Sivaa sir,
Excellent, wonderful evidences. many many thanks.
This is the first time I see 'Thiyagam' silver jubilee advertisement at Madurai Chintamani.
More and more please.
Printable View
Sivaa sir,
Excellent, wonderful evidences. many many thanks.
This is the first time I see 'Thiyagam' silver jubilee advertisement at Madurai Chintamani.
More and more please.
16/05/2014 அன்று 55 வயது பூர்த்தி செய்யும் தமிழர்களின் பெருமை .உலக அளவில் தமிழர்களை கொண்டு சேர்த்த பெரும் பெருமை. மிக அதிக திரையரங்களில் 100 நாட்கள் (13 இல் 97 நாட்கள் மரகதம் பட வெளியீட்டால்)கண்டது.(30 க்கும் அதிகமான )
வீர பாண்டிய கட்ட பொம்மன் -1959
என்னதான் நடிகர்திலகம் Strasberg/Stanislavsky method Acting செய்தாலும்,Meisner பாணியில் நடித்தாலும் ,நிறைய நல்ல படங்கள் கொடுத்து பெரும் பாராட்டுதல்களை பெற்றாலும் , என் கருத்தில் நடிகர்திலகம் நடித்த Chekhov பாணி படங்கள்,Oscar Wilde /Stella Adler /Shakespere school படங்களே அவரை உலகத்திலேயே சிறந்த நடிகர் என்று நம்மை ஓங்கி சொல்ல வைக்கிறது. ஏனென்றால் பிற இந்திய நடிகர்கள் method Acting பாணியில் நடித்து அவருடைய நடிப்பில் ஒரு 60% தொட முடிந்துள்ளது. ஆனால் அவருடைய மற்ற பாணி நடிப்பில் 5% கூட தொட யாருக்கும் தகுதியில்லை என்று தைரியமாக கூற முடியும். அவரால் மட்டுமே முடியும் என்று சொல்ல கூடியவை. ஒரு சோகம் என்னவென்றால்,இந்த வேறு பட்ட பள்ளிகள் சார்ந்த நடிப்பை ரசிக்க ரசிகன் நன்கு தயார் படுத்த பட வேண்டும் ரசனையில். இந்த காலமே ,நடிப்பின் எல்லைகளை சுருக்கி ,ரசிகனின் ரசனை எல்லையை சுருக்கி ,அவர்களுக்கு பல விஷயங்களில் பரிச்சயம் இல்லாமல் செய்து ,நேரமும் இல்லாத நிலையில் மற்றவற்றை உதாசீன படுத்த வைக்கிறது.(what ever I dont know doesn't have right to exist ) என்ற மோசமான நடத்தைக்கு பெற்றோர்கள்,ஆசிரியர்கள்,நட்பு வட்டம் எல்லாமே காரணியாகி விடுகிறது. ஆனால் உன்னதமான ஒன்றை சரியான படி marketing செய்தால் விழுந்து விழுந்து ரசிப்பார்கள் என்பதற்கு கர்ணன் படத்தின் ஒப்பில்லா இமாலய வெற்றி ஒரு சான்று.
Larger than life என்பது சராசரி மனிதனை விட மேற் தரத்தில் உள்ள (பணம்,பதவி,நோக்கம்,புகழ்,தலைமை,போராட்ட குணம் ,இறை நிலை ) மக்களை பேசும் வலுவான நோக்கம் கொண்ட ,அதீத உணர்ச்சிகள்,போராட்ட நிலை உள்ளதாகவே அமையும். மேற்தர மனிதர்களின் பிரச்சினையும் அதற்குரிய பிரம்மாண்டம் கொண்டே அமைவது தவிர்க்க இயலாதது. இன்றைய காலத்தில் ஒரு NRI குழந்தை,ஒரு அரசாங்க மேற்பணியானர்,தலைவர்,அமைச்சர், புகழ் பெற்ற மருத்துவர் இவர்களை பார்த்தாலே இவர்களின் பொது நடத்தை விந்தையாகவே தெரியும். முற்காலங்களில் அரசர், பிரபுக்கள் ,மதகுருமார்கள் இவர்கள் சராசரி மனிதர்களிலிருந்து வேறு பட்ட உடை, தலை அலங்காரம் (கொம்பா முளைச்சிருக்கு.இல்லை கிரீடம் )நடை,பேச்சு தோரணை, பெரிய பொறுப்பு அதற்குரிய பெரும் பிரச்சினைகள் என்று வேறு பட்டே வாழ்ந்தவர்களை ,நிறைய இக்கால மேதாவிகள் சொல்வது போல் soft contemporary முறையில் நடிப்பது அபத்தத்திலும் அபத்தம்.
