-
ஆடு பாடல்களில் நண்பர்கள் அனைவரும் 'ஆடு... ஆடு' என்று ஆடி விட்டனர். அதுவும் சுந்தர பாண்டியன் சார் ஒரு படி மேலே போய் ஆட்ட அனுராதவைக் காட்டி 'ஆடு' ஆராய்ச்சி பண்ணி விட்டார். //'அனுராதா "ஆடு ஆடு" ன்னு ஆடுற பாட்டு உங்களுக்கு'//....சுந்தரமான நகைச்சுவை. சிரித்துக் களித்தேன். நம் நண்பர்களுக்குத்தான் எத்துணை நகைச்சுவை உணர்வு!
எனக்குத் தெரிந்த ஆடு பாடல்களைத் தருகிறேன். போட்டாச்சான்னு தெரியல.
'இரை போடும் மனிதருக்கே இரையாகும் வெள்ளாடே'
ஆடு மேல் நடிகையர் திலகத்திற்கு கரிசனம். அதன் மூலம் நமக்குத் தத்துவம். அன்புடன் ஆடு அணைத்துக் கொண்டிருக்கும் பீம்சிங்கின் கருணை புத்தர் படம் பார்த்து மன சஞ்சலம் காட்டும் ஜெமினி. ஆட்டம் காட்டும் ஆடுகளை அரவணைத்து 'டேயன்னா...ட்ரியோ டேயன்னா' ஓட்டும் சாவித்திரி. குயில் குஞ்சு போலக் கூவும் அதிசயப் பாடகியின் ஆளுமைக் குரல்வளம். நம் மனமெல்லாம் 'ஆடு'ம்.
பாடலின் டியூன் 'ஜீவன் மே பியா தேரா சாத் ரஹே' (Gunj Uthi Shehnai) வரிகளை ஞாபகப்படுத்தினால் அதற்கு நான் பொறுப்பல்ல.:) அதையும் போட்டு விடுகிறேன். (என்ன பாட்டு நைனா!)) 'தர்த்தி' நாயகனின் ஷெனாய் கேட்டால் அவனவன் ஷெத்தான்.
'இரை போடும் மனிதருக்கே இரையாகும் வெள்ளாடே'
https://youtu.be/m8_1sGeHID8
'ஜீவன் மே பியா தேரா சாத் ரஹே'
https://youtu.be/COfZJ8tPyzU
-
இன்னொரு 'ஆடு'ப் பாட்டு
இங்கே பா(ஆ)டுவது ரதி ஆடு ஹோத்ரி.
'ஆடு நனஞ்சுதுன்னு அழுததடி ஓநாயொன்னு' 'அன்புக்கு நான் அடிமை' பாடல். நாகப்பன் என்ற 'கராத்தே மணி' ஓநாயை கவ்விய ரஜினியையே கலாய்க்கும் மன்மதனின் நாயகி. கேரோவில் கலக்கும் கோரஸ். பாஸ்ட்டாகப் பாடும் 'பாடகியர் திலகம்'. டேஸ்ட்டாக டப்பாங்குத்து போட வைக்கும் ராஜாவின் தாரை தப்பட்டை.
https://youtu.be/XzhYqNug84I
-
இங்கே கடல் பூக்களால் பூக்குது. அப்படியே 'ஆடு மேயுதே'. 'கானா' போட்டு காணமல் போன தேவாவின் விரல் விட்டு எண்ணக் கூடிய தேவாமிர்த கானம். இதில் பரிதாபமென்னவென்றால் பாடலில் பங்கு கொண்ட பிரதியுக்ஷா என்ற பிஞ்சு ஆடும், முரளி என்ற முரட்டு ஆடும் மேயும் அழகை நாம் பார்க்க இன்று அந்த ஆடுகள் நம்மிடையே இல்லை.:( கொஞ்சம் இதயம் கனக்கத்தான் செய்கிறது. பாடலும் மனதுக்குள் அதற்கேற்றார் மாதிரி புகுந்து ஒரு மாதிரியான இன்ப சித்திரவதையோ துன்ப சித்திரவதையோ செய்கிறது.
https://youtu.be/XmlpGav9LWo
-
ரூபா இல்லாத எச்சில் இரவுகளின் பிச்சைக்காரி ரூபாவுக்கு பித்துப் பிடித்த காதல் பிரதாப் போத்தன் மேல். ஆனால் மைன்ட் வாய்ஸ்?!
பூத்து நிக்குது காடு
பாத்து நிக்குது ஆடு
ஜென்ஸியின் 'கீச்'சும், மலேஷியாவின் ஆண்மை நிறை 'கணீரு'ம் சேர்ந்து 'பிரகாச'மான பாடலாகிறது ராஜாவின் ரசனையால். ஆட்டு நாளாச்சு ஸாரி கேட்டு நாளாச்சு.:)
https://youtu.be/4-DsAMXu2RA
-
'பாச வலை'க்குள் மாட்டிக் கொண்ட குட்டி ஆடு குள்ள நரிக்கு சொந்தம். குள்ள நரி மாட்டிகிட்டா கொறவனுக்கு சொந்தம்.
