை சொல்லி சொல்லித்தான் அவர் காமராஜர் பின்னால் நின்றார்,,, அவருக்குப் பினனால் பல லட்சக்கணக்கான ரசிகர்களைக் கொண்ட படை நின்றது,, காலம் முழுதும் அவர் காங்கிரஸுக்காக உழைத்தார்,,, அவர் காங்கிரஸில் உழைத்த காலங்களில் அவரால் காங்கிரஸுக்கு கிடைத...்த வெற்றிகளை வசதியாக மறந்து விடுகிறார்கள்,,, மாறாக நன்றாக ஞாபகப் படுத்தி அவர் ஏற்றுக கொண்ட தோல்விகளைப் பற்றி மட்டுமே கேலிபேசுகிறார்கள்,,, அரசியலில் தோல்வியடைந்த யாரும் கேலிக்குரிய மனிதர்கள் அல்ல,,, மாறாக கொள்கைகளில் தோற்றுப் போன தலைவர்களே உண்மையான கேலிக்குரியர்கள்,,, எம் ஜி ஆரிடம் வலுவான கொள்கைப் பிடிப்பு இருந்திருந்தால் அ தி முக இந்த நேரம் கேலிக்குரிய கட்சியாக கிண்டல்களுக்கு ஆட்பட்டு இருக்காது,, சிவாஜி தான் மரணிக்கும் வரையில் கொண்ட கொள்கையாலேயே உறுதியாக இருந்தவர்,, அதுதானே உண்மையான வெற்றியே தவிர,,, பதவிக்காக ஜெயிப்பது எல்லாம் எவ்வித வெற்றியும் அல்ல,,, ஆட்சி அதிகாரத்தில் காமராஜர் இருந்த போது எந்தவித பதவியையும் அடையும் செல்வாக்கு பெற்றிருந்தவர் சிவாஜி,,, ஆனால் எதையும் விரும்பியதில்லை,, காமராஜரிடம் கேட்டதும் இல்லை,, எதற்காகவும் கையேந்தியதில்லை,, இன்று ஆட்சியதிகாரம் இல்லை என்பதற்காக யாரும் எதையும் பேசிவிட செய்துவிடலாம் என்பது மடமை,,. காலம் திரும்புகிறது,. இவர்கள் ஊழலை உற்று நோக்குகிறது, காமராஜர் போன்ற மஹான்களின் ஆட்சி வராதா என்ற ஏக்கம் மனதை தாக்குகிறது,, இதுவே சிவாஜி அவர்கள் தேர்ந்தெடுத்துக் கொண்ட கொள்கையின் "வெற்றி" ஆகும்,
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...31&oe=5A3C8495
நடிகர் திலகத்தின் 159 வது வெற்றிக்காவியம்
வசந்தமாளிகை வெளிவந்த நாள் இன்று
வசந்தமாளிகை 29 செப்ரெம்பர் 1972
10.01.1973
திரையிடப்பட்ட
வசந்த மாளிகை
யாழ்நகர்
வெலிங்டன்.....208 ..நாட்கள்
லிடோ...............28......நாட்கள்
ஓடிமுடிய பெற்ற மொத்த வசூல்
5.54.419.00
யாழ்நகரில் முதல்முதலாக 5லட்சத்தை தாண்டிய படம் வசந்த மானிகை
இரண்டாவதாக 5லட்சத்தை தாண்டிய படம் பைலட் பிரேம்நாத்
மூன்றாவதாக 5 லட்சத்தை தாண்டிய படம் உத்தமன்
சாதனையின் சிகரம் சிவாஜி சிவாஜி சிவாஜி
http://www.sivajiganesan.in/Images/100316_5.jpg
https://upload.wikimedia.org/wikiped...ha_Maligai.jpg
http://www.behindwoods.com/new-image...ligai-0109.jpg
இன்று பிற்பகல் 2 மணிக்கு வசந்த் தொலைக்காட்சியில்,
* சரஸ்வதி சபதம்*
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...23&oe=5A43CB35
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...53&oe=5A4C388D
Sekar Parasuram
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...90&oe=5A546C79
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...3c&oe=5A51E526
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...31&oe=5A52FD47
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...94&oe=5A41AF62
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...39&oe=5A445404
+5
Sekar K added 9 new photos. · 14 hrs ·
முகநூலில் ஒரு அன்பர் கேள்வி கேட்டிருந்தார் சிவாஜி அவர்கள் நாட்டிற்கு என்ன செய்தார் என்று?