உதாரணத்திற்கு வீர பாண்டிய கட்டபொம்மன் படம் ஒரு Epic தன்மை கொண்ட folklore .மக்களுக்கு அதை பற்றி ஒரு பிரம்மாண்ட image இருக்கும். இங்கு சரித்திரம் புறம் தள்ள பட்டே ஆக வேண்டும். (சரித்திர கட்டமைப்பில் எவ்வளவு சதவிகிதம் உண்மை என்பதே கேள்வி குறி. எல்லோரை பற்றியும் தேவையான சரித்திர குறிப்புகளும் இல்லை.)இந்த நிலையில் Costume Drama என்ற வகை பட்ட பிரம்மாண்ட படத்திற்கு ஒரு உன்னத நடிகரின் கற்பனை சார்ந்த , உயிரிலும் உணர்விலும் அந்த நடிகன் கனவு கண்ட ஒரு பாத்திரத்தை ,கட்டபொம்மன் எப்படி இருந்திருக்க வேண்டும் என்ற எல்லோருடைய fantasy ஐயும் பூர்த்தி செய்வதாகத் தானே அமைய வேண்டும்? அப்படித்தான் அமைந்தது. அதை மொழிக்கு அவசியம் இன்றி உலகமே வியந்தது. எந்த காலத்திலும் எந்த கலைஞனும் அதில் ஒரு நுனியை கூட தீண்ட முடியாது
கட்டபொம்மன் ஒவ்வொரு தமிழனின் பூஜா பலன். உச்ச அதிர்ஷ்டம். மேற்கு மக்களுக்கு ஒரு ten commandments ,ஒரு lawrence of Arabia போல கீழை மக்களின் சுதந்திர போராட்ட சரிதம். நிகழ்வுகள் ஓரளவு சரித்திரத்தை ஒட்டியவை ஆனாலும் நம் மக்களின் ரசனையை ஒட்டி அழகு படுத்த பட்ட பிரம்மாண்ட சரித்திரம். கட்டபொம்மனின் சரித்திரம் ,அவன் சுதந்திர காற்றுக்காக ஏங்கி , சிறுமையும் மடமையும் கொண்ட அடிமை கூட்டத்தில் தனித்தியங்கி வீரம் காட்டிய முன்னோடி. இந்த ஒரு அம்சம் போதும் அவனை நடையில்,உடையில்,அந்தஸ்தில்,பேச்சில் மக்களின் எதிர்பார்ப்புகேற்ப தமிழ் புலவர்களின் சங்க கால கவிதை தொடர்ச்சியாக காட்சியமைப்பில், வசனத்தில்,உயரிய நடிப்பில், தமிழகத்துக்கே பிரம்மன் வடித்த தந்த உன்னத நடமாடும் சிற்பத்தால் உரிய உன்னதம் கொடுக்க பட்டு, சிற்றரசன் என்று கீழ் நிலை விமர்சகர்கள் இகழ்ந்தாலும் பெரிய நோக்கம் கொண்ட உயரிய மனிதன், மகாராஜாவாக ஆக்க பட்டான். நிலத்தின் அளவை பொருத்தல்ல ,மனத்தின் திண்மையின் அளவு.கொண்ட நோக்கத்தின் அளவு.
கட்டபொம்மனின் 1791 முதல் 1799 வரை ஆன கால கட்டமே இந்த படத்தின் காலகட்டம்.ஆற்காடு நவாப் வாங்கிய கடனுக்கு கும்பனியிடம் தனக்குட்பட்ட பாளய சிற்றரசர்களிடம் இருந்து வரி வசூல் உரிமையை கொடுப்பதில் இருந்து கட்டபொம்மன் அதை மறுத்து எதிர் வினை புரிந்தது, வெள்ளையர்கள் மற்றோரை தன் வசப்படுத்தி அடிமையாக்கி கட்டபொம்மனை தனிமை படுத்தி ,அவனுடன் போர் செய்து ,தப்பியோடிய அவனை பிடித்து தூக்கிலிடுவது படத்தின் காலகட்டம். கட்டபொம்மனின் வயதுதான் நடிகர்திலகத்தின் அன்றைய வயது. ஏறக்குறைய முப்பது. கட்டபொம்மனின் நிறம்தான் நடிகர்திலகத்தின் நிறம். அப்பப்பா இந்த படத்தில் அவர் இயல்பான நிறம் காட்ட பட்டதில்,ஒப்பனையாளர் பாதி சாதனை புரிந்து விட்டார்.
கட்டபொம்மனின் உயரம்? அவன் உயரம் அத்தனை சமகால பாளய சிற்றரசர்களின் உயரம்,ஆற்காடு நவாப் உயரம், அனைத்துக்கும் மேலல்லவா? அந்த உயரமும் கிடைத்து விட்டது ஒரு நடிக மேதை தன் நடிப்பால் மட்டுமே தன் உயரத்தை மேலும் ஓரடி கூட்டி கொண்ட அதிசயம் .அதை நாம் மட்டுமே வியக்கவில்லை ,உலகமும் நாசரும் (எகிப்து அதிபர்)கூடவியந்தனர். தானே தேடி வந்து நடிகர்திலகத்தை பார்த்த நாசர் ,இவரா(?) ,படத்தில் ஆறடிக்கு மேல் தெரிந்தாரே ,என்று மூக்கில் விரலை வைத்தார்.
இப்போது சொல்லுங்கள் கட்டபொம்மன் அதிர்ஷ்டம் செய்தவரா இல்லை ஒவ்வொரு தமிழனுமா என்று?actors should never feel small என்று சொன்ன Stella Adler கூட இப்படி ஒரு ஏகலைவனை அடைய கொடுத்த வைத்தவர்தானே?
தமிழனுக்கு தமிழை எழுத கற்று கொடுத்தவர்கள் வள்ளுவர் முதல் பாரதி வரை ஏராளம். ஆனால் தமிழை அதன் அழகுடன், அர்த்தத்துடன் பேச தமிழனுக்கு கற்று கொடுத்த ஒரே மேதை நடிகர்திலகம் அல்லவா?அதுதானே பலரை கவர்ந்து தமிழை பாமரர் முதல் பண்டிதர் வரை பள்ளி மாணவரில் இருந்து பல் போன முதியவர் வரை தமிழ் மீது ஆர்வத்தை தூண்டி புலவர் எழுத்துக்கும் பாமரர் மனதுக்கும் தொடர்பு கண்ணியானது? எனக்கு முதல் பரிச்சயம் கட்டபொம்மனுடன் ஒலிச்சித்திரம் (soundtrack ) மூலமே ஏற்பட்டது.பிறகு வசன புத்தகத்தை வாங்கி வசனங்களை மனனம் செய்தேன். அவரை போல் பேச முயன்றேன்.
listen only to soundtrack and you will realise the timbre ,modulation ,tonal clarity ,subtle and quick flow of variation in octave levels that plucks every known &buried emotional suggestions from the dialogue with its rhythm and beauty(He lived in his voice) .அவருடைய ஆண்மையான குரலில் வசனத்தின் ஒவ்வொரூ எழுத்தும் சொல்லும் அவரின் பாவம், ஏற்ற இறக்கம், தெளிவு, கவிதையின் அழகு,முக பாவத்திற்கேற்ற கை கால் உடல் அசைவுகளுக்கேற்ப மெல்லிய துல்லிய குரல் மாற்றங்கள், நம்மில் அந்த பாத்திரத்தை அதன் உணர்வை மனகண்ணில் காட்டி விடும் வலிமை கொண்டது.
