Mmmm. Ingeyum chudachchuda dharalamaga kidaikkum. Grow up gentleman! Neengal endrume naarugira madhiridhane ezhudhuveergal! aachcharyappada ondrumillai!!!
Printable View
Mmmm. Ingeyum chudachchuda dharalamaga kidaikkum. Grow up gentleman! Neengal endrume naarugira madhiridhane ezhudhuveergal! aachcharyappada ondrumillai!!!
அந்த திரியினில் வரும் பதிவுகளை இங்கு பதித்து தேவையில்லாமல் இரண்டு திரிகளுக்கும் நடுவில் வருத்தத்தை உண்டாக்கவேண்டும் என்பது எனது குறிக்கோள் இல்லை - "சிரித்தால் தானே கவலை மறைய " என்பதற்கு இணங்க சில கற்பனையில் , நகைச்சுவையில் doctorate வாங்கிய பதிவுகளை மட்டும் இங்கு போடுவதில் தவிறில்லை என்று நினைக்கிறன் - நமது திரியில் நகைச்சுவை திறமை முழுதும் வளர்ந்தபின் அங்கு கிடைக்கும் நல்ல நகைச்சுவை பதிவுகள் இங்கு telecast ஆவது நின்று விடும் - அதுவரையிலும் கொஞ்சம் சிரிங்க boss !!
அங்கு வெளியான ஒரு பதிவு இது
தேவி பாரடைசில் 101 காட்சிகளும், அகஸ்தியாவில் 83 காட்சிகளும்
தொடர்ந்து அரங்கு நிறைந்தன.
மதுரை மீனாட்சியில் 112 நாட்கள் ஓடியது.படம் வெளிவந்த முதல் நாளே மதுரை மீனாட்சியில் 100 நாட்களுக்கு எந்தவித இலவச பாஸ் அனுமதியும் கிடையாது என்கிற விளம்பரம் செய்தி தாளில் வந்தது.
சென்னையில் 10 வது வார முடிவில் எல்.ஐ .சி. கட்டிடத்தில் தீவிபத்து
ஏற்பட்டு, அதன் விளைவாக , அண்ணா சாலையில் போக்குவரத்து ஒருவழி பாதையாக ஆனபின் , மக்கள் நடமாட்டம்
குறைந்ததால், 12வது வாரத்தோடு தேவி பாரடைசில் எடுக்கப்பட்டது. அகஸ்தியாவிலும் 84 நாட்கள் ஓடியது.
சென்னையில் 100 நாட்கள் நிறைவு செய்யாவிட்டாலும் , பலமுறை
அரங்குகளில் மறுவெளியீடு செய்யும்போது, மக்கள் திலகத்தின் மெகாஹிட் படங்களுக்கு இணையான வசூலை பெற தவறுவதில்லை.
LIC கட்டிடத்தில் தீ விபத்து -------- அதனால் கூட்டம் வரவில்லை -------
நாம் இதையே எப்படி போடுவோம் - நல்ல கதையோட்டம் உள்ள படம் - இருந்தாலும் ஏனோ தெரியவில்லை 100 நாட்களை தொட முடியவில்லை - இந்த படம் ஓடும்போது - NT யின் நான்கு படங்கள் 50 நாட்களை தாண்டி ஓடிகொண்டிருந்தது - அதற்குள் புதிய இரண்டு படங்கள் பொங்கலில் வருவதாக அறிவிப்பு - நம் படங்கள் தான் நமக்கு போட்டி - என்ன செய்வது ? என்று வருத்தபட்டு எழுதியிருப்போம்.
LIC தீ விபத்தை பற்றியோ அதனால் தெருவில் ஆள் நடமாட்டமே இல்லை என்பதை பற்றியோ யாருமே ஒரு விஷயமாக கருதி , படம் இதனால் தான் ஓடவில்லை என்று சால் ஜாப்பு சொல்லிருக்க மாட்டோம் - முடிந்து இருந்தால் , Fire Engine யை கூப்பிட்டு தீயை அனைத்திருப்போம்
இவர்களுக்கு உண்மை என்பது ஒரு unknown planet - அந்த கிரகம் எப்படி இயங்கும் என்றே தெரியாது !! - கற்பனையில் வீடு கட்டி - கற்பனையில் கிரக பிரவேசம் பண்ணி , கற்பனையில் உணவும் பரி மாறுவார்கள் - அங்கு இருக்கும் எல்லோரும் - "போதும் பசி தீர்ந்து விட்டது , உணவு , பதார்த்தங்கள் அருமை என்று சொல்லியே ஆக வேண்டும் - எவனாவது அங்கே தப்பி தவறி எங்கே போட்டீர்கள் உணவு என்று கேட்டுவிட்டால் அவன் அன்றே photo வாக மாறி , மாலையுடன் ஊதுபத்தியின் வாசனையை அனுபவிக்க தயாராக இருக்க வேண்டும்
நகைச்சுவை பதிவுகள் தொடரும் ----------:-D:)
are u indicate any badwords posted in my post in our thread about your favourite actor?
