-
மக்கள் திலகத்தின் ரசிகர்களுக்கு எனது பிறந்த நாள் செய்தி .
தமிழக முதல்வர் அறிக்கை .
எனது ஆசான் டாக்டர் புரட்சி தலைவரும் ,எனது இதய தெய்வமும் , உலகமெங்கும் வாழும் மக்கள் இதயங்களில் என்றென்றும் குடியிருக்கும் மக்கள் திலகம் அவர்களின் கலை உலக பயணமும் , அரசியல் பயணமும் உலக வரலாற்றில் நிரந்தர இடம் பெரும் செய்தியாகும் .
77 வருட சினிமா வரலாற்றில் நமது மக்கள் திலகம் படைத்த சாதனைகள் .. பெரும்பாலான படங்கள் வசூலில் சக்கை போடு போட்டு இன்றும் பல தயாரிப்பாளர்கள் - விநியோகஸ்தர்கள் - திரை அரங்கு உரிமையாளர்கள் - என்று அவர்களுக்கு அமுத சுரபியாக , அட்சய பாத்திரமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார் .
மக்கள் திலகம் அவர்கள் அரசியல் மாற்று முகாம் குழுமங்கள் கூட நமது மக்கள் திலகத்தின் படங்களை
ஒளி பரப்பி வசூலை குவிக்கின்றனர் .
எப்படி பார்த்தாலும் நமது இறைவன் மக்கள் திலகம் எல்லோரையும் அன்றும் வாழ வைத்தார் .
இன்றும் வாழ வைத்து வருகிறார் . நாளையும் அவர்கள் மக்கள் திலகத்தின் பெயரை சொல்லி வாழ்வார்கள் .
எனது நீண்ட நாள் ஆசை .
மக்கள் திலகதிற்கு ஒரு மணி மண்டபம் கட்டி அதில் அவர் நடித்த 134 படங்களின் டிஜிட்டல் கட் அவுட் -
மற்றும் பதாகைகள் மண்டபத்தை சுற்றி அலங்கரிக்க வேண்டும் .
மண்டபத்தை சுற்றி ஒலி பெருக்கி மூலம் மக்கள் திலகம் நடித்த பாடல்கள் ஒலித்து கொண்டே இருக்க வேண்டும் .
மண்டபத்தின் மைய அரங்கில் அகன்ற திரையில் மக்கள் திலகத்தின் படங்கள் தினமும் 3 காட்சிகள் சுழற்சி முறையில் இலவசமாக திரையிட வேண்டும் .
படத்தை காண வரும் பொது மக்களும் - ரசிகர்களும் அமைதியுடன் கண்டு களித்து செல்ல வேண்டும் .
கட்சி நிர்வாகிகள் தங்களுடைய ஒவ்வொரு விளம்பரங்களிலும் - போஸ்டர் களிலும் மக்கள் திலகத்தின் முழு உருவ படத்தினை கண்டிப்பாக போட்டுத்தான் வரவேண்டும் .
மக்கள் திலகத்தின் நூற்றாண்டு விழா விரைவில் வர உள்ளதை முன்னிட்டு உலக அளவில் இது வரை நடந்திராத வண்ணம் மிக சிறப்பாக செய்திட எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன .
மக்கள் திலகம் mgr - என்ற புதிய தொலைக்காட்சி நிறுவனம் விரைவில் தொடங்கப்படும் .
மக்கள் திலகம் mgr
- இலவச பள்ளிக்கூடம் - இலவச மருத்துவமனை - இலவச தொழிற்பள்ளி - இலவச கல்லூரி படிப்பு
என்று தமிழகமெங்கும் கிராமங்கள் தோறும் துவங்கப்படும் .
மக்கள் திலகத்தின் நீண்ட நாள் கனவான தமிழக தலை நகரம் - திருச்சி நகருக்கு மாற்ற எல்லா ஏற்பாடுகளும் நாடி பெற்று வருகிறது .