நான் இந்த குரலுக்கு அடிமையாகி ஐந்து வருடங்கள் கழித்தே படத்தை வெள்ளித்திரையில் கண்டேன்.ஆனால் சமீபத்தில் எனக்கொரு சந்தேகம். நாம் முதலில் வசனம்,பிறகு படத்தோடு வசனம் மகிழ்ந்து அதில் திளைக்கிறோம். ஆனால் உலக அங்கீகாரம் பெற்ற இந்த படத்தில், அந்நிய நாட்டை,மொழியை சார்ந்தவர்களை ,இந்த வசனங்களின் முழு பொருளும் அருமையும் தெரியாமலே அடிமை ஆக்கி ஆசிய ஆப்பிரிக்காவின் சிறந்த நடிகராக அங்கீகரிக்க வைத்ததே? எப்படி?
எனக்கு முதல் அதிசயமே அந்த நடையும், கைகளை,விரல்களை அவர் பயன் படுத்தும் விதமும். நான் ஏற்கெனவே கூறிய படி நிறைய hollywood மற்றும் உலக நடிகர்கள் ,அந்த பாத்திர குணங்களை establish செய்ய ,விலங்குகளின் நடை, குணங்கள் இவற்றிலிருந்து inspiration எடுத்து, சமயங்களில் imitate கூட செய்வார்கள். வால்மீகி ராமாயணத்தில் ,வால்மீகியும் ராமனின் நாலு வித நடைகளை குறிப்பிடுவார். சிங்க நடை தலைமை குணத்தை குறிப்பது. புலி நடை சீற்றத்தையும் கோபத்தையும் குறிப்பது.யானை நடை பெருமிதத்தை குறிப்பது.எருது நடை அகந்தை,அலட்சியம் இவற்றை குறிப்பது.
இந்த படத்தை நான் பார்த்த போது ,அதிசயித்த விஷயம் வால்மீகியை படிக்காமல் நடிகர்திலகம் இவற்றை உணர்ந்த விதம்.
அவையிலும், நகர்வலம் செல்லும் போதும், மந்திரி மற்றும் நண்பர்களுடன் இருக்கும் நடை ஒரு சிம்மத்தின் தலைமை குணத்தை குறிக்கும் நடை.ஜாக்சன் தன்னை அவமதித்து கோபப் படுத்தும் போது ஒரு புலியின் சீற்றம் நடையில் தெரியும்.ஜக்கம்மாவிடம் போருக்கு விடை பெரும் போது ஒரு யானையின் பெருமிதம் தொனிக்கும்.கடைசியில் பானர்மன் தூக்கு தண்டனை விதித்ததும் தூக்கு மேடையை நோக்கி நடக்கும் கால்களில் ஒரு எருதின் அலட்சியம் தெறிக்கும்.
ஒரு சராசரி நடிகனுக்கும், ஒரு மகா நடிகனுக்கும் உள்ள வேறுபாடு காலுக்கும், உடல் மொழிக்கும் ஏற்றவாறு கைகளை பயன் படுத்தும் முறை. ஜாக்சனுடன் ஆரம்ப பேச்சில் கைகளை சிறிது ஒடுக்கி கட்டுபடுத்துவார். எண்ணிக்கை தெரியாத குற்றம் என்னும் போது விரல்கள் எண்ணிக்கையோடு அசையும். போர் விடை பெரும் காட்சியில் வலது கை புறம் காட்டி இடது புற உரையில் கத்தியை சடாரென்று மணிக்கட்டை மட்டும் பயன் படுத்தி தள்ளும் தன்னம்பிக்கை நிறைந்த style .
வீரபாண்டிய கட்டபொம்மனில் இன்னொரு அம்சத்தை நீங்கள் கவனித்தே ஆக வேண்டும். நான் குறிப்பிட்ட ten commandments ,Benhur ,Lawrence of Arabia போன்று multi -agenda கொண்ட வலுவான கதையம்சம்,உணர்ச்சி குவியல்கள்,பல்வேறு வலுவான பாத்திரங்கள் கொண்டதல்ல கட்டபொம்மன். 1791-1799 வரையான வெள்ளையர்களுடன் கருத்து வேறுபாடு,மோதல்,சக சிற்றரசர்களின் துரோகம் ,ஒன்றிரண்டு confrontation ,சமமற்ற போர் ,பிடிபட்ட பிறகு தூக்கு என்று ஒரே பாத்திரத்தை மட்டுமே நம்பிய ஒற்றை agenda கொண்ட படம். நான்கே முக்கிய காட்சிகள். ஜாக்சன் துரை யுடன் வாக்குவாதம்,தானாபதி பிள்ளை சம்பத்த பட்ட காட்சி,தப்பி சென்ற கால காட்சிகள், இறுதி தூக்கு மேடை காட்சி இவ்வளவுதான் முக்கியம். மற்றதெல்லாம் நிரவல். Hyper Rhetoric என்று ஒற்றை அம்ச படம்.
ஒரு Artist Portfolio Repertoire என்ற ஒரே விஷயத்துக்கு மட்டுமே இவ்வகை படங்கள் தகுதி கொண்டது.
மேற்கூறிய அம்சத்தை கட்டபொம்மனில் நீங்கள் கவனிக்க கூட முடியாமல் ஒரு cult படமாக,தமிழின் பிரம்மாண்ட படமாக உங்களை இன்று வரை அசை போட வைத்தது இரண்டே அம்சங்கள். நடிகர்திலகம், மற்றும் தயாரிப்பில் பிரம்மாண்டம்.
