-
குறும்படம் நிறைவுற்றபிறகு, சதாகர் தனது நண்பரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பயணச் சீட்டிற்கு ஏற்பாடு செய்தார். இரவு 10.30 மணிக்குப் புறப்படும் மலைக் கோட்டை விரைவு வண்டியில் நால்வருக்கும் படுக்கை வசதியுடன் கூடிய இருக்கைகள் கிடைத்தன. இரவுதான் புறப்பட வேண்டும், இன்னும் பல மணி நேரமிருக்கிறது, எங்கு செல்லலாம் என்ற பேச்சு வந்தபொழுது, சுதாகர் உடனே கூறினார், எம்.ஜி.ஆர், அவர்களின் நினைவு இல்லம் இதே தி.நகரில்தான் இருக்கிறது அங்கு செல்வோம்.
தியாகராய நகர், ஆற்காடு முதலித் தெருவில் அமைந்துள்ளது எம்.ஜி.ஆர் நினைவு இல்லம். எம்.ஜி.ஆர் அலுவலகம் இருந்த வீடு இது. இக்குறுகிய தெருவிலா எம்.ஜி.ஆர், அவர்களின் அலுவலகம் இருந்தது? நம்புவதற்குச் சிறிது கடினமாகத்தான் இருக்கிறது.
வீட்டின் முன்புறம் டாக்டர் எம்.ஜி.ஆர் நினைவு இல்லம் எனும் அரைவட்ட வடிவிலான பெயர்ப் பலகை எங்களை வரவேற்றது. வீட்டின் வலது புறம், வீட்டின் சுற்றுச் சுவரை ஒட்டி, ஒரு அழகிய சிறிய மண்டபத்தில் எம்.ஜி.ஆர் அவர்களின் மார்பளவு சிலை, எங்களைப் பார்த்து புன்முறுவல் பூக்கிறது.
வீட்டினுள் நுழைகிறோம். TMX 4777 என்ற எண்ணுள்ள எம்.ஜி.ஆர் பயன்படுத்திய பச்சை நிற அம்பாசிடர் கார், கூடத்தின் நடுவே கம்பீரமாய் தலை நிமிர்ந்து நிற்கிறது. எத்துனையோ வெளிநாட்டுக் கார்கள், இந்திய மண்ணில் தடம் பதித்த பிறகும், கடைசி வரை எம்.ஜி.ஆர் பயன்படுத்தியது இந்த அம்பாசிடர் காரைத்தான்.
அறை முழுக்க எம்.ஜி.ஆர் அவர்களுக்கு வழங்கப்பட்ட பரிசுப் பொருட்கள், கேடயங்கள் நிரம்பி வழிந்தன. மெதுவாக மாடிப் படியேறினோம். மாடியில் விசாலமான அறையின் நடுவே எம்.ஜி.ஆர் பயன்படுத்திய உடற்பயிற்சி சாதனங்கள். மரத்தினால் ஆன கரலாக்கட்டை என்னும் உடற்பயிற்சிக் கருவிகள் ஐந்து இருந்தன.அவற்றின் உயரத்தினையும், பருமனையும் பார்த்தால் இரண்டு கைகளால் தூக்குவதற்கே கடினமாக இருக்கும் என்று தோன்றியது. ஆனால் ஒரே கையால் தூக்கி தலையைச் சுற்றி சுற்றி பயிற்சி செய்ய வேண்டிய உடற்பயிற்சி சாதனமாகும் அது. எம்.ஜி.ஆர் அவர்களின் கரம் எவ்வளவு வலுவானதாக இருந்திருக்கும் என்பது கரலாக் கட்டையை பார்த்த மாத்திரத்திலேயே புரிந்தது. எம்.ஜி.ஆர் அணிந்த உடைகள், தொப்பி, கண்ணாடி, கடிகாரம் முதலிய பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. அறையின் ஒரு ஓரத்தில் ஆறடி உயர கண்ணாடிப் பெட்டியில் கம்பீரமாய் ஒரு சிங்கம். என்ன சிங்கமா?, ஆம் சிங்கம்தான். எம்.ஜி.ஆர் நினைவு இல்லத்திற்கும், இந்த சிங்கத்திற்கும் என்ன தொடர்பு என்ற கேள்வி எழுகிறதல்லவா? கேள்வி எழுவது இயற்கைதான். இது எம்.ஜி.ஆர் வளர்த்த சிங்கம்.