அவருக்கு சொல்லக்கடமைப்பட்டுள்ளோம்.சிவாஜி அய்யா அவர்கள் நாட்டிற்கு என்ன...செய்தார் என்று இதே கூறுகிறேன். இது உண்மை. ஏனென்றால் அவர் இருக்கும்போது தான் கொடுத்ததை யாருக்கும் தெரியக்கூடாது என்று சொல்லி தற்போது அவர் காலமானபின்தான் அவர் என்னென்ன செய்தார் நாட்டுக்கு என்று.
1. சிவாஜி அவர்கள் அன்றைய பாரத பிரதமர் நேருவிடம் நடிப்பின் ராஜா சிவாஜி 1959.ல் மதிய உணவு திட்டத்திற்கு ரூபாய் ஒரு லட்சம் (இன்றைய மதிப்பில் ஒரு கோடி) வழங்கினார்.
2. 1961ல் தாம்பரத்தில் காசநோய் மருத்துவமனை கட்டுவதற்காக ரூபாய் ஒரு லட்சம் வழங்கினார்.
3. 1962ல் இந்திய - சீனா போரின்போது ஒரு பெருந்தொகையை யுத்த நிதியாக வழங்கினார்.
4. புதுவை அரசின் பகலுணவு திட்டத்திற்கு ரூபாய் 1 லட்சம் வழங்கினார்.
5. நேருஜி நினைவு அறக்கட்டளை நிதிக்காக ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் வழங்கினார்.
6. பெங்களூரில் நாடகை அரங்கம் கட்ட ரூபாய் இரண்டு லட்சம் வழங்கினார்.
7. 1960ல் பெருவெள்ளம் சென்னையை சூழ்ந்தபோது காமராஜர் முன்னிலையில் 1 லட்சம் உணவு பொட்டலங்களை அவரது இல்லத்தில் தயாரித்து கொடுத்ததோடு 800 மூட்டை அரிசியும் அள்ளிகொடுத்துள்ளார்.
8.1968-ல் உலகத்தமிழ்மாநாடு பேரறிஞர் அண்ணா அவர்களின் தலைமையில் நடைபெற்றபோது சென்னை கடற்கரையில் 10 தமிழறிஞர்களுக்கு சிலை வைக்கப்பட்டது. அதிலே திக்கெட்டும் தமிழ் பரப்பிய திருவள்ளுவருக்கு சிலை அமைத்து தந்தது சிங்க தமிழன் சிவாஜி.
9. சிலையும் அமைத்து உலக தமிழ மாநாட்டிற்கு நிதியாக ரூபாய் 5 லட்சம் (இன்றைய மதிப்பு 5 கோடி) அள்ளித்தந்து அண்ணாவையே அசர வைத்தவர் சிவாஜி.
10. 1965ல் இந்தியாவுடன் பாகிஸ்தான் போரிட்டபோது அன்றைய பிரதமர் லால்பகதூர் சாஸ்திரியிடம் திருமதி. கமலா அம்மையாரின் 400 பவுன் தங்க நகைகளையும், பெங்களூரில் சிவாஜிக்கு பரிசாக கிடைத்த 100 பவுன் தங்க பேனாவையும், மொத்தம் 500 பவுன் இன்றைய மதிப்பு ரூ.1,00,00,000 கொடுத்து தேசத்தையே திரும்பி பார்க்க வைத்தவர்.
11.யுத்த நிதி அன்றைய முதலமைச்சர் திருமகு. பக்தவச்சலத்திடம் 1 லட்சம் நிதி வழங்கினார். மீண்டும் தமிழகமெங்கும் நாடகங்கள் நடத்தி தன்னுடைய வியர்வையில் விளைந்த வெள்ளிகாசுகளாம் 17 லட்சம் (இன்றைய மதிப்பு 100 கோடி) வாரி வழங்கி தேசம் வெற்றிபெற துணை நின்றவர் சிவாஜி.
12. வெள்ளிவழா கண்ட பாசமலர் திரைப்படம் இந்தியில் ராக்கி என்ற பெயரில் சிவாஜி பிலிம்ஸ் தயாரித்து திரையிட்டு நாடு முழுவதும் வசூலான ஒரு நாள் தொகையை மீண்டும் யுத்த நிதியாக வழங்கி பெருமை சேர்த்தவர்.
13. 1972ல் ராஜா திரைப்படத்தின் மூலம் வசூலான ஒரு நாள் தொகையை விமானபடையில் உயிர்நீத்த வீரர்களின் குடும்பங்களுக்கு வழங்கினார் சிவாஜி.
14.வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகத்தை 112 முறை தொடர்ந்து நடத்தி அதன் மூலம் வசூலான 32 லட்சத்தை (இன்றைய மதிப்பு 300 கோடி) பல கல்லூரிகளுக்கு வாரி வழங்கி கல்வியின் சிறப்பை உலகிற்கு உணர்த்தினார்.