இப்படத்தின் வெற்றி ஏற்கெனவே தீர்மானிக்க பட்டது என்று பலர் சொல்ல கேட்டிருக்கிறேன். நடிகர்திலகம் இந்த பாத்திரத்தில் நடிக்க படம் தயாரிக்க படுகிறது என்றதுமே ,எல்லாமே முன்முடிவு செய்ய பட்ட ஒன்றாகி விட்டது.
வீர பாண்டிய கட்ட பொம்மன் -1959
நடிப்பு மற்றும் complexity in character என்று பார்த்தால் ,மிக ஆராய்ந்தால் VPKB நிச்சயமாக அவருடைய Top 10 இல் வர முடியாது. ஆனால் நீங்கள் என்னிடமோ ,அல்லது யாரிடம் கேட்டாலும் இந்த படம் ஒரு பரவச அனுபவம், mesmerism முறையில் கட்டுண்டது போல ஒரு மயக்க ட்ரான்ஸ் நிலை. மற்ற படங்களை பற்றி வேறாக சொல்வோர் சிலர் இருக்க முடியும். ஆனால் VPKB பற்றி கேட்டால் ,அது எந்த தமிழனாக இருந்தாலும் சொல்லுவது ஒரே பதில். நான் சொன்ன மாதிரி single agenda நேர்கோட்டில், hyper ஒரு முகப்பட்ட உணர்ச்சி நிலை, ஒரே நோக்கம், ஒரே மையம் என்று போகும் இந்த படம் எப்படி இதனை சாதிக்க இயலும்?நான் பார்க்கும் போது என் முன்னோர்களுக்கு இருந்த folklore epic image கிடையாதே?அடுத்த தலைமுறையும் இந்த படத்தை சிலாகிக்கிறதே ,எப்படி சாத்தியமானது?எந்த மந்திரம் அதனை சாதித்தது?
நடிகர்திலகம் Focusreach முறையில் நம் ஆத்மாவுக்குள் நுழைந்து சாதித்த அதிசயம்.
தன் ஆத்மாவுக்குள் அந்த வீரனை நுழைத்து அவர் சாமியாடியுள்ளார் என்றே சொல்ல வேண்டும்.Hysteric delirium which mesmerises the audience with psychedelic trip .
இந்த படம் நடிகர்திலகத்தின் focusreach கொண்டே cult status அடைந்து ,எந்த கலைஞனை கேட்டாலும் இந்த பட காட்சியை நடித்ததே தன் முதல் audition என்று சொல்ல வைத்த அதிசயம்.இதை விரிவாக பார்ப்போம்.
1)Focusreach முறையின் முக்கியம் அதீத energy level . சக்தியின் உக்கிர வெளிப்பாடு.உடலின் சோர்வு,பசி,துன்பத்தை கருதாது நோக்கத்தை நோக்கி செல்லும் அதீத வெளியீடு.இப்படத்தில் ஒவ்வொரு காட்சியிலும், இதுதான் உச்ச சக்தி என்று நாம் கருதும் போது அடுத்தது அதனை மிஞ்சி உச்ச காட்சியில் இமயத்துக்கு மேலும் செல்லும்.
2)அதுவரை நிகழ்ந்த அனைத்தையும் விட மேல் தளத்தில் விரிந்து நாயகனை superhero ஆக உணர்த்தும் விந்தை. இதை செயல்களின் துணையின்றி உணர்ச்சி வெளிப்பாட்டு சக்தியிலேயே சாதித்து ,நமக்கு மேலே அவர் என்று உணர வைத்த விந்தை. நாசரே இவர் உயரம் பல அடிகள் மேலே என்று நினைக்க வைத்த சாதனை.அனைத்து தரப்பினரையும்,வயதினரையும் ,தன் கீழ் பட்டவர்களாக படம் பார்க்கும் போது உணர வைத்த சாதனை.
3)focus focus focus reach a peak ,move to other peaks என்ற முறையில் நடிப்பின் உணர்ச்சி வரைபடத்தில்(Emotional intensity mapping) சிகரம் தொட்டு தொட்டு மேற்செல்லும் முறை.
4)மெய் வருத்தம் பாராத,தன்னை வருத்திய ஒரு முக சிந்தனை வெளிப்பாடு.
(ரத்தமெல்லாம் கக்கி துடைத்து கொண்டு தொடர்வாராம்)
5)வித விதமான வேறு பட்ட முயற்சி,சிந்தனை அதன் வழி செயல் பாடுகள்.
6)சரி- தவறு என்ற ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டு ,தான் செய்வதே மிக சரி என்று அனைவரையும் உணர வைக்கும் சக்தி. எடுத்த நோக்கமும் உன்னதமானதாக இருந்ததால் double impact .
7) Adrenalin Rushes with High Stress levels . இந்த படம் எடுத்து கொண்ட காலகட்டமே stress level கட்டபொம்மனுக்கும் மேலாக இருந்தது. சிவாஜியின் Type A personality கொண்ட வெளியீட்டு முறை ,பார்க்கும் நமக்கும் வாளெடுத்து போர் புரிய வைக்கும் அளவு நரம்புகளை முறுக்கேற்றும்.வசனங்களும் அற்புதமாக இதற்கு இசையும்.
8)அவர் மட்டுமே அந்த கணத்தில் முக்கியமானவர் என்று அந்த இருட்டின் கணங்களில் கட்டி வைக்கும் ஈர்ப்பு.
எனக்கு தெரிந்த அளவில் இந்த focusreach அதிசயம் ,இந்த படத்தில் நடிப்பினால் அமைந்த அதிசயம் எந்த இந்திய படத்துக்கும் அதற்கு முன்போ பின்போ நடந்ததே இல்லை.
