C. V. Sridhar (22 July 1933 – 20 October 2008)
விக்கி இல் டைரக்டர் ஸ்ரீதர் பற்றி படிக்கும் போது அவர் பிறந்த நாள் 22 ஜூலை என்று போட்டு உள்ளது esvee sir
எது சரி ?
Printable View
http://upload.wikimedia.org/wikipedi...ha%2C_1974.jpg
நண்பர் வாசு அவர்களுக்கு
நடிகை வித்யா சின்ஹாவை பற்றிய நினைவூட்டல் அற்புதம் . மிக அழகான நடிகை. இங்கு கூட அவருடைய அழகு பற்றி விவரிக்கப்பட்டு ஒரு பதிவு போடப்பட்டு இருந்தது. 'ரஜினிகாந்த' என்று ஒரு திரைப்படம் .பாசு சட்டர்ஜி அவர்கள் இயக்கத்தில் வித்யா சின்ஹா அமோல்பலேகர் நடித்து 1974 கால கட்டத்தில் வெளிவந்த வித்யா சின்ஹாவின் முதல் படம் என்று நினைவு . யதார்த்த சினிமா என்பதன் பிள்ளையார் சுழி என்று இந்த திரை படம் பற்றி 1974-75 கால கட்டத்தில் பிலிமாலயா,பொம்மை,பேசும்படம் மற்றும் filmfare போன்ற பத்திரிகைகள் எல்லாம் புகழ்ந்து தள்ளிய படம் . அன்றைய நாளில் தமிழ் திரைப்படம் இயக்க வந்த குடிசை ஜெயபாரதி, அக்ரஹரதில் கழுதை ஜான் ஆபிரகாம்,அவள் அப்படிதான் ருத்ரையா போன்றவர்கள் எல்லாம் எல்லா பெட்டியிலும் இந்த படத்தை புகழ்ந்து தள்ளுவார்கள். இதற்கும் இசை சலீல் சௌத்ரி அவர்கள் தான் .
உங்கள் அழகு நடையில் இந்த திரைபடத்தின் அலசல் எதிர்பார்க்கும்
கிருஷ்ணா
டியர் கிருஷ்ணாஜி,
எழில் தேவதை திவ்யபாரதி பற்றிய எனது பதிவுக்கு மதுசார் வீடியோ வழங்க, அதைத் தொடர்ந்து திவ்யபாரதி பற்றிய தங்களின் மேலதிக விவரங்கள் அவரைப்பற்றிய இனிய நினைவுகளை... இல்லையில்லை... சோக நினைவுகளை மனதில் கிளறி விட்டுவிட்டன. எப்படியோ புகழடைந்திருக்க வேண்டிய நடிகை. இன்றைகெல்லாம் இருந்தால் 40 வயதுதான் ஆகியிருக்கும். ஆனால் விதியின் விளையாட்டு மிகவும் கோர முடிவை தந்துவிட்டது. ஐந்தாவது மாடியிலிருந்து தவறி விழுந்தாரா அல்லது கொலையா என்ற சர்ச்சை வெகு நாட்கள் நீடித்தது. விஜயஸ்ரீ, படாபட், ஷோபா, சில்க் இவர்களின் மரணத்தைப்போல இதுவும் ஒரு சர்ச்சைக்கு உரிய மரணமாக கருதப்பட்டது.
அவர் நடித்த படங்களில் குறிப்பிடத்தக்கவை கீத், ஜான்ஸே பியாரா, சோலா அவுர் ஷப்னம், தர்மாத்மா, ரங் முதலியவை.
திவ்யபாரதியின் முடிவுக்கு எமனாக அமைந்த பால்கனி இதுதான்...
Thanks Krishnaji for Kanchana and Divya Barathi Postings.
