குழந்தை பிறந்தவுடன்
http://www.youtube.com/watch?v=imwsn-J8NuM
Printable View
குழந்தை பிறந்தவுடன்
http://www.youtube.com/watch?v=imwsn-J8NuM
குழந்தை வளர்ந்தவுடன் தொட்டில் இடும்போது
http://www.youtube.com/watch?v=HtI2WuwCvyI
குழந்தை வளர்ந்து மானவபருவம் அடையும்போது
http://www.youtube.com/watch?v=YtufCVcIfzI
அடுத்தவர் புகழை கூட...அடுத்தவர் பெருமையை கூட... தனது மட்டுமே என்று சித்தரிப்பவர்களுக்கு ,பறை சாற்றுபவர்களுக்கு ...!
மனித வாழ்கையில் நடக்கும் எந்த ஒரு சம்பவமாக இருக்கட்டும் ....அதற்க்கு ஏற்ற பாடல் வேறு எவரை காட்டிலும் திரைப்படங்களில் அதிகமாக கொண்டு வந்தது கண் முன் நிறுத்தியது நடிகர் திலகம் என்பதை இங்கு பதிவுகளை படிக்க வரும் பார்வையாளர்கள் உணர மேலே நான் குறிப்பிட்ட சில உதாரண பாடல்கள்....இன்னும் பல நூறு ஆயிரம் சம்பவங்களுக்கும் ஏற்ற பாடல் நடிகர் திலகம் தனது திரைப்படங்கள் மூலம் காட்சிகளாக...பாடல்களாக கொண்டு வந்து கண் முன் நிறுத்தியுள்ளார் மற்ற எவரை காட்டிலும் அதிகமாக...!
இந்த பாட்டுக்கள் போதுமா இன்னும் கொஞ்சம் வேண்டுமா என்று ஓங்கி உரைத்த நண்பர் ரவிகிரன்சுர்யா அவர்களக்கு என் நன்றி.
குழந்தை நட்சத்திரமாக புகழ் பெற்று விளங்கிய குட்டி பத்மினி, எம்.ஜி.ஆருடனும், சிவாஜிகணேசனுடனும் பல படங்களில் நடித்தார்.
சிவாஜியுடன் நடித்த அனுபவங்கள் குறித்து குட்டி பத்மினி கூறியதாவது:-
"நடிப்பில் சிவாஜி சார் இமயம் என்று தெரியும். ஆனால், அப்போது பேபி நட்சத்திரமாக இருந்த எனக்கு, இது தெரிந்திருக்க வாய்ப்பில்லையே.
ஏ.பி.நாகராஜன் அங்கிள் அப்போது எடுத்த "திருவருட்செல்வர்" படத்தில் சிவாஜி சார் நடித்தார். இந்தப் படத்தில் சிவாஜி சாருடன் விவாதம் செய்யும் ஒரு காட்சியில் நடிக்க என்னை 'புக்' செய்தார்கள். புராணப்படம் என்பதால் தூய தமிழில் பேச ஏ.பி.நாகராஜன் அங்கிள் வீட்டில் ஒரு வாரம் எனக்கு 'சுத்தத் தமிழ்' கற்றுத் தந்தார்கள். இந்த ஒரு வாரத்தில் ஏ.பி.என். அங்கிளின் பிள்ளைகளும் எனக்கு 'பிரண்ட்ஸ்' ஆகிவிட்டார்கள்.
சிவாஜி சாருடன் நான் நடிக்க வேண்டிய காட்சி படமாகும் நாளும் வந்தது. அப்போதெல்லாம் எனக்கு 'நடிப்பு' பற்றி பயமே இருந்ததில்லை. படத்தில் திருமலை மன்னராக வரும் சிவாஜி சாருக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது. அவருக்கு கடவுள் நம்பிக்கை ஏற்படுத்தும் சிறுமியாக நான் வந்தேன். கடவுள் நம்பிக்கை பற்றி நான் அவரிடம் பேசப்போக, அவரோ "கடவுள் இருக்கிறார் என்றால், அவர் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்?" என்று கேட்பார்.
"இந்தக் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டுமானால் என்னை திருமலை மன்னராக்கி அரியணையில் அமர வைக்கவேண்டும்" என்பேன்.
உடனே திருமலை மன்னர் என்னை அரியணையில் அமர்த்தி மன்னராக மகுடம் சூட்டுவார். அடுத்த கணம் நான், "யாரங்கே! இதுவரை திருமலை மன்னராக இருந்த இவரை பிடித்து சிறையில் அடையுங்கள்" என்பேன். அப்படி உத்தரவிட்டு விட்டு, "கடவுள் இப்போது இதைத்தான் செய்து கொண்டிருக்கிறார்" என்பேன்.