வீட்டில் நாய் வளர்ப்பார்கள், ஆடு, மாடு, கோழி வளர்ப்பார்கள். ஆனால் எம்.ஜி.ஆர் வளர்த்ததோ சிங்கங்கள். ஒன்றல்ல இரண்டு சிங்கக் குட்டிகளை எம்.ஜி.ஆர் வளர்த்தார். சென்னை ராயப்பேட்டை லாயிட்ஸ் ரோடில் வசித்தபோதும், பின்னர் ராமாவரத் தோட்டத்தில் வசித்தபோதும் வளர்த்தார். ராஜா, ராணி என்று இரண்டு சிங்கங்கள். வீட்டிலேயே கூண்டு இருக்கும். அதை கவனிக்க ஆட்கள் இருப்பார்கள். இவ்விரு சிங்கங்களையும் எம்.ஜி.ஆர் மிகவும் பாசமாக வளர்த்தார். சில சமயம் இச்சிங்கங்கள் எம்.ஜி.ஆரின் கையை நக்கிக் கொடுக்கும்.
அடிமைப் பெண் திரைப்படத்தில் நடித்தது இந்த ராஜா என்கிற சிங்கம்தான். ராணி அதற்கு முன்னரே இறந்து விட்டது. அடிமைப் பெண்ணில் சிங்கம் தொடர்பான காட்சிகளை படமாக்கி முடித்ததும், சென்னை மிருகக் காட்சி சாலைக்கு இந்த சிங்கத்தை நன்கொடையாக வழங்கினார் எம்.ஜி.ஆர். அங்கு பல ஆண்டுகள் காலத்தை கழித்த ராஜா,வயது முதிர்வின் காரணமாக இறந்தபின், தகுந்த அனுமதியோடு, ராஜாவின் உடலைப் பெற்று, அச்சிங்கம் உயிரோடு இருப்பது போலவே பாடம் செய்து, ராமாவரம் தோட்ட வீட்டில் வைத்திருந்தார் எம்.ஜி.ஆரின் மறைவிற்குப் பிறகு நினைவு இல்லத்திற்கு இச்சிங்கம் மாற்றப்பட்டது.
அருகில் இருந்த மற்றோர் அறைக்குச் சென்றோம். புத்தகங்கள் நிரம்பியிருந்தன. ஒரு நாற்காலியில் மாவுக்கட்டு. 1967 ஆம் ஆண்டு நடிகவேள் எம்.ஆர்.ராதா அவர்கள் எம்.ஜி.ஆர் அவர்களைத் துப்பாக்கியால் சுட்டதை நாடறியும். அப்போது கழுத்தில் பாய்ந்த குண்டு அறுவைசி கிச்சையின் மூலம் அகற்ற பட்டபோது, எம்.ஜி.ஆருக்கு கழுத்தில் மாவுக் கட்ட போட்டார்கள் அல்லவா, அந்த மாவுக்கட்டு இன்றளவும் பத்திரமாய் பாதுகாக்கப்பட்டு வருகின்றது. இதோ அந்த மாவுக்கட்டு. வியப்புடன் அந்த மாவுக்கட்டையே சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்தோம்.
அடுத்த அறை எம்.ஜி.ஆர் பார்வையாளர்களைச் சந்திக்கும் அறை. மூலையில் ஒரு தொலைக் காட்சிப் பெட்டி. அதற்கு அடுத்த அறை எம்.ஜி.ஆர் அவர்களின் அலுவலக அறையாகும்.
மீண்டும் தரைத்தளத்திற்கு வந்தோம். மாடிப் படியினை ஒட்டி இருந்த அறைக்குள் நுழைந்தோம். எம்.ஜி.ஆர் அவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து பிரிந்து, 1972 இல் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை தொடங்கியபோது, அ.தி.மு.க வில் இணைந்த முதல் பன்னிரண்டு பேர் கையொப்பமிட்ட உறுப்பினர் படிவம் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.
அடுத்த அறையில் எம்.ஜி.ஆர் நடித்த படங்களின் பெயர் பட்டியலும், ஒவ்வொரு படத்தில் இருந்து, ஒரு புகைப்படமும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. முதல் படம் சதிலீலாவதி, நடித்த ஆண்டு 1935. எம்.ஜி.ஆர் நடித்த கடைசி படம் மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன். ஆண்டு 1978. மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் திரையிடப்பட்ட 1978 ஆம் ஆண்டு முதல் 1987 இல் அமரத்துவம் எய்தும் வரை எம்.ஜி.ஆர் அவர்களே தமிழக முதல்வர்.