15.1961ல் மும்பையில் பல பகுதியில் நாடகம் நடத்தியபோது பல லட்சம் மக்கள் திரண்டனர். அதன் மூலம் கிடைத்த 5 லட்சத்தை மகாராஷ்டிரா அரசிடம் வழங்கினார்.
16. தனக்கு சொந்தமான கோடம்பாக்கம் நிலத்தை அன்றைய மதிப்பு பல லட்சம் இன்றைய மதிப்பு பல கோடி நலிந்த நடிகர் நடிகைகள் வீடு கட்டிக்கொள்ள இலவசமாக வழங்கி நடிகர்களின் காவலராய் திகழ்ந்தவர்.
17.தன்னை வைத்து முதல் படம் எடுத்த திரு. பெருமாள் முதலியார் அவர்களின் வீட்டிற்கு வருடந்தோறும் பொங்கலன்று சென்று சீர் செய்து அவர்கள் குடும்பத்திற்கு தன் இறுதி மூச்சு உள்ளவரை உதவிவந்தவர் நடிகர் திலகம். நடிகர் திலகம் மறைந்த பின்பும் அண்ணன், திரு. ராம்குமார், அண்ணன். திரு. பிரபு குடும்பத்துடன் சென்று வேலூரில் உள்ள திரு. பெருமாள் முதலியார் குடும்பத்திற்கு சீர் செய்து நன்றி செலுத்தி நானிலத்திற்கோர் எடுத்துக்காட்டாய் திகழ்ந்து வருகிறது அன்னை இல்லம்.
இதுபோல் இன்னும் ஏராளமாய் நாட்டிற்கு உதவி வந்தவர் நடிகர் திலகம். எனவே அவரைப்பற்றி தெரியவில்லைஎன்றால் அவரைப்பற்றி தெரிந்து இருந்தால் இப்படியெல்லாம் யாரும் நினைக்கமாட்டார்கள். அவ்வாறு சொன்னவர்களை தெய்வம் மன்னிக்காது.
Sekar Parasuram
நடிகர் திலகம் பற்றிய செய்திகள், மணி மண்டபம் தொடர்பாக அனைத்து செய்தி சேனல்களும் ஒளி பரப்பி வருகின்றன, அதன் காரணம் இளைய திலகம் அவர்களின் அறிவிப்பு, மற்றும் நடிகர் திலகம் சிவாஜி சமூக நலப்பேரவையின் தலைவர் திரு சந்திர சேகர் அவர்களின் அரசிற்கு எதிரான கண்டனமுமாகும், அதனால் தான் அனைத்து நடிகர் திலகத்தின் பக்தர்களும் அன்னை இல்லத்தை எதிர் நோக்குகிறார்கள்,
அதே தருணத்தில் நடிகர் திலகத்தின் திரைப்படங்கள் சமீபத்தில் ராஜபார்ட் ரங்கதுரை, சிவகாமியின் செல்வன் ஆகிய படங்கள் 100 நாட்களு...க்கு மேல் ஓடி வெற்றி விழாக்கள் மிகப் பிரமாண்ட அளவில் நடத்தப் பட்டன,
சமீபத்தில் ஆந்திரா மற்றும் வேலூர் காங்கேய நல்லூரில் திரு உருவச் சிலைகள் மூன்று இடங்களில் நிரு வப் பட்டு கோலாகலமாக விழாக்கள் நடத்தப் பட்டன,
இவையெல்லாம் ஊடகங்கள் கண்டுகொள்ளவில்லை,
ஊடகங்கள் பொறுத்த அளவில் அரசியல் தொடர்பு இருக்கும் பட்சத்தில் மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன
இந்தத் தருணத்தில் இப்போது உள்ள அரசியல் சூழலில் நடிகர் திலகம் பெயரிலான அரசியல் இயக்கங்களை ஒருங்கிணைப்பு செய்து இளைய திலகம் அவர்கள் நல் வழி காட்டிடும் பட்சத்தில் ஊடகங்கள் நம்மையே சுற்றும் என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை,
ஜெயக்குமார் போன்ற தலை மறைவு அரசியல்வாதிகள் பேசுவதற்கு அஞ்சுவார்கள்,
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...ad&oe=5A41C257
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...9e&oe=5A51A324
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...39&oe=5A8749B4
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...4c&oe=5A49FBB1
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...ca&oe=5A3DEDF8
Vasudevan Srirangarajan
திரு சேரன் அவர்களின் Whatsapp பதிவு[9/30, 6:23 PM] +91 95662 02582: தமிழகம் மட்டுமன்றி பிறமொழிகளிலும் வாழும் அத்துணை சிவாஜி ரசிகர்களின் இதயங்களில் உண்மையான மணிமண்டபம் உள்ளது.. யாராலும் அகற்றமுடியாத இடிக்கமுடியாத மணிமண்டபம்... அதுவே உண்மையான மணிமண்டபம்.. சிவாஜியை மக்களுக்கு ஞாபகப்படுத்த அவரின் திரைப்படங்கள் மட்டுமே தகுதியானது போதுமானது.. இந்த மணிமண்டபத்தை பார்த்து என் தலைவன் புகழ் பரவப்போகுது என நினைத்தால் அது முட்டாள்தனம்.. அவரை அடுத்த தலைமுறைக்கு கொண்டுசெல்லும் தகுதிகூட அவ...ருக்கே உண்டு.
