Originally Posted by
saileshbasu
உடனே ராமாவரதிலேருந்து எனக்கு போன் வந்தது என்று நான் ஆச்சரியப்பட்டேன் ... அப்பா என்னிடம் தொலை பேசி கொடுக்க ... அழகான மென்மையான குரல் ஒன்று கேட்டு ரசித்தேன் ....... நீ லதாங்கி யா என்று கேட்டார் டாக்டர் புரட்சித் தலைவர் ஐயா ... நான் ஆமாம் நீ மகளிர் பேருந்து வேண்டும் என்று எனக்கு கடிதம் எழுதினாய என்று கேட்டார் .
அதற்கும் ஆமாம் என்று சொன்னேன் என் கை படபடத்தது ... அம்மாவும் அப்பாவும் எனது அருகில் நின்று கொண்டிரந்த சமயத்தில் சரி உன் அப்பாவிடம் போனை கொடு என்று சொன்னார் ..
உடனே அப்பா விடம் எல்லாம் விஷயத்தை கேட்டு அறிந்து .. கவலை படாதீர்கள் வேணு ( என் தந்தையரின் பெயர் ) உங்கள் மகள் சொன்ன படியே நாங்கள் மகளிர் பேருந்து ஏற்பாடு செய்வோம் என்று
சொன்னார் தமிழக முதல்வர் ... அப்பா போனை வைத்து ததும் என்னை கன்னத்தில் முத்தமிட்டு ... எனக்கு தெரியாமலே நீ தமிழ க முதல்வருக்கு கடிதம் எழுதினாய . லேடீஸ் ஸ்பெஷல் பஸ் வேண்டும் என்று கேட்டார் அப்பா ... எனக்கு பெருமிதமாக இருந்தது .... இரண்டு வாரத்துக்குள் லேடீஸ் ஸ்பெஷல் பஸ் ரெடி ...... இவரை போல் இனி வரமுடியுமா சகோதரர்களே ... வரவே முடியாது .....அவருக்கு நிகர் அவரே தான் சகோதரரே ....
[என் கண் கலங்குகிறது. உங்களை போல் தமிழ் நாட்டில் ஒரு சிலரே புரட்சி தலைவர் உடன் பேசும் பாக்யத்தை பெற்றவர்கள். இந்த ஒரு ஈடு இனைஎற்ற சாதனை போதுமே].