இதன் பிறகு திருமலை மன்னர் கடவுள் நம்பிக்கை உடையவராக திருந்துவதுடன் அந்தக் காட்சி முடியும். இந்தக் காட்சியில் திருமலை மன்னராக நடிக்கும் சிவாஜி சார் உணர்ச்சி வேகத்தில் பேசிவிட்டு, என் காலில் விழுவதாக அந்தக் காட்சி முடியும்.
இந்தக்காட்சி பற்றி சிவாஜி சாரிடம் விளக்கிய உதவி இயக்குனர்கள், கடைசியில் 'கடவுள் ஞானம்' கொடுத்த சிறுமியின் காலில் விழுவதுடன் காட்சி முடியும் என்பதை தயங்கித் தயங்கி சொன்னார்கள். ஆனால் சிவாஜி சார் அதற்கு பதில் எதுவும் சொல்லவில்லை. காட்சியில் உணர்ச்சிகரமாக பேசிக் கொண்டு வந்தவர், "அம்மா நீ சிறு பெண்ணல்ல; என் அறிவுக்கண் திறக்க வந்த தெய்வம்" என்று சொல்லி என் கால் பக்கமாக விழுந்து விட்டார்.
டைரக்டர் ஏ.பி.நாகராஜன் அங்கிள் 'கட்' செய்யவும் மறந்து ஒரு கணம் பிரமித்து நின்று விட்டார். காட்சியின் கனம் கருதி எந்த நடிப்புக்கும் தயாராக இருந்த சிவாஜி சாரை நினைத்தால் இப்போதும் அவர் மீது ஒரு மரியாதை ஏற்படுகிறது. இந்தப்படம் பற்றி அப்போது விமர்சனம் எழுதிய ஒரு பத்திரிகை, இந்தக் காட்சி பற்றி குறிப்பிடும்போது "திமிங்கலத்தை சின்ன மீன் விழுங்கிவிட்டது" என்று வர்ணித்திருந்தது.
அதுமாதிரி, "திருமால் பெருமை" படத்திலும் ஒரு உணர்ச்சிமயமான காட்சி சிவாஜி சாருக்கும் எனக்கும் இருந்தது. படத்தில் குட்டி ஆண்டாளாக வரும் நான் திருமாலுக்கு என் தந்தை (சிவாஜி) சூடிய மாலையை என் கழுத்தில் எடுத்து போட்டுக்கொள்வேன். ஆத்திரமாகும் அப்பா என் மீது கோபப்படுவதாக காட்சி. இந்தக் காட்சியின்போது நான் கொஞ்சமும் எதிர்பாராமல் சிவாஜி சார் என் கன்னத்தில் ஓங்கி விட்டார் ஒரு அறை. அந்த அறையின் வேகத்தில் என் காதில் இருந்த கம்மல் தெறித்து விழுந்தது. பொறி கலங்கிப்போனேன். என்றாலும் நான் தொடர்ந்து பேசவேண்டிய வசனத்தை பேசி முடித்தேன்.
காட்சி முடிந்ததும் சிவாஜி சார் ஓடிவந்து என் கன்னத்தை தடவி விட்டார். பிறகு அம்மாவிடம் அந்தக் காட்சிக்கான விளக்கம் சொன்னார். "இந்தக் காட்சியில் நான் கன்னத்தில் அறைவதை முதலிலேயே சொல்லியிருந்தால் உங்கள் பெண், நான் அடிக்கும்போது கன்னத்தை திருப்பியிருப்பாள். அப்படிச் செய்திருந்தால் அந்தக்காட்சி இயல்பாக அமையாது. அதனால்தான் அடிப்பதை முன்கூட்டியே சொல்லவில்லை. ஆனால் இப்படி சொல்லாமல் கன்னத்தில் அடித்தும், நடிப்பதை நிறுத்தாமல் தொடர்ந்து அழுதுகொண்டே வசனம் பேசி நடித்த உங்கள் பெண் என்னை ரொம்பவே கவர்ந்து விட்டாள்" என்று சொன்னவர், "உங்க கையை நீட்டுங்க" என்றார், அம்மாவிடம்.
அம்மா 'எதற்கு' என்று புரியாமல் பார்த்த நேரத்தில், "எனக்கு சத்தியம் பண்ணிக் கொடுங்க. உங்க பொண்ணு ஹீரோயினா நடிக்கிற கால கட்டத்துல என்கூட தான் முதல்ல நடிக்கணும்" என்றார்.
அம்மா அப்படியே நெகிழ்ந்து போய்விட்டார். பெண்ணின் நடிப்பு மீது அந்த மகா கலைஞர் வைத்த நம்பிக்கையும், சிறு குழந்தை மாதிரி அவர் கேட்ட சத்தியமும் அம்மாவை ஆனந்த அதிர்ச்சிக்குள்ளாக்கிவிட்டது."