[9/30, 6:27 PM] +91 95662 02582: கடந்த 15 ஆண்டுகளில் யார் வளர்த்தது அவர் புகழை.. யார் அவருக்காக குரல்கொடுத்து கர்ணன், சிவ்காமியின்செல்வன், ராஜபார்ட் ரங்கதுரை எல்லாம் மக்களிடம் ஏகோபித்த வரவேற்பு பெற்று கொண்டாடப்பட்டது.. வீணர்களே வாயை மூடிக்கொண்டு அமருங்கள்.. உங்க தாத்தாவுக்கே தண்ணி காட்டிய தலைவனுக்கு நீங்க அடையாளம் தர்றீங்கன்னு நினைக்கும்போதே காமெடியாக இருக்கிறது..
Subbiah
திரையில் மட்டுமே நடிக்கத்தெரிந்தவர் நடிகர்திலகம் என்று சொல்கிறார்கள்.என்னைப்பொருத்த வரை திரையில் கூட அவர் நடிக்கவில்லை.அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்தார் என்றுதான் சொல்வேன்.திரையில் நடிக்க வேண்டும் என்று அவர் நினைத்திருந்தால் சிலரைப்போல் நல்லவனாக மட்டுமே நடித்துவிட்டு போயிருப்பார்.கொடுக்கப்பட்ட கேரக்டரின் கதாபாத்திரமாக வாழ்ந்தார் சிம்மக்குரலோன் சிவாஜி கணேசன்.
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...80&oe=5A54805B
Murali Srinivas
வசந்த மாளிகை ரிலீஸ் நினைவலைகள் - பார்ட் II
நேற்று எழுதி நிறுத்திய இடம் முதல் நாள் மதியக் காட்சிக்கு டிக்கெட் வாங்கி படாதபாடு பட்டு உள்ளே சென்று அமர்ந்து படம் தொடங்குகிறது.
படத்தின் காட்சிகளுக்கு கிடைத்த வரவேற்பு பற்றி என்னவென்று சொல்வது? முதன் முதலில் பார்த்தபோது நிகழ்ந்ததவற்றை வர்ணிப்பது கடினம் என்றபோதிலும் முயற்சிக்கிறேன்.
பட டைட்டில் போடும்போது வசந்த மாளிகை என்று பெயர் காண்பிக்கப்படும்போது அது பல வண்ணங்களில் மின்னும். அந்த நாளிலும் சரி வரப்போகும் காலங்களிலும் சரி என்றுமே இந்த படம் மின்னும் என்பதைத்தான் அன்றே அது உணர்த்தியது என தோன்றும்.
ஒரு படத்தை பல முறை பார்த்து ரசிக்கும்போது பல புதிய ரசிக்கத்தகுந்த நுணுக்கங்கள் தென்படும். அது வாடிக்கை. ஆனால் ஒரு சில காட்சிகளோ அல்லது வசனங்களோ முதல் முறை பார்க்கும்போதே மனதிற்கு மிகவும் பிடித்து ரசிகர்களின் ஆமோதிப்பை பெற்று விடும். அந்த வகையில் வசந்த மாளிகை படத்தில் முதல்முறை பார்த்தபோதே பல காட்சிகளும் வசனங்களும் ஆரவாரத்தோடு வரவேற்கப்பட்டது.