வீரபாண்டிய கட்டபொம்மனில் என்னை மிக மிக கவர்ந்தது அவர் வீரத்தை மட்டுமே காட்டாமல் எதிரி தன்னை மீறியவன் என்றுணர்ந்து விவேகம் காட்டுவார். மானத்தை துறக்காமல் சமாதான வாசல்களை திறந்தே வைப்பார். ஜாக்சன் துரை தன்னை அவமதித்து அலைக்கழித்த போதும் ,பொங்கி வரும் கோபம் அடக்கி முடிந்த அளவு பொறுமை காப்பார் .நட்பு நாடி வந்ததை குறிப்பார். பிறகு தானாபதி பிள்ளை தப்பி வந்து இன்னொரு சமாதான முயற்சி குறித்து பேச,பொங்கியெழும் ஆலோசனை குழுவை அணைத்து பேசி, சமாதானத்தை யோசிப்பதில் தவறில்லை என்று மெல்லிய தொனியில் வலிக்காமல் சொல்லுவார். தானாபதி பிள்ளை நெற்களஞ்சியத்தை கொள்ளையிட்டு பாண்டி தேவரையும் கொலை செய்து விட்டது சமாதான கதவுகளை நிரந்தரமாக மூடி விட்டதறிந்து கொதிப்பார். பிறகு வேறு வழியின்றி வருவது வரட்டும் என்று தன் மந்திரியை காத்து ,போருக்கு மனதளவில் தயாராவார். இதில் அவர் மேலுக்கு இலகுவாக இருப்பதாய் வரும் சில காட்சிகளில் கூட சிங்கார கண்ணே, மனைவி, வெள்ளையத்தேவன் கல்யாணம்,குழந்தையுடன் பேசுவது எல்லா சந்தர்ப்பங்களிலும் ,ஒரு கவலை கலந்த சிந்தனை ரேகை (stress )அவர் முக குறிப்பில் தோன்றிய படியே இருக்கும்.போருக்கு தயாராகும் காட்சியில் கூட ஒரு வீரனாக தயாரானால் கூட எதிரி தன்னை மீறிய சக்தி படைத்தவன் , வாய்ப்பு குறைவுதான் என்ற அவநம்பிக்கை கலப்பு நன்றாக அவர் குறிப்பில் தொனிக்கும்.
மிக சிறந்த காட்சிகள் எல்லோருக்கும் நன்கு தெரிந்த ஜாக்சன் சந்திப்பு, தானாபதி பிள்ளை தவறிழைக்கும் காட்சி,பிடி படும் காட்சி,இறுதி பானர்மென் விசாரணை தூக்கு காட்சி ஆகியவை .
ஜாக்சன் பேட்டிக்கு உள்ளே வரும் போதே எச்சரிக்கையுடன் அக்கம் பக்கம் பார்த்து நுழைவது, நாற்காலி இல்லாததால் சுற்று முற்றும் பார்த்து பேட்டியில்லை, அவமதிப்பே என்றுணர்ந்தாலும், நாற்காலி பறிப்பதுடன் தன் தாழா நிலையை குறிப்புணர்த்தி , பிறகு சற்றே ஆசுவாசம் கொள்வார் ,கை கால்களில் படபடப்பு கோபம் தெரிய ,சிறிதே தணிவார் .ஆனால் பேச்சு குற்றம் சாட்டும் தொனியில் ஆரம்பிக்க பொறுமை மீறி ,படபடப்புடன் எதிர்ப்பை அதிக படுத்தி கொண்டே போவார்.
என்னுடைய ஆதர்ஷ காட்சி ,தானாபதி பிள்ளை நெல்லை கொள்ளையிட்டதால் ,அவரை ஒப்படைக்க சொல்லி தூதன் ஓலையுடன் வரும் காட்சி. முகபாவம்,உடல் மொழி, அசைவுகள்,வசன முறை எல்லாவற்றிலும் உச்சம் தொடும் அதிசய காட்சி.குற்றச்சாட்டின் வலிமை அறிந்து ,அதன் தன்மையை மந்திரி உணர்கிறாரா என்று ஆழம் பார்ப்பதும், தன் பதவிக்குரிய விவேகமில்லாமல் பேசும் மந்திரியின் பேச்சினால் நிலை குலைந்து, தன் சுற்றி இருப்பவரிடம் தான்தான் அரசன் என்று குறிக்கும் ஒரு அர்த்த புஷ்டியான ஒரு எச்சரிக்கை குறிப்பை காட்டி ,மந்திரியிடம் நீறு பூத்த நெருப்பாக வஞ்ச புகழ்ச்சியில் ஆரம்பித்து ,படி படியாய் நிலைமையின் தீவிரத்தை குற்றச்சாட்டை உணர்த்தும் பாங்கு இந்த காட்சியை உயரத்தில் வைக்கும்.பிறகு குழுவின் நலன் கருதி மந்திரியை காத்து விட்டாலும் வருவதை தடுக்க இயலாது என்ற விரக்தி கலந்த இயலாமையுடன் தூதரின் மேல் தேவை இல்லாமல் பாய்வார்.
தன்னை பிடிக்க ஆள் அனுப்பிய புது கோட்டை மன்னருக்கு இவர் சொல்லும் ராஜாதி ராஜ கட்டியம் ஒவ்வொரு செருப்படி போல தொனிக்கும். தன்னை காண விரும்பவில்லை என்றதும் கேலி,ஏமாற்றம் கலந்த எள்ளலுடன் சொல்லும் வாழ்க ,தூக்கு தண்டனைக்கு ஈடானது.
கடைசி காட்சி "Back to the wall resolution " என்ற catharsis ,venting out anger ரக காட்சி.இதிலே நான் கண்ட சக்தி எந்த படத்திலும் ,எந்த நடிகனிடமும் கண்டதில்லை. இழக்க ஒன்றுமில்லை என்ற நிலையில் , நிலையற்ற அந்நியனிடம் பணிந்த தன் சகாக்களிடம் ஈனமாக வெடிக்கும் கோபம் ,அந்நியனிடம் மூர்க்கம் கலந்த வன்மையான இயலாமை கலந்த வருவது வரட்டும் என்ற கோபம் என்று இவர் வெடிக்கும் காட்சி ஒரு dynamite நம் நாற்காலிக்கு கீழேயே வெடித்த உணர்வில் நாம் பிரமையுடன் வெளியேறுவோம்.