நண்பர்களே
நடிகர் திலகம் புகழ் பரப்புவதை மறந்து என் நேரமும் எம்ஜிஆரின் திரியில் தேவை இல்லாமல் பதிவுகளை போட்டும் , உங்கள் - தரமற்ற கேவலமான வார்த்தைகளால் தாக்கியும்
பெருமை பட்டு கொள்ளும் திரு ஹரிஷ் - திரு செந்தில் - திரு ரவி - திரு ரவிகிரண் அதிமேதாவி
கோபால் - மையம் திரியில் பலரையும் ஏமாற்றி கொண்டிருக்கும் கல்நாயக் - ஆதிராம் - சாரதா
கார்த்திக் - பரணி - வனஜா - லேட்டஸ்ட் ராமதாஸ் என்று பன்முகம் கொண்ட ஒருவரும் நீங்கள்
எல்லாம் எப்போது உண்மையை உணர்வீர்கள் ?
சிவாஜி புகழ் பாடுங்கள் . வரவேற்கிறோம் . உங்கள் ஒற்றுமையை அதில் காட்டுங்கள் . அதை
விடுத்து எம்ஜிஆரின் சாதனைகள் பற்றிய நினைப்புடனே வருத்தமுடன் காலத்தை கடத்தாதீர்கள்
நீங்கள் மட்டுமென்ன உண்மையான தகவல்களை தருகிறீர்கள் . [ 100 நாள் ஓடாத நீதி - ராஜ ராஜ சோழன் இன்னும் பல ] முதலில் உங்கள் பிழைகளை திருத்தி கொள்ளுங்கள் .
நாங்கள் இதுவரை உங்கள் திரியில் வந்து ஒரு போதும் சிவாஜியின் நடிப்பை பற்றியோ , அவருடைய புகழை பற்றியோ பதிவிடாத போது உங்கள் ரசிகர்கள் ஆத்திரத்துடன் வந்து குறைகள் கூறியும் உங்கள் திரியில் கேவலமாகவும் போட்டு மகிழ்வது ஏனோ ?
இந்த வேகம் - ஒற்றுமை உங்கள் எல்லோரிடம் இருந்திருந்தால் திருவையாறு - ஒரு மறக்க முடியாத சரித்திரம் ஆகி இருக்கும் . இனியாவது மனம் திருந்தி உங்கள அபிமான நடிகர் திலகத்திற்கு சேவை செய்யவும் .
நல்லதே நடக்கும் என்று நம்புவோம் .
உண்மையை உணரும் நேரமிது ..
dear thiru. Yukesh Babu. I know you are an ardent fan of your abhimana nadigar MGRamachandran. We have not posted any bad words abour your favourite actor, We also need not indicate about your postings whether you used bad words or not!
When our icon's movies are unnecessarily criticized or wrong information about his collections are posted naturally we rise up and relaliate. We dont hurt individual's feeling. What I posted was only a real time situation. Understand properly and kindly avoid provoking words .... we are not used to such abusing words! Can u indicate the bad words used by me?
நன்றி நண்பரே. நான் நிறுத்திக்கொள்ளலாம் என்றிருந்தேன். உங்கள் காமெடி பதிவுகளை கண்டதும் நண்பர்கள் இங்கே பகிர்ந்து கொண்டார்கள். நீங்களும் நேரடியாக இங்கே வந்து காமெடி செய்வது மிக நன்றாகவே இருக்கிறது. பாவம் உங்கள் பொய்யும் புரட்டும் அம்பலமானதில், மானமிழந்து நிற்கிறீர். தைரியமிருந்தால் திரு முரளி சீனிவாஸ் கூறியதற்கும், நான் உங்களிடம் போன பதிவில் கேட்ட கேள்விக்கும் பதிலளித்துவிட்டு மானம் காப்பாற்றி உங்கள் அடுத்த பதிவையிடுங்கள். பின்னர் உங்களுக்கு நான் பதில் தருகிறேன் மேற்கொண்டு. சம்பந்தமில்லாதவர்களை நீங்கள் வம்பிழுப்பது உங்கள் நிதானமில்லாத நிலையையே காட்டுகிறது.
நான் இதுவரை mgr திரிக்கு வந்ததே இல்லை. திரு. யுகேஷ் பாபு, வரவும் மாட்டேன்.