இவ்வாறு குட்டி பத்மினி கூறினார்.
தற்போது நடிகர்திலகத்தின் ஆண்டவன் கட்டளை திரைப்படம் ஜெயா மூவீஸ் சேனலில்
ஒளிபரப்பிகொண்டு இருகின்றார்கள். இந்த படத்தை எனது நினைவு தெரிந்த நாள் அன்று சைதை ஜெயராஜ் திரைஅரங்கில் பார்த்த நாள் நினைவிற்க்கு வருகிறது. பின் சென்னை பரகோன், வேளச்சேரி ராஜலக்ஷ்மி மற்றும் பல
திரைஅரங்கு நினைவிற்கு வருகின்றது.
இந்த திரைபடத்தில் பேராசிரியர் ஆக வரும் நடிகர் திலகம் காதல் வயப்பட்டு தனது உடை
சிகை அலங்காரங்களை மாற்றி கல்லூரிக்கு வரும் நடிகர் திலகம் ஒரு அழகிய ராஜா நடை போட்டு வரும் அந்த கட்சி ஒன்றே போதும் உலக பெரு நடிகன் நம் நடிகர் திலகம்.
by Yukesh BabuQuote:
Quote:
திருமலை மன்னராக நடிக்கும் சிவாஜி சார் உணர்ச்சி வேகத்தில் பேசிவிட்டு, என் காலில் விழுவதாக அந்தக் காட்சி முடியும்.
இந்தக்காட்சி பற்றி சிவாஜி சாரிடம் விளக்கிய உதவி இயக்குனர்கள், கடைசியில் 'கடவுள் ஞானம்' கொடுத்த சிறுமியின் காலில் விழுவதுடன் காட்சி முடியும் என்பதை தயங்கித் தயங்கி சொன்னார்கள். ஆனால் சிவாஜி சார் அதற்கு பதில் எதுவும் சொல்லவில்லை. காட்சியில் உணர்ச்சிகரமாக பேசிக் கொண்டு வந்தவர், "அம்மா நீ சிறு பெண்ணல்ல; என் அறிவுக்கண் திறக்க வந்த தெய்வம்" என்று சொல்லி என் கால் பக்கமாக விழுந்து விட்டார்.
டைரக்டர் ஏ.பி.நாகராஜன் அங்கிள் 'கட்' செய்யவும் மறந்து ஒரு கணம் பிரமித்து நின்று விட்டார். காட்சியின் கனம் கருதி எந்த நடிப்புக்கும் தயாராக இருந்த சிவாஜி சாரை நினைத்தால் இப்போதும் அவர் மீது ஒரு மரியாதை ஏற்படுகிறது. இந்தப்படம் பற்றி அப்போது விமர்சனம் எழுதிய ஒரு பத்திரிகை, இந்தக் காட்சி பற்றி குறிப்பிடும்போது "திமிங்கலத்தை சின்ன மீன் விழுங்கிவிட்டது" என்று வர்ணித்திருந்தது.
Dear Yukesh Babu
மணம் வீசாத எந்த மலரும் வெறும் அலங்கார மலராகவோ காகித மலராகவோதான் இருக்க முடியும். மல்லிகை எங்கிருந்தாலும் மண(ன)முள்ள மலரே... அது மாற்றார் தோட்டத்தில் மலர்ந்திருந்தாலும்! நடிகர்திலகம் பற்றிய ஆரோக்கியமான தங்களது பதிவு வரவேற்புக்குரியது நண்பரே! நன்றிகள்.
நடிகர்திலகம் என்னும் திமிங்கிலத்தின் முன் மற்றெல்லாம் சிறுகுறுமீன்களே! ஆனாலும் இந்தத்திமிங்கிலம் வித்தியாசமான டால்பின் வகை திமிங்கிலம்.
சிறார்களான சிறு ஜிலேபி மீன்களுக்கும், சுறாக்களான பெரியவர்களுக்கும் கூட நாம் இந்தத்திமிங்கிலத்தையே விழுங்கிவிட்டோம் என்ற மாயத்தோற்றத்தை உருவாக்கி அவர்களையும் தனது தோளில் சுமந்து வளைந்து நெளிந்து 'டைவ்' அடித்து வலம்வந்து மனம் மகிழ வைக்கும் மாயக்கார திமிங்கிலம்!.
