-
2 Attachment(s)
நண்பர் சேகர் பரசுராம் அவர்கள் முக்தா பிலிம்ஸ் 60 முகநூலில் பதிவிட்ட விடயம் இது.
1972 ல் வெளியான பட்டிக்காடா பட்டணமா,
மதுரையில் செண்ட்ரல் திரையரங்கில் வெளியாகி முதல் 84 நாட்களில் மட்டுமே வசூலான தொகையை இன்றைய டிக்கெட் கட்டணத்தில் பார்த்தோமானால் 8 கோடி ரூபாய்,
இப்போதைக்கு. இந்த வசூல் சாதனைக்கு ஏற்ற ட்ரெண்டிங் வார்த்தை
எப்புட்றா??
Attachment 5915
நன்றி சேகர் பரசுராம் (muktha films 60)
இதற்கு முகமது தமீம் அவர்கள் " கறுப்பு வெள்ளை படங்களில் அதிக வசூல் சாதனை செய்த படம் "
என பின்னூட்டம் இட்டிருந்தார்.
நானும் " மதுரையில் 5 லட்சம் வசூலாகப் பெற்ற முதல் படம்" என பின்னூட்டம் இட்டிருந்தேன்.
ஆனால் ராமசந்தரின் படத்தைவிட நடிகர் திலகத்தின் படமான பட்டிக்காடா பட்டணமா
சாதனை செய்த படமென மற்றவர்கள' தெரிந்து கொள்ளகூடாதென்ற எண்ணத்தில்
மா கோ ராவின் கோயாபல்ஸ் கும்பல் கைகூலிகள் அந்த இரண்டு பின்னூட்டங்களையும்
தூக்க வைத்துவிட்டார்கள்.
முக்தா பிலிம்ஸ் 60 நிர்வாகிகளும் எழுதியிருப்பது என்னவென சீர் தூக்கி பார்க்காமலே
அவற்றை நீக்கிவிட்டார்கள்.
மதுரையில் 5 லட்சம் வசூல் பெற்றதற்கான ஆதாரம்.
Attachment 5916
ஆக மொத்தத்தில் வாத்தியின் கைகூலிகளது பித்தலாட்டங்கள் அனைத்தும் படிப்படியாக
பொது ரசிகர்களின் பார்வையில் அம்பலமாகிக்கொண்டு வருகின்றது.
-
sivajiganesan english interview
https://youtu.be/ZkBXS_YE7ws
Thanks Sivaji Murasu
-
வெளியிட்டு ஒரு நாள் கூட ஆகவில்லை அதற்குள் 2 லட்சம் பேர் கண்டு களித்துள்ளனர்.
நடிகர்திலகம் ஆங்கிலத்தில் பேட்டி கொடுத்துள்ள இந்த வீடியோவுக்கு
வெளியான 514 கருத்துக்களில் 90 சதவீத கமெண்ட்கள் ஆங்கிலத்திலேயே பதிவிடப்பட்டுள்ளன.
எந்தவித படாதோபமும் ஆடம்பரமும் இல்லாத நடிகர் திலகத்தின் எளிமையானதோற்றமும் பேட்டியும்...
ஒரு எளிமையான மனிதரின் பிரமாண்டமான சக்தி என்பது இதுதான் ...
பார்வை இட்டவர்களுக்கும் கருத்துரை இட்டவர்களுக்கும் எமது நன்றிகள் ...
Thanks Sivaji Murasu
பின்னூட்டம்
Ushadeepan Sruthi Ramani
எத்தனையெத்தனை பாவங்கள் அந்த முகத்தில்? பேட்டி எடுத்தவருக்கு அவர்மீது எவ்வளவு மரியாதை? சிம்மம் கர்ஜிக்கும் அழகு...To be or not to be....எப்படி வேறுபடுத்திக் காண்பிக்கும் அனுபவம்? தன்னடக்கம்..பெரியவர்கள் மீது கொண்ட மரியாதை...பக்தி..தன்னடக்கம்...முழுத் திறமை கொண்ட எந்தக் கலைஞன் இப்படி பக்தி சிரத்தையோடு இருந்திருக்கிறான்? எத்தனை வெள்ளை மனது? கல்மிஷம் இல்லாத மனிதன். இன்னொரு நடிகர்திலகம் நமக்குக் கிடைக்கவா போகிறார்? நடிக்காவிட்டாலும் இன்னும் கொஞ்ச காலம் நம்மோடு (ஒரு தொண்ணூறு வயசு வரையாவது) இருந்திருக்கலாம். இருக்கிறார் என்பதே சந்தோஷமாக..நிறைவாக இருந்திருக்கும். காலம் அநியாயமாய்ப் பறித்துக் கொண்டது. இறைவன் இரக்கமற்றவன். தனக்குப் பிடித்தவர்களை சீக்கிரம் அழைத்துக் கொள்கிறான். பிடிக்காத 'கலைஞர்'களை கிடக்கட்டும் என்று விட்டு விடுகிறான். நம் ஆயுசை பதிலாகக் கேட்டிருந்தாலும் கொடுத்திருக்கலாமே?
-
Nadigar thilagam english specch interview part-2
https://youtu.be/rfnn-qjamm8
Thanks ilayathilakam prabhu
-
1 Attachment(s)
சில காரணங்களால் சில விடயங்களை உரிய நேரத்தில் பதிவிடமுடியவில்லை.
கால தாமதமாக பதிவிடவேண்டியதாகிவிட்டது.
...........................................
Attachment 5918
-
சில காரணங்களால் சில விடயங்களை உரிய நேரத்தில் பதிவிடமுடியவில்லை.
கால தாமதமாக பதிவிடவேண்டியதாகிவிட்டது.
...........................................
மதுரை ராம் தியேட்டரில்
17 ..03 ..2023 முதல்
கர்ணன்
Attachment 5918
-
1 Attachment(s)
டிஜிட்டல் வடிவமைப்பில் மார்ச் 24 . 2023 முதல்
முதல்மரியாதை
Attachment 5925
-
2 Attachment(s)
-
2 Attachment(s)
தமிழர்கள் அதிகம் உள்ள தெற்கு ஆப்ரிக்காவில் நடிகர் திலகம் மற்றும் கலை செல்வி ஜெயலலிதா அவர்கள் நடிப்பில் வெளியான கலாட்டா கல்யாணம் திரைப்படம் வெளியாகி சக்கை போடு போட்டது. இணைய தளத்தில் தெற்கு ஆப்ரிக்கா நண்பர் ஒருவர் பகிர்ந்த விளம்பரம். பெரிய அரங்கம் ஆல்பர்ட் அரங்கில் 2ஆம் வாரம் ஓடிய விளம்பரம். தமிழகம், மலேயா, சிங்கப்பூர், குவைத், இலங்கை மட்டும் அல்ல இப்போது தெற்கு ஆப்ரிக்கா இந்த லிஸ்ட் இல் சேர்ந்துள்ளது. உலக நடிக சக்ரவர்த்தி நடிகர்திலகம் படங்கள் உலகெங்கும் வெற்றி நடை போட்டுள்ளது இதன் மூலம் நிரூபணம். Global Star Nadigar Thilagam.
Attachment 5930
Attachment 5931
Thanks Nadigar thilagam sivajitv
-
1 Attachment(s)
இலங்கை யாழ்ப்பாணத்தில் நடிகர் திலகத்தின்
புத்தகம் வெளியீடு. 23.04 .2023
Attachment 5932
-
சிவாஜி கணேசன் மகன் யாழில் செய்தது!😯 Sivaji Ganesan Son Ramkumar Jaffna Visit | Alasteen Rock
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களது மகன் ராம்குமார் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்ட போது நடந்ததை நீங்கள் இந்த காணொளியில் காணலாம்
https://youtu.be/WrkfRUa0bfQ
-
ஈழத்தில் சிவாஜிகணேஷன் செய்த வேலை; தந்தையின் தடங்களை தேடிவந்த மகன்!! || Ushanthan View
https://youtu.be/N7ZVAN1EZrA
-
5 Attachment(s)
சிவாஜி கணேசனின் மூத்த புதல்வர் ராம் குமார் இலங்கையில் நான் வாழ்ந்த மூளாய் கிராமத்திற்கு நேற்று ஏப்ரல் 24ந் திகதி வந்திருந்தார். காரணம்? தனது தந்தை 'நடிகர் திலகம்' சிவாஜி கணேசன் நிதி சேகரித்துத் தந்ததால் உருவான மூளாய் கூட்டுறவு வைத்தியசாலையைப் பார்க்க வேண்டும் என்ற ஆவலினால்....!
இன்றைக்கு 70 ஆண்டுகளுக்கு முன்னர் - 1953ம் ஆண்டு ஒக்டோபர் 28ந் தேதி, மூளாய் கூட்டுறவு வைத்தியசாலையின் அபிவிருத்திக்காக சிவாஜி கணேசன் யாழ்ப்பாணம் நகரசபை மண்டபத்தில் "என் தங்கை" என்ற நாடகத்தை நடத்தி நிதிசேகரித்துக் கொடுத்திருந்தார்! அதே நாடகம் கொழும்பிலும் நடத்தப்பட்டது. அந்த நேரத்தில் சிவாஜி ஒரு இளம் நடிகர். சிவாஜியின் முதல் படமான 'பராசக்தி ' 1952 ஒக்டோபரில் வெளியானது.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் குறித்து முனைவர் மருதுமோகன் எழுதிய புத்தகத்தின் யாழ்ப்பாண வெளியீட்டுக்காக இங்கிலாந்தில் வசிக்கும் ஈழத்தமிழரான முனைவர் சிவா பிள்ளையின் அழைப்பின்பேரில் 'சென்னை-யாழ்ப்பாணம்' பயணிகள் விமானத்தில் பலாலிக்குப் பறந்து வந்த ராம் குமார், யாழ் பல்கலைக்கழகத்தில் நடந்த புத்தக வெளியீட்டில் கலந்து கொண்டார்.