திரு. ஆரூர் தாஸ் அவர்கள் மிகவும் சிறந்த வசனகர்த்தா என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆனால தினத்தந்தியில் வரும் இந்தத் தொடரில் பல இடங்களில் தன்னுடைய பெருமையை நிலைநாட்டும் வகையிலேயே எழுதியிருக்கிறார். தினத்தந்தியின் இன்றைய பகுதியில் கூட, தெய்வமகனைப்பற்றிக் குறிப்பிடும்போது, ஒரு வசனக் காட்சியை நீளமாக இருக்கிறது என்று கூறி நடிகர்திலகம் பேச மறுத்ததாகவும், தான்தான் வற்புறுத்தி பேசவைத்ததாகவும் கூறியிருக்கிறார். 40 பக்க வசனமானாலும் நச்சென்று பேசும் நம் நடிகர்திலகம், நான்கு அடி வசனத்தைப் பேச மறுத்தார் என்பது நம்பக்கூடியதாக இல்லை. இதுபோல, பல தடவை அவர் சொல்லியிருப்பதால்தான் இதனைக் குறிப்பிடுகிறேன். பல கதாநாயகர்களுக்கு அவர் வசனம் எழுதியிருந்தாலும், குறிப்பாக, நடிகர்திலகம் அவர்களுடைய திரைப்படங்களால்தான் ஆரூர் தாஸ் என்பவரே வெளியுலகுக்குத் தெரியும் என்பதை அவரே மறுக்கமுடியாது. நடிகர்திலகம் வந்து மறுக்கப்போவதில்லை என்பதற்காக அவரைவிட தான் பெரியவன் என்ற போக்கில் ஆரூர் தாஸ் எழுதி வருவதை சுட்டிக்காட்டவேண்டும் என்று தோன்றியதால் இதனைப் பதிவிடுகிறேன்.
http://i1234.photobucket.com/albums/...ps27906980.jpg
கட்டபொம்மன் - சிறப்பான பதிவு.
டியர் கோபால் சார்,
கட்டபொம்மன் - ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட வெற்றி என்று 1959 வெற்றியைப் பற்றி குறிப்பிட்டிருக்கிறீர்கள். அவ்வப்போது மறுவெளிவீடு செய்தபோதெல்லாம் வெற்றி பெற்றிருக்கிறது. இப்போது 2014 அல்லது 2015-ல் டிஜிட்டலில் மறு வெளியீடு செய்தாலும் அப்போதும் மாபெரும் வெற்றி பெறும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
அவருடைய ஆற்றலுக்கு ஈடு கொடுக்கும் இயக்குனர்களோ,கதாசிரியர்களோ நம்மிடையே இல்லை.(தில்லானா தவிர) அவருடைய மிக சிறந்தவை பெங்காலி,கேரளா ,hollywood இலிருந்து வந்தவையே.
தெய்வ மகனை எடுத்தால் அவர் அந்த(kannan) பாத்திரத்தை execute செய்ததற்கும்,ஆரூர்தாஸ் வசனம் எழுதிய விதத்துக்கும் mis match இருக்கும். அதனாலேயே பாகம் இரண்டில் ,எல்லாவற்றையும் ஒதுக்கி அவர் நடிப்பு மட்டுமே ஆராய படும் என்று என்று மற்றவற்றை உறைநிலையில் வைத்தேன்.
தமிழனுக்கு தமிழை எழுத கற்று கொடுத்தவர்கள் வள்ளுவர் முதல் பாரதி வரை ஏராளம். ஆனால் தமிழை அதன் அழகுடன், அர்த்தத்துடன் பேச தமிழனுக்கு கற்று கொடுத்த ஒரே மேதை நடிகர்திலகம் அல்லவா?அதுதானே பலரை கவர்ந்து தமிழை பாமரர் முதல் பண்டிதர் வரை பள்ளி மாணவரில் இருந்து பல் போன முதியவர் வரை தமிழ் மீது ஆர்வத்தை தூண்டி புலவர் எழுத்துக்கும் பாமரர் மனதுக்கும் தொடர்பு ......
Gopal Sir. The greatest contributor to modulated tamizh pronunciation, is our NT. Paechchuth thamizh enbathu uchcham adaindhathu NT varugaikkup pinnare enbathai ullankai nellikkaniyaga eduththuraiththadharkku nandri. Enthralled with your schematic presentation on VPKB. Hats off sir.
என்னை கவர்ந்த நடிகர்திலகத்தின் நடன காட்சிகள்-
1952- 1960
தேசம் ஞானம் கல்வி(பராசக்தி), ஆணும் பெண்ணும்,சுந்தரி சௌந்தரி,குரங்கிலிருந்து,அபாய அறிவிப்பு,ஏறாத மலைதனிலே,(தூக்கு தூக்கி), விண்ணோடும் முகிலோடும்(புதையல்), சிவதாண்டவம்(ராணி லலிதாங்கி),யாரடி நீ மோகினி(உத்தம புத்திரன்), கனவின் மாயா லோகத்திலே(அன்னையின் ஆணை),காணா இன்பம்(சபாஷ் மீனா), கண்டேனே உன்னை கண்ணாலே(நான் சொல்லும் ரகசியம்),தேரோடும் எங்க சீரான மதுரையிலே(பாக பிரிவினை), கொடுத்து பார் பார் பார்(விடிவெள்ளி).