எம்.ஜி.ஆர் அவர்களின் நினைவு இல்லத்தில் நுழைந்த நிமிடத்தில் இருந்தே, கரந்தையும் தமிழ்ப் பல்கலைக் கழகமும் என் மனக் கண்ணில் மாறி மாறி சுழன்று கொண்டேயிருந்தன. கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் முதற்றலைவராய் முப்பதாண்டுகள் ஒப்பிலாப் பணியாற்றிய உமாமகேசுவரனாரின் உணர்வுக்கு உயிர் கொடுத்தவரல்லவா எம்.ஜி.ஆர்.
உமாமகேசுவரனார் அவர்களுக்கும் எம்.ஜி.ஆருக்கும் என்ன தொடர்பு என்ற குழப்பம் வரலாம். உண்மையில் உமாமகேசுவரனாரின் மிகப் பெரிய கனவுகளில் ஒன்றினை நிறைவேற்றிய பெருமைக்கு உரியவர் எம்.ஜி.ஆர்.
தமிழ் மொழிக்கு எனத் தனியே ஓர் தமிழ்ப் பல்கலைக் கழகம் வேண்டும் என்று 1921 ஆம் ஆண்டிலேயே, முதன் முதலாகத் தீர்மானம் நிறைவேற்றியவர் உமாமகேசுவரனார் அவர்களாவார். சரியாக 60 அண்டுகள் கழித்து, 1981 இல் தமிழ்ப் பல்கலைக் கழகத்தை நிறுவி, உமாமகேசுவரனாரின் கனவினை நிறைவேற்றியவர் எம்.ஜி.ஆர்.
உமாமகேசுவரனார் கூட, தமிழ்ப் பல்கலைக் கழகத்தைத் திருச்சியில் நிறுவிட வேண்டும் என்றுதான் தீர்மானம் இயற்றினார். ஆனால் உமாமகேசுவரனார் வாழ்ந்த தஞ்சையிலேயே, தமிழ்ப் பல்கலைக் கழகத்தை நிறுவியவர் எம்.ஜி.ஆர். அதுமட்டுமா, தமிழ்ப் பல்கலைக் கழகப் பேரவைக்கு, கரந்தைத் தமிழ்ச் சங்க உறுப்பினர்களில் இருந்து ஒருவரைத் தேர்வு செய்து அனுப்பும் உரிமையினையும் வழங்கிய வள்ளல் அல்லவா.
எம்.ஜி.ஆர் அவர்களின் வள்ளல் தன்மையினையும், பெருந்தன்மையினையும் நாடே அறியும். தமிழுக்காக ஒர் தமிழ்ப் பல்கலைக் கழகத்தை உருவாக்கியதோடு, அப்பல்கலைக் கழகத்திற்கு இடம் ஒதுக்கிய நிகழ்விலும், தான் வள்ளல்தான் என்பதை நிரூபித்தவர் எம்.ஜி.ஆர்.
தமிழ்ப் பல்கலைக் கழகத்தைத் தஞ்சையில் நிறுவுவது என்று முடிவு செய்த அன்றைய தமிழக முதல்வர் மாண்புமிகு எம்.ஜி,ஆர் அவர்கள், அப்பணி தொடர்பாக தமிழறிஞர்களின் கூட்டம் ஒன்றினை கூட்டினார். தமிழ்ப் பல்கலைக் கழகம் அமைப்பதற்கு எவ்வளவு இடம் தேவை? என தமிழறிஞர்களிடம் வினவினார். ஒரு தமிழறிஞர் தயங்கியவாறே 50 ஏக்கர் ஒதுக்கினால் நன்றாக இருக்கும் எனக் கூறினார். மற்றொருவார் 100 ஏக்கர் ஒதுக்கினால் மேலும் சிறப்பாக இருக்கும் என்று கூறினார். எம்.ஜி.ஆர் புன்னகைத்தார். தமிழுக்கு என்று ஒரு பல்கலைக் கழகத்தைத் தனியே அமைக்கவிருக்கின்றோம். இப்பல்கலைக் கழகம் சீரும் சிறப்புமாகச் செயல்பட வேண்டும். எனவே இப் பல்கலைக் கழகத்திற்கு 1000 ஏக்கர் இடத்தினை ஒதுக்குகிறேன் என்று கூறி தமிழறிஞர்களை வியப்பில் ஆழ்த்தினார். கூறியபடியே 1000 ஏக்கர் நிலத்தைனை ஒதுக்கி தமிழ்ப் பல்கலைக் கழகத்தை நிறுவிய பெருந்தகை எம்.ஜி.ஆர்.