சென்னை திரும்பமுன்னர் மூளாய் கூட்டுறவு வைத்தியசாலைக்கும் அவர் சென்றார். வைத்தியசாலையின் நிர்வாகிகள், வைத்தியர்கள், தாதிமார் இணைந்து அவரை, வரவேற்றிருக்கிறார்கள். அந்த அன்பான உபசரிப்புக் கண்டு மிகவும் நெகிழ்ந்து போயிருக்கிறார் 'சிவாஜியின் செல்வன்'. இவ்வாண்டு ஆரம்பத்தில் சென்னையிலிருந்தபோதும், யாழ்ப்பாணத்திலிருந்தபோதும் நான் கொடுத்த அன்பான தூண்டுதலும் அவரது மூளாய் வருகையை ஊக்குவித்தது என்றதில் எனக்கும் குட்டிப் பெருமை..
யாழ்ப்பாணத்தின் ஒரு சில பகுதிகளையும் என் தம்பியோடு சுற்றிப் பார்த்திருக்கிறார் ராம் குமார். நல்லூர் கந்தசாமி கோவிலுள் கண்கள் குளமாகி அழுதேவிட்டார் என்றான் தம்பி. தொல்புரம் மன்னதோட்டம் ஜெகஜோதி அம்பாள் ஆலயம், பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலயம், கீரிமலை.. செல்வச்சந்நதி.. மாவிட்டபுரம்.. வல்வெட்டித்துறைமுத்துமாரியம்மன் திருவிழாக் கோலாகலம்.. என ஒருபுறமும், யாழ் கோட்டை, இந்தியா அன்பளித்த கலாச்சார மண்டபம், யாழ் நூல்நிலையம்... பருத்தித்துறை முனை, சங்கிலியன்தோப்பு, மந்திரிமனை என பட்டியல் நீள்கிறது. தேசமும் தெய்வீகமும் அவரைக் கவர்ந்துவிட்டிருக்கின்றன.
தனது தந்தையின் கையால் மூளாய் கூட்டுறவு வைத்தியசாலையில் நட்டு வைக்கப்பட்டிருந்த மாமரத்தை கண்டபோது கடுமையாக உணர்ச்சி வசப்பட்டிருக்கிறார் ராம்குமார்!! 'தேவர் மகன்' அல்லவா..
"விதை நான் போட்டது.. இதெல்லாம் என்ன பெருமையா? கடமை..!"
Attachment 5936
Attachment 5934
Attachment 5935
Attachment 5937
Thanks Narayana Moorthy (Muktha films 60)
-
4 Attachment(s)
-
2 Attachment(s)
இன்னும் எத்தனை வருடமானாலும் நடிகர் திலகத்தின் பெயரை சொல்லிக்கொண்டே இருக்கும் மாமரம்....
இன்றைக்கு சரியாக 70 ஆண்டுகளுக்கு முன்னர், இலங்கை யாழ்ப்பாணம்
மூளாய் கூட்டுறவு வைத்தியசாலையின் அபிவிருத்திக்காக, சிவாஜி கணேசன் 1953ம் ஆண்டு அக்டோபர் 28ந் தேதி, யாழ்ப்பாணம் நகரசபை மண்டபத்தில் "என் தங்கை" என்ற நாடகத்தை நடத்தி நிதிசேகரித்துக் கொடுத்திருந்தார்.
அதே நாடகம் கொழும்பிலும் நடத்தப்பட்டது.
அவர் செய்த அந்த பெரும் உதவியால்,
இன்று அந்த வைத்தியசாலை மிகப் பிரபலமாக உருவாகியுள்ளது.
அந்த நேரத்தில் சிவாஜி ஒரு இளம் நடிகர்.
(சிவாஜியின் முதல் படமான 'பராசக்தி ' 1952 அக்டோபரில் வெளியானதுகுறிப்பிடத்தக்கது.)
தனது முதல் படம் வெளியான போதே
பொது நலப்பணிக்காக,அதுவும் கடல்கடந்து வாழும் தமிழர்களுக்காக உதவிய பெருந்தன்மை எப்படி பாராட்டினாலும் போறாது.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் குறித்து முனைவர் மருதுமோகன் எழுதிய புத்தகத்தின் யாழ்ப்பாண வெளியீட்டுக்காக இங்கிலாந்தில் வசிக்கும் ஈழத்தமிழரான முனைவர் சிவா பிள்ளையின் அழைப்பின் பேரில் ராம் குமார்,
யாழ் பல்கலைக்கழகத்தில் நடந்த புத்தக வெளியீட்டில் கலந்து கொண்டார்
அதன் பின்னர் மூளாய் கூட்டுறவு வைத்தியசாலைக்கும் அவர் சென்றார். வைத்தியசாலையின் நிர்வாகிகள், வைத்தியர்கள், தாதிமார் இணைந்து அவரை வரவேற்றிருந்தனர்
அந்த அன்பான உபசரிப்புக் கண்டு மிகவும் நெகிழ்ந்து போயிருக்கிறார் 'சிவாஜியின் செல்வன்'.
தனது தந்தையின் கையால் 70 ஆண்டுகளுக்கு முன்பு,
மூளாய் கூட்டுறவு வைத்தியசாலையில் நட்டு வைக்கப்பட்டிருந்த மாமரத்தை கண்டபோது கடுமையாக உணர்ச்சி வசப்பட்டிருக்கிறார் ராம்குமார்.
இன்றைக்கு தமிழகத்தில்,
நடிகர் திலகத்தின் பல நினைவுகளை, "நாகரீக காலம்" என்ற பெயரைச்சொல்லி பல அடையாளங்களை அழித்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் அவர் கையால் விதைக்கப்பட்ட மாமரத்தை 70 ஆண்டுகளாக அவர் பெயரை சொல்லி பாதுகாத்து, நடிகர் திலகத்தை பெருமைப்படுத்தும் மூளாய் கூட்டுறவு வைத்தியசாலை நிர்வாகிகளையும், அங்குள்ள மக்களையும் நினைத்து பெருமைப்பட வேண்டும்.
Attachment 5942
Attachment 5943
Thanks Sri
-
சிவாஜி கணேசன் | புலிக்கொடி நாட்டிய இடம் | Eluthum Karankal | Interview with actor Ram Kumar Ganeshan
https://youtu.be/wtsSSOz7aB4
Thanks
IBC Tamil TV
-
1 Attachment(s)
In 1972 Sivaji Ganesan's VASANTHA MALIGAI broke box office records in South Africa,when it released at the Odeon Cinema...It ran for months with almost all shows sold out...All the songs were huge hits and even Vanishri's orange saree became popular among our local women.Pictured below is a South African newspaper advert for Vasantha Maligai
Attachment 5944
Thanks Kesivan Govinder (Nadigarthilagak visirigal)
-
1 Attachment(s)
விடியலில் வாசித்தது... தற்செயலாக விரல் பட்டு, அசல் பதிவு எங்கோ சென்றுவிட்டது. ஆனால், நல்லவேளை எனக்குத் தெரியாமலேயே copy ஆகியிருந்ததை இங்கே share பண்ணுகிறேன். அனுப்பியவர் எவரோ, நன்றிகள்..
----------------------------»--»»»»»-------------------------------
60 வயதிலும் பெண்ணின் காலில் விழுந்த சிவாஜி... எழுத்தாளர் சுரா பகிர்ந்த நெகிழ்ச்சி சம்பவம்!
நக்கீரன் செய்திப்பிரிவு
எழுத்தாளரும் மூத்த பத்திரிகையாளருமான சுரா, தன்னுடைய திரையுல அனுபவங்களையும், நாம் பார்த்து ரசித்த நடிகர்களின் அறியாத பக்கங்கள் குறித்தும் நக்கீரன் ஸ்டூடியோவில் பகிர்ந்து வருகிறார். ‘திரைக்குப் பின்னால்’ நிகழ்ச்சியில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...
"சினிமாத்துறையில் நன்றி என்ற ஒன்றை லென்ஸ் வைத்து தேடினாலும் பார்க்க முடியாது. நூறு பேரில் ஒருவரிடம் நன்றி, விஸ்வாசம் இருந்தாலே பெரிய விஷயம் என்பார்கள். சிவாஜி கணேசனின் நன்றி, விஸ்வாசம் பற்றி நான் ஒரு சம்பவத்தைக் கூறுகிறேன். இதைக் கேட்கும்போது சிவாஜி கணேசனின் மீது உங்களுக்கு மிகப்பெரிய மரியாதை வரும்.
சிவாஜி கணேசன் நடித்த முதல் திரைப்படம் 1952இல் வெளியான ‘பராசக்தி’ திரைப்படம். அந்தப் படத்தின் தயாரிப்பாளர் வேலூரைச் சேர்ந்த பி.ஏ.பெருமாள் முதலியார். அந்தப் படத்திற்கு ஃபைனாஸ் செய்தது ஏ.வி.மெய்யப்பச் செட்டியார். படத்திற்கு கலைஞர் வசனம் எழுதியதும், படம் வெளியானபோது மிகப்பெரிய வெற்றி பெற்றதும் நமக்குத் தெரிந்த விஷயம்தான். அந்த வெற்றி சிவாஜி கணேசனை மிகப்பெரிய உயரத்தில் கொண்டுபோய் வைத்ததும், அதன்மூலம் பெரிய கதாநாயகன் தமிழ்நாட்டில் உருவானதும் வரலாறு.