1961-1970
பறவைகள் பலவிதம்(இருவர் உள்ளம்),வந்தேனே (நவராத்திரி), பார்த்தா பசு மரம்(திருவிளையாடல்),ஓஹோஹோ little flower (நீலவானம்)டே க்கா கொடுக்கதப்பா,பத்து மாதம்(பேசும் தெய்வம்),அய்யய்யா, நான் பொறந்தது தஞ்சாவூரு(என் தம்பி), ஹாப்பி இன்று முதல் (ஊட்டி வரை உறவு),தங்க தேரோடும், போட்டாளே (லட்சுமி கல்யாணம்),ஏழு கடல்(எங்க ஊர் ராஜா), டான்ஸ் நிர்மலாவுடன் (தங்க சுரங்கம்),கோயில் டான்ஸ்(குரு தக்ஷிணை),அன்புள்ள நண்பரே,காதலிக்க கற்று கொள்ளுங்கள்(தெய்வ மகன்),ஆடல் காணலாம்(நிறை குடம்),என்னங்க (எங்க மாமா),சிரிப்பில்(எங்கிருந்தோ வந்தாள் ),பொன்மகள்(சொர்க்கம்).
1971-1980
தேரு பார்க்க(இரு துருவம்),பொட்டு வைத்த, ஒரு தரம் (சுமதி என் சுந்தரி),வரதப்பா(பாபு),கல்யாண பொண்ணு(ராஜா),அம்பிகையே,அடி என்னடி,கேட்டுகோடி (பட்டிக்காடா பட்டணமா), love is fine (தவ புதல்வன்), ஏன் ஏன் ஏன் ,குடிமகனே, ஆதி வாசி மழை டான்ஸ்(வசந்த மாளிகை),மாப்பிள்ளையே(நீதி), சிவதாண்டவம்(பொன் ஊஞ்சல்),மும் மும் மும் முத்தங்கள் (எங்கள் தங்க ராஜா), I will sing for you (மனிதரில் மாணிக்கம்), இனியவளே ,ஆடிக்கு பின்னே (சிவகாமியின் செல்வன்), நான் பார்த்தாலும் பார்த்தேனடி(தாய்),நல்லதொரு குடும்பம்(தங்க பதக்கம்),சோன் பப்பிடி(என் மகன்)கன்னங்கருத்த(Dr .சிவா),சிவகாமி ஆட,உலகம் நாம் ஆடும்,my song is for you (பாட்டும் பரதமும்),ராஜா யுவ ராஜா(தீபம்),கோவில் டான்ஸ்(தியாகம்), வேலாலே, ஆணாட்டம்,மௌனம் கலைகிறது(என்னை போல் ஒருவன்),என் ராஜாத்தி,காதல் ராணி(திரிசூலம்),பூ மொட்டு(யமனுக்கு யமன்),ஆடல் பாடலில்(வெற்றிக்கு ஒருவன்).
1981-1990
குற்றால அருவி(லாரி டிரைவர் ராஜா கண்ணு),ராத்திரி நிலாவில்(சந்திப்பு)
1991-2000
சின்ன சின்ன காதல் (once more ), தேவராட்டம்(என் ஆசை ராசாவே)
சிரிப்பு பாதி அழுகை பாதி…
*
அத்தியாயம் ஏழு
*
“சரி.. ஹீரோயினுக்கு டயலாக்ஸ் இருக்கு..இதான் காட்சி..இப்படிப் பேசுவாங்கன்னு சொல்றீங்க.எல்லாம் ஓகே.. அப்ப நான் இந்தக் காட்சியில என்ன பண்ணனும்”
*
கேட்டவர் நடிகர் திலகம்..
*
“நீங்க ஒண்ணுமே பண்ணக்கூடாது அடக்கி வாசிக்கணும்..அப்பத் தான் அந்தம்மாவோட பாத்திரம், அப்புறம் இந்தக் காட்சி எடுபடும்..” சொன்னவர் டைரக்டர்..
*
ந.தி. மறுத்து எதுவும் பேசவில்லை.. நீங்கள் சொன்னால் சரி..அப்படியே செய்கிறேன்..
*
அப்படியே நடித்ததில் அந்தக் காட்சியும் பேசப்பட்டது.. வித்யாசமாய் ந.தியும் நடித்திருந்தார் எனவும் சொல்லப் பட்டது..(ஒய்.ஜி மகேந்திரனின் நான் சுவாசிக்கும் சிவாஜி கட்டுரையிலிருந்து)
*
அந்த டைரக்டர்.. எல்.வி பிரசாத்.. ராஜபார்வையில் தாத்தாவாக நடித்தவர்.. முன் சில படங்களில் நடித்திருந்தாலும் ரா.பா வில் தான் எனக்கு இவரைத்தெரியும்..
*
படம்.. இருவர் உள்ளம்..
*
சில மாதங்களுக்கு முன்னால் ஒரு நண்பர் என்னிடம் தொலைபேசிய போது- இருவர் உள்ளம் பற்றி எழுதலாம் என ஆசை என்ற போது –அவர் உணர்ச்சி வசப்பட்டார்..ஓ.. அந்தப் படம் எனக்கு ரொம்பப் பிடிக்குமே..என.அப்படிப் பலரைக் கவர்ந்த படம் அது
*
படத்தின் மற்ற டீடெய்ல்ஸ் பற்றி வேண்டுமென்றால் பக்கத்து வீட்டிற்குச் சென்று ராகவேந்திரா சாரின் கட்டுரை படிக்கலாம் ( நற நற..) ( நான் எழுதறதுக்கு முந்தி எழுதிட்டார்..)
*
ஹாஸ்யம், நடிப்பு, இனிமை நிறைந்த பாடல்கள், பரபரப்பான வசனம்(.கலைஞர் மு.க) , தொய்வில்லாத திரைக்கதை என்று இருக்கும் படத்தில் ந.தியின் சகோதரராக எம்.ஆர்.ராதா… கடைசியில் அவரது பழைய தோழியைக் கொல்பவராக டி.ஆர். ராமச்சந்திரன்..
