பக்குவம் ஒரு தொழில் ரகசியமோ
அதே அஞ்சரைப் பெட்டி அடுப்பு
அதே அளவில் கொட்டி தாளிப்பு
அப்புறமும் அம்மா சமையலில்
அப்படி ஒரு தனி மணம் ருசி
அது என்ன சூட்சுமமோ மாயமோ
Printable View
பக்குவம் ஒரு தொழில் ரகசியமோ
அதே அஞ்சரைப் பெட்டி அடுப்பு
அதே அளவில் கொட்டி தாளிப்பு
அப்புறமும் அம்மா சமையலில்
அப்படி ஒரு தனி மணம் ருசி
அது என்ன சூட்சுமமோ மாயமோ
மாயமோ மோகமோ மானிட சாபமோ
சகித்து சுகிக்கும் காதல்.
காதல் கூட்டி வரும்
கள்ளத்தனம் எல்லாம்
காளமேக கவித்திறன்
காணாத கற்பனைகள்
காற்றினும் கடிய வேகம்
கடைசியில் தரை இறங்கும்
இறங்கும் ஞாயிறும் உறங்கும் உள்ளமும்
என்றும் இருளை ஏற்றும்.
ஏற்றும் எஸ்கலேட்டரைக் கண்டு
வியந்து அதன் பின்னர் மிரண்டு
பழகியதும் பயம் சிறிது குறைந்து
நாகரிக ஏணியில் நான் ஏறியது
வளரும் உலகை எட்டிப் பார்த்தது
பெருநகரில் மகன்கள் வாழ நேர்ந்து
வணிக கேளிக்கை வளாகங்களுக்கு
அன்புடன் அழைத்துச் சென்ற போது
எங்கள் சிறிய நகரமிப்போது
ஒரு பெருநகரமாய் வளருது
பளபள துணிக்கடை வரவு
அதை அறிமுகம் செய்தது
அச்சத்தை ஆர்வம் மீறியது
முதன் முதலாய் ஏறியபோது
மக்கள் முகமெல்லாம் பல்லானது
என் கதையும் நினைவில் வந்தது
வந்த்து யாரென்று தெரியுமா
அம்மா சொல்வாள்
உறவினர்கள் வ ந்து சென்றதும்..
தூரத்து உறவுகள் யார் நினைவில் கொள்வார்கள்..
வேண்டா வெறுப்பாய்க் கேட்டு வைப்பேன்..
காலம் செல்ல
வேலை அயல் நாட்டில் தான்
என்றான பின்
தமிழ் பேசுபவர்கள் சிலர்
தூரத்து உறவாக இருக்கலாமோ
எனத் தோன்றுகிறது..
விள்க்கத் தான்
அம்மா இல்லை...
அம்மா இல்லை வீட்டில்
பச்சைக் குழந்தைக்கு
பரிந்து பாலூட்ட
பரிவாய் தலை கோத
பலகாரம் செய்து தர
பாசமாய் கதை சொல்ல
பொலிவாய் இல்லம் மிளிர
பார்த்துப் பேசிடவும்
பல கதை பகிர்ந்திடவும்
பாங்கான தோழியில்லை
புரிதலுக்கு துணையில்லை
பணத்திற்கு முதலிடம்
பெண்ணின் மகுடமெது
பொறுப்பென்பது என்ன
பெற்றவரை பிள்ளைகளை
பார்த்துக்கொள்ள காப்பகம்
பறக்கிறாள் எதைப் பறிக்க
பேரின்பமாம் குடும்பமெனும்
பழத்தை கசக்க வைக்கும்
புது உலக மோகம் தாகம்
புதைத்துவிட்ட இன்பம்
பெயரளவில் இல்லறம்
பார்க்கப் பார்க்க சலிப்பு
சலிப்பு தான் வருகிறது..
ஏன் எனத் தெரியவில்லை...
தொலைக்காட்சியில்
மனதுக்குப் பிடித்த நடிகரின்
நகைச்சுவைப்படம்..
நேற்று கடைத்தெரு சென்று
வாங்கி வந்த
புதிய படம்..
உள்ளே ச்மையலறையில்
என் வீட்டு இளங்கிளி
எனக்குப் பிடிக்குமே
என்று
யாரிடமோ க்ற்றுக்கொண்டு
செய்யும்
பானி பூரியின் சின்னப்பூரிகள்
பொரியும் எண்ணெய் வாசனை..
அவளது மெரூன் கலர் சுடிதார் அழகா
அல்லது
நெற்றியில்
ஒற்றைக் கோட்டில் ஆடும் முடியின்
அ லைக்கற்றையில்
துளிர்த்திருக்கும்
வியர்வைத் துளி அழகா..
வெளியில் பால்கனியில்
எட்டிப் பார்த்தால்
நாற்பத்தேழு டிகிரி
எனில்
உள்ளே குளுமையாய் ஏ.சி..
ஊரிலிருந்து இந்தமுறை வாங்கி வ்ந்த
விஜயமகா தேவி
கண்சிமிட்டிச் சிரிக்க்கிறாள்..
வலையில் உலவலாம் என்றாலும்
ஓஹ்.. ஏனோ வெறுமையாய்..