அதன் பிறகு பல வருடங்கள் கடந்துவிட்டன. சிவாஜி சார் 200 படங்களுக்கு மேலாக நடித்து, புகழ் குன்றின் உட்சத்தில் இருக்கிறார். நான் கூறும் இந்த சம்பவம் ஒரு தீபாவளி நேரத்தில் நடந்தது. இது பொம்மை பத்திரிகையில் ஆசிரியராக இருந்த என் நண்பர் வீரபத்திரன் என்னிடம் பகிர்ந்துகொண்டது. அவர் சிவாஜி கணேசனுக்கும் நெருங்கிய நண்பர். ஒருநாள் வீரபத்திரனை அழைத்த சிவாஜி, “நாளை எந்த வேலையும் வச்சுக்காதீங்க... நாம் ஓர் இடத்திற்குப் போக வேண்டும்” எனக் கூறியுள்ளார். வீரபத்திரனும் மறுநாள் காலையிலேயே சிவாஜி வீட்டிற்குச் சென்றுள்ளார். சிவாஜி வீட்டில் காலை உணவை முடித்துவிட்டு இருவரும் காரில் ஏறி அமர்கின்றனர். நாம் ஓர் இடத்திற்குப் போக வேண்டும் என்றுதான் சிவாஜி கூறினாரேயொழிய எந்த இடத்திற்குப் போகிறோம் எனக் கூறவில்லை. வீரபத்திரனுக்கும் அவரிடம் கேட்கத் தயக்கம். அதனால் எதுவும் கேட்காமல் காரில் ஏறிவிடுகிறார். கார் சென்னையைத் தாண்டுகிறது... காஞ்சிபுரத்தை தாண்டுகிறது... வீரபத்திரன் அப்போதும் கேட்கவில்லை. கடைசியாகக் கார் வேலூருக்குச் சென்று, அங்கு ஒரு வீட்டின் முன்னால் போய் நிற்கிறது. அந்த வீடு சிவாஜி கணேசனை வைத்து படம் எடுத்த பி.ஏ.பெருமாள் முதலியாருடையது. அவர் முன்னரே மரணமடைந்துவிட்டார். அவர் குடும்பம் மட்டும் அங்கே வசித்துவருகிறது. தீபாவளி வருவதால் அந்தக் குடும்பத்தினர் அனைவருக்கும் புத்தாடைகள் எடுத்துக்கொண்டு சிவாஜி கணேசன் சந்திக்க வந்துள்ளார். அந்த வருடம் மட்டுமல்ல; ஒவ்வொரு வருடமும் சிவாஜி கணேசன் இதேபோல நேரடியாக சென்று சந்திப்பாராம். அப்போது, பெருமாள் முதலியார் மனைவி காலில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து ஆசீர்வாதம் வாங்கிவிட்டுத்தான் சிவாஜி கணேசன் கிளம்புவாராம். தன்னுடைய 60 வயதிலும் அவருடைய காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கியுள்ளார்.
பின், வேலூரில் இருந்து சென்னை திரும்புகையில் இருவரும் இதுபற்றி காரில் பேசிக்கொண்டு வந்துள்ளனர். அப்போது சிவாஜி, "இவர்தான் என்னை வச்சு ‘பராசக்தி’ படம் எடுத்தார். 2000 அடி படம் எடுத்திருந்தபோதே நான் ரொம்ப ஒல்லியா இருக்கேன்; வசனம் பேசுனா மீன் வாயைத் திறந்து பேசுவது மாதிரி இருக்கு என்றெல்லாம் சொல்லி என்னை படத்திலிருந்து நீக்க முயற்சித்தார்கள். எனக்குப் பதிலாக கே.ஆர்.ராமசாமியைக் கதாநாயகனாக வைத்து எடுக்க வேண்டும் என நினைத்தார்கள். அப்போது நான்தான் படத்தில் நடிக்க வேண்டும் என்பதில் பெருமாள் முதலியார் உறுதியாக இருந்தார். நான் இவ்வளவு பெரிய நடிகரானதற்கு காரணம் பெருமாள் முதலியார்தான். இன்று அவர் இல்லை. ஆனால், இந்தியா முழுக்க தெரிந்த நடிகராக நான் இருப்பதும், உலகெங்கும் வாழும் தமிழர்கள் மத்தியில் பிரபலமான நடிகராக இருப்பதும் அவர் போட்ட பிச்சை. அன்று பெருமாள் முதலியார் இல்லையென்றால் இன்று சிவாஜி கணேசன் இல்லை" என உருக்கமாகக் கூறியுள்ளார். சிவாஜி கணேசன் நினைத்தால் இதை யாரிடமாவது கொடுத்துவிடலாம். அப்படியெல்லாம் இல்லாமல், ஒவ்வொரு வருடமும் அவரே நேரில் சென்று அவர்களைச் சந்தித்து, வாங்கி வந்துள்ளதை அவர் கையால் கொடுத்து, அவர்களிடம் ஆசீர்வாதம் பெற்றுவருவதெல்லாம் எவ்வளவு பெரிய விஷயம்.
அன்று இரவு 10 மணிக்கு அவர்கள் வந்த கார் வடபழனி அருகே வருகிறது. இப்போதைய கமலா தியேட்டர் அருகே உள்ள விநாயகர் கோவில் தெருவில்தான் வீரபத்திரன் வீடு உள்ளது. அவர், இங்கே நிறுத்துங்கள்... என் வீடு இங்கேதான் உள்ளது... நான் இறங்கிக்கொள்கிறேன் எனக் கூற, இந்த நேரத்தில் நடந்து போவீர்களா எனக் கேட்ட சிவாஜி, அவர் வீட்டிற்கே சென்று இறக்கிவிட்டுள்ளார். நான் முன்னரே கூறியதுதான்... சினிமாவில் நன்றி, விஸ்வாசம் என்பது சுட்டுப்போட்டால்கூட பார்க்க முடியாது. இன்றைய தலைமுறையைச் சேர்ந்த கலைஞர்கள், நடிகர்கள், நடிகைகள், தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் என யாராக இருந்தாலும் உங்களை அறிமுகப்படுத்தி நீங்கள் புகழ்பெறுவதற்கு மூலகாரணமாக இருந்த உன்னதமான மனிதர்களைக் கைக்கூப்பி வணங்குங்கள். இந்த சம்பவம் நம் அனைவருக்குமே ஒரு பாடம்".
நன்றி: நக்கீரன்
Attachment 5945
Thanks Kouwshigan Ramiah (Face Book)
-
2 Attachment(s)
அடுத்தடுத்து படம் ரிலீஸ் செய்த சிவாஜி.. பிரமாண்டங்களுக்கு நடுவில் சிக்கிய ’பொம்மை கல்யாணம்’.. !
பொம்மை கல்யாணம்பொம்மை கல்யாணம்
சிறந்த நடிகர்கள், வரதட்சணை கொடுமை என்ற சிறந்த கருத்தாக்கம் என பல நேர்மறை விஷயங்கள் இருந்த போதிலும் பிற படங்களின் அழுத்தம் மற்றும் அதிகபட்ச சோகம் காரணமாக பொம்மை கல்யாணம் 50 நாள்களையே கடந்தது.
Attachment 5946
1958 வெளியான சிவாஜி கணேசன் நடித்தப் படங்களில் ஒன்று பொம்மை கல்யாணம். ஆச்சார்யா ஆத்ரேயா எழுத்தில் ஆர்.எம்.கிருஷ்ணமூர்த்தி தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் இதனை இயக்கினார். தெலுங்குப் படம் 1958 ஜனவரி 11 ஆம் தேதி வெளியாகி வெற்றி பெற்றது. தமிழில் அதே வருடம் மே 3 ஆம் தேதி வெளியானது.
சிவாஜி வருடம் முழுவதும் நடித்துக் கொண்டிருப்பார். அதனால், வருடம் முழுக்க அவர் நடித்தப் படங்கள் வெளியாகிக் கொண்டிருக்கும். ஒரு படம் வெளியாகி அரங்கு நிறைந்த காட்சிகளாகப் போய்க்கொண்டிருக்கையில் அடுத்தப் படத்தை வெளியிடுவார்கள். ஒரே நேரத்தில் இரு படங்கள் ஓடிக்கொண்டிருக்கையில் மூன்றாவதாக ஒன்று வெளியாகும். இதன் காரணமாக வெள்ளிவிழா போக வேண்டிய படம் 100 நாள்கள் ஓடும். 100 நாள்கள் ஓட வேண்டியது 50 நாள்களில் தூக்கப்படும். அதற்காக கவலைப்பட முடியாது. கவலைப்படும் நேரத்தில் இன்னொரு படம் வெளிவரும்.