தமிழ்ப் பல்கலைக் கழகத்தை எண்ணியவுடன் வேறொரு நினையும், நெஞ்சில் முள்ளாய் தைக்கத் தொடங்கியது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், தொழில் நுட்ப வசதியில்லாத காலத்தில், தஞ்சைப் பெரிய கோவில் என்னும் அதிஅற்புத சாதனையினை நிகழ்த்திக் காட்டிய மாமன்னன் ராஜராஜ சோழனின் சிலைக்கு, எப்படி பெரிய கோவிலின் உள்ளே இடம் கிடைக்கவில்லையோ, அதைப் போலவே, தமிழ்ப் பல்கலைக் கழகத்தை நிறுவிய, எம்.ஜி.ஆர் அவர்களின் புகைப்படத்திற்கு, தமிழ்ப் பல்கலைக்கழக வளாகத்திற்குள், ஓர் சிறிய இடம் கூட கிடைக்காமற் போனதுதான் கொடுமையிலும் கொடுமை.
தமிழ்ப் பல்கலைக் கழகம் தொடங்கப் பெற்று இருபது ஆண்டுகளுக்கு மேல் கடந்த நிலையில், 2004 ஆம் ஆண்டில், கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில், தமிழ்ப் பல்கலைக் கழக ஆட்சிக் குழு உறுப்பினராக இருந்த புலவர் மீனா.இராமதாசு அவர்கள், எம்.ஜி.ஆர் அவர்களின் புகைப்படத்தினை, தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் மாட்ட வேண்டும் என்ற தீர்மானத்தினையே கொண்டு வந்தார். தீர்மானம் நிறைவேறியது. ஆனால் புகைப்படம் மாட்டப்பெற்றதா என்று தெரியவில்லை. எம்.ஜி.ஆர் அவர்களின் படம் மாட்டப்பெற்றிருக்குமானால் மகிழ்வுடன் வாழ்த்தி வரவேற்போம்.
நூறு முறையாவது சென்னைக்குச் சென்றிருப்போம். ஆனால் இதுவரை எந்தவொரு சென்னைப் பயணத்திலும் கிடைக்காத ஓர் நிறைவினை, மகிழ்வினை இப்பயணத்தில் உணர முடிந்தது.
நண்பர் சுதாகர் அவர்களுக்கு நன்றி கூறி விடைபெற்றோம்.
courtesy - karanthai jaikumar.
-
When Mrs. Gandhi returned to power as the PM in 1980, she disassociated herself from Thalaivar, dismissed the AIADMK Government in Tamil Nadu and imposed President's rule in the state in 1980.
If Mrs. Gandhi has any visions of wresting the state from under Thalaivar's hands she was sadly mistaken. After President's rule was imposed, a few police officers went to Ramavaram residence to remove the wireless instruments and sirens from the car. When they were about th remove the AIADMK emblem from the car Thalaivar told them calmly, "Don't. I'll be back soon". When the state went to the polls again in June 1980, Thalaivar returned to power once again.
கோட்டையிலே நமது கொடி பறந்திட வேண்டும்
கொள்கை வீரர் தியாகங்களை ஏற்றிட வேண்டும்
புரட்சியிலே சரித்திரத்தை மாற்றிட வேண்டும்
பொதுவுடமை சமுதாயம் மலர்ந்திட வேண்டும்
-
நாங்கள் என்ன தவறு செய்தோம்?
தலைவர் ஆட்சியில் நடந்த சாதனைகளை பட்டியலிட்டு "இது தவறா" "இது தவறா" என்று கேட்டது மக்கள் மததியில் நல்ல அதிர்வுகளை என்படுத்தியது. தமிழ் மக்களே நாடாளுமன்றத் தேர்வில் நீங்கள் அளித்த தீர்ப்பு தவறு என்றல், அதை இப்போது திருத்தி எழுதுங்கள்.
முடிவு: தீ.மு.க 38 காங்கிரஸ் 30 முச்லிம் லீகுக்கு ஒரு இடம்!
ஆதிமுக வெற்றிக்கு தலைவர் மீது மக்கள் கொண்டுள்ள அன்பிற்கும், மதிர்ப்புக்கும் அடையாளமாகும். அவரது நாணயமான, நேர்மையான, லஞ்ச உழலற்ற ஆட்சிக்கு மக்கள் வழங்கிய நர்சான்றிதழ். மக்கள் திலகத்தை பற்றி "எங்களுக்கு தெரியும்" என்று தமிழ் மக்கள் கூறுவது போல அமைந்தது தேர்தல் முடிவு. எதிர்கட்சிகள் மற்றும் அவர்களது அபாண்டமான லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுக்கள் தோல்வி அடைந்தது.