உண்மை கார்த்திக் சார்
2 ஆண்டுகள் 1988 முதல் 1990 வரை கிட்டத்தட்ட 6 அல்லது 7 படங்கள் திவ்யபாரதி அவர்களை ஒப்பந்தம் செய்து பின்பு ரத்து செய்யப்பட்டு ஹிந்தி திரை உலகம் சரிபட்டு வராது என்று தென் இந்திய திரை உலகை தஞ்சம் அடைந்து வசந்த மாளிகை ராமாநாய்டு அவர்களால் tollywood என்று அழைக்கப்படும் தெலுங்கு திரை உலகில் நுழைந்து பின்னர் 3 ஆண்டுகளில் 21 படங்கள் (வருடத்திற்கு 7 படங்கள் சராசரியாக) எந்த பாலிவுட் திரை உலகம் ஒதுக்கியதோ அவர்களே பின்னாட்களில் காத்து கிடந்த வீடு என்பார்கள் திவ்யபாரதியின் மும்பையின் புகழ் பெற்ற அந்தேரி பகுதி வீடு .
பால்கனி போட்டோ அருமை கார்த்திக் சார்
எழில் தேவதை அருமையான பட்டம் சார்
அன்பு கோபால் சார்
உங்கள் ஊக்கத்திற்கு நன்றி
என்றும் அன்புடன்
கிருஷ்ணா
http://www.thehindu.com/multimedia/d...A_2059226e.jpg
இன்று ஹிந்து ஹைதராபாத் பதிப்பில் ஜெயசிம்ஹா 1955 படத்தை சிலாகித்து எழுதி இருந்தார் விமர்சகர் M.L. NARASIMHAMAM அவர்கள்.
பிரபல ஹிந்தி நடிகை Waheeda Rehman அவர்கள் முதல் படம் என்று எழுதி இருந்தார் . வஹீத ரெஹ்மான் அவர்கள் தமிழ்நாட்டின் செங்கல்பட்டில் பிறந்து 50,60,70 களில் ஹிந்தி திரை உலகை கலக்கி கொண்டு இருந்தவர் .இந்த படத்தின் இசை அமைப்பாளர் திரு டிவி ராஜு அவர்களை பற்றி நமது அருமை குருஜி ராகவேந்தர் அவர்கள் மனதை மயக்கும் மதுர கானங்கள் பாகம் ஒன்றில் பெருமை படுத்தி எழுதி இருந்தார் .
T.V. Raju’s music largely contributed to the movie’s success. He was assisted by the talented Sathyam. ‘Jaya Jaya Sri Rama Raghuvara’ (Ghantasala), ‘Madiloni Madhurabhavam,’ (Ghantasala & Rao Balasaraswati) and P. Susheela’s classical rendition ‘Nadireyi Gadichene cheliya…’ became popular. Some of the hit numbers drew inspiration from Hindi songs. The duet ‘Ee naati ee haayi…’ rendered by Ghantasala and P. Leela was taken from Ghulam Mohammed’s composition, ‘Jindagi dene vale sun…’ (‘Dil- E- Naadan’) and Rao Balasaraswati, A.P. Komala’s rendition, ‘Manasaina cheli pilupu…’ adapted from Shyamsundar’s composition, ‘chori chori aagse dilme…’ ( ‘Dholak’) are examples.
தெலுங்கு பாடல்
http://www.youtube.com/watch?v=y0RZuQr_c1I
ஹிந்தியில்
http://www.youtube.com/watch?v=WVI_PsOm84I
சுசீலாவின் இனிய ஆரம்ப கால குரல்
http://www.youtube.com/watch?v=ImPSegqj9c8
http://www.surfindia.com/celebrities...eda-rehman.jpg
KRISHNA SIR
ONE OF THE BEST WAHEEDA SONG
http://youtu.be/CpnLv8nAWkE
திரு கோபால் அவர்கள் வளர்பிறை பாடத்தின் பாடலை பற்றி குறிப்பிட்டு இருந்தார் . கண்ணதாசன் அவர்கள் மாமா அவர்களின் இசையை குறிப்பிட்டு எழுதும் போது
பூஜ்ஜியத்துகுள்ளே ஒரு ராஜ்ஜியத்தை ஆண்டு கொண்டு
புரியாமலே இருப்பான் ஒருவன் - அவ்னைப்
புரிந்து கொண்டால் அவன்தான் இறைவன்
இந்த வரிகளுக்கு எந்த மாற்றமும் இல்லாமல் இசை அமைத்த திறமையை பாராட்டியது நினைவு (சந்திதேன் சிந்தித்தேன் கட்டுரையில் )