http://i62.tinypic.com/2dkac7t.jpg
Printable View
வாங்க எஸ்.விங்ணா.. வாவ்..வெகு அழகிய ஆவணங்கள்.. நன்றி.
வார நாட்களில் காலை நேரம் என்றால் அரக்கப் பரக்க எழுந்து குளித்து சொக்கா டை பேண்ட் எல்லாம் போட்டுக் கொண்டு வீகாரம்மா அன்புடன் கொடுக்கும் மூன்று இட்லிகள் இரண்டு தோசைகள் ஒரு கப் கேப்பைக் கஞ்சி ஒரு கப் ஓட்ஸ் ஒருஸ்கூப் உப்புமா மட்டும் உண்டுவிட்டு பின் வேக வேகமாக காரில் முக்கால் மணிப் பயணத்தில் ஆஃபீஸ் போகவே நேரம் சரியாக இருக்கும்..( நிற்க இந்த மூ.இ இதோ ஒககே ஒகஓ ஒஸ்கூப் உப்மா என்பதில் நடுவில் அல்லது என்று போட்டுக் கொள்க!)
எனில் ரிலாக்ஸாக ப்ரேக்ஃபாஸ்டை எஞ்சாய் செய்வது என்பது வெள்ளி சனி மட்டும் தான்..அதுவும் வீட்டின் அருகாமையில் மெயின் ரோடிலேயே ஓமான் எக்ஸ்ப்ரஸ் இருப்பதால். வெ.கி காலை எழுந்து சமர்த்தாய்குளித்து ஒம்மாச்சி கீப் மி அண்ட் ஆல் ஹேப்பி சொல்லி குட்டி ப்ரே பண்ணிவிட்டு ஓமான் எக்ஸ்ப்ரஸ் போய் ஸ்டாண்டர்ட் ஆர்டராய் ஒரு சிங்கிள் ஸ்கூப் பொங்கல் ஒரு வடை என உண்டுவிட்டு வருவேன்..
அதுவும் யார் கண் பட்டதோ..கடந்த மூன்று மாதங்களாக மாற்றி மாற்றி உடம்பு படுத்தல்..ஜனவரி பிறந்தபின் இன்னும் மோசம். ஆஃபீஸ் ஹாஸ்பிடல் ஊசி வீடு ஆன் டிப்யாடிக் மாத்திரைகள் மறுபடி மறுநாள் டிட்டோ எனச் சென்று கொண்டிருக்க ஓ.எ போகவே இல்லை..வீ.கா கொடுக்கும் கே.க ஷெட்யூல் தான் வார இறுதியிலும்..
எனில் இன்று காலை கனகார்யமாக குளித்து ஃப்ரஷ்ஷாக ஓ.எ போனால் வெகுகாலம் காணாததினாலோ என்னவோ அங்கிருந்த நபர் வாங்க சார்.ரொம்ப நாளாகாங்கலை.. எனச் சொல்லியபடியே பக்கத்து டேபிளில் மசால்தோசை, வடை, ரவா இட்லி என்றெல்லாம் பரப்பிவிட்டு நிமிர்ந்து என்னிடம்..சூடா இருக்கு வடை தரட்டா எனச் சொல்லி பதிலெதிர்பார்க்காமல் சென்று விட்டார். கொண்டுவந்தது சிங்கிள் வடை ப்ளஸ் கால் பக்கெட் சாம்பார்..
குரு ஒரு ஆனியன் ஊத்தப்பம் சொல்லேன் எனச் சொல்லிவிட்டு வடையின் அபரிமித சூடு ப்ள்ஸ் சுவையால் ஒன்றிப்போய் இன்னொன்னு வடை கொண்டாப்பா எனச் சொல்லிவிட்டேன் தெரியாத் தனமாக.
வந்தது இரண்டாம் சாம்பார் வடை உடன்பிறப்பாய் சற்றே பூசிய இலியானா மாதிரி ஊத்தப்பம் அளவுக்குக் குண்டாக இல்லாமல் கொஞ்சம் ஒல்லியாய் ப்ளஸ் தமன்னாவின் இதழோரச் சிகப்பு முறுவலைப் போல முறுவலுமாகவும் சிற்சில சமயம் அவர் கழுத்தில் அணிந்திருக்கும் வைர நகையைப் போல ஆனியன்கள் சின்னச் சின்னதாய்த் தூவி அலங்கரிக்கப்பட்ட ஆ.ஊ (ஆனி யன் ஊத்தப்பம் ) வந்தது..
அடுத்த ஐந்து நிமிடங்களுக்கு மெய்வருத்தம் பாராமல் கண் துஞ்சாமல் கருமமே கண்ணாகி அவற்றை வயிற்றுக்கு ஈந்து – என்ன சார் காஃபியா –ஆமாம்ப்பா ஆமாம் ஸ்ட்ராங்காஃபி வித் நோ ஷூகர்- அதுவும் வந்ததும் அதையும் வயிற்றில் வார்த்து திரும்பி பில் பே பண்ணி எழுந்து தத்தி த் தத்தி வீடு வந்து சேர்ந்தால் அயர்ச்சி..இரை தின்ன பாம்பாட்டம் களைப்பு..( அது என்ன இப்படிப் பட்ட உவமை..டிஸ்கவ்ரி சேனல்ல பார்க்கணும்) எனில் என்னவாக்கும் செய்யலாம்….
என்றால் பாம்புப் பாட்டு போட்டுப் பார்க்கலாமா..பார்க்கலாகுமா..
**
பாம்பு என்றவுடன் நினைவுக்கு வருபவர் திருநாவுக்கரசர் தான் .. திருவ்ருட்செல்வர் பட ந.தி..
நாதர் முடி மேலிருக்கும் நல்ல பாம்பே
உனக்கு நல்லபெயர் வைத்தவர் யார் சொல்லு பாம்பே..
https://www.youtube.com/watch?featur...&v=kpCzej-Sr04