ஒ மானிட ஜாதியே பாடல் காட்சி முடிந்து விமானம் இயந்திரக் கோளாறு காரணமாக ஆட்டம் காண அனைவரும் உயிர் பயத்தில் அலற தலைவர் மட்டும் சிரித்துக் கொண்டே "வாழ்க்கையிலே மிஸ் பண்ண கூடாததை போய் மிஸ் மிஸ்ங்கிறீங்களே" என்பது, நடிகர் திலகத்தின் பிறந்தநாளுக்கு விஎஸ் ராகவன் மாலையிட்டு வாழ்த்தும்போது "உன்னை மாதிரி நல்லவங்க ஆசி இருந்தா போதும் நூறு வயசு என்ன ஆயிரம் வயசு நல்லாயிருப்பேன்" பிறந்த நாள் பார்ட்டியின் முடிவில், வண்டி ரெடியா இருக்கு எஜமான், ஆனா இந்த வண்டி ஸ்டெடியா இல்லையேடா, ஒரு கார்பரேஷன் லாரியை கூட்டிட்டு வந்து எல்லாரையும் அள்ளி போட்டுட்டு போடா போன்ற வசனங்கள், ராமதாசோடு சண்டை போடும்போதே கண்ணாடி பார்த்து ஹேர் ஸ்டைலை சரி செய்வது, சரின்னா யாராயிருந்தாலும் டயலாக், நீச்சல் குளத்திலிருந்து ப்ளூ அண்ட் ப்ளூ ஷர்ட்,ஷார்ட்ஸ் கோகோ கிளாஸ் போட்டு வருவது, வானத்திலிருந்து எப்போ பூமிக்கு வந்த? வாட் மிருகம் வாட் காப்பாத்தினேன்? இவையெல்லாம் கைதட்டல் அள்ளியது. அது போல் சொத்துகளை பாகம் பிரிக்கும் காட்சிக்கு ("பத்திரத்தை படிக்கனுமுனு சொன்னவுடனே பெரிய துரை ஏன் சீர்றாரு, அப்போ இதிலே ஏதோ விஷயம் இருக்கு") அதிலும் வாணிஸ்ரீ இரண்டாம் முறை "எந்த விதமான பாத்யதையும் இல்லையென்று" என்று அழுத்தம் கொடுக்கும்போதும் அதற்கு அடுத்த சில நொடிகளில் நடிகர் திலகம் "அதைத்தான் அவங்க பாசமுன்னு சொல்றாங்க. நீ மோசமுன்னு நினைக்கிறியா" என்ற வசனத்திற்கெல்லாம் ஆர்ப்பாட்டம், அலறல். "பாசமா அது எங்கம்மா இங்கே இருக்கு?", "உங்கக்கா வரலையா?", "பெருங்குடியில் பிறந்தவன் டாக்டர்" "மனமா அது மாறுமா?", "விஸ்கியைதானே குடிக்கக் கூடாதுனு சொன்னே, விஷத்தை குடிக்கக்கூடாதுனு சொல்லலையே" பிற்காலத்தில் கல்வெட்டாய் பதிந்துப் போன வசனங்களெல்லாம் அந்த முதல் நாளிலேயே பிரமாதமாக வரவேற்கப்பட்டது. பாலமுருகன் நிச்சயமாக பெருமைப்பட்டுக் கொள்ளலாம். இவ்வளவு ஏன் அது நாள் வரை சாதாரண பெயர்களில் ஒரு பெயராக இருந்த "லதா" ஓவர் நைட்டில் பாப்புலர் ஆனதும், ஆண்கள் அனைவரும் லதா என்ற பெயர் கொண்டிருந்த பெண்களை "லத்தா" என்று விளித்ததும் வரலாறு.
ஓ மானிட ஜாதியே - ஸ்லோவாக ஒரு கவிதையை ராகத்தில் பாடுவது போல் இருக்கும். முத்தாய்ப்பாக எல்லோரும் சூரிய நமஸ்காரம் பண்ணுங்கோ. வாழ்த்தொலி அதிர்ந்தது.
ஏன் ஏன் பாடல்காட்சி முழுக்கவும் அரங்கத்தில் ஆட்கள் சீட்டில் அமரவேயில்லை. அலப்பறை அதிகமாகி அதிகமாகி உச்சகட்டமாக அதில் நான் சக்கரவர்த்தியடா என்ற அந்த கம்பீர போஸ் வந்தபோது வானம் இடிபட, பூமி பொடிபட என்றுதான் சொல்ல வேண்டும். இது போன்ற ஒரு ஆடல் பாடல் காட்சியை சொல்ல முடியுமா என்று மாற்று முகாம் ரசிகர்களோடு வாக்கு வாதம் செய்தது நினைவுக்கு வருகிறது.
குடிமகனே பாட்டிற்கு பின் பக்கமாக ஸ்டெப் போட்டு ஆடுவது, கலைமகள் கைப்பொருளே பாடலில் ஏனோ துடிக்கிறேன் வரியில் திரும்பி பார்ப்பதில் ஆரம்பித்து நடந்து படியிறங்கி ரூமுக்கு வரும் வரை, மயக்கமென்ன பாடலுக்கு தூணை பிடித்து நிற்கும் போஸ், ஸ்லோமோஷன் காட்சிகள், இரண்டு மனம் வேண்டுமில் கடவுளை தண்டிக்க என்ன வழி என்ற அந்த கை உயர்த்தல், யாருக்காக மொத்தமும், எதை சொல்வது எதை விடுவது. இவற்றுக்கெல்லாம் அரங்கத்தில் நடந்த அலப்பறையை வார்த்தைகளில் வர்ணிப்பது கடினம்.