*
அழகு சிரிக்கின்றது, நதி எங்கே போகிறது, பறவைகள் பலவிதம் என என்றும் பசுமையான கானங்களின் மத்தியில் ஒரு அழுகை பாடல் – அதுவும் ஸோ ஸ்வீட் தான்..
*
ஆசைப்பட்டுக் காதலித்து சந்தர்ப்ப சூழ் நிலையால் திருமணமும் புரிந்த அழகிய நங்கை வெறு வெறு என வெறுக்க என்ன செய்வது என்ற இயலாமைத்தவிப்பைத் தன்னுள் அடக்கி, அவளுக்குப் பிரியமானவனாக மாறுவதற்காகப்பாடு பட்டுக்கொண்டிருந்தால்…
*
என்ன ஆகிறது..ஒவ்வொரு முறையும் ஒரு தடங்கல்.. ந.தியால் என்ன செய்வது என்று புரியவில்லை..அப்படியும் ஒரு சந்தர்ப்பத்தில் தான் விரும்பிய மங்கை (சர்ரோஜாதேவி) தன்னைப் புரிந்து கொண்டு விட்டாள் என்பது தெரியாமல் மனம் நொந்து பாடும் பாடல் தான் அது..
*
கண்களில் உறைந்த கண்ணீர், உணர்வுகளில் துடிக்கும் சோகம், நன்றாகப் பாடிய பின்னணி டி.எம்.எஸ்ஸிற்கு ஏற்ப வாயசைப்பு என அசத்தியிருப்பார் ந.தி.. பாடல் ஏன் அழுதாய் ஏன் அழுதாய் என்னுயிரே ஏன் அழுதாய் நான் அழுதுஓய்ந்ததற்கு நன்றி சொல்லவோ..
*
அந்தப் பாடலில் உடல் நிலை சரியில்லாமல் அவரன்பை உணர்ந்துவிட்டதைச் சொல்லத் துடிக்கும் கன்னடத்துப் பைங்கிளியாக சரோஜாதேவியும் நன்கு செய்திருப்பார்..
*
எல்லாப் பாடல்களுமே அருமை.எம்.ஆர்.ராதா வித்யாசமான நகைச்சுவை.. ஆறு பிறந்தது போதுமென்று நான் ஆறு குளமெல்லாம்மூழ்கி வந்தேன் காசி ராமேஸ்வரம் சென்று வந்தேன் என அவர் பாட டி.பி. முத்து லட்சுமி – போதாது அய்யா போதாது உயிர்போனாலும் ஆசை போகாது எனப் பாட – பக்கென சிரிப்பு வரும்..
*
படம் பார்த்தது ரீ.ரன்னின் போது தான்.. பரமேஸ்வரி தியேட்டர்..
*
லஷ்மி என்ற பெயரில் டாக்டர் திரிபுர சுந்தரி என்பவர் எழுதிய பெண் மனம் நாவல் தான்.. படித்ததில்லை.. ஆனால் அவர் எழுதிய வேறு சில நாவல்கள் படித்திருக்கிறேன். மிதிலா விலாஸ், அத்தை, நல்லதோர் வீணை…கதவு திறந்தால்…. பெண்களைக் கவரும் வண்ணம் எழுதுவதில் வல்ல எழுத்தாளர் அவர்..அதில் இந்த அத்தை என்ற நாவல் –எழுதுவதற்கு முன்னால் 22 வருடங்கள் தென்னாப்பிரிக்காவில் வேலை பார்த்தார்..பின்பு தான் அவ்வளவு இடைவெளி எழுத்தில் விட்டதற்கப்புறம் எழுத வந்து வெற்றி கரமாய்த் தொடர்ந்தவர் அவர்..
*
இருவர் உள்ளம் – ந.தியைப் பற்றிச் சொல்லவேண்டுமானால் – தோற்றம், கண்கள், நடை, நடிப்பு (எந்தவித) – என எல்லாவிதத்திலும் துள்ளிடும் இளமை ஒவ்வொரு ஃப்ரேமிலும்..
*
இன்னும் எழுதலாம்..ஆனால் கோபால் ராகவேந்திரர் முரளி போன்றோரை விட நான் என்ன எழுதிவிட முடியும் எனில் விட்டு விடுகிறேன்..
*
அடுத்த சிரிப்புக்கான இந்தப் படம் பார்த்தால் படத்தினுள் சோகம் பொதிந்து இருக்கும்.. இருப்பினும் ந.தியின் சிரிப்பு ஒரு இடத்தில் ரொம்பப் பிடிக்கும்..
*
ஹீரோயின் சப்ஜெக்ட் தான்.. ந.தியின் அற்புத நடிப்பு உண்டு படத்தில்.. துணைக்கு வேறு நடிக நடிகையரும் உண்டு.. ந.தி, ஹீரோயின், மற்ற ஆர்ட்டிஸ்ட் எல்லாரும் நன்கு நடித்திருப்பார்கள்.. குறை எதுவும் வைக்கக் கூடாதென்று டைரக்டர் படத்தில் ஜடப்பொருளான ஒரு டார்ச்சையும் நன்கு வேலை வாங்கியிருப்பார்..அதுவும் நன்கு நடித்திருக்கும்..!
*
இனி அடுத்த போஸ்டில் சந்திக்கிறேனே என்று சொல்வதற்குமுன்..
*
முரளி ராகவேந்திரர் ரவி, ராகுல் கோபால் எல்லாருக்கும் என் மேல் ஒரு வருத்தம் உண்டு..அதுவும் ஒரு விஷயத்தைப் பற்றிக் கேட்கவே கேட்காதவன் நான் என்று.. எனில் அவர்களின் வருத்தத்தைப் போக்க நானும் கேட்டு
விடுகிறேன்..
*
(கல்நாயக்- யார் சார் நீங்க?! ( எஸ்ஸ்ஸ்கேப்..)
*
தொடரும்..