இருந்திடலாம் நாட்டில் பல வண்ணக்கொடி
எத்தனையோ கட்சிகளின் எண்ணப்படி
பறக்க வேண்டும் எங்கும் ஒரே சின்னக் கொடி......
http://i160.photobucket.com/albums/t...psrl0oaysq.jpg
-
-
எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கிய பிறகு 1977-ல் முதல்முறையாக மக்களவை தேர்தலில் போட்டியிட்டபோதும், கூட்டணி அமைத்தே களம் கண்டார். காங்கிரஸ் கட்சியுடன் அணி அமைத்து, 20 இடங்களில் போட்டியிட்டு 18 இடங்களில் அதிமுக வென்றது.
அதன்பிறகு, 1980-ல் ஜனதா கட்சியுடன் சேர்ந்து போட்டியிட்ட அதிமுக 2 இடங்களை மட்டுமே பெற்று தோல்வியைத் தழுவியது. அந்தத் தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி 37 இடங்களில் வெற்றி பெற்றது. அதன்பிறகு அதிமுகவும் திமுகவும் மாறி மாறி கூட்டணி அமைத்தே மக்களவைத் தேர்தலை சந்தித்து வந்தன.
முதல்முறையாக தனித்துப் போட்டி
திராவிட கட்சிகளின் தேர்தல் வரலாற்றிலேயே முதல்முறையாக இந்த மக்களவைத் தேர்தலில்தான் அதிமுக தன் பலத்தை மட்டுமே நம்பி தனித்துப் போட்டியிட்டது. இதில், 37 இடங்களில் அமோக வெற்றி பெற்றுள்ளது. மக்களவைத் தேர்தல் வரலாற்றில் தமிழகத்தில் தனித்துப் போட்டியிட்டு அதிக இடங்களில் வெற்றி பெற்ற திரா விடக் கட்சி என்ற பெருமையை அதிமுக பெற்று சாதனை படைத் துள்ளது. அதுவும், நாடு முழுவதும் வீசிய மோடி அலையைக் கடந்து அதிமுக வெற்றி பெற்றிருப்பது வரலாற்றுச் சாதனையாகும்
-
தேர்தலில் சாதனை படைத்த எம்.ஜி.ஆர்
வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும்- அதை
வாங்கித் தந்த பெருமை எல்லாம் உன்னைச் சேரும்
என்று தன் ரசிகர்களுக்கும், தொண்டர்களுக்கும் தனது வெற்றியைக் காணிக்கையாக்கிய எம்ஜிஆரின் தேர்தல் வரலாறு சுவையானது.
முதன்முதலாக அவர் மக்களை கடந்த 1962ல் திமுக கட்சியின் சார்பில் சந்தித்து வாக்கு சேகரித்தார். பின்னர் திமுக தலைவர் அண்ணா அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க 1967ல் பரங்கிமலைத் தொகுதியில் வேட்பாளர் ஆனார்.
அந்த ஆண்டு அக்டோபர் 12ம் தேதி அன்று மாலை ஐந்தரை மணியளவில் பிரச்சாரத்திற்குக் கிளம்பிகொண்டிருந்த எம்ஜிஆரைச் சந்தித்த எம்.ஆர். ராதா அவரைத் துப்பாக்கியால் சுட்டார். கழுத்தில் கட்டுப்போட்ட எம்ஜிஆரின் சுவரொட்டிகள் திமுகவுக்கு பெரிய வெற்றியைப் பெற்றுத் தந்தது.
1972ம் ஆண்டு திமுகவை விட்டு வெளியேற்றப்பட்ட எம்ஜிஆர் தனிக்கட்சி தொடங்கி ஆறே மாதத்தில் திண்டுக்கல் இடைத்தேர்தல் வந்தது. அங்கு நிறுத்தப்பட்ட மாயத்தேவர் அமோக வெற்றிபெற்றார்.
அதிமுகவை எதிர்த்து நின்று நான்கு முக்கிய கட்சிகளும் டெபாசிட்டை இழந்தன. எம்ஜிஆர் மத்திய அரசோடு இணக்கமாக இருக்க விரும்பி இந்திரா காங்கிரசுடன் கூட்டுச்சேரும்போது நாடாளுமன்றத்துக்கு 2:1 என்று தொகுதிப் பங்கீடு செய்வார்.
இதுவே சட்டமன்றத்தேர்தல் என்றால் தமக்கு இரண்டு பங்கும் கூட்டணிக் கட்சிக்கு ஒரு பங்கும் பிரித்துக்கொள்வார். தனது வெற்றி பெரும்பான்மையான வெற்றியாக அமைய வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார்.