மக்கள் திலகம் வாழ்ந்த ராமாவரம் தோட்டம் - நீதி மன்றம் சம்மதித்தால் -
நமது இதய தெய்வம் வாழ்ந்த தோட்டத்தை அரசு பராமரிப்பில் புதுப்பிக்கப்பட்டு எல்லோருக்கும் குடியிருந்த கோயிலாக மாற்றி உலகமெங்கும் வாழும் மக்கள் திலகம் பக்தர்கள் இங்கு வந்து சுற்றி பார்க்க ஏற்பாடு செய்ய படும் .
தென் மாவட்டங்கள் என்று பார்த்தால் நமது மக்கள் திலகத்தின் சினிமா - அரசியல் இரண்டிற்கும் மாபெரும்
ஆதரவு தந்த பெருமை மதுரை மாவட்டத்துக்கு உண்டு .
மதுரை நகரில் மட்டும் நம் மன்னவர் படைத்த சினிமா சாதனை .
என்றென்றும் சாதனை கோட்டை அல்லவா . வெள்ளி விழா - வெற்றிவிழா - நூறு நாட்கள் - பின்னர் வெளியீடுகளில் அன்றும் இன்றும் வசூலில் கலக்கும் மக்கள் திலகத்தின் படங்கள் .
அரசியல் .. எல்லா தொகுதிகளிலும் நமது வெற்றி கொடி பறக்கிறது .
இது போன்ற மக்கள் திலகத்தின் சாதனைகளுக்கு விரைவில் அரசு சார்பாக mgr - மலர் ஒன்று விரைவில் வர உள்ளது .
விரைவில் இன்னும் பல மக்கள் திலகத்தின் சாதனைகள் குறித்து உங்களுடன் பகிர்ந்து கொள்ள வருகின்றேன் .
நன்றி ... வணக்கம் .
[ இது ஒரு கற்பனை -செய்தி ].
-
மக்கள் திலகத்தின் கற்பனை செய்தி உண்மையானால் நிச்சயம் வரும் பொது தேர்தலில் 40/40 உறுதி .
2016ல் நடைபெறும் சட்ட மன்ற தேர்தலில் மீண்டு மக்கள் திலகத்தின் 7வது முறை ஆட்சி .
நிழல் நிஜமாகிட விரும்பும்
மக்கள் திலகத்தின் பக்தர்கள் .
-
24-2-2013
dinamalar
எம்.ஜி.ஆர்., எழுதுகிறார்:
என் வாழ்க்கையில், நான் அடைந்த அனுபவம் ஒன்றை எனக்காகவும், என்னைச் சார்ந்த நண்பர்களுக்காகவும் எடுத்துக்கூற விரும்புகிறேன்.
பல ஆண்டுகளுக்கு முன், சென்னை நியூ எல்பின்ஸ்டன் தியேட்டர், அண்ணா சாலையில் இருந்தது. அத்தியேட்டரில், "இரு சகோதரர்கள்' என்ற படம் திரையிடப்பட்டது. அதில் கதாநாயகனாக, "இந்திய மேடைப் புலி' என்ற பட்டம் பெற்றிருந்த கே.பி.கேசவன் நடித்திருந்தார். நாடக மேடையிலும், சினிமாவிலும் நடித்து, மிகப் பெரும் புகழ்பெற்றவர் அவர். அவரும், நானும், வேறு சிலரும், அந்த படத்தை காண அன்று சென்றிருந்தோம். இடைவேளையின் போது, அவர் வந்திருப்பதை அறிந்த மக்கள், அவரை பார்ப்பதற்காக எழுந்து, அவர் பெயரைக் கூவி, கூச்சலிடத் தொடங்கினர். அந்த படத்தில் ஒன்றிற்கு மேற்பட்ட மிகச் சிறிய வேடங்களில் நடித்திருந்த நான், இதைக் கண்டு திகைத்து, கே.பி.கே., அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தேன்.
"இத்தனை ஆதரவு பெற்றவருக்கு அருகில் நாம் உட்கார்ந்திருக் கிறோமே...' என்ற பெருமை கூட எனக்கு உண்டாயிற்று. படம் முடிவதற்குள், வெளியே வந்து விட வேண்டும் என்று, நாங்கள் புறப்பட்டோம். அதற்குள் மக்கள் வெளியே வந்து விட்டனர். நாங்கள் மேலேயிருந்து படியிறங்கி வருவது கூட கஷ்டமாகி விட்டது.