அன்பு நண்பர் யுகேஷ் பாபு அவர்களே,
நடிகர் திலகத்தின் திரியில் வந்து ஒரு சில கேள்விகளை எழுப்பி ஒரு சில குற்றசாட்டுகளையும் கூறியிருக்கிறீர்கள். இந்த விவாதத்தை வளர்க்க நான் விரும்பவில்லை. ஒரு சில விஷயங்களை மட்டும் சொல்ல ஆசைப்படுகிறேன். எனக்கு தெரிந்த வரை நீங்கள் குறிப்பிட்டிருப்பதைப் போல் இந்த திரியிலும் சரி எம்ஜிஆர் திரியிலும் சரி எம்ஜிஆர் அவர்களைப் பற்றிய தனிப்பட்ட விமர்சனங்கள் வைக்கப்பட்டதேயில்லை. விவாதம் என்று வந்திருந்தால் அது முறையே சிவாஜி மற்றும் எம்ஜிஆர் படங்களின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் சாதனைகளைப் பற்றிதான் இருந்திருக்குமே தவிர வேறு வகையான விமர்சனங்கள் சிவாஜி திரியில் வந்ததில்லை. அது கூட சிவாஜி படங்களின் வசூல் பற்றி யாரவது எழுதினால் உடனே அதை குறை காணுவது, விமர்சிப்பது போன்ற செய்கைகளினால்தான் இங்கே பதில் வருகிறது. சில நாட்களுக்கு முன்பு சிவாஜி படங்களை பற்றி தேவையில்லாமல் நண்பர் ராஜாராம் சிவாஜி திரியில் விமர்சித்தபோது அதற்கு உணர்சசிவசப்பட்டு சில சிவாஜி ரசிகர்கள் பதில் கொடுத்த போது அதில் இடம் பெற்றிருந்த சில வார்த்தைகள தரமற்றவையாக இருந்த காரணத்தினால் சிவாஜி ரசிகர்களின் பதிவுகளையும் நீக்கியவன் நான்.
ஆனால் அதே நேரத்தில் எம்ஜிஆர் திரியில் தேவையில்லாமல் பல முறை சிவாஜி விமர்சிக்கப்பட்டிருக்கிறார். அவற்றையெல்லாம் நான் மீண்டும் குத்திக் கிளற விரும்பவில்லை, நீங்கள் பதிவிட்ட ஒரு பதிவை மட்டும் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். அண்மையில் இரண்டு மாதங்களுக்கு முன்பு மகாலட்சுமி திரையரங்கில் தியாகம் திரையிடப்பட்டபோது ஞாயிறு மாலை காட்சியைப் பற்றி நீங்கள் அவதூறு கூறினீர்கள். அன்று மகாலட்சுமி திரையரங்கிற்கு அல்லது அந்த சாலை வழியாக சென்றவர்களுக்கு தெரியும் எவ்வளவு பெரிய கூட்டம் அன்று படத்திற்கு வந்திருந்தது என்று. ஆனால் நீங்கள் அனைத்து டிக்கெட்டுகளையும் ஒருவரே வாங்கி அருகாமையிலிருந்த டாஸ்மாக் கடைக்கு வந்தவர்களுக்கு இலவசமாக கொடுத்தார்கள் என நாகூசாமல் பழி சுமத்தினீர்கள். அன்றைய மாலைக்காட்சிக்கு சென்றிருந்தவர்களில் நானும் ஒருவன். என்னுடைய வாழ்நாளில் இன்றுவரை ஒரு துளி மதுபானம் கூட அருந்தாத நான் உங்கள் வார்த்தைகளால் மிகவும் புண்பட்டுப் போனேன். உங்களின் அந்த பதிவிற்கு அதே தொனியில் பதிலளிக்க வேண்டும் என்று இந்த திரியில் சில நண்பர்கள் எழுதிய போது நான் அதை மறுத்து நண்பர் யுகேஷ் பாபு நம்மை விட வயதில் இளையவர். அவருக்கு நேரிடையான அனுபவம் கிடையாது. ஏதோ கோவத்தில் யாரோ சொல்லிக் கொடுத்ததை எழுதியிருக்கிறார். ஆகவே அதை பெரிதுபடுத்தாமல் விட்டு விடுவோம் என்று நான் எழுதியிருந்தது உங்களுக்கு நினைவு இருக்குமா என்று தெரியவில்லை. எதற்கு இதை குறிப்பிடுகிறேன் என்றால் இப்படி தனிப்பட்ட முறையில் நீங்கள் எழுதியும் கூட, ஏன் இன்று கூட நடிகர் திலகத்தின் ரசிகர்கள் கோபால், செந்தில், ஹரிஷ், ரவி, மற்றும் ரவிகிரண் போன்றவர்களையும் தனிப்பட்ட முறையில் நீங்கள் தாக்கியதையும் கூட சிந்தித்து பாருங்கள் நண்பரே, இது போன்ற செய்கைகள் எங்கள் தரப்பிலிருந்து வந்திருக்கிறதா என்று? அது போல் திருவையாறு அரசியல் எல்லாம் தேவையா நண்பரே? பதிலுக்கு அதே தேர்தல் பற்றி நாங்களும் உரைத்தால்? சற்றே சிந்தித்து பாருங்கள்.