கிறிஸ்தவ மதம் வலுவாக இருக்கும் சாத்தான் குளத்திலும், இசுலாமியர் நின்றால் மட்டுமே வெற்றிபெற முடியும் என்று கருதப்படும் வாணியம்பாடியிலும் இந்து வேட்பாளரை நிறுத்தி தனது செல்வாக்கால் வெற்றிப்பெறச் செய்வார். 1985ல் அவர் அமெரிக்காவில் சிகிச்சைபெற்று வந்த நிலையிலும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி வாகை சூடினார்.
தொடர்ந்து மூன்றுமுறை சட்டசபை தேர்தலைச் சந்தித்து வெற்றி பெற்று தன் ஆயுட்காலம் வரை முதலமைச்சராக இருந்தவர் இவர் ஒருவரேயாவார்.
-
தமிழ்த் திரையுலகத்தில் தனக்கென தனி பாதையை வகுத்துக் கொண்டு, சினிமாவை கண்ணும் கருத்துமாக நேசிக்கவும் செய்து, சாதாரண மக்களுக்கான படத்தையும் கொடுத்து அதன் பின் அரசியலிலும் வெற்றிக் கொடி நாட்டி, எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாய் விளங்கியவர் எம்ஜிஆர்.
சிறிய கதாபாத்திரங்களில் நடித்து கதாநாயகனாய் உயர்ந்து பல ஆண்டுகள் தமிழ் சினிமாவில் தனி சாம்ராஜ்யத்தை உருவாக்கியவர். ஒவ்வொரு படமும் ரசிகர்களை சரியாகச் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில் அதிக கவனம் செலுத்தி படத்தை மட்டும் ரசிக்காமல் அதில் இடம் பெறும் பாடல்களும் ரசிகர்களைச் சென்றடையும் விதத்தில் படங்களைக் கொடுத்தவர் எம்ஜிஆர்.
அவருக்காக மட்டும் வாழாமல் அடுத்தவர்களுக்காகவும் வாழ்ந்ததால்தான் அவர் இன்றளவும், “மக்கள் திலகம், பொன்மனச் செம்மல், புரட்சித் தலைவர், ஏழைகளின் பங்காளன்” என அழைக்கப்படுகிறார்.
courtesy - dinamalar
-
திரையில் பாத்திரம் இல்லை. கதை இல்லை. அங்கே இருப்பவர் எம்.ஜி.ஆர். மட்டுமே. வெளியில் இருக்கும் எம்.ஜி.ஆரும் அவரும் ஒருவரே. இதுதான் பெருவாரியான ரசிகர்களின் மனதில் படிந்த பிம்பம். திரைப் படிமம் நிஜப் படிமமாக மாறும் உருமாற்றம் இது. இந்த உருமாற்றத்தில் பெற்ற வெற்றிதான் எம்.ஜி.ஆரைச் சாகும்வரை தமிழகத்தின் முதல்வராக ஆக்கியது.
திரைப்படம் என்பது பல்வேறு கலைகளைத் தன்னுள் அடக்கிய பன்முகப் பரிமாணங்கள் கொண்ட கலை. பார்வையாளர்களின் உளவியலை வடிவமைக்கக்கூடிய அதன் தன்மையை எம்.ஜி.ஆரைப் போலச் சிறப்பாகப் புரிந்துகொண்டவரோ அதை வெற்றிகரமாகப் பயன்படுத்தியவரோ உலகில் இன்னொருவர் இல்லை. இதுவே திரையுலகில் எம்.ஜி.ஆரின் ஆகப் பெரிய சாதனை.
