-
நடிப்புத் திமிங்கிலம்(NT) / நடிகர் திலகம் (NT) சுமந்து மகிழ்வித்த சுகமான குட்டிமீன்கள் மற்றும் சுமையான சுறாக்கள் !
Part 2 : நடிப்பு வலிமை மிகுந்த தாய்ச் சுறாக்கள் !(ஆனாலும் நடிப்புச் சூரியனின் ஒளிக்கடன் மூலமே ஒளிர முடிந்த சந்திரன்கள்!)
5. திருமதி கண்ணாம்பா : மறக்க முடியுமா மனோகரனின் வீரத்தாயாக உதிர்த்த 'பொறுத்தது போதும்....பொங்கியெழு' ! உத்தம புத்திரன் பார்த்திபனுக்கும் உத்தம வில்லன் விக்கிரமனுக்கும் இடையே பாசப் பரிதவிப்பில் பார்ப்போரை பதற வைத்த உத்தமத் தாயை!?
https://www.youtube.com/watch?v=a3IQKvcZEPQ
https://www.youtube.com/watch?v=0Dnjbi2zB2M
https://www.youtube.com/watch?v=dtw4_1JH9fM
-
நடிப்புத் திமிங்கிலம்(NT) / நடிகர் திலகம் (NT) சுமந்து மகிழ்வித்த சுகமான குட்டிமீன்கள் மற்றும் சுமையான சுறாக்கள் !
Part 2 : நடிப்பு வலிமை மிகுந்த தாய்ச் சுறாக்கள் !(ஆனாலும் நடிப்புச் சூரியனின் ஒளிக்கடன் மூலமே ஒளிர முடிந்த சந்திரன்கள்!)
6. திருமதி பண்டரிபாய் :
பராசக்தி முதல் கவுரவம் வரை நடிகர்திலகம் பண்டரிபாய்க்கு வயதுக்கு ஏற்ற நாயகராக தன்னை உருமாற்றிக்கொண்டே இருந்தார் என்பதே திரையுலகில் சிவாஜிகணேசனின் முதல் கதாநாயகிக்கு கிடைத்த மாபெரும் கவுரவம்! நன்றியுடன் நினைவுகூர்கிறோம்!
https://www.youtube.com/watch?v=PGBryGdL0FQ
https://www.youtube.com/watch?v=JBl4tb0flFI
https://www.youtube.com/watch?v=Rj1O6ki9xeE
-
கலை வேந்தன்,
அதற்கு இது பதிலல்லவே என்ற ரீதியிலேயே சால்ஜாப்பு பதில்கள்.
கூட்டி கழித்து சில பொழுது போக்கு அம்சங்களை கழித்தால் ,நீங்கள் பீற்றி கொண்டு அலையும் கவிதை வரிகளை பெரும்பாலும் எழுதி குவித்த கண்ணதாசனும் ,வாலியும் கூட மது,மாதுக்களை தவிர்த்ததில்லை. (ரசிகர்களை விட்டு விடுங்கள்.No comments )நகைச் சுவை உங்கள் பெரும் பலம்.
இரு காங்கிரஸ் இணைந்து புதுவை தேர்தலை சந்தித்த போது காமராஜ்,இந்திராவிற்கு நடுவில் பிரதானமாக நடிகர்திலகம். காமராஜர் ,மறைவுக்கு முன் கடைசியாய் போனது சிவாஜியின் அன்னை இல்லத்திற்கு அவரை வாழ்த்த.
இந்திராவுடன் சிவாஜிக்கு இருந்த செல்வாக்கு ,அவர் கௌரவமாகவே நடத்த பட்டார். ஆனால் அவ்விடம், தஞ்சாவூர் இடைதேர்தல் பிறகு?மணியன்,இந்த சந்திப்பை பற்றி எழுதி குவித்தவை ,உங்கள் தலைவரின் நிலையை தெளிவாக்கும்.
முரளியுடன் நான் இந்த தவறை சொல்லி (சித்ரா கிருஷ்ணசாமி- ஆயிரத்தில் ஒரு புரோக்கர்.) அவரும் தவறி எழுதியதாக ஒப்பு கொண்டார். இது ஒரு சாதாரண எழுத்து பிழை. தகவல் பிழை அல்ல.இது நடந்து பலநாட்கள் ஆனது.
-
நடிப்புத் திமிங்கிலம்(NT) / நடிகர் திலகம் (NT) சுமந்து மகிழ்வித்த சுகமான குட்டிமீன்கள் மற்றும் சுமையான சுறாக்கள் !
PART 2 : வலிமை மிகுந்த பளுவான நடிப்புச் சுறாக்கள் !(ஆனாலும் நடிப்புச் சூரியனின் ஒளிக்கடன் மூலமே ஒளிர முடிந்த சந்திரன்கள்!)