இப்படி சொல்ல ஆரம்பித்தால் நான் முதலில் சொன்ன மாதிரி ஒவ்வொரு காட்சியையும் சொல்லிக் கொண்டே போக வேண்டியதுதான். வேறு படமாக இருந்தால் இன்னும் கொஞ்சம் காட்சிகளை பற்றி எழுதலாம். மாளிகை எனும்போது குறைந்தபட்சம் 10 முறையாவது பார்க்காத ரசிகர் இருக்க முடியாது என்றிருக்க அதுவும் காட்சிகளையும் வசனங்களையும் தூக்கத்தில் எழுப்பிக் கேட்டல் கூட சொல்லக் கூடியவர்கள் எனும்போது அதையெல்லாம் விவரிப்பது கொல்லன் தெருவில் ஊசி விற்பதற்கு சமம். ஒரே வரியில் சொல்ல வேண்டுமென்றால் எத்தனை வருடங்கள் ஆனாலும் அன்று முதல் இன்று வரை பட ஆரம்பம் முதல் முடிவு வரை ஒரே சுரத்தில் ஒரே அலைவரிசையில் ரசிகர்களால் ரசிக்கப்பட்ட படங்களில் முதலிடம் என்றுமே வசந்த மாளிகைக்குதான்.
படம் முடிந்து வெளியே வருகிறோம். வெளியே கடலலை போல் கூட்டம் அந்த தெருவையே ஆக்ரமித்து நிற்கிறது. இது போன்ற முதல் நாளில் படம் பார்த்துவிட்டு வரும்போது அடுத்த காட்சிக்கு வரிசை எந்தளவிற்கு நிற்கிறது என்பதை பார்ப்பதில் எனக்கு ஒரு curiosity உண்டு.
நியூசினிமாவைப் பொறுத்தவரை நான் முன்பே குறிப்பிட்டது போல் நீளம் கூடுதலாகவும் அகலம் குறைவாகவும் இருக்கும் ஒரு சின்ன தெருவில் அமைந்திருக்கும் தியேட்டர். மேற்கு பார்த்து அமைந்திருக்கும் தியேட்டர் வாசல். அந்த தெருவிற்கு இரண்டு பக்கமும் பாரலல் [Parallel] தெருக்களாக திண்டுக்கல் ரோடு/ நேதாஜி ரோடு ஒரு பக்கமும் மேங்காட்டுபொட்டலிலிருந்து ஆரம்பித்து நீளமாக செல்லும் தெற்காவணி மூலவீதி என்ற நகைகடை பஜார் மற்றொரு பக்கமுமாக அமைந்திருக்கும். ஆண்களுக்கான இரண்டு கீழ் வகுப்பு டிக்கெட் வரிசையும் எப்போதும் தியேட்டர் வாசலிலிருந்து ஆரம்பித்து திண்டுக்கல் ரோடு பக்கம் நிற்க வைக்கப்படும். மாடி என்று அழைக்கப்படும் பால்கனி டிக்கெட் வரிசையும் பெண்களுக்கான கேட் [நான் முன்பே குறிப்பிட்டது] இயல்பாகவே அரங்கத்தின் வலது பக்கம் அமைந்திருந்ததனால் அந்த வரிசை தெற்காவணி மூலவீதி பக்கமே நிற்க வைக்கப்படும்.
அன்றைய தினம் ஆண்களுக்கான மூன்று வரிசையில் கீழ் வகுப்பு டிக்கெட்டுக்களுக்கான ஒரு வரிசை தியேட்டர் அமைந்திருக்கும் தெரு முழுக்க கடந்து திண்டுக்கல் ரோட்டில் வலது புறம் திரும்பி மீனாட்சி அம்மன் கோவில் தெற்கு கோபுர வாசலுக்கு செல்லும் வழியெல்லாம் நீண்டு தியேட்டர் அமைந்திருக்கும் தெருவிற்கு பின்புறமாக அமைந்திருக்கும் மதார்கான் டபேதார் சந்து வரை நீண்டு நின்றது. கீழ் வகுப்பு டிக்கெட்டுக்களுக்கான மற்றொரு வரிசையோ திண்டுக்கல் ரோட்டில் இடது புறம் திரும்பி அந்த பிளாட்பாரத்தின் முடிவில் அமைந்திருந்த மாநகராட்சி அலுவலகம் வரை நின்றது. பால்கனி வரிசையோ தெற்காவணி மூல வீதியை தொடுகிறது. மிக பெரிய கூட்டம் என்பது சாதாரண வார்த்தை. அசாதாரண கூட்டம் என்பதே சரியாக இருக்கும்.