1958 லும் அப்படித்தான் நடந்தது. அந்த வருடத்தின் ஆரம்பத்தில் பொம்மல பெள்ளி - பொம்மை கல்யாணத்தின் தெலுங்குப் பதிப்பு - வெளியாகி வெற்றி பெற்றது. அது தெலுங்கு என்பதால் அதை பட்டியலில் இருந்து நீக்கிவிடலாம். 1958 இல் சிவாஜி நடிப்பில் தமிழில் வெளியான முதல் படம் உத்தம புத்திரன். பிப்ரவரி 7 ஆம் தேதி வெளியான அப்படம், 36 நாள்களை கடந்த நிலையில் மார்ச் 14 பதிபக்தி படத்தை வெளியிட்டனர். உத்தம புத்திரன், பதிபக்தி இரண்டும் ஒரே நேரத்தில் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கையில் ஏப்ரல் 14 சம்பூர்ண ராமாயணத்தை வெளியிட்டனர். இதில் என்.டி.ராமராவுடன் சிவாஜியும் நடித்திருந்தார். சம்பூர்ண ராமாயணம் திரைக்கு வருகையில் உத்தம புத்திரன் ஐம்பது நாள்களையும், பதிபக்தி முப்பது நாள்களையும் கடந்திருந்தது. உத்தம புத்திரன், பதிபக்தி, சம்பூர்ண ராமாயணம் என மூன்று படங்கள் ஓடிக் கொண்டிருக்கையில் மே 3 ஆம் தேதி பொம்மை கல்யாணம் வெளியானது.
உத்தம புத்திரன் 100 நாள்களை நிறைவு செய்ய பதிபக்தி, சம்பூர்ண ராமாயணம் இரண்டும் பொம்மை கல்யாணத்துடன் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடின. பொம்மை கல்யாணம் 50 தினங்களை கடந்த போது அன்னையின் ஆணை வெளியானது. பதிபக்தி, சம்பூர்ண ராமாயணம் ஆகிய படங்களுடன் அன்னையின் ஆணையும் சேர, பொம்மை கல்யாணம் தியேட்டரிலிருந்து தூக்கப்பட்டது. பதிபக்தி 100 நாள்களும், சம்பூர்ண ராமாயணம் 5 இடங்களில் 100 நாள்களும், மதுரையில் 165 நாள்கள் ஓடின. அன்னையின் ஆணை 100 நாள்கள் ஓடியது. அந்த வருடம் வெளியான சாரங்கதாரா, சபாஷ் மீனா, காத்தவாயராயன் ஆகிய படங்களும் 100 நாள்கள் ஓடின. நடுவில் பொம்மை கல்யாணம் மட்டும் 50 நாள்களுடன் பின்னடைவை சந்தித்தது. 100 நாள்கள் ஓடவில்லை என்றாலும் படம் லாபம்தான்.
பொம்மை கல்யாணம் ஒரு அக்மார்க் குடும்பப் படம். மாமியாரின் வரதட்சணை வெறியை விரிவாக கண்ணீர் ததும்ப காட்சிப்படுத்தியிருந்தது. சிவாஜி சுதந்திரப் போராட்ட தியாகி ரங்காராவின் மகள் ஜமுனாவை காதலிப்பார். வரதட்சணை பெயராது என்பதால் இந்தத் திருமணத்தை சிவாஜியின் தாய் சாந்தகுமாரி எதிர்ப்பார். அவருக்கு தனது சகோதாரனின் மகள் மைனாவதியை சிவாஜிக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்ற விருப்பம் இருக்கும். அதற்கு மாறாக சிவாஜி, ஜமுனா திருமணம் நடக்கும். திருமணம் முடிந்தபின், மருமகளை மாமியார் வரதட்சணை கேட்டு கொடுமை செய்வார். சிவாஜி ஊரில் இல்லாத நேரம் மருமகளை வீட்டைவிட்டே துரத்திவிட்டு, பழியை மருமகள் மீது போடுவார். அத்துடன் மைனாவதியை மகன் சிவாஜிக்கு திருமணம் செய்ய சாந்தகுமாரி ஏற்பாடு செய்வார். சிவாஜியும், ஜமுனாவும் இறுதியில் இணைந்தார்களா, சாந்தகுமாரியின் வரதட்சணை வெறி தணிந்ததா என்பது கதை.
சிறந்த நடிகர்கள், வரதட்சணை கொடுமை என்ற சிறந்த கருத்தாக்கம் என பல நேர்மறை விஷயங்கள் இருந்த போதிலும் பிற படங்களின் அழுத்தம் மற்றும் அதிகபட்ச சோகம் காரணமாக பொம்மை கல்யாணம் 50 நாள்களையே கடந்தது. கே.வி.மகாதேவன் இசையில் படத்தில் 8 பாடல்கள் இடம்பெற்றிருந்தன.
வரதட்சணை கொடுமை குறித்த விழிப்பணர்வை ஏற்படுத்தியவகையில் இன்றும் பார்க்கக் கூடிய படமாகவே பொம்மை கல்யாணம் உள்ளது. 1958 மே 3 வெளியான பொம்மை கல்யாணம் இன்று 65 வது வருடத்தை நிறைவு செய்கிறது.
Thanks Attachment 5947 NEWS 18
-
எம்.ஜி.ஆரை விட பெரிய வள்ளல் சிவாஜிதான்! ஆராய்ச்சியாளர் சொல்வதென்ன?
https://youtu.be/hHW0cqWqodo
Thanks Valai Pechu Anthanan
-
1 Attachment(s)
நேற்று தூத்துக்குடி சத்தியா திரையரங்கில் தலைவர் சிவாஜியின் சவாலே சமாளி திரைப்படத்தின் ரசிகர்கள் கொண்டாட்டம் கற்பூரமேற்றி இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டன இடைவேளையில் நான்கு நிகழும் சிவாஜி கணேசன் பாடல் ஒளிபரப்பப்பட்டது அதில் பட்டிக்காடா பட்டணமா அம்பிகையே ஈஸ்வரி புதிய பறவை ஊட்டி வரை உறவு பாடல்கள் வசந்த மாளிகை
Attachment 5948
Thanks Kuddam Sivaji Muththukumar
-
3 Attachment(s)
திரு திருநாவக்கரசு வினாயகமூர்த்தி அவர்கள் சில மாதங்களுக்கு முன்னர் இலங்கையில் ஓடிய சில படங்கள் பற்றிய விபரங்கள் கேட்டிருந்தார். சில காரணங்களால் அந்த நேரத்தில் விபரமாக எழுத முடியவில்லை.அவர் கேட்ட விபரங்கள் உட்பட மேலும் பல தகவல்கள் இங்கே. மாற்றுக் குழு நண்பர்கள் தங்களால் முன்னர் சொல்லப்பட்ட பொய்களை உண்மையாக்க பல வழிகளிலும் மண்டையை உடைத்துக்கொண்டு ஊன் உறக்கமின்றி செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் எந்த வழியில் செயல்பட்டாலும் உண்மை என்பது அவர்களுக்குத் தெரியும், சிவாஜி ரசிகர்களுக்கும் தெரியும், புரியும். ஆனால் எம் ஜீ ஆர் ரசிகர்கள் புரிந்து கொள்ள மறந்தது பொது ரசிகர்களை, நேர்மையாளர்களை, உண்மையை தேடுபவர்களை. எங்களால் கொடுக்கப்படும் ஆதாரங்களை கண்டுகொள்ளாமல் உதாசீனம் செய்து தொடர்ந்து சொன்ன பொய்களையே சொல்லிக்கொண்டிருக்கிறார்கள் எம் ஜீ ஆர் ரசிகர்கள். நாங்கள் கொடுக்கும் ஆதாரங்களை பார்த்த பின்னரும் சொன்ன பொய்யையே மறுபடியும் அவர்கள் சொல்லும் பொழுது பொது ரசிகர்கள், நேர்மையாளர்கள் என்ன நினைப்பர்கள்? எம் ஜி ஆர் ரசிகர்கள் சொல்வது அனைத்தும் பொய் என்ற சிந்தனை அவர்கள் மனதில் தோன்றும் அல்லவா?முகநுல் நண்பர் வினோ, நண்பர் ஜீவா நந்தன் போன்ற பொது ரசிகர்கள் மற்றும் ஏனைய நேர்மையாளர்கள் அவர்களை எந்தக்கண்ணோட்டத்தில் பார்ப்பார்கள்.கடிவாளம் கட்டப்பட்ட குதிரைகளைப் போன்றவர்கள் எம் ஜீ ஆர் ரசிகர்கள். அக்கம் பக்கம் என்னநடக்கிறது என்பது தெரியாது. விடயத்திற்கு வருவோம் எம் ஜீ ஆர் படங்கள் பற்றி ஆரம்பத்தில் யார் தவறான தகவல்களை பரப்பினார்கள் என தெரியவில்லை ஆனால் அடுத்து மிகப்பொயளவில் தவறான தகவல்களை பரப்பிக்கொண்டிருந்தவர் உரிமைக்குரல் ஆசிரியர் காலம் சென்ற ராயு அவர்கள். தற்பொழுது எம் ஜி ஆர் கலைக் குழு என்ற பெயரில் சங்கர் என்பவர் தவறான தகவல்களை பரப்பிக்கொண்டிருக்கிறார். தவறான தகவல்கள் தெரிந்து செய்யப்பட்டதா? அல்லது தெரியாமல் தவறு நடந்ததா என்பது தெரியவில்லை.