7. திருமிகு எஸ் வி சுப்பையா :
கப்பலோட்டிய தமிழனுக்கு மகாகவி சுப்பிரமணிய பாரதியாராக கை கொடுத்தவர். காவல்தெய்வம் படம் மூலம் நடிகர்திலகம் தனது நன்றியறிதலை நவின்றார். மூன்று தெய்வங்களிலும்; நடிகர்திலகம் அவருக்கு கவுரவம் சேர்த்தார். வணங்குகிறோம் !
https://www.youtube.com/watch?v=27IdJ4o71KQ
https://www.youtube.com/watch?v=0lFpu5z0oPU
https://www.youtube.com/watch?v=twODofU8gQY
-
டியர் சுந்தரபாண்டியன் சார்
மருத்துவர் சார் இங்கு வரும் நாளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
-
நடிப்புத் திமிங்கிலம்(NT) / நடிகர் திலகம் (NT) சுமந்து மகிழ்வித்த சுகமான குட்டிமீன்கள் மற்றும் சுமையான சுறாக்கள் !
PART 2 : வலிமை மிகுந்த பளுவான நடிப்புச் சுறாக்கள் !(ஆனாலும் நடிப்புச் சூரியனின் ஒளிக்கடன் மூலமே ஒளிர முடிந்த சந்திரன்கள்!)
8. திருமிகு வி நாகையா :
நடிகர்திலகத்தின் மரியாதைக்குரிய மூத்த கலைஞர். தெய்வமகன் திரைக்காவியத்தில் நடிகர்திலகத்தின் மரியாதை வெளிப்பாடு நன்கு தெரியும். நடிகர்திலகத்தின் படங்களில் நிறைகுடமாக மனம் கவர்ந்தவர். சரசுவதி சபதம், மங்கையர் திலகம், எதிர்பாராதது, பாலும் பழமும், பாவமன்னிப்பு.....இதயம் கனிந்த கரங்கள் குவிந்த நன்றியறிதலை உரைக்கிறோம்!
https://www.youtube.com/watch?v=1r4xuC_9hKo
https://www.youtube.com/watch?v=9Y5PPCeNqkg
-
டியர் சிவாஜி செந்தில்..
சுகமான குட்டிச்சுறாக்களும் சுமையான திமிங்கிலங்களும்... நல்ல வித்தியாசமான கோணத்தில் தங்களுடைய பார்வை.. பாராட்டுக்கள்..
இதனுடைய சிறப்பை மேலும் உணர வேண்டும். அதற்கு தங்களுடைய விரிவான அலசல்கள் இடம் பெற வேண்டும். அதைப் படித்து நாங்கள் இன்புற வேண்டும்.
ஒவ்வொரு சுகமான குட்டிச் சுறா அல்லது சுமையான திமிங்கிலம் பற்றி விவாதிக்கும் போதும் ஒரே யொரு காணொளி போதுமல்லவா.. ஒரு பானைக்கு ஒரு சோறு போதுமே... தேர்ந்தெடுக்கும் அந்த ஒரு பாட்டு அல்லது காட்சியில் அந்த குட்டிச் சுறா அல்லது திமிங்கிலத்தின் பங்கு பற்று விரிவாக எழுதலாமே...
அது மட்டுமின்றி இதன் மீதான விவாதங்களும் இடம் பெற்றால் இதனுடைய அருமை இன்னும் ஆழமாக உணரப்படும்.. ஒரு விவாதத்திற்குப் பின்னர் அடுத்த காட்சி அல்லது பாடலைப் பகிர்ந்து கொள்ளலாமே..
-
Dear friends,
Thus far we are not aware of any saturation point with regard to the analyses on NT.. It will be the case in future too.
But we have to preserve it.
This can be achieved by avoiding as far as possible quotes of earlier posts...
நண்பர்களே..
நடிகர் திலகம் என்னும் அதிசயத்தைப் பற்றி அலச நமக்கு என்றுமே அலுப்பும் சலிப்பும் வந்ததில்லை..வரவும் வராது..
ஆனால் அந்த நிலையைத் தொடர நாம் பாடு பட வேண்டும்...
அதற்குகந்த சிறந்த வழி .. மீள் பதிவுகள் தவிர்க்கப் பட வேண்டும்...
பல்லாயிரக் கணக்கில் நூல்கள் எழுதும் அளவிற்கு எழுத்து வல்லமை வாய்ந்தவர்கள் நமது நடிகர் திலகம் திரியில் பங்களித்து வந்துள்ளார்கள். இனிமேலும் வருவார்கள்..நடிகர் திலகம் என்னும் அட்சய பாத்திரம் அள்ள அள்ளக் குறையாத அமுத சுரபியாய் நமக்கு கருத்துக்களை வாரி வழங்குகிறது..
அந்த அட்சய பாத்திரத்தை நாம் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்..
அதற்கு நம் அநைவரின் ஒத்துழைப்பும் முற்றிலும் வேண்டும்.
அதற்காகப் பாடு படுவோம்...
ஒவ்வொருவரின் கருத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து வரவேற்போம்..
முடிந்த வரை ஒரு தலைப்பு முடிந்த பின்னரே அடுத்த தலைப்பினை கருத்துப் பரிமாற்றத்திற்கு எடுத்துக் கொள்வோம்.