திண்டுக்கல் ரோட்டில் நான் முன்பே குறிப்பிட்ட மதார்கான் டபேதார் சந்திற்கு சற்று முன்னதாக ஒரு சிறிய உணவகம் அமைந்திருந்தது. அதன் உரிமையாளரின் மகன் [சசிகுமார் என்று பெயர்] பின்னாட்களில் கல்லூர்ரியில் என்னுடன் ஒரே வகுப்பில் படித்தான். அவன் கல்லூரியில் படிக்கும் காலத்தில் சொன்னது என்னவென்றால் வசந்த மாளிகை அதற்கு அடுத்தபடியாக எங்கள் தங்க ராஜா படங்களுக்கு நின்ற வரிசை போல் பார்த்ததேயில்லை என்பான். ஸ்கூலில் படிக்கும் காலத்திலேயே கடையில் வியாபரத்தையும் கவனிக்க வேண்டிய சூழல் இருந்ததால் இதையெல்லாம் பார்த்திருக்கிறேன் என்று சொல்வான், இத்தனைக்கும் மாற்று முகாம் அபிமானி.
வசந்த மாளிகை எப்பேர்பட்ட பிரம்மாண்டமான வெற்றியை பெற இருக்கிறது என்பதன் அடையாளம் அந்த முதல்நாள் இரவுக் காட்சியிலே தெரிந்து விட்டது.
மாலைக்காட்சியை விட இரவுக் காட்சிக்கு கட்டுக்கடங்காத கூட்டம். தியேட்டர் பக்கமே போக முடியவில்லை. படத்தின் ரிப்போர்ட் பிரமாதமாக வந்ததால கூட்டம் அதிகமானது ஒரு பக்கம் என்றால் காலை மதியம் பார்த்த் ரசிகர்கள் மீண்டும் இரவுக் காட்சிக்கும் படையெடுத்ததால் திரண்ட கூட்டம் மறு பக்கம். இவை அனைத்தும் சேர்ந்து அங்கே மக்கள் வெள்ளமாக திரண்டது. என் கஸினும் அவன் நண்பர்களும் சேர்ந்து இரவுக்காட்சிக்கு போவதற்கு முடிவு செய்து டிக்கெட்டுகளும் வாங்கி விட்டனர். கல்லூரி மாணவனான கஸின் நண்பர்களுடன் இரவு combined study என்று சொல்லி போக முடிந்தது. நான் பொறாமைப்படத்தான் முடிந்தது.
ரிலீஸ் தினதன்று வசந்த மாளிகையை கொண்டாட பூமியில் மக்கள் வெள்ளம் நிறைந்தபோது அதையே வசந்த விழாவாக கொண்டாட வருண பகவானும் முடிவெடுத்தான்.
இரவு சுமார் 9.45 மணி இருக்கும். ஆங்காங்கே சில தூறல்கள் விழத் தொடங்கி சட்டென்று வேகம் பிடித்து சில நிமிடங்களில் மழை கொட்ட தொடங்கியது. நிமிடங்கள் செல்ல செல்ல மழை பெரிதாகி பேய் மழையாக பெய்தது.
ஆனால் மழை எத்தனை பலமாக பெய்தாலும் மக்கள் அதை பொருட்படுத்தாமல் கலைந்து செல்லாமல் அப்படியே வரிசையில் நின்று டிக்கெட் வாங்கினார்கள் அந்த மழையிலும் உள்ளே போவதற்கு பெரிய தள்ளு முள்ளு ஏற்பட்டு ஒரு வழியாக உள்ளே போய் அமர்ந்த விஷயத்தை கஸின் அடிக்கடி சொல்வதுண்டு. உள்ளே சென்று அமர்ந்த ஆண்கள் பெரும்பாலோனோர் இடைவேளை வரை தங்கள் அணிந்திருந்த சட்டையை கழட்டி காய வைத்து விட்டு படம் பார்த்ததாக கஸின் சொல்வான்.
அப்படி வசந்த மாளிகையின் மாபெரும் வெற்றி செய்தியோடு மறுநாள் பொழுது புலர்ந்தது அந்த வெற்றி இன்று வரை தொடர்கிறது என்பதுதான் வசந்த மாளிகையின் சிறப்பே. தமிழ் திரைப்பட வரலாற்றிலேயே எந்த ஊரை எடுத்துக் கொண்டாலும் மறு வெளியீடுகளில் கின்னஸ் சாதனை புரிந்த படம் எது என்றால் அது நிச்சயமாக வசந்த மாளிகைதான். முதல் வெளியீட்டில் தமிழகத்திலேயே அதிகபட்சமாக 200 நாட்கள் ஓடியது எங்கள் மதுரை நியூசினிமாவில்தான் என்பது இப்போதும் காலரை தூக்கி வீட்டுக் கொள்ளும் பெருமையாகவே எங்களுக்கு இருக்கிறது.
