சின்னா!
நற நற நறன்னு அழணும். சிரிக்கிறீக. அப்பா ஓகேவா?:)
Printable View
சின்னா!
நற நற நறன்னு அழணும். சிரிக்கிறீக. அப்பா ஓகேவா?:)
சி.க:பாட்டி வரும் பாட்டி வரும்..
வாசு: ஓஹோ
சி.க..இழை பார்த்துக் கொண்டிருந்தால் பாட்டி வரும்..
அதை சி.செயும் கட்டம் போட்டுக் கூட்டி வரும்..! :) (வருவார் எனக் கொள்க..)
எனக்கு இந்த ப் பாட்டி பிடிக்கும்..
//காக்கையில்லா சீமையிலே காட்டெறுமை மேய்க்கையிலே
பாக்கு வச்சி நேரம் பாத்து வச்ச ஆசை மச்சான்
சந்தைக்கு போறேன் நீங்க சாப்பிட்டு வாங்க
சம்பந்தம் பண்ண எனக்கு சம்மதம் தாங்க
அட இந்த பக்கம் பாருங்களே
என் கன்னி மனம் கேளுங்களே
அட ஏண்டி என்ன மஞ்சளுக்கு கேக்குறீயா
பழைய நெனப்புதான் பேராண்டி பழைய நெனப்புதான் ம்ம்//
படம் பார்த்த போது அது யாரு இன்னொரு ஹீரோயின் இவ்ளோ லேட்டா என நினைத்த்துண்டு..ம்ம்..
போட்டு வாங்கலாம்னு பீலா விட்டா கழுவற தண்ணிலே நழுவற மீனா இருக்கிறீங்களே வாசு/சின்னா சார்ஸ்!!
ஆஹா சி க !
ஏகப்பட்ட பாட்டிப் போட்டி வரும்போல இருக்கே !
வின்னரில் வரும் ராஜம் பாட்டியும் வாழ்க்கைப்படகு ராஜம்மா பாட்டியும் எனக்கு ரொம்பப் பிடிக்கும் !
குடியிருந்த கோயிலில் வரும் நாகேஷிப் பாட்டியும் வளர இஷ்டமானு !
வாசு , சி.க. சார்ஸ்
உஷார்... சி.செ. ஏதோ தீர்மானம் பண்ணிட்டார் போல. கான கருங்குயிலே கச்சேரிக்கு வரியா வரியான்னு எல்லாரையும் அழைக்கப் போகிறார்...
வாங்க வாங்க குருஜி !
ஒருகாலத்துக் கனவுக்கன்னிகள் இன்னொரு காலத்தில் அக்காக்களாக அம்மாக்களாக உருமாறி பிற்காலத்தில் பாட்டிகளாக முடிந்தாலும் நமது கதாநாயகர்கள் அவர்களுக்கே பேரன்களாக நடிக்காமல் விட்டது நாம் செய்த புண்ணியமே!ஜோதிப் பாட்டி எப்படி உங்களை ஈர்த்திருக்கிறார்?!
நீங்கள் அனைவரும் யூகிப்பது சரியே !
அடுத்த கான்செப்ட் இதுதான் !! பாட்டி மஞ்சக் குளிச்ச கதை பேராண்டிகளே!!
அப்போதுதான் பறித்துப் போட்ட பன்னீர் புஷ்பங்களாக அறிமுகமான நமது இதய நாயகியரின் இளமை டு இலையுதிர் காலமான முதுமை பரிணாம மாற்றங்கள் ! அத்தோடு இணைந்த மதுர கானங்கள்.....
பாட்டி சொன்ன கதை எக்காலத்திலும் நமக்குப் பிரியமானதே!
ஆட்சேபணைகள் வரவே(ற்/ர்)க்கப் படுகின்றன !!
//கழுவற தண்ணிலே நழுவற மீனா இருக்கிறீங்களே வாசு/சின்னா// ஓய்.. நான் ஆரம்பத்தில இருந்தே பாண்டிய நாட்டான்.. வாசு அவரோட முன்னோர்கள் எங்கேயோ மதுரைக்குப் பக்கத்துல பெண் எடுத்ததாகக் கேள்வி..ஸோ அவரும் பாண்டியரே!