-
நண்பர் கலைவேந்தன் அவர்களுக்கு,
தவறை சுட்டிக் காட்டியதற்கு மிக்க நன்றி. நான் வரலாற்று சுரங்கமும் இல்லை. அப்படி நான் என்னை நினைத்துக் கொண்டதுமில்லை. சொல்லிக் கொண்டதுமில்லை. அன்பின்பால் நண்பர்கள் சொல்லியிருந்தால் உடனே அதை என் தலையில் ஏற்றிக் கொண்டதுமில்லை. ஆனால் அப்படி நண்பர்கள் சொன்னது உங்களுக்கு எவ்வளவு பயன்படுகிறது பாருங்கள்! உங்கள் மனதில் என் மேல் உள்ள கோபத்தையெல்லாம் வெளிப்படுத்துவதற்கு ஒரு வாய்ப்பாகவும் அமைந்து விட்டதில் எனக்கு மகிழ்ச்சியே!
இனி பயன்படுத்திக் கொள்வதில் தேர்ந்தவர் என்பது விஷம் கக்கும் வார்த்தைகள் என்பதை நீங்கள் சொல்லித்தான் தெரிந்துக் கொண்டேன். உங்களுக்காக ஒரே ஒரு Flash Back. 1977 ஜூன் மாதம் 29-ந் தேதி என்று நினைவு. மறுநாள் தமிழக முதல்வராக எம்ஜிஆர் அவர்கள் பதவியேற்க போகிறார். ஆளுநரை சந்தித்து மந்திரிசபை பட்டியலை அளிக்கிறார். பட்டியலில் யாரும் எதிர்பார்க்காத ஒரு பெயர் இருக்கிறது. அந்த நபர் திரு. நாராயணசுவாமி முதலியார். சட்டத்துறை அமைச்சராக பதவியேற்றார் என்பது என் நினைவு. எம்ஜிஆர் அவர்களிடம் நிருபர்கள் கேள்வி கேட்கின்றனர். இவர் உங்கள் கட்சியை சேர்ந்தவர் இல்லையே என்று? அதற்கு எம்ஜிஆர் அவர்கள் பதில் சொல்கிறார். ஏன் கட்சி அரசியலை சேர்ந்தவர்கள் மட்டும்தான் மந்திரியாக வேண்டுமா? சட்டத்துறையில் பல வருட அனுபவம் உடையவர் இவர். இவரை போன்ற நபர்களை நான் பயன்படுத்திக் கொள்ள போகிறேன் என்று சொல்கிறார். திரு .நாராயணசுவாமி சட்டமன்ற உறுப்பினராக இல்லாதிருந்த காரணத்தினால் அவர் மேலவை உறுப்பினராக ஆக்கப்பட்டார் அமைச்சராக 1980 பிப் 17 வரை பதவியும் வகித்தார். எம்ஜிஆர் அவர்கள் திரு நாராயணசுவாமி முதலியார் அவர்களை பயன்படுத்திக் கொள்ள போகிறேன் என்பதை என்ன அர்த்தத்தில் சொன்னாரோ அதே அர்த்தத்தில்தான் மணியனை பற்றியும் நான் குறிப்பிட்டேன். இதில் எங்கே தவறு அல்லது விஷம் கக்கும் வார்த்தைகள் இருக்கிறது என்பதை திரியின் வாசகர்களே முடிவு செய்யட்டும்.
உங்களின் பதிலை எம்ஜிஆர் அவர்களின் திரியில் மட்டும் பதிவு செய்தால் எங்கே என்னை வரலாறு அறியாதவன் என்ற "உண்மையை" பெரும்பாலானோர் அறியாமல் போய் விடுவார்களோ என்ற நல்ல எண்ணத்தில் இங்கே நடிகர் திலகம் திரிக்கும் வந்து பதிவிட்ட உங்கள் நல்ல மனதிற்கு மீண்டும் மிக்க நன்றி நண்பரே! அது மட்டுமல்ல உங்கள் பதிவிற்கு like கொடுத்து நன்றியும் தெரிவித்திருக்கும் நண்பர் சைலேஷ் பாசு அவர்களுக்கும் நன்றிகள் பல!
அன்புடன்
-
நடிப்புத் திமிங்கிலம்(NT) / நடிகர் திலகம் (NT) சுமந்து மகிழ்வித்த சுகமான குட்டிமீன்கள் மற்றும் சுமையான சுறாக்கள் !
PART 2 : வலிமை மிகுந்த பளுவான நடிப்புச் சுறாக்கள் !(ஆனாலும் நடிப்புச் சூரியனின் ஒளிக்கடன் மூலமே ஒளிர முடிந்த சந்திரன்கள்!)
9. திருமிகு.வி கே ராமசாமி : பராசக்தி காலம் தொட்டு நடிகர்திலகத்தின் உற்ற நண்பர். நகைச்சுவையில் நயத்தையும் குணசித்திரத்தில் தரத்தையும் வெளிப்படுத்தி நடிகர்திலகத்தின் VPKB, பார் மகளே பார், எங்க மாமா, திரிசூலம் உள்ளிட்டபல படங்களுக்கு பெருமை சேர்த்தவர். நெகிழ்வுடன் நினைவுகூர்கிறோம்!
https://www.youtube.com/watch?v=LiP820rjIX8