தெரியாமல் தவறு நடந்திருந்தால், அது தவறு என தெரிந்த பின்னரும் தொடர்து அதை எழுதிக்கொண்டிருந்தால் தெரிந்தே அந்தப்பொய்யை எழுதுகிறார்கள் என்பது நிஜமாகிறது. இது அனைவருக்கும் பொருந்தும். 14.01 1969 ஆண்டு ஒளி விளக்கு இலங்கையில் திரையிடப்பட்டது. 22.06 1969 வரை ஓடிய நாட்கள் 160 .ஆனால் எம் ஜீ ஆர் ரசிகர்கள் ஆதாரம் எதுவும் இல்லாமல் ஒளி விளக்கு இலங்கையில் வெள்ளி விழா ஓடியதாக கதை அளக்கிறார்கள்.160 நாட்கள் ஓட்டுவதற்கு மிகவும் கஷ்ட்டப்பட்டார்கள்.பல இரவுக்காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. பல காட்சிகள் நஷ்ட்டத்தில் ஓட்டினார்கள். காரணம்? யாழ் ராஜா தியேட்டர் மற்றும் பல தியேட்டர்களுக்கு சொந்தக்காரரும், S T R films நிர்வாகியுமான காலம் சென்ற எஸ் ரீ தியாகராஜா அவர்கள் மிகவும் தீவிர எம் ஜீ ஆர் ரசிகர். ஆர் எம் வீ அவர்கள் மூலம் காவல்காரன் திரைப்பட விநியோக உரிமையைப் பெற்றுக் கொண்டார் 100 நாட்கள் நிச்சயம் என்ற உறுதி மொழியோடு. அதன்படியே இலங்கையில் காவல்காரன் 2 தியேட்டர்களில் எம் ஜீ ஆர் ரசிகர்களது பாணியில் வடகயிறு ஸரெச்சர் எல்லாம பாவித்து 100 நாட்கள் ஓட்டினார்கள். காவல்காரன் ஓட்டப்பட்டது என்பதை சுலபமாக புரிந்து கொள்ள 113 நாட்கள் ஓட்டப்பட்ட காவல்காரன் யாழ் ராஜாவில் பெற்ற வசூல் சுமார் 167 000.00 .ஒரு வருட வித்தியாசத்தில் திரையிப்பட்ட அவர்களது குடியிருந்த கோயில் யாழ் வின்சர் 50 நாட்கள் + றீகல் 06 நாட்கள் பெற்ற வசூல் சுமார் 157 000.00 . காவல்காரன் 50 நாட்கள் அதிகம் ஓட்டப்பட்டு பெற்ற வசூல் 10 000.00 மடடுமே. காவல்காரன் படத்தை 100 நாட்கள் ஓட்டியதற்காக யாழ் எம ஜீ ஆர் ரசிகர்கள் அமரர் எஸ் ரீ தியாகராஜா அவர்களை யாழ் ராஜா அரங்கிலிருந்து ஊர்வலமாக அழைத்துச்சென்று யரழ் மத்தியில் தமிழ் அரசியல்வாதியான அமரர் அமிர்தலிங்கம் அவர்கள் தலைமையில் பாராட்டுவிழா நடாத்தி கௌரவித்ததார்கள்.காவல்காரன் மக்கள் ஆதரவுடன் ஓடவில்லை ஓட்டப்படதென்பதற்கு இதைவிட ஆதாரம் வேறு தேவையில்லை. காவல்காரன் 100 நாட்கள் ஓடடப்பட்டதால் போனஸ்சாக ஒளிவிளக்கு விநியோக உரிமையும் எஸ் ரீ ஆர் அவர்களுக்கு கிடைத்தது. காவல்காரன் 100 நாட்கள் ஓட்டப்பட்டதால் ஒளிவிளக்கு வெள்ளிவிழா கண்டால் அடிமைப் பெண் விநியோகம் எஸ் ரீ ஆர்க்கே என ஆசை தூண்டப்பட்டது.அடிமைப்பெண் கிடைக்குமென்ற கனவில் நஷ்ட்டம் பாராமல் கஷ்ட்டம் பாராமல் 100 நாட்களே ஓட முடியாத படத்தை இழு இழு வென ஜவ்வு மிட்டய போல இழுத்தார்கள். அடிமைப் பெண் தங்களுக்கென நினைத்து தியேட்டர் சுவரிலும் தங்களது அடுத்த வெளியீடு அடிமைப் பெண் என விளம்பரம் கீறியிருந்தார்கள். சில வாரங்களின் பின்னர் யாழ் ராணி அரங்கில் வருகிறாள் அடிமைப் பெண் விளம்பரம் மின்னியது. ஆடிப் போனார் எஸ் ரீ ஆர் தான் ஏமாற்றப்பட்டதை புரிந்து கொண்டார். இப்படி ஏமாற்றி விட்டர்களே என்ற மனக்கஷ்ட்டம் இருந்தாலம் ஆட்கள் வராமல் நஷ்ட்டத்தில் தொடர்ந்து படத்தை இழுக்கத்தேவையில்லை என சிறு மன நிம்மதியுடன் 160 நாட்களுடன் நிறுத்திவிட்டார். ஒளி விளக்கு 160 நாட்கள் ஓட்டிப் பெற்ற வசூல் சுமார் 2 03 000.00 மட்டுமே. அதே வருடம் கடைசியில் யாழ் ராணி மற்றும் மனோகரா அரங்குகளில் திரையிடப்பட்ட அடிமை பெண் பெற்ற வசூல் ராணி 77+மனோகரா 14 மொத்தம் 91 நாட்களில் பெற்ற வசூல் சுமார் 2 50 000.00.ஒளி விளக்கு 160 நாட்களில் 2 லட்சம் அடிமை பெண் 91 நாட்களில் 2 1/2 லட்சம். நேர்மையாளர்கள் சிந்திக்கட்டும். மற்றும் 2ஆம் வெளியீடு 3ஆம் வெளியீடு....(4ஆம் வெளியீடு)...... 5ஆம் வெளியீட்டிலெல்லாம் ஒளிவிளக்கு 100 நாட்கள் ஓடியதாக கதை பரப்புகிறார்கள் 4ஆம வெளியீட்டில் மட்டும் யாழ் ராஜாவில் 100 நாட்கள் ஓட்டினார்கள். இது பற்றி விவாதம் வந்த வேளை தமிழ் இமேஜ் இணையத்தில் எம் ஜீ ஆர் ரசிக நண்பர் சச்சி முருகேசு அவர்கள் விளக்கம் கொடுத்திருந்தார்.4ஆம் வெளியீட்டில் மட்டும் யாழ் ராஜாவில் 100 நாட்கள் ஓடியதென்றும் ஏனைய வெளியீடுகளில் 100 நாட்கள் ஓடவில்லையென்றும் அழுத்தம் திருத்தமாக எழுதியிருந்தார்.அந்த விவாதத்தில் பங்கெடுத்ததுக் கொண்ட எம் ஜீ ஆர் ரசிகர்கள் எல்லாம் அதன் பின்னர் எழுதும் பொழுது 5 வெளியீட்டிலும் 100 நாட்கள் ஓடியது என்றே எழுதுகிறார்கள். நண்பர் சச்சி அன்று எழுதியதை பார்த்தவர்கள் அதனை மறந்துவிடுவார்கள் என்ற எண்ணமா?
. ஒரு பொய்யை மீண்டும் மீண்டும் சொன்னால் அதனை உண்மையாக்கிவிடலாம் என்ற எண்ணமா அல்லது அவர்களது அறியாமையா என்பது தெரியவில்லை .தொழில் நுட்ப வளர்ச்சி கண்ட இந்நாட்களில் அனைவரது கை விரல் நுனியிலும் நொடிப்பொழுதில் எந்த விபரத்தையும் தெரிந்துகொள்ளும் கருவி உள்ள இந்தக்காலத்தில் தெரிந்துகொண்டே பொய்யை கூறி எவ்வளவு காலம்தான் மக்களை ஏமாற்ற முடியுமென இவர்கள் நினைக்கின்றார்கள். ஒளி விளக்கு முதல் வெளியிட்டில் 100 நாட்கள். பின்னர் 4வது வெளியீட்டில் யாழ் ராஜாவில் 100 நாட்கள் காட்டப்பட்டது என்பது மட்டுமே உண்மை. .வேறு எந்த வெளியீட்டிலும் எங்கும் 100 நாட்கள் இல்லை. யாழ் ராஜாவில் ஒளிவிளக்கு 100 நாள் வசூல் 3 52 648.00 அதே ராஜாவில் கர்ணன் 53 நாள் வசூல் ........3 16 560.25. 47 நாட்கள் அதிகம் ஓட்டப்பெற்ற ஒளி விளக்கு கர்ணனை விட அதிகம் பெற்ற வசூல் 36 ஆயிரம் மட்டுமே. கர்ணனை தொடர்ந்து ஓட விட்டிருந்தால் 100 நாட்கள்வரை ஓட்டப்பட்ட ஒளிவிளக்கின் வசூல் அம்பேல். இங்கே ஆதாரங்களை பார்த்தபின்னரும் எம் ஜீ ஆர் ரசிகர்கள் உண்மையை உணர்ந்து திருந்தமாட்டார்கள். ஆனால் பொது ரசிகர்கள் நேர்மையாளர்கள் அவர்களின் கயமையை தெரிந்து கொள்வார்கள் புரிந்து கொள்வார்கள்.
இலங்கையில் எம்ஜீ ஆர்க்கு வெள்ளிவிழா கண்டு 200 நாட்கள் ஓட்டிய ஒரே படம் உ சு வாலிபன் மட்டுமே.வாத்தி ரசிகர்கள் எழுதுவதுபோல் என் தங்கையோ ஒளிவிளக்கோ இதயக்கனியோ வெள்ளி விழா கிடையாது.உ சு வாலிபன் கொழும்பில் 150 நாட்களுக்குள்ளேயே அடங்கிப் போன படம் .200 நாட்கள் எப்படி? தலைநகர் கொழுப்பில் முதல் வெளியீட்டில் உ சு வாலிபன் ஒரு தியேட்டரில் ஏன் வெளியிடப்பட்டது?இலங்கையில் நாடோடி மன்னன் முதல் வெளியீட்டில் 16 பிரதிகள் எப்படி? ஏன்?விபரங்கள் அடுத்த பதிவில்......