நான் மற்றவர்களை பிடித்து தள்ளி, மக்களிடமிருந்து கே.பி.கே.,வை விலக்கிச் சென்று, காரில் ஏற்றி அனுப்பினேன். அன்று மக்களுக்கு என்னை யார் என்றே தெரியாது.
இந்த சம்பவம் நடந்து, பல ஆண்டுகளுக்கு பின், சென்னை நியூ குளோப், (முன்பிருந்த அலங்கார்) தியேட்டருக்கு கே.பி.கேசவனும், நானும் ஆங்கிலப் படம் ஒன்றைப் பார்க்க போனோம். அப்போது, நான் நடித்த, "மர்மயோகி' படம் வெளிவந்து சில மாதங்களே ஆகியிருந்தன. இடைவேளையின் போது, நான் வந்திருப்பதை அறிந்த மக்கள், எழுந்து கூச்சல் போட்டனர்.
எனக்கு அருகில், அதே கே.பி.கேசவன் அமர்ந்திருந்தார். அவரை யார் என்றே படம் பார்க்க வந்தவர்கள் கவனிக்கவில்லை. படம் முடிந்து வெளியே வந்தோம். மக்கள் கூட்டம் என்னைச் சூழ்ந்தது. என் பெயரையும், "மர்மயோகி' படத்தில் எனக்காக சூட்டப்பட்ட, "கரிகாலன்' என்ற பெயரையும் சொல்லி வாழ்த்தினர். மக்கள் கூட்டத்தின் நெரிசல் அதிகமாகவே, கே.பி.கேசவன், அந்த ரசிகர்களிடமிருந்து என்னைக் காப்பாற்றி, டாக்சியில், (அப்போது எனக்கென்று சொந்தக்கார் எதுவும் கிடையாது) ஏற்றி அனுப்பி விட்டார்.
நான் புறப்படும் போது, அந்த மக்கள் கூட்டத்தில் அவரும் ஒருவராக நின்று கொண்டிருந்தார். அவரது நடிப்பு திறமை, எந்த வகையிலும் குறைந்து விடவில்லை என்பதோடு, நன்கு நடிக்கும் ஆற்றலை அப்போது, அவர் அதிகமாகவே பெற்றிருந்தார் என்பதுதான் உண்மை.
மக்களால் புகழப் பெற்ற, "டைகர் ஆப் இண்டியன் ஸ்டேஜ்' என கவர்னரால் புகழப்பெற்ற, "இரு சகோதரர்கள்' வெளியிடப்பட்ட ஆண்டில், "சிறந்த நடிகர்' என்று தேர்ந்தெடுக்கப்பட்ட, இதே கே.பி.கேசவன் அவர்கள், தங்களோடு இருக்கிறார் என்பதை, பாவம், அந்த மக்களால் அப்போது புரிந்து கொள்ள இயலவில்லை.
என்னால் உச்சநிலையில் இருப்பதாக நம்பப்பட்ட அதே கே.பி.கேசவன், நான் உச்சநிலையில் இருப்பதாக கருதும் வாய்ப்பை, அதே மக்கள் அவருக்கு அனுபவ முத்திரை ஆக்கினர். இதை நேரடியாக நானே அனுபவித்த பின், இந்த போலியான உச்சநிலை என்பதை எப்படி பெற்றுக் கொள்வது... நம்புவது?
கலைஞனுக்கு உச்சநிலை, தாழ்ந்த நிலை என்பதெல்லாம், மக்களால் தரப்படும் மயக்க நிலை; அவ்வளவுதான். இதை நம்பி ஏமாந்து விடுவோமானால், நாம் மற்றவருக்கு பண்பு, பாசம், பகுத்தறிவு முதலியவற்றை தரும் கடமை கலைஞனாக இயங்க முடியாது. கலைஞனைப் பொறுத்தவரையில், அவனுக்கு வீழ்ச்சியே கிடையாது. சூழ்நிலை உயர்த்தும், தாழ்த்தும். அது பிற மக்களின் மனதில் தோன்றும் முடிவு!