courtesy - the hindu tamil
-
புத்தன் இயேசு காந்தி பிறந்தது பூமியில் எதற்காக
தோழா ஏழை நமக்காக
கங்கை யமுனை காவிரி வைகை ஓடுவது எதற்காக
நாளும் உழைத்து தாகம் எடுத்த தோழர்கள் நமக்காக
கேள்விக்குறி போல் முதுகு வளைந்து உழைப்பது எதற்காக
மானம் ஒன்றே பெரிதென எண்ணி பிழைக்கும் நமக்காக
(புத்தன் இயேசு )
நிழல் வேண்டும்போது மரம் ஒன்று உண்டு
பகை வந்தபோது துணை ஒன்று உண்டு
இருள் வந்தபோது விளக்கொன்று உண்டு
எதிர்காலம் ஒன்று எல்லோர்க்கும் உண்டு
உண்மை என்பது என்றும் உள்ளது
தெய்வத்தின் மொழியாகும்
நன்மை என்பது நாளை வருவது நம்பிக்கை ஒளியாகும்
(புத்தன் இயேசு )
பொருள் கொண்ட பேர்கள் மனம் கொண்டதில்லை
தரும் கைகள் தேடி பொருள் வந்ததில்லை
மனம் என்ற கோயில் திறக்கின்ற நேரம்
அழைக்காமல் அங்கே தெய்வம் வந்து சேரும்
அழுதவர் சிரித்ததும் சிரிப்பவர் அழுததும்
விதி வழி வந்ததில்லை
ஒருவருக்கென்றே உள்ளதை எல்லாம் இறைவன் தந்ததில்லை
(புத்தன் இயேசு )
--
நமக்கு ஏற்பட்ட நிறைய அவமானப்படுத்தலுக்கு நமது வெற்றிகளே காரணமாக இருக்கும். வெற்றிகளைப் பொறுக்க முடியாதவர்களே நம்மை வெகுவேகமாக அவமானப்படுத்த முயற்சிப்பது தெரியவரும். -பாலகுமாரன்
-
தமிழக முதல்-அமைச்சராக 2-ம் முறையாக எம்.ஜி.ஆர். பதவி ஏற்றார்
17 மந்திரிகள் கொண்ட மந்திரிசபையில் தமிழக முதல்-அமைச்சராக இரண்டாவது முறையாக எம்.ஜி.ஆர். பதவி ஏற்றார். பதவி ஏற்பு விழா, சென்னை கலைவாணர் அரங்கில் 1980 ஜுன் 9-ந்தேதி பகல் 12 மணிக்கு நடைபெற்றது.
மேடை மீது காந்தி, ராஜாஜி, காமராஜர், அம்பேத்கார், 'காயிதே மில்லத்' இஸ்மாயில் சாகிப், முத்துராமலிங்க தேவர் ஆகியோருடைய பெரிய படங்கள் வைக்கப்பட்டு இருந்தன. நடுவில் அண்ணாவிடம் எம்.ஜி.ஆர். ஆசி பெறுவது போலவும், ஈ.வெ.ரா.பெரியார் வாழ்த்துவது போலவும் பெரிய படம் இருந்தது.
மண்டபத்துக்குள் 12.23 மணிக்கு கவர்னரும், எம்.ஜி.ஆரும் உள்ளே நுழைந்தார்கள். உடனே கூடியிருந்த பொதுமக்கள் 'எம்.ஜி.ஆர். வாழ்க' என்று குரல் எழுப்பினார்கள். பதவி ஏற்பு 'நீராரும் கடல் உடுத்த' என்ற தமிழ் வணக்க பாடலுடன் விழா தொடங்கியது.
முதல்-அமைச்சராக பதவியேற்க வரும்படி எம்.ஜி.ஆரை தலைமைச் செயலாளர் கார்த்திகேயன் அழைத்தார். எம்.ஜி.ஆர். எழுந்து, மேடையில் கவர்னர் பட்வாரி அருகில் போய் நின்றார். உறுதி மொழியையும், ரகசிய காப்பு பிரமாணத்தையும் கவர்னர் பட்வாரி ஆங்கிலத்தில் வாசிக்க எம்.ஜி.ஆர். அதன் தமிழ் வாசகத்தை திரும்பிச் சொல்லி உறுதிமொழி எடுத்துக்கொண்டார்.
பதவி ஏற்றதும், எம்.ஜி.ஆரும், கவர்னரும் கை குலுக்கிக்கொண்டனர். பின்னர் கீழ்க்கண்ட அமைச்சர்கள் பதவி ஏற்றனர்.
1. நெடுஞ்செழியன் (நிதி) 2. பண்ருட்டி ராமச்சந்திரன் (மின்சாரம்) 3. கே.ஏ.கிருஷ்ணசாமி (கிராமத்தொழில்) 4. எஸ்.டி.சோமசுந்தரம் (வருவாய்த்துறை) 5. ஆர்.எம்.வீரப்பன் (தகவல்) 6. அரங்கநாயகம் (கல்வி) 7. காளிமுத்து (விவசாயம்) 8. பொன்னையன் (சட்டம்) 9. குழந்தைவேலு (ஊராட்சி) 10. ராகவானந்தம் (தொழிலாளர் நலம்) 11. டாக்டர் ஹண்டே (சுகாதாரம்) 12. ராஜா முகமது (கூட்டுறவு) 13. எஸ்.முத்துசாமி (போக்குவரத்து) 14. திருநாவுக்கரசு (பெருந்தொழில்கள்) 15. எஸ்.என்.ராஜேந்திரன் (கைத்தறி) 16. விஜயசாரதி (அரிஜன நலம்) 17. கோமதி (சமூக நலம்)
ஒவ்வொரு அமைச்சரும் பதவியேற்றதும் எம்.ஜிஆரிடம் சென்று வணங்கி, ஆசி பெற்றனர். அமைச்சர் குழந்தைவேலு, முத்துசாமி, கோமதி ஆகியோர் எம்.ஜி.ஆர். காலை தொட்டு வணங்கினார்கள். தேசிய கீதத்துடன் விழா பகல் 1.32 மணிக்கு முடிந்தது.