Attachment 5949
Attachment 5950
Attachment 5951
-
1 Attachment(s)
ராஜா-(digitally re-released on June 9 ,2023)
எழுதியவர் கோபால்
சிவாஜியே இப்படத்தில் சொல்வது போல ராஜான்னா ராஜாதான். நம் ரசிகர்கள் மற்றுமல்ல, பொதுமக்கள்,மாற்று அணியினர் எல்லோரும் ஈர்த்து லயித்து ,ரசித்த படம். இது ஒரு jamesbond action movie genre என்றாலும் ,நேரடியாக ரெயின் கோட் போட்டு கொண்டு, கருப்பு கண்ணாடி மாட்டி கொண்டு, துப்பாக்கி தூக்கி ,வில்லன்களுடன் நேரடியாய் மோதி,ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை சல்லாபிக்கும் வழக்கமான jamesbond அல்ல. The departed என்ற ஆஸ்கார் பரிசு பெற்ற படத்தில் , வில்லன்களின் பாசறையில் போலிஸ் ஆள் ஒருவரும், போலிஸ் பாசறையில் வில்லன் ஆள் ஒருவரும் ஊடுருவி ஒருவர் யார் என்று மற்றவருக்கு தெரியாமல் , திரைக்கதை ஜாலம் புரிந்து எனது favourite இயக்குனர் Scorcese அதகளம் புரிவார் எனது அபிமான நடிகர்கள் matts Damon ,Decaprio போன்றோரை வைத்து.
வில்லன் பாசறையில் ஊடுருவி(Mole), அங்கு எல்லோர் அபிமானத்தையும் பெற்று முன்னேறி ,கடைசியில் போலிஸ் கஸ்டடி யில் இருந்து வெளியேறும் வில்லன் ஆள் ஒருவன் இந்த உண்மை தெரிந்து ,பிறகு உச்ச காட்சியில் ஒருவரை ஒருவர் போட்டு கொடுத்து விஞ்ச பார்க்கும் ,மிக சிறந்த ,சுவாரஸ்யமான ,ட்விஸ்ட் நிறைந்த,roller coaster ride போன்ற உச்ச கட்ட காட்சியுடன் முடியும் மிக மிக சுவாரஸ்யமான இளமை ஸ்டைல் திருவிழா இந்த படம். ஹிந்தி மூலம் நாராயணன் என்ற கதாசிரியர் எழுதியது.தமிழ் வசனம் வேறோர் நாராயணன்.
சி.வீ.ராஜேந்திரன் படம் என்றாலே இளசுகளுக்கு கொண்டாட்டம்.(இந்த படம் வந்த போது பதிமூன்று வயசு இளசுதானே) அப்போது படித்த இளைஞர்களின் கனவு நாயகன் ,திராவிட மன்மதன் நடிகர்திலகம் ,கலை செல்வியுடன், பாலாஜி தயாரிப்பில், சின்னி சம்பத் நடனம்,மாதவன் சண்டை,ராமகிருஷ்ணன் உடை,மஸ்தான் கேமரா ,மெல்லிசை மன்னர் இசை என்று பக்கா வின்னிங் டீம். எதிர்பார்ப்புக்கு கேட்கவா வேண்டும்? எதிர்பார்ப்பை மீறியே, எல்லா தரப்பினருக்கும் கல்யாண விருந்து போல தீனி கொடுத்த அற்புதம் ராஜா....
இந்த படத்தை பொறுத்த அளவில் நான் உள்ளே நுழைந்து உளவியல்,நடிப்பின் நுணுக்கம் என்றெல்லாம் உங்களை சோதிக்க மாட்டேன். ஏனெனில்,படம் முழுக்க இளமை,சுவாரஸ்யம்,ஸ்டைல்,energy மட்டுமே.
பாச மலர் ராஜசேகரன் ,தில்லானா சண்முகம்,திருவருட்செல்வர் அப்பர்,தெய்வ மகன் கண்ணன், வியட்நாம் வீடு பத்மநாபன்,பாபு என்று திராவிட மன்மதன், தான் சுந்தர புருஷனாக மட்டுமே தோன்றி ரசிகர்களை வசீகரிக்க எண்ணியதில்லை.எல்லா பாத்திரங்களிலும் சிறப்பாக நடித்து ,தன் இளமை,அழகு இவற்றை மறைத்து பாத்திரத்திற்கேற்ப தோன்றிய நடிகர்திலகம் தன் முழு இளமை, ஆண்மை, அழகு, வசீகரம் எல்லாவற்றையும் குறையாமல் நமக்கு வழங்கிய படங்கள் கலாட்டா கல்யாணம்,தங்கச்சுரங்கம்,நிறை குடம்,தெய்வ மகன்(விஜய்),சிவந்த மண்,எங்க மாமா, சுமதி என் சுந்தரி, ராஜா,வசந்த மாளிகை போன்றவை.இதிலும் ராஜா ஒரு குறிஞ்சி மலர்.
என்னத்தை சொல்ல!!! அழகென்றால் அப்படி ஒரு அழகு, இளமைஎன்றால் அப்படி ஒரு இளமை, ஸ்டைல் என்றால் அப்படி ஒரு ஸ்டைல்,துறுதுறுப்பென்றால் அப்படி ஒரு துறுதுறுப்பு, சுறுசுறுப்பென்றால் அப்படி ஒரு ஒரு சுறுசுறுப்பு அதுவரை திரையுலகம் பார்வைக்கு பார்வை,நடைக்கு நடை,காட்சிக்கு காட்சி அப்படி ஒரு வசீகரம் நிறைந்த இளமை துள்ளும் (என்ன ஒரு energy level )ஸ்டைல் ஆன ஒரு நாயகனை கண்டதில்லை.
இந்த படம் மிக பெரிய வெற்றி பெற்றும் நடிகர்திலகம் திரும்பி திரும்பி இதே மாதிரி படங்களில் சிக்கி கொள்ளவும் இல்லை என்பதே நடிகர்திலகத்தை வித்யாசம் காட்டியது.
உடைகளை பற்றி சொல்ல வேண்டுமென்றால்....
பொதுவாக அவர் trend setter .well dressed man of indian screen என்ற விருதை ஒரு வடக்கிந்திய பத்திரிகை 1958 இல் அவருக்கு அளித்து மகிழ்ந்தது.
அந்த சுந்தரனுக்கு எல்லா வித வேடங்களும் பொருந்தியது போல எல்லா வகை உடைகளும் பொருந்திய அழகை என் சொல்ல?வேட்டி சட்டை,ஜிப்பா,சுரிதார்,சட்டை,பேன்ட் ,கோட் சூட்,அரச உடைகள், இதிகாச புராண உடைகள்,படு படு ultra modern உடைகள் எல்லாமே கன கச்சிதமாக பொருந்தியது அந்த திராவிட ஆண்மை நிறை அழகனுக்கு.
இந்த படத்தில் ஜெர்கின் எனப்படும் ஜாக்கெட், கோட், tie ,மற்றும் scarf போன்ற உடைகள்.
முதல் காட்சியில் ஆரம்பிக்கும் ராஜாவின் ராஜாங்கம்.விஸ்வத்தின் அடுத்த அறையில் அடை பட்ட அழகான ஜெர்கின் அணிந்த ராஜா.சிகெரெட் lighter உடன் விஸ்வம் போலிசோடு அதிக சண்டையும் வச்சிக்காதே ,அதிக தொடர்பும் வச்சிக்காதே ,பொறுமையாய் இரு என்று லேசான தலையாட்டலுடன் ,எவ்வளவு நாளா நடக்குது என்று கேட்கும் விஸ்வத்திடம் நாலு நாளா என்று கூல் தொனியில் சொல்வது, நம்பிக்கையான ஆள் கேட்கும் விஸ்வத்திடம் ஆழமான குறுகுறு பார்வையுடன் ,தன் மேல் நம்பிக்கை வைக்க சொல்வது என்று முதல் காட்சியிலேயே தன்னுடைய வித்தியாச வேடத்துக்குள் அனைவரையும் ஈர்த்து கட்டி போட்டு விடுவார்.
ராதாவை ,ஹோட்டல் அறையில் சந்திக்கும் முதல் காட்சி டீசிங் கலந்த காதல் அறிமுக ஆரம்ப காட்சியில் நடிக்க விரும்புவோருக்கு இளமை பாடமே நடத்த பட்டு விடும்.ராதாவின் அழகை வியப்பு விழிகளால் பருகி ,பொய் ஆச்சர்யம் காட்டி அழகை விமர்சிக்கும் ஆரம்பம், indifference காட்டும் ராதாவிடம் ஜாலியாக credibility நிரூபிக்கும் cuteness ,பார்க்க மாட்டேங்களா வைரங்களை எனும் ஸ்டைல்,தன் பெயரை வித விதமாக சொல்லி கடி ஜோக் அடித்து தானே ரசிப்பது, முடிவில் கிளம்பும் போது ஆப்பிளை ஒரு அவசரம் கலந்த விழைவுடன் கடித்து விடை பெறுவது-இளமை குறும்பின் உச்சம் தொடும்.