ஆனால், கலைஞன் தன் உள்ளத்தை, எந்த நேரத்திலும் பொறாமையின் தாக்குதலுக்கு இரையாக்காமல், மனிதாபிமானத்தோடு கலைத் தொழிலில் செயல்படுவதாக ஏற்றுக் கொள்ளச் செய்தால், அந்த உணர்வுக்கு தோல்வியே கிடையாது. மற்றவர்கள் முன், அவன் தோல்வியடைந்தவனாகத் காட்சியளித்தாலும், கலைஞனுடைய நல் உணர்வுள்ள மனதின் முன், அவன் வெற்றி பெற்றவனாவான்.
— கடந்த 1966ல் எம்.ஜி.ஆர்., "சமநீதி' இதழில் எழுதியது.
***
-
-
தமிழக முதல்வரின் பிறந்த நாள் செய்தி ஒவ்வொரு மக்கள் திலகத்தின் தொண்டர்களுக்கம் கற்கண்டாக இனித்திருக்கும். கடைசியில் கற்பனை என்று முடித்தது தான் சற்று ஏமாற்றம் அளித்தது. உண்மையிலேயே தங்களது கற்பனை கனவு நனவானால் 40/40 சாத்தியமே.
-
நடிகனின் உச்சநிலை குறித்த மக்கள் திலகத்தின் கட்டுரை அருமையிலும் அருமை. பதிவிட்ட வினோத் சார் அவர்களுக்கு நன்றி.
-
Article from dinamanikadhir.
Vetran director b. Nagireddy's son ..
About makkal thilagam
இந்த சந்தர்ப்பத்தில் இன்னொரு சம்பவத்தையும் இங்கே நினைவுகூர்வது பொருத்தமாக இருக்கும்.
அன்றொரு நாள், என் தந்தையாரைக் கண்டு ஆசிபெற விஜயா கார்டனுக்கு ஒரு பிரபல நடிகர் வந்திருந்தார். எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகரான அவர், ""நான் இப்போது நடித்துவரும் இரண்டு படங்களின் படப்பிடிப்புக்காக வெளிநாடுகளுக்குப் போகிறேன்'' என்றார்.
""படங்களின் பெயர் என்ன?'' என் தந்தையார் கேட்டார்.
படங்களின் பெயர்களை அதே பிரபல நடிகர் சொன்னதும், ""எம்.ஜி.ஆர். படங்களின் பெயர்களை நீங்கள் நடிக்கும் படங்களுக்கு வைத்திருக்கிறீர்களே... உங்களது படம், நடிப்பு சிறப்பாக இருந்தால்கூட, படத்தில் எம்.ஜி.ஆர். சாயல் கொஞ்சம் தெரிந்தாலும் எம்.ஜி.ஆர். இமேஜ் இந்த படங்களை பாதிக்கும். காரணம் அந்த அளவுக்கு மக்கள் மனதில் எம்.ஜி.ஆர். என்னும் மூன்றெழுத்து வாழ்ந்து கொண்டிருக்கிறது. இன்னும் 50 ஆண்டுகளுக்கு வாழும். எதற்கும் யோசித்து செய்யுங்கள்'' என்றார்.
அந்த பிரபல நடிகர் நடித்த, அவர் குறிப்பிட்ட இரு படங்களும் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாத நிலையில் ரெட்டியாரின் கணிப்பு சரியே என்று ஒப்புக் கொண்டார்.
என் தந்தையார் கருத்துப்படி, இன்று மட்டுமல்ல, நாளையும் எம்.ஜி.ஆர். படங்களுடன் அவர் நடித்த தலைப்புகள்கூட எவர்கிரீன்தான் என்பதில் சந்தேகமில்லை.
எம்.ஜி.ஆர்.நடித்த "எங்க வீட்டுப் பிள்ளை' படத்தை இன்றும் மக்கள் ரசிக்கிறார்கள்.
-
-
-
இன்று முதல் VELLORE தொரப்பாடி கணேஷ் திரை அரங்கில் மக்கள்திலகத்தின் வண்ண காவியம் குமரிக்கோட்டம்
http://i50.tinypic.com/35a93dl.jpg