உடனே எம்.ஜி.ஆர். மேடையில் இருந்து இறங்கி முன் வரிசையில் இருந்த தலைமை நீதிபதி இஸ்மாயில், முன்னாள் முதல்-அமைச்சர் பக்தவச்சலம் ஆகியோரை வணங்கி வாழ்த்துப் பெற்றார். அண்ணனின் ஆசி பிறகு, தன்னுடைய அண்ணன் எம்.ஜி.சக்கரபாணியின் காலைத்தொட்டு கும்பிட்டு எம்.ஜி.ஆர். ஆசி பெற்றார்.
விழாவுக்கு எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி அம்மாள், மேல்-சபைத் தலைவர் ம.பொ.சி. மற்றும் நீதிபதிகள், அனைத்துக்கட்சி தலைவர்கள் வந்து இருந்தார்கள். எம்.ஜி.ஆரும் மற்ற அமைச்சர்களும் அண்ணா சாலைக்குச் சென்று பெரியார் சிலைக்கும் பின்னர் அண்ணா சிலைக்கும் மாலை அணிவித்தனர்.
அண்ணா சிலை அருகே லட்சக்கணக்கான மக்கள் திரண்டு இருந்தனர். மேடையில் ஏறி எம்.ஜி.ஆர். உரை நிகழ்த்தினார். அவர் கூறியதாவது:-
அமரர் அண்ணா சொன்னதுபோல மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்ற வகையில் உங்கள் முன்னால் தொண்டர்களாகிய நானும் என் நண்பர்களும் உறுதிமொழியை எடுத்துக்கொள்கிறோம். அறிஞர் அண்ணா அவர்களின் பெயரால் அமைந்த தமிழக ஆட்சி பொறுப்பை ஏற்றுக்கொண்ட நாங்கள் மக்கள் மன்றத்தின் முன்னால் நின்று கீழ்க்கண்ட உறுதிமொழிகளை அளிக்கின்றோம்.
1) தேர்தலின்போது அ.தி.மு.க.வின் சார்பாக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற பாடுபடுவோம். 2) வறுமை கோட்டின் கீழே உள்ள மக்கள் எந்த சமூகத்தினராக இருந்தாலும், அவர்களின் வாழ்க்கைத் தரம் உயர முன்னுரிமை கொடுத்து பாடுபடுவோம். 3) தாழ்த்தப்பட்ட பழங்குடி மக்கள், பிற்படுத்தப்பட்ட மக்கள் ஆகியோரின் நலன்களை காப்பாற்றி அவர்களை மேம்படுத்த பாடுபடுவோம். 4) சிறுபான்மை சமூகத்தினரின் உரிமைகளும், நலன்களும் எல்லா வகையிலும் காப்பாற்றப்படும். 5) விவசாயிகள், கைத்தறி நெசவாளர்கள், மீனவர்கள், தொழிலாளிகள், பாட்டாளிகள், ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள், காவலர்கள் மற்றும் உழைக்கும் வர்க்கம் ஆகியோரின் உரிமைகளும், நலன்களும் பேணப்படும்.
அண்ணாவின் கொள்கைகள் அறிஞர் அண்ணா அவர்களின் கொள்கையான தமிழ் மொழி ஆக்கம், தமிழர் உணர்வு, தமிழ்நாட்டின் மேம்பாடு, மாநில உரிமைகள், ஏழை-எளிய மக்களின் ஏற்றம், ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற கொள்கை, சாதி மத வேறுபாடற்ற முறையில் அனைவருக்கும் வாழ்வளிக்க தொடர்ந்து பாடுபடுவோம் என்று உறுதிமொழி அளிக்கிறோம்.
அனைத்து அரசியல் கட்சிகளையும் விருப்பு வெறுப்பின்றி நல்லுணர்வோடு அரவணைத்து அன்புடன் பாதுகாப்பு கொடுப்போம். எங்களை வாழவைக்கும் தெய்வங்களாகிய நீங்கள் என்றும் எங்களுக்கு ஒத்துழைப்பு தந்து எங்களுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டுகிறேன். மேற்கண்டவாறு எம்.ஜி.ஆர். கூறினார்.