நீ வர வேண்டும் பாடல் ராஜா சொல்லும் ஸ்டைல் களை கட்டி விடும்.அதிலும் முகம் தடவும் கையை ராதா தட்டி விட ,போலிசை காட்டியதும் அவர் கையை எடுத்து முகத்தில் வலுகட்டாயமாய் தேய்த்து கொள்ளும் இளமை டீசிங் குறும்பு.
பாபுவிடம் கூட்டி சென்றதும் அவரை கட்டி வைத்து விசாரிக்கும் காட்சி . ஈர்ப்பு நிறைந்த கிண்டலின் உச்சம். குமாரிடம் ஒவ்வொரு முறை அடிபடும் போதும் வித விதமான ஜாலி கமெண்ட் .முகத்தை கெடுத்துடாதே என்று சொன்னாரில்லை மடையா... ஏண்டா அடிக்கரத்துக்குன்னே சம்பளமா... அதே மாதிரி ராதாவுடன் சந்திப்பை இதயம் அடித்த அழகை கண்ணை அடித்து குதூகலிக்க வைப்பார்.(தடக் தடக்).முடிந்து தன் கயிற்றை அறுத்து வில்லன்களை அட்டாக் பண்ணி, surprise கொடுத்து lighter இல் போட்டோ எடுக்கும் லாவகம்... வேறு ஒரு நடிகன் கனவு கூட காண முடியாத நடிப்பு.
குமாரின் துரோகம் பற்றி பாபுவிடம் சொல்லி ,அவர் தூக்கி எரியும் சாவியை expert என்று இடது கையால் பிடிக்கும் ஸ்டைல்.பாபுவை தாக்கி விட்டு தப்பியோட பார்க்கும் குமாரை ,ஸ்டைல் ஆக சிகெரெட் தனது ஆள்காட்டி கட்டை விரலில் குவித்து கீழ் விட்டு தேய்க்கும் அழகு. பிறகான அற்புத சண்டை காட்சி.
ஒரு நேருக்கு நேர் சண்டை காட்சியில் நீங்கள் என்ன எதிர்பார்ப்பீர்கள்? ஒரு சமமான அல்லது மிகை பலம் கொண்ட வில்லன். சம யுத்தம். சம வாய்ப்பு. சிறிதே திட்டமிடல். சவால் விடும் gestures . சுறுசுறுப்பு நிறைந்த rhythmic manly Grace ,நல்ல கட்டமைப்பு இவைதானே? இவை அத்தனையும் கொண்ட சண்டை காட்சிதான் குமாருடன் ராஜா மோதும் சுவாரஸ்ய குதூகல சண்டை காட்சி.முதல் பாய்ந்து இரு முறை அட்டாக் பண்ண சுலப வாய்ப்பு எதிரிக்கு கொடுக்கும் போது முகத்தில் ஒரு scheming look தெரியும்.பிறகு லாவகமாய் நகர்ந்து அட்டாக் ஆரம்பிக்கும் போது ஒரு aggression தெரியும். எதிரெதிரில் குறி பார்க்கும் போது ஒரு cautious anticipation தெரியும்.எதிரி குறி வைக்கும் போது அந்த அடி பட்டால் எப்படி இருக்கும் என்ற உணர்வை react செய்து உணர்த்துவார்.(அடி படும் போது வலி வேதனை ) ஒரு பம்பரம் போல் சுழன்று சுழன்று திரும்பி graceful stylish சுறுசுறுப்பு காட்டும் நேர்த்தி.கண்ணை அடித்து ,ஒரு கூல் பார்வையுடன் எதிரியை challenge பண்ணுவார். ஒரு சண்டை காட்சியில் கூட தன்னை மீற யாருமில்லை என ஓங்கி சொன்ன அற்புத காட்சி.
அதே போல ராதா தன் அம்மாவிடம் பேசுவதை ஒட்டு கேட்கும் போது ராதாவிடம் துப்பாக்கி முனையில் உள்ளே வரும் போது அம்மாவிடம் விசாரிப்பு, பிறகு ஒரு பொய்யை சொல்லும் போது நேர்பார்வை தவிர்த்த ,கையை தனது வாயை மறைக்கும் தோரணையில் வைத்து பேசும் இடம் உளவியல் அறிஞர்கள் ,பொய் சொல்வர் செய்யும் சில செயல்களை படித்தால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும் உளவியல் நடிப்பதிசயம்.
பாபு நம்மை தொடர்கிறார் என்று அறிவிக்கும் ராதாவிடம் ,அதை கவனித்து பின் romance பண்ணுவது போல் நடிக்கும் நுணுக்கம்.(பாபு சந்தேகம் தவிர்க்க). ஜம்பு வந்ததும் ஹூம் ஹூம் என்று ஸ்டைல் ஆக கை காட்டும் ஆமோதிப்பு,தங்கத்தை தொட்டதும் கையை தட்டி விடும் அவசர அலட்சிய எச்சரிக்கை , தொடரும் விறுவிறுப்பான சண்டை காட்சி ,ஜம்புவிடம் கத்தியை காட்டி ஓடுடா என்ற மிரட்டல் தொனியில் காட்டுவது.
தொடரும் ramantic marvel கல்யாண பொண்ணு lead scene (அப்புறம்தான்....).நீ வெக்கத்தோடு என்னை ஒர கண்ணால் பார்க்க (ராதா முறைக்க)சரி நான் பாக்கிறேன்னு வெச்சிக்க.
சிவாஜியின் நடன காட்சிகளில் ஒரு அபாரமான டான்சர் grace , கடின movements , ஸ்டைல்,சுறுசுறுப்பு,professionalism மிளிரிய கால கட்டம். கல்யாண பொண்ணு அதற்கு அற்புத உதாரணம்.ஒரு back and sideways ஸ்டெப்ஸ் போட்டு துவங்குவாறே அதை சொல்வதா ,கைகளை விரித்து hop step பாணியில் ஒன்றை செய்வாரே அதை சொல்வதா, தெய்வத்தால் எதுதான் முடியாது?
இன்ஸ்பெக்டர் உடை அற்புதமாக இருக்கும். அந்த காட்சியில் stiffness காட்டி எல்லோரையும் குழப்பி பிறகு போலிசை விரட்டும் நயம்.
தொடர்ந்த நாகலிங்கத்தை சந்திக்கும் காட்சியில் தாராவை கண்டதும் காட்டும் கண நேர சங்கடம் கலந்த முகபாவம்..(தாராவின் நிலைக்கு ராஜாவும் காரணமே)
இரண்டில் ஒன்று காட்சி ஊடல் கலந்து காதல் விருந்து. திராட்சை நிற உடையில் (திராட்சை ஆணின் காம விழைவையும்(libido&virility), பச்சை நிறம் பெண்ணின் அழைப்பை ஏற்று பிள்ளை பெறும் விழைவையும் (Fertility)குறிக்கும். சி.வீ.ஆர் கலர் psychology )அழகு கொண்ட இளமை குறும்புடன் ,கண்ணில் தெறிக்கும் கிண்டலுடன் அவர் ஒவ்வொரு ஜன்னலாக எட்டி பார்க்கும் அழகு. ஒரு bull fight gesture கொண்டு அறைக்குள் நுழைந்து, அணைக்கும் போது செல்ல நிமிண்டல், என்று இரண்டில் ஒன்றல்ல ஒன்றே ஒன்று என நாம் குதூகலிக்கும் ஒரே காட்சி.
இறுதி காட்சி நடிகர்திலகம் நினைத்தாலும் அவருடைய திறனை கட்டு படுத்த முடியாது என்று அவர் காட்டும் சுவாரஸ்ய வெளியீடு.
இந்த காட்சி முழுதுமே வில்லனை பிடிக்க திட்டமிட்டு ,அது விஸ்வம் தலையீடு மற்றும் அம்மாவின் கடத்தல் என்பதினால் மாற்று திட்டமிடல் என்பதை முன்னிறுத்தி ,விஸ்வத்தின் எதிர்பாராத நடவடிக்கை அதனை கெடுக்கும் போதும் ,சுதாரிக்க வேண்டிய அவசரம். சிவாஜியின் முகபாவங்களில், ஒரு ஆசுவாசம் (திட்ட படி),அவசரம், குழப்பம் (நிலைமை எல்லை மீறும் போது),குறிப்புகள் (எல்லாம் கட்டுக்குள் என்று நண்பர்களுக்கு உணர்த்துவது),சமாளிக்கும் அவசரம், மற்றோரை குறிப்புணர்த்தி தன்னோடு தொடர சொல்லும் அவசரம் நிறைந்த எச்சரிக்கை தொனிக்கும் timing கொண்ட சமாளிப்புகள் .இந்த கட்டத்தில் அவர் முக பாவங்களை தொடருங்கள். பல ஆச்சரியங்கள் காத்திருக்கும்..
அவர் அன்னை சித்திரவதை படுத்த படும் போது , அதை தாங்கி கொள்ளவும் முடியாமல்,தடுக்கவும் முடியாமல்,வேதனையை வெளிக்காட்டவும் முடியாமல்,ஆத்திரத்தை கட்டு படுத்தவும் முடியாமல் துடித்து ,எதிரிகளுக்காக சிரித்து சமாளிப்பது போல அவர் காட்டும் நடிப்பு. (ஆம்.நடிப்பது போன்ற நடிப்பு).
Attachment 5954
Thanks Gobalakrishnan Sundararaman (Muktha films 60)
-
2 Attachment(s)
சென்னை ஆல்பர்ட் அரங்கில்
யூன் 09 2023 ல் திரையிடப்பட்ட நடிகர் திலகத்தின் மாபெரும் வெற்றிச்சித்தரம்
ராஜா வெற்றிகரமான 2 வது வாரமாக காட்சியளித்துக்கொண்டிருக்கிறது.