.
ம்ம்
எல்லாம் இருந்தும்
ஏனோ மனதில் விரக்தி
சலிப்பு..
என்ன செய்யலாம்..
ஹை..
இருக்கவே இருக்கிறது.
கணினியைத் திற்ந்து
எழுதப்பார்க்கலாமா..
வருமா..
சோர்வாய் மனம் இருக்கிறதே..
சரி செய்யலாம்..
திற ந் து
எழுத ஆரம்பித்தால்...
துள்ளிப் பொங்குகிறது..
வெள்ளம்...
வெள்ளம் வருடாந்தர நிகழ்வு சில ஆறுகளுக்கு
அபூர்வம் அதிசயம் ஆனந்தம் எங்கள் வைகைக்கு
கூட்டமாய் ரசிக்கச் செல்வோம் இத்திருவிழாவிற்கு
நுரைத்து இருகரை தொட்டோடும் அழகிய காட்சிக்கு
புகைப்படமெடுத்துப் பாதுகாக்கும் நவீன வசதியிருக்கு
என் வலைமனை படத்தொகுப்பிலது கொலுவிருக்கு
கொலுவிருக்கும் கடைசிப் படிக்க்ட்டுச்
செட்டியார் கேட்டார்
’ஏன் இந்த தடவை அஞ்சு படி தான்
வெச்சுருக்கா மாமி?;
கல்யாண கோஷ்டி நாதஸ்வர வித்வான்
‘தெரியலை ஓய்.. அது சரி
அந்த வைர மூக்குத்தி மாமி பார்த்தீரா’
‘அதுவா இந்த மாமியோட தூரத்து உறவாம்...
போன தடவைக்கு முந்தின தடவை வந்தா..
அவ பட்டுப் புடவை க்ரே வித் ரெட் பார்டர்
சும்மா ஜிலுஜிலுன்னு...
நன்னா இருக்கோன்னோ..’
இரண்டாம்படிக்கட்டில் இருந்த ராதா
‘ஏங்க.. கல்யாணத்துக்கும்
கூட்டிட்டுப் போமாட்டேங்க்றீங்க..
கீழே கிரிக்கெட் மாட்ச் வச்சுருக்கா..
அதுக்கும் மாட்டேங்கறீங்க..
பக்கத்துல மஹாபலிபுரம் பீச் செட்
அங்கயாவது போலாமே..’
கிருஷ்ணன் புன்னகைத்து..
‘நானா மாட்டேங்கறேன்..
கீழே பார்.. மூணாம் படிக்கட்டில
எல்லாஅவதாரமும் நின்னுண்டிருக்கு..!
அது ச்ரி
யாரந்தக் குழந்தை..
சிகப்பு தாவணி பட்டுப் பாவடை
போட்டுண்டு
ஏதோ எட்டு ஸ்வரத்துல பாடுது..
நம்ம ஊர் கோபிகையோட சாயல் தெரியுது..’
ராதா முறைத்துக் கிள்ள
கீழே இருந்த பலராமர்
‘ஏய் எங்களை கிண்டல் ஏதும் பண்ணலையே..’
நாலாம் படிக்கட்டில் இருந்த
க்ன்னுக்குட்டி அம்மாவிடம்
‘இன்னிக்கும் கொண்டக்கட்லை சுண்டல் தானாம்..
அம்மா போரடிக்குது
பேசாம வேற கொலுக்குப் போலாமா.
இந்த பாரேன் அந்தச் சின்னப் பையன்
என்னைத் தொட வர்றான்...’
கவலைப்படாதே யானை மாமாக்கிட்ட
சொல்றேன்..
ஓய் என் புள்ள பயப்படுது..”
“ஒண்ணும் ஆவாது..
பேசாம பசுவா லட்சணமாத்
தலை குனிஞ்சு இரு..
இந்தப் பக்கம்
அஷ்ட் லஷ்மி வேறு இருக்காங்க்..
எதிர்ல பார்த்தியா
சில மாமாக்கள்
சீரியஸா கோல்ட் ரேட்,ஷேர்ஸ்னு
பேசிக்கிட்டிருக்காங்க ..
நல்லா இருக்கு...
கேக்க விடாம இந்தப் பாட்டுதான் தடுக்குது..
அட் ஒருவ்ழியா பாட்டு முடிஞ்சா
ம்ம் இன்னொரு மாமி பாடறாளே..
என்ன தவம் செய்தனை...
புதுசாபாடலாமில்ல.. ஏ ஜே ஏஜே..
அருகிலிருந்த மயில்
ரொம்பத் தான் சினிமா பார்க்கறே..
என்னையும் கூட்டிட்டுப் போயிருக்கலாமில்ல..’
ஷ்.. ச்த்தம்போடாமச் சமர்த்தா
வந்தவாளைப் பார்த்துண்டு
சும்மா இருங்கோ..
என்றார் முதற்படிக்கட்டுப் பிள்ளையர்ர்..
‘எனக்குப் பொண் பார்த்திண்டிருக்கேன்..
உங்க பேச்சு எனக்குத்
தொந்தரவா இருக்கு...!”