எம்.கே.ராதாவின் கீழ்ப்பாக்க சேட்டைகள். பராசக்தி நாயகனின் ஜெராக்ஸ். ஆனால் நாயகனுக்கு வெகு நாள் முன்னோடி. ஆனால் பராசக்தி நாயகனோ எல்லோருக்கும் முன்னோடி.
https://youtu.be/2y3VpcLQXB8
-
திரும்பிப் பாருங்கள். ஆவன்னா டூனா சேர்ந்தா என்னா? 'ஆடு'தானே! பண்டரிபாய் பள்ளிக் குழந்தைகளுக்கு ஆடாமல் சொல்லிக் கொடுக்கும் வீர சிவாஜி, கட்டபொம்மன் சரித்திரங்கள். சரித்திரப் படங்கள் உருவாகி சாதனை படைப்பதற்கு முன்பாகவே நடிப்புப் பகலவனின் பெருமையை பறைசாற்றிவிட்டன இப்பாடலின் வரிகள் தெரிந்தோ தெரியாமலோ.
https://youtu.be/AKsRyckxFbw
-
செந்தில் சார்,
உங்களைப் பார்த்த சந்தோஷத்தில் உங்களுக்கு என் பரிசுப் பாடல் ஒன்று. 'நடிகர் திலகம்' ஸ்டைல் நெற்றியில் வளைந்து புரளும் முடி ஒப்பனையோடு உங்கள் 'காதல் மன்னர்' 'அபிநய சரஸ்வதி'யை யாருமில்லாத நேரத்திலே, ஆற்றங்கரை ஓரத்திலே, காற்றாட வந்த போது, கண்ணாரக் கண்டு, காதல் பாட்டு எடுத்து விடுகிறார் 'அன்பளிப்பு' 'வள்ளிமலை மான் குட்டி எங்கே போறே?") மாதிரி. அதிலே சின்ன மாட்டு வண்டி. இதிலே கார். 'அபிநய'த்துக்கு இரண்டிலும் ஒரே ஒப்பனைதான். முற்றிவிட்டது முகம் என்றால் என்னை மொத்தி விடுவார் ஜி.:) காப்பாத்துங்கோ!:)
https://youtu.be/CSMVoVFHK1M
-
குட் ஆஃப்டர் நூன் ஆல்..
//ஜென்ஸியின் 'கீச்'சும், மலேஷியாவின் ஆண்மை நிறை 'கணீரு'ம் சேர்ந்து 'பிரகாச'மான பாடலாகிறது ராஜாவின் ரசனையால். ஆட்டு நாளாச்சு ஸாரி கேட்டு நாளாச்சு.// வாசு, கோவை போய்விட்டு வந்து நகைச்சுவை ஜாஸ்தியாகிவிட்டதே..
ஆட் பாடல்களுக்கு தாங்க்ஸ்.. ஹோம் ஒர்க் இனிமேல் தான் செய்யணும்..அதுக்குமுன்னால் ஒரு ஹாப்பி நியூஸ் அண்ட் ஒரு ஸேட் நியூஸ்..
ஹேப்பி நியூஸ்.. என் டயட் காரணமாக் சுகர் நில் என்று நின்றுவிட டாக்டர் ஷுகர் டேப்லட் வேண்டாம் எனச் சொல்லிவிட்டார்.. எடையும் பெருமளவில் குறைந்திருக்கிறது ( தைரியமாக வாசுவை மீட் பண்ணலாம்..(அதற்குள் இன்னும் ஒல்லியாகிவிடுவேன்) அவர் குட்டியானை என சொல்லமாட்டார் என்னை)
ஸேட் நியூஸ்.. நேற்று ஃப்ரண்ட் வீட்டிற்குச் சென்று சாப்பிடப் போனேனா.. கொஞ்சம் தரையில் அமர்ந்து உண்டு எழுகையில் இடது கையில் அழுத்தி அழுத்தி எழுந்ததில் மஸில்ஸ் புரண்டிருக்கிறதோ தெரியவில்லை.. மணிக்க்ட்டை ஆட்டினால் வலிக்கிறது..விரல்களும் டைபபடிக்க தடுமாறுகின்றன.. ம்ம் சரியாய்டும்..
-
உன் கண்களிலோ கனிகள்.. திடீரென இந்தப் பாட் வந்து தொந்தரவு செய்கிறது மனதில்..பாகம் 3 இல் வாழ்க்கை அலைகள் என வாசு போட்ட நினைவு..யார் பாடுவார்கள்..
கனி பத்திப் பேசியாச்சா..
-
//'அபிநய'த்துக்கு இரண்டிலும் ஒரே ஒப்பனைதான். முற்றிவிட்டது முகம் என்றால் என்னை மொத்தி விடுவார் ஜி// அருணோதயத்தில க.பை.. கொஞ்சம் பிரம்மாண்டமா இருப்பாரோன்னோ.. என்னையும் ஜி மொத்துவதற்கு முன்..எஸ்ஸ்ஸ்கேப்..
பட் க.பை.. தங்க மலை ரகஸ்யத்தில் அழகு யெளவனம் பாட்டில் குட்லுக்கிங்கில் இருப்பார் ப்ளஸ் மானைத்தேடி மச்சான் வரப் போறான் பாடலிலும்..என ஆன்றோர்கள் சொல்வார்கள் :)