*
ராகவேந்திரா சார் கவலையே படாதீங்க.. எங்க பாட்டி ஏற்கெனவே ஊட்டி வளர்த்திருக்காங்க..
பாட்டி பலவிதமாய்ப் பாட்டினிலே சொல்லித்தான்
ஊட்டி விடுவார் உணர்வினில் – தீட்டிய
கத்தியாய்க் கூர்மையாய் காண்பவர் போற்றவும்
புத்தி மிளிர்ந்ததே பார் (ரும்)
இருந்தாலும் கொஞ்சம் அன்றும் இன்றுமா வெச்சுக்கலாம்..ஓகேங்களா!
*
*
சரி சி.செ. அன்றைய பார்ட்டி லஷ்மியின் பாடல்
https://youtu.be/pp7ZvB0Uy1A
Bhool Gaya Sab Kuch கொஞ்சூண்டு தமிழ்ப் படுத் படுத்தினேன் :)
*
எல்லாம் எனக்கு மறந்துவிட்டது.. இப்போது எதுவும் நினைவிலில்லை.ஆனால் ஒன்றே ஒன்று மட்டும் என்றும் மறக்கமாட்டேன்..அது..ஜூலீ…ஐ..லவ் யூ..
சரிதாண்டா..ம்ம்ம்.. எல்லாம் எனக்கும் மறந்துவிட்டது.. இப்போது எதுவும் நினைவிலில்லை.ஆனால் ஒன்றே ஒன்று மட்டும் என்றும் மறக்கமாட்டேன்..அது..ஜூலீ…ஜூலி லவ்ஸ் யூ..
இவ்வளவு தூரம் செல்லாதே நெருங்குவதற்கு எனக்குக் கஷ்டம்
இவ்வளவு தூரம்குறைவதும் கஷ்டம் தான்..விலகுவதற்கு
நான் சொல்வதைக் கேட்கிறாயா..
ஷ்.. நான் ஒரு மின்சாரப் பொறியைத் தொட்டுக்கொண்டிருக்கிறேன்
எவ்வளவு ஷோகமாகும் தெரியுமா.. என் தாகம் அடங்காமல் என் காதல் இறந்தால்..
ம்ம் போய்யா.. இந்த மாலை நேரம் நம்மிருவருக்கும் அவமரியாதையைத் தந்தால் அது எவ்வளவு சோகம் தெரியுமா..
இப்போ நானும் சரின்னு உன்னை வற்புறுத்தாமல் இருந்தால்….
ம்ம் நானும் பேச்சு மாற்றுவேன் தெரியுமில்லையா..ஒண்ணு தெரியுமா உனக்கு..
என்னாது..
இதெல்லாம் விஷயமே இல்லை.. ஒன்றே ஒன்று தான் விஷயம்..நிஜமும் கூட…அது….ஜூலி… ஜூலி லவ்ஸ் யூ..புரிஞ்சுதாடா செல்லக் கடங்காரா!
இன்றைய பாட்டி லஷ்மியின் பாட்டு.. பாட்டிலேயே பாட்டி வருமே..
*
வாராயோ தோழி வளமான தோழி வாய்விட்டுலூட்டி அடி – ஜீன்ஸ் பாடல்..யூ ட்யூபில் பார்த்துக்கொள்க…!
*
..
ஹச்சோ.. நான் முந்திக்கிட்டேனா.. நீங்க ஆரம்பிங்க சி.செ..யார் ஆட்சேபிக்கறாங்கன்னு நான், ராகவேந்தர், வாசு, மதுண்ணா பார்க்கறோம்..:)
சி க
பாட்டிகளின் ப்யூட்டிகளை கலைவாணக் கவித்துவமாக சிலை வடித்து விட்டீர்கள் !
வாசு சாரும் மது சாரும் ராகவேந்தர் சாரும் ரவி சாரும் என்ன சாறு பிழியப் போகிறார்களோ ?
பாட்டிகளின் பாட்டுப் போட்டி பட்டி தொட்டியெங்கும் வெற்றிக்கொடி நாட்டி விடும்போல இருக்கிறதே !