புதிய படங்களுக்கு நிகராக மக்கள் வருவதாக தகவல் தெரிவிக்கிறது.
ராஜா திரைப்படத்தை திரையிட வேறு ஒரு தியேட்டரை அணுகிய பொழுது
மறுத்தவர்கள் ராஜாவின் வெற்றி பவனியை கண்டு ஒரு வாரம் திரையிட
வேண்டி நிற்பதாக தகவல் சொல்கிறார் சென்னை நண்பர்.
11 ம் திகதி வெள்ளிக்கிழமை மாட்னி ஷோவுக்கு சுமார் 300 பேரும்
மாலைக்காட்சிக்கு 600 பேருக்கு மேல் பார்த்து மகிழ்ந்ததாகவம் தகவல்.
ராஜாவின் வெற்றி பவனி தொடரட்டும்.
Attachment 5956
Attachment 5957
-
1 Attachment(s)
மீண்டும் ரசிக நெஞ்சங்களை மகிழ்விக்க....
Attachment 5958
-
2 Attachment(s)
மீண்டும் வசூலில் சாதனை படைக்க வருகிறார் .......
Attachment 5959
Attachment 5960
-
3 Attachment(s)
மார்ச்/ 24 /2023 ல் மறு வெளியீடு கண்ட நடிகர் திலகத்தின் முதல் மரியாதை
திருப்பூர் நகரில் 100 நாட்களுக்குமேல் ஓடி சாதனை படைத்துள்ளது.
அதனை திருப்பூர் சிவாஜி ரசிகர்களும் மக்களும்
யூலை /02/2023 அன்று (102 வது நாள்) விழா எடுத்து சிறப்பாக கொண்டாடியுள்ளார்கள்.
Attachment 5961
Attachment 5962
Attachment 5963
-
4 Attachment(s)
-
5 Attachment(s)
-
4 Attachment(s)
-
5 Attachment(s)
யூலை 21 2023 வெள்ளிக்கிழமை மறு மறு வெளியீடு காணவரும்
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் நடித்த காதல் காவியம்
வசந்த மாளிகை திரைப்படத்திற்கு சென்னை மாநகரில் வைக்கப்பட்டிருக்கும்
பேனர்கள்.முதல்முறையாக பழைய திரைப்படத்திற்கு வைக்கப்பட்டது.வைக்கப்பட்ட இடங்கள் (1) வடபழநி சிக்னல் (2) கோடாப்பாக்கம் மேம்பாலம்கீழ்(3) மவுண் ரோடு (4) அண்ணாநகர் ரவுண்டானா.
வைக்கப்பட்டது நடிகர் திலகத்திற்கு.அவர் நடித்த வசந்த மாளிகைக்கு.
Attachment 5977
Attachment 5978
Attachment 5979
Attachment 5980
Attachment 5981
-
1 Attachment(s)
July 21 முதல் மறு மறு வௌியீடு காணவரும் நடிகர் திலகத்தின்
வசந்த மாளிகை வெளிவரவிருக்கும் திரை அரங்குகளின் விபரங்கள் கிடைத்தவரை.
July 21 முதல்
சென்னை-
கேசினோ
ஆல்பர்ட்
சத்யம்
எஸ்கேப்
லுக்ஸ்
PVR VR
PVR Palazzo
PVR Velachery
PVR Ampa Skywalk
PVR OMR
PVR Aerohub
மதுரை அண்ணாமலை
பழனி சந்தானகிருஷ்ணா தேனி ஃபாத்திமா
திண்டுக்கல் ஆர்த்தி
திருச்சி பாலஸ்
தஞ்சாவூர் GV Complex
கரூர் லக்ஷ்மிராம்
மாயவரம் பியேர்லேஸ் etc
Attachment 5982
-
4 Attachment(s)
July 21 முதல் மறு மறு மறு வௌியீடு காணவரும் நடிகர் திலகத்தின்
வசந்த மாளிகை திரைப்படத்தின் பத்திரிகைகளில் வெளிவந்த விளம்பரங்கள்.
Attachment 5983
Attachment 5984
Attachment 5985
Attachment 5986
(தினத்தந்தி -கோவை)
-
இதனைப் பற்றி நான் அறிந்த தகவல்கள் இந்த தகவல்கள் எந்த அளவு உண்மை என்பது சரிவர தெரியவில்லை இருந்தாலும் 1986 இல் சென்னை முகப்பேரில் ஒரு பள்ளியை ஆரம்பிப்பதற்காக அரசிடம் அனுமதி கேட்டு விண்ணப்பித்திருந்தார் ( அப்போது முதல்வர் எம்ஜிஆர் அவர்கள்)
எம் வி முத்துராமலிங்கம் அவர்கள் தமிழ் வழி கல்வியை பயிலவே மாணவர்கள் சரி வர வராத இந்த காலத்தில் ஆங்கில வழிக் பள்ளியை ஆரம்பித்து என்ன செய்யப் போகிறாய் என்று அனுமதி கொடுக்க மறுத்து விட்டார்களாம்....
அப்போது நடிகர் திலகத்தின் உதவியை நாடியிருக்கிறார் வேலம்மாள் கல்விக் குழும தலைவர் எம் வி முத்துராமலிங்கம் அவர்கள்...
நடிகர் திலகத்தின் சிபாரிசின் பேரில் அந்தப் பள்ளிக்கு அனுமதி கொடுக்கப்பட்டதாக தெரிகிறது.....
அதன் பிறகு வேலம்மாள் கல்வி குழுமத்தின் வளர்ச்சி அபரிதமாக வளர்ந்து இன்று இந்தியாவிலேயே மிகப்பெரிய கல்வி நிறுவனமாக திகழ்ந்து வருகிறது.........
இந்த நிகழ்வின் அடிப்படையில் மதுரை வேலம்மாள் பொறியியல் கல்லூரி வளாகத்தில் ஒரு கட்டிடத்திற்கு நடிகர் திலகத்தின் பெயரை வேலம்மாள் கல்வி குழுமத் தலைவர் திரு எம் வி முத்துராமலிங்கம் அவர்கள் சூட்டி
இருக்கலாம் என கருதப்படுகிறது....
Attachment 5987
Thanks G Laksmanan (Nadigarthilagam Fans)
-
2 Attachment(s)
சென்னை ஆல்பேர்ட் அரங்கில்...
Attachment 5989
-
1 Attachment(s)
July 21 முதல் மறு மறு மறு வௌியீடு கண்ட வசந்த மாளிகை
திரையிடப்பட்ட அரங்குகள் சில..
Attachment 5990
சென்னை சத்யம் /எஸ்கேப் /காசினோ /பளாசோ
PVR Sky Mall / ஆலபர்ட் /காசி டாக்கீஸ் /
வேளச்சேரி லக்ஸ் ஜீ கே சினிமாஸ் விஜயா பார்க்
பூத்தமல்லி EVP / தாம்பரம் MR /பாடி லட்சுமி பாலா
செங்கல்பட்டு SRK /காஞ்சி பாலசுப்ரமணி
மதுரை அண்ணாமலை/ஆர்ஸ்
திண்டுகல் ஆர்த்தி /பழநி மினி ரமேஷ்
தேனி பாத்திமா/ராழபாளையம் பாலாஜி
திருச்சி பேலஸ்/ கரூர் லட்சுமிராம்
மாயவரம் பியர்லஸ் /தஞ்சை GV
திருநெல்வேலி PSS மல்டிபிளக்ஸ்/தூத்துக்குடி KSPS
நாகர்கோயில் வசந்தம்பேலஸ்/கோவில்பட்டி மல்டிபிளக்ஸ்
சேலம் ARRS மல்டிபிளக்ஸ்/கிருஷ்ணகிரி முருகன்
தர்மபுரி D மேக்ஸ்/காவேரிப்பட்டினம் ரவி
தென்காசி ஶ்ரீ பத்மா/அம்பை கல்யாணி
ஆலம்குளம்TPV மல்டினிளக்ஸ்/ சங்கரன்கோயில் கோமதி சங்கர்
கோவை தி சினிமா/பிராட்வே சினிமா/ஐ நாக்ஸ்/KG சினிமா /காஸ்மோ சினிமா
ஈரோடு மகாராஜா/திருப்பூர் ஶ்ரீசக்தி சினமா சக்தி/KSB சினிபிளக்ஸ் தேவி
அம்பத்தூர் ராக்கி
-
3 Attachment(s)
சென்னை ஆல்பர்ட் திரையரங்கில்
மக்கள் வெள்ளத்தில் வசந்த மாளிகை 23/07/2023 ஞாயிற்றுக் கிழமை.......
Attachment 5991
Attachment 5992
Attachment 5993
Attachment 5992
-
வசந்த மாளிகை படத்தை பார்த்துவிட்டு நடிகர் சத்யராஜ்
https://fb.watch/lZEhLs2LGH/
நன்றி Thilak Ganesan ( சிவாஜி சாம்ராஜ்யம் Fb Fans)
-
1 Attachment(s)
ஏத்தனை முறை வெளியிட்டாலும் தமிழகமெங்கும்
வெற்றி ! வெற்றி!! வெற்றி!!!
Attachment 5995
-
4 Attachment(s)
July 21 முதல் மறு மறு மறு வௌியீடு கண்ட வசந்த மாளிகை
இரண்டாவது வாரமாக....
Attachment 5996
Attachment 5997
Attachment 5998
Attachment 5999