மீண்டும் கூறுகிறேன். தனிப்பட்ட முறையில் எம்ஜிஆர் அவர்களை பற்றியும் சரி எம்ஜிஆர் திரி நண்பர்கள் பற்றியும் எந்த விதமான தனிப்பட்ட விமர்சனங்களும் நடிகர் திலகம் திரியில் வராது. நடிகர் திலகத்தைப் பற்றிய உண்மையில்லாத செய்திகளை நீங்கள் தவிர்த்தாலே எந்த சச்சரவும் வராது.
புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன்
அன்புடன்
நமது திரி நண்பர்களுக்கு,
நான் முன்பே பலமுறை கூறியதைத்தான் மீண்டும் சொல்ல விழைகிறேன். எம்ஜிஆர் திரியில் ஏதோ எழுதி விட்டார்கள் என்பதற்காக நாமும் அதே போன்று இங்கே பதிவிட தேவையில்லை. நடிகர் திலகத்தைப் பற்றிய தவறான செய்தியோ அல்லது சிவாஜி படங்களின் வெற்றிகளைப் பற்றி தவறாக குறிப்பிட்டால் மட்டுமே நாம் உண்மை நிலையை விளக்க பதிவிட வேண்டுமே தவிர மற்றபடி பதிவிற்கு பதிவு என்று நாமும் ஆரம்பித்தால் அது நமது நேரத்தையும் சக்தியையும் வீணாக்குவதுடன் தேவையற்ற விவாதங்களையும் வளர்க்கும். அதை தயவு செய்து தவிர்ப்போம்.
மற்றொரு முக்கியமான விஷயம், நமது திரியில் புதிதாக யாரேனும் நுழைந்தாலோ அல்லது ஏற்கனவே பல ஆண்டுகளாக பதிவிட்டுக் கொண்டிருக்கும் நண்பர்களை அவரா இவர் அல்லது இவரா அவர் என்றெல்லாம் திரியில் தேவையற்ற கேள்விகளை எழுப்பி தேவையற்ற குழப்பங்களை உருவாக்க வேண்டாம் என்று பணிவோடு கேட்டுக் கொள்கிறேன். இந்த நேரத்தில் மற்றொன்றையும் குறிப்பிட விரும்புகிறேன்.
நீங்கள் யார் என்ற கேள்வி மிக அதிகமாக கேட்கப்பட்ட நபரான நண்பர் கல்நாயக் அவர்கள் வேறு எந்த உறுப்பினரின் பினாமியும் அல்ல என்பதை இந்த திரியின் Moderator என்ற முறையில் அழுத்தமாக பதிவு செய்ய விரும்புகிறேன். அவர் தன profile-ல் குறிப்பிட்டிருப்பது போல் சென்னையில்தான் வசிக்கிறார். ஆகவே இனிமேல் இது போன்ற விவாதத்தை அறவே தவிர்த்து நடிகர் திலகம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மட்டும் கவனம் செலுத்துமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
அன்புடன்
Dear Murali,
With due respect, i differ with your statement in 1st paragraph. MGR fans are not going to stop abusing NT's fame; that's there in their blood. They have done it successfully for the last few generations with the help of politics, media etc. Now, their false propaganda of their idol BO power has been completely exposed with miserable debacle of re-released AO (never cross with our Karnan).
With enough proof in our hand on NT's BO power, we must expose their lies and propaganda. In fact, we should publish NT's records very aggressively and prove that NT is the only BO king in tamil film world ever.
I would strongly support RavikiranSurya, Gopal, Kalnayak, Sivaa and others bringing out more and more on NT BO potential. If MT fans abuse our star in their thread for no reason, we should go and indulge there too.
You have seen Yukesh's bad and pathetic comment on NT's Thiruvaiyaru that he made today. That shows, he is completely running out of steam to prove his star's cinema talent (it is a different matter if MT had any acting talent) and BO power as claimed. Instead of talking more on MT's cinematic achievements, he brought out NT's political journey by conveniently forgetting it is a movie related thread, not politics forum. If they are participating in mud-slinging, i would favor our part on the same path. For us, NT has been great. For them, MT has been great and they should remember that they should not indulge in NT bashing. Instead, they should focus on bringing out good movies of MT and write about them.
They should remember ultimately, truth will triumph and it is happening now.
Regards