Quote:
Originally Posted by Plum
Interesting, why would anyone get the doubt in 1958 that he'll quit? What is the background behind this? Any political upheavals?
Murali gaaru, meerE cheppAli!
அந்த ஆண்டில், அதுவரை அவர் சார்ந்திருந்த ஒரு இயக்கத்தை விட்டு, மனம் வெதும்பி வெளியேறிய நேரமும், காத்திருந்தது போல இன்னொருவர் உள்ளே நுழைந்ததும், இப்படி ஒரு கேள்வி கேட்கப்பட காரணமாக இருந்திருக்கக்கூடும். அதுவரை அவர் நடித்த வெற்றிப்படங்களில் பல, அவர் சார்ந்திருந்த இயக்கத்தின் பாற்பட்டதே என்பதால், அரசியல் இயக்கத்தை துறந்ததோடு, திரையுலகை விட்டும் விலகி விடுவாரோ என்ற நப்பாசை சிந்தனையில் எழுப்பப்பட்ட வினா.
ஆனால் அடுத்த ஆண்டே, பாஞ்சாலக்குறிச்சிக்காரன் சிம்மமாய் கர்ஜித்து, திரையுலகில் என் சாதனைகளே இனிதான் நிகழப்போகின்றன என அறிவுறுத்த, (இக்கால கவிஞர்கள் பாணியில் சொன்னால்) 'விஷமிகள் கற்பனை தவிடுபொடி'.