திருவிளையாடலின் தருமி வாளைமீன் நாகேஷ் , குருதட்சணையின் வஞ்சிரமீன் பத்மினி, படிக்காத மேதை சுறாமீன் ரங்காராவ், பாவமன்னிப்பு Piranha மீன் ராதா, தூக்குதூக்கியின் பாறைமீன் பாலையா...தெய்வமகன் திருக்கைமீன் நாகையா, காவல் தெய்வம் கட்லா மீன் சுப்பையா ... மனோகராவின் விண்மீன் கண்ணாம்பா, கர்ணனின் தாய்செம்மீன் ராஜம்மா, தில்லானாவின் மின்சார மீன் மனோரமா .. புதிய பறவை கெளுத்திமீன் சவுகார் , பாலும்பழமும் கெண்டைமீன் சரோஜாதேவி, நீலவானம் நெத்திலிமீன் தேவிகா...........பந்தம் படத்தின் குட்டி கடல்குதிரைமீன் ஷாலினி....... பார்த்தால் பசிதீரும் ஆக்டோபஸ் மீன்குடும்பம் ஜெமினி/சாவித்திரி/இரட்டைக் கமல்....வரை அடுக்கிகொண்டே போகலாம்.
நடிப்பின் திமிங்கிலம் நடிகர்திலகமே....ஒப்புக்கொண்டு மகிழ்வான மாற்றங்களையும் முதிர்வானபுரிதல்களையும் திரிகளுக்கு இடையே உருவாக்கிட தூண்டில் போடும் உங்கள் முயற்சிக்கு நன்றிகள் யுகேஷ்!
முயற்சிகள் தவறலாம் ........முயற்சிக்கத் தவறலாமா !
Illusions made by our Magician of Acting with a Midas touch to make the scene a golden product!
Small fish 'engulfing' the Big fish!? illusion thanks to the magnanimity of the Nadippin Thesaurus (NT)!!
https://www.youtube.com/watch?v=hJx2...2A45C1&index=3
Crouching Tiger and Hidden Dragon?! A hallucination only!!
https://www.youtube.com/watch?v=MOTgW8glTHk
Gripping Octopus 'arresting' the Slipping Dolphin!? Mirage!!
https://www.youtube.com/watch?v=J4QCNQi17a8
நடிப்புத் திமிங்கிலம்(NT) / நடிகர் திலகம் (NT) சுமந்து மகிழ்வித்த சுகமான குட்டிமீன்கள் மற்றும் சுமையான சுறாக்கள் !
PART 1 : இனிமை நிறைந்த குதூகலமான குட்டி ஜிலேபி மீன்கள்
https://www.youtube.com/watch?v=TFu4zYk4Xeg
https://www.youtube.com/watch?v=yglkhIIxBf8
Master Shridhar is fish out of water before our Nadippu Thimingilam
https://www.youtube.com/watch?v=iC6RJSe97S8
https://www.youtube.com/watch?v=LvaoBusG1e4
https://www.youtube.com/watch?v=k3YN6RCZHs0
அன்று ஐந்து வயது குட்டிமீன் இன்று 60 வயது நடிப்புச்சுறா! இன்றும் மகிழ்விக்க திமிங்கிலம் இல்லையே!
https://www.youtube.com/watch?v=4ofp0GGu3AA
eன்னை ஆட்கொண்எட நடிகர்திலகம் :
நான் எப்படி அவருக்கு பக்தன் ஆனேன் :
எனக்கு நினைவு தெரிந்து நான் பார்த்த முதல்
சிவாஜி படம் தில்லான மோகனம்பாள். எனது
தாயாருடன் பார்த்து அந்த படத்தில் மோளம்
அடிப்பது போல் நான் அடித்து காட்டினால் எனக்கு எனது மாமா 5 பைசே கொடுப்பார்.
பிறகு திருவல்லிகேணியில் உள்ள பள்ளியில்
சண்டே அன்று மாதம் ஒரு முறை திரைப்படம்
போடுவார்கள். அப்படி நான் பார்த்த திரைப்படங்கள் அனைத்தும் நடிகர் திலகத்தின்
படம் மட்டும் தான். அது மட்டும் அல்ல திரையிடும் படங்கள் அத்தனையும் நடிகர் திலகத்தின் படம் மட்டுமே.
அங்கு நான் பார்த்த படங்கள்:
கலாட்ட கல்யாணம்
பதிபக்தி
உயர்ந்த மனிதன்
பாசமலர்
இன்னும் ஒரு நான்கு அல்லது ஐந்து படங்கள்
இருக்கும். அது போல் நான் பார்த்த முதல்
இரவுக் காட்சி படம் பரகோன் திரைஅரங்கில் நான் பார்த்த ராஜா.
அது போல சாந்தி திரைஅரங்கில் நான் பார்த்த
படங்கள் மிக அதிகம்.
இப்படி யாக நான் நடிகர் திலகத்தின் படங்கள் மேல் ஒரு மோகம் கொண்டு அவரின் பித்தனானேன்.