அன்புடன்
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...82&oe=5A802762
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...25&oe=5A3C898D
Sundarraj Balasubramaniam
வசந்த மாளிகை யின் மழைக்காலம் மறக்க முடியாதது
என் அப்பா , அம்மா என்று குடும்பத்துடன் வடக்கு வெளி வீதியில் இருந்து கிளம்பி நியூ சினிமா வரும் போது வழியெல்லாம் நீர் வடியாமல் ஓடுகிறது மழையும் விடவில்லை கண்டி கலைமகள் வாசலில் சற்றே நிற்கிறோம்
படம் பார்க்கும் ஆவல் இரவுக் காட்சி மழையும் நிற்கவில்லை
நனைந்து கொண்டே போகிறோம்
90 பைசா டிக்கெட் எடுத்து முன் வரிசையில் அப்பா , 80 பைசா டிக்கெட் எடுத்து கடைசி வரிசையில் அம்மா
டிராயர் போட்டிருக்கும் நான் தட்டித் தடுப்பின் மீதேறி இங்கும் அங்குமாய்
சட்டையை பிழிந்து காய வைத்தாயிற்று
எனக்கு விவரம் தெரிந்து நடிகர் திலகத்தின் தீவிர விசிறியான நாள் அன்று
ஒவ்வொரு காட்சியும் ஒவ்வொரு வசனமும் இசையோடு மனப்பாடம்
பின் எத்தனையோ முறை அதே நியூ சினிமாவில் இந்தப் படம் பார்த்தாயிற்று ஆயினும் முதல் முறை பசுமரத்தானி
Subbiah
இந்தியாவின் ஐம்பது ஆண்டுகளில் தோன்றிய நடிகர்களில் தலை சிறந்தவர்; நடிப்புக் கலையின் பல்கலைக் கழகம்; இன்றைய நடிகர்கள் அனைவரையும் ஏதோ ஒரு வகையில் பாதித்தவர்; அவர் ஏற்று நடிக்காத பாத்திரங்கள் ஏதுமில்லை; தமிழ் மொழியின் ஆகச்சிறந்த உச்சரிப்புக் கலைஞர்; அவரது திரைப்படங்களைப் பார்க்காத எவரும் சுதந்திரத்திற்குப் பிந்தைய தமிழகத்தைப் புரிந்து கொள்ள இயலாது; தேசியமும் தெய்வீகமும் கண்களென வாழ்ந்த ஒரு சிறந்த குடிமகன்” என்று அனைத்துப் பிரிவினராலும் போற்றப்படுகிறார், நடிகர் திலகம் என்றழைக்கப்படும் சிவாஜி கணேசன்.
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...96&oe=5A4EA678
Subbiah
பணக்கார விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த பாசமிக்க இளைஞனாக, இராமனுக்கேற்ற தியாகத் தம்பி பரதனாக, நவரசங்களையும் பிழிந்து தரும் உயர்குடி நாயகர்களாக, பக்தர்கள் மீது பழமையை நிலைநாட்டும் பரம்பொருளாக, கம்பீரம் குறையாமல் காதலிக்கும் நாதசுவரக் கலைஞனாக, குடும்ப வேதனையில் குமுறும் இளைஞனாக, வேலை செய்யும் வீட்டின் சுமை தாங்கும் விசுவாசமான வேலையாளாக, காதலியைக் காப்பாற்ற முடியாமல் தவிக்கும் மருத்துவராக, குற்றம் மறந்து நிம்மதி தேடும் கனவானாக, போதையில் விழுந்து புனர் ஜென்மமெடுக்கும் ‘தத்துவ’ இளைஞனாக, வெளிநாட்டு நாகரீக மனைவியைத் திருத்தும் பட்டிக்காட்டானாக, மகன்கள் தரும் சோதனை மேல் சோதனைகளைச் சந்திக்கும் ஏகப்ப்டட தந்தைகளாக சிவாஜி நடித்தார், நடந்தார், ஆடினார், ஓடினார், பாடினார், கர்ஜித்தார், குமுறினார், கலங்கினார், அழுதார், அழ இயலாமல் தவித்தார், சிரித்தார், சிரித்தவாறே அழுதார் – என்று எதையெல்லாம் முடியுமோ அத்தனையும் செய்து காட்டினார்.
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...5d&oe=5A851B5D